Friday, November 24, 2017

வெற்றிலை, மருதாணி, அகத்தி... சளித் தொந்தரவு முதல் புற்றுநோய் வரை தடுக்கும் எளிய மூலிகைகள்! VikatanPhotoStory

வெற்றிலை, மருதாணி, அகத்தி... சளித் தொந்தரவு முதல் புற்றுநோய் வரை தடுக்கும் எளிய மூலிகைகள்! VikatanPhotoStory


`என் பையனுக்குத் திடீர்னு மூக்கு ஒழுகிச்சு... நொச்சி இலையை தண்ணிவிட்டுக் கொதிக்கவெச்சு ஆவி பிடிச்சேன். சரியாகிடுச்சு.' இது வெறும் டயலாக் அல்ல. உண்மை. நாம் வீடுகளில் வளர்க்கும் பல செடிகளைச் சாதாரணமாகக் கருதுகிறோம். அவற்றில் பல மூலிகைச் செடிகள்; மருத்துவ குணம் நிறைந்தவை. நமக்கும் நம்மைச் சுற்றி இருப்பவர்களுக்கும் உடல்நலன் காக்க உதவக்கூடியவை. இவற்றை நம் வீடுகளில் எளிதாக வளர்க்கலாம். அந்த மூலிகைகள் என்னென்ன... அவற்றின் பலன்கள் என்னென்ன. பார்க்கலாமா?
துளசி மூலிகை
துளசி
மழைக்காலங்களில் ஏற்படும் நோய்களுக்கு, துளசி ஓர் அருமருந்து. காய்ச்சல், இருமல், தொண்டை கரகரப்பு, நுரையீரல் கோளாறுகளைப் போக்க துளசி கஷாயம், துளசி தேநீர் செய்து குடிக்கலாம். 
தூதுவளை
தூதுவளை
சளித் தொந்தரவுகளைப் போக்கக்கூடியது தூதுவளை. மழைக்காலங்களில் துவையல், சட்னி, சூப் என இதைச் செய்து சாப்பிட்டால் ஜலதோஷம் தீரும். தூதுவளையை அடிக்கடி உணவில் சேர்த்துவருவது புற்றுநோயைக்கூடத் தடுக்கும்.
ஆடாதொடை
ஆடாதொடை
சளி, இருமல், தொண்டைக் கட்டுக்கு ஆடாதொடை நல்மருந்து. இதன் இலையை மட்டும் நீர் சேர்த்துக் கொதிக்கவைத்து, வடிகட்டி தேன் சேர்த்துக் குடித்தால் ஆஸ்துமா, இருமல், காய்ச்சல் குணமாகும். காச நோயாளிகள் 40 நாள்கள் தொடர்ந்து இதைச் சாப்பிட்டால் அதன் தீவிரம் குறையும்.
ஓமவல்லி
ஓமவல்லி
இருமல், சளி, ஜலதோஷத்துக்கு ஓமவல்லி முக்கிய மருந்து. இதன் இலைச்சாற்றை லேசாகச் சூடுபடுத்தி தேன் கலந்து குழந்தைகளுக்குக் கொடுத்தால் இருமல், மார்புச் சளி சரியாகும். மழைக்காலத்தில் மாலை நேரச் சிற்றுண்டியாக ஓமவல்லி பஜ்ஜி செய்து சாப்பிடலாம்.
கற்றாழை
கற்றாழை
கற்றாழை ஜூஸ் சாப்பிட்டால் மலச்சிக்கல், செரிமானக் கோளாறுகள் விலகும். சர்க்கரை நோயாளிகள் தினமும் கற்றாழை ஜூஸ் அருந்தினால், சர்க்கரையின் அளவை சீராக வைத்திருக்கலாம். கற்றாழையின் வேர் தாம்பத்ய உறவு மேம்பட உதவும்.
வெற்றிலை
வெற்றிலை
குழந்தைகளுக்கு சளி, இருமலின்போது, ஒரு வெற்றிலையுடன் ஐந்து துளசி இலை சேர்த்து சாறு பிழிந்து 10 சொட்டுக் கொடுத்தால் குணமாகும். நெஞ்சுச்சளி இருந்தால் அது மலத்துடன் வெளியேறிவிடும். பாம்பு கடித்தவருக்கு வெற்றிலைச் சாறு கொடுத்தால், விஷம் முறிந்துவிடும்.
நொச்சி
நொச்சி
நொச்சி இலையை நீரில் போட்டு கொதிக்கவைத்து, ஆவி பிடித்தால் சளி, இருமல் விலகும். தலையணையின் அடியில் நொச்சி இலையை வைத்துத் தூங்கினால் தலைபாரம், சைனஸ் தொந்தரவு நீங்கும்  மிளகு, பூண்டுடன் நொச்சி இலையைச் சேர்த்து மென்று தின்றால் ஆஸ்துமா குணமாகும்.
செம்பருத்தி
செம்பருத்தி
செம்பருத்திப் பூக்களை ஜூஸ் அல்லது தேநீராக்கிப் பருகினால் ரத்த அழுத்தம் குறையும். செம்பருத்தி இலை, பூக்களை வெறுமனே அரைத்துப் பூசினால் முடி உதிர்தல் பிரச்னை தீரும். இதைத் தேங்காய் எண்ணெயில் காய்ச்சியும் பயன்படுத்தலாம். செம்பருத்தி ஓர் இயற்கையான தங்கபஸ்பம்.
மருதாணி
மருதாணி
மருதாணி இலையை மையாக அரைத்து கைகளில் போட்டுக்கொண்டால் உடல் வெப்பம் தணியும். நோய்கள் வராமல் தடுக்கும். அடிக்கடி மருதாணி போடுவது மனநோய் வராமல் தடுக்கும். ஆறாத வாய்ப்புண், அம்மைப்புண்ணுக்கு மருதாணி இலையை அரைத்து, நீரில் கரைத்து, வாய் கொப்பளிக்கலாம். தலையணைக்கடியில் மருதாணிப்பூவை வைத்தால் நன்றாகத் தூக்கம் வரும். 
