Tuesday, May 29, 2018

குடி நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து மீட்கும், சேலம், மனோரக் ஷா மனநல மருத்துவ மையத்தின் இயக்குனர் thanks to dinamalar.com

சொல்கிறார்கள்

 பதிவு செய்த நாள் : மே 29, 2018 
Advertisement
 
Advertisement
 
 
Advertisement
 சொல்கிறார்கள்
பாதிப்பை உணர்ந்து நிறுத்தினால் முழுமையாக மீளலாம்!குடி நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து மீட்கும், சேலம், மனோரக் ஷா மனநல மருத்துவ மையத்தின் இயக்குனர், டாக்டர் எஸ்.மோகன வெங்கடாசலபதி: இன்று, 'பார்ட்டி' என்ற பெயரில், சமுதாய கலாசாரத்தின் அங்கமாகவே, குடிப்பழக்கம் மாறி விட்டது.ஆல்கஹாலிசம் என்பது, மூளையில் தீர்மானிக்கப்படுகிற மரபணு சம்பந்தப்பட்ட நோய்; நம் பரம்பரையில் யாருக்காவது குடிப்பழக்கம் இருந்து, நாமும் பாட்டிலைத் தொட்டால், 90 சதவீதம் அடிமையாக வாய்ப்புஇருக்கிறது.'பீர் சாப்பிட்டால் பிரச்னை இல்லை; ஹாட் எனப்படும் விஸ்கி, பிராந்தி சாப்பிட்டால் மட்டுமே ஆபத்து' என்ற தவறான கருத்து, மக்களிடையே நிலவுகிறது. இரண்டுக்கும், 'பர்சன்டேஜ்' மட்டுமே மாறுபடும். மற்றபடி ஆல்கஹால் என்பது, ஆல்கஹால் தான்.தலை முதல் கால் வரை அத்தனை உறுப்புகளையும், ஆல்கஹால் பாதிக்கும். நீண்ட காலமாகத் தொடர்ந்து குடிப்போருக்கு, கல்லீரல் சுருக்கம் ஏற்படும். இது தவிர கண் பார்வை, இதயம், நரம்பு மண்டலம் அனைத்தும் பாதிக்கப்படும்.மேலும், மனைவியை சந்தேகப்படுவதில் ஆரம்பித்து, தனியாகப் பேசுதல், தானாகச் சிரித்தல், காதில் மாயக் குரல் கேட்பது, தற்கொலை முயற்சி, வன்முறையில் ஈடுபடுவது, காமவெறி போன்றவை ஏற்படும். இப்படி நடந்து கொள்வோர் மன நோயாளிகள் அல்ல; குடி நோயாளிகள் என்பதை, நாம் புரிந்து கொள்ள வேண்டும்.குடியை நிறுத்த பல சிகிச்சை முறைகள் இருந்தாலும், குடியால் ஏற்படும் பாதிப்புகளை உணர்ந்து, தானே நிறுத்த வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் மட்டுமே, முழுமையாக மீண்டு வர முடியும்.குடிபோதையில் இருந்து மீட்க, முதல் இரண்டு நாட்கள் அல்லது ஒரு வாரத்துக்கு, 'டீடாக்சிபிகேஷன்' என்ற விஷம் நீக்கும் சிகிச்சை அளிக்கப்படும். இது, உடலில் உள்ள ஆல்கஹாலை வெளியில் எடுத்துவிடும். அவர்களுக்குத் தேவையான வைட்டமின், சத்துகளை உணவாகவும், ஊசி மருந்துகளாகவும் கொடுத்து, உடலுக்குத் தெம்பு கூட்டப்படும்.பேச்சு வழி மருத்துவம், சைக்கோதெரபி, கவுன்சிலிங் என, அவர்கள் மனதை மாற்ற முயற்சி எடுக்கப்படும். உழைப்பு, குடும்பத்தின் அருமை, யதார்த்தத்தை உணர்த்தும் விதமாக, அவர்கள் உணராத சில அம்சங்களை சுட்டிக்காட்டி, வெறுமையை நீக்க முயற்சி மேற்கொள்ளப்படும்.குடிக்கும் எண்ணம் வராமல் இருக்க, மருந்துகள், குடித்தால் எதிர்விளைவு ஏற்படும் மாத்திரைகள், தொடர்ந்து கொடுக்கப்படும். இது தவிர, ஆன்மிகம், யோகா சொல்லிக் கொடுத்து, உடலைப் புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்ளவும், உள்ளத்தைப் பாதுகாக்க, சில கலைகளை சொல்லிக் கொடுத்தும் போதையின் பாதையில் இருந்து மீட்டெடுக்கலாம்.தொடர்புக்கு: 9445204410.

Saturday, May 26, 2018

thanks to tamiland vedas.com

2-89 இந்திரியங்களைப் பெரியோர்கள் பதினொன்றாக வகுத்துள்ளனர். அதை நான் இப்போது விளக்குவேன் (207)
2-90.காது, தோல், கண், நாக்கு, ஐந்தாவதாக மூக்கு, ஆசன வாய், ஜனன இந்திரியங்கள், கை, கால், பத்தவதாக பேசும் உறுப்பு ஆகியனவும்
2-91. இவைகளில் காது முதல் மூக்கு வரை உள்ள ஐந்தும் ஞானேந்திரியம், ஆசனவாய் முதல் வாய் வரையுள்ள ஐந்தும் கர்மேந்திரியங்கள்

2-92. இந்த பத்து உறுப்புகளையும் கட்டுப்படுத்தும் மனம் பதினோராவது இந்திரியம் ஆகும். அதைக் கட்டுப்படுத்தினால் ஏனைய பத்து இந்திரியங்களையும் கட்டுப்படுத்திவிடலாம். (210)

2-93. புலன் வழிச் சென்று, அதன் போக்கில் இன்பங்களை அனுபவிப்பவன் தவறுகளைச் செய்வான்; ஆனால் இவைகளைக் கட்டுப்படுத்துபவன் இன்பத்தையும் வெற்றியையும் அடைவான்.
Picture posted by S P Ramanathan
2-94. ஆசைகளை நிறைவேற்றுவதன் மூலம் அதைத் திருப்தி செய்வதென்பது முடியாது. ஆசைகளைப் பூர்த்தி செய்ய முயல்வது, தீயில் நெய்யை ஊற்றி அதை அணப்பதற்குச் சமம் ((அதை மேலும் வளர்ப்பது போலாகும்)).


