Monday, December 30, 2019

குழந்தைகளின் கனவுகளுக்கு துணை நிற்போம் thanks to dinamalar.com


Advertisement
 குழந்தைகளின் கனவுகளுக்கு துணை நிற்போம்!
உறவுகள் கூடும் உன்னததருணங்கள் விடுமுறை தினங்கள். அதுவும் பள்ளிக் கூட விடுமுறை நாட்கள் எப்போதும் வசந்த காலங்களை ஞாபகம் செய்யும். கடைசித் தேர்வு எழுதும் நாளுக்கு முந்தைய நாளே மனதிலே இனம்புரியாத மகிழ்ச்சி ஒன்று பிறக்கும்.

நண்பர்களையும்உறவினர்களையும் சந்திக்கப் போகிறோம் என்பதை விட, ஒன்றாக உண்டு உறங்கி விளையாடிமகிழப் போகிறோம் என்ற அளவில்லா மகிழ்ச்சி மனதிற்குள்ஒட்டிக்கொள்ளும். பொதுவாக குழந்தைகள் எப்போதும் ஓய்வெடுப்பதில்லை. வீட்டில்உள்ளோர்களையும் அந்தநேரத்தில்ஓய்வெடுக்க விடுவதில்லைஎன்பதும் கூடுதலான செய்திதான்.
ஓடி விளையாடு பாப்பா - நீ
ஓய்ந்திருக்க லாகாது பாப்பா
கூடி விளையாடு பாப்பா -ஒரு
குழந்தையை வையாதே பாப்பா என்பான் பாரதி.
கொண்டாட்ட காலங்கள்
குழந்தைகளைக் கொண்டாட்டத்
தில் ஆழ்த்தும் அற்புதம் அவர்கள்
விளையாடும் விளையாட்டுக்களிலேஉள்ளது. நவீன உலகில் விளையாட்டு என்றாலே அது வீடியோ கேம் என்ற அளவிலேயும் அலைபேசி விளையாட்டுகள் என்ற அளவிலும் சுருங்கி விட்டது.

குழந்தைகளை குற்றம் சொல்லி பயனில்லை. பாதுகாப்பாக குழந்தைகள் வளரவேண்டும்
என்பதிலே அக்கறையோடு இருக்கும்நாம் உடல் வன்மையோடும் ஆன்மபலத்தோடும் அந்த குழந்தைகள்வளர்கிறார்களா? என்பதைசிந்திப்பது இல்லை. விடுமுறை காலங்களே குழந்தைகளின்

கொண்டாட்ட காலங்கள்.

அந்ததருணங்களில் அவர்கள் விரும்பும்விளையாட்டுகளை விளையாடவைத்து, விரும்பும் இடங்களுக்கும்அழைத்துச் சென்றால் அவர்களுடையமனமும் உடலும் வளம் பெறும்.உண்மையில் நமதுகுழந்தைகளை மிகவும் பாதுகாப்பாக வளர்க்கிறோம். அவர்களுக்கு சுதந்திரம் கொடுக்கிறோமோ? நம்மை நமது பெற்றோர்வளர்த்த விதங்களை விட சற்றேகடினமான சூழலில்தான்
அவர்களை அணுகி விடுகிறோம்.

பாரதியும் கண்ணதாசனும்

மிகவும் கட்டுப்பாடோடு வளர்க்கும் குழந்தைகள் ஒரு காலத்தில் அந்த தடைகளை உடைத்து வெளியேறி பிரச்னை குழந்தைகளாக மாறும் அபாயங்களைக்கண்டிருக்கிறோம். அதீத
சுதந்திரம் கொடுத்து வளரும் குழந்தைகள் அவர்களின் பொறுப்பினை உணர்ந்து நல்ல மனிதராக மாறும் நிதர்சனங்களையும் காண்கிறோம்

பாரதியும்கண்ணதாசனும்கண்ணனைக் கொண்டாட காரணம் நிறையஇருந்தாலும் அதில்
முக்கியகாரணம் கண்ணன் குழந்தை மனம்மாறாதவன் என்பதே ஆகும். நம்மை அறியாமல் நமதுகுழந்தைமை வெளிப்படும் தருணம்ஆனந்தத்தின் உச்சமே. எந்த நிலையிலும் மகிழ்ச்சியை இழக்காத இழக்க விரும்பாத பால்யத்தைகொண்டாடி மகிழுங்கள்அம்புலி மாமாவும்,தெனாலி ராமன், மரியாதை ராமன், அக்பர் , பீர்பால் ஆகியோர் விதைத்த நல்லறங்களைமீண்டும்
அவர்களுக்கு ஞாபகம் செய்வோம். நல்ல நுால்களே சிறந்த நண்பர்கள் என்பதை
மாணவர்களுக்கு புரிய வைக்க இந்த விடுமுறைக் காலங்களை பயன்படுத்தலாம்.

நன்னெறிக் கதைகள் நம்பிக்கை வழங்கும் புத்தகங்கள் என்ற வகையில் அவர்களுக்கு அறிமுகம் செய்து அவர்களோடு சிறிது நேரம் நாமும் வாசித்து பழக்கினோம் என்றால் அவர்களுக்கு ஒரு புதிய உலகத்தை நாம் அறிமுகம் செய்து வைக்க முடியும்.

