Sunday, February 26, 2017

உடலுக்கு சிறிது உபாதை வந்தாலும், மருத்துவர்களை நாடி செல்லத் துவங்குகிறோம். மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்து, மாத்திரைகளை உட்கொண்டு நலம் பெற்றாலும், அம்மருந்துகளால், என்னென்ன பாதிப்புகள் வருகிறது என்று, நம்மில் பலருக்கு தெரிவதில்லை. இதற்கு மாற்றாக, வீட்டு வளாகத்திலேயே, மூலிகை செடிகளை வளர்த்தால், சிறு, சிறு உபாதைகளுக்கு, சிறந்த மருத்துவமாக பயன்படும்.
அருகம்புல் சாறு: எல்லா நோய்க்கும் ஏற்ற டானிக் அருகம்புல் சாறு. ரத்தத்தை சுத்தம் செய்து நரம்புகளுக்குப் புத்துணர்ச்சி அளிக்கிறது. அமிலத்தன்மையை குறைக்கிறது. மலச்சிக்கலை நீக்குகிறது. ஆண்மை, தாது விருத்தி, இருமல், வயிற்றுவலி, மூட்டுவலி, இதயக்கோளாறு, தோல் வியாதிகளை நீக்குகிறது.
அருகம்புல் பச்சையம், ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களை அதிகரித்து, ரத்த விருத்தியை உண்டாக்கிறது. வாய் துர்நாற்றம், பல் நோய்கள், சர்க்கரை நோய் வராமல் தடுக்கிறது. ஆஸ்துமா, ரத்த அழுத்தம் ஆகியவைகளை குறைக்கிறது. தாய்பால் அதிகரிக்க செய்கிறது. உடலில் உள்ள நச்சு தன்மையை அகற்றுகிறது. கொழுப்புச் சத்து குறைந்து எடை குறையும்.
தூதுவளை இலைச்சாறு: மார்புச் சளியை அகற்றும். நரம்புத் தளர்ச்சி மறையும், மூளை வளர்ச்சி, நினைவாற்றல் அதிகரிக்கும், தோல் நோய்கள் மறையும்.
துளசி இலைச்சாறு: காய்ச்சல், இருமல், ஜீரணக் கோளாறுகள், ஈரல் சம்பந்தமான நோய்கள், காது வலி ஆகியவைகளை நீக்கி, ரத்தத்தை சுத்தம் செய்கிறது.
மஞ்சள் கரிசலாங்கண்ணிச் சாறு: பார்வை பலம் பெறும். மூளைக்குச் சுறுசுறுப்பைத் தந்து, அறிவு தெளிவு ஏற்படும். காமாலை, மலச்சிக்கல் நீங்கும்.
பொன்னாங்கண்ணி இலைச்சாறு: உடலுக்கு வலு ஊட்டுவதோடு, பொன்போல் பளபளக்கும் தன்மையை அளிக்கும். கண் பார்வை அதிகரித்து, வாதநோய்கள் மறையும், உடல் சூடு குறையும்.
வல்லாரை இலைச்சாறு: நினைவாற்றல் வளரும், நரம்புத் தளர்ச்சி அகலும், வயிற்று நோய்கள், குடல் நோய்கள் நீங்கும். சிறுநீர் நன்கு பிரியும். இருதயம் வலுவாகும்.
முசுமுசுக்கை இலைச்சாறு: தொடர்ந்த இருமல், சளி, மூக்கில் நீர் ஒழுகுதல் குறையும். நுரையீரல் நோய்கள் குறையும்.
வில்வ இலைச்சாறு: காய்ச்சல் குறையும், நீரழிவு குறையும், வயிற்றுப்புண்கள் ஆறும், நல்ல பசி எடுக்கும், மந்த புத்தி மாறும், மஞ்சள் காமாலை நீங்கும்.
புதினா இலைச்சாறு: வாய்ப்புண், வயிற்றில், குடலில் புண்கள், சளி, கபம், இருமல் குறையும். புற்றுநோய்கள் குறையும், வெண்குஷ்டம் குறையும்.
நெல்லிக்காய் சாறு: தலைமுடி உதிர்வது குறையும், தும்மல், இருமல், சளி, கண்நோய், பல் நோய்கள் குறையும். பசியை, நன்கு தூண்டும். நீரழிவு நோய், உடல் பலமின்மை, தோல் நோய்கள் குறையும்.
வாழைத்தண்டுச் சாறு: சிறுநீர் அடைப்பு, சிறுநீரக சம்பந்தமான நோய்கள் குறையும், ரத்த அழுத்தம் குறையும். அமிலத்தை குறைத்து, உடல், கை, கால் வீக்கம் குறையும், பாம்பு, வண்டுக்கடி நச்சுக்கள் குறையும்.
சாம்பல் பூசணிக்காய் சாறு: பெண்களுக்கு மாதவிடாய் நோய்கள், கர்ப்பப்பை நோய்கள், வயிற்றுப்புண்கள், அமிலத்தைக் குறைக்கும்.
கேரட் சாறு: கண்பார்வை ஒளி பெறும், கண்நோய், பல நோய்கள் குறையும். அமிலத்தைக் குறைக்கும்.
கொத்தமல்லிசாறு: பசியை நன்கு தூண்டும். பித்தம் மற்றும் வாத நோய் குறையும். மூலம், காய்ச்சல், சளி, இருமல், வாதம் குறையும்.

Tuesday, February 21, 2017

Last updated : 07:33 (22/02/2017) எதிர்மறை எண்ணங்களைத் தகர்த்தெறிய சில வழிகள் ... #MotivateYourSelf thanks to vikatan.com

