Saturday, April 29, 2017

வீட்டைப் பசுமையாக்கும் வெர்டிகல் கார்டன்!

துரை.நாகராஜன்
கர்ப்புற நெருக்கடிகளில் வீட்டைச் சுற்றி செடிகள் நடுவதற்குப் போதிய இடம் இருப்பதில்லை. ஆனாலும் ஆர்வமுள்ளவர்கள் மாடித் தோட்டம் அமைத்துப் பராமரித்து வருகிறார்கள். தரையில் செடி வளர்ப்பதற்கும் மாடியில் செடிகள் வளர்ப்பதற்கும் இருக்கிற வேறுபாடுகளைத் தெரிந்துகொண்டு செய்கிறவர்கள்,  வீட்டுத் தோட்டத்தை வெற்றி கரமாக அமைக்கின்றனர். ரசாயன உரத்தில் விளையும் காய்கறிகளைத் தவிர்ப்பதற்கும், வீட்டைக் குளுமையாக வைத்துக்கொள்ளவும் இத்தகைய வீட்டுத் தோட்டம் உதவியாக இருக்கிறது. 

இந்த வீட்டுத் தோட்டத்தில் புதிய தொழில்நுட்ப மாக வெர்டிகல் கார்டன் (சுவர்த்தோட்டம்) என்ற முறை தற்போது பிரபலமாகி வருகிறது. வெர்டிகல் கார்டன் பற்றி நெல்சன் எர்த்சென்ஸ் அக்ரோ புராடெக்ட்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் செந்தில் பிரபுவிடம் பேசினோம்.

“மாடியில் தோட்டம் அமைக்கும்போது நீர்கசிவு ஏற்படும் என்ற பயம் பலருக்கும் இருக்கும். தற்போது மாடியில் ஏற்படும் நீர்க்கசிவைத் தவிர்க்க, வெர்டிகல் கார்டன் என்ற தொழில்நுட்பம் புதிதாக அறிமுகமாகி, பிரபலமாகி வருகிறது. இந்தத் தொழில்நுட்பம் மக்களிடையே இன்னும் பெரிதாகச் சென்றடையவில்லை. மாடியில் அதிக எடையுள்ள தோட்டம் அமைத்தால், வீட்டின் மேற்கூரை பாதிக்கப்படுமே எனக் கவலைப்படுகிற வர்களுக்கும், வீட்டின் சுற்றுப்புற இடங்கள் குறைவாக இருக்கின்றன என்பவர்களுக்கும் வெர்டிகல் கார்டன் மிகவும் ஏற்றது.
  வெர்டிகல் கார்டன் முறை

ஓர் அடுக்கு என்பது மூன்று தொட்டிகளைக் கொண்டதாக இருக்கும். இவற்றைத் தனியாகவும் சுவரில் மாட்டிக்கொள்ளலாம். மொத்தமாக 50 அல்லது 100 அடுக்குகள் கொண்டு வீட்டைச் சுற்றியுள்ள சுவரிலும், மாடியில் உள்ள சுற்றுச் சுவர்களிலும் அமைக்கலாம். மூன்று அடுக்குகள் ஒன்றின்கீழ் ஒன்றாக ஒரு வரிசையில் அடுக்கப்பட்டு இருக்கும். மேலே தண்ணீர் ஊற்றும்போது முதல் தொட்டி நிரம்பி அடுத்தத் தொட்டிக்கு தண்ணீர் செல்லும் வகையில் தொட்டியின் கீழ்ப்பகுதியில் துளை ஒன்று அமைக்கப்பட்டிருக்கும். தண்ணீர் அதிகமாக இருந்தால், தொட்டியின் கீழ்புறத்தில் உள்ள துளை வழியாகத் தண்ணீர் வெளியேறி கீழே அமைந்துள்ள தொட்டிக்குச் சென்று விடும். கடைசி அடுக்கில் உள்ள துளை வழியாக வெளியேறும் நீரை மழை நீர் சேகரிப்பு குழாய் அமைப்பதுபோலத் தண்ணீரை வீணாகாமல் சேகரித்து மற்ற செடிகளுக்கும் பயன்படுத்தலாம். 

நீண்ட சுவர்போல தோட்டம் அமைக்கும்போது, மேலே உள்ள முதல் அடுக்கில் மட்டும் சொட்டுநீர் பாசனக் குழாய்கள் அமைக்கப்பட்டால், தண்ணீர்ப் பாசனம் செய்ய ஏதுவாக இருக்கும். வெர்டிகல் கார்டனில் சொட்டுநீர் பாசனத்தின் மூலம் தண்ணீர் பாசனம் செய்வது எளிது. 

பத்து அடுக்குக்குக் குறைவாக இருந்தால், கைகளால் தண்ணீர் ஊற்றுவது நல்லது. இந்த கார்டனில் அதிக தொட்டிகள் கொண்ட சுவரை அமைக்கும்போது, விலை குறைவாக இருக்கும்.
  வெர்டிகல் கார்டனில் சொட்டுநீர் பாசனம்

இந்த வெர்டிகல் கார்டனை இதுவரை பள்ளிகள், ரெஸ்டாரன்டுகள், வீடுகள் என அனைத்து இடங்களிலும் அமைத்துத் தந்திருக்கிறோம். அடையாரிலுள்ள பிரபலமான பள்ளி ஒன்றில் இரண்டு பகுதிகளைப் பிரிக்கும் சுவராகவே அமைத்திருக் கிறோம். இப்போது அழகுக்கான, கண்ணைக் கவரும் வகையிலான செடிகள் மட்டுமே வளர்க்கப்படு கின்றன. ஆனால், இந்த வெர்டிகல் கார்டனில் முள்ளங்கி, உருளைக்கிழங்கு, வெங்காயம், புதினா, கொத்த மல்லி, கீரை வகைகள், பந்தல் காய்கறிகள், கொடிவகை காய்கறிகள் ஆகியவற்றையும் வளர்க்கலாம். 