மஞ்சள் கரிசலாங்கண்ணிவெள்ளை கரிசலாங்கண்ணி
கரிசலாங்கண்ணி
குழந்தைகளுக்கு வரும் சளித்தொல்லையைப் போக்க இரண்டு சொட்டு கரிசலாங்கண்ணி இலைச்சாற்றுடன் எட்டு சொட்டு தேன் கலந்து குடிக்கலாம். மலச்சிக்கல் தீர கரிசாலை இலையைப் பருப்பு சேர்த்துக் கடைந்து நெய் சேர்த்து சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம். நோய்கள் வராமலிருக்க கீரையைச் சமைத்தோ, சாறு எடுத்துக் குடிப்பதோ நல்லது.
நிலவேம்பு
நிலவேம்பு
நிலவேம்பு முழு தாவரத்தையும் நீர்விட்டு, கொதிக்கவைத்து 30 மி.லி வீதம் காலை, மாலை வேளைகளில் மூன்று நாள் சாப்பிட்டால் காய்ச்சல் குணமாகும். நிலவேம்பு இலைச்சாறு அரை டம்ளர் வீதம் மூன்று நாள்கள் காலை, மாலை எனக் குடித்தால் கல்லீரல் தொடர்பான நோய்கள் குணமாகும்.
பிரண்டை
பிரண்டை
பிரண்டையைச் சிறு துண்டுகளாக நறுக்கி, நல்லெண்ணெய் அல்லது நெய்யில் வதக்கி உப்பு, புளி, காரம் சேர்த்துத் துவையலாக அரைக்கலாம். இதைச் சாப்பிட்டால் உடல் சுறுசுறுப்பாகும்; மூளை நரம்புகள் பலப்படும்; குடல் வாயுவை அகற்றும். குழந்தைகளுக்குக் கொடுத்தால் எலும்புகள் பலப்படும்.
திருநீற்றுப் பச்சிலை
திருநீற்றுப் பச்சிலை
நறுமணம் வீசும் இந்தச் செடியின் இலைகளை அரைத்து, கட்டிகளின் மீது பூசினால் சட்டென கரையும். தலைவலி, இதய நடுக்கம், தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள் இதன் இலையை வெறுமனே முகர்ந்தால் பிரச்னை சரியாகும். இலையை மென்று சாப்பிட்டால் வாய்ப்புண் சரியாகும்.
முடக்கத்தான்
முடக்கத்தான்
மழைக்காலங்களில் செழித்து வளரும் முடக்கத்தான் கீரையை அரைத்து, தோசை மாவுடன் கலந்து தோசை செய்து சாப்பிடலாம். இலையை நீர்விட்டு, கொதிக்கவைத்து உப்பு, மிளகுத் தூள் சேர்த்து சூப் செய்தும் அருந்தலாம். இதனால் மூட்டுவலி, முடக்கு வாதம், நரம்புத் தளர்ச்சி விலகும்.
கல்யாண முருங்கை
கல்யாண முருங்கை
கல்யாண முருங்கை இலைச்சாறு 30 மி.லி அளவு எடுத்து வெறும் வயிற்றில் 10 நாள்கள் குடித்தால் மாதவிடாயின்போது ஏற்படும் வயிற்றுவலி குணமாகும். குழந்தை பெற்ற பெண்களுக்கு பால் அதிகமாகச் சுரக்க கல்யாண முருங்கை இலையைத் தேங்காய் எண்ணெயில் சமைத்துச் சாப்பிடலாம்.
நித்திய கல்யாணி
நித்திய கல்யாணி
ஐந்து நித்திய கல்யாணிப் பூக்களை அரை லிட்டர் நீரில் போட்டுக் காய்ச்சி கால் லிட்டராக்க வேண்டும். அதை ஒரு நாளைக்கு நான்கு வேளை குடித்தால் அதிக தாகம், அதிக சிறுநீர்ப்போக்கு மற்றும் அதனால் ஏற்படும் உடல் பலவீனம் சரியாகும். இதன் வேர்ச்சூரணம் ஒரு சிட்டிகை எடுத்து வெந்நீரில் கலந்து சாப்பிட்டால் சிறுநீர்ச் சர்க்கரை குறையும்.
அம்மான் பச்சரிசி
அம்மான் பச்சரிசி
அம்மான் பச்சரிசியின் பாலை முகத்தில் தடவினால் முகப்பரு குணமாகும். கால் ஆணி, பித்த வெடிப்பு மறையவும் இதன் பாலைப் பூசலாம். தாய்ப்பால் சுரப்பு குறைந்தவர்கள் அம்மான் பச்சரிசியின் செடிகளை அரைத்து எலுமிச்சைப் பழ அளவு எடுத்து பாலுடன் கலந்து காலை, மாலை சாப்பிட்டால் பால் சுரக்கும்.
அகத்தி
அகத்தி
அகத்திக் கீரையை வாரம் ஒரு முறை சமைத்துச் சாப்பிட்டால், வெயிலில் அலைவதால் ஏற்படும் உடல் வெப்பம், மலச்சிக்கல், காபி, டீ குடிப்பதால் ஏற்படும் பித்தம் ஆகியவை விலகும். அகத்திக்கீரையைத் தேங்காய்ப்பால் சேர்த்து அரைத்து, தேய்த்துக் குளித்தால்,  கண்களுக்குக் கீழே காணப்படும் கருவளையம் மறையும்.
