Saturday, December 17, 2016

காலை உணவு… தவிர்ப்பது சரியா? நலம் நல்லது

காலை உணவு… தவிர்ப்பது சரியா? நலம் நல்லது-28 DailyHealthDose

தி அவசரங்களில் மூழ்கிய நம் காலைப் பொழுதுக்கு நாம் காவு கொடுத்தது… காலை உணவு! இன்றைக்கு பொறியியல் மாணவன், கார்ப்பரேட் நிறுவனத்தில் வேலை பார்க்கும் பெண்மணி, கணவன்–குழந்தைகளை அதிகாலையில் எழுந்து கிளப்பிவிடும் இல்லத்தரசி… இவர்கள் எல்லோருமே தொலைத்தது காலை உணவை! 
இரவில் எட்டு மணி நேரம் அமில ஊறலில் இருக்கும் இரைப்பை, காலை உணவைத் தவிர்த்தால் அமிலத்தால் சிதையத் தொடங்கும். காலை உணவைச் சாப்பிட்டு, இரைப்பையை நிரப்பாவிட்டால், முதல் நாள் இரவில் இயல்பாக ஏறிய பித்தம் மெதுவாகத் தலைக்கு ஏறும். அது வயிற்றுப் புண், வயிற்று உப்புசம், தீவிரமான வயிற்றுவலி, வாந்தி, பசியின்மை, அதிக உயர் ரத்த அழுத்தம், மனஅழுத்தம் வரை பல நோய்களைக் கொண்டு வந்து சேர்க்கும். காலை 9 மணிக்குள் சாப்பிடாமல், 11 மணிக்குச் சாப்பிட்டால் ட்ரான்ஸ்பேட் கொழுப்பும் கலோரியும் எக்குத்தப்பாக எகிறும்; அடிவயிற்றில் படிந்து பெருகும். ஆக, எப்படியாவது காலை உணவைக் கண்டிப்பாகச் சாப்பிட்டுவிட வேண்டும் என்பதுதான் நியதி.
எப்படிச் சாப்பிடலாம்… என்னென்ன சாப்பிடலாம்… பார்ப்போம்! 
* காலை உணவு சிறப்பான உணவாக இருப்பது நல்லது. வளரும் குழந்தைகள் உள்ள வீட்டில் தினையரிசிப் பொங்கல் செய்வது நல்லது. உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்கு, வரகரிசி உப்புமா சிறந்த மினி டிபன். இவையெல்லாம் சாதாரணமாக பொங்கல், உப்புமா செய்யத் தெரிந்தவர்கள் எளிதாகச் செய்யக்கூடிய சிற்றுண்டிகள். அரிசிக்குப் பதில் தினை. ரவைக்குப் பதில் வரகரிசி… அவ்வளவுதான். 
* விடிந்தும் விடியாமல், அதிகாலையிலேயே எழுந்து பணிக்குக் கிளம்புகிறவர்களா? அவர்களுக்காகவே ஒரு ரெசிப்பி உண்டு… அது, மாப்பிள்ளைச் சம்பா அவல் பிரட்டல். அடுப்படிக்குப் போகாமலேயே இதைச் செய்துவிடலாம். 
* காலையில் சுறுசுறுவென மூளை வேலை செய்ய வேண்டுமா… நோய் எதிர்ப்பாற்றல் நிறைந்திருக்க வேண்டுமா? அப்படியானால், காலை உணவில் பப்பாளிப் பழத்துண்டுகள், மாதுளை முத்துகள், மலை வாழைப்பழம், நிலக்கடலை, காய்ந்த திராட்சை… என இவற்றில் ஏதேனும் ஒன்றாவது இருக்க வேண்டும். 
* கேழ்வரகு இட்லி, பல தானியத் தோசை இவையெல்லாம் காலை உணவுக்கு மிக மிக நல்லவை. 
* சர்க்கரைநோய் இருப்பவர்கள், கஞ்சியாக காலை உணவைச் சாப்பிட வேண்டாம். அது, ஹைகிளைசெமிக் தன்மைகொண்டது. சிறு தானியமாக இருந்தாலும், அடை, தோசை, உப்புமா என பிற காய்கறிகளுடன் சேர்த்துச் சாப்பிடுவதுதான் சர்க்கரை ரத்தத்தில் சேர்வதை மெதுவாக்கும். 
* பல கீரைகளில், `ஆல்ஃபா அமைலோஸ் இன்ஹிபிட்டர்’ எனும் தாவரச்சத்து இருக்கிறது. இது, ரத்தத்தில் வேகமாகச் சர்க்கரை சேர்வதைத் தடுக்கும் தன்மை உள்ளது. கீரையுடன் சேர்த்து, எந்தத் தானிய உணவைச் சாப்பிட்டாலும், இந்தப் பயனைப் பெறலாம். 
* சர்க்கரை நோயாளிகள், எந்தக் காரணமாக இருந்தாலும், காலை உணவைத் தவிர்க்கவே கூடாது. 
* சத்து மாவுக்கஞ்சி தமிழர்களுக்கேயான பிரத்யேக ஊட்டச்சத்து உணவு. கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், கைக்குழந்தை, வளரும் குழந்தை அனைவருக்கும் ஏற்ற முதல் காலை உணவு இந்தக் கஞ்சிதான். 
சத்துமாவு செய்வது எப்படி? 
சிவப்புச் சம்பா அரிசி (மாப்பிள்ளை சம்பா கிடைத்தால் நல்லது), முளைகட்டி உலரவைத்த பாசிப் பயறு, சிவப்புக் கொண்டைக்கடலை, நன்கு வறுத்த தொலியோடு கூடிய உளுந்து, நிலக்கடலை, பொட்டுக்கடலை, பார்லி அரிசி, சம்பா கோதுமை, தினை அரிசி, கேழ்வரகு, வரகரிசி, குதிரைவாலி அரிசி… இவற்றையெல்லாம் வகைக்கு 250 கிராம் எடுத்துக்கொள்ள வேண்டும். இவற்றோடு, முந்திரிப் பருப்பு 100 கிராம், தோல் சீவிய சுக்கு 50 கிராம் சேர்த்து, வறுத்து, பொடியாக்க வேண்டும். இதுதான் சத்துமாவு. தேவைப்படும்போது, இதிலிருந்து 3 – 4 டீஸ்பூன் எடுத்து, கஞ்சியாகக் காய்ச்சி, விருப்பப்பட்டால் பாலும் வெல்லமும் கலந்து சாப்பிடலாம். இதே மாவை காரம் சேர்த்து, காரக் கொழுக்கட்டையாகவும், வெல்லம் சேர்த்து மாலாடு உருண்டையாகவும் பிடிக்கலாம். கால்சியம், புரதம், நுண் கனிமங்கள் கொண்டது. சுருக்கமாக, நம் அத்தனை காலைகளையும் உற்சாகமாக்கும் வல்லமைகொண்டது. 

மழைக்கால நோய்க்கான வீட்டு வைத்தியம்! thanks vikatan

மழைக்கால நோய்க்கான வீட்டு வைத்தியம்!

ருவ மழையும், குளிரும் பாடாய்ப்படுத்துகிறது. குழந்தைகள், முதியவர்கள், உடல் பலவீனமானவர்கள் மட்டுமல்லாமல், பெரும்பாலானோருக்கு தலைவலியில் தொடங்கி ஜலதோஷம், மூக்கடைப்பு, ஒழுகும் மூக்கு, தும்மல், சளி, சைனஸ், கபம் கட்டுதல் என்று மளிகைக்கடை பில் போல நீளுகிறது பிரச்னைகளின் பட்டியல். இவையெல்லாம் தொற்றாமல் இருப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும்... வந்தபின் நிவாரணம் பெறவும், கீழ்க்கண்ட வீட்டு வைத்தியங்களை கடைபிடிக்கலாமே!
* குழந்தைகள் தொடங்கி அனைவருமே காலை எழுந்ததும் சூடுபொறுக்கும் வெந்நீரில் முகம் கழுவுவது நல்லது. டீ போடுவதற்காக தேயிலைத் தூளைக் கொதிக்க வைக்கும்போது துளசி அல்லது இஞ்சி சேர்த்து கொதிக்க வைத்துக் குடித்தால், சளித்தொல்லைகளில் இருந்து தற்காத்துக் கொள்ளலாம். எலுமிச்சை ஜூஸ் அல்லது எலுமிச்சை டீ குடிக்கலாம். இஞ்சி, நெல்லிக்காய், கறிவேப்பிலை போன்றவற்றை அரைத்து சாறு எடுத்து அதனுடன் எலுமிச்சை சாறு, தேன், தேவைப்பட்டால் சர்க்கரை கலந்து குடித்தால் கூடுதல் பலன் கிடைக்கும்.
* காலை உணவைச் சூடாக உண்பது நலம். சட்னியில் இஞ்சி, கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்துக்கொள்ளுங்கள். தோசை மாவுடன் முசுமுசுக்கை இலையை அரைத்துச் சேர்த்து சுட்டுச் சாப்பிட்டால், நெஞ்சுச்சளியை விரட்டும். உளுந்த மாவுடன் கல்யாண முருங்கை இலையை பொடிப் பொடியாக நறுக்கிச் சேர்த்து வடை செய்து சாப்பிட்டாலும் சளிப் பிரச்னைக்கு நல்லது.
* மதிய உணவுக்குச் சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்த குழம்பும், தூதுவளை துவையல், இஞ்சி துவையல், கொள்ளு துவையலும் நல்லது. சின்னவெங்காயத்தை பச்சையாக உரித்து மதிய உணவில் சேர்த்து சாப்பிடலாம். மிளகு ரசமும் நல்லது.

* மூக்கடைப்பு இருந்தால், விரலி மஞ்சளை நல்லெண்ணெயில் தோய்த்து எடுத்து தீயில் வாட்டி, அதன் புகையை சுவாசிக்கலாம். நொச்சி இலைகளைத் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அதன் ஆவியை சுவாசிப்பதாலும் மூக்கடைப்பு விலகும். நொச்சி இலை கிடைக்காதவர்கள், வேப்பிலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து மஞ்சள்தூள் சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கியதும் போர்வையால் போர்த்தி வேது (ஆவி) பிடித்தால்... தலைபாரம், மூக்கடைப்பு, ஜலதோஷம் சரியாகும். ஜாதிக்காயை நீர்விட்டு உரசி எடுத்துக்கொண்டு, கரண்டியில் வைத்து சூடுபடுத்த வேண்டும். குழம்பு போன்று வந்ததும் மூக்கின் மேல் பற்று போட்டாலும் மூக்கடைப்பு விலகும்.