வீடு அழகாக இருக்க வேண்டும் என நினைப் பவர்களும், வீடு முழுவதும் பசுமையாக இருக்க வேண்டும் என நினைப்பவர் களும் மட்டுமே வெர்டிகல் கார்டனைப் பயன்படுத்தி வருகிறார்கள். மாடியிலும், சுவரின் கைப்பிடிகளிலும்கூட வெர்டிகல் கார்டனை அமைக்கலாம். பணம் செலவழித்து பெரிய சுவர்த்தோட்டத்தை அமைத்துவிட்டால் மட்டும் போதாது, பராமரிப்பு மிக முக்கியம். மாதமொருமுறை செடிகளுக்கு இயற்கை உரங்களை இடுவது அவசியம். 

இந்த வெர்டிகல் கார் டனை அமைக்க மொத்தமாக சதுரஅடிக்கு ரூ.900 ரூபாய் வரை செலவாகும். இதில் சொட்டு நீர்க்குழாய்கள், வேலையாள்கள் என முழுமையானத் தோட்டம் அமைத்துத்  தந்துவிடுவோம். சுவர்த் தோட்டம் அமைக்கும் பொருள்கள் மட்டும் தந்தால், சதுரஅடிக்கு ரூ.600 வரை செலவாகும்” என்றார் அவர்.

இடப்பற்றாக்குறை இருப் பவர்கள் சுவர்த் தோட்டம் அமைத்துப் பயன் பெறலாம் என்பதுடன், சொந்த வீடு வைத்திருப்பவர்கள் சுவர்த் தோட்டம் அமைத்தால் கொளுத்தும் வெயிலில் வீட்டை குளுகுளுவென ஆக்கலாம். 

படங்கள்: தே.அசோக்குமார்

வெளிநாடுகளில் வெர்டிகல் கார்டன்!

சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் வெர்டிகல் தொழில்நுட்பத்தில் விவசாயமே செய்துவருகிறார்கள். அங்கே விவசாயம் செய்வதற்கான இடவசதிக் குறைவு என்பதால், வெர்டிகல் கார்டனைப் பயன்படுத்தி ஸ்ட்ராபெர்ரி, முள்ளங்கி, வெள்ளரி, கீரைகள், தக்காளி போன்ற பயிர்களைப் பயிரிட்டு விவசாயம் செய்கின்றனர். பசுமைக்குடில் தொழில்நுட்பம் புதியதாக வரும்போது பிரபலமாகுமா எனக் கேள்விக்குறியாகத்தான் இருந்தது. ஆனால், இன்று அதிக அளவில் பசுமைக்குடில் விவசாயம் பிரபலமாகியிருப்பதைபோல, விரைவில் வெர்டிகல் கார்டன் தொழில்நுட்பமும் இந்தியாவில் பிரபலம் ஆகும் என்கிறார்கள்.

மாடி சுவர்த்தோட்டத்திலும் செடிகள்!

கடும் வெயிலையும், முழு வெளிச்சத்தையும் தாங்கக்கூடிய செடிகளைத்தான் மாடி சுவர் தோட்டத்தில் வளர்க்க வேண்டும். வீட்டுக்கு வெளியே திறந்த வெளியில் வளரக்கூடிய எல்லா வகை அழகுச் செடிகளையும் வளர்க்க முடியும். ஆனால், தொட்டியில் குறைந்த அளவே மண் இருப்பதனால், பெரிய செடிகளை வளர்ப்பது கடினம். மாடியில் முழு ஒளியும் கிடைப்பதால், வண்ண வண்ணப் பூக்களையும், இலைகளையும் கொடுக்கக்கூடிய செடிகளையும் வளர்த்து, வீட்டைப் பசுமையாக்கலாம்.
 

கொளுத்தும் வெயில்... வீட்டைக் குளுமையாக்கும் தொழில்நுட்பம்!

துரை.நாகராஜன்
கோடை வெயில் சுட்டெரித்துக் கொண்டிருக்கிறது. வீடுகளெல்லாம் அனலாகத் தகிக்கிறது. மின்சாரம் இல்லாமல் 15 நிமிடங்கள் அறையில் அமர்ந்திருந்தால், குளித்து முடித்த மாதிரி உடல் முழுக்க வியர்த்துக் கொட்டுகிறது. வீட்டைச் சுற்றியிருக்கிற மரங்கள் அனைத்தையும் வெட்டித் தள்ளிவிட்ட நிலையில், வெயிலிலிருந்து வீட்டைப் பாதுகாப்பது எப்படி, அதற்கு என்னென்ன வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்பதைத் தெளிவாக விளக்குகிறார் ‘காவ்யா ஹோம்ஸ்’ நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஜெகதீஷ்.

