Sunday, May 28, 2017

ஒரு வரி... ஒரு நெறி! - 14 - “பாடத்தை ரொம்பப் படிக்காதே... படிச்ச முட்டாள் பத்துப் பேரை தினமும் பார்க்கிறேன்!


இயக்குநர் கரு.பழனியப்பன்
ள்ளிக்காலத்தில் ஒவ்வொரு தேர்வின் போதும் அப்பா எனக்குச் சொல்கிற அறிவுரை இது. நான் மிகவும் சராசரி மாணவன். தேர்வுக்காலத்தில் கொஞ்சம் கூடுதலாகப் படிக்க முயல்வேன். அப்போதெல்லாம் அப்பா இந்த வரியைச் சொல்வார். ‘‘முதல் மதிப்பெண் எல்லாம் வேண்டாம்... ஐம்பது மதிப்பெண் வாங்கு, போதும்’’ என்பார். இந்த வாக்கியம் அப்பாவுடையது அல்ல. அவருடைய அப்பாவிடமிருந்து அவர் கடன் வாங்கியது. ‘‘படிச்சவன் என்ன செய்வான்? விசிறிக்குக் கீழே உக்காந்து வெள்ளைத் தாளைக் கறுப்பாக்குவான்... வேறென்ன தெரியும் அவனுக்கு?” என்று தாத்தா சொல்வதை நானும் கேட்டிருக்கிறேன். இந்த உலகத்தில் பிழைப்பதற்கான, சிந்தித்துச் செயல்படுவதற்கான அறிவைப் பள்ளிக்கூடப் படிப்பு தராது என்ற நம்பிக்கை, தாத்தா காலத்தில் இருந்து எங்கள் குடும்பத்திலிருக்கிறது. 

அதேநேரத்தில் தினமும் ஒருமுறையாவது என்னை அழைத்து, ‘‘இன்று என்ன படித்தாய்?’’ என்று கேட்பார் அப்பா. அவரைப் பொறுத்தவரைப் படிப்பு என்பது, பாடப்புத்தகத்தைப் படிப்பதல்ல. ‘‘பிற புத்தகங்களைப் படிக்க வேண்டும். அதில்தான் வாழ்க்கையின் திறப்பு இருக்கிறது. எல்லாவிதமான புத்தகங்களையும் படிக்கிறபோதுதான் சிந்தனை மேன்மையடையும். சிந்தனை மேன்மையடைகிற போதுதான் படைப்புத்திறன் உருவாகும்’’ என்பார். இதை நான் பிற்காலத்தில் அனுபவபூர்வமாக உணர்ந்தேன்.
அப்பா குறைந்த காலமே பள்ளிக்கூடம் போனார். ஆனால், வீடு நிறைய புத்தகங்கள் இருக்கும். அவ்வளவு வாசிப்பார். வீடு, எப்போதும் உரையாடல் களமாக இருக்கும். நாங்களும் அவற்றில் பங்கேற்றுப் பேசுவோம். என் வீடு மட்டுமல்ல... 80-களின் முற்பகுதியில் எல்லா வீடுகளுமே உரையாடல் மையங்களாகத்தான் இருந்தன. சினிமா பற்றி, அரசியல் பற்றி மக்கள் பேசுவார்கள். அதனால் அவை இரண்டுமே நன்றாக இருந்தன. 

இன்று வீடுகளில் உரையாடலே இல்லை. அப்படியே பேசினாலும் பிள்ளைகளைத் தனிமைப்படுத்தி விடுகிறோம். ‘‘ஏன் வாயைப் பாத்துக்கிட்டிருக்கே... போய்ப் பாடப்புத்தகத்தைப் படி’’ என்கிறோம். வீடுகளில் அனைவரும் ஒன்று சேர்வது, டி.வி பார்க்க மட்டும்தான். டி.வி-யை நிறுத்தினால் ஆளுக்கொரு மொபைல்போனை வைத்துக்கொண்டு தனிமையில் ஆழ்ந்து விடுகிறோம்.  

பள்ளிக்கூடத்தில் என்கூடப் படித்த நண்பன், நன்றாகப் படிப்பான். ப்ளஸ் டூவில் 1200க்கு 1120 மார்க் வாங்கினான். பிற்காலத்தில் நான் சினிமாவுக்கு வந்துவிட்டேன். அவன் அமெரிக்கா போய்விட்டான். அண்மையில் என்னைச் சந்திக்க வந்தான். ஏவி.எம் வளாகத்தில் ரெக்கார்டிங் ஸ்டூடியோவில் நான் இருந்தேன். அடையாளங் களைச் சொல்லி வரச்சொன்னேன். ஏவி.எம் வாசலிலிருந்து உள்ளே வருவதற்குள், வழி கேட்டு எனக்கு ஐந்து முறை போன் செய்துவிட்டான். அவனது படிப்பு, அவனைச் சக மனிதர்களோடு பேசவிடாமல் தடுத்திருக்கிறது. அருகில் நிற்கிற ஒரு வாட்ச்மேனிடமோ, வழியில் தென்படுகிற ஒரு ஜூனியர் ஆர்ட்டிஸ்டிடமோ கேட்டிருந்தால், அழகாக வழிகாட்டி இருப்பார்கள். மனிதர்கள் மீது அச்சத்தையும் தயக்கத்தையும்தான் அவனது படிப்பு அவனுக்கு வழங்கியிருக்கிறது. 

சுயமாகச் சிந்திக்கிற, முடிவெடுக்கிற தலைமுறை இப்போதில்லை. அப்பா சொன்னார் என்பதற்காகப் படிக்கப்போகிறார்கள். அம்மா சொன்னதற்காகத் திருமணம் செய்து கொள்கிறார்கள். பொண்டாட்டி சொன்னதற்காக வீடு வாங்குகிறார்கள். பக்கத்து வீட்டுக்காரன் வாங்கியதைப் பார்த்து, கார் வாங்குகிறார்கள். தனக்கு என்ன தேவை என்று சிந்திக்கும் ஆற்றலைக்கூடக் கல்வி வழங்குவதில்லை என்பதுதான் உண்மை. 

தாத்தா அப்பாவுக்குச் சொல்லி, அப்பா எனக்குச் சொன்னதை நான், இப்போது என் பிள்ளைகளுக்குச் சொல்கிறேன். பள்ளி தவிர வேறு எங்கே சென்றாலும் அவர்கள் கையில் ஏதாவது ஒரு கதைப்புத்தகம் இருக்கிறது. என் மகன் ஒன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது பள்ளிக்கூடத்தில் பெற்றோர் - ஆசிரியர் சந்திப்பு நடந்தது. பிள்ளைகளிடம் ‘‘என்ன ஆக ஆசைப்படுகிறீர்கள்’’ என்று கேட்டார் ஆசிரியை.  ‘‘இன்ஜினீயர் ஆகணும்’’, ‘‘டாக்டர் ஆகணும்’’ என்று பிள்ளைகள் சொல்லிக்கொண்டே வந்தார்கள். என் மகன், ‘‘முடிவெட்டும் கடை வைக்கப்போகிறேன்’’ என்றான். எல்லோரும் அதிர்ச்சியாகப் பார்த்தார்கள். நானும், என் மனைவியும் சிரித்துக் கொண்டிருந்தோம். ‘‘பிள்ளைக்கு உயர்வான விஷயங்களைச் சொல்லிக் கொடுங்கள்... இல்லையென்றால் இதுவே விதையாக விழுந்துவிடும்’’ என்று எல்லோரும் பதறினார்கள். ‘‘இதுவும் உயர்வான விஷயம்தான். இதுவரை அவன் பார்த்த ஆட்களிலேயே, ‘தலையைத் திருப்பு’, ‘குனி’, ‘ஆடாதே’ என்று அவனை அதட்டுபவராக, அடக்குபவராக இருந்த உயர்வான மனிதர், முடி திருத்துபவர்தான். அதனால், எல்லோரையும் அதட்ட வேண்டுமெனில் நாமும் அந்த இடத்தை அடைய வேண்டும் என்று நினைக்கிறானோ... என்னவோ? முதலில் குழந்தை சுயமாகச் சிந்தித்து, தானாக எதையாவது பேசட்டும்...’’ என்று சொல்லிவிட்டு வந்தேன். 