எதிர்மறை எண்ணங்களைத் தகர்த்தெறிய சில வழிகள் ... #MotivateYourSelf


MotivateYourSelf
ஒவ்வொரு செயலுக்கும் இன்னொரு எதிர்வினை இருக்கும். அது நல்லதாகவும் இருக்கலாம்; கெட்டதாகவும் இருக்கலாம். இப்ப நியூட்டன் நியாபகத்துல வராரா? ''For every action there is an equal and opposite reaction'' என்று ஒன்பதாம் வகுப்பில் படித்திருக்கிறோமே, அதுதாங்க. ஒவ்வொரு செயலைச் செய்யும் பொழுதும், அதைச் செய்யலாமா வேண்டாமானு குழப்பமாக இருக்கும். ''லவ் பண்ணலாமா, வேண்டாமா?'' என்பது போல தான் இதுவும். இந்த ‘வேண்டாம்’ என்று சொல்லும் எதிர்மறை எண்ணம் இருக்கு பார்த்தீங்களா, அதை எப்படி அகற்றலாம்னு நாம யோசிப்போம். அப்படி அகற்றணும்னு நீங்க யோசனை செய்தவர்களாக இருந்தால், இதைப் படிச்சாலே போதும்… முதல் படியைத் தொட்ட மாதிரி....   
MotivateYourSelf
•    எப்பொழுதுமே நல்ல செயல்கள் நடந்து கொண்டிருக்கிறதென்றால், அதை அதன் பாட்டிற்கு விட்டுவிட வேண்டும். அப்படி விடும்பொழுது, நம்முடைய உள்மனதில் ஒரு குரல் ஒலித்து கொண்டே இருக்கும். அது என்ன சொல்லும்னு, என்னைவிட உங்களுக்கே தெரியும். நல்லதைக் கெடுப்பதற்கென்றே அது பேசும். அப்படி அது பேசுவதை எல்லாம் நாம் காது கொடுத்து கேட்காமல், நமக்கு நாம் நேர்மையாகவும் உண்மையாகவும் செயல்பட்டு வருகிறோம் என்றாலே கொஞ்சம் பெட்டராக இருக்கும். 
•    அந்த உள்மனம் பேசுகின்ற எதிர்மறை சொற்களுக்கு எதிராக, நீங்க எதையாவது செய்து பாருங்களேன். அது தானாகவே... கொஞ்சம் கொஞ்சமாக அடங்கிவிடும். 
MotivateYourSelf
•    ஒரு குறிப்பிட்ட சொற்களை நீங்கள் அதிகம் பேசுவீர்கள். அதைக் கொஞ்சம் உல்டாவாக்கிப் பாருங்கள். அதாவது என்னால் முடியாது, மாட்டேன், நடக்காது, வேண்டாம்; இப்படிப் பேசுவதையெல்லாம் கொஞ்சம் பாசிட்டிவாக மாற்றிப் பாருங்களேன். அந்த எதிர் சொற்கள் எல்லாம் காணாமல் போய்விடும். 
MotivateYourSelf
•    எதையும் பிளான் செய்து செயல்படுத்த வேண்டும். நாம் ஒரு பிளான் இல்லாமல் ஒரு செயலைச் செய்தால், இந்த எதிர்மறை எண்ணம் இருக்குப் பாருங்க... அது போதும் விட்டு விடு என்று முட்டுக்கட்டை போடும்; அப்புறம் நாம அதை ஃபாலோ செய்ய நேரிடும். அதனால் எதையும் முன்கூட்டியே திட்டமிட்டு வைத்திருந்தால், அதைத் தொடர்ந்து நடக்கும் செயல்களும் சிறப்பாக முடிவடையும். அதனால் கிடைக்கும் மகிழ்ச்சியில் நீங்கள் மூழ்கிப் போவீர்கள் என்பதே நிதர்சனம். 
•    சத்தமாகப் பேசப் பழகிக் கொள்ளுங்கள். அதற்காக நடு ராத்திரியில் எழுந்து கத்தக் கூடாது; வெளியில் ஒரு சிலவற்றை சத்தமாகப் பேசினாலே, நமக்குள்ளே சன்னமாகப் பேசுகின்ற அந்த எதிர்மறைக் குரல் காணாமல் போய்விடும்.  பாசிட்டிவ் எண்ணத்தைக் கொண்டு, நெகட்டிவ் எண்ணத்தை நீங்களே சுயமாக முறியடிக்க முடியும். அதற்கு ஒரு தூண்டுகோலாக உங்கள் கான்ஃபிடெண்டான பேச்சு இருக்கும்.
MotivateYourSelf
•    உங்க எண்ணம், முழுமையான நீங்களில்லை; அது உங்களது வெற்றிக்கான ஒரு தூண்டுகோல் தான்; எனவே அதனை நல்லதாக வைத்துக் கொள்ளுங்கள். பிறரது எண்ணங்களை நம்மால் கட்டுப்படுத்த முடியாது என்பது போல, நம்முடைய எண்ணத்தையும் பிறரால் கட்டுப்படுத்த முடியாது. அதனால் நம்மை, நம் எண்ணங்களை நாம்தான் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும்; எனவே உங்க எதிர்மறைகளை, மனசுக்கு ஆதரவு தரும்படி மாற்றினால், உங்களுக்கு அதைவிட பெஸ்ட் ஃபிரெண்ட் யாராகவும் இருக்க முடியாது.

Sunday, February 19, 2017

உணவே மருந்தாக... மருந்தே உணவாக.. உதவும் பொடிகள்! நலம் நல்லது-75 #DailyHealthDose vikatan.com


சோமாலியா மார்க்கெட் பகுதியில் குண்டுவெடிப்பு!
சோமாலியா மார்க்கெட் பகுதியில் குண்டுவெடிப்பு!
காஷ்மீரில் 50 நாட்களில் 22 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!
காஷ்மீரில் 50 நாட்களில் 22 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!
மாட்டிறைச்சி ஏற்றுமதியை தடை செய்ய முடியுமா..? அகிலேஷ் யாதவ் கேள்வி.
மாட்டிறைச்சி ஏற்றுமதியை தடை செய்ய முடியுமா..? அகிலேஷ் யாதவ் கேள்வி.
இந்தியாவின் முதல் அதிவேக புல்லட் ரயில் திட்டம்!
இந்தியாவின் முதல் அதிவேக புல்லட் ரயில் திட்டம்!
நாகாலாந்து முதலமைச்சர் ராஜினாமா!
நாகாலாந்து முதலமைச்சர் ராஜினாமா!
வைரலாகும் குட்டி டொனால்ட் டிரம்ப்!
வைரலாகும் குட்டி டொனால்ட் டிரம்ப்!
பார்த்தசாரதி கோயிலில் பிப்.26 முதல் தெப்பத் திருவிழா!
பார்த்தசாரதி கோயிலில் பிப்.26 முதல் தெப்பத் திருவிழா!
ஹிப் ஹாப் ஆதிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!
ஹிப் ஹாப் ஆதிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!
காணாமல் போன போயிங்-777 கண்டுபிடிக்கப்பட்டது!
காணாமல் போன போயிங்-777 கண்டுபிடிக்கப்பட்டது!
திருக்குறளை வைத்து அரசியல் பேசிய வைரமுத்து!
திருக்குறளை வைத்து அரசியல் பேசிய வைரமுத்து!
சோமாலியா மார்க்கெட் பகுதியில் குண்டுவெடிப்பு!
சோமாலியா மார்க்கெட் பகுதியில் குண்டுவெடிப்பு!
காஷ்மீரில் 50 நாட்களில் 22 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!
காஷ்மீரில் 50 நாட்களில் 22 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!
மாட்டிறைச்சி ஏற்றுமதியை தடை செய்ய முடியுமா..? அகிலேஷ் யாதவ் கேள்வி.
மாட்டிறைச்சி ஏற்றுமதியை தடை செய்ய முடியுமா..? அகிலேஷ் யாதவ் கேள்வி.
இந்தியாவின் முதல் அதிவேக புல்லட் ரயில் திட்டம்!
இந்தியாவின் முதல் அதிவேக புல்லட் ரயில் திட்டம்!

