Sunday, December 31, 2017

அரவணைப்பில் சுரக்கும் அன்பு ஹார்மோன்கள்! thanks to vikatan.com


அரவணைப்பில் சுரக்கும் அன்பு ஹார்மோன்கள்!

ஹெல்த்
ஜெனிஃபருக்கு ஏற்கெனவே இரண்டு குழந்தைகள். மூன்றாவதாக ஜேட் பிறந்தாள். குறைப்பிரசவம்; குழந்தையின் எடையும் குறைவு. 1 கிலோ 360 கிராம். சிசுக்களுக்கான இன்டென்ஸிவ் கேர் யூனிட்டில் குழந்தையை வைத்துவிட்டார்கள். பிரசவம் முடிந்து அம்மாவை டிஸ்சார்ஜ் செய்தாலும், குழந்தையைக் கொடுக்கவில்லை. 
எல்லா நேரமும் தாயின் அரவணைப்பு தேவைப்படும் ஒரு பச்சிளம் சிசுவைப் பிரிந்து எப்படி இருப்பது? இந்தக் குழந்தைக்குப் பால் கொடுக்க வேண்டும்; வீட்டிலிருக்கும் மற்ற இரண்டு குழந்தைகளையும் பார்த்துக்கொள்ள வேண்டும். தவித்துப்போனார் அவர். 

அப்போது ஷெர்ரி என்ற பெண் உதவிக்கு வந்தார். இன்டென்ஸிவ் கேரில் இருக்கும் குழந்தை அழும்போதெல்லாம், ஷெர்ரி ஓடிவருவார். குழந்தையை அரவணைத்து ஆறுதல் சொல்வார்.
 
பச்சிளம் குழந்தையாகப் பிறந்த நிமிடத்திலிருந்து இந்த மானிடப் பிறவிக்கு அன்பான அரவணைப்பும், ஆறுதலான ஸ்பரிசமும் தேவைப்படுகிறது. ‘உனக்காக நான் இருக்கிறேன்’ எனத் தோள் தொட்டுச் சொல்லும் ஒற்றை வாசகம், எந்தத் துன்பத்திலிருந்தும் மீண்டெழச் செய்துவிடும். எப்படிப்பட்ட வலியையும் மறக்கடித்துவிடும். வளர்ந்த மனிதர்களுக்கே இதெல்லாம் தேவைப்படும்போது, குழந்தைகள் எதிர்பார்க்க மாட்டார்களா?

கனடா நாட்டின் குழந்தை மருத்துவமனைகள் இணைந்து ‘No Baby Unhugged’  என்ற திட்டத்தை 2015-ம் ஆண்டு அறிமுகம் செய்தன. ‘அம்மாக்கள் அருகில் இல்லை என்ற காரணத்துக்காக எந்தக் குழந்தையும் தாயின் அரவணைப்பை இழந்துவிடக்கூடாது’ என்பதற்காக உருவாக்கப்பட்டத் திட்டம் இது. இந்தத் திட்டத்தின்கீழ் தேர்வு செய்யப்பட்ட தன்னார்வலர்கள், எல்லா மருத்துவமனைகளிலும் இருப்பார்கள். குறைப் பிரசவத்தில் பிறந்த குழந்தைகள், தாயற்ற குழந்தைகள் என மருத்துவமனைகளில் இருக்கும் குழந்தைகள் அழும்போது, இவர்கள் ஓடிவந்து தூக்குவார்கள். குழந்தையை அரவணைத்து, அம்மாவின் மடியில் இருப்பது போன்ற கதகதப்பைத் தருவார்கள். ஷெர்ரி அவர்களில் ஒருவர்தான்! 

‘அன்னையின் அரவணைப்பில் இருக்கிறோம்’ என்ற நினைப்பே பல மாயங்களை நிகழ்த்த வல்லது. குழந்தையின் இதயத்துடிப்பு சீராகும், நல்ல தூக்கம் வரும், வலி குறையும். இப்படிப் பல மருத்துவப் பலன்கள் கிடைப்பதை நூற்றுக்கணக்கான ஆய்வுகள் நிரூபித்துள்ளன. கனடா நாட்டின் குழந்தை மருத்துவமனைகள் அமைப்பு செய்த ஓர் ஆய்வு, ‘தொடுதலும் அரவணைப்பும் குழந்தையின் வளர்ச்சியைத் தூண்டுகின்றன. சீக்கிரமே எடை அதிகரிக்கிறது. மனவளர்ச்சியும் வேகம் அடைகிறது. நேசிக்கும் ஒருவரின் ஸ்பரிசம் கிடைத்ததும், சருமத்தில் இணையும் நரம்பின் முனைகள் தூண்டப்படுகின்றன. இதைத் தொடர்ந்து உடலில் எண்டோர்பின், ஆக்சிடோஸின், செரடோனின் ஆகிய ஹார்மோன்கள் அதிகம் சுரக்கின்றன. ‘அன்பு ஹார்மோன்கள்’ என அழைக்கப்படும் இவை, உடலுக்கு உற்சாகம், இதம், நிம்மதி எனச் சகல சந்தோஷ உணர்வுகளையும் தருகின்றன. 

குழந்தைகளுக்கு மட்டும்தானா இது? ‘‘குழந்தைகளைவிடப் பெரியவர்கள்தான் அரவணைப்பை அதிகம் எதிர்பார்க்கிறார்கள். அவர்களுக்கு அரவணைக்கத் தோள் மட்டுமில்லை, தங்கள் கஷ்டங்களைச் சொல்லி அழுவதற்குக் காதுகளும் தேவைப்படுகின்றன’’ என்கிறார் மேரிலின் ரீட். ‘Cuddlery’ என்ற பெயரில் கனடாவில் ஒரு நிறுவனத்தை நடத்தி வருகிறார் இவர். இந்த நிறுவனத்தின் சேவையைப் பற்றிச் சொன்னால், நீங்கள் ஆச்சர்யப்படுவீர்கள். துன்பத்தில் தவிக்கும் யார் வேண்டுமானாலும் இந்த நிறுவனத்துக்கு போன் செய்து, ‘எனக்கு இப்போது ஆறுதல் தேவைப்படுகிறது’ என்று சொல்லலாம். உடனடியாகத் தங்கள் நிறுவனத்தில் இணைந்துள்ள ஒரு தன்னார்வலரின் முகவரியைக் கொடுப்பார்கள். அங்கு போக வேண்டும். ஏதோ நெருக்கமான உறவை வரவேற்பது போல அங்கே வரவேற்பார்கள். அன்பாக அரவணைத்து, கஷ்டங்களைக் கேட்பார்கள். தீர்வு தருவார்கள். கண்ணீர் விட்டால் துடைத்துவிட்டு, ஆறுதல் வார்த்தைகள் சொல்வார்கள். எந்தக் கஷ்டமும் இன்னொருவருடன் பகிர்ந்துகொண்டால் லேசாகிவிடும்தானே! அப்படி ஓர் உணர்வு உடனடியாகக் கிடைக்கும்.  
என்ன... நம் உறவினர் என்றால் இதை இலவசமாகச் செய்வார். இங்கே கட்டணங்கள் உண்டு. அரை மணி நேரத்துக்கு 49 டாலர் கட்டணம்; வெறுமனே தொட்டு, கைகுலுக்கி, வார்த்தைகளால் ஆறுதல் சொல்லத்தான் இந்தக் கட்டணம். கட்டிப் பிடித்து ஆறுதல் சொல்ல இன்னும் 19 டாலர் கட்ட வேண்டும். மாணவர்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு 30 சதவிகிதச் சலுகை உண்டு. என்ன உடை அணிந்திருக்க வேண்டும், எப்படிப் பண்போடு பேச வேண்டும் என விதிகள் உண்டு.

‘‘அக்கறை காட்டுபவர்களாவும், அன்பாகப் பேசுகிறவர்களாகவும் பார்த்துப் பார்த்துத் தேர்வு செய்கிறோம். அதனால் பல நகரங்களில் எங்கள் சேவை இப்போது விரிவடைந்துள்ளது’’ என்கிறார் மேரிலின் ரீட். அரவணைத்துத் தோள்கொடுக்க ஓர் ஆள் கிடைத்தால், இரும்பு மனிதர்களின் இதயங்களிலிருந்துகூட ஈரம் சுரக்கும். மின்கம்பியைத் தொட்டால் மின்சாரம் பாய்வது போல, நம்மை நேசிப்பவர்கள் விரல் தொட்டால், அரவணைத்தால், உடலுக்குள் உற்சாகம் பாய்வதை பலரும் உணர்ந்திருக்கக்கூடும். சிலர் இருக்கிறார்கள்... புதிதாக அறிமுகமாகும் மனிதர்களிடம்கூட விரல்பிடித்துப் பேசுவார்கள். அக்கறையோடு நலம் விசாரிப்பார்கள். இப்படிப்பட்டவர்கள் சட்டென மனதுக்கு நெருக்கமாவார்கள். எல்லாம் ஹார்மோன்கள் செய்யும் மாயம்தான். 

