Monday, June 19, 2017

வாழ்வென்றால் போராடும் போர்க்களமே....

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement
மன்மணம் எங்கு உண்டு வாயுவும் அங்கு உண்டு;மன்மனம் எங்கு இல்லை வாயுவும் அங்கு இல்லை;மன்மனத்துள்ளே மகிழ்ந்திருப்பார்க்குமன்மனத்துள்ளே மனோலயம் ஆமேஎன மனதை பற்றி திருமந்திரம் தெளிவாக கூறுகிறது.மனமிருந்தால் மட்டுமே உடலில் உயிருண்டு. அம்மனதால் மகிழ்ந்திருப்போர்க்கு வாழ்வில் மனோலயம் உண்டு.
மனம் எனும் மாயசக்தி 
மனம் என்றால் உள்ளம். மனம் என்பது மாபெரும் சக்தி. அது ஒரு மாயசக்தி. எதையும் அதனால் சாதிக்க முடியும். நேர்மறை எண்ணம், எதிர்மறை எண்ணம் என இரண்டையும் மனதால் 
உருவாக்க முடியும். இறைவனின் உருவத்தை நேரில் காண இயலாது. அதைப் போன்று மனதின்உருவத்தையும், எண்ணத்தையும் நேரடியாக யாராலும் அறிய முடியாது. உளவியல், அறிவியல் ஆராய்ச்சிகளின்படி மனிதனின் எண்ணம், மரபு, சுற்றுப்புறச்சூழல், மூளை சார்ந்த உயிர் வேதியியல், குடும்பச்சூழல் இவற்றால் மாறுபடுகிறது.'கெடுவல்யான் என்பது அறிக தன்நெஞ்சம்நடுவொரீஇ அல்ல செயின்'உள்ளமானது தீயசெயல்களை எண்ணத் தொடங்கினால் அன்றே மனம் கெட்டு விடும் என 
திருக்குறள் கூறுகிறது.
மன அழுத்தம் என்ற பாரம் 
அழுத்தம் என்றால் பாரம் அல்லது கனம் எனப்படும். பாரம் என்பது சுமை. திணித்தலையும் அழுத்தம் என கூறலாம்.பீலிபெய் சாகாடும் அச்(சு)இறும், அப்பண்டம்சால மிகுத்து பெயின்மெல்லிய மயிலிறகையே அளவுக்கு அதிகமாக ஏற்றினால் வண்டியின் அச்சு முறியும். மனதில் துயரம் அதிகமானால் மனமுறிவு ஏற்பட்டு மன அழுத்தம் தோன்றும். தீர்வு காணப்படாத இன்னல்களாலும், வேலைப்பளுவாலும் மனதில் பாரம் ஏற்றப்
படுகிறது. கட்டுப்பாடற்ற மனதாலும், மன அழுத்தம்தோன்றுகிறது. உலகில் அனை வருமே ஏதோ ஒரு காரணத்தால் மன அழுத்தத்தோடு இருக்கின்றனர். மன அழுத்தத்தின் அளவை பொறுத்து மாற்றுவதற்கு பல திறவுகோல்கள் உள்ளன.
மன அழுத்தத்திற்கான காரணங்கள் 

காட்டாற்று வெள்ளம் தறிகெட்டுப் போவது போல் நிலையான சிந்தனை இல்லாதவனின் மனம் கலக்கமுற்று குழம்பி நிற்கும். உறவுகளில் காட்டும் அதிகமான அக்கறை, அக்கறையின்மை இரண்டுமே மன அழுத்தத்திற்கு வழி வகுக்கும். முன்னர் பள்ளி இறுதித் தேர்வு, நாள் ஒன்றுக்கு இரண்டாக, நான்கு நாட்களுக்குள் முடிந்து விடும். இன்று போதுமான இடைவெளி விட்டு தேர்வுகள் நடந்தாலும், தேவையற்ற மன அழுத்தம் 
உருவாகிறது. ஒவ்வொருவருக்கும் இறைவனால் நிர்ணயிக்கப்பட்டது நடந்தே தீரும். மன அழுத்தத்தை ஏற்படுத்தும் முக்கிய மூன்று காரணிகள் அச்சம்; கோபம்; பொறாமை.
சூழ்நிலைக்கு ஏற்ப மனதை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று டாக்டர் மரியா மாண்டிசோரி கூறுகிறார். சூழ்நிலையை தயாரித்தல் என்ற முறையை குழந்தை முதலே செயல்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார். மூன்றாண்டிற்குள் குழந்தை சாதித்த அளவை, நாம் சாதிக்க வேண்டுமென்றால் 60 ஆண்டுகள் தேவைப்படும் என்று உளவியல் கூறுகிறது. குழந்தைப் பருவத்திலேயே வளமான மனதை உருவாக்க பயன்தரும் சூழலை ஏற்படுத்த வேண்டும்.

