Saturday, March 31, 2018

வீடு பற்றிய 30 பழமொழிகள் thanks to tamiland vedas.com

வீடு பற்றிய 30 பழமொழிகள் (Post No.4861)

by Tamil and Vedas
Picture posted by Lalgudi Veda
COMPILED by London Swaminathan 

Date: 29 MARCH 2018

Time uploaded in London –  6-58 am (British Summer Time)

Post No. 4861

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.


WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

ஏப்ரல் 2018 காலண்டர்
(2018 பங்குனி-சித்திரை மாத நற்சிந்தனை காலண்டர்;
ஹேவிளம்பி- விளம்பி காலண்டர்)

முக்கிய விழாக்கள் – ஏப்ரல் 14-தமிழ்ப் புத்தாண்டு; 18-அக்ஷய த்ருத்யை; 20- சங்கர ஜயந்தி29-சித்ரா பௌர்ணமிபுத்த பௌர்ணமிஏப்ரல் 1- ஈஸ்டர், 2- ஈஸ்டர் திங்கள் விடுமுறை


பௌர்ணமி–  ஏப்ரல் 29
அமாவாசை–  ஏப்ரல் 15
ஏகாதஸி விரதம்—ஏப்ரல் 12, 26
சுப முகூர்த்த தினங்கள்:- 5, 20, 22, 25, 27

ஏப்ரல் 1 ஞாயிற்றுக் கிழமை
வீடு அசையாமல் தின்னும், யானை அசைந்து தின்னும்
ஏப்ரல் 2 திங்கட்கிழமை
வீடு கட்டுகிறது அரிது, வீடு அழிக்கிறது எளிது
ஏப்ரல் 3 செவ்வாய்க்கிழமை

வீடு கட்டும் முன்னம், கிணறு வெட்ட வேண்டும்
ஏப்ரல் 4 புதன்கிழமை
வீடு நிறைந்த விளக்குமாறு
ஏப்ரல் 5 வியாழக்கிழமை
வீடு பற்றிக் கொண்டு  எரியும்போது, சுருட்டுக்கு நெருப்புக் கேட்டானாம்.

ஏப்ரல் 6 வெள்ளிக்கிழமை
வீடு பற்றி எரியும்போதா கிணறு வெட்டுவது?
ஏப்ரல் 7 சனிக்கிழமை
வீடு போ போ என்கிறது காடு வா வா என்கிறது

ஏப்ரல் 8 ஞாயிற்றுக் கிழமை
வீடு வெறும் வீடாய் இருந்தாலும் மணியம் ஏழு ஊர்
ஏப்ரல் 9 திங்கட்கிழமை
வீட்டிலிருக்கிற பூனையை அடித்தால், மேட்டிலிருக்கிற எலியைப் பிடிக்கும்
ஏப்ரல் 10 செவ்வாய்க்கிழமை
வீட்டுக்கு ஏற்றின விளக்கு விருந்துக்கும் ஆகும்

ஏப்ரல் 11 புதன்கிழமை
வீட்டைக் கட்டிப் பார், கலியாணம் செய்து பார்

ஏப்ரல் 12 வியாழக்கிழமை
வீட்டைக் காத்த நாயும் காட்டைக் காத்த நரியும் வீண்போகா
ஏப்ரல் 13 வெள்ளிக்கிழமை
வீட்டுக் கருமம் நாட்டுக்குரையேல்
ஏப்ரல் 14 சனிக்கிழமை
வீட்டுக் காரியம் பார்க்காதவன் நாட்டுக் காரியம்  பார்ப்பானா?