* தலைபாரம், தும்மல், நீர்கோத்தல் போன்ற பிரச்னைகள் இருந்தால், தலையணை உறையில் நொச்சி இலைகளை வைத்து உறங்க, நிம்மதியான தூக்கம் வரும். நொச்சி இலைகளை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அதன் ஆவியை சுவாசித்து வந்தாலும் இந்தப் பிரச்னைகள் நீங்கும்.
சுக்குவெந்நீர் தயாரியுங்கள் இப்படி!

*மாலையில் சுக்கு காபி குடிக்கலாம். இதை சுக்கு காபி என்று சொல்வதைவிட சுக்கு வெந்நீர் என்பதே சரியாக இருக்கும். சுக்கு வெந்நீர் செய்ய... மிளகு 10 கிராம் என்றால், சுக்கு 20 கிராம், 40 கிராம் தனியா (கொத்தமல்லி விதை), நான்கைந்து ஏலக்காய் சேர்த்துப் பொடியாக்கி, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து, கருப்பட்டி (பனைவெல்லம்) சேர்த்து வடிகட்டிக் குடிக்கலாம். கிடைக்கும்பட்சத்தில்... துளசி, தூதுவளை, ஓமவல்லி இலைகளைச் சேர்த்துக் கொள்ளலாம். சிற்றுண்டி ஏதாவது சாப்பிட விரும்பினால் ஓமவல்லி இலைகளை பஜ்ஜி மாவில் தோய்த்து பஜ்ஜி செய்து சாப்பிடலாம்.

பூண்டுப்பால் தயாரியுங்கள் இப்படி!

* இரவில் உறங்கப்போவதற்கு முன், பூண்டுப்பால் சாப்பிடலாம். பூண்டுப்பால் செய்ய 50 மில்லி பால், 50 மில்லி தண்ணீர், உரித்த பூண்டுப்பற்கள் 10 போட்டு பாதியாக வற்றும் வரை கொதிக்க வைக்க வேண்டும். அடுப்பிலிருந்து கீழே இறக்குவதற்கு முன் 2 சிட்டிகை மஞ்சள்தூள், 2 சிட்டிகை மிளகுத்தூள் சேர்த்துக்கொள்ளவும். பிறகு, பனங்கற்கண்டு (இல்லாதபட்சத்தில் சர்க்கரை) சேர்த்து கடைந்து சாப்பிடவும்.

மணத்தக்காளி சூப் வைக்கலாம் இப்படி!

* ஜலதோஷம், தொண்டை கரகரப்பு, இருமல் இருந்தால்... மணத்தக்காளி சூப் நல்ல பலன் தரும். எப்படிச் செய்வது? மணத்தக்காளி கீரை, மிளகு, சீரகம், பூண்டு, சின்னவெங்காயம், தக்காளி, உப்பு சேர்த்து நீர் விட்டு கொதிக்க வைத்து, பாதியாக வற்றியதும் இறக்கி வடிகட்டி, பொறுக்கும் சூட்டில் குடிக்கவும்.

இங்கே குறிப்பிடப்பட்டிருக்கும் வீட்டு வைத்தியங்கள் அனைத்துமே பெரிதாக செலவு வைக்காமல், பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தாமல், ஆரோக்கியத்தை உங்களுக்குப் பரிசளிக்கக் கூடியவை. இவற்றை தேவையைப் பொறுத்து அனைவருமே மேற்கொள்ளலாம். 

தலைவலி தவிர்ப்போம்! நலம் நல்லது thanks vikatan

தலைவலி தவிர்ப்போம்! நலம் நல்லது! - 2, #DailyHealthDose - மருத்துவர் கு.சிவராமன்

மருத்துவர் கு.சிவராமன்
உண்மையில் ஒரு மருத்துவருக்குத் தலைவலி தரும் விஷயம் என்ன தெரியுமா? தலைவலிக்குக் காரணம் தேடுவது. ஏனென்றால், தலைவலிக்கு 200-க்கும் மேற்பட்ட காரணங்கள் உண்டு! 
தலைவலியைத் தூண்டும் வாழ்வியல் காரணங்கள் சில... 
  • 6-7 மணி நேரமாவது தடை இல்லா இரவு நேரத் தூக்கம் கிடைத்திடாதபோது... 
  • ஷிப்ட் முறை வேலையால் சீரான நேரத்தில் தூங்க இயலாமல் நேரம் தவறித் தூங்கும்போது... 
  • காற்றோட்டமான வசிப்பிடம் இல்லாதபோது... 
  • தொல்பொருள் ஆய்வாளரிடம் சிக்கிய ஓலைச்சுவடிபோல, பர்ஸில் வைத்திருக்கும் 15 வருடங்களுக்கு முந்தைய பிரிஸ்கிரிப்ஷனை வைத்துக்கொண்டு, மருத்துவர் ஆலோசனை இல்லாமல் தொடர்ந்து மாத்திரைகள் வாங்கிச் சாப்பிடும்போது... 
  • சிங்கப்பூரில் சீப்பாகக் கிடைக்கும் என வாங்கி வந்து பரிசளிக்கப்பட்ட சென்ட்டை கக்கத்திலும் கைக்குட்டையிலும் விசிறிக்கொள்ளும்போது... 
  • ஊட்டி, கொடைக்கானல் ஊர்சுற்றலில், பெட்டிக்கடைகளில் மலிவான விலையில் விற்கப்படும் குளிர்கண்ணாடிகளை குஷியாக வாங்கி மாட்டிக்கொண்டு உலவும்போது... 
  • பாராட்டாகக் கொஞ்சம் புன்னகை, பரவசப்படுத்தும் உச்சி முத்தம், பரிதவிப்பை ஆசுவாசப்படுத்தும் அரவணைப்பு... இவை எதுவும் எப்போதுமே கிடைக்காதபோது... 
தலைவலி தவிர்க்க... 
  • மூக்கு அடைத்து, தும்மலுடன், முகம் எல்லாம் நீர் கோத்து வரும் சைனசைட்டிஸ் தலைவலி சிறார்களுக்கும் பெண்களுக்கும் அதிகம். இதற்கு மஞ்சள், சுக்கு வகையறாக்களைச் சேர்த்து அரைத்து உருட்டிய `நீர்க்கோவை’ மாத்திரையை நீரில் குழைத்து நெற்றியில், மூக்குத்தண்டில், கன்னக் கதுப்பில் தடவி, ஓர் இரவு தூங்கி எழுந்தால் தலைவலி காணாமல் போகும். அதோடு, நொச்சித்தழை போட்டு ஆவி பிடிப்பது, இரவில் மிளகுக் கஷாயம் சாப்பிடுவது ஆகியவையும் தலைவலியைத் தீர்க்கும். சைனசைடிஸ் தலைவலியைப் போக்க சீந்தில் சூரணம் முதலான ஏராளமான சித்த மருந்துகள் உள்ளன. சீந்தில் கொடியை 'சித்த மருத்துவத்தின் மகுடம்' எனலாம். நீர்கோத்து, மூக்கு அடைத்து, முகத்தை வீங்க வைக்கும் சைனசைட்டிஸ் தலைவலிக்கு, அப்போதைக்கான வலி நீக்கும் மருந்தாக இல்லாமல், பித்தம் தணித்து மொத்தமாக தலைவலியை விரட்டும் அமிர்தவல்லி அது. 
  • சைனசைட்டிஸோ, மைக்ரேன் தலைவலியோ... வாரம் இருமுறை சுக்குத் தைலம் தேய்த்துக் குளித்தால், வலி மெள்ள மெள்ள மறையும். 
  • மைக்ரேன் எனும் பித்தத் தலைவலிக்கு இஞ்சி ஓர் அற்புத மருந்து. இந்த வலி வராமலிருக்க, இஞ்சித் தேனூறல், இஞ்சி ரசாயனம் என நம் பாட்டி மருத்துவம் இருக்கிறது. இஞ்சியை மேல் தோல் சீவி, சிறு துண்டுகளாக்கி, தேனில் ஊறவைத்து, தினமும் காலையில் அரை டீஸ்பூன் சாப்பிட்டால், மைக்ரேனுக்குத் தடுப்பாக இருக்கும். இதுதான் இஞ்சித் தேனூறல். இஞ்சி, சீரகம், இரண்டையும் பொன் வறுவலாக வறுத்து, அந்தக் கூட்டுக்குச் சம அளவு ஆர்கானிக் வெல்லம் கலந்தால், இஞ்சி ரசாயனம் தயார். சாப்பாட்டுக்குப் பின் இதை அரை டீஸ்பூன் சாப்பிடுவது அஜீரணத் தலைவலியைத் தவிர்க்கும். 
  • மைக்ரேன் தலைவலிக்கு, அதிமதுரம், பெருஞ்சீரகம் (சோம்பு), ஹை ட்ரேஸ் (High Trace) மினரல்ஸ் சேர்க்காத நாட்டுச்சர்க்கரை கலந்த ஒரு டம்ளர் பால் உடனடித் தீர்வு தரும். 
  • சீந்தில், சுக்கு, திப்பிலிப் பொடியை மூன்று சிட்டிகை அளவு எடுத்து தேனில் கலந்து முகர்ந்தாலே தலைவலி போகும் என, 'திருவள்ளுவ மாலை' எனும் நூல் குறிப்பிடுகிறது. இந்த மூன்று பொருட்களும் சைனசைட்டிஸ், மைக்ரேன் மற்றும் மன அழுத்தத் தலைவலிக்கான தீர்வை உடையன என நவீன அறிவியல் சான்றையும் பெற்றவை. முகர்ந்தால் மட்டும் போதாது... சாப்பிடவும் வேண்டும். 
  • அஜீரணத் தலைவலி மற்றும் இரவெல்லாம் 'மப்பேறி' மறுநாள் வரும் ஹேங் ஓவர் தலைவலிக்கு சுக்கு, தனியா, மிளகு போட்டு கஷாயம் வைத்து, பனைவெல்லம் கலந்து குடித்தால், தலைக்கு ஏறிய பித்தம் குறைந்து, தலைவலி போகும்.

Saturday, December 10, 2016

நிலவேம்பு... காய்ச்சலைக் குணமாக்கும் கண்கண்ட மருந்து!

நன்றி: பசுமை விகடன் - 10 டிஸம்பர் 2016

நிலவேம்பு... காய்ச்சலைக் குணமாக்கும் கண்கண்ட மருந்து!

