Tuesday, June 18, 2019

வாங்க சாப்பிடலாம்... இன்று சர்வதேச நீடித்த அறுசுவை உணவு தினம் thanks to dinamalar.com


வாங்க சாப்பிடலாம்... இன்று சர்வதேச நீடித்த அறுசுவை உணவு தினம்

 Added : ஜூன் 18, 2019 
5Shares

“வயிற்றுக்குசோறிடல் வேண்டும்- இங்கு
வாழும் மனிதருக்கெல்லாம்”
என்பான் மகாகவி பாரதி. இந்த அழகிய உலகம் இயல்பாகச் சுழல வேண்டும் என்றால் அது பசிப்பிணி இல்லாத உலகமாக மாறவேண்டியது அவசியம். மனிதனின் அடிப்படைத் தேவைகளுள் முதன்மையானது உணவேஆகும். தமிழரின் பண்பாட்டை ஒற்றை வார்த்தையில் கூற வேண்டும் என்றால் இலக்கியங்கள் அனைத்தும் ஒரு சேர எழுப்பும் குரல் விருந்தோம்பல் என்பதே ஆகும். சர்வதேச நீடித்த அறுசுவை உணவு தினத்தை இன்று ( ஜூன்18) உலகமெங்கும் கொண்டாடிவருகின்றனர். 2016 ஆம் ஆண்டு ஐ.நா. சபையால் அங்கீகரிக்கப்பட்ட பின்னர் ஆண்டுதோறும் இந்த தினம் உலக அளவில் உணவுப் பிரியர்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டுவருகிறது.
இன்றைய நவீன உலகில் உணவின் வகைகளும் அவற்றின் பெயர்களும் ஏராளமாக இருந்தாலும் எத்தகைய உணவு தயாரித்தாலும் அது அறுசுவைக்குள் தான் இருக்கும் என்பதே நமது முன்னோர்கள் வகுத்த நியதியாகும். ஆறு சுவைகளுடன் கூடிய உணவே முறையான உணவு என்று தமிழ் இலக்கியம் கூறுகிறது. நாக்கு அறியக் கூடியசுவை ஆறு என்று தமிழ் மருத்துவமும் கூறுகிறது. நவீன மருத்துவமோ ஆயிரக்கணக்கான சுவை நிறமிகள் நமது நாக்கிலே குடிகொண்டுள்ளதாக கூறுகிறது. உடலை இயக்குகின்ற தாதுக்களுடன் அறுசுவையும் இணைந்து நமது உடலை திடமாக வைக்க உதவுகிறது. ரத்தம்,தசை,கொழுப்பு,எலும்பு,நரம்பு,உமிழ்நீர்என்ற ஆறு தாதுக்களால் ஆனதே இந்தஉடலாகும். இந்த ஆறு தாதுக்களும் சரியானஅளவில் உடலில் இருக்கவேண்டும். அவற்றைசரிவர இருக்கச் செய்வது இந்தஅறுசுவையே ஆகும்.
உயிர்வாழ உணவு