‘வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்’ படத்தில் கமல்ஹாசன் சொல்லும் ‘கட்டிப்பிடி வைத்தியம்’தான். ‘தினம் ஓர் ஆப்பிள் சாப்பிட்டால் டாக்டரிடம் போகவேண்டிய அவசியமில்லை’ என்பது போல, ‘அன்பானவர் தினம் ஒருமுறை அரவணைத்தால், டாக்டரிடம் போக வேண்டியதில்லை’ என்று அடித்துச் சொல்கிறார்கள். அந்த அரவணைப்பு, ‘நமக்கு என்ன நடந்தாலும் பார்த்துக்கொள்ளவும் தோள்கொடுக்கவும் இவர் இருக்கிறார்’ என்ற நம்பிக்கையைக் கொடுக்கிறது. 

பெண்கள் தங்கள் வாழ்வில் எதிர்கொள்ளும் மிக மோசமான பருவம், மெனோபாஸ். உடல்ரீதியாக இனம்புரியாத பல பிரச்னைகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். எப்போதும் கோபமே கொள்ளாத பெண்கள்கூட அந்த நேரத்தில் வீட்டில் எல்லோர்மீதும் எரிந்துவிழுவார்கள். அமெரிக்காவின் வடக்கு கரோலினா பல்கலைக்கழகத்தில் 2015-ம் ஆண்டு ஓர் ஆய்வு செய்தார்கள். ‘கணவர் அடிக்கடி அன்பாக அரவணைப்பதும், ஆறுதல் வார்த்தைகள் சொல்வதுமாக மெனோபாஸ் பருவத்தைக் கடந்த பெண்கள், மற்ற பெண்களைவிட குறைவான பிரச்னைகளைச் சந்தித்தார்கள். அவர்களுக்கு ரத்த அழுத்தமும் இயல்பாக இருந்தது’ என்கிறது இந்த ஆய்வு முடிவு.

கஷ்டமான ஒரு தேர்வு, சிக்கலான ஓர் அறுவை சிகிச்சை, ஆபத்தான ஒரு பயணம்... எதற்கு முன்பாகவும் அன்பானவர் அரவணைத்து தைரியம் சொன்னால், எதையும் எதிர்கொள்ளும் உறுதி கிடைக்கிறது. மருத்துவமனையில் மரணப்படுக்கையில் இருக்கிறார் அந்த முதியவர். கண்களை மூடியபடி ஏதேதோ தொடர்பில்லாமல் பிதற்றிக்கொண்டிருக்கிறார். அவர் மனைவி, மகன், மகள் என எல்லோரும் சுற்றியிருக்கிறார்கள். டாக்டர் வந்து பார்த்துவிட்டு, உதட்டைப் பிதுக்கினார். ‘‘யாருக்காவது சொல்ல வேண்டியிருந்தா சொல்லிடுங்க’’ என்று அட்வைஸ் கொடுத்துவிட்டுப் போய்விட்டார்.

மகனுக்கு அப்பாவைப் பார்க்கப் பார்க்கக் கண்ணீர் பொங்குகிறது. யோசித்துப் பார்க்கிறார், ‘கடைசியாக எப்போது அழுதோம்’ என நினைவில்லை. அவருக்கே திருமணமாகி, கல்லூரி போகும் வயதில் பிள்ளைகள் இருக்கிறார்கள். வேலைக்காக வெளியூர் போய், பல ஆண்டுகளாக அப்பாவைப் பிரிந்து வாழ்க்கை. எப்போதாவது செல்போன் பேச்சுகள் தவிர அப்பாவோடு எந்தத் தொடர்பும் இல்லை. அவரோடு சாதாரணமாக உட்கார்ந்து பேசியே பல ஆண்டுகள் ஆகிவிட்டிருந்தன.  சின்ன வயதில் தன் தோளில் தூக்கிக்கொண்டு கடைத்தெருவுக்குப் போனதும், சைக்கிள் கற்றுக்கொடுத்ததும் இப்போது ஞாபகத்துக்கு வந்தது. வளர்ந்தபிறகு, அப்பாவின் விரல் பிடித்து நடந்த இடத்திலிருந்து விலகி வெகுதூரம் வந்துவிட்டோம் என்பது புரிந்தது. கடைசியாக எப்போது அப்பாவைத் தொட்டுப் பேசினோம் என்பதே நினைவில் இல்லை.

நெருங்கி அப்பாவின் கைகளைப் பிடித்துத் தன் கைகளுக்குள் வைத்துக்கொண்டார். தாய்க்கோழி தன் குஞ்சுகளைச் சிறகுகளுக்குள் கதகதப்பாகப் பொத்தி வைப்பது போன்ற பிணைப்பு. சில நிமிடங்களில் அப்பாவின் பிதற்றல் நின்றது. கொஞ்ச நேரத்தில் அப்பா கண்களைத் திறந்து பார்த்தார். மகனுக்கு லேசாக நம்பிக்கை துளிர்த்தது. ‘‘அப்பா! எங்களைவிட்டு நீங்க எங்கேயும் போக மாட்டீங்க. நாங்க இருக்கோம். உங்களை விட்டுட மாட்டோம்’’ என அவர் காதருகே போய்ச் சொன்னார். அன்று முழுக்க எவ்வளவு நேரம் அப்பாவின் கரம் பற்றி இருந்தார் என்பது தெரியவில்லை. இரவு வீட்டுக்குத் திரும்பும்போது, படுக்கையில் குனிந்து அப்பாவை அரவணைத்துவிட்டு எழுந்தார். மனதின் ஆழத்தில் எங்கோ ஓரிடத்தில் பல நாள்களாகப் பூட்டியிருந்த கதவைத் திறப்பது போன்ற உணர்வு எழுந்தது. அப்பாவுக்கும் இது இருந்திருக்கும் என நினைத்தார்.

அடுத்தடுத்த நாள்களிலும் இது தொடர, ஒரே வாரத்தில் அப்பா எழுந்து உட்கார்ந்து பேச ஆரம்பித்தார். எப்படியும் அவர் குணமாகி வீட்டுக்கு வந்துவிடுவார்.

உங்கள் விரல்நுனி பல மாயங்களைச் செய்யக்கூடியது. அன்பெனும் மாயச்சாவி அதற்குள் இருக்கிறது. இறுகியிருக்கும் இதயங்களைத் திறக்க இதைப் பயன்படுத்துங்கள்.

- தி.முருகன்

கட்டிப் பிடி மருத்துவம்!

‘அரவணைப்பும் ஸ்பரிசமும் கட்டிப் பிடிப்பதும் பல மகத்தான பலன்களைத் தரும்’ என ஆராய்ச்சிகள் சொல்கின்றன.

மகிழ்ச்சி: ‘‘விருப்பமானவர்களின் ஸ்பரிசம், நம் மனதை மகிழ்ச்சியால் நிரப்புகிறது. அந்த அரவணைப்பில் ஆக்சிடோஸின் ஹார்மோன் நம் உடலில் சுரக்கிறது. அது மனதுக்கு மகிழ்ச்சியும், உடலுக்கு உற்சாகமும் தருகிறது’’ என்கிறார் மனநல மருத்துவர் எலிசபெத் லம்பார்டோ. கட்டிப் பிடிக்கும்போது எண்டோர்பின் என்ற வேதிப்பொருளும் அதிகம் சுரக்கிறது. நிறைவாக உடற்பயிற்சி செய்தாலோ, விரும்பி சாக்லேட் சாப்பிட்டாலோ இது சுரக்கும். மனமகிழ்ச்சிக்கு இதுவும் காரணமாகிறது. 
செக்ஸி: அரவணைப்பின்போது, உங்கள் வாழ்க்கைத்துணையின் கண்களுக்கு நீங்கள் மிகவும் செக்ஸியாகத் தெரிவீர்கள். டோபமைன் ஹார்மோன் அந்த நேரத்தில் அதிகம் சுரக்கிறது. இது பரவசத்தை அதிகரித்து, இருவருக்கும் வேட்கையைத் தூண்டுகிறது. ஆரோக்கியமான தாம்பத்யம், உடலையும் மனதையும் கச்சிதமாக வைத்திருக்கும். 

இதய நோய் வராது: ஸ்ட்ரெஸ் மேனேஜ்மென்ட் சிகிச்சை தரும் நிபுணரான கேத்தரின் கானர்ஸ், ‘‘கட்டிப் பிடிப்பதும், முத்தம் கொடுப்பதும், இன்னும் இதுபோன்ற தொடுதல்களும், நம் உடலில் ஆக்சிடோஸின் ஹார்மோன் அளவை அதிகமாக்குகின்றன. நெருக்கமானவர்களோடு இது பிணைப்பை ஏற்படுத்துகிறது. அது மட்டுமில்லை... இதனால் ரத்த அழுத்தம் குறைகிறது. அதன் விளைவாக இதய நோய்கள் வருவதில்லை. பதற்றமும் மன அழுத்தமும்கூட குறைகிறது’’ என்கிறார். 