ஏப்ரல் 15 ஞாயிற்றுக் கிழமை
வீட்டுக்கு அடங்காத பிள்ளையை ஊரார் அடக்குவார்கள்
வீட்டில் அடங்கதவன் ஊரில் அடங்குவான்
ஏப்ரல் 16 திங்கட்கிழமை
வீட்டுக்கு அலங்காரம் பெரிய குடி.
வீட்டுக்கு அலங்காரம் மனையாள்.
வீட்டுக்கு அலங்காரம் விளக்கு.
வீட்டுக்கு அலங்காரம் வேளாண்மை.
ஏப்ரல் 17 செவ்வாய்க்கிழமை
வீட்டுக்கு இருந்தால் வெண்கலப் பெண்டாட்டி, வீட்டுக்கு இல்லாமற் போனால் தூங்கற் பெண்டாட்டி
ஏப்ரல் 18 புதன்கிழமை
வீட்டுக்கு ஒரு மெத்தை, கேட்டுக்கொள்ளடி மாரியாத்தை
ஏப்ரல் 19 வியாழக்கிழமை
வீட்டுக்கு ஒரு வாசற்படி, பூட்டுக்கு ஒரு திறவு கோல்

ஏப்ரல் 20 வெள்ளிக்கிழமை
வீட்டுக்கு சோறில்லை சிவனறிவான், நாட்டுக்குச் செல்லப் பிள்ளை நானல்லவா?
ஏப்ரல் 21 சனிக்கிழமை
வீட்டுக்குப் புளி, காட்டுக்குப் புலி

ஏப்ரல் 22 ஞாயிற்றுக் கிழமை
வீட்டுக்கு வாய்த்தது எருமை, மோட்டுக்கு வாய்த்தது போர்

ஏப்ரல் 23 திங்கட்கிழமை
வீட்டைக் கட்டிக் குரங்கை குடிவைத்தது போல

ஏப்ரல் 24 செவ்வாய்க்கிழமை
வீட்டுக்கு வீரன் காட்டுக்குக் கள்ளன்

ஏப்ரல் 25 புதன்கிழமை
வீட்டுப் பாம்பு காட்டுக்குப் போனால் அதுவும் காட்டுப் பாம்பாகும்.
வீட்டு மூதேவியும் காட்டு மூதேவியும் சேர்ந்து உலாவுகின்றன

ஏப்ரல் 26 வியாழக்கிழமை
வீட்டுக்குள் கஞ்சித் தண்ணீரைக் குடித்துவிட்டு, மீசையில் வெள்ளையைத் தடவிக்கொண்டு புறப்படுகிறது
ஏப்ரல் 27 வெள்ளிக்கிழமை
வீட்டுப் பெண்சாதி வேம்பு, நாட்டுப்     பெண்சாதி                 கரும்பு

ஏப்ரல் 28  சனிக்கிழமை
வீட்டுக்கு வீடு  வாசற்படி.
வீட்டுக்கு வீடு எதிர் வீடு ஆகாது.
வீட்டுக்கு வீடு மண் வீடுதான்.

ஏப்ரல் 29 ஞாயிற்றுக் கிழமை
வீட்டுச் செல்வம் மாடு, தோட்டச் செல்வம் முருங்கை

ஏப்ரல் 30 திங்கட்கிழமை
வீட்டுக்குள்ளே வேட்டை நாயை உசுப்புவானேன்

BONUS PROVERBS ON HOUSE/HOME
வீட்டிளக்காரம் வண்ணான் அறிவான்
வீட்டைக் கொளுத்தி வேடிக்கை பார்க்கிறதா?
வீட்டில் அழகு வேம்படியாகும்

--SUBHAM--

thanks to tamil and vedas.com


என் குழந்தை ஏன் சம்ஸ்கிருதம் படிக்க வேண்டும்? – 4 (Post No.4867)

என் குழந்தை ஏன் சம்ஸ்கிருதம் படிக்க வேண்டும்? – 4 (Post No.4867)

Date: MARCH 31, 2018


Time uploaded in London- 5-35 am


WRITTEN by S NAGARAJAN


Post No. 4867

PICTURES ARE TAKEN from various sources. PICTURES MAY NOT BE RELATED TO THE ARTICLE; THEY ARE ONLY REPRESENTATIONAL.



WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.



சம்ஸ்கிருதச் சிறப்பு :
நீங்கள் படிப்பது அயர்லாந்து சம்ஸ்கிருத ஆசிரியர் ரட்கெர் கோர்டன்ஹார்ஸ்ட் நிகழ்த்திய உரையின் இறுதிப் பகுதி.

என் குழந்தை ஏன் சம்ஸ்கிருதம் படிக்க வேண்டும்? – 4

ச.நாகராஜன்
நரேந்திரா தனது வழிமுறை அரவிந்தராலும் அன்னையாலும் தரப்பட்டது என்று கூறுகிறார். அந்த வழிமுறையைத் தான் நாங்கள் இங்கு டப்ளினில்  இன்று கடைப்பிடிக்கிறோம்.
அன்னை கூறிய பல ஊக்கமூட்டும் மொழிகளில் இதுவும் ஒன்று:-
“Teach logically. Your method should be most natural, efficient and stimulating to the mind. It should carry one forward at a great pace. You need not cling there to any past or present manner of teaching.”


Renaissance எனப்படும் மறுமலர்ச்சியின் 500 ஆண்டு கால சுழற்சியைப் பார்ப்போம்.

ஐரோப்பாவின் கடைசி மறுமலர்ச்சி நாம் வாழும் இன்றைய உலகை மாற்றி அமைத்த மூன்று விஷயங்களை மேம்படுத்தியது.
கலை, இசை மற்றும் விஞ்ஞானம்!

நாஸாவின்  ஸ்பேஸ் புரொகிராம் (விண்வெளித் திட்டம்) இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி மற்றும் ஆர்டிஃபிஷியல் இண்டெலிஜென்ஸ் ஆகியவற்றிற்கு சம்ஸ்கிருதத்தைப் பயன்படுத்த அதி தீவிர முயற்சியை எடுத்து வருகிறது.
ஸ்ரீ அரவிந்தர் கூறினார்:

”…. at once majestic and sweet and flexible,  strong and clearly formed and full and vibrant and subtle…”

ஜான் ஸ்காட்ஸ் பள்ளி மாணவர்கள் கூறுவது இது:-

It makes your mind bright, sharp and clear.
It makes you feel peaceful and happy.
It makes you feel BIG.
It clears and loosens your tongue so you can pronounce any language easily.

நாஸாவில் உள்ள சம்ஸ்கிருத ஆர்வலர் ரிக் ப்ரிக்ஸ் (rick Briggs)  கூறுகிறார்:-

It gives you access to a vast and liberating literature.
It can describe all aspects of human life from the most abstract philosophical to the latest scientific discoveries, hinting at further development.
 It can describe all aspects of human life from the most abstract philosophical to the latest scientific discoveries, hinting at further developments.
Sanskrit and computers are a perfect fit. The precision play of Sanskrit with computer tools will awaken the capacity in human beings to utilize their innate higher mental faculty with a momentum that would inevitably transform the mind. In fact, the mere learning of Sanskrit by large numbers of people in itself represents a quantum leap in consciousness, not to mention the rich endowment it will provide in the arena of future communication. NASA, California
After many thousands of years, Sanskrit still lives with a vitality that can breathe life, restore unity and inspire peace on our tired and troubled planet. It is a sacred gift, an opportunity. The future could be very bright.