பள்ளிப்படிப்பு முக்கியம்தான். ஆனால், அது அவர்களின் சிந்தனையைத் தூண்டுவதற்குப் பதிலாக முடக்குகிறது. தயவுசெய்து குழந்தை களுக்கு வாசிப்புப் பழக்கத்தை உருவாக்குங்கள். அதற்கு முன்னதாக நீங்கள் வாசிக்கப் பழகுங்கள்! குழந்தைகள் எல்லா செயல்களையும் உங்களைப் பார்த்தே செய்யப் பழகுகிறார்கள். அவர்கள் படித்த முட்டாள்கள் ஆகிவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். 

Saturday, May 27, 2017

கணவன் - மனைவி இடையே சச்சரவு தீர்க்கும் 10 வழிகள்!


கணவன் மனைவி
ணவன் மனைவி இடையில் தோன்றும் சிறுசிறு விவாதங்களும் பல சமயங்களில் சண்டையில் முடிகிறது. இருவரிடையேயான ஈகோ பிரச்னை விவாகரத்து வரையிலும் செல்கிறது. இத்தகைய  சண்டையைத் தவிர்ப்பதற்கான வழிமுறைகளை எடுத்துரைக்கிறார், மதுரையைச் சேர்ந்த  மனோதத்துவ நிபுணர் ராணி சக்கரவர்த்தி.

கணவன், மனைவி இருவருக்கும் ஒவ்வொரு விதமான விருப்பு வெறுப்பு, பழக்கவழக்கங்கள் இருக்கும் என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். `நிறை குறைகளோடு ஒருவரை ஒருவர் ஏற்றுக்கொள்வோம்' என்ற மனநிலைக்கு வரவேண்டும்.

* கடுமையான வார்த்தைகளால் ஒருவரை ஒருவர் திட்டிக்கொள்வது, துணைவரின் குடும்பத்தினரைக் குறை சொல்வது... கணவன் - மனைவி உறவில் பெரிய அளவில் விரிசல் ஏற்படுத்தும். இவற்றை அடியோடு தவிர்க்க வேண்டும். 

* கணவன் - மனைவி சண்டையில் மூன்றாவது நபர் நுழையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அப்படி நுழைந்தால் பிரச்னை வேறு வடிவம் எடுத்து பெரிதாகும். அந்த மூன்றாவது நபர் கணவர் அல்லது மனைவின் தாய், தந்தை, அண்ணன், அக்கா, நண்பர் என யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். எதுவாக இருந்தாலும் தங்களுக்குள் பேசித் தீர்வு காண முயல வேண்டும். 

* ஒருவர் கோபமாக சத்தம் போடும் நேரத்தில் மற்றவர் அமைதியாக இருந்துவிட்டாலே பாதி பிரச்னை குறைந்துவிடும். பல ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த விஷயங்களைப் பற்றி பேசிக்கொண்டே இருக்கக் கூடாது. 
கணவன் மனைவி
* ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் அன்பை வெளிப்படுத்தும்போதுதான் அது பல்கிப் பெருகும். அது சிறு சீண்டல்களாகவோ, பாராட்டாகவோ இருக்கலாம். `இந்த டிரெஸ் உனக்கு நல்லா இருக்கு', `இப்ப கொடுத்த காபி சூப்பர்!' என பாசிட்டிவ் கமென்ட் பகிர்ந்துகொள்வது நல்லது. 

* தினமும் குறைந்தது 10 நிமிடங்களாவது நேரில் மனம் திறந்து பேசிக்கொள்ள வேண்டும். அச்சமயத்தில் ஒருவர் சொல்வதை மற்றொருவர் நன்கு கவனித்துக் கேட்க வேண்டும். 

* பணம் சம்பந்தமான விஷயங்களில் இருவரும் பேசிவைத்துக்கொண்டு  வரவு - செலவை பராமரிக்க வேண்டும். இந்த விஷயத்தில் ஒளிவு மறைவு தேவையற்ற பிரச்னைகளை உருவாக்கும். 

* தவறு நேரும்போது மன்னிப்புக் கேட்கத் தயங்கக்கூடாது. அதே நேரம் சுயமரியாதையை முழுமையாக இழக்கக்கூடாது. விட்டுக் கொடுத்தல் என்பது இருவருக்கிடையே  சமமாக இருக்க வேண்டும். 

* இருவரும் தங்களுக்கென ஹாபி, நட்பு வட்டத்தை வைத்துக்கொள்ள வேண்டும். திருமணத்துக்குப் பிறகு அவற்றைத் தியாகம் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. 

* தம்பதியர் அவ்வப்போது ஒன்றாக ட்ரெக்கிங், ஜாக்கிங், சைக்கிளிங் போகும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். இருவரும் சேர்ந்து யோகா, பாட்டு என ஏதாவது கலையைக் கற்கலாம். இது அவர்களுக்கு இடையேயான அந்நியோன்யத்தை அதிகரிக்கும்.
 

Tuesday, May 23, 2017

அனைத்து வகை தோல் நோய்களுக்கும் அருமருந்தாகும் பூவரச மரம்!