பாசப்பிணைப்பு: அமெரிக்காவின் ஹூஸ்டனில் உள்ள பாய்லர் மருத்துவக் கல்லூரியில் ஓர் ஆய்வு செய்தார்கள். ‘ஆக்சிடோஸின் ஹார்மோன் என்பது குழந்தை பிறப்போடும், தாய்ப்பால் கொடுப்பதோடும் தொடர்புடைய ஒன்று. தாய்க்கும் குழந்தைக்கும் பாசப்பிணைப்பு ஏற்படுத்தவும் இந்த ஹார்மோன் உதவுகிறது’ எனச் சொல்கிறது இந்த ஆய்வு. ‘பெற்றோரோடு ஒட்டுதல் இல்லாமல் வளரும் பெண்கள், தங்கள் குழந்தைகளிடமும்கூட நெருங்கத் தயங்குகிறார்கள். இதுபோன்ற சூழலில், இந்த ஹார்மோன்தான் பிணைப்பை உருவாக்குகிறது’ என்கிறார் இந்த ஆய்வைச் செய்த டாக்டர் லேன் ஸ்ட்ராதியர்ன். 

சண்டை குறைகிறது: தாம்பத்ய உறவுக்காக உடலால் நெருங்குவது வேறு. மற்ற நேரங்களிலும் தம்பதிகள் மத்தியில் ஸ்பரிசமே இல்லாமல் இருந்தால், அடிக்கடி சண்டை வருமாம். சிகாகோவில் இருக்கும் திருமண தெரபிஸ்ட் டேவிட் க்ளோ, ‘‘செக்ஸ் உணர்வோடு இல்லாமலும் சாதாரணமாகத் தொட்டுப் பேசிக்கொள்வது நெருக்கத்தை ஏற்படுத்தும். வெறும் வார்த்தைகளால் மட்டுமே ‘நான் உன்மீது அன்பாக இருக்கிறேன்’, ‘உன் வலிகளைப் புரிந்துகொள்கிறேன்’ எனச் சொல்வது போதாது. வார்த்தைகளைத் தாண்டிய தகவல்தொடர்பு சாதனமாக உடலே இருக்கிறது. ஒரு தொடுதலில், ஓர் அரவணைப்பில் ஆயிரம் வார்த்தைகளை நிரப்பிவிடலாம்’’ என்கிறார். 

தூக்கம் வருகிறது: கட்டிப் பிடித்தால் சீக்கிரமே தூங்க முடிகிறதாம். சொகுசான படுக்கை, இதமான சூழல் எனத் தூங்குவதற்கு ஏற்ற எல்லா சூழல்களும் இருந்தாலும், பலருக்குப் படுத்ததுமே தூக்கம் வருவதில்லை. நேசம் மிகுந்த வாழ்க்கைத்துணையுடன் தூங்கும்போதோ, தாயின் அரவணைப்பில் குழந்தை தூங்கும்போதோ, ஒரு பாதுகாப்பு உணர்வு வருகிறது. ஆக்சிடோஸின் சுரப்பதால், மன அழுத்தம் குறைந்து நிமம்தியான உறக்கம் வருகிறது. 

நோயை எதிர்க்கிறது: கட்டிப் பிடிக்கும்போது ஆக்சிடோஸின் மட்டுமே சுரப்பதில்லை. ‘மகிழ்ச்சி ஹார்மோன்’ என அழைக்கப்படும் செரடோனின் அளவும் அதிகரிக்கிறது. 2014-ம் ஆண்டு அமெரிக்காவின் கார்னெகி மெல்லன் பல்கலைக்கழகத்தில் ஓர் ஆய்வு செய்தார்கள். ‘அடிக்கடி கட்டிப் பிடிப்பவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. ஜலதோஷ வைரஸ் மற்றவர்களைத் தொற்றுவது போல இவர்களை அதிகம் தொற்றுவதில்லை. அப்படியே தொற்றினாலும், நோயின் தீவிரம் அந்த அளவுக்கு இருக்காது’ எனச் சொன்னது அந்த ஆய்வு முடிவு. 

பயம் போகிறது: நெதர்லாந்தின் புகழ்பெற்ற உளவியல் ஆய்வாளர் சாண்டெர் கூல் தலைமையில் நடந்த ஓர் ஆராய்ச்சியில், ‘அரவணைப்பும் தொடுதலும் பயத்தைக் குறைத்துத் தன்னம்பிக்கையை வளர்க்கிறது. கவலைகளைக் குறைத்து நீண்ட காலம் வாழச் செய்கிறது’ என்று தெரிய வந்துள்ளது. ‘‘மனிதர்களைத்தான் அரவணைக்க வேண்டும் என்பதில்லை. டெடி பியரைக் கட்டிக்கொண்டு தூங்கும்போதுகூட குழந்தையின் பயம் போய்விடுகிறது. ஏதோ ஒன்றின்மீதான நம்பிக்கையோடு நிகழும் ஸ்பரிசம், வாழ்க்கைமீதான பிடிமானத்தை அதிகரிக்கிறது’’ என்கிறார் சாண்டெர் கூல்.

நீங்கள் மிளகாயா, மிளகா? thanks to vikatan.com

நீங்கள் மிளகாயா, மிளகா?

பதிவு செய்த நாள்

31டிச
2017 
00:00
ஒரு முனிவர் சொன்ன குட்டிக் கதை இது... கிராமத்திற்கு போகிற காட்டுப் பாதையில், போவோர் வருவோரை கடித்து வந்தது, ஒரு நாகம். உள்ளூர் சாமியாரிடம் முறையிட்டனர், கிராமத்து மக்கள். பாம்பிடம் சென்ற சாமியார், 'ஊர் மக்களை அநியாயமாக வதைக்கிறாயே... இனி யாரையும் கடிக்காதே...' என்றார். சாமியாருக்கு கட்டுப்பட்டு அடங்கிப் போயிற்று பாம்பு.
சில ஆண்டுகளுக்கு பின், அந்த பக்கமாக சென்றார், சாமியார். அங்கே குற்றுயிரும், குலையுயிருமாய் கிடந்தது, பாம்பு. 
'என்ன ஆச்சு உனக்கு?' என்று கேட்டார், சாமியார்.
'நீங்கள் தானே எவரையும் கடிக்கக் கூடாது என்று சொன்னீர்கள்... அதனால், யாரையும் நான் கடிக்கவில்லை. அதனால், இக்கிராம மக்களுக்கு என் மீது இருந்த பயம் போய், என்னை அடித்துப் போட்டு விட்டனர்...' என்றது பரிதாபமாய்! 
அதற்கு சாமியர், 'உன்னை கடிக்க வேண்டாம் என்று தான் சொன்னேன்; சீற வேண்டாம் என்றா சொன்னேன்...' என்றாராம்.
இதைப் போன்று தான் கோபமும்!
பாரதி கூட, 'ரவுத்திரம் பழகு' என்று தான் சொன்னான்.
மிளகாயில் வைட்டமின், 'சி' நிறைய உள்ளது. ஆனால், இதன் காரத்தை விட, மிளகின் காரம் மிக நல்லது. 
காரணம், காரத்தன்மையுடன், பல மருத்துவ குணங்களையும் கொண்டது, மிளகு; மிளகாயுடன் ஒப்பிடும்போது ஆபத்து குறைவானது.
ஒரு கல்லுாரி குழும தலைவரின் நம்பிக்கைக்குரிய நபர், பண விஷயத்தில் விளையாடி விட்டார். அவரது மாப்பிள்ளையும், மகனும், 'எவ்வளவு பெரிய நம்பிக்கை துரோகம்; அந்த நபரை வெளியேற்ற வேண்டும்...' என்று கோபத்தில் குதித்தனர்.
'கவனியாமல் விட்டதும், அதிகமாக நம்பியதும் நாம் மூவரும் செய்த தவறு; எனவே, அவரை எச்சரித்து, பண வரவு, செலவுகளை கையாள வேண்டிய அவசியமில்லாத நிர்வாக பணிக்கு அவரை மாற்றுகிறேன்...' என்று செய்து காட்டி, தான் எடுத்த முடிவு சரி என்று நிரூபித்து விட்டார், தாளாளர்.
நம்முடைய கோபம் என்பது மிளகாயை விட, மிளகாக இருப்பது மிக நல்லது.
இனி, மிளகாய் கோபத்திற்கும், மிளகுக் கோபத்திற்கும் உள்ள வேறுபாடுகளை பார்ப்போம்... 'அறிவிருக்கா உனக்கு?' என்று கேட்பது மிளகாய் கோபம்; 'அறிவாளி செய்ற செயலா இது...' என, பாராட்டோடு கூடிய திட்டு, மிளகுக் கோபம்.
'நீ ரொம்ப நல்லவம்மா; ஆனா, இந்த விஷயத்தில் நீ நடந்துகிட்டது சரியான்னு உன் மனசாட்சியையே கேட்டு பாரு...' என்பதை, மிளகு கோபத்திற்கு உதாரணமாக சொல்லலாம்.
ஒரு செயலுக்காக, ஒரேயடியாக போட்டுத் தள்ளி, 'நீ மகா மட்டமான ஆளுன்னு தெரிஞ்சும் உன்கிட்ட ஒப்படைச்சேன் பாரு, என் புத்திய செருப்பால அடிக்கணும்...' என்பதும், நடந்த தவறை மட்டும் கண்டிக்காமல், 'நீ எப்பவுமே இப்படித்தான்...' என, இதுவரை நடந்தவற்றை யெல்லாம் அடுக்கடுக்காக கோர்த்துச் சொல்லி, குதி குதியென்று குதிப்பது, மிளகாய் கோபம். 
நடந்துவிட்ட ஒரு செயலை மட்டும் கண்டிப்பது, மிளகுக் கோபம்.
ஒரு செயலை மன்னிப்பு அற்றதாகக் கருதி, தண்டனை தருவது, உறவை அறுத்துக் கொள்வது, வேலையை விட்டு துாக்குவது மிளகாய் கோபம்!
எச்சரித்து, மறுபடி நிகழக்கூடாது என்பதை மட்டும் உணர்த்துவது, மிளகுக் கோபம்.
பழி தீர்த்து முடிப்பது மிளகாய் கோபம்; பழி தீர்ப்பது என்பது ஒரு தொடர் கதையின் மோசமான ஆரம்பமே என்பதை உணர்ந்து விலகி இருப்பது, மிளகுக் கோபம்.
எனவே, மாறுவோம் மிளகுக் கோபத்திற்கு!