கீழாநெல்லி
கீழாநெல்லி
கீழாநெல்லியை (50 கிராம்) நன்றாகக் கழுவி 200 மி.லி எருமைத் தயிரில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட மஞ்சள்காமாலை குணமாகும். மருந்து சாப்பிடும் மூன்று நாள்களும், உணவுடன் மோர் சேர்க்க வேண்டும். கீழாநெல்லியுடன் கற்கண்டு சேர்த்து அரைத்து காலை, மாலை என நான்கு நாள்கள் சாப்பிட சிறுநீர் தொடர்பான நோய்கள் குணமாகும்.
சீந்தில் கொடி
சீந்தில் கொடி
சீந்திலின் முதிர்ந்த கொடிகளை உலரவைத்துப் பொடியாக்கி காலை, மாலை அரை டீஸ்பூன் பாலுடன் சேர்த்துச் சாப்பிட்டால் உடல் பலம் பெறும். இதைப் பனங்கற்கண்டுடன் சேர்த்துச் சாப்பிட சர்க்கரைநோயால் ஏற்படும் கை கால் அசதி, உடல் மெலிவு, அதிக தாகம் போன்றவை சரியாகும்.
தவசி முருங்கை
தவசி முருங்கை
தவசி முருங்கை இலைச் சாற்றைச் சாப்பிட்டால், மூக்கில் நீர் வடிதல், உள்நாக்கு இருமல், இரைப்பு போன்றவை குணமாகும். தவசி முருங்கை இலை ஒரு கைப்பிடி, சிறிது உப்பு, மிளகு சேர்த்து அரைத்துப் பிழிந்த சாற்றுடன் தேன் சேர்த்து ஒரு டீஸ்பூன் வீதம் கொடுத்தால் குழந்தைகளுக்கு வரும் வயிற்று உப்புசம் உடனே சரியாகும்.
திப்பிலி
திப்பிலி
திப்பிலியில் அதன் பூக்கள்தான் மருந்தாகப் பயன்படுகின்றன. இதை வறுத்துப் பொடியாக்கி ஒரு சிட்டிகை தேனுடன் கலந்து சாப்பிட்டால் இருமல், தொண்டைக் கமறல், பசியின்மை சரியாகும். திப்பிலியைப் பொடியாக்கி 1:2 என்ற விகிதத்தில் நெய்யுடன் கலந்து சாப்பிட ஆண்மை பெருகும்.
தொட்டாற் சிணுங்கி
தொட்டாற் சிணுங்கி
தொட்டாற் சிணுங்கியை களிமண்ணுடன் சேர்த்து அரைத்து பற்றுப் போட்டால் வாத வீக்கம் நீங்கும். கீல் வாதத்துக்கும் இது நல்ல மருந்து. இதன் இலை, வேரைச் சம அளவு எடுத்து உலரவைத்து பொடியாக்கி 10 முதல் 15 கிராம் வரை பசும்பால் சேர்த்துச் சாப்பிட்டால் மூலம், சிறுநீர் நோய்கள் குணமாகும்.
நேத்திரப் பூண்டு
நேத்திரப் பூண்டு
நேத்திரப் பூண்டு மூலிகையைப் பொடியாக நறுக்கி, செம்பு பாத்திரத்தில் போட்டு அது மூழ்குமளவு நல்லெண்ணெய் ஊற்றி பத்து நாள்கள் வெயிலில் வைத்து எடுத்து வடிகட்டவும். இதில் 2, 3 சொட்டுகள் காலை, மாலை கண்களில் விட்டுவந்தால் 96 விதமான கண் நோய்கள் சரியாகும். மெட்ராஸ் ஐ நோயும்கூட குணமாகும்.
பவளமல்லி
பவளமல்லி
பவளமல்லி இலைகள் ஐந்து எடுத்து, நீர்விட்டு அலசி சிறிது இஞ்சி, பனங்கற்கண்டு சேர்த்துக் கொதிக்கவைக்க வேண்டும். இதை வடிகட்டி, தினமும் இரண்டுவேளை குடித்தால் சிக்குன் குனியா, டெங்கு உள்ளிட்ட காய்ச்சல்கள் சரியாகும். ரத்தத் தட்டணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்; சளி, இருமல் கட்டுக்குள் வரும்.
லெமன்கிராஸ்
லெமன்கிராஸ்
லெமன்கிராஸ் இலை இரண்டை எடுத்து மூன்று கிராம்பு, லவங்கப்பட்டை - மஞ்சள்தூள் சிறிது, பாலுடன் சேர்த்துக் கொதிக்கவைத்து வடிகட்டவும். இதைக் குடித்தால் காய்ச்சல், இருமல், சளி குணமாகும். இதன் இலையுடன் தேயிலை, இஞ்சி, நாட்டுச்சர்க்கரை சேர்த்து நீர்விட்டுக் கொதிக்கவைத்து, தேநீர் போலவும் செய்து அருந்தலாம்.
ஊமத்தை
ஊமத்தை
ஊமத்தை இலைகளை நல்லெண்ணெயில் வதக்கி ஒத்தடம் போட்டால் கீல் வாயு குணமாகும். அரை லிட்டர் தேங்காய் எண்ணெயில் அரை லிட்டர் ஊமத்தை இலைச் சாறு சேர்த்து நீர் வற்றும் வரை காய்ச்ச வேண்டும். இது குளிர்ந்ததும் பத்திரப்படுத்தி புண்கள், அழுகிய புண்களின் மீது வெளிப்பூச்சாகத் தடவினால் குணமாகும்.
நன்றி: சித்ரா மோகன்குமார்,