மருத்துவம்சித்த மருத்துவர் பி.மைக்கேல் செயராசு - படங்கள்: எல்.ராஜேந்திரன்
வ்வொரு தாவரமுமே ஒரு மருத்துவப் பண்பைக் கொண்டிருக்கிறது. நம் முன்னோர், இந்தத் தாவரம் குறிப்பிட்ட வியாதியைக் குணப்படுத்தும் எனக் கண்டுபிடித்து வைத்திருப்பது மிகப் பிரமிப்பான விஷயம். ஆனால் நாம் அவற்றைத் தெரிந்துகொள்ளத் தவறிவிட்டோம் என்பது வேதனையான உண்மை. அப்படிப்பட்ட தாவரங்கள் குறித்த புரிதலையும் அவற்றைப் பயன்படுத்தும் விதத்தையும் இத்தொடர் மூலமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இத்தொடரில் உள்ள தகவல்கள் அனைத்தும் மூல நூல்களைத் தழுவியே இருக்கும் என்பதால், இதைக்கொண்டு சுய மருத்துவம் செய்துகொள்ள இயலும். இந்த இதழில் நாம் பார்க்க இருக்கும் மூலிகை ‘நிலவேம்பு’.
2009-ம் ஆண்டுக்கு முன்பு வரை காய்ச்சல் வந்தால் யாரும் பெரிதாகக் கவலைப்பட்டிருக்க மாட்டோம். காய்ச்சல் வந்தால், மருந்துகள் சாப்பிட்டாலும், சாப்பிடாவிட்டாலும் மூன்று நாட்களில் சரியாகிவிடும். அதற்கு மேல் காய்ச்சல் நீடிக்கும்பட்சத்தில்தான் ரத்தப் பரிசோதனை செய்யச் சொல்வார்கள், மருத்துவர்கள்.

 ஆனால் 2009, 2010, 2011, 2012-ம் ஆண்டுகளில் முறையே சிக்குன் குனியா, பன்றிக்காய்ச்சல், ஃப்ளூ காய்ச்சல், டெங்கு காய்ச்சல் என அடுத்தடுத்துப் பரவிய காய்ச்சல் மக்களை நிலைகுலையச் செய்துவிட்டது. இப்போதும்கூட டெங்கு தொடர்வது, வருந்தத்தக்க செய்திதான். டெங்கு காய்ச்சல் பரவிய பிறகுதான் காய்ச்சல் என்றாலே அச்சம் தொற்றிக்கொண்டுவிட்டது. மிக வேகமாக சிக்குன் குனியா மற்றும் டெங்கு ஆகியவை பரவி வந்த சமயத்தில் மக்களின் துயர் போக்கி குணமடையச் செய்தது, நிலவேம்புக் குடிநீர்தான். இதை ஒப்புக்கொண்ட அரசாங்கம், நிலவேம்புக் குடிநீர் குறித்துப் பரப்புரை செய்து அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இக்குடிநீரை இலவசமாக வழங்கி காய்ச்சலை குணமாக்கியதோடு, வராமல் தடுக்கவும் ஏற்பாடு செய்தது. 

சிக்குன் குனியா நோயின்போது இக்குடிநீரைக் குடித்தவர்களுக்கு மூட்டு வலி நன்கு குணமானது என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை. காய்ச்சல் பரவிய சமயத்தில், எங்கள் பகுதியில் சிறப்பு முகாம்கள் நடத்தி, நிலவேம்புக் குடிநீர் தயாரித்து மக்களுக்குக் கொடுத்து நோயின் பிணியில் இருந்து விடுபடச் செய்ததோடு, விழிப்பு உணர்வையும் ஏற்படுத்தினோம். நிலவேம்புக் குடிநீர் ஏதோ நேற்று கண்டுபிடிக்கப்பட்டதல்ல. காலங்காலமாக நம் முன்னோர் பயன்படுத்தி வந்ததுதான். இன்னும் சொல்லப்போனால், 1970-ம் ஆண்டிலிருந்தே, பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் மக்களுக்குக் காய்ச்சி வழங்கப்பட்ட மருந்துதான் இது. 1900-ம் ஆண்டுகளில் வாழ்ந்த கண்ணுசாமிப்பிள்ளை என்னும் மருத்துவ அறிஞர், தனது நூல்களில் சர்வ சுரக்குடிநீர் மற்றும் காய்ச்சலைக் குணமாக்கும் மற்ற குடிநீர் வகைகளிலும் நிலவேம்பு சேர்ப்பது குறித்து எழுதியுள்ளார். நிலவேம்பை, வட மாநிலங்களில் ‘கிரிசாத்து’ என்கிறார்கள். தென்மாவட்டங்களில், நிலவேம்புக் குடிநீரை ‘விஷக்குடிநீர்’ என்று சொல்லி வருகிறார்கள்.

‘சிறியாநங்கை’ எனும் பெயரில் வீடுகளில் வளர்க்கப்படும் சிறு செடியே நிலவேம்பு ஆகும். மலைவேம்பு, துலுக்க வேம்பு, சிவனார் வேம்பு, நிலவேம்பு, கறிவேம்பு, மதகரி வேம்பு, நாய்வேம்பு, சர்க்கரை வேம்பு, சந்தன வேம்பு என வேம்பு இனத்தில் பல வகைகள் உள்ளன. இவற்றில் நிலவேம்பு, சிவனார் வேம்பு ஆகிய இரண்டு மட்டும் செடியாக வளரக்கூடியவை. மற்றவை அனைத்தும் மரமாக வளரக்கூடியவை. 

நிலவேம்பின் இலைகள் மிளகாய்ச்செடியின் இலைகளைப் போன்று இருக்கும். காய் முதிர்ந்ததும் வெடித்து விதைகள் பரவும். அதனால், ஒரு செடியை நட்டு வைத்தால்கூட மூன்றே மாதங்களில் கொத்துக்கொத்தாகப் பல்கிப் பெருகிவிடும். இதனுடன் சில சரக்குகளைச் சேர்த்து நாமே குடிநீர் தயாரித்துக் காய்ச்சலிலிருந்து மீளலாம்.
நிலவேம்புக் குடிநீரை, உணவுக்கு முன் அல்லது உணவுக்குப் பிறகு என எப்போது வேண்டுமானாலும் குடிக்கலாம். எந்த வகைக் காய்ச்சலாக இருந்தாலும், ‘விருந்தும் மருந்தும் மூன்று நாட்கள்’ என்று சொல்வதற்கேற்ப மூன்று நாட்கள் கட்டாயம் குடிக்க வேண்டும். சர்க்கரை, ரத்த அழுத்தம், தைராய்டு முதலான நாட்பட்ட பிணிகளுக்குத் தொடர்ந்து ஆங்கில மருந்துகள் சாப்பிட்டு வருபவர்கள்கூட காய்ச்சல் சமயத்தில் நிலவேம்புக்குடிநீரை அருந்தலாம். இந்த மூன்று நாட்களில் உணவுக்கட்டுப்பாடும் (பத்தியம்) அவசியம். உடனே பத்தியம் என்றால் பயப்படத் தேவையில்லை. நோய்க்குத்தான் பத்தியம். மருந்துக்கு அல்ல. காய்ச்சல் சமயங்களில் உடலின் செரிமான மண்டல உறுப்புகள் சோர்வுற்றிருக்கும். அந்த நேரத்தில் எளிதில் செரிக்கக்கூடிய உணவுகளைத்தான் உண்ண வேண்டும். 

காய்ச்சல் சமயத்தில் காற்றோட்டமான இடத்தில் ஓய்வெடுக்க வேண்டும். அதிகளவில் வெந்நீர் குடிக்க வேண்டும். முதல் நாள் முழுவதும் அன்னப்பால் கஞ்சி அருந்த வேண்டும். இரண்டாம் நாள் இட்லி; தக்காளி, புளி ஆகியவை இல்லாமல் மிளகு, சீரகம் மட்டும் சேர்த்த ரசம், அரிசிச் சோறு சாப்பிட வேண்டும். மூன்றாம் நாள் இட்லி; முருங்கை, கத்திரி, அவரை சேர்த்துச் செய்யப்பட்ட பாசிப்பருப்பு சாம்பார், அரிசிச் சோறு சாப்பிட வேண்டும். காபி, தேநீர் ஆகியவற்றைக் குறைந்தளவில் குடிக்கலாம். இதுதான் பத்திய உணவு. ‘இலங்கணம் பரம ஔடதம்’ என்று முன்னோர் சொல்லியுள்ளனர். இலங்கணம் என்றால் உண்ணாவிரதம் கடைப்பிடிப்பது. அதாவது உண்ணாமல் இருப்பதே நல்ல மருந்து எனப் பொருள். 
சித்த மருத்துவ மெய்யறிவியல்படி, ‘குடல்தன்னில் சீதமலாது சுரம் வராது’ என்று சொல்லப்பட்டுள்ளது. வைரஸ், பாக்டீரியா போன்றவற்றால் சுரம் வருகிறது என நவீன மருத்துவ அறிவியல் சொல்கிறது. மனித உடலில் நுழைந்த நுண்ணுயிரிகள் பல்கிப் பெருகுவதற்கு உகந்த குளிர்ச்சியான சூழலைத்தான் சீதம் என்று சொல்லியுள்ளனர். காய்ச்சல் சமயத்தில் ரொட்டி, பன், பிஸ்கட், பழச்சாறு போன்றவற்றை உண்ணக்கூடாது. ரொட்டி, பன் போன்றவற்றால் மலச்சிக்கல் ஏற்படும். பழச்சாறு உடலில் புளிப்பை அதிகரிப்பதால் உடல் குளிர்ச்சியடையும். அதனால், காய்ச்சல் குணமாகத் தாமதமாகும். 

வாரம் ஒருமுறை இரவில் படுக்கப் போகும் சமயத்தில் 50 மில்லி நிலவேம்புக் குடிநீரைக் குடித்து வந்தால், நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். கை, கால் சோர்வு,  உடல்வலி, காய்ச்சல் முதலியன வராது. ராமநாதபுரம் மாவட்ட கிராமங்களில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை அன்று இக்குடிநீரைக் குடிக்கும் பழக்கம் உண்டு. அப்பகுதிகளில் இதை ‘ஞாயிற்றுக்கிழமை கஷாயம்’ என்று சொல்கிறார்கள். 
     
-வளரும்

நீங்களே தயாரிக்கலாம் நிலவேம்புக் குடிநீர்! 

நிலவேம்பு, வெட்டிவேர், விளாமிச்சைவேர், கோரைக்கிழங்கு, பற்படாகம், சந்தனச்சிறாய், பேய்ப்புடல், சுக்கு, மிளகு ஆகிய ஒன்பது சரக்குகளும் வகைக்கு 100 கிராம் எடுத்து ஒன்றாகக் கலந்து, ஒன்றிரண்டாக அரைத்து வெயிலில் 3 மணி நேரம் காய வைக்க வேண்டும். பிறகு, காற்றுப்புகாத கண்ணாடி பாட்டிலில் பத்திரப்படுத்த வேண்டும். இதை 6 மாதங்கள் முதல் ஓர் ஆண்டு வரை பயன்படுத்தலாம். இச்சரக்குகள் எல்லாமே நாட்டு மருந்துக்கடையில் கிடைக்கும். 