படிக்கும் பழக்கம்

படிக்கும் பழக்கத்தைகுழந்தைகளிடம் கொண்டு சேர்த்து விட்டாலே அவர்களின் எதிர்காலம் குறித்து நாம் அதிக கவலைப் படவேண்டிய அவசியம் இல்லை.வரலாற்றுச் சிறப்புமிக்க சில ஊர்களுக்கு அழைத்துச் செல்லுங்கள். அந்த ஊரின் வரலாற்றைக் கூறி அவர்களை உற்சாகம் கொள்ளச் செய்யுங்கள். அவர்களோடு செலவழிக்க நேரத்தை ஒதுக்குங்கள். அந்த நேரத்தில் முழுமையாக அவர்களின் நண்பராகவே மாறுங்கள்.

அவர்கள் நமக்கும் நிறைய கற்றுக்கொடுப்பார்கள். எவ்விதசங்கடமும் இல்லாமல் அவர்களிடம் சில பாடங்களை நாம் படிக்க தொடங்கும்போது மகிழ்வின்உச்சத்தில் நாம் இருப்போம் சிறிது நேரம் உங்கள் அலைபேசியை அணைத்து விட்டு அவர்களோடு உரையாடுங்கள். அவர்களின் தேவையை உணருங்கள். அவர்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு பேசுங்கள்.

நம்முடைய கனவுகளையும் , கருத்துக்களையும் அவர்களின் மீது திணிக்காதீர்கள். அவர்கள் விரும்பும் விஷயங்களை செய்ய விடுங்கள். அது தவறாக இருந்தால் கனிவோடு கூறுங்கள். அதை ஏற்காத பட்சத்தில் அவர்கள் உணரும் காலமும் வரும். நிச்சயமாக நம்மிடம் திரும்பி வருவார்கள் என்பதே நிதர்சனம்.

வாழ்வதற்கு வழிகள்

பாடங்களைத் தாண்டிய வாழ்வு உள்ளது என்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டும்.
தோல்விகளை தாங்கும் பக்குவத்தை அவர்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். வாழ்வதற்கு வழிகள் நிறைய உண்டு என்பதை அவர்களுக்கு உணர்த்தி விட்டாலே போதும். வாழ்வினை வெல்லும் வழிகளை அவர்களே கண்டு கொள்வார்கள். வென்று வருவார்கள். நமது தோல்வி அனுபவங்களை அவர்கள்மீது திணித்து அவர்களின்புதிய முயற்சிகளுக்கு தடையாக நின்று விடக் கூடாது.

ஒவ்வொரு முறையும் அவர்கள் செய்யும் சிறிய முயற்சிகளைக் கூட பெரிய அளவில் பாராட்டுங்கள். அவர்கள் செய்யும் தவறுகளை பக்குவமாக எடுத்துச் சொல்லுங்கள். இனி அந்த தவறுகள் நேராதவாறு அவர்களே பார்த்துக் கொள்வார்கள். அந்த வயதில் அவர்களின் மனம் ஒரு அழகிய நிலம் போல இருக்கும். நாம் அறுவடை செய்ய வேண்டியதை நேர்மறையோடு விதைக்க வேண்டும்.

அப்போதே அவர்கள் மனம் அதை ஏற்றுக் கொண்டு மனதிற்குள் நல்ல எண்ணங்களின் விளைச்சல் தொடர ஆரம்பிக்கும். அந்த விளைச்சல் வேண்டும் என்றால் நம்பிக்கை என்ற உரம் போட்டு தவறுகள் என்ற களைகளை எடுத்து விடுங்கள். இன் சொல் எனும் நீரைப் பாய்ச்சுங்கள். நீங்கள் நினைப்பது போலவே சிறந்த அறுவடை சாத்தியமாகும்.

விளையாட விடுங்கள்

உண்மையில் அவர்கள் வயது என்பது விளையாட்டை அதிகம் நேசிக்கும் வயது. ஆனால் நாம் அவர்களை விளையாட விடுகிறோமோ என்பது கேள்விக்குறி. வியர்வை சிந்தி விளையாடும்போது தடுமாறி கீழே விழுந்து மீண்டும் எழுந்து ஓடும் நம்பிக்கையை தானாகவே பெற்றுத் தரும் விளையாட்டுக்களை குழந்தைகளுக்கு அறிமுகம் செய்யுங்கள். அவர்களைஅவர்களின்
நண்பர்களோடு விளையாட விடுங்கள்.

நன்றாக விளையாடி விட்டு படிக்க ஆரம்பிக்கும் குழந்தைகள் எளிதாக படித்து விடும். நன்றாக விளையாடும் குழந்தைகள் மனதினை ஒருமுகப்படுத்தும் விதைகளை எளிதாக கற்றுக் கொள்ளும். மற்ற குழந்தைகளோடு ஒப்பிட்டு பேசி உங்கள் குழந்தைகளை அவமரியாதை செய்து விடாதீர்கள். அவர் களின் வளர்ச்சிக்கு அது தடையாக அமைந்து விடும். அவர்களின் வெற்றிக்கு துாண்டுகோலாக இருங்கள்.

தோல்விகளுக்கு ஆறுதலாக இருங்கள். அவர்களின் தனித்திறமைகளைக் கண்டு கொண்டு அதன்படிஅவர்களுக்கு பயிற்சி கொடுங்கள்.அவர்கள் எந்தவித மறுப்பும் சொல்லாமல் முழு
ஈடுபாட்டோடு அதை ஏற்றுக் கொள்வார்கள். உங்கள் கஷ்டங்களை குழந்தைகளிடம் கூறுங்கள். மிக அதிகமாக கூறி அவர்களை பிழிந்து எடுத்து விடாதீர்கள். உங்களின் குழந்தை பருவத்தில் நீங்கள் பட்ட கஷ்டங்களை சொல்லுங்கள்.