மூன்று நிலைகள் 
முதல் நிலை: சிறு நிகழ்வுகளால் ஏற்படும் பாதிப்பே முதல் நிலையாகும். குழந்தை விழுந்தவுடன் ஏற்படும் படபடப்பு; பாம்பை கண்டவுடன் ஏற்படும் பயம்; இவை அனைத்தும் சில மணித்துளிகள் மனதில் பாதிப்பை ஏற்படுத்தி பின்பு மறைந்து விடும். இந்நிகழ்வுகளால் அழுத்தம் தோன்றும் பொழுது பாதுகாத்து கொள்வோம். சண்டையிடுவோம் அல்லது விலகி விடுவோம். இதையே ஆங்கிலத்தில் FIGHT OR FLIGHT என கூறுவர். முதல் வகை மன அழுத்தம் தன்னைத் தானே சரி செய்து கொள்ளும்.
இரண்டாம் நிலை: குறிப்பிட்ட இடத்தில் அல்லது குறிப்பிட்ட நேரத்தில் தொடர்ந்து மனதில் பாதிப்பு ஏற்பட்டால் அதுவே இரண்டாம் நிலையாகும். நாமே நமக்குள் ஏற்படுத்தி கொள்ளும் மன அழுத்தம் ஆகும். குழந்தைகளை பள்ளிக்கு ஆயத்தம் செய்யும் நேரம்; பஸ்சை பிடிக்கும் நேரம்; நிர்வாகத்தில் வேலை செய்யும் நேரம்; இல்லத்தில் தொடர்ச்சியாக வேலை செய்யும் நேரம்; தொலைக்காட்சியில் தொடர் நாடகம் பார்க்கும் போது மின்சாரம் தடைபடும் நேரம்; டாக்டர்களிடம் பரிசோதிக்க செல்லும் நேரம் என பல சம்பவங்களால் குறிப்பிட்ட இடத்தில், குறிப்பிட்ட நேரத்தில் இந்த மன அழுத்தம் ஏற்படும். அனைத்து நிகழ்வுகளுக்கும் மனதை தயார் நிலையில் வைத்திருந்தால் மனமே மருந் தாகும்.
இரண்டாம் நிலை மன அழுத்தத்தால் தேவையில்லாத படபடப்பு, நாவறட்சி, வேகமாக மூச்சு விடுதல், அதிகமாக வியர்வை வெளியாதல், தலைவலி, அதிக ரத்த அழுத்தம் போன்ற
இன்னல்கள் ஏற்படும். நாம் உருவாக்கி கொள்ளும் மன அழுத்தம் என்பதால் நாமே சரி செய்து கொள்ளலாம்.மூன்றாம் நிலை: மூன்றாம் நிலை மன அழுத்தமே சிக்கலானது. இது நாம் உருவாக்கி கொள்ளும் மன அழுத்தமல்ல. பல வகை காரணிகளால் ஏற்படுவது. நம்பிக்கையின்மை, உடற்குறைபாடு, போட்டி மனப்பான்மை, பொருளாதார குறைபாடு, அன்பற்ற சூழல், வாழ்க்கை மாற்றம், தொடர்ந்து வரும் நோய், பாதுகாப்பின்மை கடந்த கால துயரமான சம்பவங்கள் என தொடர் நிகழ்வுகள் பல ஆண்டுகளாக நிலைத்திருந்தால் மனதில் பாரம் சிறிது சிறிதாக ஏறி பின்பு சரி செய்ய முடியாத மிகப்பெரிய மன அழுத்தத்தை ஏற்
படுத்தும். இந்நிலை மன அழுத்தத்தில் உள்ள பெற்றோர்களின் குழந்தைகளும் மரபுநிலை காரணமாக பின்னால் அவர்களையும் 
அறியாமல் பாதிக்கப்படுவர்.
கூடிவாழ்ந்தால் கோடி நன்மை 
பாசத்தையும், நேசத்தையும் அள்ளிக் கொடுத்த பெற்றோர் உடல் தளர்வுற்று உள்ளம் தடுமாறி தனிமைப்படுத்தப்பட்டு மன நோயாளியாக மாறி விடுவார்கள். பெற்றோரின் அரவணைப்பு 