மேலே சொன்ன கலவையில் 30 கிராம் எடுத்து, 1 லிட்டர் தண்ணீரில் இட்டு அது கால் லிட்டராக (250 மில்லி) சுண்டும் வரை கொதிக்க வைத்து இறக்கினால், நிலவேம்புக் குடிநீர் தயார். இதைப் ஃப்ளாஸ்கில் ஊற்றி வைத்துப் பயன்படுத்தலாம். காய்ச்சல் கண்டவர்கள், 3 மணி நேரத்துக்கொரு முறை, இளஞ்சூட்டில் குடிக்க வேண்டும். 12 வயதுக்கு மேற்பட்டவர்கள் வேளைக்கு 50 மில்லி குடிக்கலாம். 3 வயது முதல் 12 வயதுக்குட்பட்டவர்கள் வேளைக்கு 30 மில்லி குடிக்கலாம். மூன்று மாதங்கள் முதல் மூன்று வயது வரை உள்ள குழந்தைகளுக்கு வேளைக்கு 20 மில்லி கொடுக்கலாம்.

சளியைக் குணமாக்கும் மூலிகைகள்! 

சளியுடன் கூடிய காய்ச்சல் இருந்தால் நிலவேம்புக் குடிநீர் தயாரிக்கும்போது ஆடாதொடை இலை, தூதுவளை இலை, துளசி இலை, கண்டங்கத்திரி ஆகியவற்றில் கிடைக்கும் இலைகளில் கைப்பிடியளவு எடுத்து குடிநீர்ப் பொடியோடு சேர்த்துக் காய்ச்சிக் குடிக்கலாம். உடல்வலி அதிகமாக இருந்தால், கைப்பிடியளவு குறுந்தொட்டி வேர் எடுத்து ஒன்றிரண்டாக இடித்துக் குடிநீர்ப் பொடியோடு சேர்த்துக் காய்ச்சிக் குடிக்கலாம்.

காய்ச்சலுடன் அதிகமாக உடல்வலி, தலைவலி இருந்தால் நொச்சி இலை, எலுமிச்சை இலை, மஞ்சள் பொடி, கல் உப்பு ஆகியவற்றைக் கொதிக்க வைத்து ஆவி பிடிக்கலாம். இதை ‘வேதுபிடித்தல்’ என்பார்கள். உடல் முழுவதும் வியர்வை ஆறாகப் பெருக்கெடுத்து ஓடும் வரை ஒரு மணி நேரத்துக்கொரு முறை தொடர்ந்து ஆவி பிடிக்க வேண்டும்.

கஷாயம்! 

குடிநீர் அல்லது கஷாயம் என்பது சித்த மருத்துவ உள்மருந்து வடிவங்களில் ஒன்று. இது காபி, டீ போன்று கொதிக்க வைத்து இறக்குவது அல்ல. மருந்துப் பொருட்களுடன் தண்ணீர் சேர்த்து நான்கில் ஒன்றாக, எட்டில் ஒன்றாக, பதினாறில் ஒன்றாக, முப்பத்திரண்டில் ஒன்றாக வற்ற வைத்து வடிகட்டி எடுப்பதுதான் கஷாயம்். இதை மூன்று மணிநேரத்துக்குள் பயன்படுத்த வேண்டும் என்பதால், தேவைக்குத்தான் தயாரிக்க வேண்டும். ஃப்ளாஸ்கில் சூடாகப் பராமரித்தால் 12 மணி நேரம் வரை வைத்திருக்கலாம். கஷாயம் தயாரிக்க மண்பானையும், விறகு அடுப்பும் சிறந்தவை. கஷாயத்துக்கான மருந்துப் பொடி, மிகவும் நுண்ணியதாக இருக்கக்கூடாது.

மருத்துவர் கண்ணுசாமிப் பிள்ளை!
இருபதாம் நூற்றாண்டின் தொடக்க ஆண்டுகளில் வாழ்ந்த மாமனிதர் இவர். சித்தர்களின் மூல நூல்களில் சொல்லப்பட்ட மருந்துகளைத் தயாரித்து நோயாளிகளுக்கு வழங்கியதோடு அதுகுறித்த இவரது அனுபவங்களையும் தெளிவான உரைநடை வடிவில் பதிவு செய்துள்ளார். கண்ணுசாமி வைத்திய சிந்தாமணி, கண்ணுசாமி சிகிச்சாரத்னதீபம், கண்ணுசாமி பரம்பரை வைத்தியம், கண்ணுசாமியம் என்னும் வைத்திய சேகரம், பதார்த்த குண சிந்தாமணி ஆகிய நூல்கள் இவர் எழுதியவை. சென்னை, கொண்டித்தோப்பு, வெங்கட் ராமைய்யா தெருவில் உள்ள ரத்தினசாமி நாயக்கர் அண்ட் சன்ஸ் எனும் அச்சகத்தார், இவரது நூல்களைத் தொடர்ந்து பதிப்பித்து வருகிறார்கள்.

அன்னப்பால் கஞ்சி (புனர்பாகம்) 

50 ஆண்டுகளுக்கு முன்பு வரை இது அனைவருக்கும் தெரிந்த மருந்து உணவுதான். சிறிது அரிசியுடன், இரண்டு மிளகு, ஒரு ஏலக்காய் ஆகியவற்றை இளவறுப்பாக வறுத்து, ஒன்றிரண்டாக அரைக்க வேண்டும். அதனுடன் நிறைய தண்ணீர் சேர்த்துக் கொதிக்க வைத்து இறக்கினால் அன்னப்பால் கஞ்சி தயார். இதுவே சித்த மருத்துவ நூல்களில் ‘புனர்பாகம்’ என்று அழைக்கப்படுகிறது. இதை இளஞ்சூட்டில் ஒரு மணி நேரத்துக்கொரு முறை குடித்து வந்தால் அயற்சி, சோர்வு, மயக்கம் முதலியன உடனே நீங்கும்.

கட்டியம் கூறும் மருத்துவ ஆய்வு!
நிலவேம்புக் குடிநீர் குறித்து ஆய்வு மேற்கொண்டு 2014-ம் ஆண்டில், ஆய்வறிக்கை வெளியிட்டிருக்கிறார், சென்னை, கிங்ஸ் மருத்துவ ஆய்வு நிறுவனத் தலைவர் மரு.குணசேகரன். அதில், ‘நிலவேம்புக் குடிநீர், வைரஸ் கிருமிகளுக்கு எதிராகச் செயல்படுகிறது என்பது உறுதி. அதே சமயத்தில் 2013-ம் ஆண்டில் தமிழகம் முழுவதும் அரசின் முயற்சியால் நிலவேம்புக் குடிநீர் மக்களுக்கு வழங்கப்பட்டதால், அந்த ஆண்டில் இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களைவிட தமிழக மக்களுக்கு சுவாசப் பாதை நோய்த் தொற்றுகள் மிக மிகக் குறைவாக இருந்ததைக் கண்டறிந்தோம்’ என்று சென்னையில் நடைபெற்ற நூல் வெளியிட்டு விழாவில் தெரிவித்தார்.

Thursday, December 1, 2016

மலச்சிக்கல் தீர என்ன செய்யலாம்? நலம் நல்லது–18 #DailyHealthDose

மலச்சிக்கல்

`காலைக் கடன்’... இந்த வார்த்தையை யார் முதலில் அழகாகச் செதுக்கினார்கள் என்பது தெரியவில்லை. உடனே இந்தக் கடனை பைசல் செய்யாவிட்டால், வட்டியைக் குட்டியாகப் போட்டு வாழ்வையே சிதைத்துவிடும். மலச்சிக்கல், கடன் சுமையைப்போல பல நோய்களைப் பிரசவித்து, நம் நல்வாழ்வுக்கே சிக்கலைத் தந்துவிடும். இன்றைக்கு நன்கு விளம்பரப்படுத்தப்பட்டு, அலங்காரமாக விற்கப்படும் `ரெடி டு ஈட்’ உணவுகளில் பெருவாரியானவை, நம் ஜீரண நலத்துக்குச் சிக்கலை ஏற்படுத்துபவை. காலை எழுந்ததும், எந்தப் பிரச்னையும் இல்லாமல் மலத்தை வெளியேற்றும் பழக்கத்தைச் சிதைப்பவை.

நவீன மருத்துவம், வாரத்துக்குக் குறைந்தபட்சம் மூன்று நாட்களாவது மலம் கழிக்கவில்லை அல்லது இறுகியவலியுடன் கூடிய மலம் கழித்தலை மட்டும்தான் ‘மலச்சிக்கல்’ என வரையறுக்கிறது. ஆனால், பாரம்பர்ய மருத்துவம் அனைத்துமே, எந்த மெனக்கெடலும் இல்லாத சிக்கலற்ற காலை நேர மலம் கழித்தலை மிக ஆணித்தரமாக அறிவுறுத்துகின்றன. ‘கட்டளைக் கலித்துறை’ நூல், நாள் ஒன்றுக்கு மூன்று முறை மலம் கழிப்பது நல்லது என்கிறது. சித்த மருத்துவ, `நோய் அணுகா விதி’, மலத்தை அடக்கினால் ஏற்படும் பின் விளைவுகளைச் சொல்கிறது...

`முழங்காலின் கீழ் தன்மையாய் நோயுண்டாகும்
தலைவலி மிக உண்டாகும்
சத்தமானபான வாயு பெலமது குறையும்
வந்து பெருத்திடும் வியாதிதானே...’ என்கிறது.

மூலநோய், மூட்டுவலி, தலைவலி முதல் எந்த ஒரு தசை, நரம்பு சார்ந்த நோய்க்கும், மலச்சிக்கலை நீக்குவதைத்தான் முக்கியமான முதல் படியாக சித்த மருத்துவமும், தமிழர் வாழ்வியலும் சத்தமாகச் சொல்கின்றன.

இனி, மலச்சிக்கல் தீர கவனிக்கவேண்டிய விஷயங்கள்...

*வரும்போது அல்லது வசதிப்படும்போது போய்க்கொள்ளலாம் எனும் மனோபாவம் எல்லோரிடமும் வலுத்து வருகிறது. இது தவறு. பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் முதல் அலுவலகம் செல்வோர் வரை பலருக்கும் காலைக் கடன் கழிப்பது கடைசிபட்சமாகிவிட்டது. பின்னாளில் இதுவே பழக்கமாகி, காலைக்கடன் பலருக்கும் மதியம், மாலை, இரவுக் கடனாக இஷ்டத்துக்கு மாறிவிட்டது. இப்படி, `அதுதான் போகுதே... அப்புறமென்ன?’ என அலட்சியப்படுத்துவதுதான் பல நோய்களுக்கும் ஆரம்பம். காலைக் கடனை காலையிலேயே தீர்த்துவிடுவதே சிறந்தது.



* அதிகாலையில் மலம் கழிப்போருக்குத்தான், பகல் பொழுதில் பசி, ஜீரணம் சரியாக இருக்கும்; வாயுத்தொல்லை இருக்காது; அறிவு துலங்கும்.