2-95. சிலர் ஆசைகளை நிறைவேற்றலாம்; சிலர் ஆசைகளை அறவே ஒதுக்கலாம்; ஆனால் அறவே ஆசைகளை அகற்றுவதே சிறந்தது.

2-96. ஆசைகளை அகற்றுவதற்கு தெளிந்த ஞானம்தான் உதவும்; அவைகளில் இருந்து தனித்து வாழ்வதால் ஆசைகளை ஒழிக்க முடியாது.

2-97. எவன் ஒருவன் புலன் இன்பங்களில் நாட்டம் உடையவனாக இருக்கிறானோ அவன் செய்யும் யாக யக்ஞங்களும், வேதம் ஓதுதலும், தானமும் தவமும் பயனற்ற செயல்களே.-215
2-98. எவன் ஒருவன் ஐம்புல நுகர்ச்சியால இன்பத்தையோ துன்பத்தையோ அடைவதில்லையோ அவனே புலன்களை வென்றவன் ஆவான்.
2-99. ஐந்து புலன்களில் ஒன்று பலவீனமானாலும், ஓட்டைப் பானையில் இருந்து தண்ணீர் வெளியேறுவது போல ஞானம் வெளியேறி விடும்
2-100. ஆகவே பொறிகளையும் மனதையும் கட்டுப்படுத்தி, உடலை வருத்தாமல், இம்மை மறுமை ஆகியவற்றின் நன்மைகளை நாட வேண்டும்.
Picture posted by Lalgudi Veda

2-101. அதி காலையில் சூரியன் உதயம் ஆகும் வரை நின்றுகொண்டு காயத்ரீ மந்திரத்தை ஜபிக்க வேண்டும். மாலையில் அமர்ந்து கொண்டு ஜபிக்க வேண்டும். நட்சத்திரங்கள் தோன்றும் வரை செய்க (காணாமல், கோணாமல், கண்டு கொடு; சூரியனைக் காணாமல் காலையிலும், நிழல் கோணாமல் நண்பகலிலும், சூரியனைக் கண்டு, அது மறையும் வரை மாலையிலும் காயத்ரீ மந்திரம் சொல்க)

2-102.காலையில் நின்று கொண்டு ஜபம் செய்வதால் இரவில் செய்த பாபங்கள் அழிந்து விடும்; மாலையில் அமர்ந்து கொண்டு செய்யும் தவத்தால் பகற்பொழுதில் செய்த பாவங்கள் நசித்துவிடும்.-220
2-103.யார் ஒருவன் இவ்வாறு காலை மாலை ஜபங்களைச் செய்வதில்லையோ அவன் இரு பிறப்பாளன் என்ற தகுதியை இழக்கிறான்.
2-104.ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்திலோ, நதிக்கரைகளிலோ, ஒன்று குவிந்த மனதுடன் காயத்ரீ ஜபிக்க வேண்டும்.

2-105.இவைகளைச் செய்யக்கூடாத காலம் என்று விலக்கு எதுவும் இல்லை. வேதாங்கம் கற்கவும், வேதம் சொன்ன தினசரிச் சடங்குகளைச் செய்யவும் விடுமுறை நாட்கள் என்பது எதுவும் இல்லை.

2-106.இவை எல்லாம் வேதம் கற்பதின் ஒரு பகுதி என்பதால் விலக்கு எதுவும் இல்லை. அவை  வேறு காரணங்களினால்  தடைப் பட்டாலும் பலன் குன்றாது

2-107.யார் ஒருவன் ஓராண்டுக் காலத்துக்கு இவ்வாறு இடைவிடாமல், புலனடக்கத்துடன் செய்கிறானோ, அவன் இருக்கும் இடத்தில் பாலும் தேனும் வெண்ணையும் தயிரும் வற்றாது பாயும்-225


2-108. குருகுல வாசம் செய்யும் காலம் முழுதும் ஒரு மாணவன், வேதம் ஓதுதல், அக்னியில்  சமித்தினால் ஹோமம் செய்தல், பிச்சை எடுத்தல், குருவுக்குப் பணிவிடை செய்தல், தரையில் படுத்தல் ஆகியவற்றைச் செய்ய வேண்டும்.

2-109.வேத உபதேசம் ஏற்கக் கூடிய பத்து வகை மாணவர்கள் உண்டு: குருவின் மகன், தருமம் அறிந்தவன், ஒழுக்க சீலன் ( தூய்மையுள்ளவன்), உறவினர், கொடையாளி, பணிவுடையன், நம்பத் தகுந்தவன் (பொய்பேசாதவன்), வேதத்தை கற்கும் சக்தியுடையவன், , சேவை செய்பவன், மற்றவர்களுக்கு ஞானம் அளிப்பவன்.
आचार्यपुत्रः शुश्रूषुर्ज्ञानदो धार्मिकः शुचिः ।
आप्तः शक्तोऽर्थदः साधुः स्वोऽध्याप्या दश धर्मतः


2-110. ஒருவர் கேட்காத எதையும் விளக்காதே; குதர்க்கமாகப் பேசுபவர்களுக்குப் பதில் கொடுக்காதே; உனக்கு விஷயம் தெரிந்தாலும் முட்டாள் (ஒன்றும் தெரியாதவன் போல) இரு.
2-111.யார் தர்மத்துக்குப் புறம்பாக கேட்கிறானோ அல்லது தர்மத்துக்கு எதிராக விளக்குகிறானோ, அவர்களில் ஒருவரோ அல்லது இருவருமோ, விரோதம் காரணமாக இறக்க நேரிடலாம்.
2-112. தர்மமோ, தட்சிணையோ, அடக்கமோ இல்லாதவனுக்கு (வேதத்தைக்) கற்பிக்கக் கூடாது; பயன் தராத ஆளுக்குக் கல்வி கற்பது உவர் நிலத்தில் விதைகளை விதைப்பது போலாகும்-230