உணவே மருந்தாக... மருந்தே உணவாக.. உதவும் பொடிகள்! நலம் நல்லது-75 #DailyHealthDose 

சில அத்தியாவசியமான பொடிகள் நம் வீட்டில் இருந்தால், நாம் மருத்துவமனைப் படிகளை அதிகம் மிதிக்கவேண்டிய அவசியம் இருக்காது. இந்தப் பொடிகளை சாதத்தில் பிசைந்தும், தேநீரில் கலந்தும், கஷாயமாகவும் தேவைப்படும் சமயத்தில் சாப்பிடும் மரபு, நம்மிடம் நெடுங்காலமாக இருந்து வந்திருக்கிறது. அதை மீண்டும் மீட்டு எடுப்போம். `உணவே மருந்தாக... மருந்தே உணவாக’ நல வாழ்வு வாழ்வோம். அதற்கு உதவும் பொடிகள்... 
பொடிகள் 

அஷ்ட சூரணம்! 
சிலருக்கு சாப்பிட்டு முடித்ததும் புளித்த ஏப்பம் வரும்; வயிறு உப்பிப் போகும்; லேசான அமிலத்துடன் சாப்பிட்ட ரசவடையின் வாசம் தொண்டை வரை எட்டிப் பார்க்கும். இவர்களுக்குத்தான் இந்த அஷ்ட சூரணம். சுக்கு, மிளகு, திப்பிலி, சீரகம், கருஞ்சீரகம், பெருங்காயம், இந்துப்பு, ஓமம் இவற்றை சம அளவில் எடுத்து வறுத்துப் பொடித்துக்கொண்டு, சுடு சாதத்தில் பிசைந்து சாப்பிட்டால் வாயுக் கோளாறு குறையும். கழுத்துவலி இருந்தால் அதுவும் மட்டுப்படும். 
சுண்டவற்றல் பொடி 
சுண்டவற்றல் பொடி! 
குழந்தைகளுக்கு வயிற்றுப் புழுக்களுடன் சில சமயங்களில் வயிற்றுப் போக்கும் ஏற்படும். அந்த நேரத்தில் அருமருந்து இந்த சுண்டவற்றல் பொடி! சுண்டவற்றலுடன் கறிவேப்பிலை, மாங்கொட்டைப் பருப்பு, மாதுளையின் ஓடு, ஓமம், வெந்தயம், நெல்லிக்காய் வற்றல் ஆகியவற்றை தேவையான அளவுக்கு எடுத்துக்கொள்ளவும். இவற்றை தனித்தனியே வறுத்து, பொடித்து, கலந்து வைத்துக்கொள்ள வேண்டும். இதைக் குழந்தைகளுக்கு கைப்பிடி சாதத்தில் கலந்து, பிசைந்து கொடுக்கலாம். மாங்கொட்டையையும், மாதுளம் பழத்தோலையும் தூர எறியாமல், நன்கு கழுவி உலர்த்திவைத்துக்கொண்டால் இவை அனைத்தையும் வீட்டிலேயே செய்துகொள்ளலாம். 
பெரியவர்களுக்கு கொஞ்சம் மாற்றி செய்து கொடுக்க வேண்டும். சுண்டக்காயை சிற்றாமணக்கு எண்ணெயில் வறுத்து, உப்பு, மிளகு, சீரகம், கறிவேப்பிலை, வெந்தயம் ஆகியவற்றை தேவையான அளவுக்குச் சேர்த்து மொத்தமாக வறுத்து, பொடி செய்துகொள்ளலாம். இதைச் சிறிது சாதத்தில் கலந்து சாப்பிட்டால், செரிமானம் சீராகும்; மூல நோய் பிரச்னை குறையும். 
மிளகு கற்பப் பொடி! 
தினமும் உணவில் மிளகு சேர்க்கவேண்டியது அவசியம். 200 கிராம் மிளகை மூன்று நாட்கள் மோரிலும், அடுத்த மூன்று நாட்கள் இஞ்சிச் சாற்றிலும், இப்படி மூன்று மூன்று நாட்களாக வேலிப்பருத்தி, தூதுவளை, கற்பூரவல்லி, ஆடுதொடா இலைச் சாறு ஆகியவற்றில் ஊறவைத்துப் பிறகு உலர்த்தி எடுத்துக்கொள்ள வேண்டும். இதனுடன், சுக்கு, அதிமதுரம், திப்பிலி, கடுக்காய் அனைத்தையும் வகைக்கு 25 கிராம் அளவுக்கு சேர்த்து ஒன்றாக வறுத்து, இடித்து பொடியாக்கிக்கொள்ளவும். இந்தப் பொடியை சளி, இருமல், மூச்சிரைப்பு உள்ள குழந்தைகளுக்கு காலை உணவு கொடுப்பதற்கு முன்னர் தேனில் மூன்று சிட்டிகை போட்டு, குழைத்துக் கொடுக்கலாம். நாளடைவில் சளி வெளியேறி, மூச்சிரைப்பு நிற்கும். மீண்டும் வராத அளவுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும். 