பூவரசு இலையில் `பீப்பீ' செய்து ஊதி விளையாடிய அந்தப்பொழுதுகள் இன்றைக்கும் நினைவில் நிழலாடுகிறது. அதுமட்டுமல்ல 1978-ம் ஆண்டு வெளிவந்த `கிழக்கே போகும் ரயில்' படத்தில் இடம்பெற்ற `பூவரசம்பூ பூத்தாச்சு... பொண்ணுக்குச் சேதியும் வந்தாச்சு... காவேரி போல பொங்குற மனசு பாடாதோ?' என்ற பாடல் பட்டிதொட்டி எங்கும் ஒலித்தது. இன்றைக்கு அதுபோன்ற பாடல்களையும் கேட்க முடியவில்லை, அந்த பூவரச மரம் கூட நம்மால் பார்க்க முடிவதில்லை.
பூவரச மரம்
அன்றைய காலத்து கிராமத்துச் சிறுவர்களின் விளையாட்டுப்பொருளாக இருந்து வந்த பூவரசு மரம் கிணற்றுமேடுகளில் நிச்சயம் இடம்பெற்றிருக்கும். நீர் இறைக்கும் கமலையை இழுத்துவரும் மாடுகள் சோர்ந்து போகாமல் இருப்பதற்காக இதை நட்டு வைத்திருந்தார்கள். இந்த மரங்கள் ஆக்சிஜனை அதிகளவு உற்பத்தி செய்யும் மரங்களில் ஒன்று என்பதால் கிராமம்தோறும் காணப்பட்டன. இன்றைக்குக் கிணற்றில் நீரும் இல்லை, அவற்றிலிருந்து நீர் இறைக்கும் கமலைகள் மட்டுமல்ல மாடுகளும் இல்லை, அவை இளைப்பாறுவதற்காக நடப்பட்ட மரங்களும் இல்லை.
அதுமட்டுமல்ல சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் மார்கழி மாதத்தின் காலைப்பொழுதுகளில் நம் வீட்டுப்பெண்கள் தமிழ்க் கலாசாரத்தின் அடையாளங்களில் ஒன்றாகக்கருதப்படும் கோலமிடுதல் முக்கியமானது. வீடுகளின் முற்றங்களில் விழுந்து கிடக்கும் இலைதழைகள் மற்றும் குப்பைகளை அகற்றி மாட்டுத்தொழுவத்துக்குப் பின்புறம் இருக்கும் உரக்குழியில் போடுவார்கள். பிறகு மாட்டுத்தொழுவத்தில் இருந்து சாணம் எடுத்து வந்து நீர் விட்டுக் கரைத்துத் தெளித்து மாக்கோலம் இட்டு அதன் நடுவே சாணத்தில் பிள்ளையார் பிடித்து அதில் பூவரசம் பூவை செருகி வைப்பார்கள். இது மரபின் மருத்துவம் என்றால் அது மிகையாகாது.
பூவரசம் மரத்தின் தாவரவியல் பெயர் தெஸ்பீசியா பாபுல்னியா (Thespesia poulnea (L) என்பதாகும். இதை கல்லால் பூப்பருத்தி என்றும், புவிராசன், அர்த்தநாரி, ஈஸ்வரம், பம்பரக்காய், பூளம் என்ற வேறு பெயர்களிலும் அழைப்பார்கள். சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற நூல்களிலும் பூவரசு மரம் பற்றி குறிப்பிட்டிருக்கிறது. இலங்கையின் யாழ்ப்பாணம் மாவட்டத்தின் தென்மேற்குப்பகுதியில் உள்ள ஏழு தீவுகளில் ஒன்றான புங்குடுதீவில் பூவரசு மரங்கள் நிறைந்த காடு இடம்பெற்றிருக்கிறது.
இத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க பூவரசு மருத்துவக்குணம் நிறைந்தது ஒரு மரமாகும். இதன் இலை, பூ, காய், விதை, பட்டை, வேர் என எல்லாவற்றுக்கும் மருத்துவக்குணங்கள் உண்டு. பூவரசு இலையை அரைத்து சொறி, சிரங்கு, தேமல் போன்றவற்றுக்குப் பற்று போட்டு வந்தால் பலன் கிடைக்கும். பூவரசு மரத்தின் காய்களை அம்மி அல்லது கருங்கல்லில் உரசினால் வரக்கூடிய மஞ்சள் நிறப்பாலை தேமல் உள்ள இடங்களில் தடவி வந்தால் நாளடைவில் தேமல் அகலும். படர்தாமரை என்று சொல்லக்கூடிய தோல் நோயும் குணமாகும். கை-கால் மூட்டு வீங்கியிருந்தாலும் இதே மஞ்சள் நிறப்பாலை பூசினால் குணம் கிடைக்கும்.
பூவரச மரம்
பூவரசு மரத்தின் வேர்ப்பட்டையை நீர் விட்டு நீர் சேர்த்து கொதிக்க வைத்து அதில் 50 மில்லி அளவு எடுத்து 10 மில்லி விளக்கெண்ணெய் சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் பேதியாகும். இதன் மூலம் தோல் நோய்களிலிருந்து விடுதலை கிடைக்கும். செதில் செதிலாக உதிரக்கூடிய சொரியாசிஸ் நோய்க்கு பூவரசம்பட்டை நல்ல மருந்தாகும். அதாவது, 100 ஆண்டுகள் ஆன பூவரசு மரத்தின் பட்டையுடன் காய், பூ சேர்த்துப் பொடியாக்கி காலை, மாலை ஒரு டேபிள்ஸ்பூன் வீதம் சாப்பிட்டு வந்தால் பலன் கிடைக்கும். முற்றிய மரத்தின் பட்டையை இடித்துச் சாறு எடுத்து அதை வாயில் வைத்துக் கொப்புளிப்பதோடு உள்ளுக்குள் விழுங்கி வந்தால் உதட்டில் வரக்கூடிய வெண்தேமல் சரியாகும்.
சர்க்கரை நோயாளிகளுக்குப் புண் ஏற்பட்டால் அது ஆறாமல் மிகுந்த பிரச்னையை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. அப்படிப்பட்ட சூழலில் பூவரசம்பட்டையை நீர் விட்டுக் கொதிக்க வைத்து சூடு ஆறியதும் கழுவி வந்தால் பலன் கிடைக்கும். கழுத்தில் அணியக்கூடிய செயின், கைக்கடிகாரம் போன்றவற்றை அணிவதால் சிலருக்குத் தோலில் கருமை நிறம் ஏற்படும். அப்படிப்பட்ட சூழலில் பூவரசம் பூவின் இதழ்களை நல்லெண்ணெய் விட்டு காய்ச்சி சூடு ஆறியதும் கருமை நிறத்தின் மீது பூசி வந்தால் கரும்படலம் நாளடைவில் மறையும். அல்சைமர் எனும் ஞாபகமறதி நோய்க்கும் சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது என்று சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர்.

அனைத்து வகை தோல் நோய்களுக்கும் அருமருந்தாகும் பூவரச மரம்!