2-113.வேதம்  அ றிந்தவன், ஒரு தவறானவனுக்குக் கற்பிப்பவதைவிட, இறப்பதே மேல்

2-114.வேதம், பிராஹ்மணனிடம் சொன்னது: “நான் பெரும் பொக்கிஷம்;
என்னைக் காப்பாற்று நிந்திப்பவர் எவருக்கும் என்னை அளித்துவிடாதே. அப்போதுதான் நான் மிகவும் சக்தியுடன் விளங்குவேன்”.
विद्या ब्राह्मणमेत्याह शेवधिस्तेऽस्मि रक्ष माम् । %[ं।शेवधिष् टे]
असूयकाय मां मादास्तथा स्यां वीर्यवत्तमा ॥ Bछ्.Sछ्॥

यमेव तु शुचिं विद्यान्नियतब्रह्मचारिणम् । %[ं। विद्या नियतं ब्रह्मचारिणम्]
तस्मै मां ब्रूहि विप्राय निधिपायाप्रमादिने ।

2-115. தூய்மையுடைய, புலன் அடக்கம் உடைய, கிரஹிக்கும் சக்தியுடைய, பொக்கிஷத்தைப் பாதுக்காக்கக் கூடிய பிராமணன் இடத்தில் என்னைக் கொடு
2-116. வேதம் அறிந்த ஒருவரின் அனுமதி இல்லாமல், வேதத்தைக் கற்பவன் வேதத்தைத் திருடியவன் ஆவான். அவன் நரகத்தில் வீழ்வான்.-234
ब्रह्म यस्त्वननुज्ञातमधीयानादवाप्नुयात् ।
स ब्रह्मस्तेयसंयुक्तो नरकं प्रतिपद्यते

(நல்லவர்களை எப்படி அறியலாம்? பிறர் எழுதியதை, பிறர் எடுத்த படங்களை அவர்களுடைய பெயர்களுடன் வெளியிடுவார்கள். கெட்டவர்களை எப்படிக் கண்டுபிடிக்கலாம்? பிறர் எழுதியதை,அது வெளியான பிளாக், பத்திரிக்கை பெயர்களை நீக்கிவிட்டு , தங்களுடையது போல வெளியிடுவார்கள்;  கெட்டவர்களைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிது))

எனது கருத்து

இந்தப் பகுதி வேதம் எவ்வளவு புனிதமானது என்பதை விளக்குகிறது.

தகுதி இல்லாதவருக்குக் கற்பிப்பதைவிட அந்த அறிவுடன் இறந்து போனாலும் பரவாயில்லை என்கிறது.

மீண்டும் மீண்டும் ஒழுக்கத்தையும் புலன் அடக்கத்தையும் மநு வலியுறுத்துகிறார்.

புலன் அடக்கமும், ஆசையின்மையும், ஒழுக்கமும்தான் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு பிராமணரை உயர் நிலையில் வைத்தது.

வேதம் பிராமணனிடம் வந்து சொன்ன வாசகம் அருமையானது; நான் ஒரு பொக்கிஷம்; என்னைப் பாது காத்து இதன் மதிப்பை அறிந்த தூயவனிடம் என்னை ஒப்படை.

இன்னும் ஒரு அறிவுரை எல்லோருக்கும் பொதுவானது: கேள்வி கேட்காமல் பதில் சொல்லாதே. குதர்க்கமாக கேட்பவனிடம் முட்டாளைப் போல நடி.

3 நல்ல உவமைகள்
ஆசைகளைப் பூர்த்தி செய்ய விழைவது, தீயில் நெய்யை ஊற்றி அதை அ ணைப்பதற்குச் சமம் என்ற உவமையும்

பயனற்ற ஆட்களுக்கு வேதம் கற்பிப்பது, உப்பு மணலுள்ள நிலத்தில் விதை விதைப்பதற்குச் சமம் என்ற உவமையும்,
இந்திரியங்களில் ஒரு இந்திரியம் (புலன்கள்) பலவீனமாக இருந்து மனதைப் பரிதவிக்கவிட்டாலும், அது ஓட்டையுள்ள தண்ணீர்ப் பைக்குச் சமம் என்ற உவமையும் ரசிக்கக் கூடியவை.

அந்தக் காலத்தில் தோலினால் ஆன தண்ணீர்ப் பை இருந்ததை இந்த ஸ்லோகம் காட்டுகிறது.
பிராமணர்களுக்குச் சொன்ன காணாமல் கோணாமல் கண்டு கொடு- (சந்தியா வந்தனம் செய்) என்பதும் நோக்கற்பாலது.
நண்பகலில் செய்யப்படும் மாத்யாஹ்னிகம் பற்றி மநு ஒன்றும் செப்பாதது வியப்புக்குரியது. அவர்காலத்தில் மதிய வழிபாடு இல்லையா? அல்லது எல்லோருக்கும் தெரிந்ததைச் சொல்ல  வேண்டியதில்லை என்று விட்டுவிட்டாரா?tha