வெந்தயக் கூட்டுப் பொடி 
வெந்தயக் கூட்டுப் பொடி! 
வெந்தயம், ஆவாரம் பூ, திரிபலா (கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய்), நாவல் கொட்டை, கறிவேப்பிலை அனைத்தையும் சம அளவில் எடுத்துப் பொடித்துக்கொள்ளவும். இந்தப் பொடியை 1/2 டீஸ்பூன் சாப்பிட்டுவிட்டு, மதிய உணவைச் சாப்பிட்டால், வரவிருக்கும் சர்க்கரைநோயைத் தள்ளிப்போடும். சர்க்கரைநோய் உள்ளவர்களுக்கு அதன் தீவிரத்தைக் குறைக்க உதவும். கறிவேப்பிலையும் வெந்தயமும் கலந்திருப்பதால், கெட்ட கொழுப்பும், திரிபலாவின் துணையால் மலச்சிக்கலும் குறையும். 
சிற்றரத்தைப் பொடி! 
நாட்டு மருந்துக் கடைகளில் இந்தப் பொடி கிடைக்கும். இதில் 2 சிட்டிகையை எடுத்து தேனில் குழைத்து குழந்தைக்குக் கொடுத்தால் இருமல் நீங்கும். வறட்டு இருமலுக்கு, சிற்றரத்தையுடன் அதிமதுரத்தை சமபங்கு எடுத்துச் சேர்த்துக் குழைத்துக் கொடுக்க வேண்டும். 
சுக்குக் கஷாயப் பொடி 
சுக்குக் கஷாயப் பொடி! 
சுக்கு, கடுக்காய், சீந்தில், நிலவேம்பு, பேய்ப்புடல் அனைத்தையும் வாங்கி நன்கு சுத்தம் செய்யவும். இவற்றை உலர்த்தி, வறுத்து, ஒன்றிரண்டாக இடித்து, பொடிசெய்து காற்றுப்புகாத பாத்திரத்தில் போட்டு வைத்துக்கொள்ளவும். ஜுரம் வந்தால், இந்தப் பொடியில் ஒரு டீஸ்பூன் எடுத்து, 200 மி.லி தண்ணீரில் போட்டு, அந்தத் தண்ணீர் 50 மி.லி ஆகும் வரை வற்றவைத்துக் கொள்ளவும். காலை, மாலை வேளைகளில் டீ குடிப்பதற்கு பதிலாக இந்தக் கஷாயத்தை மூன்று நாட்கள் இரண்டு வேளை சாப்பிட்டால், ஜுரம் காணாமல் போகும். 
தாது கல்ப பொடி! 
உலர்த்திய முருங்கைப் பூ, நிலப் பூசணி, அமுக்கரா கிழங்கு, பாதாம் பருப்பு, பிஸ்தா பருப்பு, பாதாம் பிசின், முருங்கைப் பிசின் அனைத்தையும் சம அளவு எடுத்துக்கொள்ளவும். ஆளி விதை, சப்ஜா விதை, பூனைக் காலி விதை இவற்றை முதலில் எடுத்தவற்றில் பாதி அளவுக்கு எடுத்துக்கொள்ளவும். எல்லாவற்றையும் சேர்த்துப் பொடித்துக்கொள்ளவும். இரவு இளஞ்சூடான பாலில் இந்தப் பொடியை 1/2 டீஸ்பூன் அளவுக்குக் கலந்து சாப்பிட்டால் உடலுறவில் நாட்டம் மிகும்; விந்தணுக்களின் எண்ணிக்கை பெருகும். 
கடுக்காய்ப் பொடி 
கடுக்காய்ப் பொடி! 
கடுக்காய்ப் பிஞ்சை விளக்கெண்ணெயில் லேசாக வறுத்து, பொடித்து காற்றுப் புகாத இறுக்கமான பாட்டிலில் போட்டு வைத்துக்கொள்ளவும். சாப்பாட்டுக்குப் பிறகு 30-40 நிமிடங்கள் கழித்து 1/2 டீஸ்பூன் பொடியை வெந்நீரில் கலக்கி இரவில் சாப்பிடவும். மலச்சிக்கல் தீரும். மலச்சிக்கலின் தீவிரத்தைப் பொறுத்து, பொடியின் அளவை 2 டீஸ்பூன் வரை அதிகரித்துச் சாப்பிடலாம். 
ஆரோக்கியம் காக்கும் இந்தப் பொடிகளை பத்திரமாகப் பாதுகாக்கவேண்டியது அவசியம். இவை ஆயுளுக்கும் நலம் பயக்கும் நல் மருந்துகள்! 

Saturday, February 18, 2017

சிவராத்திரி thanks to dinamalar

பிப்., 24 - சிவராத்திரி

சிவன் என்றால் ஜீவன் (உயிர்) மற்றும் மங்கலம் தருபவர் என்று பொருள். உயிர் இருந்தால் தான், உடலுக்கு மங்கலம். அருவமாகவும், அருவுருவமாகவும் இருக்கும் சிவபெருமான், தட்சிணாமூர்த்தி கோலத்தில் ஞானத்தை அருளி, பைரவராகவும், வீரபத்திரராகவும் இருந்து தன் பக்தர்களை காக்கிறார்.
மேலும், லிங்க வடிவில் எழுந்தருளியுள்ள சிவபெருமான், தனக்கும் தன் மனைவிக்கும் இடையே முருகனை, அமர வைத்து, சோமாஸ்கந்தர் என்ற பெயர் பெறுகிறார்.
உருவம் இல்லா ஜோதி வடிவான இறைவனை, திருமந்திரத்தில், 'அன்பே சிவம்' என்கிறார், திருமூலர். வள்ளலாரோ, சிவனிடம், 'அப்பா... நான் வேண்டுதல் கேட்டருள் புரிய வேண்டும்; ஆருயிர்க்கெல்லாம் நான் அன்பு காட்ட வேண்டும்...' என்று வேண்டுகிறார்.
இத்தகைய சிறப்புடைய சிவனை, மாசி மாத தேய்பிறை சதுர்த்தசியன்று வரும் சிவராத்திரி அன்று விழித்திருந்து வழிபடுகின்றனர் பக்தர்கள்.
பாற்கடலில் இருந்து, சாகா மருந்தான அமுதம் பெற, வாசுகி எனும் பாம்பை கயிறாகவும், மேரு மலையை மத்தாகவும் கொண்டு, தேவர்களும், அசுரர்களும் கடலை கடைந்தனர். வாலையும், தலையையும் பிடித்து இழுத்ததால், வலி பொறுக்காத வாசுகி, விஷத்தை கக்கியது. இதனால் தேவர்கள் இறந்து விடுவரே எனக் கருதி அவ்விஷத்தை அருந்தினார், சிவன். பதறிப் போன பார்வதி, கணவரின் கழுத்தைப் பிடிக்க, விஷம் அதற்கு மேல் போகாமல் நீல நிறத்தில் சிறு உருண்டையாக கழுத்திலேயே தங்கி விட்டது. இதனால், நீலகண்டன் என பெயர் பெற்றார், சிவன். கண்டம் என்றால் கழுத்து என்று பொருள்.
இந்நிகழ்ச்சி நடந்தது, ஒரு சதுர்த்தசி திதியில்! அன்று மாலையில், தன் பக்தர்களை மகிழ்விக்க நடனமாடினார், சிவன். இதனால், மகாசிவராத்திரியன்று, மாலையில், முதலில் நடராஜரை வழிபட வேண்டும் என்பது மரபு. தொடர்ந்து, இரவின் முதல் ஜாமத்தில் சோமாஸ்கந்தரையும், இரண்டாம் ஜாமத்தில் தட்சிணாமூர்த்தியையும், மூன்றாம் காலத்தில் லிங்கோத்பவரையும், நான்காம் காலத்தில், காளையில் அமர்ந்து அருள்பாலிக்கும் சந்திரசேகரரையும் வழிபட வேண்டும்.
சிவராத்திரியன்று காலையில் விரதத்தை துவங்கி, இரவில் கண்விழித்து,
'சிவாயநம...' என ஜெபித்தபடி, நான்கு கால அபிஷேகத்தை தரிசிக்க வேண்டும். மேலும், சிவபுராணம், தேவாரம் மற்றும் திருவாசகம் படிப்பதும் நன்மை தரும். மறுநாள் காலையில் அன்னதானம் செய்த பின் சாப்பிட வேண்டும்.
இந்நாளில், சிவனுக்கு வில்வார்ச்சனை செய்தால், ஈரேழு ஜென்மத்தில் செய்த பாவம் நீங்கி விடுவதுடன், செல்வ வளமும் பெறுவதோடு, மறுமையில் கைலாயத்தில் வாழும் பேறும் பெறுவர். அத்துடன், பெற்றோருக்கு பெருமை தேடித்தரும் நற்குழந்தைகள் பிறப்பர். மங்களகரமான இவ்விரதத்தை, அனைவரும் அனுஷ்டித்து, சிவன் அருள்பெறுவோம்!