இல்லாத குழந்தைகள் அன்பையும், ஆதரவையும் நாடுகின்றனர். சீர் செய்ய முடியாத இல்லறத்தில் இருப்பவர்கள் நல்ல வழிகாட்டுதலை தேடுகிறார்கள். கூடிவாழ் கோட்பாட்டை பயன்படுத்தினால் அதுவே அருமருந்து என அமெரிக்க கல்வியாளர் வாஷ்பர்ன் கூறுகிறார். முகம் பார்த்து நலம் காணும்
கூட்டுக்குடும்பம் குறைந்துவிட்டது. முகத்தை கூட காணாது இருக்கும் தனிக்குடும்பத்தில் மனதை காண்பது என்பது அரிது.தனிக்குடும்பத்தில் இருப்பவர்கள் விழா காலங்களில் உறவினர்களுடன் ஒன்று கூட வேண்டும். பெரியவர்களும், சிறியவர்களும் அவர்களுடைய வயது ஒத்தவர்
களுடன் ஒன்று கூடி மனம் விட்டு பேசி மகிழ வேண்டும். அப்போது உறுதியாக மன அழுத்தம் குறைந்து மனம் லேசாகி விடும். கூடி வாழ்வது கோடி நன்மையை உருவாக்கும்.
தன்னம்பிக்கை அவசியம் 
பிறருடன் ஒப்பிடாமல் எளிய முறை வாழ்வை குழந்தைகளுக்கு நேர்மறை எண்ணங்களுடன் பழக்கினால் தன்னம்பிக்கை வளரும். தன்னம்பிக்கை என்பது முக்கிய பண்பாகும். அதற்கு உதாரணம் வில்மா ருடால்ப். நான்கு வயதில் இரட்டை நிமோனியாவால் பாதிக்கப்பட்டு இளம்பிள்ளை வாதத்தால் முடக்கப்பட்டார். அவருடைய பாதங்கள் தரையில் பதிய வாய்ப்பில்லை என டாக்டர்கள் கூறினர். வில்மா மனதளவில் தன்னம்பிக்கையோடு, தன்னை ஊக்கப்படுத்தி கொண்டு கால்களை தரையில் சிறிது சிறிதாக பதிய வைத்து எட்டெம்பிள் என்ற சிறந்த பயிற்சியாளர் துணையுடன், 1960 ஒலம்பிக் போட்டி யில் 100 மீ, 200 மீ, 400 மீ என மூன்று ஒட்டப்பந்தயங்களில் 
தங்கப்பதக்கம் வென்றார்.மனம் என்பது அற்புத சக்தி. அந்த சக்தியால் எதையும் சாதிக்கலாம். பறவைகளும், விலங்குகளும் கூட இசைக்கு செவிமடுக்கிறது. மனித மனமும் இசையில் லயித்தால் மனம் காற்றாக மாறி விடும். பாட்டு, பரதம், யோகம் போன்ற கலைகள் மருத்துவ ரீதியாக மனஅழுத்தத்தை குறைக்கிறது.
யோகமும், தியானமும் 
உடலுக்கு யோகமும், மனதுக்கு தியானமும் சிறந்தவை. மனிதனின் வியாதியை அளவிட்டு மருத்துவம் செய்ய முடியும். ஆனால் மன வியாதியை அளவிட முடியாது. கண்காணிப்பின் மூலம் அறிய முடியும். மனத்துாய்மையும், செயல் துாய்மையும் இவ்விரண்டும் சேரும் இனத்தின் துாய்மையை பொறுத்தே வரும். இதமான 
எண்ணத்தை அறிந்து வளமான மனதை பெறுவோம்.எந்த மனித நெஞ்சுக்குள் காயம் இல்லை சொல்லுங்கள்
'வாழ்வென்றால் போராடும் போர்க்களமேஒவ்வொரு விடியலும் சொல்கிறதே, 
இரவானால் பகல் ஒன்று வந்திடுமே
முயற்சி என்ற ஒன்றை மட்டும்
மூச்சை போல சுவாசிப்போம்
நம்பிக்கை என்பது வேண்டும் 
நம் வாழ்வில்
மனமே ஓ மனமே நீ மாறி விடு
மலையோ அது பனியோ நீ 
மோதி விடு'
அழகான இப்பாடல் வரிகளை ஏற்றால் மனம் அடங்கும். மனம் அடங்கினால் வாழ்வு வளம் பெறும்.
-முனைவர் ச.சுடர்கொடிகல்வியாளர், காரைக்குடி94433 63865