பூவரசு இலையில் `பீப்பீ' செய்து ஊதி விளையாடிய அந்தப்பொழுதுகள் இன்றைக்கும் நினைவில் நிழலாடுகிறது. அதுமட்டுமல்ல 1978-ம் ஆண்டு வெளிவந்த `கிழக்கே போகும் ரயில்' படத்தில் இடம்பெற்ற `பூவரசம்பூ பூத்தாச்சு... பொண்ணுக்குச் சேதியும் வந்தாச்சு... காவேரி போல பொங்குற மனசு பாடாதோ?' என்ற பாடல் பட்டிதொட்டி எங்கும் ஒலித்தது. இன்றைக்கு அதுபோன்ற பாடல்களையும் கேட்க முடியவில்லை, அந்த பூவரச மரம் கூட நம்மால் பார்க்க முடிவதில்லை.
பூவரச மரம்
அன்றைய காலத்து கிராமத்துச் சிறுவர்களின் விளையாட்டுப்பொருளாக இருந்து வந்த பூவரசு மரம் கிணற்றுமேடுகளில் நிச்சயம் இடம்பெற்றிருக்கும். நீர் இறைக்கும் கமலையை இழுத்துவரும் மாடுகள் சோர்ந்து போகாமல் இருப்பதற்காக இதை நட்டு வைத்திருந்தார்கள். இந்த மரங்கள் ஆக்சிஜனை அதிகளவு உற்பத்தி செய்யும் மரங்களில் ஒன்று என்பதால் கிராமம்தோறும் காணப்பட்டன. இன்றைக்குக் கிணற்றில் நீரும் இல்லை, அவற்றிலிருந்து நீர் இறைக்கும் கமலைகள் மட்டுமல்ல மாடுகளும் இல்லை, அவை இளைப்பாறுவதற்காக நடப்பட்ட மரங்களும் இல்லை.
அதுமட்டுமல்ல சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் மார்கழி மாதத்தின் காலைப்பொழுதுகளில் நம் வீட்டுப்பெண்கள் தமிழ்க் கலாசாரத்தின் அடையாளங்களில் ஒன்றாகக்கருதப்படும் கோலமிடுதல் முக்கியமானது. வீடுகளின் முற்றங்களில் விழுந்து கிடக்கும் இலைதழைகள் மற்றும் குப்பைகளை அகற்றி மாட்டுத்தொழுவத்துக்குப் பின்புறம் இருக்கும் உரக்குழியில் போடுவார்கள். பிறகு மாட்டுத்தொழுவத்தில் இருந்து சாணம் எடுத்து வந்து நீர் விட்டுக் கரைத்துத் தெளித்து மாக்கோலம் இட்டு அதன் நடுவே சாணத்தில் பிள்ளையார் பிடித்து அதில் பூவரசம் பூவை செருகி வைப்பார்கள். இது மரபின் மருத்துவம் என்றால் அது மிகையாகாது.
பூவரசம் மரத்தின் தாவரவியல் பெயர் தெஸ்பீசியா பாபுல்னியா (Thespesia poulnea (L) என்பதாகும். இதை கல்லால் பூப்பருத்தி என்றும், புவிராசன், அர்த்தநாரி, ஈஸ்வரம், பம்பரக்காய், பூளம் என்ற வேறு பெயர்களிலும் அழைப்பார்கள். சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற நூல்களிலும் பூவரசு மரம் பற்றி குறிப்பிட்டிருக்கிறது. இலங்கையின் யாழ்ப்பாணம் மாவட்டத்தின் தென்மேற்குப்பகுதியில் உள்ள ஏழு தீவுகளில் ஒன்றான புங்குடுதீவில் பூவரசு மரங்கள் நிறைந்த காடு இடம்பெற்றிருக்கிறது.
இத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க பூவரசு மருத்துவக்குணம் நிறைந்தது ஒரு மரமாகும். இதன் இலை, பூ, காய், விதை, பட்டை, வேர் என எல்லாவற்றுக்கும் மருத்துவக்குணங்கள் உண்டு. பூவரசு இலையை அரைத்து சொறி, சிரங்கு, தேமல் போன்றவற்றுக்குப் பற்று போட்டு வந்தால் பலன் கிடைக்கும். பூவரசு மரத்தின் காய்களை அம்மி அல்லது கருங்கல்லில் உரசினால் வரக்கூடிய மஞ்சள் நிறப்பாலை தேமல் உள்ள இடங்களில் தடவி வந்தால் நாளடைவில் தேமல் அகலும். படர்தாமரை என்று சொல்லக்கூடிய தோல் நோயும் குணமாகும். கை-கால் மூட்டு வீங்கியிருந்தாலும் இதே மஞ்சள் நிறப்பாலை பூசினால் குணம் கிடைக்கும்.
பூவரச மரம்
பூவரசு மரத்தின் வேர்ப்பட்டையை நீர் விட்டு நீர் சேர்த்து கொதிக்க வைத்து அதில் 50 மில்லி அளவு எடுத்து 10 மில்லி விளக்கெண்ணெய் சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் பேதியாகும். இதன் மூலம் தோல் நோய்களிலிருந்து விடுதலை கிடைக்கும். செதில் செதிலாக உதிரக்கூடிய சொரியாசிஸ் நோய்க்கு பூவரசம்பட்டை நல்ல மருந்தாகும். அதாவது, 100 ஆண்டுகள் ஆன பூவரசு மரத்தின் பட்டையுடன் காய், பூ சேர்த்துப் பொடியாக்கி காலை, மாலை ஒரு டேபிள்ஸ்பூன் வீதம் சாப்பிட்டு வந்தால் பலன் கிடைக்கும். முற்றிய மரத்தின் பட்டையை இடித்துச் சாறு எடுத்து அதை வாயில் வைத்துக் கொப்புளிப்பதோடு உள்ளுக்குள் விழுங்கி வந்தால் உதட்டில் வரக்கூடிய வெண்தேமல் சரியாகும்.
சர்க்கரை நோயாளிகளுக்குப் புண் ஏற்பட்டால் அது ஆறாமல் மிகுந்த பிரச்னையை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. அப்படிப்பட்ட சூழலில் பூவரசம்பட்டையை நீர் விட்டுக் கொதிக்க வைத்து சூடு ஆறியதும் கழுவி வந்தால் பலன் கிடைக்கும். கழுத்தில் அணியக்கூடிய செயின், கைக்கடிகாரம் போன்றவற்றை அணிவதால் சிலருக்குத் தோலில் கருமை நிறம் ஏற்படும். அப்படிப்பட்ட சூழலில் பூவரசம் பூவின் இதழ்களை நல்லெண்ணெய் விட்டு காய்ச்சி சூடு ஆறியதும் கருமை நிறத்தின் மீது பூசி வந்தால் கரும்படலம் நாளடைவில் மறையும். அல்சைமர் எனும் ஞாபகமறதி நோய்க்கும் சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது என்று சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர்.
பூவரசு மரம்
மருத்துவக்குணம் நிறைந்த பூவரசு மரம் மிக எளிதாக வளரக்கூடியது. அதன் கிளைகளை வெட்டி நட்டாலே தளிர் விட்டு வளரும். அதிக பிராணவாயுவைப் பெறுவதோடு நோய்களையும் வெல்வோம்; மீண்டும் `பீப்பீ' ஊதப் புறப்படுவோம்

.

சளி விலக... தூதுவேளை துவையல், பூண்டுபால்!

டடா மழடா... அட மழடா!’ என்று பாட வைக்கும் மழைக்காலம் இது! ஆனால் எல்லோருக்கும் இந்த பாடலை பாட கொடுத்துவைப்பதில்லை. சீதோஷ்ண நிலை மாற்றம், பலரையும் இந்த காலத்தில் கர்ச்சீப்பும் கையுமாக இருக்க வைத்துவிடுகிறது. 

சளி, காய்ச்சல் நம்மை பாடாய்ப்படுத்தக் காத்திருக்கும் இந்த நாட்களில், அதிலிருந்து தற்காத்துக்கொள்ளும் ‘அஞ்சறைப் பெட்டி’ வைத்தியம் இதோ..!

* தினமும் காலை தேநீரில்  கொஞ்சம் இஞ்சித்துண்டு, துளசி இலை   சேர்த்துக்கொள்ளலாம்.

* காலையில் இட்லிக்கு சட்னியாக தூதுவேளை துவையல், இஞ்சி துவையல் செய்யலாம். மதிய சாப்பாட்டில் துளசி ரசம், தூதுவேளை ரசம் இருக்குமாறு பார்த்துக்கொள்ளலாம். சாயங்கால வேளையில் சுக்கு காபி குடிக்கலாம்.

* சுக்கு காபி என்றதும், சுக்கை பொடியாக்கி பாலுடன் சேர்த்து கொதிக்க வைத்துக் குடிப்பது என பலரும் நம்புகின்றனர். அதில் பலனில்லை. சுக்கு காபி தயாரிக்க என வழிமுறை இருக்கிறது.
 மிளகு ஒரு பங்கு, இரண்டு பங்கு சுக்கு, நான்கு மடங்கு கொத்தமல்லி (தனியா), கொஞ்சம் ஏலக்காய் என... இவற்றை எல்லாம் சேர்த்து பொடி செய்து வைத்துக்கொள்ளுங்கள். தூதுவேளை, துளசி, கற்பூரவல்லி, ஆடாதொடை இவை ஏதேனும் கிடைத்தால், அந்தப் பொடியுடன் இதையும் சேர்த்து தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து, பனைவெல்லம் சேர்த்துக் குடியுங்கள்.
 

* சளி அதிகமாகி நெஞ்சை அடைத்தால், இரவு உறங்கப்போவதற்கு முன் பூண்டுப்பால் குடிக்கலாம். 

10, 12 பூண்டுப்பல்லை 50 மில்லி பாலுடன் 50 மில்லி தண்ணீர் சேர்த்து நன்றாக வேக வையுங்கள். அடுப்பில் இருந்து இறக்குவதற்கு முன் மிளகுத்தூள், மஞ்சள்தூள் சேர்த்துக்கொள்ளுங்கள். இறக்கிய பாலில் பூண்டு கரைய நன்றாகக் கடைந்து, அதனுடன் பனங்கற்கண்டு அல்லது சர்க்கரை சேர்த்து அருந்துங்கள். 

* காலையில எழுந்ததும் சிலருக்கு தும்மல் வரும். அந்த மாதிரி நேரங்களில் தேங்காய் நாரை தீயில் எரித்து வரும் புகையை சுவாசிக்க, தும்மல் உடனே நிற்கும். ஆனால் இதை அடிக்கடி செய்யக்கூடாது. 

* தலைக்கு குளித்ததும் தும்மல், மூக்கடைப்பு, தலைவலி வந்தால் கொஞ்சம் மிளகை பொடி செய்து, மெலிதான துணியில் கட்டி, உச்சந்தலையில் தேய்த்தால், தீர்வு கிடைக்கும்.

* மூக்கடைப்புக்கு ஜாதிக்காயை தண்ணீர் விட்டு கொழகொழப்பாக இழைத்து, அதைக் கரண்டியில் எடுத்து அடுப்பில் சூடேற்றவும். அது குழம்பாக ஆனதும், பொறுக்கும் சூட்டில் மூக்கின் மேல் பத்து போட... அடைப்பு விலகும்.

* நெஞ்சுச்சளி அதிகமாக இருந்தால், பூண்டு குழம்பும், சமைக்காத சின்ன வெங்காயமும் சாப்பிடலாம். அதேபோல, தேங்காய் எண்ணெயில் சில சூடக்கட்டிகளை இட்டு சூடேற்றி, கரைந்ததும் அதை சூடு பொறுக்க நெஞ்சு, விலா, முதுகு, மூக்கு பகுதிகளில் தடவலாம்.