அதிலிருந்து மீண்ட கதைகளை சொல்லுங்கள்.வாழ்வின் மகிழ்வான பருவம் என்றால் அது பால்யப் பருவமே. மீண்டும் நாம் அடைய விரும்பும் பருவமும் அதுதான். நாம் கடந்து வரும் போது எத்தகைய மகிழ்வை அடைந்தோமோ அதைவிடமகிழ்வான மனநிலையோடு நமது குழந்தைகள் அந்தப் பருவத்தை கடந்திட உதவி செய்யுங்கள்.அவர்கள் மீது நமது கனவுகளை திணிக்காமல் அவர்களின் கனவுகளை உணர்ந்து துணை நிற்போம்!
-முனைவர். நா.சங்கரராமன்
பேராசிரியர்
எஸ்.எஸ்.எம் கலை அறிவியல் கல்லுாரி
குமாரபாளையம்
70102 21913

Friday, December 27, 2019

7.39 திருத்தொண்டத்தொகை

7.39 திருத்தொண்டத்தொகை
கொல்லிக்கௌவாணம்
1தில்லை வாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்; திரு நீல கண்டத்துக் குயவனார்க்கு                                                                                             அடியேன்;
இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன்; இளையான் தன் குடிமாறன்                                                                          அடியார்க்கும் அடியேன்;
வெல்லுமா மிக வல்ல மெய்ப்பொருளுக்கு அடியேன்; விரி பொழில் சூழ் குன்றையார்                                                                           விறல் மிண்டற்கு அடியேன்;
அல்லி மென் முல்லை அம்தார் அமர் நீதிக்கு அடியேன்; ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு                                                                                             ஆளே .
உரை
 
2இலை மலிந்த வேல் நம்பி எறிபத்தற்கு அடியேன்; ஏனாதி நாதன் தன் அடியார்க்கும்                                                                                             அடியேன்;
கலை மலிந்த சீர் நம்பி கண்ணப்பற்கு அடியேன்; கடவூரில் கலயன் தன் அடியார்க்கும்                                                                                             அடியேன்;
மலை மலிந்த தோள் வள்ளல் மானக்கஞ்சாறன், எஞ்சாத வாள்-தாயன், அடியார்க்கும்                                                                                             அடியேன்;
அலை மலிந்த புனல் மங்கை ஆனாயற்கு அடியேன்; ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு                                                                                             ஆளே .
உரை
 
3மும்மையால் உலகு ஆண்ட மூர்த்திக்கும் அடியேன்; முருகனுக்கும், உருத்திர பசுபதிக்கும்,                                                                                             அடியேன்;
செம்மையே திரு நாளைப் போவார்க்கும் அடியேன்; திருக்குறிப்புத் தொண்டர் தம்                                                                              அடியார்க்கும் அடியேன்;
மெய்ம்மையே திருமேனி வழிபடா நிற்க, வெகுண்டு எழுந்த தாதைதாள் மழுவினால்                                                                                             எறிந்த,
அம்மையான் அடி சண்டிப் பெருமானுக்கு அடியேன்; ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு                                                                                             ஆளே .
உரை
 
4திரு நின்ற செம்மையே செம்மையாக் கொண்ட திருநாவுக்கரையன் தன் அடியார்க்கும்                                                                                             அடியேன்;
பெரு நம்பி குலச்சிறை தன் அடியார்க்கும் அடியேன்; பெரு மிழலைக் குறும்பற்கும்,                                                                             பேயார்க்கும், அடியேன்;
ஒரு நம்பி அப்பூதி அடியார்க்கும் அடியேன்; ஒலி புனல் சூழ் சாத்த மங்கை நீல நக்கற்கு                                                                                             அடியேன்;
அரு நம்பி நமி நந்தி அடியார்க்கும் அடியேன்; ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு                                                                                             ஆளே .
உரை
 
5வம்பு அறா வரிவண்டு மணம் நாற மலரும் மது மலர் நல் கொன்றையான் அடி அலால்                                                                                             பேணா
எம்பிரான்-சம்பந்தன் அடியார்க்கும் அடியேன்; ஏயர்கோன் கலிக்காமன் அடியார்க்கும்                                                                                             அடியேன்;
நம்பிரான்-திருமூலன் அடியார்க்கும் அடியேன்; நாட்டம் மிகு தண்டிக்கும், மூர்க்கற்கும்,                                                                                             அடியேன்;
அம்பரான்-சோமாசிமாறனுக்கும் அடியேன்; ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே .
உரை
 
6வார் கொண்ட வன முலையாள் உமை பங்கன் கழலே மறவாது கல் எறிந்த சாக்கியற்கும்                                                                                             அடியேன்;
சீர் கொண்ட புகழ் வள்ளல் சிறப்புலிக்கும் அடியேன்; செங்காட்டங்குடி மேய                                                                   சிறுத்தொண்டற்கு அடியேன்;
கார் கொண்ட கொடை கழறிற்றறிவாற்கும் அடியேன்; கடல் காழி கணநாதன்                                                                        அடியார்க்கும் அடியேன்;
ஆர் கொண்ட வேல் கூற்றன்-களந்தைக் கோன்-அடியேன்; ஆரூரன் ஆரூரில்                                                                             அம்மானுக்கு ஆளே .
உரை
 