நாஸாவின் ரிக் ப்ரிக்ஸ் (rick Briggs)  கூறும் வார்த்தைகளையே எனது கடைசி வார்த்தைகளாகக் கூறுகிறேன்:-

One thing is certain; Sanskrit will only become the planetary language when it is taught in a way which is exiting and enjoyable. Furthermore it must address individual learning inhibitions with clarity and compassion in a setting which encourages everyone to step forth, take risks, make mistakes and learn.
Rick Briggs [NASA]

***
சம்ஸ்கிருதத்தின் சிறப்பு பற்றிய இந்தத் தொடர் முற்றும்.
இதன் ஆங்கில மூலத்தை அடுத்த கட்டுரையாகக் காணலாம்.

என் குழந்தை ஏன் சம்ஸ்கிருதம் படிக்க வேண்டும்? -3 (Post.4864)

Date: MARCH 30, 2018


Time uploaded in London- 5-49 am


Compiled by S NAGARAJAN


Post No. 4864

PICTURES ARE TAKEN from various sources. PICTURES MAY NOT BE RELATED TO THE ARTICLE; THEY ARE ONLY REPRESENTATIONAL.



WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.


சம்ஸ்கிருதச் சிறப்பு :
நீங்கள் படிப்பது அயர்லாந்து சம்ஸ்கிருத ஆசிரியர் ரட்கெர் கோர்டன்ஹார்ஸ்ட் நிகழ்த்திய உரை!

என் குழந்தை ஏன் சம்ஸ்கிருதம் படிக்க வேண்டும்? -3

ச.நாகராஜன்

ஆங்கிலத்தை எடுத்துக் கொள்வோம். உங்கள் குழந்தை அதை எப்படி கற்க வேண்டி இருக்கிறது என்று பாருங்கள்!
ROUGH என்பதை எப்படிச் சொல்ல வேண்டும்? அதே சமயம் DOUGH என்பதை எப்படிச் சொல்ல வேண்டும்? WOMEN என்ற வார்த்தையில் உள்ள ‘o’  ஏன் ‘e’ போல ஒலிக்க வேண்டும்? SPECIAL என்ற வார்த்தையில் வரும் ‘ci’ ஏன் CINEMA என்ற வார்த்தையில் வரும் ‘ci’- ஐ விட மாறுபட்டு ஒலிக்க வேண்டும்?
ஆசிரியர்கள் என்ன சொல்கிறார்கள்? ‘அது அப்படித்தான்’! அதைக் கற்றுக் கொள்ளுங்கள் என்கிறார்கள்! அவர்களுக்கு தர்க்கரீதியாகக் காரணம் சொல்லத் தெரியவில்லை!

குழந்தைகளுக்கு அது ஒரு ‘hit and miss’ விஷயம் போல விசித்திரமாக இருக்கிறது! இது குழந்தைக்கு என்ன ஒரு நம்பிக்கையைத் தரும்?!
இப்போது விதிகள் உள்ள மொழியைப் பாருங்கள்.

எதையுமே ‘அது அப்படித்தான்’ என்று சொல்ல இடமில்லாமல் விதி முறை மாறாமல் இருக்கிறது.
அருமையான நேர்த்தியான தத்துவக் கருத்துக்கள் எளிய ‘அகர வரிசை’ சரியாக அமைக்கப்பட்டிருப்பதால் நன்கு உருவாகி கற்க முடிவதைப் பாருங்கள்!
சம்ஸ்கிருதத்துடனான தொடர்பினால் மற்றவர்கள் அப்படி நல்ல குணாதிசயங்களுடன் வளர்வதை நான் நேரடியாகக் கண்டிருக்கிறேன்.
பல வருடங்களாக சம்ஸ்கிருதத்தை ‘குறைந்த பட்ச புரிதலுடன்’ ‘அதிக பட்ச உற்சாகத்துடன்’ நாங்கள் கற்பித்து வந்துள்ளோம்.John Scttus School – இல் உள்ள குழந்தைகளுக்கும், தத்துவப் பள்ளியில் – School of Philosophy – இல் உள்ள பெரியவர்களுக்கும் நாங்கள் சம்ஸ்கிருதம் கற்பித்து வந்துள்ளோம்.
ஒருவேளை நாங்கள் ஏராளமானவர்களை சம்ஸ்கிருதம் படிக்க ஊக்குவிக்கவில்லையோ என்னவோ!
ஆகவே சம்ஸ்கிருதம் எங்கு தோன்றியதோ அங்கு செல்ல வேண்டும் என்று எனக்குத் தோன்றியது.
சம்ஸ்கிருத ஆசிரியர்கள் சம்ஸ்கிருதத்திலேயே பேசுபவர்களாக இருக்கும் இடத்தில் வாழ வேண்டும்.