* தலை பாரமாக இருந்தால் நொச்சி இலையை தலையணையில வைத்துப் படுக்க, நிம்மதியான தூக்கம் கிடைக்கும்! 

சர்க்கரைக்கு மாற்று பனங்கற்கண்டு... ஆனால், ஒரு விஷயத்தில் கவனம்..!


னங்கற்கண்டு அல்லது கல்லாக்காரம். சித்த வைத்தியத்தில் முக்கிய பங்கு வகிக்கும் இது பனைநீர் அல்லது பதநீரைக் காய்ச்சிப் பெறப்படும் ஒரு பொருள். சர்க்கரைக்கு மாற்றாக பயன்படுத்தப்படும் இதில் கால்சியம், இரும்பு, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. மொத்தம் 24 வகையான இயற்கைச் சத்துகள் நிறைந்துள்ளதால் இது சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லதொரு வரப்பிரசாதமே. ஆனாலும் அதை அளவுடன் சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியமாகும். இயற்கையான இனிப்புப்பொருளான பனங்கற்கண்டு, ரத்த அழுத்தத்தையும் குறைக்கக்கூடியது.
பனங்கற்கண்டு
அன்றாடம் நாம் காலையில் கண் விழிக்கும் கணம் முதல் இரவு கண்ணுறங்கும் வரை (உண்ணும்/அருந்தும்) காபி, டீ அல்லது ஜூஸ், பிஸ்கட், சாக்லேட் மற்றும் தின்பண்டங்கள் என இனிப்பு சார்ந்த எல்லாவகை உணவுப்பண்டங்களிலும் நீக்கமற நிறைந்திருப்பது சர்க்கரையே. இன்றைக்கு பெருவாரியான மக்கள் பல்வேறு நோய்களின் பிடியில் சிக்கித் தவித்து வருவதற்குக் காரணம் இந்தச் சர்க்கரையே. ஆகவே சர்க்கரைக்கு மாற்றாக பனங்கற்கண்டைப் பயன்படுத்துவோம். இதன் விலை அதிகமாக இருந்தாலும்கூட நோயின் பிடியிலிருந்து நம்மை நாமே காப்பாற்றிக்கொள்ள இதைப் பயன்படுத்துவோம். அதேநேரத்தில் பனைவெல்லம், நாட்டுச்சர்க்கரை போன்றவற்றையும் பயன்படுத்தலாம். நமது முன்னோர் பாலுடன் பனங்கற்கண்டு சேர்த்துக் காய்ச்சியே பயன்படுத்தி வந்தார்கள். இதனால் அவர்கள் தம் குரல்வளம் மாறாமல் இருந்ததோடு சிறுநீர் கழிக்கும்போது ஏற்படக்கூடிய எரிச்சல், காய்ச்சலின்போது வரக்கூடிய உடல் சூடு போன்றவற்றைத் தணிக்கும். குறிப்பாக இதில் உள்ள குளுக்கோஸ் மெலிந்து, தேய்ந்து வாடி ஒட்டிப்போன குழிவிழுந்த கன்னத்துடன் காட்சியளிக்கும் குழந்தைகளின் உடல்நிலையைச் சீராக்கி நல்ல சக்தியைத் தரும்.
இதன் பலனை அறிந்துகொண்டு குழந்தைப்பருவம் முதலே பாலுடன் பனங்கற்கண்டு சேர்த்துக் குடிக்கக் கொடுத்து வர வேண்டியது தாய்மாரின் இன்றைய தலையாய கடமைகளில் ஒன்றாக இருக்கிறது. இப்படி பாலுடன் சேர்த்துக் கொடுப்பதால் வெப்பத்தைத் தணிக்கும். சின்னம்மை, பெரியம்மை மற்றும் வெப்பத்தினால் ஏற்படக்கூடிய நோய்களில் அவதிப்படுவோருக்கும் இதை அடிக்கடி கொடுத்து வந்தால் எந்தவித பக்கவிளைவுகளும் இல்லாமல் வெப்பம் தணியும். மேலும் ஏதாவது ஒருவகையில் இதை அடிக்கடி பயன்படுத்தி வந்தால் உடல் வெப்பம் நீங்குவதோடு தாகம் தணியும். அதேநேரத்தில், சூட்டைத் தணித்து சளித்தொல்லையை ஏற்படுத்திவிடுமோ? என்று பயப்படத்தேவையில்லை.
பதநீர்
கர்ப்பிணிகள் சிறுநீர் பிரியாமல் மிகவும் அவதிப்படுவார்கள். அத்தகைய சூழலில் வெந்நீருடன் பனங்கற்கண்டு சேர்த்துக் குடிக்கக் கொடுத்து வந்தால் விரைவில் நிவாரணம் கிடைக்கும். சுக்கு, மிளகு, திப்பிலியுடன் சேர்த்துக் கொடுப்பதால் இருமல் குணமாகும். பாடகர்கள் மற்றும் செய்தி வாசிப்பாளர்கள், நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் போன்ற குரல் வழி பணி ஆற்றக்கூடியவர்களுக்கும் இது பெரிதும் நிவாரணம் அளிக்கிறது. சங்கீத வித்வான்கள் பனங்கற்கண்டைப் பாலுடன் சேர்த்து அருந்துவார்கள். இது அவர்களது குரல்வளத்தை குறையாமல் பாதுகாக்கும்.
பனங்கற்கண்டு
பனங்கற்கண்டு பால் என்பது மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் பிரசித்திப்பெற்றது. பாலுடன் மிளகு, பனங்கற்கண்டு சேர்த்துக் கொடுப்பார்கள். இந்தக் கலவையுடன் பூண்டு, மஞ்சள்தூள் சேர்த்துக் கடைந்து தருவதை பூண்டுப்பால் என்பார்கள். கைப்பிடி அளவு உரித்த பூண்டுப்பற்கள், 50 மி.லி பால், அதே அளவு தண்ணீர் விட்டுக் கொதிக்க வைத்து அடுப்பிலிருந்து கீழே இறக்குவதற்குமுன் மஞ்சள்தூள், மிளகுத்தூள் சேர்க்க வேண்டும். அதன்பிறகு அடுப்பிலிருந்து கீழே இறக்கி அவற்றை நன்றாகக் கடைந்து பனங்கற்கண்டு சேர்த்துக்குடித்தால் சளித்தொல்லை, இருமல் விலகுவதோடு மலச்சிக்கலும் விலகும். பால் கொடுக்கும் தாய்மார்களுக்கும் சத்தான ஓர் உணவாகப் பயன்படுகிறது.
பசியின்மை, செரிமானக்கோளாறு, வாய்வுத்தொல்லையால் அவதிப்படுபவர்கள் ஓமம், சுக்குப்பொடி, மிளகுப்பொடி, ஏலக்காய், திப்பிலியுடன் பனங்கற்கண்டு சேர்த்து நீர் விட்டு கொதிக்க வைத்து அருந்தினால் நல்ல நிவாரணம் கிடைக்கும். இந்தக் குடிநீர் உடல் வலியைப் போக்குவதோடு உணவுக்குழாயில் ஏற்படும் பிரச்னைகளையும் சரிசெய்யும். ஆஸ்துமா நோயாளிகள் ஓமம், ஆடாதொடை அல்லது அதன் இலைப்பொடி, கசகசாவுடன் பனங்கற்கண்டு சேர்த்து கஷாயம் தயாரித்துக் குடித்து வந்தால் நிவாரணம் கிடைக்கும்.
மேலும் பனங்கற்கண்டானது வாதம், பித்தம், கபம் போன்றவற்றை நீக்குவதுடன் இதை உண்பவர்களை திடகாத்திரத்துடன் இருக்கச்செய்யும். பாலில் சேர்த்துக் காய்ச்சிக் குடித்து வந்தால் மார்புச்சளியை நீக்குவதோடு தொண்டைப்புண், தொண்டை வலி போன்றவற்றையும் குணப்படுத்தும். டைபாய்டு, காய்ச்சல் போன்றவற்றை குறைக்கும்.
பனங்கற்கண்டில் உள்ள கால்சியம் பற்களை உறுதிப்படுத்தி ஈறுகளில் உள்ள ரத்தக்கசிவை தடுக்கும். மேலும், பற்களின் பழுப்பு நிறத்தைப் போக்கக்கூடியது. சொறி, சிரங்கு உள்ளிட்ட தோல் நோய்களில் இருந்து நிவாரணம் தருவதுடன் கண் நோய், ஜலதோஷம், டி.பி உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு அருமருந்தாக அமைகிறது.
சுக்கு காபி
பனங்கற்கண்டு பாயசம்
பனங்கற்கண்டில் பாயசம் செய்து சாப்பிடுவதாலும் சில நன்மைகள் நம்மை வந்து சேரும். பாதாம்பருப்பை ஊற வைத்து மிக்ஸியில் போட்டு பொடித்து வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு காய்ச்சிய பாலுடன் பொடித்த பாதாம் சேர்த்துக் கிளற வேண்டும். நெய்யில் பொடித்த முந்திரி, உலர்திராட்சையை வதக்கிச் சேர்ப்பதோடு, பனங்கற்கண்டும் சேர்த்துக் கிளறி இறக்கினால் பனங்கற்கண்டு பாயசம் ரெடி. சத்தான ஓர் உணவாகும். கோதுமைக்குருணையுடன் பாசிப்பருப்பு சேர்த்து வேக வைத்து தேங்காய்த்துருவலைச் சேர்த்துக் கிளற வேண்டும். அத்துடன் ஏலக்காய், முந்திரி, திராட்சை சேர்ப்பதுடன் நெய், பனங்கற்கண்டு சேர்த்து செய்யப்படும் இந்த பனங்கற்கண்டு பாயசமும் சத்தான உணவே.