thanks to one india.com

சென்னை: உத்திராயணம் பிறந்துவிட்டாலே விவாகம், உபநயனம் போன்ற முகூர்த்தங்கள் கலைகட்டிவிடும். அதிலும் மாசி மாததில் நிறைய உபநயனங்களை காணமுடியும். மாசி பூணல் பாசி படரும் என்பது பழமொழி. இன்று மாசி ஞாயிற்றுக்கிழமை அனேக திருமண மண்டபங்களில் உபநயனம் தான் நடந்துக்கொண்டிருக்கிறது. குருகுலவாசம்: குழந்தைப் பருவத்திலேயே ஒழுங்கில் கொண்டு வந்து விடவேண்டும். ஒழுக்கத்திற்கு முதல் அங்கமாக என்ன வேண்டும்? பணிவு, அடக்கம், விநயம். கட்டுப்பாடு இருந்தால்தான் ஒழுக்கத்தோடு முன்னேற முடியும். கட்டுப்பட்டு நடப்பதற்கு அடக்கம் முதலில் வேண்டும். அஹங்காரம் போனால்தான் அடக்கம் வரும். ஸகல சீலங்களுக்கும் அடிப்படையாக இருக்க வேண்டியது விநயம்தான். இந்த விநயகுணம் வருவதற்காகவேதான் முக்கியமாக அவனை குருகுலவாஸம் என்று ஒரு ஆசார்யனிடத்திலேயே வாழும் படியாகக் கொண்டு விட்டார்கள். உபநயனம்: 'உபநயனம்' என்றால் 'ஸமீபத்தில் அழைத்துப் போகிறது'. எதற்கு, அல்லது யாருக்கு ஸமீபத்தில்? குருவுக்கு ஸமீபத்தில்தான்.இதுவரை குழந்தையாக மனம் போனபடி விளையாடிக் கொண்டு இருந்தவன் இப்போதுதான் ஒரு பொறுப்போடு கட்டுப்பாட்டுக்கு உட்பட்டதான ஒரு ஆச்ரமத்தை ஏற்கிறான். இங்கே ஆச்ரமம் என்றால் பர்ணசாலை என்று அர்த்தமில்லை. வாழ்க்கையில் ஒரு நிலை என்று என்று அர்த்தம். இந்த முதல் ஆச்ரமத்துக்கு பிரம்மசர்ய ஆச்ரமம் என்று பெயர். இங்கே குருதான் முக்கியம் உபநயனம் என்பது இவ்விரண்டாவது பிறப்பின் வாயிலாக அமைகின்றது. 'உப' என்றால் பிரம்மத்திற்கு அருகில் என்பது பொருள். 'நயனம்' என்றால் குரு சிஷ்யனை அழைத்துச் செல்லுதல் என்பது பொருள். பராஹ்ம்னர்கள் 8 வயதிர்க்குள்ளும், க்ஷத்ரியர்கள் 12 வயதிர்க்குள்ளும், வைஷ்யர்கள் 16 வயதிர்க்குள்ளும், காமம் மனதிற்குள் புகுமுன் உபநயன தீக்ஷை பெற வேண்டும் என்பது வழக்கம். உபநயனம் என்பதில் இரண்டு காரியங்கள் இருக்கின்றன. ஒன்று பூணூல் போட்டது முதல் ஆசாரங்கள், ஒழுக்கங்கள் இன்றியமையாதது. ஆகவே பூணூல் சமஸ்காரம் என்பது மனிதனை மனித வாழ்க்கையில் ஆன்மிக உயர்நிலை அடைவதற்காக ஏற்பட்டது. இரண்டாவது, உபநயனத்தில் பூணூல் போட்டுக்கொள்வது என்பது பிரதானமாக பேசப்படுகிறது. ஆனால் உபநயனத்தின் முக்கிய அம்சம் ஒரு பெரியோரின் மூலம், ஒரு குருவின் மூலம், அல்லது தகப்பனாரின் மூலம் வேதோக்தமான காயத்ரீ மந்திரத்தை ஏற்றுக்கொள்வதே முக்கிய நோக்கமாகும். அதற்கு அங்கமாகத்தான் சுத்தமாயும், பவித்ரமாயும் பூணூல் போட்டுக் கொள்வது. இதை வைத்துத்தான் உபநயனம், ப்ரம்மோபதேசம் என்று சொல்லுகிறோம். உபநயனத்தில் குரு சிஷ்யனை ஒரு கல்லின் மேல் காலை ஊன்றி நிற்க்கச் சொல்லி ஆசீர்வதிப்பதாவது "இக் கல்லைப் போல் வலிமை கொண்ட உடலும், உறுதி படைத்த நெஞ்சம் உடையவனாக நீ இருக்க வேண்டும். உன் விரதங்களுக்கு ஊரு செய்பவர்களை எதிர்த்து போராடி நீ விரட்டி அடிக்க வேண்டும். நீ பிராமச்சாரியாகிவிட்டாய்.சந்தியாவந்தனத்தையும், மற்ற கடமைகளையும் தவறாமல் செய்யவேண்டும். அறியாமையினின்று விழித்தெழு" என்பது போல் ஆகும். உபநயனம் பண்ண வேண்டிய வயதை பற்றி காஞ்சி மகா பெரியவர் கூறியிருப்பது: உபநயனம் செய்யவேண்டிய காலம் பிராம்மணனுக்கு கர்ப்பத்தைக் கூட்டி எட்டாவது வயசாகும். அதாவது பிறந்து ஏழு வயசு இரண்டு மாசம் ஆனவுடன் பண்ண வேண்டும். அதிபுத்திசாலியாக, மஹா மேதாவியாக இருந்தால் ஐந்து வயதில் கூட பூணூல் போட்டு விடலாம். பதினாறு வயதிற்கு மேல் உபநயனம் செய்வது என்பது பேரளவுக்கு மாத்திரமே என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. ஆட்டோ பிடிக்க போன தாய், மகள் சடங்குக்கு பத்திரிகை தர சென்ற தந்தை.. தூத்துக்குடியின் துயர பலிகள் இடுப்புக்கு கீழே துப்பாக்கி சூடு, மேல இரும்பு ராடு... ஒரு வழக்கறிஞரின் அதிரடி ரிப்போர்ட்! காடுவெட்டி ஜெ.