Saturday, November 18, 2017

செப்பு பாத்திரத்தில் உள்ள மருத்துவ குணங்களை கூறும், இயற்கை ஆர்வலர் நாச்சாள் thanks to dinamalar.com

Advertisement
சொல்கிறார்கள்
தொற்றுநோய்களும்பரவாது!

செப்பு பாத்திரத்தில் உள்ள மருத்துவ குணங்களை கூறும், இயற்கை ஆர்வலர் நாச்சாள்: உடல் சீராக இயங்க தேவையான நொதிகளையும், அமினோ அமிலங்களையும் உருவாக்க, உடலுக்கு செப்புத் தாது அவசியம். 
இதை, உடல் தானாகவே உற்பத்தி செய்ய முடியாது; அதனால் தான், அந்த காலத்திலேயே செப்பு பாத்திரங்களை, நம் முன்னோர் பயன்படுத்தினர்.
தண்ணீரை, செப்பு குவளை அல்லது பாத்திரத்தில் ஊற்றி வைத்தால், நீரிலிருக்கும் தீமை செய்யும் நுண்ணுயிர்கள், நான்கு மணி நேரத்தில் அழிந்துவிடும். 
செப்பு பாத்திரத்தில் சேமித்து வைத்த நீரை பருகினால், உடலில் இருக்கும் கழிவு, நச்சுக்கள், உடலுக்கு தீமை செய்யும் நுண்ணுயிரிகள், உடலை விட்டு வெளியேறும்.
செப்பு கலந்த நீரால், தண்ணீரில் பரவும் தொற்று நோய்களும் பரவாது. தொடர்ந்து செப்பு பாத்திரத்தில் தண்ணீரை சேமித்து வைத்திருந்து அருந்தி வர, டைபாய்டு, மலேரியா, 'டெங்கு' போன்ற நோய்களில் இருந்தும், நம்மை காக்க முடியும்.
இரும்பு சத்தை உடல் உட்கிரகிக்க, உடலில் உள்ள ரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்ய, செப்பு அவசியமாகிறது. 
மேலும், ரத்தத்தில் உள்ள நச்சுக்களை அகற்றி, ரத்தத்தை துாய்மையாக்குகிறது. உடலில் உள்ள பல வகையான ஹார்மோன் சுரப்பிகள் சீராகச் சுரக்கவும் உதவுகிறது.
மாதவிடாய் காலங்களில், பெண்களுக்கு ஏற்படும் சோர்வுகளுக்கும், தைராய்டு குறைபாடுகளுக்கும் மாமருந்தாகிறது. உடல் பருமன், தேவையற்ற கொழுப்புக்கு, செப்பு சிறந்த நிவாரணியாக அமைகிறது.
மூட்டு வலி, எலும்பு வீக்கத்தை சீராக்கும் செப்பு தாது, புற்று நோய் போன்ற உயிரை கொல்லும் நோய்களை அழிக்கும், வெள்ளை அணுக்களை உற்பத்தி செய்யவும் அவசியமாகிறது. தொடர்ந்து செப்பு நீரை அருந்த, புற்றுநோயை உருவாக்கும் செல்கள் அழிக்கப்படுகின்றன.
குழந்தைகளின் கவனக்குறைவு, வயதிற்கு மிஞ்சிய அதிவேகம், இவற்றுக்கு செப்பு குறைபாடே காரணமாகிறது. தொடர்ந்து, குழந்தைகளுக்கு செப்பு பாத்திரத்தில் சேமித்த நீரை கொடுக்க, அவர்களின் மூளை வளர்ச்சியும், அதிவேகமும் சீராகும். 
உடலில் ஏற்படும் சிறு சிறு காயங்களை குணப்படுத்துவதிலும், தோலின் ஆரோக்கியத்தைக் காப்பதிலும், இதன் பங்கு மகத்தானது.
குழந்தைப்பேறு காலத்தில், பெண்களுக்கு ஏற்படும் ரத்த சோகைக்கும், அதிக இரும்பு சத்துக்கும் செப்பு நீரே போதுமானது. குழந்தை ஆரோக்கியமாக வளர, இது ஓர் இயற்கை வழி. 
உடலில் ஏற்படும் மரபணு குறைபாட்டிற்கும், சிறந்த நிவாரணம் தருகிறது. செப்பு கலந்த நீர் சிறந்த, 'ஆன்டி ஆக்சிடென்ட்' ஆக இருக்கிறது. கண், தோல் ஆகியவற்றை காக்கிறது.
முக்கியமாக, புளி, எலுமிச்சை, சாம்பலால் செப்பு பாத்திரத்தை ஒவ்வொரு நாளும் சுத்தப்படுத்தி, நன்கு காய வைத்து பயன்படுத்த வேண்டும்.