‘‘செங்கல்லில் கட்டப்பட்ட கட்டடங்கள் உறுதியாகத்தான் இருக்கும். ஆனால், வெயிலின் தாக்கம் வீட்டுக்குள் அதிகமாக இருக்கும். தற்போது சந்தையில் செங்கல்லுக்கு மாற்றாக தெர்மோபிளாக்ஸ் என்ற கல் அறிமுகமாகியுள்ளது. இதை வைத்து வீடு கட்டும்போது வெயில் காலத்தில், வெப்பம் வீட்டுக்குள் வருவது தடுக்கப்படும். செங்கல் கொடுக்கும் உறுதித் தன்மையை இதுவும் கொடுக்கும். சுற்றுச்சூழலுக்கு இது மிகவும் ஏற்றது. ஆனால், தெர்மோ பிளாக்ஸில் ஆணி அடிக்கும்போது கவனம் தேவை.
மொட்டை மாடியில் சாதாரணக் காவி நிற கற்களையே பெரும்பாலும் பதிக்கின்றனர். இந்தக் கல்லானது தண்ணீரை வீட்டுக்குள் புகவிடாமல் தடுத்து நிறுத்தும். தவிர, இவை வெப்பத்தைக்  கட்டுப்படுத்தாமல் உள்ளே இறங்கவிடும். இந்தக் காவி நிற  கற்களுக்குப் பதிலாக வெண்மை நிற கற்கள் அனைத்துக் கடைகளிலும் கிடைக்கின்றன. இந்த வெண்மை நிற டைல்ஸ் வெயில் பட்டு எதிரொலித்துவிடும். இதனால் இரவில் மட்டுமல்லாமல் பகலிலும் வீட்டின் அறைகள் குளிர்ச்சியாக இருக்கும். இதனால் மின்சாரம் இல்லாமல் இருந்தாலும் அதிகமாக வியர்க்காது, வெப்பமும் தெரியாது. 

வெள்ளை டைல்ஸ்களைப் பதிக்க முடியவில்லை என்றால் வெயிலைத் தடுக்கும் வெள்ளை நிற பெயின்டை  மொட்டை மாடித் தளத்தின் மீது பூசலாம். ஆனால், புதிதாக வீடு கட்டுபவர்கள் வெயிலைச் சமாளிக்கக்கூடிய வகையில் கட்டுவது நல்லது. ஒருமுறை பணம் செலவழித்துவிட்டால் மீண்டும் பணம் செலவழிக்கும் நிலை வராதபடிக்கு வீடு கட்டுவது அவசியம். 

வீடுகளில்இருக்கும்ஜன்னல்களை, காற்றோட்டம் கொண்டவைகளாக அமைப்பது நல்லது. வீட்டில் அமைக்கப்பட்டுள்ள ஜன்னல்கள் காற்றை உள்வாங்குவதுபோல அமைக்கப்பட வேண்டும். வீடுகளில் ஜன்னல் கண்ணாடிகள்  மீது  ஒருவித கறுப்பு ஸ்டிக்கர் ஒட்டுவது மூலம் வெயிலின் தாக்கத்திலிருந்து சிறிது தப்பிக்கலாம். 
மேலும், வீட்டில் இடமிருந்தால், ஆங்காங்கே செடிகள் வளர்த்து வீட்டைப் பசுமையாக்கலாம். இதன் மூலம் வெப்பத்தைக் குறைக்கலாம். முக்கியமாக ஜன்னல்கள், வாசற்படிகள், பால்கனிகள் எனப் பல இடங்களிலும் செடிகளை வளர்த்தால், வீட்டில் காற்றோட்டம் அதிகமாக இருக்கும். 

மேலும், இதில் மூலிகைச் செடிகளாக வளர்த்தால், உடலுக்கு ஆரோக்கியத்தையும் கொடுக்கும். மாடியில் தோட்டம் அமைப்பதன் மூலமும் வெப்பத்தைக் குறைக்கலாம்.

வீட்டில் உபயோகப்படுத்தும் திரைச்சீலைகள், கால்மிதிகள்,  தரை விரிப்புகள் என அனைத்தையும் பிளாஸ்டிக் மற்றும் துணிகளால் பயன்படுத்துகிறார்கள். 

ஆனால், வெட்டிவேர் மூலிகை நார்களாலான விரிப்புகள், கால்மிதிகள், திரைச்சீலைகள் என அனைத்தையும் பயன்படுத்துவதால், வீட்டின் வெப்பத்தை வெட்டிவேர் எடுத்துக்கொள்கிறது.

இனிமேல் புதிதாக வீடு கட்டுபவர்கள் கலர், டிசைன் எனப் பார்க்காமல், கட்டடத்தின் தன்மை எப்படி இருக்கிறது என்பதைப் பார்ப்பது அவசியம். 

இதேபோல, ஏற்கெனவே வீட்டைக் கட்டியிருக்கும் பலரும் தங்கள் விருப்பத்துக் கேற்றவாறு இன்ஜினீயர்கள் ஆலோசனையுடன் மாற்றிக்கொள்ளலாம்” என்றார்.