7பொய் அடிமை இல்லாத புலவர்க்கும் அடியேன்; பொழில் கருவூர்த் துஞ்சிய                                                                    புகழ்ச்சோழற்கு அடியேன்;
மெய் அடியான்-நரசிங்க முனையரையற்கு அடியேன்; விரி திரை சூழ் கடல் நாகை                                                                            அதிபத்தற்கு அடியேன்;
கை தடிந்த வரிசிலையான்-கலிக் கம்பன், கலியன், கழல் சத்தி-வரிஞ்சையர்கோன்,-                                                                            அடியார்க்கும் அடியேன்;
ஐயடிகள் காடவர் கோன் அடியார்க்கும் அடியேன்; ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு                                                                                             ஆளே .
உரை
 
8கறைக் கண்டன் கழல் அடியே காப்புக் கொண்டிருந்த கணம் புல்ல நம்பிக்கும், காரிக்கும்,                                                                                             அடியேன்;
நிறைக் கொண்ட சிந்தையான், நெல்வேலி வென்ற நின்ற சீர் நெடுமாறன் அடியார்க்கும்                                                                                             அடியேன்;
துறைக் கொண்ட செம்பவளம் இருள் அகற்றும் சோதித் தொல் மயிலை வாயிலான்                                                                    அடியார்க்கும் அடியேன்;
அறைக் கொண்ட வேல் நம்பி முனையடுவாற்கு அடியேன்; ஆரூரன் ஆரூரில்                                                                          அம்மானுக்கு ஆளே .
உரை
 
9கடல் சூழ்ந்த உலகு எலாம் காக்கின்ற பெருமான்-காடவர் கோன்-கழற்சிங்கன்                                                                            அடியார்க்கும் அடியேன்;
மடல் சூழ்ந்த தார் நம்பி இடங்கழிக்கும், தஞ்சை மன்னவன் ஆம் செருத்துணை தன்                                                                            அடியார்க்கும் அடியேன்;
புடை சூழ்ந்த புலி அதள் மேல் அரவு ஆட ஆடி பொன் அடிக்கே மனம் வைத்த புகழ்த்                                                                             துணைக்கும் அடியேன்;
அடல் சூழ்ந்த வேல் நம்பி கோட்புலிக்கும் அடியேன்; ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு                                                                                             ஆளே .
உரை
 
10பத்தராய்ப் பணிவார்கள் எல்லார்க்கும் அடியேன்; பரமனையே பாடுவார் அடியார்க்கும்                                                                                             அடியேன்;
சித்தத்தைச் சிவன் பாலே வைத்தார்க்கும் அடியேன்; திரு ஆரூர்ப் பிறந்தார்கள்                                                                            எல்லார்க்கும் அடியேன்;
முப்போதும் திருமேனி தீண்டுவார்க்கு அடியேன்; முழுநீறு பூசிய முனிவர்க்கும் அடியேன்;
அப்பாலும் அடிச் சார்ந்த அடியார்க்கும் அடியேன்; ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு                                                                                             ஆளே .
உரை
 
11மன்னிய சீர் மறை நாவன்நின்றவூர் பூசல், வரிவளையாள் மானிக்கும், நேசனுக்கும்,                                                                                             அடியேன்;
தென்னவனாய் உலகு ஆண்ட செங்கணாற்கு அடியேன்; திருநீல கண்டத்துப்                                                                            பாணனார்க்கு அடியேன்;
என்னவன் ஆம் அரன் அடியே அடைந்திட்ட சடையன், இசைஞானி, காதலன்-திரு                                                                             நாவலூர்க் கோன்,
அன்னவன் ஆம் ஆரூரன்-அடிமை கேட்டு உவப்பார் ஆரூரில் அம்மானுக்கு அன்பர்                                                                                             ஆவாரே .
உரை
  

சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைக்க என்ன வழி thanks to dinamalar.com


பதிவு செய்த நாள்

24டிச
2019
00:00
* சிறுநீரகத்தின் முக்கியத்துவம் என்ன?
நாம் உண்ணும் உணவில் இருக்கும் விஷத்தன்மை கொண்ட, தீங்கு விளைவிக்கக்கூடிய கழிவு, திரவப்பொருட்களை வெளியேற்றுவதுடன், நீரின் சமநிலையை பாதுகாத்து, உடலுக்கு தேவையான தாது உப்புக்கள், சத்துக்களை பிரித்து வழங்கி, கழிவுகளை சிறுநீராக உருவாக்கி வெளியேற்றுகின்றன சிறுநீரகங்கள். இது மனிதர்களின் சுத்திகரிப்பு நிலையம்.