* `சாப்பிட்ட சாப்பாட்டுல கொஞ்சம் துவர்ப்பு கூடிருச்சோ... அதனாலதான் மலச்சிக்கலோ...’ என வீட்டிலுள்ள பெரியவர்கள் யோசிப்பார்கள். அடுத்த முறை வாழைப்பூ சமைக்கும்போது, அளவைக் குறைத்து சமைப்பார்கள். இந்தச் சமையல் சாமர்த்தியம், `டூ மினிட்ஸ்’ சமையலில் கைகூடாது. எனவே, துரித உணவை கொஞ்சம் ஓரமாக வைப்பதே நல்லது.

வாழைப்பூ

* பாரம்பர்யப் புரிதலின்படி அன்றாடம் நீக்கப்படாத `அபான வாயு’ உடல், உள்ளம் இரண்டையும் நிறையவே சங்கடப்படுத்தும். எனவே, வாயுவையும் அடக்கக் கூடாது.

* பள்ளிவிட்டு வந்ததும், புத்தகக் கட்டோடு நேரே கழிப்பறைக்கு ஓடும் குழந்தைக்கு, மாலை, இரவு, நள்ளிரவில்தான் பசியெடுக்கும். பகலில் கொண்டுசெல்லும் உணவைப் பத்திரமாகத் திரும்பக்கொண்டு வந்துவிடுவார்கள். எனவே, குழந்தைகளை காலைக்கடனைப் பின்பற்றச் செய்யவேண்டியது அவசியம்.

* நாள்பட்ட மூட்டுவலி, பக்கவாதம், தோல் நோய்கள் அனைத்துக்கும் உடலில் சீரற்று இருக்கும் வளி, அழல், ஐயம் எனும் முக்குற்றங்களை முதலில் சீராக்கி மருத்துவம் செய்ய முதல் மருந்தாக பேதி கொடுப்பார்கள். இது பல ஆயிரம் ஆண்டுப் பழக்கம். ஆரோக்கியமான உடலுக்கு வருடத்துக்கு இரண்டு முறை பேதி மருந்து எடுத்துக்கொள்வது நல்லது. அதற்காக அதைக் கடையில் வாங்கி எடுத்துக்கொள்ளக் கூடாது. குடும்ப மருத்துவரிடம் சென்று, நாடி பார்த்து, உடல் வலிமை பார்த்து, உடலுக்கு ஏற்ற பேதி மருந்தை எடுப்பதே நல்லது.

* இரவில் படுக்கப்போவதற்கு முன்னர் இளஞ்சூடான நீர் இரண்டு டம்ளர் அருந்துவதும், காலை எழுந்ததும், பல் துலக்கி, இரண்டு டம்ளர் சாதாரண நீர் அருந்துவதும் நல்லது.

கிஸ்மிஸ்

* குழந்தைகளுக்கு 5-10 உலர் திராட்சைகளை (கிஸ்மிஸ், அங்கூர் திராட்சை) 2-3 மணி நேரம் மாலையில் ஊறவைத்து, பின் அதை நீருடன் நன்கு பிசைந்து கொடுத்தால் நல்ல பலன் கிடைக்கும்.

* கடுக்காய் பிஞ்சை லேசாக விளக்கெண்ணெயில் வறுத்து, பொடித்த பொடியை ஒரு டீஸ்பூன் அளவுக்கு முதியோர் சாப்பிடலாம். மலம் கழிப்பது எளிதாகும்.

* கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் ஆகிய மூன்று மூலிகைக்காய்களின் உலர்ந்த தூள் (விதை நீக்கிய பின்), ஒவ்வொரு வீட்டிலும் இருக்கவேண்டிய மிக முக்கிய மருந்து; உன்னதமான உணவு. மாலையில் இந்தப் பொடியை மாலையில் ஒரு டீஸ்பூன் வரை சாப்பிட்டால், காலையில் மலத்தை எளிதாகக் கழியவைக்கும். பல ஆரோக்கியங்களை உடலுக்குத் தரும். இதை `திரிபலா பொடி’ என்றும் சொல்வார்கள்.

மலச்சிக்கல் தீர விரும்புகிறவர்கள் முக்கியமாகத் தவிர்க்கவேண்டியது ஆரோக்கியமற்ற உணவுகளைத்தான்... கவனத்தில் கொள்க!

Sunday, November 27, 2016

வார்த்தைகளின் வலிமை; எண்ணங்களின் எழுச்சி thanks to dinamalar


பதிவு செய்த நாள்

18நவ
2016 
01:44

நாம் பேசும் வார்த்தைகளுக்கு வலிமை, நினைக்கும் எண்ணங்களுக்கு எழுச்சி இருக்கிறது என்பதை சில நேரங்களில் உணர்ந்திருப்போம். நல்லதை பேசினால் நல்லதும், கெட்டது பேசினால் கெட்டதும் நடக்கும் என்பது நுாற்றுக்கு, நுாறு உண்மை. ஜப்பான் டாக்டர் மாசாரு இ மோட்டோ என்பவர், மனித எண்ணங்கள், வார்த்தைகள், உணர்வுகள், இசை, பிரார்த்தனை ஆகியவை நீரில் எந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை மிகத்தெளிவாக ஆராய்ச்சி செய்துள்ளார்.நீர், அது உள்வாங்கும் தகவல்களுக்கு ஏற்ப தரம் மாறுகிறது என்று கண்டார். உதாரணமாக 'நன்றி' என்று ஒரு துண்டு காகிதத்தில் எழுதி ஒரு குடிநீர் பாட்டிலில் உள் முகமாக ஒட்டி வைத்தார். பின், அந்த நீரை உறைய வைத்து அந்தப் பனிப் படிகத்தை ஒரு பிரத்யேகமான நுண்ணோக்கி மூலம் பார்த்ததில் அது அழகான வடிவத்திலிருப்பதை கண்டார்.அந்த பாட்டிலில் நன்றி என்ற வார்த்தையை எடுத்து விட்டு 'நீ முட்டாள்' என்ற வார்த்தை ஒட்டப்பட்டது. பின்னர் அதன் நீர்ப் படிகத்தை பார்த்த பொழுது அது வடிவமில்லாமல் கலங்கியிருக்கக் கண்டார். இந்த ஆராய்ச்சியின் முடிவில், நீருக்கும் உணர்வு இருக்கிறது என்று நிரூபித்தார்.எண்ணங்களும் வார்த்தைகளும் நீருக்கு வார்த்தைகளின் சக்தியை கிரகிக்கும் திறன் உள்ளது. உள்ளதிலேயே அன்பு, நன்றி என்ற வார்த்தைகள் தான் மிக அழகான நீர்ப்படிகங்களைக் கொண்டிருந்தன. டாக்டர் மோட்டோவின் கொள்கைக்கு நாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.ஏனென்றால், நம் ஸ்துால உடல் 70 சதவீதம் நீரால் ஆனது. பிறக்கும் முன், குழந்தை கர்ப்பத்தில் நீரில் தான் இருக்கிறது. டாக்டர் இ மோட்டோ எல்லா மூலக்கூறுகளிலும் கலந்திருக்கும் ஒரு சக்தியினையும் அது வெவ்வேறு அதிர்வு நிலையில் இருப்பதையும் விளக்கினார். இதை ஹேடோ சக்தி என்று குறிப்பிட்டார்.இதன் மூலம், நம்முடைய நல்லெண்ணங்களும், வார்த்தைகளும், நம்மிலும், நம்மை சுற்றியுள்ளவர்களிடமும், ஏன் இந்த பிரபஞ்சத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும் வலிமையுள்ளது. நம்முடைய எண்ணங்கள் அதே போன்ற எண்ணங்களை வேறு இடங்களிலும் ஏற்படுத்தும் திறன் பெற்றவை என்பதை, டாக்டர் இ மோட்டா பின்வரும் உதாரணம் மூலம் தெளிவு படுத்ததுகிறார்.மனதின் அதிர்வலைகள் நாம் பேசும் வார்த்தைகளுக்கு மிகவும் வலிமையிருக்கிறது. நம் மன அதிர்வலைக்கு ஏற்ற ஒத்த அதிர்வலைகள் உள்ளவர்களிடம், நம்முடைய வார்த்தைகள் அதே போன்ற எண்ணங்களைத் துாண்டிவிடும் சக்தியுடையது. உதாரணமாக ஒரு தற்கொலை நடந்திருக்கிறது என்றால் அதைப்பற்றி அதிகம் பேசும் போது, ஊடகங்களில் அது காட்டப்படும் போதும், அதே போன்ற சோர்ந்த மனம் உள்ளவர்கள் மனதில் தற்கொலை எண்ணத்தைத் துாண்டிவிடும். (இது போன்ற சம்பவத்தைக் கேள்விப்பட்டால் சம்பந்தப்பட்ட ஜீவாத்மாவிற்காக பிரார்த்தனை செய்துவிட்டு அதைப்பற்றி நினைக்காமல், பேசாமல் இருப்பது நல்லது).வீட்டில் ஒருவர் எரிச்சலாக பேசினால் மற்றவர்களும் எரிச்சலுடன் பேச ஆரம்பிப்பதைப் பார்க்கிறோம். நம்முடைய எண்ணங்களும், வார்த்தைகளும் ஒத்த அதிர்வலைகள் உள்ள மற்றவர்களைப் பாதிக்கும். அதே போல் மற்றவர்களுடைய எண்ணங்களும், வார்த்தைகளும் நம்மையும் பாதிக்கும் சக்தி பெற்றவை.தியானம் மற்றவர்களுடைய எதிர்மறை எண்ணங்களும், வார்த்தைகளும் நம்மை பாதிக்காமல் காக்க உடற்பயிற்சி, மூச்சுப்பயிற்சி, தியானம், பிரார்த்தனை, சேவை, அன்பு, கருணை, நன்றி, நம்பிக்கை போன்ற நற்பண்புகள் மூலம் நம் அதிர்வலைகளை உயர்ந்த நிலைக்குக் கொண்டு செல்ல வேண்டும். இப்படிச் செய்தால் மற்றவர்களின் எதிர்மறை எண்ணங்கள், வார்த்தைகள் நம்மைப் பாதிக்காது.எதிர்மறை எண்ண வார்த்தைகள் பொதுவாக குறைந்த அதிர்வலைகள் உள்ளவர்களிடம் தான் இருக்கும், ஆகவே நம் அதிர்வலைகளை உயர்த்திக் கொள்ளும் பொழுது, மற்றவர்களுடைய எதிர்மறை எண்ண வார்த்தைகள் நம்மைப் பாதிக்காது. டாக்டர் இ மோட்டோ, நம்முடைய பெரும்பான்மையான நோய்களுக்கு காரணம் நம் எதிர்மறை உணர்வுகள் தான் என்று திட்டவட்டமாகக் கூறினார். ஏதோ காரணத்திற்காக நாம் உணர்ச்சிவசப்படும் போது, நம்மில் நுண்ணிய அணு அளவில் (அணுவை விட சிறியது) பாதிப்பை உண்டாக்கும். உணர்ச்சி வசப்படுதல் நீடித்தால் உடல் உறுப்புகளை பாதிக்கிறது.ஒவ்வொரு நோயின் வளர்ச்சிக்குப் பின் நிச்சயம் ஒரு காரணம், சரித்திரம் இருக்கும். எனவே, நாம் இந்த பாதிப்பை ஆரம்ப நிலையில் கண்டுபிடித்தால், எளிமையாக நுண் அணுக்கள் நிலையிலேயே குணமாக்க முடியும். முதலில் நம் எதிர்மறை எண்ணங்களும், உணர்வுகளும் தான் நம்முடைய நோய்கள் என்பதை உணர வேண்டும்.60 மில்லியன் செல்கள் அலோபதி மருத்துவத்தில் திசுக்கள் நிலையில் தான் சிகிச்சை அளிக்கப்படுகிறது. நாம் நம்முடைய எண்ணங்களையும், உணர்வுகளையும் நேர்மறையாக கையாளத் தெரிந்து கொண்டு, அதை பழக்கத்தில் கொண்டு வந்தால் எவ்வித நோயையும் குணப்படுத்திவிடலாம். நம் ஸ்துால உடலில் 60 மில்லியன் செல்கள் உள்ளன. அவை எப்பொழுதும் துடிப்பான நல்ல அதிர்வலைகளுடன் செயல்பட்டுகிறது. அந்த அதிர்வுகளில் பாதிப்பு ஏற்படும் போது நோய் உண்டாகிறது. நம் ஒட்டு மொத்த வாழ்க்கையும் அதிர்வுகளின் ஆதிக்கத்தில் தான் நடக்கிறது. இருதயம் துடிப்பது நின்றால் மரணம் ஏற்படும் என்கிறோம். நோயாளிகளின் அதிர்வுகளை இயல்பு நிலைக்கு கொண்டு வந்தாலே எளிதாக குணமாகி விடுவார்.வார்த்தைகளின் வலிமை டாக்டர் இ மோட்டோ, வார்த்தைகளுக்கு மிகவும் சக்தியான அதிர்வலைகள் உள்ளன என்று விளக்குகிறார். நேர்மறையாக இருந்தால் அதன் விளைவுகளும் பலன்களும் மிகவும் அதிகமாக உள்ளது. பிரார்த்தனை மிகவும் அதிகமான 'பாஸிடிவ்' சக்தியை ஏற்படுத்துகிறது என்று கூறுகிறார். ஆகவே புனித நுால்கள், பாடல்களை பாராயணம் செய்வதும் வழக்கமாக பிரார்த்தனை செய்வதும் நமக்குள்ளும், நம்மைச் சுற்றியும் நல்ல அதிர்வலைகளை ஏற்படுத்தி தீய சக்தியிலிருந்து காப்பாற்றும்.பிரார்த்தனையின் பலனை எடுத்துக்காட்ட டாக்டர்.இ மோட்டோ ஓர் ஏற்பாடு செய்தார். ஜப்பானிலுள்ள பியூஜிவாரா என்ற அணை பாசி, குப்பையால் மாசுப்பட்டிருந்தது. புத்தமதத்தை சேர்ந்த துறவிகள் பலர் ஒரு குழுவாக வந்த அணையின் அருகிலிருந்து பல நிமிடங்கள் பிரார்த்தனை செய்தனர். பிரார்த்தனைக்கு முன், பின் அணையின் நீர் பரிசோதிக்கப்பட்டது. பிரார்த்தனைக்குப் பின் நீர் சுத்தமாகியிருப்பது ஆராய்ச்சியில் தெரியவந்தது.அன்புடன் சமையல் தண்ணீர் வைத்திருக்கும் கண்ணாடி ஜாடியில் உள்முகமாக அன்பு, நன்றி போன்ற வார்த்தைகளை ஒட்டி வைக்கவும். அதிலிருந்து 5 டம்ளர் நீராவது குடிக்க வேண்டும். சமைக்கும் போது அன்பு கலந்த முழுமனதுடன் சமைத்தால் அந்த உணவில் நேர்மறை சக்தி அதிகமாக இருக்கும். நாம் குடிக்கும், குளிக்கும் நீர், உணவிற்கு நன்றி சொல்லுங்கள். காற்றில் நீரின் ஈரப்பதம் இருக்கிறது. நாம் வாழ்வின் எல்லா விஷயங்களுக்கும் நன்றி சொல்லும் போது, அது நம் காற்று மண்டலத்தில் சக்தியை அதிகப்படுத்தி, நமக்கும் நம்மை சுற்றியுள்ளவர்களுக்கும் நன்மையைத் தரும்.- முனைவர். ஜெ. விக்னேஷ் சங்கர்மனநல ஆலோசகர், மதுரை.