வெயிலிலிருந்து தப்பிக்க இயந்திரங்களின் பின்னால் ஓடிக் கொண்டிருக்காமல், இப்படியும் மாற்றி யோசித்து, நிரந்தரத் தீர்வுகளைக் காண்பதன் மூலம் வெயில் கொடுமையிலிருந்து தப்பிலாமே!
மனைவி மற்றும் மகளுடன் நடிகர் வினுச்சக்ரவர்த்தி

னக்கென தனி மேனரிஸத்துடன் குணசித்திரம், வில்லன் மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தவர் வினுச்சக்ரவர்த்தி. ஆயிரத்துக்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர், சில ஆண்டுகளாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த நிலையில் சில தினங்களுக்கு முன்னர் காலமானார். சினிமா மீதான ஆர்வத்தால்,  ரயில்வே வேலையை உதறிவிட்டு திரைத்துறையில் வலம்வந்த வினுச்சக்ரவர்த்தியின் சினிமா மற்றும் குடும்ப நேசத்தை நெகிழ்ச்சியுடன் பகிர்கிறார், அவர் மகள் சண்முகப்பிரியா.
"சினிமா, குடும்பம் இரண்டையும் எப்போதுமே அப்பா சேர்த்துவைத்து பார்த்ததில்லை. இரண்டு உலகத்துக்கும் தனித்தனியே தகுந்த முக்கியத்துவம் கொடுத்தாரு. மூணு வயசுல இருந்து சில நாடகங்கள்ல நடிச்சுட்டு இருந்தவர், தொடர்ந்து சினிமா துறையிலதான் வேலை செய்யணும்னு ஆசைப்பட்டாரு. பி.காம் படித்தவர், எதேச்சையா மத்திய அரசின் ரயில்வே துறையில துணை ஆய்வாளரா வேலைக்குப் போக வேண்டிய சூழல்.  வாய்ப்பு கிடைச்சா சினிமா துறையில சேர்ந்திடலாம்னு காத்திருந்தார். ஒருமுறை ரெயில்ல போயிட்டு இருந்தப்போ, கன்னட இயக்குநர் புட்டண்ணா கனகலை சந்திச்சு ரெண்டு பேரும் நண்பர்களானாங்க. அப்படியே சினிமா துறையில கொஞ்சம் கொஞ்சமா கவனம் செலுத்த ஆரம்பிச்சாரு. 'பரசக்கே கண்ட தின்மா'ங்கிற கன்னடப் படத்துக்கு கதை எழுதி அந்த படமும் பெரிய ஹிட் ஆச்சு. பின்னர் அந்த கதை, தமிழ்ல 'ரோசாப்பூ ரவிக்கைக்காரி'யா வெளியாகி ஹிட் ஆச்சு. ரயில்வே வேலையில லீவ் போட்டுட்டு சினிமாவுல கவனம் செலுத்தினா, மத்தவங்க தப்பா நினைப்பாங்களோன்னு நினைச்சு அந்த வேலையை விட்டுட்டாரு.
குடும்பத்தினருடன் நடிகர் வினுச்சக்ரவர்த்தி
தொடர்ந்து முழு நேரமா சினிமாவுல மட்டும் கவனம் செலுத்தியவர், 'வண்டிச்சக்கரம்' படத்துக்கு கதை எழுதினதோடு, அதுல நடிக்கவும் செய்தாரு. அந்தப் படத்துல, நடிகை சில்க் ஸ்மிதாவை அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து ஆயிரத்துக்கும் அதிகமான படங்கள்ல குணசித்திரம், வில்லன், நகைச்சுவைன்னு எல்லாவிதமான கதாபாத்திரங்கள்லயும் நடிச்சாரு. சினிமா துறையில தனக்குன்னு ஒரு அடையாளம் கிடைக்க, அப்பா நிறைய கஷ்டநஷ்டங்களை சந்திச்சிருக்காரு. 'இந்த துறையில நிறைய அவமானங்களைச் சந்திக்கணும். இன்னிக்கு மதிக்கிறவங்க, நாளைக்கு மதிக்க மாட்டாங்க. அதனால என்னோட இந்த சினிமா துறை போகட்டும். எனக்கு அடுத்து நம்ம குடும்பத்துல வேற ஒருத்தரும் சினிமா துறைக்குள்ள வரக்கூடாது. அதனால என்னோட ரெண்டு பிள்ளைங்களும் நல்லா படிக்கணும். படிப்புக்கு ஏத்த வேலையோட நல்லபடியா வாழ்க்கையில செட்டில் ஆகணும்'னு எங்களை நல்லபடியா படிக்க வெச்சாரு. படிச்சு முடிச்சதும் என்னையும், தம்பியையும் வெளிநாடுகளுக்கும் வேலைக்கு அனுப்பினாரு.
எந்த ஊருக்கு ஷூட்டிங் போனாலும் அங்க போனதும் உடனே வீட்டுக்கு போன் பண்ணிச் சொல்லுவாரு. அடிக்கடி போன் பண்ணி, வீட்டுல இருக்குற எல்லோரைப் பத்தியும் விசாரிச்சுகிட்டே இருப்பாரு. குறிப்பா, ஷூட்டிங் போன இடத்துல கிடைக்கும் சிறப்பான உணவுகளை மறக்காம வாங்கிக்கிட்டு வருவாரு. எந்த நேரமா இருந்தாலும் வீட்டு வந்த உடனே, முதல் வேலையா அதை எங்களுக்கு சாப்பிடக் கொடுப்பாரு. கிழிஞ்சுப்போன ஒரு தோசை சுட்டுக்கொடுத்தாலும், அதை இன்முகத்தோட அணுகி 'சூப்பரா இருந்துச்சுமா'ன்னு பாராட்டிப் பேசுவாரு. உற்சாகப்படுத்தியே காரியத்தைச் சிறப்பா செய்ய வைப்பாரு. செல்லம் கொடுக்குற அதே நேரம் நல்லா படிக்கலைன்னா மட்டும், கண்டிப்போட நடந்துக்குவாரு. 
சினிமாவுல அதிகமா வில்லன் கதாபாத்திரத்துல நடிச்சாலும், அவர் நிஜ வாழ்க்கையில ரொம்பவே பாசிட்டிவான குணம் கொண்டவர். முடிஞ்ச வரைக்கும் பொறுமையாகத்தான் எல்லோரிடமும் பேசுவாரு. ஒருகட்டத்துக்கு மேலதான் கொஞ்சம் கோபப்படுவாரு. மத்தவங்களுக்கு தெரியாத விஷயம், அவர் நல்லா பெயின்ட்டிங் பண்ணுவாரு; பாட்டுப் பாடுவாரு. ஓய்வே இல்லாம கதை எழுதிகிட்டோ அல்லது கதை சொல்லிகிட்டே இருப்பாரு. எங்களோட நல்லாவே ஷட்டில்காக் விளையாடுவாரு. 
குடும்பத்தினருடன் நடிகர் வினுச்சக்ரவர்த்தி
`உங்களுக்குன்னு தனி அடையாளத்தோட இருக்கணும். எந்த சூழல்லயும், 'நான் இன்னாரோட பொண்ணு, பையன்'னு நீங்க சொல்லிக்கக்கூடாது'னு சொல்லி வளர்த்தாரு. 'ரோட்டுல நடந்து போனாக்கூட, எங்கேயாச்சும் சாலையோரமா நிண்ணு ஏதாச்சும் வாங்கிச் சாப்பிட்டாக்கூட யாராச்சும் போட்டோ எடுத்துடுவாங்களோ'ன்னு பயப்படுறது என்னோட போகட்டும். நீங்க சுதந்திரமா இருக்கணும்னு ஆசைப்படுவாரு. அதன்படியே எங்கள எந்த ஒரு சினிமா ஷூட்டிங் மற்றும் நிகழ்ச்சிகளுக்கும் அழைச்சுகிட்டுப் போனதே கிடையாது. அதனாலேயே எங்களுக்கும் சினிமா மீது பெரிய ஆர்வம் இல்லாம போயிடுச்சு." என்பவர், அப்பா சினிமா மீது வைத்திருந்த பற்றுக்கு உதாரணம் சொல்கிறார்...
" உடம்பு சரியில்லாம படுக்கையில இருந்தப்பகூட, டி.வி-யில படம் பார்க்கும்போது 'இந்த ரோல்ல நான் நடிச்சிருந்தா ரொம்பவே நல்லா இருந்திருக்கும். எனக்கு மட்டும் உடம்பு நல்லாயிருந்தா இன்னும் நடிச்சுகிட்டே இருப்பேன்'னு சொல்லிகிட்டே இருப்பாரு. கொஞ்ச நாளைக்கு முன்னாடி உடம்பு சரியில்லாம ஹாஸ்பிட்டல்ல அப்பாவை அட்மிட் பண்ணியிருந்தோம். டாக்டர்ஸ் நிறைய முயற்சி செஞ்சும், ஊசிபோட ஒத்துழைப்பு கொடுக்காம இருந்தாரு. 'வண்டிச்சக்கரம் படத்தை ரீமேக் செய்றாங்களாம். சிவகுமார் அங்கிள் நடிச்ச கேரக்டர்ல சூர்யா சாரும், நீங்க நடிச்ச கேரக்டர்ல சிவகுமார் அங்கிளும் நடிக்கிறாங்களாம். அதுக்காக உங்களப் பார்த்து கதைப் பேச சிவகுமார், சூர்யா ரெண்டு பேருமே ஒரு மணி நேரமா வெளியே வெயிட் பண்றாங்க. நீங்க ஊசிபோட்டுகிட்டா, உடனே உங்களப் பார்க்க உள்ளே வருவாங்க'ன்னு ஒரு பொய் சொன்னேன். அடுத்த கணமே, ஊசி போட ஒத்துழைப்புக் கொடுத்தாரு. `அவங்கள உடனே கூப்பிடு'ன்னு சொன்னாரு. சும்மா வெளியே போயிடுவந்து, 'நேரமாச்சுன்னு திரும்பி போயிட்டாங்க. மூணு நாள் கழிச்சு வர்றதா சொல்லியிருக்காங்க'ன்னு மறுபடியும் பொய் சொன்னேன். `சரிம்மா... அவங்க வரும் நாளப்போ ஞாபகப்படுத்து. ஷேவிங் பண்ணிகிட்டு ரெடியாகிடுறேன்'னு சரியா பேச முடியாத சூழல்லயும் கஷ்டப்பட்டு பேசினாரு. 
உயிரோட இருந்தப்போ எங்கள நல்லபடியா பார்த்துகிட்டவரு, இப்போ இறந்தும் சாமியா எங்களப் பார்த்துக்குவாருன்னு நம்புறேன்'' என உருக்கமாகப் பேசுகிறார், சண்முகப்பிரியா.