பெங்களூர் அருகில் உள்ள ‘சம்ஸ்கிருத பாரதி’ -இல் நான் மூன்று கோடைக் காலங்களைக் கழித்தேன்.
அது என்னை இன்னும் தீவிரமாக சம்ஸ்கிருதத்தைப் படிக்க வேண்டும் என்ற ஆசையைத் தோற்றுவித்தது.
ஆகவே பாரம்பரியமான ஒரு குருகுலத்திற்கு நான் சென்றேன்.
அதாவது அங்கேயே தங்கி இருக்க வேண்டும்.
அரிசி சாதம் சாப்பிட வேண்டும்.
ஏராளமான பவர் கட்டுகளை – மின் தடைகளை அனுபவிக்க வேண்டும்.
நீர் பற்றாக்குறையைச் சமாளிக்க வேண்டும்.

ஆனால் டிசம்பர் 2009இல் நான் ஒரு முடிவுக்கு வந்தேன். சீனியர் ஸ்கூலில் நான் வகித்து வந்த வைஸ்-பிரின்ஸிபால் வேலையை விட்டு விட்டு சம்ஸ்கிருதத்தை கற்பிப்பதிலேயே என் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணிக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தேன்.
இன்னும் பல பேர்கள் நான் வகித்து வந்த வைஸ்-பிரின்ஸிபால் பதவியை வகிக்க தகுதியானவ்ர்களாக இருப்பார்கள். ஆனால் சம்ஸ்கிருதத்தை அயர்லாந்தில் போதிக்க வேறு யாரால் முடியும்?
ஆகவே இதை ஒரு பதவி உயர்வாகவே – ப்ரமோஷனாகவே – நான்  கருதுகிறேன்.
வயது ஆக ஆக என் உடல் தளர்ந்தாலும் கூட சம்ஸ்கிருதத்தினால் என் மனம் முன்னேறும் என்று நான் எதிர்பார்க்கிறேன்.
சம்ஸ்கிருதம் என்பது ஒரு முழு நேர ஆசிரியருடன் ஒப்பிடப்படக் கூடியது.
24/7 என்று முழு நேரமாக அது இருக்கிறது. மற்ற மொழிகள் எல்லாம் பகுதி நேர – Part time –  மொழியாகவே இருக்கின்றன!
சம்ஸ்கிருதம் கற்பதன் விளைவு என்னவெனில் அது உண்மையான நம்பிக்கையை என்னுள் ஏற்படுத்துகிறது.
இரண்டாவதாக எனது வார்த்தைகளை சீர் தூக்கிப் பார்த்து துல்லியமாக சரியாகப் பேச வேண்டும் என்று அது எனக்கு உணர்த்துகிறது.
குழப்பமின்றி நான் சொல்ல வருவதைச் சொல்ல அது எனக்குக் கற்பிக்கிறது.
ஆகவே எதையும் என்னால் சுருக்கமாகப் பேச முடிகிறது.
எனது கவன சக்தி சந்தேகமின்ரி அதிகரித்துள்ளது!
கேட்பதைத் தக்க வைக்கும் சக்தியும் அதிகரித்துள்ளது!

எப்படி சம்ஸ்கிருதம் கற்பிக்கப்படுகிறது?
இந்தியாவில் பல இடங்களில் முறையாக அது கற்பிக்கப்படவில்ல என்பது எனக்கு ஆச்சரியமூட்டும் ஒரு விஷயம்!
9 முதல் 11 வயது முடிய அது மாணவர்களுக்கு அங்கு கற்பிக்கப்படுகிறது. ஆனால் மோசமாகக் கற்பிக்கப்படுவதால் அத்துடன் அதை விட்டு விடுகிறார்கள்.
சில விடாக்கண்டர்கள் மட்டும் அதை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்ல ஆசைப்படுகிறார்கள்.
இது ஏன்?