அளவோடு சமைத்துஅன்றேசாப்பிடலாம்!

பிரிஜ்ஜில் உணவு பொருட்களை வைப்பது குறித்து கூறும், டாக்டர் அபிராமி: பரபரப்பான வாழ்க்கையில் பலரும் பிரிஜ்ஜை, பீரோ மாதிரி பயன்படுத்துகின்றனர். காய்கறி, பழம், குழம்பு, சட்னி, தின்பண்டங்கள் என, அனைத்தையும் வைத்து, குப்பைத் தொட்டியாய் மாற்றி விடுகின்றனர்; இது, முதல் ஆபத்து.

பொதுவாக, 3 - 7 டிகிரி வெப்பநிலையில் தான், உணவை பதப்படுத்தி வைக்க முடியும். ஆனால், நம் நாட்டு தட்பவெப்பநிலையில், அடிக்கடி பொருட்களை எடுக்க, பிரிஜ்ஜை திறந்து மூடுவதால், சமனற்றவெப்பநிலை ஏற்படும்; இதனால் உணவின் தன்மை கெடும்.ஆனால், பிரிஜ்ஜில் வைத்திருப்பதால் கெடாது என நினைத்து, சாப்பிட்டு, ஆபத்தை தேடிக் கொள்கிறோம். பிரிஜ்ஜில் மூன்று நாட்கள் காய்கறி, பழங்களை வைத்து எடுக்கும்போது, அதில் உள்ள நீர் சத்து குறைந்து சுருங்கி விடும்; அதிலிருக்கும் வைட்டமின் சத்து, கிடைக்காமல் போய் விடும்.

தமிழ் மருத்துவ பாரம்பரியம், 'முதல் நாள் செய்த உணவு, அமிர்தமாக இருந்தாலும் கூட, அடுத்த நாள் சாப்பிடக் கூடாது' என்று கூறுகிறது. அதனால், அளவோடு சமைத்து, அன்றே சாப்பிட்டுவிட வேண்டும்.பழங்களை பிரிஜ்ஜில் வைக்கக் கூடாது. அதற்கு பதிலாக, மண்பானையில் வைத்தால், மூன்று நாளுக்கு அப்படியே இருக்கும். காய்கறி, இட்லி மாவு வேண்டுமானால், இரண்டு நாள் வைக்கலாம்.

மேலும், சூடாக சமைத்து அப்படியே வைக்கக் கூடாது; ஜில்லென வெளியே எடுத்து, உடனே சூடுபடுத்தக் கூடாது. இதனால், உணவுப் பொருளின் உயிர் சத்து போய்விடும்.பிளாஸ்டிக் பாத்திரத்தில், ஈரமாக உள்ள உணவுப் பொருட்களை வைக்கக் கூடாது. பிளாஸ்டிக், அதிக வெப்பம் என்றால் உருகுவது போல், அதிக குளிர்ச்சி யிலும் உருகி, உணவுப் பொருளில் சேர்ந்து ஆபத்தை உண்டாக்கும். எப்போது சமைத்தாலும், காய்கறிகளை வதக்கி சமைப்பது தான் நல்லது. 

பிரிஜ்ஜில், பூச்சி உருவாகும் பொருட்களான கோதுமை மாவு, கடலை மாவு, அரிசி மாவு, ரவை, மிளகாய் துாளை, கண்ணாடி பாட்டிலில் போட்டு, மூன்று மாதம் வரை வைக்கலாம். மேலும், பிரிஜ்ஜில் கிருமிகள் தங்கியிருக்கும் என்பதால், வினிகர், எலுமிச்சம் பழம் போட்டு சுத்தம் செய்ய வேண்டும்.
குறிப்பாக, 10, 20 நாட்கள், ஓராண்டு என பதப்படுத்தப்பட்ட ரெடிமேட் உணவுகளை சாப்பிடுபவர்களை, பார்த்ததுமே கண்டுபிடித்து விடலாம். டென்ஷனாகி, சிடு சிடு என்று எரிந்து விழுவர்; குழந்தைகள் அதிக துரு துரு என இருப்பர்.
இவர்களுக்கு நாளடைவில் வயிற்று கோளாறு, ஜீரண உறுப்பு பாதிப்பு, குடல் நோய், மிக முக்கியமாக உயிருக்கே ஆபத்தாக முடியும் புற்றுநோய் என, பல ஆபத்துகள் வரும்.