குரு மறைவு.. தமிழக வாழ்வுரிமைக் கட்சி இரங்கல் Featured Posts க்ஷத்ரியர்கள் பன்னிரெண்டு வயது வரை உபநயனம் செய்யலாம். யது வம்சத்தில் பிறந்த கிருஷ்ண பரமாத்மாவுக்கு அப்படித்தான் செய்திருக்கிறது. வைச்யர்கள் பதினாறு வயசு வரை உபநயனம் பண்ணலாம். உபநயனமும் உத்திராயணமும்: ஒருவனுக்கு இப்படி வயசுக் காலம் சொல்லியிருப்பதோடு, உபநயன ஸம்ஸ்காரம் என்பதைச் செய்வதற்கே உத்தராயணம்தான் உரிய காலம் என்றும் ஸூரியன் பூமியின் வடக்குப் பாதியில் ஸஞ்சரிக்கிற ஆறுமாஸத்திலேயே உபநயனம் செய்யவேண்டும். உபநயனம் மட்டுமின்றி விவாஹமும். இந்த ஆறுமாஸத்தில்தான் செய்யலாம். இதிலும் வஸந்த காலம் (சித்திரை, வைகாசி) தான் விவாஹத்துக்கு ரொம்பவும் எடுத்தது. அதே மாதிரி 'மாசிப் பூணூல் பாசி படரும்'என்பதாக மாசி மாதத்தில் பூணூல் போடுவதை விசேஷமானதாகச் சொல்லியிருக்கிறது. தக்ஷிணாயனத்தில் (ஆடியிலிருந்து மார்கழி முடிய) இவற்றைச் செய்வது செய்வது சாஸ்திர ஸம்மதமல்ல என்று மகா பெரியவர் உபநயனம் செய்யும் காலம் பற்றி கூறியிருக்கிறார். வாமன மூர்த்திக்கு சூரிய பகவான் உபநயனம் செய்வித்தல்: மகா விஷ்ணு பூலோகத்தில் பல அவதாரங்களை எடுத்து தர்மத்தை நிலைநாட்டினார். அதில் வாமன அவதாரமும் ஒன்று. அதிதி காஷ்யபரின் பிள்ளையாக அவதரித்த வாமன மூர்த்திக்கு சூரியபகவானே உபநயனம் (பூணூல் அணிவித்தல்) செய்தார். பகவானே பூணூல் அணிந்து கொண்டதன் மூலம், இச்சடங்கின் சிறப்பினை உணரமுடியும். பூணூல் அணிபவர்களும், அதனைத் தயாரிப்பவர்களும் ஆச்சார அனுஷ்டானங்களில் இருந்து சிறிதும் விலகுதல் கூடாது. ஆவணி அவிட்டத்தன்று பூணூல் அணியும் இளைய தலைமுறையினரும் இதன் முக்கியத்துவத்தை உணர்வது அவசியம். காயத்ரி ஜெபம்: காயத்ரி மந்திரம் சூரியனுடைய ஆற்றலை நோக்கிக் கூறப் படுவதாகும். இம்மந்திரம் சூரியனைத் தலைமைத் தெய்வமகக் கொண்டது. எனவே சூரியனை வணங்குவது காயத்ரியையே வணங்குவதற்குச் சமமாகும். காலையில் கிழக்குமுகமாக சூரியனைப் பார்த்து நின்று கொண்டு, வஸ்திரத்தால் இரு கைகளையும் மூடி முகத்திற்கு நேராக வைத்து காயத்ரி மந்திரத்தை ஜபிக்க வேண்டும். மதியம் கிழக்கு முகமாக அமர்ந்து கைகளை மார்பிற்கு நேராக வைத்து ஜபிக்க வேண்டும். மாலையில் மேற்க்கு முகமாக அமர்ந்து நாபிக்குச் சமமாக கைகளை வைத்து ஜபிக்க வேண்டும். சம்ஸ்க்காரத்தில் ஸந்த்யாவந்தனம் பிரம்ம யஞத்தின் கீழ் சொல்லப்பட்ட நித்யகர்மாவாகும். (சம்ஸ்க்காரம் எண் 21). ஸந்த்யாவந்தனம் அதிகாலை மற்றும் அந்தியில் சூரியனில் வசிக்கும் பகவான் ஸ்ரீமன் நாராயணனை குறித்து செய்யும் நித்ய கர்மாவாகும். காயத்ரி தியான முறையும், தண்ணீரால் செய்யபடும் அர்க்யமும் இந்த கர்மாவில் செயல் முறை மையமாக உள்ளன. சந்தியாவந்தனம் எப்படி செய்யவேண்டும்: சந்தியாவந்தனம் (அ) சந்த்யோபாசனை முறைப்படி குருவிடமோ/ சாஸ்த்ரிகளிடமோ உபநயன தின முதல் கற்றுக்கொள்ள வேண்டும். ஏனெனில் அதில் ஸ்வரத்துடன் கூடிய வேத மந்த்ரங்கள் அடங்கியுள்ளது. அதன் பிறகு பெரியோர்களிடமோ அல்லது வேறு ஊடகங்கள் மூலமாகவோ கற்று கொள்ளலாம். "காணாமல் கோணாமல் கண்டு கொடு" என கூறுவார்கள். அதாவது காலை சந்தியாவந்தனம் சூரியன் உதிக்கும் முன் (காணாமல்) சாவித்ரிதேவியை மதியம் உச்சிப்பொழுதில் (சூரியன் கோணாமல்) காயத்ரி தேவியை தியானிப்பது சாயங்காலத்தில் உட்கார்ந்து கொண்டு நட்சத்திரத்தை பார்க்கும் வரையிலும் சந்தியா தேவியை பூஜையை செய்தல் வேண்டும். பசுகொட்டிலிலும்,நதி கரையிலும், கோவில் அருகிலும் சந்தியாவந்தனம் செய்வது பன்மடங்கு பலனை தர வல்லது. வீட்டிலும் (கொல்லை) சுத்தமான சூரிய ஒளி வரும் இடத்தில் சந்தியாவந்தனம் செய்யலாம். அப்படியும் இடம் இல்லை எனில் வீட்டில் உள்ள கடவுள் சன்னிதானதில் செய்யலாம்.