Posted Date : 19:38 (18/02/2017)மஞ்சள் கறைக்கு நோ... வெண்மைக்கு வெல்கம்! பல் பராமரிப்பு வழிகள் thanks to vikatan.com

மஞ்சள் கறைக்கு நோ... வெண்மைக்கு வெல்கம்! பல் பராமரிப்பு வழிகள் #PhotoStory

னைவரையுமே எளிதாக தாக்கக்கூடிய ஆயுதம் புன்னகை. ஆனால், அந்த ஆயுதத்தால் நாம் பறிப்பதோ அன்பையும் நேசத்தையும். `அந்தப் புன்னகையின்போது பற்கள் முத்துப்போல் பளிச்சிட்டால்தானே அழகு!’ என்பது பலரின் எண்ணம். அதில் சிறிது உண்மையும் உண்டு. பற்கள் மஞ்சள் வண்ணத்தில் இருப்பதால், சிலருக்கு தன்னம்பிக்கையே சமயத்தில் நொறுங்கிவிடும். இங்கே, மஞ்சள் பற்களை வெண்மையாக மாற்றுவதற்கு எட்டு எளிய வழிமுறைகளைக் கூறுகிறார் சித்த மருத்துவர் ஜெய வெங்கடேஷ்...
பல் பராமரிப்பு - வெட்பாலை இலை
* வெட்பாலை இலை
தினமும் இரு வேளை வெட்பாலை இலைகளைப் பறித்துத் தொடர்ந்து மென்றுவர, வெண்ணிறமான பற்களைப் பெறலாம்.
நாயுருவி 
* பொடி
நாயுருவி வேர், கொட்டைப் பாக்கு, காசுக்கட்டி, கிராம்பு, தவிடு ஆகியவற்றை நன்கு அரைத்துப் பொடியாக்கி பல் துலக்கி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
பழத் தோல்கள்
 * பழத் தோல்கள்
எலுமிச்சை அல்லது ஆரஞ்சுப்பழத் தோல்களை நன்கு வெயிலில் உலர்த்தி, அதனைப் பொடியாக்கி காலை, மாலை இரு வேளை பல் துலக்கலாம்.
வாய் கொப்பளித்தல்
* வாய் கொப்பளித்தல்
தேங்காய் எண்ணெயைச் சிறிதளவு எடுத்து வாயில் ஊற்றி ஐந்து முதல் பத்து நிமிடங்கள் கழித்துக் கொப்பளிக்கலாம். இப்படித் தொடர்ந்து செய்துவர, பற்கள் வெண்ணிறமாகும்.
கல்லுப்பு


* உப்பு
வீட்டில் சமையலுக்குப் பயன்படுத்துகிற உப்புகூட பற்களின் வெண்மைக்கு உதவும். சிறிதளவு உப்பை வெந்நீரில் கலக்கி, தினசரி வாய் கொப்பளித்துவந்தால், பற்கள் வெண்மையாக மாறிப் பளிச்சிடும்.
ஓம இலை 
* ஓம இலை
மிக எளிதாகக் கிடைக்கக்கூடிய ஓம இலைகளைப் பறித்து அதனை நன்கு மென்றுவர வெகு விரைவில் பற்கள் வெண்ணிறத்துக்கு மாறும்.
மரக்கரி 
* மரக்கரி
மரக்கரியை தினசரி உபயோகப்படுத்தும் டூத் பேஸ்ட்டுகளுடன் கலந்து அன்றாடம் பயன்படுத்திவந்தாலும் பற்களில் உள்ள மஞ்சள் கறை நீங்கும்.
 


வெற்றியை பாதிக்கும் பதற்றத்தைத் தவிர்க்கலாம்! தென்கச்சி சுவாமிநாதனின் குட்டிக்கதை thanks to vikatan

வெற்றியை பாதிக்கும் பதற்றத்தைத் தவிர்க்கலாம்! தென்கச்சி சுவாமிநாதனின் குட்டிக்கதை

'பதறிய காரியம் சிதறிப்போகும்' என்பார்கள். எந்தக் காரியத்திலும் ஈடுபடும்போது மனதில் பயம், பதற்றம் என்ற ஒன்று இருந்தால், அங்கு வெற்றி என்பது எட்டாக்கனி. 
பதற்றம் 