லேனா தமிழ்வாணன்
Advertisement

பசியின்மைக்கு தீர்வு thanks to dinamalar .com

t
சொல்கிறார்கள்
சாப்பிடும் முன்நீராகாரங்களைதவிர்க்கலாம்!

பசியின்மைக்கு தீர்வு கூறும், ஊட்டச்சத்து நிபுணர், வாணி: அதிகம் பசிப்பது பிரச்னைக்குரியது போல், பசியே இல்லாதது அதை விடவும் பெரிய பிரச்னை. உடல், மன நல மாற்றங்களால் பசியின்மை ஏற்படுகிறது.
ஒரு வாரத்துக்கும் மேல் பசியின்மை தொடர்ந்தால், அது நோய் பாதிப்பின் அறிகுறியாக இருக்கக்கூடும். மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.
உணவில் மசாலாப் பொருட்களை அதிகம் சேர்த்தால் பசி உண்டாகும். உதாரணமாக, லவங்கப்பட்டை, கிராம்பு, ஏலக்காய், இஞ்சி, பூண்டு போன்றவை, உடலின் இயக்கம் மற்றும் வளர்சிதை மாற்றங்களுக்கு வழி வகுக்கும்.
பொதுவாக, உணவு செரிமானமாக, உடலிலிருந்து அதிக உழைப்பை எதிர்பார்க்கும். உடல் சக்திக்கான தேவை அதிகரிக்கும்போது, பசி உணர்வு துாண்டப்படும். அப்போது, கொஞ்சம் கொஞ்சமாக உணவு உட்கொண்டால், பசி உணர்வு அதிகரிக்கும்.
உணவு இடைவேளையின்போது, ஸ்நாக்ஸ் சாப்பிடுவது நல்லது. ஆனால், அவற்றை ஒரே நேரத்தில் சாப்பிடாமல், கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிடலாம். அதிக கலோரி கொண்ட சீஸ், முட்டை, டார்க் சாக்லேட், நட்ஸ் சாப்பிடுவது, உடல் செயல்பாட்டுக்கும், ஆரோக்கியத்துக்கும் உதவும்.
மோர், பழைய சாதம், கஞ்சி, சூப் போன்றவை, பசி உணர்வை அதிகப்படுத்துவதுடன், உடல் வளர்ச்சியை சீராக்கும். தினமும் உடற்பயிற்சி செய்வதால், உடலில் உள்ள கலோரிகள் முழுமையாக குறையும். அப்போது, பசி அதிகரிக்கும்.
மன அழுத்தமும், மன இறுக்கமும் பசியின்மைக்கான முக்கிய காரணங்கள். நாம் செய்ய வேண்டிய வேலைகளை எழுதி வைத்து, அட்டவணைப்படுத்தி செய்தால், இறுக்கமான சூழலில் இருந்து விடுபடலாம். மேலும், ஆழ்ந்து யோசனை, தேவையற்ற குழப்பங்களை தவிர்ப்பதும், பசியின்மையில் இருந்து விடுபட உதவும்.
சரியான நேரத்திற்கு சாப்பிடுவதும், பசியின்மை பிரச்னையைப் போக்கி, உடலை சீர்படுத்தும். சாப்பிடும் முன் நீராகாரங்கள் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். அவை வயிற்றை நிறைத்து, பசியைக் குறைத்துவிடும். இதனால், தேவையான அளவு கலோரிகள் கிடைக்காமல் போகும்.
கெட்ட கொழுப்பு சத்து நிறைந்த உணவுகளை, ஒருபோதும் சாப்பிடக் கூடாது. ஸ்நாக்ஸ் சாப்பிடும் பெரும்பாலானோர், கெட்ட கொழுப்பு நிறைந்த உணவுகளையே சாப்பிடுகின்றனர்.
இது வயிறு மந்தமாக வழி வகுக்கும். ஆகவே, நல்ல கொழுப்பு நிறைந்த வாழைப்பழம், சீஸ், ஆப்பிள், தயிர் சாப்பிடலாம்.
துத்தநாகம், தயாமின் போன்றவை குறைந்திருந்தால், பசி உணர்வும் குறையும். மனதுக்குப் பிடித்த, கெட்ட கொழுப்புச்சத்து இல்லாத உணவை நேரத்துக்கு சாப்பிட வேண்டும். சரியான நேரத்தில் சரியான உணவை, திருப்தியுடன் சாப்பிடுவதால், இறுக்கமான சூழலில் இருந்து எளிதில் விடுபடலாம்.
ஆவாரம்பூ, பிரண்டைஊறுகாய்க்கு ஏக கிராக்கி!
சென்னை, கிழக்கு தாம்பரத்தில், 'பிரம்மி' என்ற பெயரில், இயற்கை வேளாண் விளைபொருள் அங்காடி நடத்தி வரும், குமுதா: 'உனக்கு பிடித்தமான தொழிலை தேர்ந்தெடுத்து துவங்கி, உன் திறமையை நீயே வளர்த்துக் கொள்' என, கணவன்ஊக்குவித்தார்.

இதையடுத்து, மத்திய அரசின், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவன துறையில், நான்கு நாள் படிப்பாக, சிறுதானியங்களின் மதிப்புக் கூட்டல் பயிற்சியில் சேர்ந்தேன்.
அப்போது ஏற்பட்ட சத்துணவு குறித்த விழிப்புணர்வால், அவற்றை தேடி வாங்கி வந்து, வீட்டினர், விருந்தினர், அக்கம் பக்கத்தவர்களுக்கு சமைத்து வழங்கினேன்.அனைவருக்கும் பிடித்து போகவே, நாட்டுக் கேழ்வரகு, கம்பு, சோளம், வரகு, சாமை, குதிரைவாலி வாங்கி வந்து சுத்தம் செய்து, சிறிதளவு லாபம் வைத்து விற்கத் துவங்கினேன்.

நல்ல லாபம் தர ஆரம்பிக்கவே, அடுத்த கட்டமாக, சிறுதானிய இட்லி, தோசை, ரெடி மிக்ஸ் மற்றும் ஈரமாவு விற்பனையை ஆரம்பித்தேன்.ஆரம்பத்தில், மாதச் சேமிப்பு, 5,000 ரூபாயாக இருந்தது. அதன் பின் புதுக்கோட்டையிலிருந்து, ஆர்கானிக் பாரம்பரிய அரிசி வகைகளான கவுனி, மாப்பிள்ளை சம்பா, குடவாழைச் சம்பா; புதுச்சேரியில் இருந்து மிளகுச் சம்பா, தங்கச் சம்பாவை, நேரில் சென்று வாங்கி வந்து, வீட்டில் வைத்தே விற்க துவங்கினேன்; சேமிப்பு கூடியது.
அடுத்து, ஆவாரம்பூ ஊறுகாய், பிரண்டை ஊறுகாய், குறுமிளகு ஊறுகாய் என, வித்தியாசமாக செய்யத் துவங்கினேன்.ஆவாரம்பூ சீசன், நவம்பர், டிசம்பர் என்பதால் திருச்சி, மதுரைக்குச் சென்று, மொத்தமாகப் பூக்களை வாங்கி வந்து ஊறுகாய் போடுகிறேன்.