'யாகவராயினும் நா காக்க' என்பான் வள்ளுவன். இது வெறும் நாவடக்கம் என்பதற்காக மட்டும் அவன் கூறியதாக நாம் எடுத்துக் கொள்ளக்கூடாது. ஆறு சுவைகளுடன் கூடிய உணவினை நமது நாக்கு சுவைத்தே உள்ளே அனுப்பி வைக்கிறது. அதில் ஏதேனும் ஒருசுவை அதிகமானாலும் அது நமக்கு தீங்கையே தருகிறது. உண்ணும் உணவிலும் கவனம் தேவை என்பதையும் கருத்திலே கொள்ள வேண்டும். சுவைகளில் தலைமையானது உப்பு.உயிர்வாழ உணவு அவசியம்; அந்த உணவினை நல்ல உணர்வோடு உண்பது அவசியம் என்பதே மூதாதையர்களின் கருத்து. தமிழ்ப் பண்பாட்டின் அடிநாதமே விருந்தோம்பல் என்ற உயரிய பண்பிலிருந்தே தொடங்குகிறது. வீடுகள் தோறும் திண்ணைகள் அமைத்து வழிபோக்கர்கள் அதில் தங்கிச் செல்ல வழிவகை செய்து, அங்கிருக்கும் மாடங்களில் உணவும் தண்ணீரும் வைத்து விருந்தோம்பல் செய்த இனம் நம்முடையது.இறக்கும்போது கூட யாரும் பசியோடு இறந்திடக் கூடாது என்பதால்தான் அவர்களுக்கு வாய்க்கரிசி போடும் வழக்கமே வந்தது. நம்முடைய வீடுதேடி வரும் விருந்தினர்களை மனம்கோணாமல் அவர்களுக்கு என்ன உணவு பிடிக்கும் என்பதை அறிந்து அதை அவர்களுக்கு சமைத்து பரிமாறி மகிழ வேண்டும் என்பதை இலக்கியங்களும் பேசி மகிழ்கின்றன. பெரியபுராணம் முழுக்கவே பல்வேறு இடங்களில் அடியவர்களுக்கு விருந்து படைப்பதையே சேக்கிழாரும், அள்ள அள்ளக் குறையாத அட்சயப்பாத்திரத்தை மணிமேகலையில் சீத்தலைச் சாத்தனாரும் பாடியிருப்பதே பசிப்பிணி நீங்கிய உலகம் வேண்டும் என்பதற்கே.
காலை உணவு

நம்முடைய கலாசாரம் மேலைநாட்டு நாகரிகம் நோக்கி நகர்ந்து வருவதைக் கண்கூடாகப் பார்க்க முடிகிறது. காலையில் அலுவலகம், பள்ளி, கல்லுாரிக்குச் செல்லும் அவசரத்தில் மிகவேகமாக கிடைக்கும் உணவினை மெல்லக் கூட நேரமின்மை காரணமாக அள்ளிப் போட்டோ இல்லை பயணத்திலோ சாப்பிடுகிறோம். காலை உணவுதான் நமக்குத் தேவையான சக்தியை முதலில் அளிக்கிறது. இன்றைய அவசரத்தில் பலரும் காலை உணவினைத் தவிர்த்து விடுகிறோம். காலை உணவினைத் தவிர்த்தால் அது நம்முடைய சிந்தனையை சிறப்பாக வழங்கும் மூளையைப் பாதிக்கும் என்பதே மருத்துவர்களின் ஆலோசனை.காலையில் சாப்பிடும் உணவுதான் அன்றைய நாளின் சக்தியை அளிப்பதாக உள்ளது. அதுவும் இரவு உணவுக்கும் காலை உணவுக்கும்தான் நீண்ட உணவு இடைவெளி உள்ளது. அதை சரி செய்யவே நாம் காலை உணவை அவசியம் சாப்பிட்டாக வேண்டும். இல்லையேல் ஜீரண சுரப்பி நமது குடலை பதம்பார்க்க ஆரம்பித்துவிடும். உடலைக் குறைக்கிறேன் என்கிற போர்வையில் காலை உணவைத் தவிர்ப்பவர்களே குண்டாகி விடுகிறார்கள். காலை உணவினைத் தவிர்க்கும் போது வயிற்றில் வாயுத் தொல்லைகள் ஏற்பட்டு மந்த நிலை உருவாகிவிடும்.
ரசனையோடு சாப்பிடுபவர்கள்