Monday, April 24, 2017


‘கையொன்று செய்ய, விழியொன்று நாட’- பட்டினத்தார் பாடல் (Post No.3846)

by Tamil and Vedas
e28ad-seven-layers-of-the-aura
Written by London swaminathan
Date: 24 APRIL 2017
Time uploaded in London:- 7-59 am
Post No. 3846
Pictures are taken from various sources; thanks.

தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் உலகத்தில் வேறு எந்த நூல்களிலும் காண முடியாத ஒரு கருத்து காணப்படும். அதாவது,  மனம், மொழி, மெய் (உடல்) மூன்றிலும் தூய்மையுடன் இருத்தல். சம்ஸ்கிருதத்தில் இதை மனோ, வாக், காயம் என்பர். திரிகரண சுத்தி என்றும் சொல்லுவர். ஒருவருக்கு இது இருக்குமாகில் அவர் அபூர்வ சக்தி பெறுவார். மாய மந்திரங்களைச் செய்ய முடியும். இந்த மூன்று உறுப்புகளிலும், கோபம், காமம், லோபம் (பேராசை) இவைகள் இல்லாவிட்டால் அபூர்வ சக்திகள் தானாகவே வரும்; விலங்குகளும் அவருக்குக் கட்டுப்படும். இதைப் பல அடியார்களின் வாழ்வில் காண்கிறோம்.

