Saturday, March 30, 2019

சொல்கிறார்கள் thanks to dinamalr.com




சொல்கிறார்கள்

Advertisement
  சொல்கிறார்கள்

உடல் எடை அதிகரிக்காது!நார்ச்சத்து உணவுகளின் முக்கியத்துவம் பற்றி கூறும், குடும்ப நல மற்றும் இதய நோய் மருத்துவர், ஜீனத் பேகம்: இன்றைய உணவு பழக்கமும், வாழ்க்கை முறையும் வெகுவாக மாறிவிட்டன. சுவையை பிரதானமாக கொண்ட துரித உணவுகள் அதிகரித்து விட்டன. நார்ச்சத்து குறைவான அந்த உணவுகளை உண்பதால் தான், உடல் பருமன் ஏற்படுகிறது; ரத்த அழுத்தம் அதிகரிக்கிறது; உடலில் கெட்ட கொழுப்பு -சேர்ந்து, இதய நோய் உண்டாகிறது. எனவே, இதய நோயாளிகள், நார்ச்சத்து உணவுகளை தவிர்க்கக் கூடாது.நார்ச்சத்து உணவுகளை அன்றாடம் சேர்த்து கொண்டால், உடல் எடை அதிகரிக்காது. மேலும், உடலிலுள்ள, எச்.டி.எல்., எனும் நல்ல கொழுப்பின் அளவு அதிகரித்து, எல்.டி.எல்., எனும் கெட்ட கொழுப்பின் அளவு குறைகிறது.இதனால், ரத்தக்குழாய்களில் படியும் கொழுப்பின் அளவு குறைந்து, ரத்த ஓட்டம் அதிகரித்து, உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவது தடுக்கப்படும். உணவிலுள்ள கொழுப்பு மற்றும் சர்க்கரையின் அளவு, ரத்த நாளங்களால் அதிக அளவில் உறிஞ்சப்படுவதையும் தடுக்கிறது. இதனால் மாரடைப்பு, பக்கவாதத்தில் இருந்து பாதுகாத்து கொள்ளலாம்.நார்ச்சத்து உணவுகளில் கரையும் நார்ச்சத்து, கரையா நார்ச்சத்து என, இரண்டு வகை உள்ளது. பீன்ஸ், ஓட்ஸ், அவரை வகை மற்றும் பார்லி போன்ற உணவு பொருட்களில், கரையும் நார்ச்சத்து அதிகம். இவை சீரான ரத்த ஓட்டத்துக்கு உதவும்; இதயத்தை காக்கும்.குடல் பாதையிலுள்ள நச்சுகளை வெளியேற்றுவதில், நீருக்கு முக்கிய பங்கு உண்டு. போதிய அளவு நார்ச்சத்து உணவை உட்கொள்வதால், உடலுக்கு தேவையான அளவு, நீர்ச்சத்தை பெறலாம். இது, உடலுக்கு தேவையில்லாத நச்சுகளை, குடல் பாதை வழியாக வெளியேற்றவும், செரிமான மண்டலத்தில் நச்சுகள் தங்கியிருக்கும் கால அளவை குறைக்கவும் உதவும். நார்ச்சத்து போதுமான அளவு கிடைக்காத போது தான், மலச்சிக்கல் ஏற்படுகிறது.நார்ச்சத்து உணவுகளில் புற்றுநோயை தடுக்க உதவும், 'ஆன்டி ஆக்ஸிடன்ட்' மற்றும் வேதிப்பொருட்கள் உள்ளன. நார்ச்சத்துள்ள உணவு களை அதிகம் உட்கொண்டால் பெருங்குடல், மார்பகப் புற்றுநோய் வராமல் தவிர்க்கலாம்.காய்கறி, கீரைகள், பழங்களில் நார்ச்சத்துகள் நிறைவாக உள்ளன. பழச்சாறில் நார்ச்சத்து கிடையாது. எனவே, பழங்களை அப்படியே கடித்து சாப்பிடுவது நல்லது. 'சாண்ட்விச், பிட்சா' என எதுவானாலும், குறைந்த அளவிலாவது காய்கறிகளை சேர்த்து சாப்பிட வேண்டும்.