Read more at: https://tamil.oneindia.com/astrology/news/upanayanam-samaskara-young-brahmin-boy-invested-sacred-thread-initiated-holiest-gayathri-manthra-313217.html

Monday, May 21, 2018

கோதுமையை தவிர்ப்பது அவசியம் by டாக்டர் எஸ்.டி.வெங்கடேஸ்வரன் thanks to dinamalar.com

சொல்கிறார்கள்

 
Advertisement
  சொல்கிறார்கள்
கோதுமையை தவிர்ப்பது அவசியம்!கோதுமையால் ஏற்படும் பாதிப்பு குறித்து கூறும், டாக்டர் எஸ்.டி.வெங்கடேஸ்வரன்: ஒரு காலத்தில், சர்க்கரையை கட்டுக்குள் வைக்க கோதுமை உணவு சாப்பிட வேண்டும் என்ற கருத்து இருந்தது. உண்மையில், அரிசியை விட கோதுமையால் தான், அதிக வியாதிகள் வருகின்றன.ஏனெனில், தற்போது கிடைக்கும் கோதுமை அனைத்தும், ரசாயன மாற்றத்துக்கு உட்படுத்தப்பட்ட கோதுமை தான். இந்த வகையான கோதுமைகளை, 'ஹைபிரிடைசேஷன்' செய்வதால் அதன் புரதச்சத்து, வடிவமைப்பை மாற்றி அமைக்கிறது.இவற்றை நம் உடலில் உள்ள செல்களால் கண்டறிய முடியவில்லை. இதனால் தான், 'குளூட்டன் அலர்ஜி' எனப்படும் கோதுமை ஒவ்வாமை, இன்று அதிகமானவரை ஆட்டுவிக்கிறது. 'ஆட்டோ இம்யூன் டிசார்டர்' ஏற்பட இந்தக் கோதுமை முக்கிய காரணம்.'ஆட்டோ இம்யூன் டிசார்டர்' என்பது, நம் உடலில் உள்ள எதிர்ப்பு சக்தியானது, வெளியிலிருந்து வரும் கிருமிகளை எதிர்த்து அழிப்பதற்கு பதிலாக, தனக்குள் இருக்கும் திசுக்களை அழித்துக் கொள்வது. இந்த எதிர்ப்பு, மூட்டில் நிகழ்ந்தால், முடக்குவாதத்தை ஏற்படுத்தும். இதுபோல் வரக்கூடிய பல நோய்களுக்கு, கோதுமை ஒரு காரணம்.இது தவிர, கோதுமையில், 'கிளைசெமிக் இண்டெக்ஸ்' அதிகமாக இருப்பதால், தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், சர்க்கரை நோய் வரும். கோதுமை நம் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை அதிகப்படுத்தும். கோதுமை சாப்பிட்ட பின் பரிசோதித்துப் பார்த்தாலே, இதை புரிந்து கொள்ளலாம்.தொடர்ந்து ஒருவர் கோதுமை சாப்பிட்டு வந்தால், உடல் உறுப்புகளைச் சுற்றி கொழுப்பு படரும். குறிப்பாக, வயிற்றுப் பகுதியைச் சுற்றிலும் கொழுப்பு படரும். ரத்தத்தில், எல்.டி.எல்., எனும் கெட்ட கொழுப்பு அதிகரிக்கலாம். இதய நோய், மூட்டு மற்றும் முழங்கால் வலி, அமிலத்தன்மை கூடி, நெஞ்சு எரிச்சல் வரலாம்.கோதுமை என்பது வெறும் சப்பாத்தி மட்டுமல்ல. பிரெட், பூரி, கோதுமை ரவை, பரோட்டா, ஆட்டா நுாடுல்ஸ், கேக், பிஸ்கட்ஸ், பாஸ்தா, பிட்ஸா, பன், பர்கர், வெஜ் ரோல், ஸ்பிரிங் ரோல் என, பல்வேறு வடிவங்களில் நம்மை சூழ்ந்துள்ளது. இது போன்ற உணவுகளை தவிர்த்தாலே, சர்க்கரை நோயிலிருந்து தப்பலாம்; வருங்காலத்தில் சர்க்கரை நோய் வராமலும் காக்கலாம்; நெஞ்சு எரிச்சல், மூட்டு வலி, குடல் நோய்கள் வருவதையும் தடுக்கலாம்.மைதா எந்த அளவுக்கு கெடுதலோ, அதே அளவுக்கு கோதுமையும் கெடுதல் என்பதை உணர வேண்டும். நம் மண்ணில் விளையும் தானிய வகைகளே ஏற்ற உணவு என்பதை நினைவில் கொண்டு, கோதுமையின் அடிமைத் தளத்தில் இருந்து உடனடியாக வெளியேறுங்கள்; பல வகையான அரிசி களை உணவாக்கி உண்டு, ஆரோக்கியமாக வாழுங்கள்.

5 விஷயங்களைகடைபிடித்தால்கட்டுடல் உறுதி! thanks dinamalar.com

5 விஷயங்களைகடைபிடித்தால்கட்டுடல் உறுதி!
உடல் எடை குறைப்புக்கு, உணவு பழக்கங்களில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து கூறும், சென்னை, அரசு ஓமந்துாரார் மல்டி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் சத்துணவு நிபுணர், டாக்டர் மீனாட்சி: உடல் எடையை குறைப்பதை பொறுத்தவரை, நம் உணவு பழக்க வழக்கங்களில் சிறு மாற்றம் செய்தாலே போதும்; அதற்கென, தனியாக மருந்து சாப்பிட வேண்டிய அவசியம் இல்லை.

உணவு, அளவு, சாப்பிடும் நேரம், மென்று சாப்பிடும் விதம், சமைக்கும் பாத்திரம் போன்ற ஐந்து விஷயங்கள் தான், எடையை குறைக்கவும், கூட்டவும் அடிப்படை காரணமாக இருக்கின்றன.
மாவுச்சத்து, 50 சதவீதம், நார்ச்சத்து, 20 சதவீதம், மீதி, புரதச்சத்து உள்ள உணவுகளை, ஒன்றாக சாப்பிட வேண்டும். ஸ்பூனால் தான் சாப்பிட வேண்டும்; கையால் சாப்பிட்டால் அதிகமாக சாப்பிட்டு விடுவோம். 'டிவி' பார்த்தபடியே சாப்பிட்டால், அளவில் கட்டுப்பாடு இருக்காது.