Monday, November 13, 2017

இலவசமாக கொடுப்பதால் மதிப்பு தெரியவில்லை! thanks to dinamalar.com

சொல்கிறார்கள்

 பதிவு செய்த நாள் : நவ 14, 2017 
Advertisement
 
 
Advertisement
 
8

 
Advertisement
  சொல்கிறார்கள்
இலவசமாக கொடுப்பதால் மதிப்பு தெரியவில்லை! 
கறிவேப்பிலையில் உள்ள மருத்துவ பயன் குறித்து கூறும், இயற்கை மருத்துவர், எஸ்.நந்தினி: கறிவேப்பிலையில் உள்ள, 'கார்பசோஸ்' என்ற ஆல்கலாய்டுகள், கருமுட்டை உற்பத்தியை துாண்டுகிறது. 20 கிராம் கறிவேப்பிலையுடன், 3 கிராம் சீரகம், 1 கிராம் வெந்தயம் சேர்த்து அரைத்து, காலையில், வெறும் வயிற்றில் மோர் அல்லது பாலில் கலந்து குடித்து வந்தால், பித்த மற்றும் கருப்பை சூடு சரியாகும்.இரும்பு சத்து, பீட்டா கரோட்டின் அதிகம் உள்ள கறிவேப்பிலை, ரத்த சோகையை குணப்படுத்துவதோடு, நோய் எதிர்ப்பு சக்தியையும் தருகிறது.முடி கொட்டுவதைத் தவிர்க்க, செரியாமையைப் போக்க, 'அமீபியாசிஸ் 3' எனப்படும் ஒரு வகை வயிற்றுப் போக்கைக் குணப்படுத்த, வயோதிகத்தில் வரும், 'அல்சைமர்' எனும் ஞாபக மறதியைக் குறைக்கும் இன்றியமையாத மூலிகை, கறிவேப்பிலை.உடலில் உள்ள கொழுப்பு மற்றும் பித்தத்தின் அளவை சீர்படுத்தி, பித்தப்பைக் கற்கள் உருவாகாமல் தடுக்கிறது. கல்லீரல் மற்றும் கணையத்தை பலப்படுத்துகிறது.ரத்த சர்க்கரை அளவை, 42 சதவீதமும், ரத்தக் கொழுப்பை, 30 சதவீதமும் கறிவேப்பிலை குறைப்பதாக, சமீபத்திய ஆய்வு கூறுகிறது. கறிவேப்பிலையில் சிறிது நீர் சேர்த்து, சங்கால் அரைத்து முகப்பருவில் தடவினால், பருக்கள் மறையும்.இளநரையை கறிவேப்பிலை தடுக்கிறது. கறிவேப்பிலை சாறு அருந்தி வர, கண்களைப் பாதுகாத்து ஒளி ஊட்டி, கண்புரை நோய் ஏற்படாமல் தடுக்கிறது.
கறிவேப்பிலை மற்றும் மிளகு சேர்த்து, தினமும் மூன்று மாதங்கள் பருகி வர, இடுப்பு மற்றும் வயிற்றை சுற்றியுள்ள தளர்ந்த உடலை குறைத்து, அழகை மேம்படுத்தும்.கறிவேப்பிலை - 100 கிராம், மிளகு - 5 கிராம், சீரகம் - 5 கிராம், தோல் நீக்கிய சுக்கு - 2 கிராம், பெருங்காயம் - 2 கிராம் என, அனைத்து பொருட்களையும் தனித்தனியே இளம் வறுவலாக வறுத்து, உப்பு சேர்த்து அரைத்து துாள் செய்து கொள்ளவும். 
தினமும் பகல், இரவு இரண்டு நேரமும் ஒரு தேக்கரண்டி அளவு உணவில் சேர்க்க, வயிற்றுப் பொருமல், வாயுத்தொல்லை, பித்த வாயு, மந்தம், அஜீரணம் சரியாகும்.கறிவேப்பிலை பொடியுடன் சிறிது சர்க்கரைப் பொடி கலந்து, காலை, மாலை, ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வர, நீர்க்கோவை, சூதக வாயு தீரும். சிறிதளவு கறிவேப்பிலையுடன் கஸ்துாரி மஞ்சள், கசகசா, பட்டை சேர்த்து அரைத்து, அம்மை நோயால் வந்த தழும்புகளில் தேய்த்து வந்தால், தழும்பு மறையும்.
கறிவேப்பிலையில் உள்ள சத்து, மருத்துவ நற்குணம் தெரியாமல் நாம், தட்டின் ஓரம் ஒதுக்கி விடுகிறோம். காய்கறி வாங்கும்போது இலவசமாக கொடுப்பதால், அதன் மதிப்பை உணரவில்லை. இனியாது கறிவேப்பிலையின் மகத்துவம் அறிந்து உபயோகிப்போம்.

Tuesday, November 7, 2017

சமைப்பதை போல சாப்பிடுவதும் ஒரு கலை!