செம்பருத்திப்பூ: இதயம் காக்கும்...வெட்டை நோய் விரட்டும்!

செம்பருத்திப்பூவின் மருத்துவ குணம் மகத்தானது. இதன் உண்மையான பெயர் செம்பரத்தை. ஆனால், செம்பருத்தி என்பதே நிலைத்துவிட்டது. இதில் ஒற்றை செம்பருத்தி, அடுக்கு செம்பருத்தி, மஞ்சள், ஆரஞ்சு, வெள்ளை செம்பருத்தி என்று இதில் பல வகைகள் உண்டு. ஆனால், ஐந்து இதழ்கள் கொண்ட செம்பருத்திப்பூ மட்டுமே மருத்துவக் குணத்துக்குரியது. 

செம்பருத்திப்பூ சாப்பிட்டால், தங்க பஸ்பம் சாப்பிட்ட பலன்! 

செம்பருத்திப் பூவில் தங்கச்சத்து இருப்பதாகச் சொல்லப்படுகிறது. 6.5 கிராம் செம்பருத்திப்பூ சாப்பிட்டால், ஒரு குண்டுமணி அளவு தங்கம் சாப்பிட்ட பலன் கிடைக்கும். செம்பருத்திப்பூவின் மிக முக்கிய மற்றும் சிறப்பான அம்சம், இருதய நோய்க்கு இது அருமையான மருந்து. காலையில் வெறும் வயிற்றில் ஒன்றிரண்டு செம்பருத்திப்பூவின் இதழ்களை சாப்பிட்டு வந்தால் இருதய நோய் குணமாகும். இருதய நோயாளிகளுக்கு வரக்கூடிய இருதயப் படபடப்பு, வலி, அடைப்பு என்று அத்தனை பிரச்னைகளையும் இந்த செம்பருத்திப்பூ சரி செய்ய வல்லது.

இருதய நோய் பாதிப்பு உள்ளவர்கள் செம்பருத்திப்பூவை மருந்தாக உட்கொள்ளும்போது, ஆறு பூக்களின் இதழ்களை ஒரு சட்டியில் போட்டு, மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி சுண்டக் காய்ச்சவும். அந்தச் சாறில் 6 டீஸ்பூன் அளவு தினமும் காலை, மாலை என தொடர்ந்து 24 நாட்கள் சாப்பிட்டு வந்தால், கை மேல் பலன் கிடைக்கும். 

செம்பருத்திப்பூ சர்பத்!

செம்பருத்திப்பூவை சர்பத்தாக செய்தும் சாப்பிடலாம். சர்பத் என்றதும், பெரிய செய்முறையோ என்று யோசிக்க வேண்டாம். செம்பருத்திப்பூ இதழ்களை மையாக அரைத்து, அதோடு சீனி (சர்க்கரை), தண்ணீர் சேர்த்தால், சர்பத் தயார். தினமும் சர்பத் செய்ய நேரம் இல்லாதவர்கள், மொத்தமாக 40, 45 பூக்களின் இதழ்களை மட்டும் தனியாக எடுத்து சுத்தமான பாத்திரத்தில் போட்டு தண்ணி ஊற்றி கொதிக்க வைக்கவும். பாதியாக வற்றியதும், அடுப்பில் இருந்து இறக்கி கையால் பிசைந்து கூழாக்கி வடிகட்டி, சாறை மட்டும் எடுத்துக்கொள்ளவும். இத்துடன் 300 கிராம் சீனி (சர்க்கரை) சேர்த்துக் கலக்கி, பாகு பதம் வரும்வரை காய்ச்சி இறக்கவும். சூடு ஆறியதும், ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்துக்கொள்ளவும். தேவைப்படும்போது 2 டீஸ்பூன் எடுத்து ஒரு டம்ளர் தண்ணீர் அல்லது பாலில் கலந்து குடிக்கலாம். 

செம்பருத்திப்பூ சர்பத், இருதய நோய்க்கான மருந்து மட்டுமல்ல. இதைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கணைச்சூடு, அதாவது ஆளை உருக்கும் உள்சூடு தணியும். தாகம் தணிவதுடன் களைப்பு நீங்கும். கண்களுக்கு குளிர்ச்சி கிடைப்பதுடன், உடல் சூடு சமநிலைக்கு வரும்.

குழந்தைகளுக்கும் மருந்து!

குழந்தைகளுக்கு வரக்கூடிய வயிற்று வலி, வயிற்றுப் போக்கு, வயிற்று உப்புசம் பிரச்னைகளுக்கு, செம்பருத்தித்திப்பூ கஷாயம் நல்ல மருந்து. சில குழந்தைகளுக்கு கல்லீரலில் வீக்கம் வந்து அது காய்ச்சலாக வெளிப்படும். அந்தப் பிரச்னைக்கு, ஐந்து செம்பருத்திப்பூக்களின் இதழ்களை மட்டும் எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து பாதியாக வற்றியதும் வடிகட்டி நான்கு மணி நேரத்துக்கு ஒரு முறை குடித்து வந்தால், பலன் கிடைக்கும்.
பால்வினைநோயான வெட்டை நோயால் அவதிப்படுகிறவர்கள் மூன்று செம்பருத்திப்பூவின் இதழ்களை தினமும் அதிகாலை வெறும் வயிற்றில் மென்று தின்று, கொஞ்சம் பசும்பால் குடிக்க வேண்டும். இதைத் தொடர்ந்து 40, 48 நாட்கள் சாப்பிட்டு வர, நிச்சய பலன் கிடைக்கும்.  

அழகுப் பொருளாகும் பூ!

செம்பருத்திப்பூக்களை தலைக்குத் தேய்க்கும் சீகைக்காய் பொடியுடன் சேர்த்துப் பயன்படுத்தினால், பொடுகு, முடி உதிர்தல், இளநரை பிரச்னைகள் சரியாகும். காய வைத்த செம்பருத்திப்பூ, ஆவாரம்பூ, பயத்தம்பருப்பு, கறிவேப்பிலை அனைத்தையும் நன்றாகக் காய வைத்துப் பொடியாக்கி, சோப்புக்குப் பதிலாக இதை தலை முதல் கால் வரை பூசி குளித்து வர, சரும நோய்களில் இருந்து விடபடலாம்! 