நேரத்தை பொறுத்தவரை, காலையில், 90 சதவீதம், மதியம், 80 சதவீதம், இரவு, 70 சதவீதம் என, குறைத்து சாப்பிட வேண்டும். எக்காரணத்தை முன்னிட்டும், காலை உணவை தவிர்க்கவே கூடாது. இரவில், 7:30 மணிக்குள் சாப்பிட்டு, 9:30 மணிக்குள் படுத்து விட வேண்டும்.
உணவை மென்று சாப்பிட வேண்டும். குறைந்தபட்சம், 20 நிமிடங்களாவது, நன்கு மென்று சாப்பிட்டால், சத்துக்கள் கிடைப்பதோடு, எளிதில் ஜீரணமாகும். ஐந்தாவதாக, உணவை குக்கரில் சமைக்காமல், வடித்து சாப்பிட வேண்டும்; அதில் தான் சத்துக்கள் அடங்கி இருக்கின்றன.
இந்த ஐந்து விஷயங்களையும் நாம் சரியாக கடைப்பிடித்தால், எடை கூடவும் செய்யாது; குறையவும் செய்யாது; 'பிட்'டாக இருக்கலாம்.

உடல் எடையை குறைக்க விரும்புவோர், காலை உணவாக, ஒரேயொரு இட்லியும், மதியம் ஒரு கை அளவு சாப்பாடு, இரண்டு மடங்கு காய்கறியும், இரவு, கொள்ளு தோசை அல்லது ஒரேயொரு சப்பாத்தி சாப்பிடலாம்.மதிய உணவு இடைவேளையில் பசித்தால், நொறுக்குத்தீனி சாப்பிடாமல், வெள்ளரிக்காய், இஞ்சி, புதினா, கொத்தமல்லி, இரண்டு ஸ்பூன் தயிர் சேர்த்து, மிக்சியில் அரைத்த ஜூஸ் குடிக்கலாம்; அதிக நார்ச்சத்து உள்ள ஜூஸ் இது. ஜூஸ் செய்ய முடியாதவர்கள், நட்ஸ் வகைகளையும், சுண்டலையும் சாப்பிடலாம்.

சராசரியாக பெண்கள், 55 கிலோவும், ஆண்கள், 60 கிலோவும் இருக்க வேண்டும். உயரத்திற்கேற்ப சிலர், எடை மாறுபடலாம். உடல் எடை அதிகமாகி, உணவை கட்டுப்படுத்த முடியவில்லை; உடற்பயிற்சியும் செய்ய முடியவில்லை என்பவர்கள், தாமாகவே, லேகியம், மருந்து மாத்திரை எடுத்துக் கொள்ளக் கூடாது; மருத்துவர்களை தான் அணுக வேண்டும். பொது மருத்துவம் பார்ப்பவர்களுக்கு இது குறித்த அறிதல் குறைவு. எனவே, நியூட்ரிஷியன் அல்லது தகுந்த துறை வல்லுனர்களிடமே செல்ல வேண்டும்