* சர்க்கரை நோய்க்கும், சீறுநீரக பாதிப்புக்கும் சம்பந்தம் உண்டா?
உண்டு. நம் உடலில் உள்ள சர்க்கரையை தேவையான சக்தியாக மாறுவதற்கு இன்சுலின் வேண்டும். ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவும் அதை சக்தியாக மாற்றி பயன்படுத்திக் கொள்ள தேவையான இன்சுலினும் சரியான விகிதத்தில் இருக்கும் வரை, சிறுநீரகத்தில் அனைத்துப் பணிகளும் சுமூகமாக நடக்கும். மாறாக இன்சுலின் அளவு குறைந்து, ரத்த சர்க்கரை அதிகரிக்கும் போது, அந்த சர்க்கரை சிறுநீரகம் வந்தடைவதால் பிரச்னை ஏற்படும். இது தொடர்ந்து வருவதால்தான் சர்க்கரை பாதிப்பு உள்ளவர்களுக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய சூழ்நிலையும் ஏற்படுகிறது.

* சர்க்கரை நோயாளிகளுக்கு சிறுநீரக பாதிப்பு எவ்வாறு ஏற்படுகிறது?
கழிவுகளை பிரித்து வெளியேற்றும் சிறுநீரகத்தில் ரத்த சர்க்கரை மூலம் அதீத சர்க்கரை சேரும் போது சிறுநீரகங்கள் அதன் பண்பை சிறிது சிறிதாக இழக்கும். மேலும், உடலுக்கு தேவையான தண்ணீர், தாதுக்களையும் வெளியேற்றிவிடுகிறது. அதனால் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு அதிக தாகம் ஏற்படுகிறது. அடுத்தகட்டமாக சிறுநீரகத்தில் மிக முக்கிய பணியாற்றும் 'நெப்ரான்'கள் (வடிகட்டி) அதிக சேதம் அடைகிறது. இதனால் உடலுக்கு அவசிய தேவையான 'அல்புமின்' நுண் புரதம் சிறுநீர் வழியே வெளியேறுகிறது. இதுதான் சர்க்கரை நோய் பாதிக்கப்பட்டவருக்கு சிறுநீரகம் பாதிப்பு ஏற்படுவதற்கான முதல் அறிகுறி.

* சிறுநீரக பாதிப்பு அறிகுறிகள் என்ன?
பாதிப்பு ஏற்பட்ட உடன் ரத்த அழுத்தம் அதிகரிக்கும். கண் விழித்திரையில் பாதிப்பு ஏற்படும். பார்வை குறையும். கை, கால், கணுக்காலில் வீக்கம் உண்டாகும். காலையில் எழும்போது கண் இமைகளுக்குக் கீழ் வீக்கம் உண்டாகும். சிறுநீர் பிரிவது குறைவது, பசியில்லாத நிலைமை, களைப்பு, மூச்சுத்திணறல், நாக்கில் உலோகச் சுவையுணர்வு போன்று அறிகுறிகள் தோன்றும். இதனால் சிறுநீரகப் பாதிப்பை ஓரளவு தெரிந்து கொள்ளலாம். நோயை உறுதிப்படுத்த மற்ற பரிசோதனைகளையும் செய்வது அவசியம்.

* பரிசோதனைகள் என்ன?
நுண் புரத பரிசோதனை, புரதப் பரிசோதனை, ரத்தத்தில் யூரியாவின் அளவு, கிரியாடின், ரத்த அயனிகள் போன்றவற்றின் அளவுகளைப் பரிசோதிக்க வேண்டும். சிறுநீரில் புரதம் வெளியேறுவது தெரிந்தால் யூரியா 40 மி.கி., அதிகமாகவும், கிரியாட்டின் 1.2 மி.கி., சதவீதத்திற்கு அதிகமாகவும் இருந்தால், சிறுநீரக பாதிப்பை உறுதி செய்யலாம். சர்க்கரை நோயாளிகள் இந்த பரிசோதனைகளை ஆண்டிற்கு ஒரு முறையாவது செய்வது அவசியம். நுண்புரதம் சிறுநீரில் வெளியாகும் நிலை ஏற்பட்ட பிறகு சிகிச்சை மேற்கொள்ள தவறியவர்களுக்கு அடுத்த மூன்றாண்டுகளில் வெண்புரதம் சிறுநீரில் வெளியாகிவிடும். இதனால் 30 வயதிற்கு மேல் உள்ள அனைவரும் 'மாஸ்டர் செக் அப்' செய்வது கட்டாயம்.

* எவ்வாறு சிகிச்சைகள் மேற்கொள்வது?
ஆரம்பநிலை ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தினால் சிறுநீரக பாதிப்பும் கட்டுக்குள் வந்துவிடும். ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதன் மூலமும் சீறுநீரக பாதிப்பை கட்டுப்படுத்தலாம். புரதச்சத்து குறைந்த உணவும் சிறுநீரகங்களின் வேலைப்பளுவைக் குறைக்கும். கால்சியம், ரத்த ஊட்டச்சத்து மாத்திரைகள் தரப்படும். சிறுநீரக பாதிப்பிற்கு 'டயாலிசிஸ்' சிகிச்சை முறை என்பது சிறுநீரகம் செய்யும் வேலையை நோயாளியின் ரத்தத்தை டியூப் மூலம் வெளியே கொண்டு வந்து மிஷின் மூலம் சுத்திகரிப்பு செய்து உடலுக்குள் ரத்தத்தை மீண்டும் செலுத்தும் முறையாகும். இதை எல்லாம் கடந்த நிலையில் நோய் பாதிப்பில் இருந்து மீட்கவே முடியாத பட்சத்தில் 'சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை' செய்கிறோம்.