எண்ணிடலங்காதவைதானே செம்பருத்திப்பூவின் பலன்கள்!

இதயநோய், மூலம், சரும நோய்களுக்கு மருந்தாகும் சரக்கொன்றை..!


‘பச்சைநிறமே பச்சைநிறமே இச்சை மூட்டும் பச்சைநிறமே...' இது, அலைபாயுதே படத்தில் இடம்பெற்ற பாடல். அதில், ‘தங்கத்தோடு ஜனித்த மஞ்சள் கொன்றைப்பூவில் குளித்த....' என்ற வரி இடம்பெறும். அந்த அளவுக்கு இன்றைய நூற்றாண்டு மனிதர்கள் மத்தியிலும் பிரபலமாகியிருக்கிறது கொன்றை மலர் என்னும் சரக்கொன்றை. அவ்வை மூதாட்டி கொன்றை வேந்தன் எனும் பெயரில் அறநூல் ஒன்றை இயற்றினார். கொன்றை மலரை விரும்பி அணியும் கடவுள் சிவன் என்றும், அவரது மகன்களுள் ஒருவரான முருகனைப்போற்றியும் இந்நூலில் போற்றிப் பாடப்பட்டுள்ளது.
சரக்கொன்றை
கொன்றை... ஃபேபேசியே (Fabaceae) என்னும் தாவரவியல் குடும்பத்தைச்சேர்ந்த பூக்கும் தாவரம். கொன்றையில் சரக்கொன்றை, சிறுகொன்றை, செங்கொன்றை, கருங்கொன்றை, மஞ்சள்கொன்றை, மயில்கொன்றை, புலிநகக்கொன்றை, பெருங்கொன்றை, மந்தாரக்கொன்றை மற்றும் முட்கொன்றை எனப் பல கொன்றைகள் இருந்தாலும் சரக்கொன்றைதான் மிகவும் பிரசித்திபெற்றது. சரம் + கொன்றை = சரக்கொன்றை. சிவன் கோவில்களில் தல மரமாக விளங்கும் சரக்கொன்றையை இதழி, கடுக்கை, கொன்னை, தாமம் என்ற வேறு பெயர்களிலும் அழைக்கிறார்கள்.
சரக்கொன்றை மலர்
கோடைக் காலங்களில் குறிப்பாகச் சித்திரை மாதத்தில் சரம் சரமாகப் பூத்துக்குலுங்குவதால் சரக்கொன்றையைச் சித்திரைப்பூ, திருக்கொன்றை, சுவர்ண புஷ்பம் என்றும் அழைக்கிறார்கள். கோடையின் வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய சரக்கொன்றை மஞ்சள் நிறத்தில் பூத்துக் குலுங்கும். ஓரடி நீளத்துக்கும் அதிகமாக வளரக்கூடியது. பூச்சரங்கள் பொன்னிறமாக ஜொலிக்கும். புத்தாண்டில் சரக்கொன்றை மலரைப் பார்ப்பதால், வாழ்வில் வளம் கூடும் என்பது நம்பிக்கை. கேரளாவிலும் விஷுக்கனி தரிசனத்தில் கொன்றை மலர் இடம்பெறுகிறது. சரக்கொன்றையின் பூ, இலை, மரப்பட்டை என அனைத்துக்கும் மருத்துவக்குணங்கள் உள்ளன.
சரக்கொன்றைப்பூவை நல்லெண்ணெயில் போட்டுக் காய்ச்சி இரண்டு சொட்டுகள் காதில் விட்டுவர காது நோய்கள் குணமாகும்.
கொன்றைப்பூவை ஆவியில் வேக வைத்து அதன் சாறைப்பிழிந்து அதில் நாட்டுச் சர்க்கரைச் சேர்த்து கால் லிட்டர் அளவு குடித்தால் வயிற்றில் உள்ள பூச்சிகள் வெளியேறிவிடும்.
தேமல், சொறி, சிரங்கு உள்ளவர்கள் கார்போக அரிசியுடன் (நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்) கொன்றைப்பூவைச் சேர்த்து அரைத்துப் பூசி வந்தால் குணம் கிடைக்கும். இலைவிழுதையும் சரும நோய்களுக்குப் பூசி வருவதன்மூலம் பலன் கிடைக்கும்.
இலையை மையாக அரைத்து சாறு எடுத்து அதனுடன் எலுமிச்சைச்சாறு சேர்த்து படர்தாமரை உள்ள இடங்களில் பூசி வந்தால் குணம் கிடைக்கும்.
கொன்றை
கொன்றைப்பூவை மையாக அரைத்து காய்ச்சியப் பசும்பாலுடன் சேர்த்துக் குடித்து வந்தால் உள்ளுறுப்புகள் பலம்பெறுவதோடு, உடல் ஆரோக்கியம் கிடைக்கும்.
கொன்றைப்பூவை மையாக அரைத்து 10 கிராம் அளவு எடுத்துப் பசுவெண்ணெயில் சேர்த்துக் குழைத்துச் சாப்பிட்டு வந்தால் வெள்ளைப்படுதல், வெட்டை நோய்கள் உள்ளிட்ட மேக நோய்கள் நீங்கும்.
பூக்களைக் கஷாயமாக்கிக் குடித்து வந்தால் சர்க்கரை நோய் மற்றும் வயிற்றுக்கோளாறுகள் சரியாகும். வேர்ப்பட்டை கஷாயம் இதய நோய், காய்ச்சல் போன்றவற்றைக் குணமாக்கும். கொன்றைப்பட்டை, தூதுவளைவேரை சம அளவு எடுத்து தூளாக்கி தேனில் குழைத்து பாலுடன் சேர்த்து காலை, மாலை சாப்பிட்டு வந்தால் சளி, கபக்கட்டு, மூச்சு விடுவதில் சிரமம் போன்ற பிரச்னைகள் சரியாகும்.
இலை மற்றும் பூவை அரைத்து கண்களின்மேல் வைத்துக் கட்டி வந்தால் கண் நோய்கள் வராது.
இலைச்சாறுடன் நாட்டுச் சர்க்கரை சேர்த்துக் குடித்து வந்தால் மூலக்கோளாறுகள், மலக்கட்டு, ஆசனப்பகுதியில் எரிச்சல் மற்றும் வலி, ஆசனக்கடுப்பு போன்ற பிரச்னைகள் சரியாகும்.
சரக்கொன்றை மரத்தில் முருங்கைக்காய் போலவே 2 அடி நீளத்துக்குக் காய் காய்க்கும். அதன் உள்ளே இருக்கும் பசையுள்ள சதைப்பற்று புளியைப்போலவே காணப்படும். அதைச் சரக்கொன்றை புளி என்பார்கள். இதைச் சாதாரணப் புளியுடன் சேர்த்து சாப்பிட்டு வர பித்தக்கோளாறுகள் சரியாகும். கர்ப்பிணிகள், குழந்தைகளுக்குச் சாப்பிடக் கொடுத்தால் மலச்சிக்கல் சரியாகும். ரத்தக்கொதிப்பு உள்ளவர்களுக்கும் இது நல்லதொரு மருந்தாகிறது.
சரக்கொன்றை புளியை நெல்லிக்காய் அளவு எடுத்து அதனுடன் அரை ஸ்பூன் திரிபலா சூரணம் சேர்த்து ஒரு டம்ளர் நீர் விட்டு கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் வயிறு சுத்தமாகும். அதிகமாக வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் மோரில் உப்பு சேர்த்துக் குடித்தால் நிலைமை கட்டுக்குள் வரும். வயிறு சுத்தமாவதன்மூலம் மலச்சிக்கல் பிரச்னைக்குத் தீர்வு கிடைப்பதோடு, புற்றுநோய் வராமல் தடுக்கும் பணியைச் செய்கிறது.