பிரண்டை பறிக்க, திருப்போரூர் செல்கிறேன். மிகவும் கஷ்டமான, நாட்கள் அதிகம் வேலை பிடிக்கும் ஊறுகாய் என்றால், பிரண்டை தான். 25 கிலோ பிரண்டை ஊறுகாய் செய்ய, நான்கு நாட்கள் தேவை.இந்த இரண்டு ஊறுகாய்களுக்கும், ஏக கிராக்கி. 'பிரம்மி' என்ற பெயரில், கண்ணாடி பாட்டில்களில் அடைத்து விற்பனை செய்கிறேன். மலேஷியா போன்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கிறேன்.
பொருட்களின் மருத்துவக் குணம், சமையல் டிப்ஸ்களை கூறி, விற்பனை செய்து வருகிறேன். இந்தத் தொழில் மனதிற்கு நிம்மதியையும், மக்களுக்கு இயற்கை உணவு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும் வசதியாக இருக்கிறது.
எப்போதும் பொருட்களை வாங்கி வர அலைந்து திரிந்தபடி இருப்பதால், வாழ்க்கை சுவாரஸ்யமாக உள்ளது; அதே சமயத்தில் அர்த்தம் நிறைந்ததாகவும் உள்ளது.

Thursday, December 28, 2017

பல தொற்றா நோய்களுக்கு கதவு திறக்கும் பரோட்டா... கவனம்! #Parotta thanks to vikatan.com

பல தொற்றா நோய்களுக்கு கதவு திறக்கும் பரோட்டா... கவனம்! #Parotta

தென் இந்தியாவை மட்டும் எடுத்துக்கொள்வோம்... எத்தனை வகை பரோட்டாக்கள்! மைதாவின் ஆதாரத்தால் பிறந்த பரோட்டாக்களின் பரம்பரை வழிவந்த மெலிதான வீச்சு பரோட்டா, சிதைந்து காட்சித் தரும் கொத்துப் பரோட்டா, முட்டை பரப்பிய முட்டை பரோட்டா, எண்ணெயில் பொரித்த விருதுநகர் பரோட்டா, அளவில் பெரிதான மலபார் பரோட்டா... எனப் பல வகைகள். அப்படியே கொஞ்சம் தெற்குப் பக்கமாக இந்திய வரைபடத்தில் சரிந்தால், `இலங்கை பரோட்டா’ என்று மற்றொரு வகை. இன்னும் ஒவ்வொரு பகுதிக்கும் ஏற்ப சில பெயர்களில் பரோட்டாக்கள் வலம்வருகின்றன. மேலே குறிப்பிட்ட அனைத்து வகைகளும் ஒரே உணவகத்தில் கிடைக்கும் அளவுக்கு பரோட்டாக்கள் பிரபலமடைந்திருக்கின்றன.
பரோட்டா
மவுசு!
எந்த உணவகத்துக்குச் சென்றாலும், பரோட்டாவின் பெயரை உச்சரிக்காத ஹோட்டல் சர்வர்கள் இருக்க மாட்டார்கள். அவர்கள் வாயிலிருந்து தன்னிச்சையாக வெளிவரும் வார்த்தை அதுவாகத்தான் இருக்கும். ஜி.ஸ்.டி இல்லாத சிறிய ரோட்டோரக் கடைகள் முதல் ஜி.ஸ்.டி வரி விதிக்கப்படும் ஹோட்டல்கள் வரை, அனைத்திலும் மெனுக்களிலும் இதற்கு தனித்துவமான ஓர் இடம் நிச்சயம் உண்டு. வரி இருக்கிறதோ, இல்லையோ இவற்றின் விற்பனையில் குறைவிருக்காது. பரோட்டா சுவைக்கு மயங்காதவர்கள் எவருமில்லை; அனைவருக்கும் பிடித்த ரெசிப்பியும்கூட. காலை, மாலை, இரவு என முப்பொழுதும் பல கடைகளில் இவை கிடைக்கும். காரணம் இவற்றின் மீது நம் மக்களுக்கு இருக்கும் தீராத மோகம்.
சரி... இதன் அருமை பெருமைகளைப் பற்றிப் பேசிவிட்டோம். தொடர்ந்து இதைப் பிரதான உணவாக நமது மெனுவில் சேர்த்துக்கொண்டால் உண்டாகும் பிரச்னைகள் என்னென்ன... சால்னா கலந்த பரோட்டாவின் சுவையை உணரும் நாம், அதன் அடிப்படையான மைதாவின் ஆபத்துகளை உணர்ந்திருக்கிறோமா... மைதாவால் தயாரிக்கப்படும் உணவுகள் உண்டாக்கும் விளைவுகளை அறிந்துவைத்திருக்கிறோமா?
மைதா
கேக், நாண், பிஸ்கட், ரொட்டி வகைகள், சிற்றுண்டிகள், பிரதான உணவுகள்... என அனைத்திலும் இன்றைக்கு மைதாவின் ஆதிக்கம் இருக்கிறது. `கோதுமையில் இருக்கும் நுண்ணூட்டச் சத்துகள் அனைத்தும் நீக்கப்பட்டு, வியாபார கட்டாயத்தினால் மங்கிய நிறத்தை வெண்மையாக்க ரசாயனத் தாக்குதலால் ’பிளீச்’ செய்யப்பட்டு, இறுதியில் வெண்மையாக வெள்ளந்தியாகக் காட்சியளிக்கும் மைதாவால், உடலுக்கு உண்டாகும் ஆபத்துகள் மிக அதிகம்’ என எச்சரிக்கிறது மருத்துவ உலகம். மைதா என்பது இயற்கையாக, கோதுமையிலிருந்து உருவாக்கப்படும் மாவு அல்ல. செயற்கையாக, கோதுமையில் பலவிதமான ரசாயனத் தாக்குதல்களை நடத்தி உருவாக்கப்படும் மெல்லிய மாவு. இதை பிளீச் செய்யப் பயன்படும் ரசாயனம் பென்சாயில் பெராக்ஸைடு (Benzoyl peroxide).
மைதா பரோட்டா
சர்க்கரைநோய்... கவனம்!
மைதா சேர்த்த உணவுகளுக்கு கிளைசெமிக் அளவீடு (Glycemic index) அதிகம். அதாவது, சாப்பிட்டவுடன், விரைவில் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கச் செய்யும். எனவே, சர்க்கரை நோயாளிகள் தடை விதிக்கவேண்டிய முக்கிய உணவு பரோட்டா. மைதாவைப் பட்டுப்போல மென்மையாக்க பயன்படும் `அல்லோக்ஸான்’ (Alloxan) எனும் வேதிப்பொருள், நேரடியாக கணையத்தைத் (Pancreas) தாக்கி, சர்க்கரைநோயை உண்டாக்கலாம் என்பது அண்மைக் காலமாக பொதுவெளியில் உள்ள கருத்து. சர்க்கரை நோய்க்கான மருந்துகளின் திறனை ஆய்வு செய்வதற்காக, ஆய்வக விலங்குகளில் செயற்கையாக சர்க்கரைநோயை உண்டாக்கப் பயன்படும் பொருள்தான் அல்லோக்ஸான். ஆக, மைதாவின் துணையோடு செய்யப்படும் பரோட்டாக்களை அதிகளவில் சாப்பிட்டுவந்தால், சர்க்கரைநோய் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம்.