Sunday, June 18, 2017

எண்ணங்கள் மாறினால் எல்லாம் மாறும்!

* கவலைப்படுவதால் எந்தக் கவலையும் சரியாகப்போவதில்லை. மாறாக, அது இன்றைய மகிழ்ச்சியைக் காணாமல்போகச் செய்துவிடும். எனவே, நாளையைப் பற்றிய கவலையை நாளை பார்த்துக் கொள்வதென முடிவெடுங்கள்.

‘இன்று மிக மோசமான நாள்’ என்று அவசரப்பட்டு முடிவெடுக்காதீர்கள். அந்த நாளின் மோசமான சில நிமிடங்கள், உங்களது மகிழ்ச்சியான நேரத்தை மறைத்துவிட்டதை உணருங்கள். உங்கள் வாழ்க்கையில் இன்னொரு மோசமான நாளே வராது.

எப்போதும் பாசிட்டிவ் மனிதர்கள் பக்கத்தில் இருக்க முயற்சி செய்யுங்கள். அவர்களிடம் எல்லாப் பிரச்னைகளுக்கும் ஏதோ ஒரு தீர்வு இருக்கும். ஆனால், நெகட்டிவ் மனிதர்கள் எல்லா தீர்வுகளுக்கும் ஏதோ ஒரு பிரச்னையுடன் காத்திருப்பார்கள்.

மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு இரண்டே வழிகள்தாம்.சூழ்நிலையை மாற்றுங்கள்... அல்லது சூழ்நிலைக்கேற்ப நீங்கள் மாறிவிடுங்கள்.

மற்றவர்களுக்கு நல்லவராக இருப்பது முக்கியம்தான். அதைவிட முக்கியம், உங்களுக்கு நீங்களே நல்லவராக இருப்பது.

உங்களிடம் இல்லாதவற்றை நினைக்கிறபோதுதான் கவலை அதிகரிக்கிறது. இருப்பவற்றை மட்டும் நினைத்துப்பாருங்கள்; மட்டற்ற மகிழ்ச்சி கொள்வீர்கள்.

ஒரு நல்ல செய்தி... ஒரு கெட்ட செய்தி தெரியுமா? கெட்ட செய்தி - இந்த உலகில் எதுவுமே நிரந்தரமில்லை. நல்ல செய்தியும் அதுவே.

கடந்தவற்றைப் பற்றிக் கவலைப்படாதது, இருப்பதை நினைத்து நன்றியுணர்வு கொள்வது, நடக்கப்போவதை நினைத்து நம்பிக்கையோடிருப்பது - மகிழ்ச்சியான வாழ்க்கையின் மந்திரங்கள் இவை.

நம்பிக்கைகள் நடத்தி வைக்கும்!

Advertisement
தன்னம்பிக்கை இல்லாதவனின் வாழ்க்கை, காலால் நடப்பதற்கு பதிலாக தலையால் நடப்பதை போன்றது' என்கிறார் எமர்சன். 'நானாவது முன்னேறுவதாவது' என்ற எண்ணம் நமக்குள் தோன்றச் செய்யாமல் இருப்பதில்தான்முன்னேற்றம் இருக்கிறதென உளவியல் ஆய்வாளர்கள்
சொல்கிறார்கள்.

''நம்பிக்கையை
நீங்கள் எங்கு வைத்தீர்கள்?
நரியின் கொம்பில் வைத்தீர்கள்
புலியின் பல்லில் வைத்தீர்கள்
ராசிக்கல்லில் வைத்தீர்கள்
ஜோசியரின் சொல்லில் வைத்தீர்கள்
ஜாதக ஏட்டில் வைத்தீர்கள்
கிளியின் கூட்டில் வைத்தீர்கள்
நம்பிக்கையை நீங்கள்
உங்களுக்குள் வைத்தீர்களா?''