இதைப் பட்டினத்தார் அழகாகப் பாடுகிறார்:

கையொன்று செய்ய விழியொன்று நாடக் கருத்தொன்று எண்ணப்
பொய்யொன்று வஞ்சக நாவொன்று பேசப் புலால் கமழும்
மெய்யொன்று சாரச் செவியொன்று கேட்க விரும்பும் யான்
செய்கின்ற பூசை எவ்வாறு கொள்வாய் வினை தீர்த்தவனே
1df6f-shiva2bbronze2bcolor
பட்டினத்தடிகள் இப்படிப் பாடினாலும் இது நம்மைப் போன்ற சாதாரண மக்களின் நிலையைக் குறிப்பதேயன்றி அவர் அப்படி திரிகரண சுத்தி இல்லாமல் இருந்துவிட்டதாக நாம் நினைத்துவிடக் கூடாது. அது  அவரது முன் பகுதி வாழ்க்கையில் நடந்திருக்கலாம்..

பிற்கால வாழ்வில் அவர் மெய்யுணர்வு பெற்றவரானதாலேதான் இப்படிப்பட்ட அற்புதமான பாக்கள் வெளிவந்தன. ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்,  இன்றும் நாம் படிக்கிறோம்.


இதே கருத்தை நீதி வெண்பா பாடலிலும் காணலாம்:-

மனம் வேறு சொல் வேறு மன்னு தொழில் வேறு
வினை வேறு பட்டவர்பால் மேவும் -- அனமே
மனமொன்று சொல்லொன்று வான் பொருளும் ஒன்றே
கனமொன்று மேலவர் தங் கண்

--நீதி வெண்பா

பொருள்:-
அனமே= அன்னம் போன்ற நடையுடைய அழகியே! கேள்!
வினை வேறுபட்டவர்பால்= நல்ல செய்கை இல்லாத கீழோரிடத்தில்
மனம் வேறு சொல் வேறு மன்னு தொழில் வேறு மேவும் = மனமும் சொல்லும் செயலும் வேறு வேறுபட்டதாய் இருக்கும்
கனம் ஒன்று மேலவர் தங்கண் = பெருமை மிக்க பெரியோரிடத்தில்
மனமொன்று சொல்லொன்று வான் பொருளும் ஒன்றே = மனமும், சொல்லும், செயலும் ஒன்றேயாம்.

தமிழில் இதற்கு அழகான மூன்று சொற்கள் உண்டு:
வாய்மை = வாயினால் தீமை செய்யாதிருத்தல்
உண்மை = உள்ளதாற் பொய்யாதொழுகுதல்
மெய்மை = உடலினால் தீங்கு செய்யாதிருத்தல்.

Sunday, April 23, 2017

மகிழ்ச்சி இருந்தால்... மனம் மலரும்!


Posted Date : 07:35 (28/02/2017)

Last updated : 10:26 (28/02/2017)

மகிழ்ச்சி இருந்தால்... மனம் மலரும்! #MorningMotivation



மகிழ்ச்சியாக இருப்பதைவிட, சிறந்த உந்துசக்தி இல்லைஎன்கிறார்கள் தன்னம்பிக்கைப் பேச்சாளர்கள்.  நாம் மகிழ்ச்சியாக  இருந்தாலே, நம்மைச் சுற்றியுள்ளவர்களும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். ஆகையால், மகிழ்ச்சி தராத பழக்கவழக்கத்தையும் எண்ணங்களையும் மாற்றிக் கொண்டால், அதுவே ஒரு மகிழ்ச்சிதானே. அப்ப, எந்தெந்த குணங்களை எப்படி மாற்றிக்கொண்டால் மகிழ்ச்சி உண்டாகும் எனத் தெரிந்துகொள்வோம்.