தொற்றா நோய்கள்
இன்றைக்கு சர்க்கரைநோய், உடல் பருமன் போன்ற தொற்றா நோய்கள் அதிகரித்திருப்பதற்கு, பல்வேறு காரணங்களோடு, பரோட்டாவையும் ஒரு காரணமாகச் சொல்லலாம். சத்துகள் ஏதுமில்லாத, வெற்று கலோரிகளை மட்டுமே கொடுக்கும் மைதாவின் குழந்தையான பரோட்டா, உடல் எடையைக் கூட்டும். அதுவும் குழந்தைப் பருவம் முதலே பரோட்டாவுக்கு ரசிகராக இருப்பவர்களுக்கு இள வயது உடல் பருமன் நிச்சயம். எண்ணெயில் பொரித்த மைதா சார்ந்த உணவுகள், கெட்டக் கொழுப்பை (LDL) அதிகரிப்பது மட்டுமல்லாமல், இதய நோய்களையும் உண்டாக்கலாம்.
எண்ணெயில் பொரிக்கப்படும் பரோட்டா
நார்ச்சத்து இல்லாத மைதா
உடலுக்குத் தேவையான நார்ச்சத்து இல்லாமலிருப்பதாலும், மைதா சேர்த்த உணவுகளை ஆரோக்கியத்துக்கு எதிராகப் பார்க்கவேண்டியிருக்கிறது. மலச்சிக்கலை உருவாக்குவதில் மைதாவுக்கு முக்கியப் பங்கு உண்டு. குடல் பகுதியில் பசைபோல உருவாகி, செரிமானத்துக்குத் தடங்கலை ஏற்படுத்துவதால், மைதாவைச் செல்லமாக ’Glue of the gut’ என்று அழைக்கின்றனர். குடலின் இயக்கத்தை மந்தமாக்கி மலச்சிக்கலை உண்டாக்கும். கார சாரமான குருமாவோடு சேர்த்து மூன்று பரோட்டாக்களைச் சாப்பிட்ட பிறகு, வயிற்றுக்குள் உண்டாகும் செரிமானச் சண்டைகளை கவனித்திருக்கிறீர்களா? தவறியவர்கள் இனிமேல் கவனியுங்கள்!
மைதா உருவான பாதை
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கற்களைக் கொண்டு, கோதுமையை நசுக்கி மாவு தயாரிக்கப்பட்டதாக தொல்பொருள் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வரலாற்றுப் பாதையில் கோதுமை மாவை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு உணவுகள் தயாரிக்கப்பட்டன. பின்னர் காலப்போக்கில், தொழிற்புரட்சியின் விளைவாக இயந்திரங்களின் மூலம் பெருமளவில் மாவு தயாரிக்கப்பட்டது. உணவு வகைகளும் தேவைகளும் அதிகரித்தன. ஆனால், கோதுமையின் உட்கருவில் (Wheat germ) இருந்த சில இயற்கையான பொருள்கள் காரணமாக, விரைவில் அந்த மாவு கெட்டுப்போகக் கூடியதாக இருந்தது. (உட்கருவில் எண்ணற்றச் சத்துகள் இருப்பது குறிப்பிடத்தக்கது). இது பெருமளவில் மாவைச் சேமித்துவைத்து வியாபாரம் செய்வதற்கு இடைஞ்சலாக இருந்தது. வியாபாரத்தைப் பெருக்க என்ன செய்யலாம் என்று ஒரு கூட்டம் யோசனை செய்தது.
`பல சத்துக்கள் நிறைந்த கோதுமையின் உட்கருவை நீக்கிவிட்டு, மாவாகப் பயன்படுத்தினால் நீண்ட நாள்களுக்கு கெடாமல் நிலைத்திருக்கும்’ என்ற விடை கிடைத்தது. கோதுமையின் உயிர் பறிக்கப்பட்டு, சத்தற்ற மாவாக புழக்கத்துக்கு வந்தது. பல ஆண்டுகள் கழித்து, ’கோதுமையின் உட்கருவை நீக்கும்போது, அதிலிருக்கும் வைட்டமின் பி, துத்தநாகம், செம்புச் சத்து, மக்னீசியம், மாங்கனீஸ் போன்ற பல ஊட்டங்களும் அழிந்துவிடுமே’ என்று சிலர் போர்க்கொடி தூக்கியவுடன், செயற்கையாகச் சில சத்துகள் சேர்க்கப்பட்ட மாவாக வெளிவந்தது. பின்னர் நிறத்துக்காகவும், சில பிரத்யேக உணவுகளைத் தயாரிக்கத் தேவைப்படும் மென்மைக்காகவும், ரசாயனக் குளத்தில் மூழ்கி, இப்போது வியாபாரத்தில் சக்கைப்போடு போட்டுக்கொண்டிருக்கிறது, கோதுமையிலிருந்து திரிந்து வந்த மைதா! ’மண்ணின் மைந்தன்’ எனப் பெயர் சூட்டும் அளவுக்கு, பாரம்பர்ய உணவுகளின் இடத்தை நிரப்பிவிட்டன மைதா சார்ந்த தயாரிப்புகள்! இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், மைதாவின் தாக்கம் அதிகரித்ததாகவும் ஒரு கருத்து உள்ளது.
மைதா
பல நாடுகளில் தடைசெய்யப்பட்ட மைதா, நம் நாட்டில் மட்டும் சுதந்திரமாக சுற்றித் திரிகிறது. மேலும், மத்திய மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் மைதாவின் மூலம் தயாரிக்கப்படும் உணவு வகைகள் ஏராளம் இருக்கின்றன. சில ஆண்டுகளுக்கு முன்னர், கேரளாவில் பரோட்டாக்களுக்கு எதிராகச் சில சர்ச்சைகள் கிளம்பியது பலருக்கு நினைவிருக்கலாம்.
’கோதுமையை அரைத்து மாவாக்குகிறார்கள்… ஏதோ கொஞ்சம் நிறத்தை வெளுப்பாக்கித் தருகிறார்கள். அதனால் என்ன… கோதுமையில் உள்ள சத்துகள் அனைத்தும் மைதாவில் இருக்கப் போகின்றன...’ இதுதான் மைதாவைப் பற்றிய பெரும்பான்மை மக்களின் கருத்து. இப்படி மைதாவின் தயாரிப்பைப் பற்றி முழுமையான விழிப்பு உணர்வு மக்களிடையே இல்லாததையும் நாம் கவனத்தில்கொள்ள வேண்டும்.