களை அல்ல... உயிர்காக்கும் மூலிகை! நலம் நல்லது-65 #DailyHealthDose

‘களை எடுத்தல்’, ‘களை பறித்தல்’, `களை பிடுங்குதல்’... என வெவ்வேறுவிதமாகச் சொன்னாலும், விவசாயத்தில் நாம் `களை’ என ஒதுக்கித் தள்ளுவது எத்தனையோ அரிய மூலிகைகளை! அது மட்டும் இல்லாமல், சில மூலிகைத் தாவரங்களின் அருமையை அறியாமலேயே, குப்பை மேட்டிலும், கண்ட இடங்களிலும் வளர்வதால் ஒதுக்கித் தள்ளுகிறோம். பிடுங்கி எறிகிறோம். அப்படி களையென ஒதுக்கப்படும் சில தாவரங்களின் மருத்துவக் குணங்களையும் அவை தரும் நன்மைகளையும் அறிந்துகொள்வோமா?
களை
பல்லுயிர் நலனில் அக்கறைகாட்டி வாழ்ந்தவர்கள் நாம். ஆனால், இன்றைக்கோ காடுகளில் தீயைப் பற்ற வைப்பது தொடங்கி, கதிர்வீச்சை அணுக்களில் மோதவிட்டு உருவாக்கும் நியூட்ரினோ துகள்வரை நம் சொகுசுகளுக்காகச் சிதைக்கும் பல்லுயிரியம் சொல்லி மாளாதது. `எனக்கு உதவாத ஒன்று இந்த உலகத்தில் எதற்கு?’ என்ற இறுமாப்பு, மனிதனைத் தவிர வேறு எந்த இனத்துக்கும் இருப்பதாகத் தெரியவில்லை. அப்படி விவசாயத்தில் களை என்ற பெயரில் முளைக்கும்போதே நாம் நசுக்கவோ பிடுங்கி எறியவோ செய்வது விஷச் செடிகளை அல்ல... பல உயிர் காக்கும் மூலிகைகளை. 
விளைவிக்கப்படும் தாவரத்தின் வளர்ச்சியை, அதன் கனிகளின், தானியத்தின் அளவைப் பாதிக்கும் களையை முளையிலேயே கிள்ளி எறிவதில் என்ன தவறு என்ற கேள்விதான் ஆந்த்ரோபோசென்ட்ரிசம் (Anthropocentrism) என்ற, மனிதனை மட்டும் மையப்படுத்தி வாழும் வாழ்வின் உச்சம்! இந்தச் சித்தாந்தத்தில் தொலைந்துவருவது பல்லுயிரியமும், நம் உடல் நலம் காக்கும் மூலிகைக் கூட்டமும்தான். அப்படிப்பட்ட சில களைகளின் அருமை, பெருமைகளைத் தெரிந்துகொள்வோம். 
இவை களைகள் அல்ல... மூலிகைகள்! 
நீர்முள்ளிச் செடி
நெல் வரப்பு ஓரமாக கணுக்களில் முட்களுடனும் இளஞ்சிவப்பு நிறமுடைய பூக்களுடனும் இருக்கும் நீர்முள்ளிச் செடி, இன்று களையாகப் பிடுங்கி எறியப்படும் முக்கியமான தாவரம். இதன் உலர்ந்த செடியை ஒரு கைப்பிடி எடுத்து கஷாயமாக்கிக் குடித்தால் இதய நோயிலும், சிறுநீரக நோயிலும், கல்லடைப்பிலும், நாளங்களின் வலுக் குறைவிலும், கால் பாதத்தில் வரும் நீர் தேக்கமுடன்கூடிய வீக்கத்துக்கு அற்புதமான மருந்து. நாள்பட்ட சிறுநீரக நோய்க்கும் நாள்பட்ட ருமட்டாய்டு மூட்டுவலிக்கும்கூட இதைப் பயன்படுத்தினால், நல்ல பலன் கிடைக்கும். 
நீர்முள்ளி
கரிசலாங்கண்ணி
‘தேகராஜன்’ என சித்தர்கள் செல்லமாகக் குறிப்பிட்ட கரிசலாங்கண்ணிக் கீரை அற்புதமான காயகல்ப மருந்து. சித்தர்களில் மிகச் சிறப்பாகப் போற்றப்பட்ட அன்றைய போகரும், இன்றைய வள்ளலாரும் கொண்டாடிய மூலிகை அது. மஞ்சள்காமாலை, கல்லீரல் பாதிப்பு ஆகிய பிரச்னைகளில் கல்லீரலைப் பாதுகாப்பதில் இதற்கு இணை வேறு எதுவும் இல்லை. 
கரிசாலை 
கரிசாலை இல்லாமல் கூந்தல் தைலம் செய்ய முடியாது. `கையில் ரொம்ப நேரம் வெச்சிருக்காதீங்க... உள்ளங்கையில் முடி வளர்ந்திடும்’ என்று அதீதமாக விளம்பரத்தப்படும் பெருவாரியான கூந்தல் தைலங்கள் கரிசாலையில்தான் தயாரிக்கப்படுகின்றன. ஒரு லிட்டர் நல்லெண்ணெயில் இரண்டு லிட்டர் கரிசாலைச் சாறு மட்டும் சேர்த்து, தண்ணீர் போகும் அளவுக்குக் காய்ச்சி எடுக்கப்படும் தைலம் தலைமுடி உதிர்வதைத் தடுக்கும், கார் கூந்தலை வளர்க்கும். 
விஷ்ணுகிரந்தி 
வரப்பு ஓரத்தில் வளரும் மிகச் சிறப்பான மூலிகை இது. காய்ச்சல், இருமல் முதல் பெண்களுக்கு சினைமுட்டையைச் சீராக்குவது வரை சாத்தியப்படுத்தும் விஷ்ணுகிரந்தி, சித்த மருத்துவம் போற்றி வணங்கும் முக்கிய மலர்களில் ஒன்றைத் தரும் தாவரமும்கூட. 
விஷ்ணுகிரந்தி
நெருஞ்சில் 
நாம் வரப்பில் நடக்கும்போது நறுக்கென காலில் குத்தும் `நெருஞ்சில்’ எனும் மூலிகை, ஒரு காதல் காப்பான்! ஆண்களின் விந்தணு மிகக் குறைவாக இருப்பதற்கு, செர்டோலி செல்களின் (Sertoli Cells) அழிவு ஒரு முக்கியமான காரணம். அந்தச் செல்களை மீட்டெடுத்து, விந்தணுக்களின் எண்ணிக்கையைக் கூட்ட உதவும் இந்த நெருஞ்சில். வரப்பில் எலிகளின் எண்ணிக்கை எக்குத்தப்பாகப் பெருகுவதற்கு, நெருஞ்சிப்பழம் சாப்பிட்ட ஆண் எலிகளின் அட்டகாசம்தான் காரணம் என்கிறது ஓர் ஆராய்ச்சி. 
களை
இன்னும் களை என அடையாளபப்டுத்தப்பட்ட சிவகரந்தை, சிறுசெருப்படை, கீழாநெல்லி, விராலி, கற்றாழை, நிலக்கடம்பு என வயலில் நெற் செடி வேளாண்மைக்கு முன்னும் பின்னும் இடையிலும் வளரும் பல தாவரங்களின் பயன்கள் மகத்தானவை.  களை என ஒதுக்கப்படுபவற்றை பாதுகாக்கவேண்டிய அவசியம் இன்றைக்கு இருக்கிறது. இவற்றையெல்லாம் உரிய முறையில் சேகரித்து மருந்து தயாரிக்கும் நிறுவனங்களுக்கும் மருத்துவமனைகளுக்கும் உரிய விவசாயக் கூட்டமைப்பின் மூலம் விநியோகித்தால் பல நன்மைகள் விளையும். குறிப்பாக அதுகூட ஒரு விவசாயியின் கண்ணீரைத் துடைத்து ஆசுவாசப்படுத்தும் முயற்சியாக இருக்கும்.