Saturday, November 26, 2016

Posted Date : 10:21 (21/01/2016)Last updated : 15:24 (21/01/2016) ஒரு தலைவன் இப்படிதான் பேச வேண்டும்! - மோடி முதல்... தோனி வரை நமக்கு கற்று தரும் பாடம்

ஒரு தலைவன் இப்படிதான் பேச வேண்டும்! - மோடி முதல்... தோனி வரை நமக்கு கற்று தரும் பாடம்

ஒருவரது குணத்தை பெரிதும் வெளிப்படுத்துவது அவரது பேச்சாகதான் இருக்கும். ஒருவேளை நீங்கள் அதிகம் பேசுபவராக இருக்கலாம் அல்லது குறைவாக பேசுபவராக இருக்கலாம். ஆனால் நீங்கள் பேசும் இடம் எது என்பது மிகவும் முக்கியம்.
ஒரு கட்சியின் பொதுக்கூட்டம் துவங்கி உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தின் பரிசளிப்பு விழா வரை பல்வேறு நிகழ்ச்சிகளில் பேசுபவரை பார்த்திருப்போம். வழக்கமான டெம்ளேட் வார்த்தைகளை பயன்படுத்துபவர்கள் துவங்கி,  சர்ச்சையை ஏற்படுத்தும் செய்தி வரை வெவ்வேறு விதமாக பேசுபவர்களை பார்த்திருப்போம். அதிலும் ஒரு தலைவன் என்பவர் எப்படி பேச வேண்டும் என்பது முகவும் முக்கியம். என்ன பேச வேண்டும் என்பதை காட்டிலும், எப்படி பேச வேண்டும் என்பதும் முக்கியமான விஷயமாக உள்ளது. உலகின் சிறந்த தலைவர்களின் பேச்சில் என்ன இல்லை, என்ன இருந்துள்ளது என்பது குறித்த சிறந்த உதாரணங்கள் இதோ ....

எக்ஸாம்பிள் மோடி!

மோடி பேச்சில் எப்போதுமே மேற்கோள்களுக்கு பஞ்சமிருக்காது. உலகில் எந்த ஊருக்கு சென்றாலும் அதோடு இந்தியர்களை தொடர்புபடுத்தி பேசுவது, விநாயகர்தான் பிளாஸ்டிக் சர்ஜரிக்கு முன்னோடி என தொழில்நுட்பத்துக்கு உதாரணம் கூறுவது என துவங்கி பார்ப்பவர்களை வசீகரப்படுத்திவிடும் திறமை கொண்ட தலைவராக விளங்குபவர். இவரது பேச்சுக்கள் கேட்பவரை போரடிக்காமல் உள்ளது எனக் கூற வைக்கிறது. உலகின் பல பிரதமர்/ அதிபர்கள் இதே பார்முலாவைதான் ஃபாலோ செய்கிறார்கள். 


எமோஷனல் மார்க்!

 

ஒரு தலைவனின் பேச்சு எமோஷனலாக இருக்கக்கூடாதுதான். ஆனால் பாசிட்டிவான விஷயத்தில் எமோஷனலாக பேசி சூழ்நிலையை மாற்றுபவர்தான்  சிறந்த தலைவர் என்பதை யாராலும் மறுக்க முடியாது. ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் தனது பேச்சுகளில், ஏதாவது ஒரு எமோஷனலான விஷயத்தை நுழைத்து விடுகிறார். அமெரிக்காவில் மோடியுடனான உரையாடலின் போது 'இந்திய கோயில்கள்தான் மக்களின் இணைப்பை உணர்த்தியது. ஸ்டீவ் ஜாப்ஸின் அறிவுரைதான் என்னை இந்தியாவுக்கு அனுப்பியது எனப் பேசியது அனைத்து இந்தியர்களையும் கவர்ந்தது. எமோஷனலை எப்படி கையாள வேண்டும் என்பதற்கு மார்க் மிகப்பெரிய உதாரணம்.

இன்ட்ரஸ்டிங்க் சுந்தர் பிச்சை!

கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை, தமிழகத்தை சேர்ந்தவர் . இவரது தலைமை பண்பு கூகுளின் பல திட்டங்களுக்கு உதவியாக இருந்துள்ளது. கூகுள் சிஇஓவாக பதவியேற்ற பின்,  முதல் முறையாக இந்தியா வந்த போது ஆன்ட்ராய்டின் அடுத்த வெர்ஷன் பெயர் என்ன என்ற கேள்விக்கு பால்பாயாசம், பால்கோவா என இந்திய உணவுகளின் பெயராக கூட இருக்கலாம் என்ற அசால்ட்டான பதில் மூலம்,  இந்தியர்களை தன் வசப்படுத்தியவர் சுந்தர் பிச்சை. ஒரு தலைவனின் பேச்சு எவ்வளவு பயனுள்ளதாக இருக்க வேண்டுமோ அதே அளவு இன்ட்ரஸ்டிங்க்காகவும் இருக்க வேண்டும். இல்லையெனில் தலைவர்கள் போரடிக்கும் டேப் ரெக்கார்டர்கள் போல் மாறிவிடுவார்கள்.

ஃப்ளுயன்ட் கருணாநிதி!
பேசும் போது தடங்கல் இல்லாமல் பேசுவது ஒரு கலை. சிலருக்கு என்ன பேச வந்தோம் என்பதே மறந்துவிடும். ஆனால்  சரியான வார்த்தைகளுடன், தெளிவாகவும், சாதுர்யமாகவும் பேசும் தலைவர்களுக்கு எப்போதுமே மரியாதை உண்டு. அவரைப் பற்றிய விமர்சனங்கள் எப்படி இருந்தாலும் அவரது பேச்சை கேட்கவே ஒரு கூட்டம் கூடும். இந்த ரகத்தை சேர்ந்தவர்தான் கருணாநிதி. அவரது பேச்சுகளில் பெரும்பாலானவை வார்த்தை ஜாலங்கள் நிறைந்ததாகவும், நுட்பமான வார்த்தை பிரயோகம் நிறைந்ததாகவும் இருக்கும். இதுபோன்ற சாதுர்யமான பேச்சுக்கள் மூலமாக ஒரு தலைவனால் நீண்ட நாட்கள் தலைவன் என்ற இடத்தில் நீடிக்க முடியும் என்பதற்கு இவர் ஒரு சிறந்த உதாரணம்.