‘உயர் அதிகாரி சொல்லிவிட்டாரே... வேலையைச் செய்து முடிக்க வேண்டிய நேரம் முடியப்போகிறதே... ‘இப்படியெல்லாம் நினைத்து பயத்துடன் ஒரு வேலையைச் செய்வார்கள் சிலர். அப்படி அந்த வேலையைச் செய்தால் கிடைக்கவேண்டிய ‘அவுட்புட்’  கண்டிப்பாகக் கிடைக்காது. மாறாக, கூடுதல் டென்ஷனும், ஓர் அச்ச உணர்வும்தான் தொற்றிக்கொள்ளும்.
காலில் சக்கரம் கட்டிக்கொண்டு பறக்கிற இன்றைய பரபரப்பான வாழ்க்கைச் சூழல், நம்மை எந்நேரமும் பயத்திலும் பதற்றத்திலும் ஆழ்த்திவிடுகிறது என்பது மறுக்க முடியாத உண்மை. 
தென்கச்சி கோ. சுவாமிநாதன்இந்த இடத்தில் தென்கச்சி கோ. சுவாமிநாதன் சொன்ன ஒரு குட்டிக்கதை... 
கணித ஆசிரியர் ஒருவர் இருந்தார். மாணவர்களுக்கு அவர் ஒரு சிம்ம சொப்பனம். அவர் வகுப்பறைக்குள் நுழைந்தாலே போதும்... மாணவர்களிடம் பயம் தொற்றிக்கொள்ளும். `இன்று என்ன கேள்வி கேட்பாரோ... யாரைக் கேட்கப் போகிறாரோ...’ என்று பதைபதைப்போடு காத்திருப்பார்கள். இதை அந்த ஆசிரியரும் உணர்ந்துதான் இருந்தார். இந்தப் போக்கை மாற்ற வேண்டும் என முடிவெடுத்தார். 
அன்றைக்கு வகுப்பறைக்குள் நுழைந்தவர், நேராகக் கரும்பலகையின் அருகே சென்றார். ஒரு சாக்பீஸால், ‘9-18-36’ என எண்களை எழுதினார். பிறகு மாணவர்களைப் பார்த்தார். 
“இதற்கு விடை என்ன?” என்று கேட்டார். அதோடு, "இதை நன்றாகப் புரிந்துகொண்டு பிறகு பதிலைச் சொல்லுங்கள். சந்தேகம் ஏதாவது இருந்தால் என்னிடம் விளக்கம் கேட்டுவிட்டுக்கூட பதில் சொல்லலாம்’’ என்றார்.
அவசரக் குடுக்கையாக ஒரு மாணவன் எழுந்தான். "இந்த எண்களை எல்லாம் கூட்டினால் 63 வருகிறது சார்...’’ என்றான். 
“தவறு.’’ 
“அப்படியென்றால், விடை 45 சார். 36 + 18 - 9 = 45” என்றான் மற்றொரு மாணவன். 
“இரண்டுமே தவறு. வேறு யாராவது பதில் சொல்கிறீர்களா?’’ 
மாணவர்கள் மத்தியில் சலசலப்பில்லை.
“இது என்னுடைய தொலைப்பேசி எண்ணின் முதல் பாதி, என்னுடைய தொலைபேசி எண்ணை நீங்கள் நினைவில் வைத்திருக்கிறீர்களா என்று சோதிப்பதற்காகவே நான் அப்படிக் கேட்டேன்’’ என்றவர் மேலும் தொடர்ந்தார்.
“நான் கணக்கு வாத்தியார் என்றாலே, கணக்குதான் சொல்லித்தர வேண்டும் என்று நீங்கள் முடிவெடுத்துவிட்டீர்கள். அதனால்தான் உங்கள் பதில் கணிதத்தைச் சுற்றியே இருந்தது. எதற்காகக் கேட்கிறேன் என்பதைப் புரிந்துகொள்வதற்குக்கூட நீங்கள் தயாராக இல்லை. இதற்கு அடிப்படைக் காரணம் பதற்றம். ஆக, எந்த ஒரு விஷயமாக இருந்தாலும், உடனே முடிவெடுக்காதீர்கள். அது என்ன, எப்படி, ஏன் என்பதையெல்லாம் நன்றாக உள்வாங்கிக்கொண்டு, சந்தேகம் இருந்தால் தெளிவாகக் கேட்டுத் தெரிந்த பிறகு முடிவெடுங்கள்’’ என்றார்.
இந்தச் சிறிய நிகழ்விலிருந்து இரண்டு விஷயங்களைக் கற்றுக்கொள்ளலாம்.
டென்ஷன் 

பயம்
ஒன்று, அவசரப்படுவதால் நமக்குக் கிடைக்கவேண்டிய பெரிய அங்கீகாரம்கூட சில நேரங்களில் நம் கையைவிட்டு நழுவிப்போகலாம்.
மற்றொன்று, ஒருவரைப் பற்றி, முழுமையான புரிதல் இன்றி, முந்திக்கொண்டு அவர் குறித்து முடிவெடுக்காதீர்கள். அது நண்பர்களாக இருக்கும் பட்சத்தில், நாம் அவர்களைப் புரிந்துகொள்ளாதபோது, அவர்களை மட்டுமல்ல... அவர்களின் நல்லுறவையும் அவர்களின் மூலம் கிடைக்கும் நற்பயன்களையும் சேர்த்தே நாம் இழக்க நேரிடும்.
இதைத்தான் ஆன்மிகப் பெரியோர்கள் ‘வாழ்க்கையில் சில விஷயங்களைப் பெறுவதற்கு, இறைவனின் அருள் கிடைக்கும் வரை நாம் பொறுமையோடு இருந்தாக வேண்டும்’ என்கிறார்கள். 
இந்த அறிவுரை மாணவர்களுக்கு மட்டுமல்ல... எல்லா மனிதர்களுக்கும் பொருந்தும். எனவேதான் எந்தச் செயலில் ஈடுபடும்போதும் மனதைத் திடமாக வைத்துக்கொள்ள வேண்டும்; பிரச்னையை தெளிவாகப் புரிந்துகொண்டு வேலையைப் பதற்றம் இல்லாமல் செய்ய வேண்டும். அப்போதுதான் வெற்றி இலக்கை அடையவேண்டிய நேரத்துக்கு முன்னதாகவே அடைய முடியும். பதற்றத்தைத் தவிர்ப்போம்; எடுத்த செயலை வெற்றிகரமாக முடிப்போம்..!

ஹெல்த்தி லைஃப் @ ஃப்ரீ காஸ்ட்! thanks vikatan.com

ஹெல்த்தி லைஃப் @ ஃப்ரீ காஸ்ட்!

நோயற்ற வாழ்வு என்பது அனைவருக்கும் பிடித்தமான லைக் லிஸ்ட். அதுவும் செலவு இல்லாமல் ஹெல்த்தியாக இருப்பது என்பது மகிழ்ச்சிகுரிய செய்தி. வீட்டில் இருக்கும் பொருட்களைக்கொண்டு நம் ஆரோக்கியத்தைப் பராமரிப்பது, சின்ன சின்ன வாழ்வியல் மாற்றங்கள் செய்வது, சிறிய மெனக்கெடல்கள் இவை எல்லாமே நமக்கான பூஸ்ட்தான்.
இதோ உங்களுக்கான ஈஸி டிப்ஸ்...

* குடிநீரை தாமிர பாத்திரத்தில் ஊற்றி வைக்கலாம். காலை எழுந்ததும், தாமிரப் பாத்திரத்தில் உள்ள தண்ணீரை ஒன்று அல்லது இரண்டு கிளாஸ் குடிக்க வேண்டும். தாமிரப் பாத்திரத்தில் உள்ள நீர் சுத்தமாக இருக்கும். கிருமிகள் இருக்காது. தொற்றுக்களும் அண்டாது.