Saturday, March 23, 2019

ஆன்மிகம் உணர்த்தும் ஆளுமைத்திறன்! thanks to dinamalar.com

ஆன்மிகம் உணர்த்தும் ஆளுமைத்திறன்!

 Updated : ஜன 29, 2019  Added : ஜன 29, 2019  கருத்துகள் (1)
ஆன்மிகம் உணர்த்தும் ஆளுமைத்திறன்!
5Shares
ஆளுமைத் திறன் என்பது எல்லாத் துறைகளிலும் அவசியம்மிக்கது. அத் திறனுடையோரே சமுதாயத்தில் நல்வழிகாட்டிகளாக திகழ்கின்றனர். தலைமைப் பண்பிற்குத் தேவையான முக்கியத் திறனும் அதுவே. அத் திறனின்றி செய்யப்படும் எச்செயலும் நீடித்த பயன் தராது. நிலைத்தும் நிற்காது. அரசியல், ஆன்மிகம், கல்வி, பொருளாதாரம், ஊடகம், வணிகம் என எல்லாத் துறைகளிலும் நிர்வாகத் திறனுடையோரைக் கண்டு வியக்கின்றோம்.இதுபிறப்போடு வருவதா? அல்லது பயிற்சியால் வளரும் திறனா? எனக் கேள்விகள் எழுவதுஉண்டு. இது குறித்து பல நுால்கள் வெளி வந்துள்ளன. பல நிறுவனங்கள் பணம் செலவிட்டுப் பயிற்சி முகாம்கள் நடத்துகின்றன. இவை பெரும்பாலும் மேலாண்மை (Management) சார்ந்த ஆய்வுகளாகவும், தகவல்களாகவும் இருக்கின்றன. அதில் குறையேதுமில்லை. பயனடைந்தோர் பலருண்டு.

நேர்மைத் திறன்


ஆயினும் உண்மையானஆளுமைத் திறன் என்பது யாது? அதைஅறியும் வழியென்ன? அத்திறனோடு நேர்மை, உண்மை போன்ற உயர் பண்புகளும் ஊடுருவி உட்கலத்தல்வேண்டாமா? நேர்மையற்ற திறனால் பயனென்ன? இது குறித்து எவ்வளவு கற்றாலும், பயிற்சி பெற்றாலும், செயல்படும் சமயத்தில் திறனுக்கும், நற்பண்புகளுக்கும் நடுவில் நீண்டதோர் இடைவெளியைக் காண்கின்றோம். பண்பில்லாத திறன் குரங்கு கையிலிருக்கும் கூர்வாள் போலாகும்.இந்த இடைவெளி நீங்கி, திறனுடன், நேர்மையும் இணைந்து செயல்படும் நிலையே உண்மையான ஆளுமைத்திறனாகும். திறனும், அறனும் சேர்ந்து ஓளிரும்அறிவே கல்வி. இதுவே நம்மையும், தேசத்தையும் முன்னெடுத்துச்செல்வதற்கான முழுமையானசெயல் திட்டமாகும். மனிதனை ஆள்வது எது? என்றால் 'மனம்' என்று பொதுவாகக் கூறுவோம். அனைவரையும் வசப்படுத்துவது மனமே. மனம் வசப்படுமாயின் உலகே வசப்படும். மனதை ஆளும் திறனே மாபெரும் ஆளுமைத் திறன் என்றும் கூறுவர் உண்டு.ஆனால் மனதையும் ஆளும் மாபெரும் சக்தி ஒன்று உள்ளது. அதை அறியாது மனதை வெல்ல இயலாது. இவ் விஷயத்தில் விஞ்ஞானத்தைக் காட்டிலும் மெய்ஞானமே நமக்குத் துணை.மனதை ஆள்வதும், ஆட்டுவிப்பதும் மனிதனிடதில் மையமிட்டுள்ள குணங்களே.வெவ்வேறு எண்ணங்களாக, உணர்வுகளாக மனதின் மூலம் வெளிப்படுவதும் குணங்களே. தாவரம், மனிதன், விலங்கு என இயற்கை அனைத்திலும் பரவிக் கிடப்பதும் அதுவே. “எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன்” என்று மாணிக்கவாசகர் கூறியதின் காரணமும் குணங்களே. படைப்பில் இது இல்லாத இடமில்லை. ஆனால் இது குறித்து முழுமையான விழிப்போ நமக்கில்லை. மனதைப் பின்னிருந்து இயக்கும் குணங்களை ஆளும் திறனே ஆளுமைத் திறனாகும். அதனின்று விடுபடும் நிலையே ஆன்ம விடுதலை.