கான்ஃபிடென்ட் ஒபாமா!

ஒரு தலைவரின் பேச்சில் கட்டாயம் இருக்க வேண்டிய விஷயம் தன்னம்பிக்கை. ஒரு நாட்டை, ஒரு கால்பந்து அணியை, அலுவலகத்தில் ஒரு குழுவை நிர்வகிக்கும் ஒரு தலைவர் என்பவர்,  தன்னம்பிக்கை நிறைந்தவராக மட்டுமே இருக்க வேண்டும். ஒரு அணி துவண்டு இருக்கும் நேரத்தில் அந்த அணியை தன்னம்பிக்கையாக பேசி,  வெற்றி பாதைக்கு மாற்றுவது துவங்கி, ஒரு நாட்டின் பிரச்னையை முன்னின்று சமாளிக்கும்போது மக்களுக்கு பிரச்னை தீர்ந்துவிடும் என்ற தன்னம்பிக்கையை கொண்டு வருவது வரை ஒரு தலைவனின் முக்கிய பண்பாகும். ஒபாமாவின் பெரும்பாலான பேச்சுக்கள் இதனையே பிரதிபலிக்கின்றன. அவரது முதல் பிரச்சாரமான 'ஹோப்' துவங்கி அவரது அனைத்து பேச்சுக்களிலுமே. தன்னம்பிக்கைக்கு பஞ்சமிருக்காது.

ரெஸ்பான்சிபிள் தோனி!

ஒரு தலைவனுக்கு முக்கியமாக இருக்க வேண்டிய பண்பு பொறுப்பேற்பது. வெற்றி பெறும் போது அதற்கு காரணமாக நபரை கைகாட்டி பாராட்டுவதும், தோல்விகளுக்கு மற்றவர்களை கைகாட்டாமல் தானே பொறுப்பேற்பதும் தலைவனின் தலைமை பண்பை மேலும் ஒரு படி உயர்த்தும் கருவிகள். இதற்கு சரியான உதாரணம் இந்திய கேப்டன் தோனி மட்டுமே. இந்தியா அபாரமாக வென்ற போட்டிகளில் அவரது பேச்சில் 'நான்' என்ற வார்த்தையை பயன்படுத்தியிருக்கமாட்டார். அப்போது அளிக்கும் பேட்டிகளிலும் ஒட்டு மொத்த அணியை குறிக்கும் 'பாய்ஸ்' என்ற வார்த்தை அதிகமாக பயன்படுத்தப்பட்டிருக்கும். அதேசமயம் தோல்விகளுக்கு மீடியாக்கள் முன்பாக தனி நபரை குறை கூறியதே  இல்லை. கடைசியாக தற்போது ஆஸ்திரேலியாவில் தோற்ற 4வது போட்டியிலும் எனது இன்னிங்க்ஸ்தான் தோல்விக்கு காரணம் என தோனி கூறியது அவரது தலைமை பண்பை உணர்த்துகிறது. எப்படி வெற்றிகளில் நான் என்ற வார்த்தையை பயன்படுத்த மாட்டாரோ அதேபோல் தோல்விகளில் நான் என்ற வார்த்தையை அதிகமாக பயன்படுத்தியுள்ளார்.

ஒரு தலைவன்தான் இதுபோன்று பேச வேண்டும் என்பதில்லை. ஆளுமை திறன் கொண்ட,  தன்னை தலைவனாக உயர்த்திக்கொள்ள விரும்பும் அனைவருமே இது போன்ற பேச்சுத்திறனை வளர்த்துக் கொண்டால் ஒரு சாதாரண அணி அமர்விலோ அல்லது குழு சந்திப்பிலோ உங்கள் ஆளுமை நிறைந்த பேச்சு உங்களை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்லும் கருவியாக அமையும். உங்களுக்குள் இருக்கும் தலைவனை உங்கள் பேச்சின் மூலம் வெளிக்கொண்டு வந்தால் நீங்கள்தான் நாளைய தலைமுறைக்கு உ

Posted Date : 14:42 (18/07/2016)Last updated : 10:47 (19/07/2016) 24X7 உற்சாகமாக இருக்கலாPosted Date : 14:42 (18/07/2016)Last updated : 10:47 (19/07/2016) 24X7 உற்சாகமாக இருக்கலா மா?! #MondayMotivation

24X7 உற்சாகமாக இருக்கலா

மா?! #MondayMotivation

'ன் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியும், ஒவ்வொரு நாளும் நானா செதுக்குனது’ என பன்ச் அடிக்கும் பலரும், பல நொடிகளை, நாட்களை உபயோகமாகப் பயன்படுத்தாமல்தான் இருக்கிறோம். உபயோகமாகச் செலவழிக்கப்படும் இந்த நிமிடம், அடுத்த நிமிடத்தைப் பயனுள்ளதாக்குகிறது. ஒரு நாளில் 24 மணி நேரம் என ஒரு வாரத்தில் 168 மணி நேரம் நம் கையில் இருக்கிறது. இவற்றை எப்படி சிறப்பாக, செயல்திறனோடு செலவழிப்பது?

இந்த 168 மணி நேரத்தில் 49 மணி நேரத்தைக் கழித்து விடுங்கள். ஒரு நாளைக்கு ஒரு மனிதன் சராசரியாக 7 மணி நேரம் கட்டாயம் தூங்க வேண்டும்; இல்லையென்றால் அவனால் சரியாக வேலை செய்ய முடியாது என்கிறது மருத்துவ  ஆய்வு. அதனால் உங்களுக்கு அளிக்கப்பட்ட 168 மணி நேரத்தில் 49 மணி நேரத்தைக் கழித்து விடுங்கள். இப்போது உங்களிடம் மீதமுள்ளது 119 மணி நேரம்.

நீங்கள் ஏதோ ஓர் இடத்தில் வேலை செய்பவராக இருந்தால், ஒரு வாரத்தில் ஒரு நாளைக்கு 8 மணி நேரம் என்ற அடிப்படையில் 56 மணி நேரம் வேலை செய்கிறீர்கள். நம்மில் பலர் புத்திசாலித்தனமாக யோசித்து, "வார இறுதி நாட்கள் எனக்கு விடுமுறைதானே.. அதில் என்ன நான் வேலை செய்கிறேன்!" என்று கூறுவீர்கள். ஆனால், வார இறுதிகளிலும் மடிக்கணினி முன் அமர்ந்து எக்ஸ்.எல் ஃபைல்களையும், பவர்பாயிண்ட் தயாரிப்புகளையும் காபி கோப்பையோடு எடிட் செய்வது... வார இறுதிக்கான வேலை இல்லை. இதை சிலர் விரும்பிச் செய்வார்கள்... சிலர் வேறு வழியில்லாமல் செய்வார்கள். ஆக, எப்படியோ வாரத்தில் 56 மணி நேரம் வேலைக்காகப் போய்விட்டது. இப்போது மீதம் 63 மணி நேரம் கையில் இருக்கிறது.

   
இந்த 63 மணி நேரத்தில் உங்கள் கட்டுப்பாட்டில் இல்லாத அலுவலகப் பயணம், போக்குவரத்து நெரிசல், பெட்ரோல் பங்க் காத்திருப்பு போன்ற பல விஷயங்கள் ஒரு வாரத்தில் 13 மணி நேரத்தை ஆக்கிரமிக்கின்றன. குழந்தைகள் பாரமரிப்பு, வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்வது, உடற்பயிற்சி என 20 மணி நேரம் செலவாகிறது. இது போக, நாளொன்றுக்கு ’idle' எனப்படும் அமைதி மனநிலையில் (சும்மா இருக்கிறதைத்தான் அப்படிச் சொல்றோம் மக்களே) ஒரு நாளைக்கு 1 மணி நேரத்தைச் செலவழிக்கிறோம். இதனை நாம் மொத்தமாகச்  செலவழிப்பதில்லை. ஒரு மணி நேர இடைவெளியில் 10 நிமிடம்,  5 நிமிடம் என செலவாவது ஒரு வாரத்தில் 7 மணி நேரமாக உருவெடுக்கிறது.
ஆக, இப்படியெல்லாம் நமக்காக, பிறருக்காக, அலுவலகத்துக்காக என செலவழித்த பிறகு... நமக்கே நமக்கென்று  கையில் முழுமையாக 23 மணி நேரம் மீதமிருக்கிறது. இதைத் திட்டமிட்டுச் செலவழித்து, மனதில் புத்துணர்ச்சி ஏற்றிக் கொள்ளாமல்தான், ‘நேரமே பத்தல...’ என்று அலுத்துக் கொண்டிருக்கிறோம். இந்த 23 மணி நேரம் கிட்டதட்ட ஒரு முழு நாள். இந்த முழு நாளில் நாம் செய்யும் செயல்கள், வாரத்தின் மற்ற 6 நாட்களுக்குமான சார்ஜ் ஏற்றிக் கொடுக்கும். ஆனால், அதை அப்படி பயனுள்ளதாக ஆக்காமல், சமூக வலைத்தளங்களில் அதிக நேரம் உலாவல், சம்மந்தமில்லா செயல்கள் என வீணடிக்கிறோம்.
சமூக வலைத்தளங்களில் எனது நோட்டிஃபிகேஷன் பார்க்க செல்கிறேன்; அல்லது ஸ்டேட்டஸ் அப்டேட் செய்யச் செல்கிறேன் என்று களமிறங்கினால், நம்மையறியாமலே, கையிலிருக்கும் 23 மணி நேரத்தில் 14 மணி நேரத்தை செலவழித்துவிடுகிறோம். மீதமுள்ளது 9 மணி நேரம். சினிமா, சீரியல், வார இறுதி விண்டோ ஷாப்பிங் ஆகியவை போட்டி போட்டு அதைக் கபளீகரம் செய்துவிடும்.
எல்லாம் சரிதான்... நேரத்தை எப்படிதான் நம்ம கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வது? சுயக்கட்டுப்பாடு மிக முக்கியம். அதோடு பின்வரும் சங்கதிகளையும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள்..!
1. உங்கள் வேலை நேரமான 56 மணி நேரத்திலேயே, அடுத்த வாரத்துக்கான ஆயத்தப் பணிகளை மேற்கொள்ளுங்கள். உங்கள் வார இறுதிகளை அதற்காக காவு கொடுக்காதீர்கள். உங்கள் பவர்பாயிண்ட் தயாரிப்புகளையும், மடிக்கணினியையும் தள்ளி வையுங்கள்.குழந்தைகளோடு நேரத்தைச் செலவிடுங்கள். அது ஒரு வித அமைதியான சூழலையும் அடுத்த வாரத்திற்கான புத்துணர்ச்சியையும் தரும்.