பரோட்டா… நாண்… என இவற்றை எப்போதாவது சாப்பிட்டால் பிரச்னை இல்லை. ஆனால், காலையில் மைதாவில் தயாரிக்கப்பட்ட டிபன்… 11 மணி அளவில் பிஸ்கட், கேக்… மதியம் சாதத்துக்குப் பதிலாக பீட்ஸா, பர்கர்… மாலையில் பானி பூரி போன்ற சாட் வகைகள்… இரவில் பிரியமான பரோட்டாக்கள்… என மைதாவின் பிடியில் இறுகிக்கிடந்தால் பாதிப்புகள் வரப்போவது உறுதி. உண்மையில், இன்றைய இளம் தலைமுறை மேற்சொன்ன உணவுப் பட்டியலில் தானே சிக்கித்தவிக்கிறது. மைதாவை கிண்ணத்தில் போட்டு, ‘நான் அப்படியே சாப்பிடுவேன்’ என்ற விளம்பரம்தான் மிச்சம். இந்த நிலை நீடித்தால், சர்க்கரை நோயின் தலைநகரம் மட்டுமல்ல, உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம்... என அனைத்து தொற்றா நோய்களின் தலைநகரமாகவும் நமது தேசம் மாறக்கூடும்
.

Wednesday, December 27, 2017

7) சாப்பிட்டவுடன் செய்யக் கூடாத 7 விஷயங்கள்! #HealthAlert thanks to vikatan.com

சாப்பிட்டவுடன் செய்யக் கூடாத 7 விஷயங்கள்! #HealthAlert

`சாப்பிட்டவுடனே குளிக்கக் கூடாது’, `அது என்ன சாப்பிட்டவுடனே படுக்கிற பழக்கம்?', 'சாப்பிடும்போது தண்ணி குடிக்கக் கூடாது' - இதுபோன்ற உரையாடல்களை கேட்காதவர்களே இருக்க முடியாது. இந்தக் கருத்துகளெல்லாம் உண்மைதானா என்கிற சந்தேகமும் நமக்கு எழக்கூடும். 'வயிறார சாப்பிட்டதுக்கு அப்புறம் ஒரு குட்டி தூக்கம்... என்ன ஒரு சுகம் தெரியுமா’ என்று லயித்துப்போய்ச் சொல்பவர்களும் உண்டு. ஆனால், `அப்படியான தூக்கம் மிகவும் தவறான பழக்கம்’ என்கிறது மருத்துவம். "உணவின் தன்மையைப் பொறுத்து செரிமானத்துக்கான நேரமும் மாறுபடும். சாப்பிட்ட உணவு முழுமையாகச் செரிமானமாவதற்கு முன்னர், சில விஷயங்களைச் செய்யக் கூடாது. அப்படிச் செய்வது, மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்" என்கிற ஊட்டச்சத்து நிபுணர் அனிதா பாலமுரளி, சாப்பிட்டவுடனே என்னவெல்லாம் செய்யக் கூடாது என்கிற பட்டியலையே தருகிறார்...
உணவு
* சாப்பிட்டவுடன் தூங்குவது, மிக மோசமான பழக்கம். செரிமானப் பணியின்போது, சாப்பாடு குடல் பகுதிக்குச் செல்லும். தூங்கும்போது, குடல்வரை செல்லாமல், மீண்டும் தொண்டையை நோக்கி உணவு மேலெழும்பும். இது, நெஞ்செரிச்சல், மூச்சுக்குழாய் பிரச்னைகள் போன்றவற்றை ஏற்படுத்தும். இந்தப் பழக்கம் தொடர்ந்தால் மூச்சுக்குழாயில் பிரச்னை, ஸ்லீப் ஆப்னியா, மூச்சுத்திணறல் போன்றவை ஏற்படலாம்.
* குளிக்கக் கூடாது. நம் உடலைப் பொறுத்தவரையில், சாப்பிட்டவுடனேயே செரிமானப் பணிகள் தொடங்கிவிடும். பொதுவாகவே குளியலின்போது, உடல் உஷ்ணமும், ரத்த ஓட்டமும் அதிகரிக்கும். குறிப்பாக, உடலின் மேற்புறத்தில் (தோலுக்கு அருகிலுள்ள பகுதிகளில்) சுறுசுறுப்பான ரத்த ஓட்டம் இருக்கும். அந்த வகையில், வயிற்றுப் பகுதியிலுள்ள ரத்தம் மற்ற பகுதிகளை நோக்கி வேகமாகச் செல்லும்போது, செரிமானப் பணிகள் பாதிக்கப்படும். வயிற்றுப் பகுதியில் எப்போதும் சீரான ரத்த ஓட்டம் இருக்கவேண்டியது மிகவும் அவசியம். இல்லாத பட்சத்தில், செரிமானப் பணியின் வேகம் குறைந்துவிடும்..
சாப்பிட்ட பின் தூக்கம்
* பழங்கள் சாப்பிடக் கூடாது. ஒவ்வொரு பழ வகைக்கும் ஒவ்வொரு தனித்தன்மை உண்டு. உணவில் இருக்கும் புரதம், கொழுப்பு போன்றவற்றோடு பழங்களில் இருக்கும் வேறு சத்துகளும் சேரும்போது, செரிமானக் கோளாறு, நெஞ்செரிச்சல் போன்ற பிரச்னைகள் ஏற்படக்கூடும். உணவுக்குப் பின், பழங்கள் சாப்பிட்டால், உணவின் மேல் அது அமர்ந்துக்கொள்வது மாதிரியான நிலை ஏற்பட்டுவிடும். இது, செரிமானத்தை தாமதப்படுத்தத் தொடங்கும். பழங்களை விரும்பிச் சாப்பிடுவோர், சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னரோ, சாப்பிட்டு இரண்டு மணி நேரம் கழித்தோ அதைச் சாப்பிடலாம்.
* சிகரெட் பிடிக்கக் கூடாது. புகைப்பழக்கம் இருப்பவர்களுக்குச் சாப்பிட்டவுடன் புகைபிடிக்க வேண்டும் என்கிற வேட்கை தோன்றும். புகைபிடிப்பதே கேடு... அதிலும் சாப்பிட்டவுடன் புகைபிடிப்பது இன்னும் அதிகத் தீங்கை விளைவிக்கும். சாப்பிட்டவுடன் பிடிக்கும் ஒரு சிகரெட், பத்து சிகரெட்டுக்குச் சமம் என்கிறது ஓர் ஆய்வு.
சிகரெட் பிடிப்பது தவறு
* கடுமையான வேலைகள் செய்யக் கூடாது. அப்படிச் செய்தால், செரிமானத்துக்குத் தேவையான சக்தி கிடைக்காது, செரிமானமாகும் சிறு உணவும் உடல் முழுக்கப் போய் சேராமல் தடுக்கப்பட்டுவிடும். உணவிலிருந்து கிடைக்கும் அனைத்துச் சக்தியும் வெகு எளிதாகக் குறைந்துவிடக்கூடும் என்பதால், கடுமையாக உடற்பயிற்சி செய்வது, வெகுதூரம் நடப்பது, வியர்வை வரும் அளவுக்கு வீட்டு வேலை செய்வது போன்றவற்றைச் செய்யக் கூடாது.
* டீ குடிக்கக் கூடாது. தேநீரில் உள்ள அமிலங்கள், செரிமானத்தைக் குறைத்துவிடும். அதிலும், புரதச்சத்து அதிகமுள்ள சாப்பாடாக இருந்தால், டீயில் உள்ள அமிலமும் அதோடு சேர்ந்துவிடும். அதனால், இரண்டும் சேர்ந்து செரிமானமாக வெகுநேரம் எடுத்துக்கொள்ளும். டீயில் உள்ள பாலிஃபினால் (Polyphenols) மற்றும் டானின்ஸ் (Tannins) போன்றவை, உணவில் உள்ள இரும்புச்சத்துகளை உறிஞ்சிக்கொள்ளும். இதனால், உணவு செரிமானமாவதில் சிக்கல் ஏற்படும். சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னரும் பின்னரும் டீ குடிக்கக் கூடாது.

டீ குடிக்கலாமா
* சாப்பிட்டவுடன் மனஅழுத்ததுக்கு ஆளாகக் கூடாது. அப்படியொரு சூழல் எல்லோருக்குமே அவசியம் தேவை. மனமோ, உடலோ அதிக அழுத்தத்துக்கு உள்ளானால், செரிமானக் கோளாறுகள் ஏற்படும். மனஅழுத்தம், நரம்புகளுக்கு அதிக அழுத்தம் தந்து, செரிமானத்துக்குத் தேவையான ரத்த ஓட்டத்தையும், அதற்கு உதவியாக இருக்கும் சில சுரப்பிகளையும் பாதிக்கும்.'எந்த வகை உணவைச் சாப்பிட வேண்டும்', 'எந்த உணவு, எந்தப் பிரச்னைக்கு மருந்தாக அமையும்', 'சுவையான, சத்தான உணவு எது' என உணவு சார்ந்த பல விஷயங்களில் அக்கறை எடுத்துக்கொள்வதுபோல, 'சாப்பாட்டுக்குப் பின்னர் என்னவெல்லாம் செய்யக் கூடாது' என்பதையும் அறிந்துகொண்டு, அதன்படி நடக்கவேண்டியது எல்லோருக்குமே அவசியம்.

Tuesday, December 26, 2017

மனச்சோர்வுக்கு மருந்து! thanks to dinamalar.com

மனச்சோர்வுக்கு மருந்து!

 மனச்சோர்வுக்கு மருந்து!

ப்போதெல்லாம் தினமும் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளில் பாதிப் பேருக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ மனச்சோர்வு காரணமாக ஏற்படும் நோய்களே அதிகம்' என்கிறது உலகச் சுகாதார நிறுவனம். 'இது பள்ளிக் குழந்தை முதல் படுக்கையில் கிடக்கும் கிழவர் வரை எல்லோருக்கும் இருக்கிறது' என்கிறது மருத்துவ புள்ளி விபரம்.இன்றைய இயந்திரமயமான வாழ்க்கைமுறை, சிதைந்துபோன உறவுமுறை, மறைந்துபோன கூட்டு குடும்ப மகிழ்ச்சி, அதிகரித்து வரும் மதுப்பழக்கம், தன் வேலை, தன் வீடு எனும் குறுகிய மனப்பான்மையின் வளர்ச்சி... மனச்சோர்வுக்கு இப்படிப் பொதுவான பல காரணங்களைக் கூற முடியும். குறிப்பிட்டுச் சொன்னால், குழந்தைப் பருவத்தில் ஏற்படும் மனக்காயங்கள், பாலியல் வன்முறைகள், இளவயதினருக்குக் காதல் தோல்வி, வேலையின்மை அல்லது படிப்புக்கு ஏற்ற வேலை இல்லாதது போன்றவை காரணமாகின்றன.வேலைக்குச் செல்பவர்களுக்கு அதிக வேலைப் பளு, குறைந்த சம்பளம், கடுமையான பணிச்சூழல்போன்றவற்றால் மனச்சோர்வு ஏற்படுகிறது. பெண்களுக்கோ தாமதமாகும் திருமணம், குடிகாரக் கணவர், குழந்தையின்மை, அடங்காத பிள்ளைகள் முதலியவை மனச்சோர்வைக் கொண்டு வருகின்றன. தனிமை, வெறுமை, இழப்பு, பொருளாதார நெருக்கடி, நாட்பட்ட நோய்நிலை, நலிந்துவரும் உடல்நிலை ஆகியவற்றால் மனச்சோர்வு வந்து முதியவர்கள் துன்பப்படுகின்றனர்.