மூன்று குணங்கள்


குணங்களை நம்மால் நேரிடையாக அறிய இயலாது. நம்முடைய செயல்கள், நாட்டம், மற்றும் உணவுப் பழக்கங்களைக் கூர்ந்து கவனித்தால் குணங்கள் வெளிப்படும் நுட்பத்தினை அறியலாம்.மனிதனை முற்றிலும் வசப்படுத்தி வைத்திருக்கும் மூன்றுகுணங்கள் சத்துவம், இரஜஸ், தமஸ் எனப்படும்.இம் மூன்று குணங்களும் எல்லோரிடத்திலும் காணப்படுகிறது.ஆனால் மாறுபட்ட விகிதத்தில் வெளிப்படுகின்றது. மூன்றில் எது மேலோங்கி நிற்கின்றதோ, அந்தத் தன்மை உடையவராகவே நாம் இருக்கின்றாம். மனிதரின் நடத்தையும், திறனும் அதை அனுசரித்தே நிற்கும்.“தமஸோமா ஜ்யோதிர் கமய” இருளில் இருந்து ஒளிக்கு என்னை வழி நடத்து என்கிறது வேத மந்திரம். தமோகுணமானது அறவே அறுத்தெறியப்பட வேண்டிய குணம். மனிதனை அறியாமை என்னும் இருளில் மயக்கி நிறுத்தும் குணமிது. இக்குணத்தை கொடிய நோயைக் காட்டிலும் கேடாகக் கருத வேண்டும். இதில் வீழ்ந்தோர் எச்செயலிலும் நாட்டமின்றி இருப்பர் அல்லது செய்வதனைத்தையும் தவறாகவே செய்வர். பிறரைத் துன்புறுத்துவதில் இன்பம் கொள்வர்.காலம் தாழ்த்திச் செயவது அல்லது செய்யாமலேவிட்டுவிட்டுவது, மறதி, சோம்பல், உறக்கம் என இக் குணங்களின் தாக்கத்தை வள்ளுவர் நான்காக வகுத்துள்ளார். தீயபழக்கங்களின் பிறப்பிடம் தமோகுணம். திறனோ, அறிவோ வெளிப்படாது முடங்கிய மந்த நிலை. இதனின்று பிறரைக்காத்தோமெனில் அதுவே மாபெரும் தொண்டாகும்.

இரஜோ குணம்


இரஜஸ்என்றால் அசுத்தம்.கண்ணாடியில் படர்ந்துள்ள மாசு போல் அறிவை மறைக்கும். ஆணவத்தை, ஆங்காரத்தை முன்னிறுத்தும் குணமிது. இக் குணமுடையோர் செயலில் அதிக நாட்டம் உடையோராக இருப்பர். ஓய்வின்றி உழைப்பர். இக் குணமின்றி செயலேதும் செய்ய இயலாது.ஆனால் செயலில் நிதானத்தை இழக்கச் செய்து, ஆத்திரத்தைத் துாண்டி, தன் வீழ்ச்சிக்கு தானே வித்திடும் அபாயம் படைத்த குணமிது. அதீத ஆசையே இதனியல்பு. அவ்வாசைகளை நிறைவேற்றிக் கொள்ளும் அவசரத்தில் நன்மை, தீமை, தர்மம், அதர்மம், பாபம், புண்ணியம் இவற்றை புறந்தள்ளி செயலை முடிக்க முனைவர்.எல்லாச் செயல்களிலும் விருப்பு, வெறுப்பு, காமம்,குரோதம், சுயநலம் இவையே எஞ்சி நிற்கும்.செயலில் திறனிருக்கும் ஆனால் நம்பகமும், நற்தன்மையும் இராது. பேராசை, செயலைத் துவங்குவதில் முனைப்பு, புற விஷய நாட்டம். சபலம், சஞ்சலம் போன்றவை இரஜோ குணத்தின் ஆதிக்கத்தால் வருவனவாகும். மனிதனைத் துன்பத்தில் பிணைக்கும் குணமிது. எவர் கூறியும் கேளாது, மாறமறுத்து மடிந்த துரியோதனன் போன்றோர் இதற்கு உதாரணமாவர்.