2. சமூக வலைத்தள உலாவல் உங்களை ஆக்ரமிக்கும் 14 மணி நேரத்தைக் குறைக்க முயற்சியுங்கள். அருகில் இருப்பவருடன் ஆன்லைனில் சாட் செய்யாமல் நேரில் சந்தியுங்கள். அப்போது உங்கள் மனநிலையும் அமைதியாகும். அதிக நேரம் கணினி திரையில் கண் விழித்து உட்கார வேண்டிய அவசியம் இருக்காது..

3. உங்கள் திறமையை வளர்த்துக் கொள்ள அந்த நேரத்தை மூலதனமாக்குங்கள். ஒரு மொழி, நடனம், இசைக் கருவி மீட்டல் என ஏதேனும் ஒன்றைக் கற்றுக்கொள்ளலாம். ஒருவேளை உங்களுக்கு இதுபோன்ற விஷயங்களில் நாட்டம் இல்லை என்றால், உங்களது எதிர்காலத்தையோ அல்லது குறைந்தபட்சம் அடுத்த 168 மணிநேரத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதையாவது ஆற அமர நிதானமாகத் திட்டமிடுங்கள்.

வேலை - குடும்பம் சரியாக சமாளிக்கிறீர்களா? #DailyMotivation

வேலை - குடும்பம் சரியாக சமாளிக்கிறீர்களா? #DailyMotivation

இன்று வெள்ளிக்கிழமை..நாளை காலை எழுந்திருக்கும் போது ஆபீஸ் ஃபைல்களோடும், கணினியில் எக்ஸ்.எல் ஷீட்களோடும் ஆரம்பிக்கிறதா உங்கள் வார இறுதி நாட்கள். இந்த கட்டுரை உங்களுக்கானது தான். வாழ்க்கை - வேலை இரண்டுமே முக்கியமான விஷயங்கள்தான். ஆனால், வேலைக்கு அதிக முக்கியத்துவம் அளித்துக் குடும்பத்தைக் கவனிக்காமலோ அல்லது குடும்பத்துக்கு முக்கியத்துவம் அளித்து வேலையைக் கவனிக்காமல் போனாலோ சிரமம்தான். இதனை சமாளிக்க எளிமையான 5 வழிகள் இதோ...

1. திட்டமிடுங்கள்!

உங்களது ஒருநாளை அட்டவணைப்படுத்தி திட்டமிடுங்கள். ஒருநாளில் எத்தனை மணி நேரம் அலுவலக வேலைகளைக் கவனிக்க வேண்டும், எவ்வளவு நேரம் குடும்பத்தோடு செலவிட வேண்டும் என்பதைத் திட்டமிட்டால், உங்களது வேலை மற்றும் குடும்பத்துடனான நேரம் என்பது சமநிலையில் அமையும். இது அப்படியே சரியாக ஃபாளோ செய்ய முடியுமா? என்றால் இல்லை என்பது தான் பதில் ஆனால் இந்த நேரத்தை ஓரளவுக்கு பேலன்ஸ் செய்தாலே உங்கள் வார இறுதி நாட்கள் ஹாப்பி தான்.

2.நல்ல தருணங்களை இழக்காதீர்கள்!

உங்கள் வேலைதான் முக்கியம். அதுதான் உங்கள் குடும்பத்தை நடத்த உதவுகிறது. இதற்காக வேலையே கதி என்று இருந்து விடாதீர்கள் ஊரில் நடக்கும் திருவிழா போன்ற விழாக்களுக்கோ அல்லது உங்கள் உறவினர் கள் வீட்டு நிகழ்ச்சிகளுக்கோ அலுவலக வேலைகளை முன்னரே திட்டமிட்டு முடித்துவிட்டு, அந்த நிகழ்ச்சிகளுக்குத் தவறாமல் சென்று வாருங்கள். இது உங்களை மீண்டும் புத்துணர்ச்சியோடும், அதிக பொறுப்போடும் வேலையை தொடரவும் உதவும்.
3. அலுவலகம்- வீடு இணைக்காதீர்கள்!

அலுவலகத்தில் வேலை பார்க்கும் நேரத்தில் ஒருசிலர் தங்கள் வீட்டுக்கு போனில் பேசிக்கொண்டும்; வீட்டில், குழந்தைகளுடன் விளையாடு வதற்கு பதிலாக லேப்-டாப்பை எடுத்துவைத்து அலுவலக வேலை களையும் பார்த்துக் கொண்டு இருப்பார்கள்.இப்படி ஒன்றோடு ஒன்றை கலப்பதை நிறுத்தினாலே உங்கள் குடும்பம் - வேலை சமநிலை அடைந்து விடும். அலுவலகத்தில் குடும்பம் பற்றிய நினைப்பு வேண்டாம்; வீட்டுக்கு வந்தவுடன் அலுவலகம் பற்றிய சிந்தனை வேண்டாம். இரண்டையும் ஒன்றோடு ஒன்றை கலக்காமல் இருந்தாலே போதும்.

 
வொர்க்கஹாலிக்காக இருக்காதீர்கள்!
சிலர் எப்போதும் குடிபோதையில் இருக்கிற மாதிரி, வேலை, வேலை என்று வேலை போதையில் இருப் பார்கள். இப்படி வொர்க் ஹாலிக்காக இருப்பவர்கள்,  அலுவலக வேலையை அலுவலகத்தில் மாய்ந்து மாய்ந்து செய்தது போதாதென்று, அந்த வேலையை வீட்டுக்கு எடுத்துக் கொண்டுபோய் செய்வார்கள். அந்த நேரத்தில் குழந்தைகள் விளையாட அழைத்தால், வள்ளென்று விழுவார் கள்.  இந்த பழக்கத்தை மட்டும் கைவிடுங்கள் உங்கள் வொர்க்-லைஃப் பேலன்ஸ் தானாக சீராகும்.
5. மிஸ்டர் கூலாக இருங்கள்:
வீட்டில் உள்ள கோபத்தை அலுவலகத்திலோ அல்லது அலுவலகத்தில் ஏற்பட்ட மனக் கவலையை வீட்டிலோ காட்டா தீர்கள். வீட்டில் நுழையும் முன்பு செருப்பைக் கழற்றி வைக்கும் போதே, அலுவலகம் தொடர்பான அதிருப்தியான எண்ணங்களையும் மறந்து விடுங்கள். அதேபோல, வீட்டில் இருக்கும் பிரச்னையை அலுவலகத்தில் ஸ்வைப்பர் கார்டினைக் காட்டி வருகைப்பதிவை பதியும் போதே, மனதிலிருந்து அழித்துவிடுங்கள். இது இரண்டும் உங்களை கூலாக வைத்திருக்கும்.

Last updated : 17:28 (08/08/2016) திங்கட்கிழமை காலை இந்த 5 விஷயங்களை செய்யலாமா? #MondayMotivation


திங்கட்கிழமை காலை இந்த 5 விஷயங்களை செய்யலாமா? #MondayMotivation

ஞாயிறு இரவு முதலே ஃபேஸ்புக், வாட்ஸ் அப் என அனைத்து சமூக வலைதளங்களிலும் ''நாளைக்கு திங்கட்கிழமை, என்ற போஸ்ட்கள் தான் நிறைந்து காணப்படும். அவை உங்களை சோர்வடைய செய்யாமல் இந்த வாரத்தை 'தெறி'யாக துவக்க இந்த 5 விஷயங்களை செய்யலாமா?
1. எதிர்மறையாக யோசிக்காதீர்கள்!
ஞாயிறு இரவிலிருந்தே உங்களை சோர்வாக்கும் சமூக வலைதளப் பதிவு துவங்கி காலையில் நீங்கள் அலாரத்தை இன்னும் 5 நிமிடம் தாமதமாக்குவது வரை அனைத்துமே உங்களை சோர்வாக்கும் விஷயங்கள் தான். எதிர்மறையாக எதையும் யோசிக்காதீர்கள். யாருடனும் வாக்குவாதம் செய்யாதீர்கள். சிரித்த முகத்தோடு அன்றைய நாளை துவக்குங்கள்.
2.  கோபம் தவிருங்கள்!
அலுவலகத்திற்குள் காலை வந்தவுடன், வார இறுதியில் நடந்த தவறுக்காகவோ, காலையில் செய்ய வேண்டிய திட்டங்கள் ஏதாவது சற்று தாமதமானாலோ அதற்காக கோபமோ, எரிச்சலோ அடையாதீர்கள். அது அந்த வாரம் முழுவதையும் ஆக்கிரமித்துவிடும். அதனால் கூடியவரை கோபம் கொள்ளாமல் கூலாக அணுகுங்கள். பிரச்னைகளுக்கான தீர்வுகளை கண்டறிந்து அதனை செயல்படுத்துங்கள்.
3. உற்சாகமாக இருங்கள்!
வேலையில் மிகவும் உற்சாகமாக இருங்கள். உங்கள் அருகில் உள்ளவர் உங்களைப் பார்த்து இன்ஃப்ளுயன்ஸ் ஆகுமாறு நடந்து கொள்ளுங்கள். நீங்கள் சோர்வாக இருந்தால் அது அவரையும் தொற்றிக்கொண்டு அவரும் அப்படியே இருந்து விடுவார். இன்றைய நாளை நீங்கள் அதிக உற்சாகத்துடன் துவக்கும்போது அனைவரும் அதே உத்வேகத்தில் வேலை செய்யத் துவங்கி விடுவார்கள்.
4. புத்தகம் படியுங்கள்!
காலை செய்தித்தாள் துவங்கி உங்களது அலுவலக ஃபைல்கள் வரை கணினி முன்பே அதிக நேரத்தை செலவிடுபவராக இருந்தால், கொஞ்சம் Ctrl + Alt + Del செய்யுங்கள். கண்களுக்கு அழுத்தம் தராமல் ரிலாக்ஸாக ஆஃப் லைனில் வேலைகளை செய்யுங்கள். குறைந்தபட்சம் 5 மணி நேரம் கணினிக்கு விடை கொடுங்கள். மனதுக்கு பிடித்த புத்தகங்களை வாசிக்கலாம். இந்த வழக்கம் உங்களது அன்றைய தினத்தை உற்சாகமாக வைத்திருக்கும்.
5. டாப் 3 டாஸ்க்:
3 கிமீ நடைப் பயணம், பார்க்கும் அனைவரிடமும் சிரித்த முகத்துடன் காலை வணக்கம், 20 நிமிட உடற்பயிற்சி இது மூன்றையும் கட்டாயம் செய்யத் தவறாதீர்கள். அப்புறம் என்ன, உங்கள் திங்கட் கிழமை கெத்து காட்டும் நாளாக அமையும்