எப்பவுமே  பர்ஃபெக்ஷ்னோடு இருக்க சிலர் விரும்புவார்கள். அதற்கு, சந்தோஷம் முக்கியமல்ல என்று நினைப்பார்கள். சந்தோஷமில்லாத வாழ்க்கை எப்படிங்க பர்ஃபெக்ஷ்னா இருக்கும்? உள்ளுக்குள் மகிழ்ச்சி இல்லையென்றால்எவ்வளவு செயல்கள் நடந்தாலும் உங்களுக்குத் திருப்தியாகவே இருக்காது. ஒன்று நடந்து முடிவதற்கு முன்னமேயே உங்களைப் பின்வாங்கச் சொல்லும் அந்த நிலையைச் சமாளிக்க, எப்பொழுதுமே திருப்தியாக இருக்கப் பழகிக் கொள்ளுங்கள். ஒரு செயல் இவ்வளவு நேரத்தில் முடிக்கப்பட வேண்டுமென்று கால வரையறையை உருவாக்கிக்கொள்ளுங்கள். வேலை முடியும்போது, தானாக ஒரு திருப்தி உங்கள் மனதில் குடிகொள்ளும்.
சிலர், சந்தேகக் கடலிலேயே மூழ்கிக்கிடப்பார்கள். இதெல்லாம் வாழ்க்கையை அழகுசெய்யாதுங்க. அதனால நல்ல எண்ணங்களின் ஆதிக்கத்தால் அவற்றைத் தகர்த்தெறியுங்கள். அப்போது, ஒரு புது உலகம் உங்களுக்குக் காட்சியளிக்கும்
இதற்கு நீங்கள் நல்லெண்ணம் உடையவர்களோடு பழகுதல், பிடித்த பாடல்களைக் கேட்டல்,  புத்தகம் படித்தல் போன்றவற்றைச் செய்யலாம்.
பழையன கழிதலும் புதியன புகுதலும்' என்று நம் முன்னோர் சொன்னதை நாம் நன்கு அறிவோம். பழைய நிகழ்வுகள் சில, நமக்கு மிகுந்த வலியை ஏற்படுத்தி இருக்கும். எப்போதுமே அதை நினைத்துக் கொண்டிருந்தால், புதிய பாதைகள் உருவாகாது ஃப்ரெண்ட்ஸ். இன்னொன்று, எதிர்காலம் பற்றி இப்படி நடக்குமோ அப்படி நடக்குமோ என்ற பயமும் சிலருக்கு உண்டு. இவற்றைத் தவிர்க்க, நாளை எப்படி இருக்க வேண்டும் என்பதை நேற்று நடந்ததில் இருந்து கற்றுக்கொள்ளும்படி நமது நடப்பு நிகழ்வுகளை அமைத்துக்கொள்ள வேண்டும். நம்முடைய வாழ்வை நாம்தான் அனுபவிக்கிறோம்.அதற்குப் பிறரோடு ஏன் நம்மை ஒப்புமைப்படுத்திப் பார்க்க வேண்டும்அப்படி நமது வாழ்வை பிறரோடு ஒப்பிடுவது, நமக்குள் ஒரு சின்ன பொறாமையை, தாழ்வு மனப்பான்மையை அல்லது சில சமயம் உயர்வு மனப்பான்மையைக்கூட உருவாக்கும்அதெல்லாம் எதற்கு? அதற்குப் பதிலாக, உங்களை உங்களோடு ஒப்பிடுங்களேன். அப்புறம் பாருங்கநீங்கள் பட்டாம்பூச்சியாய்ப் பறப்பீர்கள். ‘நேற்றைக்கு 3 கி.மீ வாக்கிங் போனேன். இன்னைக்கு 4 கி.மீ போயிருக்கேன். சபாஷ்டாஎன்று நீங்களே உங்களை ஒப்பிட்டு, பாராட்டி - அல்லது - சீர்தூக்கிப் பார்த்துக் கொள்ளுங்கள்.எப்பவும் தீய செயல்கள் மீது கவனம் செலுத்திக்கொண்டிருக்கக் கூடாதுஎல்லா இடங்களிலும் குறை கண்டுபிடித்துக்கொண்டே இருந்தால், அது சரியாக இருக்காது. அதனால், அதையெல்லாம் கொஞ்சம் ஒதுக்கி வைத்துக் கொள்வோம். பிறர் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்பதில் எல்லாம் கவனம் செலுத்த வேண்டாம். அது, நமது வளர்ச்சியைத் தடுக்கும். ஆகையால், அதையெல்லாம் விட்டுவிடுங்கள். வாழ்க்கையைக் கடினமான முறையில் சிலர் எதிர்கொள்வார்கள். இது, மன அழுத்தத்தை உருவாக்கும். இதற்கெல்லாம் காரணம் அவரவர்தான். எதுவாக இருப்பினும் எதிர்கொள்வோம் எனும் மனநிலையில் தன்னம்பிக்கையோடு அணுகுவோம்

மகிழ்ச்சியா இருந்தாலே வெற்றி நம்ம பக்கம்தான் பாஸ்!   


Friday, April 14, 2017


இளமையை நீட்டிக்கும் ஆரோக்கியத்தை தக்க வைக்கும்... திருமூலரின் எளிய வழிமுறைகள்..!

"ணவே மருந்து" என்பது அந்தக் காலம். "மருந்தே உணவு" என்பது இந்தக் காலம். ஒரு பக்கம் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தால் எத்தகைய கொடுமையான நோயையும் குணப்படுத்தமுடியும் என்னும் நிலை உள்ளது. மறு பக்கம் மருத்துவமனைக்குச்  செல்லும் நோயாளிகளின் எண்ணிக்கை என்னவோ அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. நோயை நீக்கி இன்பத்தைப் பெறுவதற்கு என்ன செய்யலாம் ? என்றும் இளமையோடு வாழவும், ஆரோக்கியமான தலைமுறையை உருவாக்கவும் திருமூலர் கூறும் எளிய வழியைப் பின்பற்றலாம்.
திருமூலர்

திருமூலர், முதலில் உடம்பைக் குற்றமுடையது என்று எண்ணியிருந்தார். பின்பு இறைவன் குடியிருக்கும் கோயில் தான் உடம்பு என்பதை உணர்ந்து, அதனைப் பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வைப் பெற்றதாக அவரே கூறியிருக்கிறார். மருத்துவமுறை, பார்வதி தேவி பரமசிவன் மூலம் நந்தி தேவருக்கு சொல்லப்பெற்று, அவர் மூலம் திருமூலருக்கு சொல்லப்பெற்றதாகப் புராணங்கள் கூறுகின்றது. சரி, நோய் மற்றும் மருத்துவமுறையைப் பற்றி திருமூலர் கூறுவதைக் காண்போம்...
* உடலில் உயிர் இருக்க வேண்டுமென்றால் புணர்ச்சியைக் குறைத்து உணவை அளவோடு எடுத்துக்கொள்ள வேண்டும். "அளவான உணவு" என்பது, உணவு அரை வயிறு, நீர் கால் வயிறு மற்றும் காற்று கால் வயிறு என்பதே அந்தக் கணக்கு . 
உணவு