உணவை மனநிறைவோடு, மகிழ்ச்சியாக சாப்பிடுவதன் அவசியம் குறித்து விளக்கும், உணவியல் நிபுணர், அனிட் பியாட்ரிஸ்: உணவில் கவனம் இல்லாமல் ஏனோ தானோ என்று சாப்பிடுவதால் தான், இன்று பல்வேறு நோய்கள் உண்டாகின்றன.செய்ய வேண்டிய வேலையையோ அல்லது செய்து முடித்த வேலைகளைப் பற்றியோ சிந்திக்கக் கூடாது. சாப்பிடும்போது நம் கவனம் முழுக்க, உணவின் மீது மட்டுமே இருக்க வேண்டும். உட்கார்ந்து தான் சாப்பிட வேண்டும். நின்றோ அல்லது நடந்தோ சாப்பிட்டால், நாம் எவ்வளவு சாப்பிடுகிறோம் என்ற அளவு தெரியாது. வேக வேகமாகச் சாப்பிடவும் தோன்றும்.'டிவி' மற்றும் கம்ப்யூட்டர், மொபைல் போனை பார்த்துக் கொண்டோ, புத்தகங்களைப் படித்துக் கொண்டோ சாப்பிட்டால், நம் கவனம் முழுக்க அவற்றின் மீது தான் இருக்கும். இதன் காரணமாக நமக்கு தேவையான அளவில், ஆரோக்கியமான, சத்தான உணவுகளை சாப்பிட முடியாமல் போகும்.மேலும், நமக்கு வேண்டிய உணவை, நாமே எடுத்துப் போட்டு சாப்பிடுவதால், அளவும், நமக்கு தேவையான உணவும் சரியாக கிடைக்கும். தேவைக்கு அதிகமாக உண்ணும்போது, உடல் பருமன் ஏற்பட வாய்ப்புள்ளது. சிறிய தட்டில் தான், உணவைப் பரிமாறிக் கொள்ள வேண்டும்.உணவை, அதன் அருமையை உணர்ந்து சாப்பிட வேண்டும். சாப்பாட்டுக்குத் தேவையான பொருட்களை விளைவிக்கும் விவசாயிகளை, நமக்காக கஷ்டப்பட்டு சமைத்து தருவோரின் உழைப்பை நினைத்துப் பார்க்க வேண்டும். அதன் அருமையை உணர்ந்து சாப்பிடும் போது, உணவை வீணாக்க மனம் வராது.ஒவ்வொரு முறை உணவையும், 30 முறையாவது மென்று சாப்பிட வேண்டும். மெல்லாமல் அப்படியே விழுங்கினால், உணவில் உள்ள நுண்ணுாட்டச் சத்துக்கள் நமக்கு கிடைக்காது. வேக வேகமாக சாப்பிட்டால், செரிமானக் கோளாறுகள் ஏற்படும். அதனால் தான் நம் முன்னோர், 'நொறுங்கத் தின்றால் நுாறு ஆயுசு' என்று சொல்லி வைத்து இருக்கின்றனர்.வேக வேகமாக சாப்பிடுவதற்கு, ஸ்பூனால் சாப்பிடுவதும் ஒரு காரணம். அதற்காக, ஸ்பூனால் சாப்பிடவே கூடாது என்று அர்த்தமல்ல. ஒரு வாய் உணவை சாப்பிட்ட பின், ஸ்பூனை வைத்து விட வேண்டும். அப்போது தான் பொறுமையாக, மென்று சாப்பிட முடியும். தட்டில் போட்ட உணவு முழுவதையும் சாப்பிட்டு விட வேண்டும்.இவற்றோடு நாம் சாப்பிடும் உணவுகள், சரிவிகித உணவாக இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். மாவுச்சத்து, புரதச்சத்து, கொழுப்புச் சத்து ஆகியவை உணவில் நிறைந்திருக்க வேண்டும். காய்கறிகள், பழங்களை அதிகமாக சாப்பிட வேண்டும். தினமும் பால் குடிப்பது நல்லது.சமைப்பதை போலச் சாப்பிடுவதும் கூட, ஒரு கலை தான். அதனால் உணவின் நிறம், மணம், வடிவம் ஆகியவற்றை ரசித்து, ருசித்து உண்ண வேண்டும்.

Sunday, November 5, 2017

மழைக்கால நோய்களைத் தடுக்கும் 6 கஷாயங்கள்! நீங்களே தயாரிக்கலாம்

னமழை வெளுத்து வாங்குகிறது. தெருக்கள் குளங்களாகிவிட்டன. கூடவே கழிவுநீரும் கலப்பதால் கொசுக்களும் கிருமிகளும் பெருகி, வைரஸ் காய்ச்சல்களும், வயிற்றுப்போக்கு, காலரா, மஞ்சள் காமாலை போன்ற நோய்களும் வரிசையாகப் படையெடுக்கத் தொடங்கிவிடும். ஏற்கனவே டெங்கு வெளுத்து வாங்கிக்கொண்டிருக்கிறது. இந்த ஈரப்பதமான சூழல் மேலும் கிருமிகள் அதிவேகமாகப் பரவ ஏதுவாகிவிடும். விளைவு, நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்தவர்கள் எளிதில் பாதிக்கப்படுவார்கள்.  
மழைக்கால நோய்
தொற்றுநோய்கள் பரவாமல் இருக்க, இதுபோன்ற பருவகாலங்களில் நம் முன்னோர் பல்வேறு வீட்டு வைத்தியங்களைச் செய்வார்கள். வீட்டிலோ, வீட்டுக்கு அருகிலோ கிடைக்கும் பொருட்களை வைத்தே கசாயம் செய்து அதன் மூலம் நோய்களை  அண்டாமல் விரட்டிசித்த மருத்துவர் வேலாயுதம் விடுவார்கள். 
அப்படியான சக்தியும் சத்தும் மிகுந்த பாரம்பரியமான சில கஷாயங்களின் செய்முறைகளையும், பலன்களையும் விளக்குகிறார் சித்த மருத்துவர் வேலாயுதம்.
சுக்கு - மல்லி கசாயம்
தேவையானவை:
சுக்கு - 10 கிராம்,
மல்லி - 20 கிராம்,
சீரகம் - 5 கிராம்.
செய்முறை:
சுக்கு, மல்லி, சீரகத்துடன் நான்கு டம்ளர் தண்ணீர் சேர்த்து, ஒரு டம்ளராக வற்றும் அளவு கொதிக்க வைத்து வடிகட்ட வேண்டும். அதை ஆறவைத்தோ, மிதமான சூட்டிலோ பருகலாம். பனைவெல்லம் சேர்த்தும் குடிக்கலாம். இந்தக் கசாயத்தை உணவுக்குப் பின் காலை, மாலை இருவேளை குடிக்க வேண்டும்.
பலன்கள்:
மழைக்காலங்களில் வரும் செரிமானப் பிரச்னைகளை தீர்க்க உதவும். வயிறு மந்தமாவதைத் தடுக்கும்.
அறுகம்புல்  கசாயங்கள்
அறுகம்புல் கசாயம்
தேவையானவை:
அறுகம்புல் - ஒரு கைப்பிடி,
மிளகு - 10
செய்முறை:
அறுகம்புல்லையும் மிளகையும் இடித்து தண்ணீர் விட்டு நான்கில் ஒரு பங்காகும் வரை காய்ச்சி வடிகட்டிக் குடிக்கலாம்.  இந்தக் கசாயத்தை உணவுக்கு முன் குடிக்க வேண்டும்.
பலன்கள்:
மழைக்கால பூச்சிக்கடிக்கு நல்ல மருந்தாகும். 