Thursday, May 3, 2018

thanks to vikatan.com

சாப்பிடும்போது தண்ணீர் குடித்தால் என்ன ஆகும்? - #DrinkingWaterDuringMeals

கோடைக்காலத்துக்கும் தாகத்துக்கும் நெருங்கிய பந்தம் உண்டு. தாகம் எடுத்துக்கொண்டேயிருக்கும். எவ்வளவு தண்ணீர் குடித்தாலும் அடங்காது. சாப்பிடும் நேரத்தில் இன்னொரு பிரச்னை... முதல் வாய்ச்சோற்றை அள்ளி வாயில் வைத்தவுடனேயே விக்கல் எடுக்க ஆரம்பித்துவிடும். தண்ணீர் குடித்த பிறகுதான் நிற்கும். ஆனால், 'சாப்பிடும்போது தண்ணீர் குடிக்கக் கூடாது. குடித்தால் உடலில் சத்துகள் ஒட்டாது’ என்பது பலரின் அறிவுரை. இந்தக் கருத்துகள் ஒருபுறமிருக்கட்டும். 'நம் உடலுக்கு என்ன தேவையென்பதை நம் உடலே சில சமிக்ஞைகளின் மூலம் நமக்கு உணர்த்திவிடும். உதாரணமாக, உடலுக்குத் தண்ணீர் தேவையென்றால், தாகம் எடுக்கும். அப்போது கண்டிப்பாகக் குடிக்கத்தான் வேண்டும். அது சாப்பிடும் நேரமாக இருந்தாலும் பரவாயில்லை. உடலின் தேவையைப் பூர்த்திசெய்தே ஆக வேண்டும். இல்லையென்றால், தேவையில்லாத உடல்நலப் பிரச்னைகள் ஏற்படும்’ என்பது மற்றொரு சாரரின் கருத்தாக இருக்கிறது.
குடிநீர்
சாப்பிடும்போது தண்ணீர் குடிக்கலாமா, கூடாதா? மருத்துவர்களிடம் கேட்டோம்...
இரைப்பை மற்றும் குடலியல் நோய்ச் சிறப்பு மருத்துவர் வெங்கடேஷ்வரன் விளக்குகிறார்...
''சாப்பிடும்போது கண்டிப்பாகத் தண்ணீர் குடிக்கக் கூடாது. அப்படிக் குடித்தால் ஜீரணக் கோளாறுகள் உண்டாகும். பொறுமையாக அளவாகச் சாப்பிட்டால், தண்ணீர் குடிக்கவேண்டிய நிலை ஏற்படாது. சிலர் சாப்பிட்டு முடித்தவுடன் ஒரு டம்ளர் நீரை முழுவதுமாகக் குடிப்பார்கள். அது கூடாது. சாப்பிட்டு இருபது நிமிடங்கள் கழித்து கொஞ்சம் கொஞ்சமாகக் குடிக்க ஆரம்பிக்கலாம். சாப்பிடுவதற்கு முன்னரும் குடிக்கக் கூடாது. ஏனென்றால், வயிற்றுக்குத் தேவையான அளவு சாப்பிட முடியாது. அதோடு, உணவிலுள்ள சத்துகள் சரியாக உடலுக்குக் கிடைக்காது. சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னதாக தண்ணீர் குடிப்பது நல்லது. வெயில் காலத்தில் சிலருக்கு அடிக்கடி தொண்டை வறண்டுகொண்டேயிருக்கும். அடிக்கடி தாகமெடுக்கும். அவர்கள் மட்டும் மொத்தமாகக் குடிக்காமல், கொஞ்சமாகச் சிப் சிப்பாக அருந்தலாம்.’’
சாப்பாடு
அரும்பாக்கம் அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி முதல்வர் மணவாளன் இதுகுறித்து விளக்குகிறார்...மருத்துவர் மணவாளன்
''நாம் சாப்பிடும் உணவுகள் ஜீரணமடைவதற்கு நம் உடலில் சில அமிலங்கள் (Hydrochloride and Dijestive Juices) சுரக்கும். சாப்பிடும்போது தண்ணீர் குடித்தால் அந்த அமிலங்கள் நீர்த்துப் (Dilute) போகும். அதன் வீரியம் குறைந்து ஜீரணக் கோளாறுகள் உண்டாகும். இது தொடர்ச்சியாக நிகழும்போது, வயிறு தொடர்பான பிரச்னைகள் உண்டாகும். உதாரணமாக, எந்த விலங்கும் சாப்பிடும்போது தண்ணீர் குடிக்காது. இயற்கையின் நியதியே அதுதான். 'விக்கல் ஏற்படுகிறது, அடைத்துக்கொள்கிறது. அதனால்தான் குடிக்கிறோம்’ என்று சிலர் காரணம் சொல்வார்கள். இதற்கு, உடலுக்குத் தண்ணீர் தேவைப்படுகிறது என்று அர்த்தம் அல்ல. நாம் சாப்பிடும் முறை தவறு என்றுதான் அர்த்தம். சாப்பிடும்போது நிதானமாக மென்று உமிழ்நீருடன் கலந்து சாப்பிட வேண்டும். அப்படிச் சாப்பிட்டால் விக்கல் எடுக்காது. தண்ணீர் குடிக்கவேண்டிய அவசியம் ஏற்படாது. அதையும் மீறி விக்கல் வந்தால் கொஞ்சம் குடித்துக்கொள்ளலாம்.
'சாப்பிடும்போது தாகம் எடுக்கிறதே, எப்படிக் குடிக்காமல் இருக்க முடியும்?' என்பார்கள் சிலர். அப்படித் தாகம் எடுக்காமல் பார்த்துக்கொள்ளவேண்டியது நம் கடமை. அதற்கு, ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை ஒரு டம்ளர் தண்ணீர் குடித்துக்கொள்ளலாம். உடலில் தண்ணீர் வற்றி, தொண்டை வறண்டு, தாகம் எடுக்கட்டும் என்று காத்துக்கொண்டிருக்கக் கூடாது. அப்படி உடலை வறட்சியாகவிட்டால் மலச்சிக்கல், சிறுநீரகக்கல் உருவாவது போன்ற பாதிப்புகள் உண்டாகும்.
தாகம்
'தாகம் எடுக்கும்போது மட்டுமே தண்ணீர் குடிக்க வேண்டும்’ ஒரு கருத்து நிலவுகிறது. அது தவறு. தாகம் எடுக்கும்போது கண்டிப்பாகத் தண்ணீர் குடிக்க வேண்டும் அதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், இன்று நாம் வேலை பார்க்கும் சூழல், குளிரூட்டப்பட்ட அறைகளில் தாகம் எடுப்பதே இல்லை. அதற்காக தாகம் எடுக்கும்போதுதான் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று அலட்சியமாக இருக்கக் கூடாது. ஒரே நேரத்தில் மொத்தமாகவும் தண்ணீர் குடிக்கக் கூடாது. ஒரு மணி நேர இடைவெளியில் ஒரு டம்ளர் தண்ணீர் அவசியம் குடிக்க வேண்டும். தண்ணீர் அதிகமாகக் குடித்ததால் யாருக்கும் உடல்நலப் பிரச்னைகள் ஏற்பட்டதில்லை. ஆனால், குறைவாகக் குடிப்பதால்தான் பல்வேறு உடல்நலப் பிரச்னைகள் உண்டாகும் என்பது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது. தண்ணீர் நம் உடலின் செல்களில் உள்ள தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி, செல்களைப் புத்துணர்ச்சியோடு வைத்துக்கொள்ள உதவும். தேவையான அளவு தண்ணீர் குடிக்காவிட்டால் கழிவுகள் அப்படியே தங்கி, அவைதான் சிறுநீரகக் கற்களாக உருவாகின்றன. சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்துக்கு முன்னர்வரை தண்ணீர் குடிக்கலாம். சாப்பிட்ட பிறகும் அரை மணி நேர இடைவெளி இருந்தால் மிகவும் நல்லது.
சிறுநீரகக் கல்
நம் உடல் 70 சதவிகிதம் நீரால் ஆனது. அதனால் தண்ணீரால் நம் உடலுக்கு எந்த ஆபத்தும் வரப் போவதில்லை. காலையில் தூங்கி எழுந்ததும், வெறும் வயிற்றில் நம்மால் எவ்வளவு தண்ணீர் குடிக்க முடியுமோ அவ்வளவு குடிக்கலாம். அது உடலுக்கு மிகவும் புத்துணர்ச்சியைக் கொடுக்கும்.
சிறுநீரகம் செயலிழந்தவர்கள், மூளையில் நீர் கோர்ப்பு (Hydrocephalus) போன்ற பிரச்னை உள்ளவர்கள், இதய பாதிப்புள்ளவர்கள் மட்டும் மருத்துவர்களின் அறிவுரையோடு  குடிக்க வேண்டும்.’’