* மாலை வேளையில் யோகம் பயின்றால் உடலிலுள்ள கபம் அகலும். மதிய வேளையில் யோகம் பயின்றால் கொடிய வாதம் நோய் நீங்கும்.காலை வேளையில் யோகம் பயின்றால் உடலிலுள்ள பித்தம் நீங்கும் நரை, திரை மாறும்.உடம்பில் வாதம் மிகுந்தால், எரிச்சல் உண்டாகும். கை, கால், விலாச் சந்து, இடுப்புச் சந்துகளில் மிகுதியான வலி ஏற்படும் என்று கூறியுள்ளார்.யோகத்தை முறையாகப் பயின்றால் வாதம் பித்தம் , சிலேத்துமம் சமப்பட்டு, உடல் இளமை பெறும் என்பதைத் திருமந்திரத்தில் கூறியுள்ளார்.
யோகா

*சுவாசம் வாய் வழியாக வந்தால் அது மரணத்திற்கான அறிகுறி. சுவாசம் ஆழமானதாகவும் நீளமானதாகவும் இருக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். அதற்குச் சிறந்த வழி பிராணாயாமம். அதாவது , "பிராணனைக் கட்டுப்படுத்தி நெறிப்படுத்துதல்" என்று பொருள். மூச்சுக்காற்றின் இயக்கத்தை நெறிப்படுத்தி இயக்குவதன் மூலம் ஆயுளைக் கூட்டியும், குறைத்தும் மாற்றி நிறுத்த முடியும். மூச்சுப்பயிற்சியில் தேர்ந்தவர்களின் முகம் மலர்ந்திருக்கும், மனம் லேசாகும்,கண்களில் ஒளி இருக்கும்
பிராண இயக்கத்தைக் கொண்டே ஆயுள் கணக்கிடப்படுகிறது. ஆனால் ஒவ்வொரு விரற்கடையளவு சுவாசம் அதிகரிக்க அதிகரிக்க ஆயுள் அதற்கேற்ப குறையும் என்பதைக் குறிப்பிட்டுள்ளார்.  
ஆறு விரற்கடை அளவு சுவாசம் வெளியேறினால் 80 ஆண்டுகள் வாழலாம்.
ஏழு விரற்கடை அளவு சுவாசம் வெளியேறினால் 62 ஆண்டுகள் வாழலாம்.
எட்டு விரற்கடை அளவு சுவாசம் வெளியேறினால்  50 ஆண்டுகள் வாழலாம்.
ஒன்பது விரற்கடை அளவு சுவாசம் வெளியேறினால் ஆயுட்காலம் முப்பதாகும்.
10 விரற்கடை அளவு சுவாசம் வெளியேறினால் ஆயுட்காலம் 28 ஆண்டுகள் ஆகும்.
15 விரற்கடை அளவு சுவாசம் வெளியேறினால் ஆயுட்காலம் இருபத்தைந்து.
*திருமூலர், கருவின் தோற்றம், வளர்ச்சி, ஆண் பெண் குழந்தைப் பிறப்பு, ஊனத்துடன் குழந்தைப் பிறப்பதற்கான வாய்ப்பு முதலிய செய்திகளையும் திருமந்திரத்தில் கூறியுள்ளார். உதாரணமாக, உறவின் போது ஆணிடம் சுவாசம் வலப்பக்கம் இருக்குமாயின் குழந்தை ஆணாக இருக்கும். ஆணிடம் சுவாசம் இடப்பக்கம் இருக்குமாயின் பெண் குழந்தைப் பிறக்கும். ஆண் பெண் இருவருக்கும் நல்ல முறையில் சுவாசம் ஓடினால் அழகான, அறிவான குழந்தைப் பிறக்கும் இதுபோன்றக் கருத்தை இப்பாடலில் கூறியுள்ளார்.
"குழவியும் ஆணாம் வலத்தது வாகில்
குழவியும் பெண்ணாம் இடத்தது வாகில் "
திருமூலர்
தாய் வயிற்றில் மலம் மிகுந்தால், குழந்தை மந்தமாகப் பிறக்கும்.
"மாதா உதரம் மலமிகில் மந்தனாம்
மாதா உதரம் சலமிகில் மூங்கையாம்
மாதா உதரம் இரண்டொக்கில் கண்ணில்லை
மாதா உதரத்தில் வந்த குழவிக்கே"
அவர் கூறும் கருத்தில் எத்தகைய உண்மை உள்ளது என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
* மேலும் உடலிலுள்ள வாயுக்களில் ஒன்றான "தனஞ்சயன்" என்னும் வாயுவினால் கால்வாதம், கூன், சிரங்கு முதலான நோய்கள் உருவாகும். "கூர்மன்" என்னும் வாயுவினால் கண்ணில் வீக்கம், பூ விழுதல் போன்ற கண் நோய்கள் வரும் என்றும் கூறியுள்ளார்..
திருமந்திரத்தில் குறிப்பிடாத மருத்துவக் குறிப்புகளே இல்லை. இதை மனதில் நிறுத்தி "திரு மந்திரம்" போன்ற பொக்கிஷ நூல்களைப் போற்றிப் பாதுகாப்பதுடன், நேரம் கிடைக்கும் போது படிக்கலாம்.