* பிரிஸ்க் வாக்கிங் அதுவும் அரை மணி நேரம் மட்டுமே. காலையோ, மாலையோ அரை மணி நேரம் நடந்தாலே போதும். தொப்பைக் கரைவதுடன் உடலில் உள்ள நோய்களும் கரையும்.

* உதடுகள் மூடி, நன்கு மென்று சாப்பிடப் பழகுங்கள். மெல்லும்போது உதடுகள் திறக்கக் கூடாது. தேவையான உணவைச் சாப்பிடுங்கள். ஆனால், வயிறு நிறைய சாப்பிடக் கூடாது. அரை அல்லது முக்கால் வயிற்றுக்குச் சாப்பிட்டால் போதும்.

* காலை 9 மணிக்குள் காலை உணவும்,  2 மணிக்குள் மதிய உணவும், இரவு 8 மணிக்குள் இரவு உணவும் முடித்திருக்க வேண்டும். இரவு உணவை எளிமையாக்குவது சிறப்பு.

* உங்களது டெய்லி ஃபுட் லிஸ்டில், 40 சதவிகிதம் காய்கறிகள், 40 சதவிகிதம் மாவுசத்துக்கள் அதாவது அரிசி, சிறுதானியம், பயறு, பருப்பு வகைகள், 20 சதவிகிதம் பழங்களாக இருப்பது நல்லது.

* எண்ணெயில் பொரித்த உணவுகளைவிட ஸ்டீம் உணவுகள் அதாவது ஆவியில் வேகவைக்கப்பட்ட உணவுகளுக்கு முதலிடம் கொடுக்கலாம். உதாரணத்துக்கு இட்லி, இடியாப்பம், கொழுக்கட்டை, நீரால் வேகவைக்கப்பட்ட காய்கறிகறிகள் சாப்பிடலாம்.

* வாரம் இருமுறை இளஞ்சூடான நீருடன் எலுமிச்சை சாறும், தேனும் கலந்து குடித்துவர உடலில் உள்ள நச்சுக்கள், கழிவுகள் வெளியேறும்.

* குட்டி குட்டியாக நல்ல பழக்கங்களைக் கற்றுக் கொள்ளலாம். வெள்ளைச் சர்க்கரைக்குப் பதிலாக வெல்லம் அல்லது நாட்டுச் சர்க்கரை. தயிருக்குப் பதிலாக மோர். டீ, காபிக்குப் பதிலாக பால் சேர்காத கருப்பட்டி காபி, மூலிகை டீ என மாற்றிக் கொள்ளலாம்.

நாள்தோறும் 10 நிமிடங்களுக்கு வஜ்ராசன நிலையில் உட்காரவும். அதாவது, கால்களை மடக்கி, பாதங்களை 'V' போல விரித்துவைத்து அதன்மேல் நிமிர்ந்த நிலையில் உட்காருவதே வஜ்ராசனம். கண்களை மூடி, அமைதியாக 10 நிமிடங்கள் உட்கார்ந்தாலே போதும். மாதவிலக்குப் பிரச்னை, வயிறு தொடர்பான பிரச்னைகள் விலகும்.

* சமமான, தடிமனான மெத்தையில் படுக்கலாம் அல்லது தரையில் படுக்கலாம். ஆனால், தலையணை மெல்லியதாக இருப்பது நல்லது. படுக்கும்போது இடதுபுறமாகப் படுக்க வேண்டும்.

நொறுக்குத் தீனி சாப்பிட்ட பின், வாய் கொப்பளித்துவிட்டால் கிரேவிங் (நொறுக்குத் தீனி சாப்பிடும் மோகம்) உணர்வு தடுக்கப்படும். ஒவ்வொரு முறை சாப்பிட்ட பிறகும் வாய் கொப்பளித்துவிட்டால் பற்சிதைவு வராமல் தடுக்கப்படும். துர்நாற்றப் பிரச்னையையும் தவிர்க்கலாம்.

காலை, இரவு என இருமுறை பல் துலக்குவது நல்லது. கேரட், முள்ளங்கி, தேங்காய், கரும்பு, சோம்பு ஆகியவற்றைப் பற்களால் நன்றாக மென்று விழுங்குவது பற்களுக்கான சிறந்த பயிற்சி. மேலும், இவை பற்களை வலுப்படுத்தும்.

Last updated : 10:36 (05/11/2016) தலைமுடி பராமரிப்பு... எளிய வழிகள்! thanks vikatan.com

தலைமுடி பராமரிப்பு... எளிய வழிகள்!




முடி பராமரிப்புக்கும், பாதுகாப்புக்கும் சில டிப்ஸ்... 

சிறு வயதிலிருந்தே சாப்பாட்டில் முருங்கைக்கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை, சிறுகீரை சேர்த்துச் சாப்பிட வேண்டும். கம்மஞ்சோறு, நெல்லிக்காய், கறிவேப்பிலைத் துவையல்... போன்றவற்றை வாரத்துக்கு 2-3 நாட்கள் அவசியம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

மாதுளை ஜூஸ், உலர்ந்த திராட்சை, உலர் அத்திப்பழம் சாப்பிடுவது மிக நல்லது. 

வாரத்துக்கு ஒரு நாளைக்காவது தலைக்கு நல்லெண்ணெய் தேய்த்துக் குளிப்பது அவசியம். 

தினமும் தலைக்குக் குளித்தால் முடி கொட்டும்’ என்பது மூட நம்பிக்கை. தலைக்குக் குளிப்பது முடியை வளர்க்கும் என்பதே உண்மை.

சிறு வயதிலிருந்தே வீட்டில் அடிக்கடி சுண்டல், நவதானியச் சத்துமாவுக் கஞ்சி, சிறுதானிய உணவு, பீன்ஸ், அவரை முதலான காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்வது, முடி கொட்டும் குறைபாட்டைத் தடுக்கும். 

பொடுகுத் தொல்லை, தலையில் உள்ள சரும உலர்வால் ஏற்படுவதே தவிர, பூச்சித் தொற்று காரணம் கிடையாது. இதைத் தவிர்க்க, ‘பொடுதலை’ என்ற மூலிகையின் சாற்றை தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி, வாரம் 2-3 நாட்கள் தலைக்குத் தேய்த்துக் குளிக்கலாம். Scalp Psoriasis எனும் தோல் நோயை பலரும் பொடுகுத் தொல்லை எனத் தவறாக நினைத்து அலட்சியப்படுத்துகின்றனர். பொடுகுத் தொல்லை அதிகமாக இருந்தால், மருத்துவரிடம் கலந்தாலோசிப்பது அவசியம்.