சத்துவம் பழகு


சத்துவம் என்றால் உண்மைத் தன்மை. குணங்களில் இது தெய்வத்தன்மை பொருந்தியது. மனிதனை இயலாமையினின்று விடுவித்து, முழு ஆளுமைத்திறனை வழங்கும் அருமருந்து. களங்கமற்றது. செயல்புரியும் காலத்தில் நன்மை, தீமைகளை நன்குணர்ந்து தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளை நீக்கி செயல்படுவோமெனில் நம்மில் சத்துவம் மேலோங்கி நிற்கும். அமைதி, ஆழ்ந்த அறிவு, ஆனந்தம் இயவற்றின் இருப்பிடம் சத்துவம். ''உன் உடலிலுள்ள அனைத்துப் புலன்களின் வாயிலாக அறிவு வெளிப்படுமாயின் அதை சத்துவம் என்றறி” என்கிறது கீதை.“மெய்ப்பொருள் காண்பதறிவு”, “நன்றின்பால் உயப்பது அறிவு” என குறளில் வள்ளுவர் கூறும் அறிவு சத்துவ குணமே. பண்டைய பாரதத்தில் பாராண்ட மன்னர்கள் தவமிருந்து பெற்ற வரம். தன் கடமை மறந்து, புலன் இன்பத்தில் மூழ்கிய சுக்ரீவனுக்கு இராமன் போதித்ததாக கம்பர் சத்துவ குணச்சிறப்பை இப்பாடலில் விளக்குகின்றார்.'செய்வனசெய்தல், யாண்டும் தீயன சிந்தியாமை,வைவன வந்தபோதும் வசையில இனியகூறல்மெய்யன வழங்கல், யாவும் மேவின வெகல் இன்மைஉய்வன ஆக்கித் தம்மோடு உயர்வன: உவந்துசெய்வாய்'உள்ளத்துாய்மை, தன்னடக்கம், ஜீவகாருண்யம், பிறபொருள் விரும்பாமை, தன்னலமின்மை, கர்வமின்மை, வாய்மை முதலிய குணங்கள் கைகூடினால் சத்துவம் வளரும். சத்துவகுணம் படைத்தோர் பேரன்பும், அமைதியும் மிக்கவராக இருப்பர்.கும்பகர்ணன் தமோ குணத்தால் துாக்கத்தை வரமாகப் பெற்று மடிந்தான். ராவாணன் இரஜோகுணத்தால் பெண்ணாசை கொண்டு மடிந்தான். விபீடணன் சத்துவத்தால் இறைவனடி தொழுது நீடித்து வாழ்ந்தான். எனவே குணங்களைக் கூர்ந்து கவனிப்போம்.எல்லையற்ற ஞானத்தின் நுழைவாயிலாகிய சத்துவத்தால் அளவற்ற ஆற்றல் பெருகும். நன்மை விளையும், நேர்மைதவறாத ஆளுமைத் திறன் வளரும். துயரனைத்தும் தீரும். “இன்பமே என் நாளும் துன்பமில்லை”என்ற நாவுக்கரசரின் வாக்கு போல் வாழ்வும் வையமும் பயன்பெறும். வாழ்வோம்! வாழ்வதற்காக எழுவோம்!-சுவாமி சிவயோகனந்தாசின்மயாமிஷன், மதுரை93458 

செப்பு பாத்திரம் பயன்படுத்துவது thanks to dinamalar.com



சொல்கிறார்கள்

 பதிவு செய்த நாள் : மார் 24, 2019 
Advertisement
சொல்கிறார்கள்
செப்பில் இருக்கு வம்பு!