என்று கேட்கிறது ஒரு கவிதை. பாஸ்டர் என்பவர், ''சிலர் தங்கள் முன்னேற்றத்தில் மிக உறுதியான எண்ணத்துடன் ஓர் ஆலமரம் போலிருப்பர். மிகப்பெரும்
புயலாக பிரச்னை வீசினால், வேரோடு சாய்த்து விடுவர். சிலர் நாணல் போல் பிரச்னைகள் எப்படி புயலாக வீசினாலும், இது இயல்பு என அதற்கேற்றபடி வளைந்து தெளிந்து கொடுத்து மீண்டும் தன் எண்ணத்தில் உறுதியில் நிமிர்வர்,'' என்பார். 

ஆங்கில கவிஞர் ஒருவர்கூறுகிறார்.

'தோற்று விடுவோமோ என்று நீ கருதுவாயானால் நிச்சயமாக தோற்றவனே'
உன்னால் ஒரு செயலையும் செய்ய முடியாது என்று நினைப்பாயானால் அக்
காரியத்தை ஒருக்காலும் உன்னால் செய்ய முடியாது. உங்களால் முடியாதென்று நீங்கள் கைவிட்டதை எங்கோ, யாரோ செய்து முடித்திருப்பார்கள். ''தலைவிதியல்ல; தன்னம்பிக்கையே உங்களை உருவாக்குகிறது'' என்கிறார் சுவாமி விவேகானந்தர்.

வெற்றி சூத்திரம் : ஒருகாரியத்தை ஆரம்பிக்க உங்கள் மனம் முடிவெடுத்தவுடன் நீங்கள் செய்ய வேண்டியது; முதலில் அது சம்பந்தப்பட்ட துறைக்குரிய விபரங்களை சேகரியுங்கள். பின்னர் அந்த விபரங்களை பற்றி ஆராயுங்கள். ஆராய்ந்த பின் தீர்மானமாக ஒரு முடிவுக்கு வாருங்கள். அந்த முடிவை திடமான நம்பிக்கை யுடன் செயல்படுத்துங்கள்.இது ஒரு வெற்றி சூத்திரம். இதைப்பயன்படுத்தி உங்கள் செயல்களை திட்டமிட்டு செய்து பாருங்கள். தன்னம்பிக்கையுடன் அதை செயல்படுத்துங்கள். எந்த ஒரு காரியத்தை செய்யும்போது, அதைப்பற்றிய மனச்சித்திரம் ஒன்றை அழுத்தமாக உருவாக்கிக்கொண்டால், அதன் விளைவுகள் சிறப்பாக அமைகின்றன. 'முடியும்' என்ற நம்பிக்கையில்லாமல் எந்த காரியமும் முடிவதில்லை.
'முடியும்' என்ற எண்ணமும், கிடைக்கும் என்ற நம்பிக்கையும் மனிதனுக்கு இருக்கிற மிகப்பெரிய சக்திகளாகும். இந்த நம்பிக்கைகள் செய்கின்ற காரியத்தில் ஊக்கத்தை தோற்றுவிப்பதோடு காரியம் நிகழ்வதற்கு சாதகமாக சூழ்நிலையினையும் உங்களுக்கு உருவாக்கி கொடுக்கிறது. பிரிஸ்டல் என்கிற சிந்தனையாளர், தான் எழுதியுள்ள புத்தகம் ஒன்றில் ஒரு சம்பவத்தை குறிப்பிட்டுள்ளார்.கடலில் மீன் பிடிப்பதற்கு பலரும் செல்கிறார்கள். சிலருக்கு மீன் நிறைய கிடைக்கிறது. வேறு சிலருக்கு அவ்வாறு நிறைய கிடைப்பதில்லை. கடலில் ஒரே இடத்தில் இவர்கள் மீன்
பிடிக்கிறார்கள். ஒரே சமயத்தில் மீன் பிடிக்கிறார்கள். ஒரே மாதிரியான உணவை கடலில் வாரி இறைத்துத்தான் மீன்களை பிடிக்க முயற்சிக்கிறார்கள். ஆயினும் சிலருக்கு மட்டும் மீன் நிறைய கிடைக்கிறது. சிலருக்கு அவ்வாறு கிடைப்பதில்லை.