சீரகம் - ஓமக் கசாயம்
தேவையானவை:
ஓமம் - 20 கிராம்,
சோம்பு - 10கிராம்,
சீரகம் - 5 கிராம், 
உத்தாமணி (வேலிப்பருத்தி) இலை - சிறிதளவு
செய்முறை:
ஓமம், சோம்பு, சீரகம் ஆகிய மூன்றையும் தண்ணீர் சேர்த்து நான்கில் ஒரு பங்காகும் வரை காய்ச்ச வேண்டும். நீர் கொதிக்கும்போது, அதில் உத்தாமணி இலையைப் போட்டு இறக்கி வடிகட்டிக் குடிக்கலாம். 
பலன்கள்:
குழந்தைகளுக்கு ஏற்படும் வாந்தி, நெஞ்செரிச்சல், செரிமானப் பிரச்னைகளுக்கு சிறந்த நிவாரணம் தரும். 
கஷாயங்கள்
ஆடாதொடை கசாயம்
தேவையானவை: 
ஆடாதொடை  இலைகள்- 10,
சுக்கு - 10 கிராம்,
மிளகு - 10 கிராம்,
கிராம்பு (லவங்கம்) - 5 கிராம்
செய்முறை:
ஆடாதொடை இலைகள், சுக்கு, மிளகு, கிராம்பு நான்கையும் சேர்த்து தண்ணீர் விட்டு அந்த தண்ணீர் நான்கில் ஒரு பங்காகும்வரை காய்ச்சி வடிகட்டிக் குடிக்கலாம்.
பலன்கள்:
தொண்டைக் கரகரப்பு, மார்புச் சளி, மூச்சிரைப்பு (wheezing ) ஆகிய பிரச்னைகளுக்கு நல்ல பலன் தரும்.
வெற்றிலை  கசாயங்கள்

கற்பூர வள்ளி - வெற்றிலை கசாயம்
தேவையானவை:
கற்பூரவள்ளி இலை- 4,  வெற்றிலை - 4 ,  தூதுவளை இலை- 2 , சுக்கு, மிளகு - சிறிதளவு 
செய்முறை:
கற்பூரவள்ளி, வெற்றிலை, தூதுவளை ஆகியவற்றுடன் மையாக அரைத்த சுக்கு, மிளகைச் சேர்த்துக் கொதிக்கவைத்துப் பருகலாம். குழந்தைகளுக்கு கொடுக்கும்போது  கசாயத்துடன் தேன் சேர்த்துக் கொடுக்கலாம். 
பலன்கள்:
தலைபாரம், தும்மல், டிஹைட்ரேஷன் போன்ற பிரச்னைகளுக்கு நலன் பலனளிக்கும்.

கபசுர கசாயம்
தேவையானவை: 
சுக்கு, திப்பிலி, லவங்கம், சிறுகஞ்சொறி வேர், அக்ரகாரம், முள்ளிவேர், கடுக்காய்த் தோல், ஆடாதொடை, கற்பூரவள்ளி, கோஷ்டம், சீந்தில்கொடி, சிறுதேக்கு (கண்டு பரங்கி), நிலவேம்பு, வட்டத்திருப்பி, முத்தக்காசு. (இந்தப் பொருட்கள் அனைத்தும் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்)
செய்முறை: 
இந்தப் பொருள்கள் அனைத்தையும் சம அளவு எடுத்துக்கொண்டு அதனுடன் நீர் சேர்த்து நான்கில் ஒரு பங்காகும்வரை காய்ச்சி வடிகட்டிக் குடிக்கலாம்.
பலன்கள்:
மழைக்காலங்களில் வரும் எல்லாவிதமான வைரஸ் காய்ச்சல்களை தடுக்கவும், வந்தால் குணமாக்கவும் இந்தக் கசாயம் உதவும். 

கவனம்:
மேற்கண்ட கஷாயங்களை 15 வயதுக்குட்பட்டவர்கள் 30  மி.லியும்,  பெரியவர்கள் 60 மி.லியும், காலை, மாலை இருவேளைக்கு மூன்று நாள்கள் குடிக்கலாம். சளி, காய்ச்சல் கண்டவர்கள் சுயமாக இந்த கஷாயத்தை எடுத்துக்கொள்ளாமல் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் எடுத்துக்கொள்ள வேண்டும்." என்கிறார் அவர்.