அறிகுறிகள் என்ன


மனச்சோர்வின் முதற்கட்ட அறிகுறியாக வழக்கமான வாழ்வியல் நடைமுறைகளும் கடமைகளும் மாறும். அதீத உறக்கம் வரும். சோம்பேறித்தனமாக இருக்கும். சாப்பிடப்பிடிக்காது. உடல் மெலிந்து பலவீனம் அடையும். தலைவலி, உடல்வலி எனப் பலதரப்பட்ட வலிகள் தொல்லை கொடுக்கும்.இந்த வலிகள் எல்லாமே மனம் சார்ந்தவை என்பதால், வலி போக்கும் மருந்துகளுக்குத் தற்காலிக நிவாரணமே கிடைக்கும். பல மருத்துவர்களையும் மருந்துகளையும் மாற்றினாலும் வலிகள் மறையாது. இதனால் மன உளைச்சல் ஏற்பட்டு இயலாமை தலைதுாக்கும். மனம்உற்சாகம் இழக்கும்.அடுத்தகட்டத்தில் முகத்தில் சிரிப்பு மறைந்து, களை இழந்துவிடும். கலகலப்பாகப் பேசுவதும், பழகுவதும் குறைந்துவிடும். மற்றவர்களிடமிருந்து ஒதுங்கிப் போவதும் தனிமையை விரும்புவதும் நிகழும். வாழ்க்கையில் பிடிப்பு இல்லாமல் போகும். குடிப்பழக்கம், போதைப்பழக்கம் ஏற்படும். ஆஸ்துமா, உறக்கமின்மை, உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற துணை நோய்கள் தலைதுாக்கும்.
இறுதிக்கட்டத்தில் தன்னம்பிக்கையும் சுயமதிப்பும் குறைந்து, வாழ்க்கையில் தான் தோற்றுவிட்டதாகத் தோன்றும். தான் எதற்கும் லாயக்கில்லை, என்னால் எவருக்கும் பயனில்லை, என்னை எவருக்கும் பிடிக்கவில்லை, எதிர்காலம் இருண்டதாக இருக்கிறது போன்ற எதிர்மறை எண்ணங்கள் மீண்டும் மீண்டும் மனசுக்குள் 'ரீவைண்ட்' ஆவதால், 'இனி வாழ்ந்து பயனில்லை' என முடிவுக்கு வந்து, தற்கொலை முயற்சிகளில் இறங்குவர்.

என்ன சிகிச்சை


மனச்சோர்வின் அறிகுறிகளை வைத்து அதைக் குறைந்த நிலை, மிதமான நிலை, கடுமையான நிலை எனப் பிரித்து சிகிச்சை அளிப்பது நடைமுறை. மனச் சோர்வைப் போக்கும் மருந்துகள்தான் சிகிச்சையில் முக்கியம் என்றாலும், கூடவே சிந்தனை சார்ந்த நடத்தைப் பயிற்சிகளும், உறவுகள் மேம்பட ஆலோசனைகளும் தேவைப்படும். மனச்சோர்வு கடுமையாக உள்ளவர்களுக்கு 'மின்துாண்டல் சிகிச்சை' தரப்படும்.
ஆனாலும், அறிவியல் வளர்ந்தோங்கி நிற்கும் இக்காலத்திலும், மோசமான மனச் சோர்வு உள்ளவர்களுக்குப் பேய் பிடித்துவிட்டது; செய்வினை செய்துவிட்டனர்; பில்லி சூனியம் வைத்துவிட்டனர் என எண்ணி, வேண்டாத சிகிச்சைகளை மேற்கொள்கிறவர்களும் உண்டு.

எப்படித் தடுப்பது


மனச்சோர்வு தானாகச் சரியாகிவிடும் என மட்டும் காத்திருக்காதீர்கள். மருத்துவச் சிகிச்சைகளோடு சுயமுயற்சிகளும் முக்கியம். உதாரணமாக, இதன் ஆரம்பக்கட்டத்தில் சோம்பேறித்தனம்தான் முக்கியப் பிரச்னையாக இருக்கும். அப்போதே, அதைச் சரிசெய்யா விட்டால், வாழ்க்கைமுறையையே சீர்குலைத்துவிடும். எனவே,முதலில் உங்கள் அன்றாட நடைமுறைகளை ஒழுங்குபடுத்துங்கள். குறிப்பிட்ட நேரத்தில் எழுவது, குளிப்பது, செய்தித்தாள் வாசிப்பது, வெளியில் செல்வது என முறைப்படுத்துங்கள். நேரத்துக்குச் சாப்
பிடுங்கள். உணவு இல்லாத களைப்பு மனச்சோர்வை அதிகப்படுத்தும். உங்கள் மீதே எரிச்சல்கொள்ள வைக்கும்; கோபம் வரும். இந்தப் போக்கு சுய முயற்சித் தடுப்புகளைத் தகர்த்துவிடும் என்பதால் இந்த யோசனை.ஓய்வு நேரங்களில், உங்கள் வழக்கமான பணிகளிலிருந்து விலகி, புதிதாக ஏதாவது மேற்கொள்ளுங்கள். உதாரணமாக, இசை கற்கலாம். ஓவியம் தீட்டிப் பழகலாம். புதிய சமையல் ரெசிபியை முயற்சி செய்யலாம். ஒரு தன்னார்வ நிறுவனத்துடன் இணைந்து செயலாற்றலாம். நட்பு வட்டத்தை விரிவாக்கி, மனம்விட்டு உரை
யாடலாம்.

குறிக்கோள்

உங்களுக்கென சில குறிக்கோள்களை வைத்துக்கொண்டு அவற்றை அடைய முயற்சி செய்யுங்கள். குறிக்கோள் என்பது பெரிய அளவில் தான் இருக்க வேண்டும் என்பதில்லை. சீக்கிரத்தில் இலக்கை அடைகிற ரீதியில் இருந்தாலே போதும். உதாரணமாக வீட்டை, படுக்கை அறையைச் சுத்தப்படுத்துவது, புத்தகங்களை அடுக்கிவைப்பது, தோட்டத்தில் புல் வெட்டுவது போன்றவற்றால் மனம் உற்சாகம் அடைந்து, மனச்சோர்வை விரட்டிவிடும்.மது குடித்தால் மனச்சோர்வு மறைந்துவிடும் என்ற தவறான எண்ணம் பலரிடம் காணப்படுகிறது. மது மனச்சோர்வை இன்னும் மோசமாக்குமே தவிர சீராக்குவதில்லை. எனவே, மதுவை மறந்துவிடுங்கள். மாறாக, மனதில் தேங்கி நிற்கும் பிரச்னைகளை நெருங்கிய நண்பரிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.அப்போதுதான் மனச்சுமை கொஞ்சமாவது குறையும். பிரச்னைகளை உங்களிடமே பூட்டிவைப்பதுதான் தவறு. இரும்புக் குழாயைத் துரு அரித்து விடுவதைப்போல உள்
மனப் பிரச்னைகள் உங்களை பாடாய்ப்படுத்திவிடும்.உங்களால் முடிந்த உடற்பயிற்சிகளை தினமும் மேற்கொள்ளுங்கள். முப்பது நிமிடங்கள் போதும். அது நடைப்பயிற்சியாகவோ நீச்சல் பயிற்சியாகவோ இருக்கலாம். இம்மாதிரியான பயிற்சிகளின்போது மூளைக்குள் 'என்டார்பின்' எனும் ஹார்மோன் சுரக்கிறது. இது மனதையும் உடலையும் உற்சாகமாக வைத்துக்கொள்ள உதவுகிறது. மனச்சோர்வு நீங்க மருந்துகளைமட்டும் நம்பாமல் மேற்சொன்ன சுயமுயற்சிகளையும் மேற்கொள்ளும்போது, பிரச்னைகள் தீர்வது எளிதாகிவிடும். மீண்டும் மனச்சோர்வு ஏற்படுவது தடுக்கப்படும்.

குடும்பத்தினரின் பங்கு


மனச்சோர்வு உள்ளவர்களுக்குக் குடும்பத்தினரின் ஆதரவும், ஊக்கமும் மிகவும் அவசியம். பாதிக்கப்பட்டவரின் மனநிலையை புரிந்துகொண்டு செயல்பட வேண்டியது முக்கியம். குறிப்பாக, அவருடைய இயலாமையைச் சுட்டிக்காட்டுவதையும் செயல்களில் குறைகூறுவதையும் தவிர்க்க வேண்டும். அவரைத் திறந்த மனதுடன் பேச வைக்கவும், அவர் கூறுவதைப் பொறுமையுடன் கேட்டுப் பதில் சொல்லவும் குடும்பத்தினர் பழகிக்கொள்ள வேண்டும்.அவர் சின்னச் சின்ன வேலைகளில் ஈடுபட உதவ வேண்டும். அவர் சீரான உணவு சாப்பிடவும், சரியான உறக்கம்கொள்ளவும், தினமும் உடற்பயிற்சிகளை மேற்கொள்ளவும் உதவினால் இன்னும் நல்லது. மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளை முறையாகச் சாப்பிடுகிறாரா என்பதையும் கவனிக்க வேண்டும்.
மனச்சோர்வு உள்ளவர்களுக்குத் தற்கொலை எண்ணங்கள் இருந்தால், அவரை ஊன்றிக் கவனித்து, தனிமையைப் போக்கி, நல்ல உறவுச்சூழல்களை உருவாக்க, குடும்பத்தில் உள்ளவர்களால்தான் முடியும்.-டாக்டர் கு. கணேசன்மருத்துவ இதழியலாளர்ராஜபாளையம் gganesan95@gmail.com