நம்பிக்கையே வாழ்க்கை : சிலருக்கு தொடர்ந்து நிறைய கிடைத்துக்கொண்டே இருக்கிறது. இதற்கு என்ன காரணம் என்று கேள்வி கேட்கின்ற பிரிஸ்டல் யார், யாருக்கு மீன் எப்போதும் நிறைய கிடைக்கிறதோ, அவர்களிடம் தனிமையில் சென்று பேசிப் பார்த்திருக்கிறார்.
அவர் சொன்ன ஒரு விஷயம் அவரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. 'நாங்கள் நிறைய மீன்கள் கிடைக்க வேண்டும் என்ற ஆசையுடன் மட்டும் செல்வதில்லை. நிறைய கிடைக்கும் என்ற நம்பிக்கை யுடனும் செல்கிறோம்'.மீன் அதிகமாக கிடைக்காதவர்களிடமும் பிரிஸ்டல் பேசிப் பார்த்திருக்கிறார். அவர்களுக்கு இதிலெல்லாம் நம்பிக்கை இருக்கவில்லை என்பதை அவர் தெரிந்துக்கொண்டார்.வாழ்க்கை என்பது நம்பிக்கை யின் மீதுதான் கட்டப்படுகிறது. இந்நம்பிக்கை செயல்படவேண்டுமானால் 'என்னால் முடியும்' என்ற எண்ணத்தோடு தான் நீங்கள் எந்த காரியத்தையும் தொடங்க வேண்டும்.நான் சிலரை பார்த்திருக்கிறேன். ஆக்க ரீதியான கோஷங்களை மேஜையின் முன்னால் எழுதி வைத்திருப்பார்கள். இந்த கோஷங்களை திரும்ப திரும்பப் பார்க்கும்போதும், படிக்கும் போதும் அவர்கள் மனதில் அவை சித்திரமாக படிந்து, செயல்பட அவை அவர்களை ஊக்கப்படுத்துகின்றன.எப்படி பார்த்தாலும் 'முடியும்' என்ற நம்பிக்கையும் அது மனதில் பதியும்போது ஏற்படும் அழுத்தமும் காரிய சாதனைக்கு துணையாயிருக்கின்றன என்பதில் சந்தேகமில்லை. நடக்கும் என்று நம்பினால் நடக்கும், முடியும் என்று முயன்றால் முடியும்.விதைக்கிறவனே அறுக்கிறான். உழைக்கிறவனே ஊதியம் பெறுகிறான். கேட்கிறவனுக்கே கிடைக்கிறது. உழைக்காமல் எந்தக்காரியமும் நடப்பதில்லை. பலன் கிடைக்க வேண்டுமென்று எண்ணுகிறவன் பாடுபடுகின்றவனாகவும் இருக்க வேண்டும்.

வள்ளுவன் வாக்கு 

'மெய்வருத்தக்கூலி தரும்' என்கிறார் வள்ளுவர். உடலை வருத்தினால் அதற்குரிய கூலி கிடைக்கும் என்கிறார் அவர். உழைத்தால் உழைப்பதற்கேற்ற ஊதியம் கிடைப்பது உறுதி
என்கிறார் திருவள்ளுவர். விதியைக்கூட புற முதுகிட்டு ஓடச்செய்துவிட முடியும் என்று வள்ளுவர் சொல்கிறார். சோம்பல் இல்லாமல் தொடர்ந்து முயற்சியை மேற்கொள்கின்றவர்கள் விதியையும் ஓடஓட விரட்டுகின்ற சக்தி படைத்தவர்கள் ஆகி விடுகிறார்கள் என்பது 
வள்ளுவரின் கூற்று.

'ஊழையும் உப்பக்கங் காண்பர் உலைவின்றி
தாழாது உஞற்று பவர்'
என்பது குறள்.எண்ணத்தில் உறுதி இருந்தால் எண்ணிய விஷயங்கள் ஈடேறு கின்றன. நீங்கள் எண்ணுகிறபடியே எல்லாம் நடக்கும். உங்களுடைய எண்ணத்தில் மட்டும் நீங்கள் உறுதியாக இருந்தால் என்று வள்ளுவர் குறிப்பிடுகிறார். ஆக, ஒன்று நடக்க வேண்டுமென எண்ணுவது மட்டும் போதாது. அந்த எண்ணத்தில் அழுத்தமான உறுதி நமக்கு இருக் வேண்டும்.
'எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியர்
திண்ணியர் ஆகப் பெறின்'