உண்மையிலே ரசனையோடு சாப்பிடுபவர்களை பார்க்கும்போது நமக்கு சற்றே பொறாமை எட்டிப்பார்க்கிறது. இலையில் சரியாக, அளவாக தண்ணீர் தெளித்து அனைத்தும் பரிமாறும் வரை பொறுமையாகக் காத்திருந்து அதன் பின்னர் முறையாக வரிசையாக ஒவ்வொன்றாக ரசனையோடு பாராட்டிக் கொண்டே சாப்பிடும் வழக்கம் நம்மில் எத்தனை பேருக்கு இருக்கும். அவ்வாறு சாப்பிடுபவர்கள் பெரும்பாலும் இலையில் எதையும் மிச்சம் வைக்க மாட்டார்கள். அதே நேரம் வேண்டியதைக் கூச்சமின்றி கேட்டுச் சாப்பிடுவார்கள்.நம்மில் பலரும் அவசரத்தில் வேண்டாம் என்று மறுத்தால் ஏதேனும் சொல்லிவிடுவார்களே என்ற தயக்கத்தாலும் அதிகமாக வாங்கி இலையில் அப்படியே வைத்து விட்டு அதை நாகரிகம் என்று கருதி எழும் ஒரு மோசமான சுபாவம் கொண்டவர்கள்.அதிலும் வேண்டியதைக் கேட்டு விருப்பத்தோடு உண்ண வேண்டும் என்பதற்காகவே பபே விருந்தில் கூட நாம எத்தனை விரயம் செய்கிறோம் என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம். வீணாக்கப்படும் உணவுகளை ஆதரவற்றோர் இல்லத்திற்கு பகிர்ந்து கொடுத்தால் எத்தனை நலம் பயக்கும் நமக்கு என்பதை உணர்ந்தவர்கள்தான் அறிய முடியும்அவசரமான உலகம் என்று சொல்லிக்கொண்டு திரிகிறோம். ஆனால் நமது உடலை சரிசெய்யும் உணவினை ஒழுங்காக சரியான நேரத்தில் உண்டால்தானே உடல்நலம் பெற இயலும். தொடர்ந்து உழைப்பதற்கான வேகம் கிடைக்கும்.அந்த வேகத்தையும் உழைப்பிற்கான அடிப்படையாக இருக்கும் உணவுத் தேடலையே நாம் நிராகரிக்கும்போது இலக்கை எப்படி அடைவது? நம்மில் எத்தனை பேர் வீட்டிலே அமர்ந்து சாப்பிடும்போது தொலைகாட்சியையோ அலைபேசியையோ பார்க்காமல் சாப்பிடுகிறோம். இல்லை என்ற பதிலைத்தான் வருத்தமோடு சொல்கிறோம். இன்னமும் நாம் உண்ணும் பழக்கத்தை முறைப்படுத்தவில்லையோ அல்லது முன்னோர்கள் கொடுத்ததை பின்பற்றவில்லையோ என்ற வருத்தமும் உண்டு. உணவினை உண்பதிலே ஒரு முறையை வைத்து உண்டு சரியாக வாழ்பவர்களால்தான் வெற்றியாளர்களாக வலம் வர முடியும்.
உணவே மருந்து

உணவே மருந்து; மருந்தே உணவு என்று சொல்கிறோம். சரியான முறையில் பசித்த பின்னர் சரியான அளவோடு சுவையான உணவினை உட்கொள்ளும்போது எந்த நோயும் வரப்போவதில்லை. எனவே நோய்களை தடுக்கும் மருந்தாக நாம் உட்கொள்ளும் உணவே இருந்தது என்றால் அது மிகையாகாத ஒன்றே ஆகும். திரிகடுகம், சிறுபஞ்சமூலம் உள்ளிட்ட நுால்களும் திருக்குறளுமே எப்படி உணவு உட்கொள்ள வேண்டும்? எவ்வகையான உணவினைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற செய்தினைச் சொல்கின்றன.
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நுாலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை'
என்ற குறளை அவசரம் அவசரமாக மதியவேளையில் பள்ளியில் சத்துணவுத் தட்டை வைத்துக்கொண்டு சாப்பிட்டதை அரசுப்பள்ளிகளில் படித்த பலரும் அத்தனை எளிதாக மறந்திட இயலாது. அத்தனை அழகான சூழலை இனி உருவாக்கிடவும் முடியாது. அந்த குறளின் இலக்கணப்படியே அப்போது வாழ்ந்திருப்போம். நாம் கொண்டுவரும் தின்பண்டங்களை சக மாணவர்களோடு உண்டு மகிழ்ந்திருப்போம். எப்போதும் கூடி வாழ முயற்சிக்க வேண்டும். வள்ளுவரும் அதையேதான் கூறுகிறார். பகுத்துண்டு வாழ்வதையே அறமாகச் சொல்கிறது.
பிடித்த உணவுகளை சாப்பிடும்போது ஏற்படும் உணர்வு அலாதியானது. அதை அளவோடு சாப்பிடும்போதே நன்மை பயப்பதாக உள்ளது. அதைவிட மகிழ்ச்சி ஒன்று நம்மிடையே உண்டு. அதுவே பகிர்ந்து உண்பதாகும். மாணவர்களாக நாம் இருந்தபோது ஒன்றாக அமர்ந்து ஒருவருக்கொருவர் பகிர்ந்து உண்டதை எளிதாக மறந்துவிட இயலாது. ஒவ்வொரு முறையும் பகிர்ந்து உண்ணும்போது பசி இயல்பாகவே அடங்கிவிடும்.
--நா.சங்கரராமன்பேராசிரியர்எஸ்.எஸ்.எம்., கலை அறிவியல் கல்லுாரிகுமாரபாளையம்99941 71074