கறிவேப்பிலையை இப்படிச் சாப்பிட்டால் முடி வளரும்..! #HairTips thanks vikatan.com

கறிவேப்பிலையை இப்படிச் சாப்பிட்டால் முடி வளரும்..! #HairTips

முடி அழகு முக்கால் அழகு என்பது முதுமொழி. எண் ஜான் உடம்புக்கு சிரசே பிரதானம் என்று சொல்வார்கள். அப்படிப்பட்ட தலைக்கு அழகு சேர்ப்பது முடிதான். தலைமுடியைப் பேணிக் காப்பதற்கும், சிறப்பான முறையில் பராமரிப்பதற்கும் தலைமுடி செழுமையாக வளர்வதற்கும் பெரிதும் உதவுகிறது கறிவேப்பிலை. அதன் சிறப்புகள் பற்றியும், மூலிகை குணங்கள் பற்றியும் பார்ப்போம்.
கறிவேப்பிலை

முறையா கோயங்கி (Murraya koenigii) என்ற தாவரவியல் பெயர் கொண்ட இது, சிறு மரம் (அல்லது) பெரும் செடியாக வளரக்கூடியது. வேம்பில் நில வேம்பு, மர வேம்பு, நாட்டு வேம்பு, நீர் வேம்பு, கரி வேம்பு எனப் பல வகைகள் உண்டு. இந்த கரி வேம்புதான் கறிவேப்பிலை என்று அழைக்கப்படுகின்றது.
மருத்துவப் பயன்கள் 
கறிவேப்பிலை இளநரையைத் தடுக்கும் ஓர் அற்புதமான மருந்தாகும். மேலும் இதன் சாறு கண்களைப் பாதுகாத்து, கண்புரை நோய் ஏற்படாமல் தடுக்கிறது.
ரத்தத்திலுள்ள ஹீமோகுளோபின் அதிகரிக்கும். ஊட்டச்சத்து குறைப்பாட்டால் முடி உதிரும் பிரச்னை சரியாகும்.
இதன் சாற்றுடன் சிறிதளவு எலுமிச்சைச் சாறும் தேவையான அளவு சர்க்கரையும் கலந்து அருந்திவர, அஜீரணத்தால் ஏற்படுகின்ற வாந்தி முதலியவைகளுக்கு பலன் தரும்.
நிழலில் உலர்த்திய கறிவேப்பிலையுடன் மிளகு, உப்பு, சீரகம், சுக்கு முதலியவற்றை பொடியாக்கி, சூடான சாதத்தில் நெய் சேர்த்து சாப்பிட, முடி வளரும்.
கறிவேப்பிலை டீ
இரண்டு கிளாஸ் தண்ணீரில் ஒரு கைப்பிடி கறிவேப்பிலையை முதல் நாள் இரவு ஊறவைத்து, மறுநாள் காலை இதனுடன் சிறிதளவு சீரகம், இந்துப்பு சேர்த்து  கொதிக்கவைத்து, வடிகட்டி குடித்து வர முடி வளரும். இளநரை சரியாகும்.
நெல்லி-கறிவேப்பிலை ஜூஸ்
மூன்று நெல்லிக்காயை எடுத்து, கொட்டை நீக்கி, கைப்பிடி கறிவேப்பிலையுடன் சேர்த்து அரைத்து, வடிகட்டி குடித்து வரலாம். வலுவான, அடர்த்தியான கூந்தலாக மாறும்.
கறிவேப்பிலை சாதம்
தேவையான கறிவேப்பிலை, உளுந்து, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை மிதமான தீயில் வதக்கி, பொடி செய்துகொள்ள வேண்டும். சூடான வாணலியில் நல்லெண்ணெய் விட்டு, சிறிதளவு கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய், பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும். பிறகு, தேவையான அளவு அரைத்த பொடியை சேர்த்து, அதனுடன் வடித்த சாதத்தையும் சேர்த்து கிளறி கறிவேப்பிலை சாதம் சாப்பிட்டு வரலாம். 
கறிவேப்பிலை துவையல்
தலா ஒரு டீஸ்பூன் உளுந்து, கடலைப்பருப்பை வாணலியில்  வறுத்து எடுக்கவும். சிறிது எண்ணெய் விட்டு கறிவேப்பிலை, இரண்டு சின்ன வெங்காயம், காரத்துக்கு ஏற்ற காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கவும். மிக்ஸியில் இவற்றை சேர்த்து, உப்பு, தேங்காய், சிறிதளவு புளி சேர்த்து கெட்டியாக அரைத்துக்கொள்ளவும். துவையல் தயார். வாரம் இருமுறை சாப்பிட்டுவர முடி உறுதியாகும். முடி உதிர்தல் பிரச்னை தடுக்கப்படும்.
கருமையான கூந்தல்
முடி வளர
இதன் இலைகளை அரைத்து அரைநெல்லிக்காய் அளவு உருட்டி 40 நாள்கள் தொடர்ந்து வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர, முடி நன்றாக வளரும்.
அதிக உடல் உஷ்ணம் உள்ளவர்களுக்கு
கறிவேப்பிலையை அரைத்து அடை போல் தட்டி சில்வர் அல்லது பிளாஸ்டிக் தட்டில் காய வைக்கவேண்டும். நன்றாகக் காய்ந்த பிறகு தேங்காய் எண்ணெயில் ஊற வைத்து, தொடர்ந்து தலைக்குத் தேய்த்து வர முடி செழுமையாக வளரும்.
உடல் குளிர்ச்சி உள்ளவர்களுக்கு
கறிவேப்பிலையை காய்ச்சி தேங்காய் எண்ணெயில் ஊற வைத்து தலையில் தொடர்ந்து தேய்த்து வர முடி நன்கு வளரும்.
நரைமுடி உள்ளவர்களுக்கு
கறிவேப்பிலை இலையில் சிறிது வெந்தயம் சேர்த்து அரைத்துக்கொள்ளவேண்டும். அவ்வப்போது இந்தப் பொடியைத் தலைக்குத் தேய்த்து வந்தால், நரை பிரச்னைகள் நீங்கும்.
பொடுகு பிரச்னைக்கு
கறிவேப்பிலையுடன் இரண்டு மிளகு சேர்த்து அரைத்து, தேங்காய் எண்ணெயுடன் கலந்து தொடர்ந்து பயன்படுத்திவந்தால், தலையில் உள்ள பொடுகு குணமாவதோடு முடியும் செழித்து வளரும்.
ஜெய வெங்கடேஷ், சித்த மருத்துவர்