எண்ணத்துக்கு உரியவர்கள் உறுதியான மனப்பான்மை உடையவர்களாக இருந்தால், அவர்கள் எதை எண்ணுகிறார்களோ, அது நிச்சயம் நடக்கும் என்பது வள்ளுவர் வாக்கு.
இந்த கண்ணோட்டத்தோடு வரலாற்றை படித்தால், பல உண்மைகள் தெளிவாகும். உலக அளவில் சாதனைகள் புரிந்தவர்கள் மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டியவர்கள் என்று எண்ண வேண்டாம். நம்மை சுற்றிலும் இருக்கிற சாதனையாளர்கள் அனைவரும்கூட, 
நம்பிக்கையை ஆதாரமாகக் கொண்டு வெற்றி பெற்றவர்களே.மரக்கட்டைகளாலான வீட்டில் குடியிருந்த ஆபிரகாம் லிங்கன் அமெரிக்க ஜனாதிபதியாகி வெள்ளை மாளிகையில் குடியேறிய வரலாறு அமெரிக்காவில் மட்டும் நிகழக்கூடிய சம்பவம் என்று நாம் கணக்கு போட 
வேண்டியதில்லை.ஆகவே எண்ணங்களுக்குள்ள வலிமையை நீங்கள் முதலில் நம்ப வேண்டும். பிறகு உங்கள் எண்ணத்தை செயல்படுத்த முடியும் என்ற நம்பிக்கை உங்களுக்கு 
ஏற்பட வேண்டும். இந்த நம்பிக்கை வலிமையாகும்போது, நீங்கள் தானாகவே முயற்சிகளில் ஈடுபடுகிறீர்கள். முயற்சி தொடர தொடர பலன்கள் கிடைக்க ஆரம்பிக்கின்றன. பலன்கள் புதிய நம்பிக்கைக்கு அஸ்தி வாரமாகின்றன. இதுவே ஒரு சக்கர செயல் முறையாகி மேலும் மேலும் வெற்றிகளை குவிக்கும் சக்தி யாக மாற்றம் பெற்று விடுகிறது.எவ்வளவு பாதக மான சூழ்நிலைகளை எதிர்நோக்க வேண்டி இருந்தாலும், ஒரு போதும் அவநம்பிக்கை கொள்ளாதீர்கள். 'முடியாது' என்று சொல்வதற்கு புத்திசாலித்தனம் தேவையில்லை. திறமை தேவையில்லை. முயற்சி தேவையில்லை. உழைப்பு தேவையில்லை.நம்பிக்கையால் மலைகளை அசைக்கலாம். கடல்களை தாண்டலாம். கற்பனைகளை நிஜமாக்கலாம். எண்ணியதை ஈடேற்றிக்கொள்ளலாம். நினைத் ததை முடிக்கலாம். எந்த மனிதனுடைய ஆற்றலும் வெளியிலிருந்து அவனுக்கு கிடைப்பதில்லை.

உங்களால் முடியும் : அவனுக்குள்ளிலிருந்துதான் அதை அவன் பெறுகிறான். அதை பெறுகின்ற ஆசையும் முயற்சியும் அவனுக்கு இருக்க வேண்டும். உங்களால் முடியும் என்று நீங்கள் நம்புங்கள். ஆரம்பத்தில் லேசாக உருவாகும் இந்த நம்பிக்கை காலப்போக்கில் பலமடைய தொடங்கிவிடும்.இப்படி நம்பியவர்கள் மட்டுமே தான் வாழ்க்கையில் முன்னேறி இருக்கிறார்கள். அமெரிக்காவில் ஜான் கென்னடி ஜனாதிபதியாக இருந்தபோது, அவரை சந்திக்க ஒரு இளைஞர் வந்தார். எதிரில்இருந்து இளைஞரை பார்த்து கென்னடி கேட்டார். 'எதிர்காலத்தில் என்ன ஆகலாம் எனத்திட்டமிட்டிருக்கிறீர்கள்'. அந்த இளைஞர் 'பளிச்'சென்று பதில் சொன்னார். 'இப்போது நீங்கள் அமர்ந்திருக்கும் இந்த ஜனாதிபதி இருக்கையில் நான் அமர்வேன் என்ற நம்பிக்கையோடு இருக்கிறேன்'. ஆம்! அந்த இளைஞர்தான் ஜனாதிபதியாக இருந்த பில் கிளிண்டன்.
ஆம். 'முடியுமா என்பது மூடத்தனம் முடியாது என்பது கோழைத்தனம் முடியும் என்பதே மூலதனம்'

முனைவர் இளசை சுந்தரம்
மதுரை. 98430 62817