Saturday, June 15, 2019

கருவேப்பிலை பொடி thanks to dinamalar.com


பதிவு செய்த நாள்

14ஜூன்
2019 
00:00
தேவையான பொருட்கள்:
கருவேப்பிலை - 100 கிராம்
வெள்ளை உளுந்து - 100 கிராம்
சமையல் எண்ணெய் - 50 மி.லி.,
காய்ந்த மிளகாய் - 7
பெருங்காயத் துாள் - சிறிதளவு 
உப்பு - தேவையான அளவு

செய்முறை:
காம்பு நீக்கிய கருவேப்பிலையை, நன்கு கழுவி, வெயிலில் உலர்த்தவும். வெள்ளை உளுந்து, மிளகாய் வற்றல் ஆகியவற்றை எண்ணெயில் நன்கு வறுக்கவும். 
இவற்றுடன், உலர்த்திய கறிவேப்பிலை, பெருங்காயத்துாள், உப்பு சேர்த்து துாளாக அரைக்கவும். மணமும் சுவையும் நிறைந்த கறிவேப்பிலை இட்லி பொடி தயார். 
இந்த பொடியில், நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி, இட்லி, தோசையைத் தொட்டு சாப்பிடலாம். மிகவும் சுவையாக இருக்கும். சிறுவர், சிறுமியர் விரும்புவர்.
- தா.பிரேமா தாமஸ், விருதுநகர்.