* உணவு கட்டுப் பாடுகளால் பாதிப்பை தவிர்க்கலாமா?
பாதிப்பு இருப்பவர்கள் டாக்டர்களின் பரிந்துரைப்படி, குடிக்கும் தண்ணீரின் அளவு அதிகரித்துவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். உணவில் உப்பின் அளவையும், புரதச் சத்துள்ள உணவுகளையும் குறைத்துக் கொள்ள வேண்டும். முக்கியமாக பால், அதில் தயாரிக்கப்பட்ட உணவுகள், பருப்பு, பயறு வகைகள், மீன் வேண்டாம். வத்தல், வடகம், சிப்ஸ், கருவாடு, தேங்காய், ஊறுகாய், கிழங்குகள், எலுமிச்சை, ஆரஞ்சு மற்றும் இறைச்சி போன்ற அசைவ உணவுகளை தவிர்க்கலாம். அரிசி, ரவை, அவல் போன்ற மாவுப் பொருளில் தயாரிக்கப்பட்ட உணவுகள் நல்லது. கட்டுப்பாடு இல்லாத சர்க்கரையினால் வரும் பக்க விளைவுகளை தடுப்பதற்கு சர்க்கரை நோய் பாதித்த முதல் நாளில் இருந்தே தீவிர கட்டுப்பாடுகளில் ஈடுபட்டு சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்தால் சீறுநீரக பாதிப்பின்றி தப்பிக்கலாம்.

டாக்டர் என். மோகன வெங்கட்டராமன்
சர்க்கரை நோய் சிறப்பு நிபுணர்
தேனி
90470 06573

மரங்களும் மருத்துவ பயன்களும் thanks to dinamalar,com


 மரங்களும் மருத்துவ பயன்களும்
ஞானசம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர் ஆகிய தேவார மூவர் தங்களுடைய தீந்தமிழால், பண் சுமந்த பாடல்களை பாடினர். தமிழகம் முழுவதும் உள்ள தலங்களை வழிபாடு செய்து இசைத்தமிழால் பக்தி நீரூற்றி பண்பாட்டை வளர்த்தனர். ஒவ்வொரு திருக்கோயிலுக்கும், ஒரு தல மரம் உண்டு. மரத்தின் மருத்துவ குணத்திற்கும் அங்கு உறையும் இறைவனின் அருட்திறத்திற்கும் உள்ள தொடர்பினை தேவார மூவர் மற்றும் ஆழ்வார்கள் பாடியுள்ளனர்.இறைவனை உருவமாகவும் அருவமாகவும் வழிபடத் தொடங்கிய காலத்தில் அவ்வழிபாடு ஊர்ப்பொதுவில் ஊர்மக்கள் கூடுவதற்கு வசதியான நிழல்தரும் அழகு மிக்க மரத்தடியிலேயே வழிபாடுகள் நடைபெற்றன. இந்நடைமுறையை இன்றும் சிற்றுார்களில் காணலாம். அவ்வாறான மரங்களிலேயே இறைவன் தங்குவதாக நம்பி அம்மரங்கள் பட்டுப்போன பிறகு எஞ்சிய அடிமரத்தை வணங்கி வரலாயினர்.மதுரை சுந்தரேஸ்வரர் கோயிலில் பழைய கடம்ப மரம் வெள்ளித்தகட்டால் சுற்றப்பட்டு வழிபடப்படுவதை இன்றும் காணலாம்.
மரத்தடி கோயில்கள்
மரத்தையும் மரத்தடியில் வைக்கப்பட்ட இறை உருவத்தையும் வழிபட்ட பின்னர் மரத்தடியிலேயே கோயில்கள் கட்டப் பெற்றன. திருவானைக்காவில் கருவறைப் பக்கத்திலுள்ள பழமையான நாவல் மரம் இத்தகையதே. அம்மரம் தலமரம் எனப்பெற்றது. பல திருக்கோயில்களும் ஊர்களும் தலமரங்களின் பெயராலேயே அமைந்து உள்ளன. கடம்பந்துறை, ஆலங்காடு, நெல்லிக்கா முதலியன தலமரத்தின் பெயராலேயே அமைந்தவை. இறைவன் மரத்தின் கீழ் உறைவதாகத் திருமுறைகளிலும் திவ்விய பிரபந்தங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளன. சிவபிரான் கல்லால மரத்தின் கீழிருந்து அறநுால்கள் அருளியதைக் “கல்லாலின் கீழ் அறங்கள் சொல்லினான்காண்” என்றும் திருவானைக்காவில் நாவல் மரத்தின் கீழ் அமர்ந்துள்ளதை “வெண்ணாவலின் மேவியவெம் அழகா” என்றும் குறிப்பிட்டனர்.திருவேட்டக்குடி என்னும் தலத்தில் புன்னைமர நிழலில் இறைவன் அமர்ந்துள்ளதைப் “புன்னை நன்னிழல் கீழமரும் இறை” என்று திருஞானசம்பந்தர் குறிப்பிட்டார்.திருப்பெருந்துறையில் குருந்த மரத்தடியில் இறைவன் குருவடிவாகி மாணிக்க வாசகருக்கு மெய்யறிவு உணர்த்தியதைத் “திருப்பெருந்துறையில் செழுமலர் குருந்தம மேவியசீர் ஆதியே” என்று திருவாசகம் குறிப்பிடுகிறது. மரத்தின் கீழோ மரத்திலோ உறைவதாகக் குறிப்பிடாமல் தலமரங்களின் பெயர்கள் தேவாரத்தின் பல பாடல்களில் காணப்படுகின்றன.