ஏனெனில் மேலை நாடுகளைக் காப்பி அடிக்க வேண்டும் என்ற ஒரு வெறி அங்கு உள்ளது.
காலனி ஆதிக்கத்தால் அவர்களின் பாரம்பரியம் திட்டமிட்டு வேருடன் அழிக்கப்பட்டுள்ளது.
கிழக்கத்திய ஞானத்தையும் இலக்கணத்தையும் அறிய பாரம்பரிய மிக்க ஒரு குருகுலத்தில் நான் சேர்ந்தேன்.
சம்ஸ்கிருதம் பேசுவதற்கோவெனில் நவீன அணுகு முறை அங்கு இல்லை என்பதை உணர்ந்தேன்.
அப்போது தான் புதுவையில் உள்ள அரவிந்த ஆஸ்ரமத்தில் இண்டர்நேஷனல் ஸ்கூலில் ஒரு ஆசிரியரைக் கண்டேன்.
அவர் பெயர் நரேந்திரா.
அவர் இலக்கணத்தைக் கற்பிக்க ஒரு புதிய எளிய வழி முறையைக் கண்டுள்ளார்.
அது இலக்கணம் படிக்கிறோம் என்ற உணர்வையே உங்களிடம் ஏற்படுத்தாது!
ஆனால் அதே சமயம் இலக்கணத்தை பயிற்சியாளர்களுக்குக் குறைத்துக் கற்பித்து விடாது. ஆகவே உங்களுக்கு இலக்கணத்தில் பகுதி அறிவு தான் ஏற்படும் என்ற நிலையும் ஏற்படாது.
சில சம்ஸ்கிருத பேச்சு வழக்கு வகுப்புகளிலும் நான் சேர்ந்தேன்.
இவை அனைத்தும் சம்ஸ்கிருதத்துடனான பரிச்சயத்தை எனக்கு அதிகப்படுத்தியது!
– தொடரும்
(அடுத்த கட்டுரையுடன் இந்தத் தொடர் முடியும்)


என் குழந்தை ஏன் சம்ஸ்கிருதம் படிக்க வேண்டும்? -3 / A

ச.நாகராஜன்

Rutger Kortenhorst ஆங்கித்தில் உள்ள முரண்பாடுகள் ஒரு சிறிதை மட்டும் தனது உரையில் கோடி காட்டி விட்டுச் சென்று விட்டார்.
இது தொடர்பாக எனது தொகுப்பில் உள்ள ஒரு சிறு கவிதையை இங்கு தருகிறேன்.
ஆங்கித்தில் உள்ள முரண்பாடுகளைச் சுட்டிக் காட்டும் சுவையான நையாண்டிக் கவிதை இது:-
WHY ENGLISH IS SO HARD

We’ll begin with a box, and the plural boxes,
But the plural of ox becomes oxen, not oxes
One fowl is goose, but two are called geese,
Yet the plural of moose should never be meese.
You may find a lone mouse or a nest full of mice
Yet the plural of house is houses, not hice.

If the plural of man is always called men,
Why shouldn’t the plural of pan be called pen?
If I speak of my foot and show you my feet,
And I give you a boot, would a pair be called beet?
If one is a tooth and a whole set are teeth,
Why shouldn’t the plural of booth be called beeth?

Then one may be that, and three would be those,
Yet hat in the plural would never be hose,
And the plural of cat is cats, not cose,
We speak of a brother and also of brethren
But though we say mother, we never say methern,
Then the masculine pronoun are he, his and him,
But imagine the feminine she, shis and shim!

– ANONYMOUS