கர்வத்தின் கதி!
Advertisement
 
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

14ஜூன்
2019 
00:00
மதுரை நகரத்தில், ஒரு சுண்டெலி வசித்து வந்தது. அது, கர்வத்துடன் எப்போதும் சுய பெருமை பேசித்திரிந்தது. மற்ற எலிகளை மதிப்பதில்லை. 
அதைக் கண்டால், மற்ற எலிகள் எல்லாம் ஒதுங்கி ஓடி விடும். அதனால், அந்த எலிக்கு நண்பர்களே இல்லை. வீடுகளில் உணவைத் திருடித் தின்று கொழுத்திருந்தது. 
ஒருநாள் -
பக்கத்து கிராமத்தில் வசித்த உறவினர் எலியை பார்க்கப் புறப்பட்டது.
கிராமத்து எலிக்கு, விதவிதமான உணவு கிடைக்கவில்லை. ஆனால், வயலில் கிடைத்த தானியங்களை உண்டது; எளிமையாக வாழ்ந்தது. 
தன்னைப் பார்க்க வந்த, நகர எலியை வரவேற்று, உபசரித்த கிராம எலி, பயறு, சோளம், கம்பு போன்ற தானியங்களை கொடுத்தது. நகர எலிக்கு, அந்த உணவு வெறுப்பை தந்தது. 
'இந்த உணவை உண்டால் உடல் மெலிந்துவிடும்; உன்னைப் பார்த்தால் பரிதாபமாக உள்ளது; என்னுடன் நகரத்துக்கு வா; நல்ல சுவையான உணவு தருகிறேன்...' என்று அழைத்தது.
அதை நம்பிய கிராம எலி, நகரத்துக்கு புறப்பட்டது. 
அவை, நகரில் ஒரு பெரிய வீட்டுக்குள் நுழைந்தன. அங்குள்ள ஒரு பொந்தில் தான், நகர எலி வசித்து வந்தது. அன்று மாலை வரை அலைந்தும் உணவு கிடைக்கவில்லை. பசி கொடுமையால் கிராம எலி வாடி வதங்கியது. 
'கொஞ்சம் பொறுமையாக இரு; இரவில் வகை வகையாக உணவு கிடைக்கும்...' என்று, நம்பிக்கை ஊட்டியது, நகர எலி.
இரவு வந்தது. பொந்திலிருந்து வெளியேறிய எலிகள், அந்த வீட்டின் சமையல் அறைக்குள் நுழைந்தன. 
அங்கிருந்த உணவு வகைகளைப் பார்த்த கிராம எலி வியந்தது. அதன் நாவில், எச்சில் ஊறியது. 
எதை சாப்பிடுவது என, புரியாமல் தவித்த கிராம எலி, 'இந்த உணவின் மணமே, ருசியைக் காட்டுகிறது. நானும் உன்னுடன் தங்கி விடுகிறேன்...' என்றது.
எலிகளின் சத்தம் கேட்டு, சமையல்காரர் அங்கு வந்தார். அவை, ஓட்டம் பிடித்தன. பொந்தின் அங்கே, ஒரு பூனை அமர்ந்திருந்தது; அதனால், உயிர் பிழைத்தால் போதும் என, தப்பி ஓடிய எலிகள், அன்று இரவும் உணவின்றி தவித்தன. அலைந்து திரிந்தன.
அப்போது கிராம எலி, 'எளிய உணவு என்றாலும், கிராமத்தில் பயம் இல்லாமல் சாப்பிடலாம். அதுவே எனக்கு போதும்...' என, புலம்பியபடி ஓட்டம் பிடித்தது. அதைக் கேட்ட நகர எலி, சிந்திக்கத் துவங்கியது. அதன் கர்வம் அடங்கியது.
குட்டீஸ்... பகட்டு நிலையானது அல்ல; எளிமையே நிலையானது; மகிழ்ச்சி தருவது. புரிந்து கொண்டீர்களா...

தண்ணீர் சாப்பிடுங்கள்! thanks to dinamalar


தண்ணீர் சாப்பிடுங்கள்!
  
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14ஜூன்
2019 
00:00
'நீரை சாப்பிட வேண்டும்; உணவை குடிக்க வேண்டும்' என்று, ஒரு முதுமொழி உண்டு. உணவை, வாயில் நன்றாக மென்று, கூழாக்கி, நீராகாரமாக குடிக்க வேண்டும் என்பதே அதன் பொருள். தண்ணீரை, மெதுவாக, 'சப்பி சப்பி' சாப்பிட வேண்டும். தண்ணீரில், ஆறு சுவைகள் உள்ளன. 
தண்ணீரை, சப்பிக் குடிப்பதன் மூலம், உடலுக்கு தேவையான, ஆறு சுவைகளையும் பெற்றுக் கொள்ளலாம். சப்புவதால் நொதிகள் கலந்து, உடலுக்கு நன்மைகள் ஏற்படுகிறது. 
அண்ணாந்து, 'கடகட' என, தண்ணீர் குடிப்பவர்களுக்கு, 'டான்சில்' நோய் வர வாய்ப்புள்ளது. 
தொண்டை வழியாக தண்ணீர், கடக்கும் போது, டான்சில் என்ற பகுதி வேகமாக வேலை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. எனவே, அதில் நோய் வர வாய்ப்புள்ளது. தண்ணீரை மெதுவாக குடித்தால், உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்கும். 
நுரையீரல் சம்பந்தப்பட்ட, இளைப்பு, நெஞ்சு சளி மற்றும் மூக்கு சம்பந்தப்பட்ட சைனஸ் போன்ற, எந்த வியாதியும் வராது.