சித்த மருத்துவம்

தமிழகத்தின் தொன்றுதொட்ட மருத்துவம் சித்த மருத்துவமே. நாட்டு மருத்துவம், தமிழ் மருத்துவம் என்பதும் இதுவே. சித்த மருத்துவத்தில் மூலிகைகளே முதலிடம் வகிக்கின்றன. நம் உணவில் மிளகு, மஞ்சள், இஞ்சி, கொத்தமல்லி முதலிய மருந்துப் பொருள்களால் இயன்ற சாறு, குழம்பு வகைகள் மருத்துவப் பயன் கருதியே தொன்று தொட்டுப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்து உணவு, மருத்துவ முறையிலேயே சமைக்கப்பட்டு வருகிறது.பச்சரிசி உடற்சூடு ஏற்படுத்துவதால் புழுங்கலரிசியாக்கப்படுகிறது. வாழைக்காய் வாதம் பெருக்கும் என்பதால் அவித்து பயன்படுத்தப்படுகிறது. மசாலாச் சரக்குகளில் மஞ்சள் நெஞ்சுச் சளியை முறிக்கும். கொத்தமல்லி பித்தத்தைச் சமனப்படுத்தும், சீரகம் வயிற்றுச் சூட்டைத் தணிக்கும், மிளகு தொண்டைக் கட்டை அகற்றும், வெங்காயமும், பூண்டும் ரத்தக் குழாய்களைத் துாய்மைப்படுத்தும், கறிவேப்பிலை உணவுக்கு மணமூட்டும்.மோரும், உடலுக்கு உரமூட்டி மலக்கட்டினை நீக்கும் கீரையொடும், பித்தந்தணித்துக் குளிர்ச்சி தரும் எலுமிச்சை ஊறுகாயொடும் உண்டுவந்தால் நோயண்டாது. மரங்களை வழிபடுவதோடு நில்லாமல் மருந்தாகவும் பயன்படுத்தி நாம் நலம் பெறலாம்.

வில்வம்

நீரோடு கூவிளமும் நிலாமதியும் வெள்ளெருக்கும் நிறைந்த கொன்றைத்தாரோடு தண்கரந்தை சடைக்கணிந்த தத்துவனார் தங்குங் கோயில்காரோடி விசும்பளந்து கடிநாறும் பொழிலணைந்த கமழ்தார் வீதித்தேரோடும் அரங்கேறிச் சேயிழையார் நடம்பயிலுந் திருவை யாறே-- திருஞானசம்பந்தர் தேவாரம்.திருவையாறு, திருஎறும்பியூர், திருராமேஸ்வரம் முதலிய முப்பதுக்கும் மேற்பட்ட திருக்கோயில்களில் வில்வம் தலமரமாக அமைந்துள்ளது. சிவபிரானுக்குப் பூஜை செய்யும் மூலிகையான இது ஒரு கற்ப மூலிகையாகும். அதாவது, இன்ன பிணிக்கு மட்டுமே மருந்தென்று அமையாது எல்லா நோய்களையும் நீக்கும் தன்மையுடையது.திருவெண்காட்டிலுள்ள வில்வம் போல் முள் இல்லாத மரங்களும் உண்டு. இம்மரம் ஆற்றோரங்களில் தாமே வளர்கின்றன. வில்வத்தின் இலை, பூ, பிஞ்சு, பழம் வேர்ப்பட்டை, பிசின் மருத்துவப் பயன் உடையவை. சர்க்கரை நோயிக்கு வில்வம் சிறந்த மருந்து.

வன்னி
திருமுதுகுன்றம் (விருத்தாசலம்), திருவான்மியூர், மேலைத் திருக்காட்டுப்பள்ளி, திருப்பூந்துருத்தி முதலிய 15 க்கும் மேற்பட்ட திருக்கோயில்களில் தலமரமாக வன்னி விளங்குகிறது. வில்வத்திற்கு அடுத்தப்படியாக மிகுதியான கோயில்களில் தலமரமாக உள்ளது இதுவே.இது ஒரு முள்ளுள்ள இலையுதிர் மரம். மிகச் சிறிய கூட்டிலைகளைக் கொண்டது. சதைப்பற்றுடைய உருளைவடிவக் காய்களை உடையது. வடதமிழ்நாட்டில் கரிசல் நிலங்களில் தானே வளர்கிறது. தோட்டங்களில் ஆங்காங்கே முளைக்கும் மரங்களைப் பொதுவாக வெட்டுவதில்லை. அந்த அளவுக்குப் புனிதமாகக் கருதப்படும் மரம். மரம் முழுமையும் மருத்துவப் பயனுடையது. காய்ச்சல் நீக்கி சளி அகற்றும் பண்புகள் உடையது. வாதம், பித்தம், ஆகியவற்றை சமன்படுத்தும். திருத்துறையூர், திருப்பந்தணைநல்லுார், திருஅச்சிறுபாக்கம், திருக்கோவிலுார் கோயில்களில் தலமரமாகக் கொன்றை விளங்குகிறது.இது நீள் சதுரமான கூட்டிலைகளையும் சரஞ்சரமாய்த் தொங்கும் பளிச்சிடும் மஞ்சள் நிறப் பூங்கொத்துக்களையும் நீண்ட உருளை வடிவக் காய்களையும் உடைய இலையுதிர் மரம். இயற்கையாய் வளர்கிறது. பட்டை, பூ, வேர், காய் ஆகியவை மருத்துவப்பயனுடையவை. இந்த மரக்கட்டை நோய்நீக்கி உடல் தேற்றும்; காய்ச்சல் தணிக்கும், மலமிளக்கும். இதன் பூ வயிற்று வாய்வு அகற்றும், நுண்புழுக்களைக் கொல்லும். காயிலுள்ள சதை (சரக்கொன்றைப் புளி) மலமிளக்கும்.