செப்பு பாத்திரம் பயன்படுத்துவது தொடர்பாக கூறும், இயற்கை மருத்துவர், எஸ்.டி.வெங்கடேஷ்வரன், சித்த மருத்துவர் காசி பிச்சை: செப்புத்தாது, உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்க கூடியது. இந்த பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வைப்பதால், செப்பு தாது மெல்ல மெல்ல தண்ணீரில் கலக்கும். இந்த தண்ணீரை குடிக்கும் போது உடலுக்கு தேவையான அதிக ஆற்றலும், வலிமையும் கிடைப்பது உண்மை தான்.ஆனால், அதை சேமித்து வைக்கும் விதத்தில் தான், விஷமாக மாற வாய்ப்பு ஏற்படுகிறது. செப்பு பாத்திரத்தில் தண்ணீர் பட்டு உருவாகும் பச்சை நிற ரசாயனம், விஷத்தன்மை கொண்டது. இந்த பாத்திரத்தில் உள்ள செப்பு, தண்ணீர் அல்லது வாயுவில் உள்ள ஆக்சிஜனுடன் வினைபுரிந்து, 'காப்பர் ஆக்சைடை' உண்டாக்குகிறது. இதுவே, பச்சை நிறத்தில் செப்பு பாத்திரத்தில் படியும்; இது, ஒருவகை காளான்.செப்புப் பாத்திரத்தை சுத்தம் செய்ய, சோப்பையோ, பாத்திரம் கழுவும் திரவத்தையோ பயன்படுத்தக் கூடாது. அதை பயன்படுத்தினால், சோப்பில் உள்ள ரசாயனம் பாத்திரத்தில் படியும். இதனால், கெடுதல் தான் அதிகமாகும்.இது தவிர, அகலமான மற்றும் கைகள் தாராளமாக நுழையும் செப்பு பாத்திரத்தை மட்டுமே தண்ணீர் சேமிக்க பயன்படுத்த வேண்டும். அப்போது தான் பாத்திரத்தின் அனைத்து பகுதியையும் தேய்த்து சுத்தப்படுத்த முடியும். அதேபோல், குழாய் வைத்த செப்பு குடிநீர் பானையையும் தவிர்க்கலாம். காரணம், குழாய் பதித்த இடத்தில் ரசாயன களிம்பு உருவாகும் வாய்ப்பு இருக்கிறது.மேலும், செப்பு பாத்திரத்தை, புளியுடன், சிறிது உப்பு வைத்து தேய்த்து, பின், சாம்பல், எலுமிச்சைச்சாறு சேர்த்து கரகரப்பாக தேய்த்து கழுவ வேண்டும். இல்லையேல், புளி அல்லது சாம்பல் மட்டும் பயன்படுத்தலாம். உப்பை மட்டும் தனியாக பயன்படுத்த கூடாது. ஒரு நாளைக்கு ஒரு முறையாவது சுத்தம் செய்ய வேண்டும். வாரம் ஒரு முறை, வெயிலில் காய வைக்க வேண்டும்.
குடிநீரை காய்ச்சி ஆறவைத்தோ அல்லது மிதமான சூட்டுடனோ செப்பு பாத்திரத்தில் ஊற்றி, பிறகு குடிக்கலாம். ஆனால், செப்பு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி, அடுப்பில் நேரடியாக சூடு செய்யக் கூடாது. அப்படிச் செய்தால், அது எதிர்வினையையே தரும்.
இந்த தண்ணீரிலேயே சீரகம், துளசி, புதினா, ரோஜா இதழ், வேப்பிலை, நெல்லிக்காய், பெருஞ்சீரகம், வெந்தயம் உள்ளிட்ட மூலிகைகளை, தினமும் ஏதேனும் ஒன்றை கலந்து குடிக்கலாம். இது, உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இதுதவிர, செப்பு பாத்திரத்தில் உணவை வைத்து பயன்படுத்த கூடாது; தண்ணீர் ஊற்றி மட்டுமே பயன் படுத்த வேண்டிய உலோகம் இது.