புன்னை

மின்னியல் செஞ்சடை வெண்பிறை யன்விரி நுாலினன்பன்னிய நான்மறை பாடியா டிப்பல வூர்கள்போய்அன்னம்அன் னந்நடை யாளொ டும்மரும்மிடம்புன்னைநன் மாமலர் பொன்னுதிர்க் கும்புன வாயிலே -- திருநாவுக்கரசர், தேவாரம்.திருப்புனவாயில், திருப்புகலுார், திருமயிலாப்பூர், திருவெண்ணெய்நல்லுார், திருவேட்டக்குடி முதலிய சிவத்திருக் கோயில்களிலும் திருஇடவெந்தை, திருக்கோவலுார், திருப்பாடகம், திருப்புலியூர் திருப்புள்ளம்பூதக்குடி முதலிய திருமால் கோயில்களிலும் புன்னை தலமரமாக விளங்குகிறது. திருவேட்டக்குடியில் சிவபிரானை 'நறையுலவும் பொழிற் புன்னை நன்னிழற்கீ ழமலரும் இறை' எனத் தேவாரம் குறிப்பிடுகிறது. இம்மரம் தமிழகத்தின் கடற்கரைகளிலும், ஆற்றங்கரைகளிலும் தானே வளரும் இயல்புடையது. இலை சற்று நீண்டதாகவும், பளபளப்பாகவும் இருக்கும். உருண்டையான உள்ஓடுள்ள சதைக்கனியை உடையது. இதன் இலை, பூ, விதை, பட்டை, நெய் ஆகியவை மருத்துவப் பயன் உடையவை.புன்னை இலை அல்லது பூவை நீரில் ஊறவைத்துக் கழுவி வரக் கண்வீக்கம், சொறி சிரங்கு, மேகம் ஆகியவை தீரும்.
பலா

திருக்குற்றாலம், திருநாவலுார், திருவாய்மூர், திருப்பூவனம் முதலிய பத்துக்கும் மேற்பட்ட சிவத் திருக்கோயில்களிலும் திருக்கோட்டியூர், திருக்கடித்தானம் முதலிய திருமால் கோயில்களிலும் தலமரமாக விளங்குவது பலாமரம். பளபளப்பான கரும்பச்சை இலையையும், உருளை வடிவான புறம் முள்ளுள்ள இனிய சுளைகளுடைய பெருங்கனிகளையும் கொண்டது. திருக்குற்றாலத்துத் தலமரத்துப் பலாப்பழம் உண்ணப் படுவதில்லை. பலாப்பழம் உடல்நலத்துக்கு உகந்ததன்று என்பதைக் குறிக்கவே இம்மரபு ஏற்பட்டிருக்கலாம். இலை, பிஞ்சு, காய், பால், வேர் மருத்துவப் பயனுடையவை.இவை போன்றே நுாற்றுக்கணக்கான மரங்களுக்கும் தலங்களுக்கும் நோய் தீர்க்கும் இயல்பு இருப்பதை தேவார பாடல்கள் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.முனைவர் தி.சுரேஷ்சிவன்இசைத்தமிழ் அறிஞர்மதுரை. 94439 3054

Thursday, December 26, 2019

கலியுகத்தில் இப்படியெல்லாம் நடக்குமாம்! thanks to aanmigam.com


கலியுகத்தில் இப்படியெல்லாம் நடக்குமாம்!






கிருதயுகம் 17 லட்சத்து 28 ஆயிரம் ஆண்டுகள்
திரேதாயுகம் 12 லட்சத்து 96 ஆயிரம் ஆண்டுகள். (ஸ்ரீ ராமர் வாழ்ந்த யுகம் எனப்படுகிறது)
துவாபரயுகம் 8 லட்சத்து 64 ஆயிரம் ஆண்டுகள். (ஸ்ரீ க்ருஷ்ணர் வாழ்ந்த யுகம் எனப்படுகிறது)
கலியுகம் 4 லட்சத்து 32 ஆயிரம் ஆண்டுகள்.
(கலியுகத்தில் அசுரர்களும் தேவர்களும் ஒரே மனிதனுக்குள் வாழ தொடங்குவங்குவார்களாம். (50க்கு50) , சில நேரம் தேவர் பல நேரங்களில் அசுரர். கடவுள் பாதி மனிதன் பாதி. அதனால் தான் இந்த காலத்தில் யாரையும் நிரந்தரமான நல்லவர்கள் என்று முழுமையாக நம்ப முடிவதில்லை.)
யுகங்களில் கலியுகம் குறைந்த வருடங்களைக் கொண்டது. இப்போது நாம் கலியுகத்தில் இருக்கிறோம். கலியுகம் பிறந்தது பிப்ரவரி 18, 3102 என்று காலக்கணக்கீட்டு நிபுணர்கள் கண்டறிந்து இருக்கிறார்களாம், ஆக இந்த 2010 ஆம் வருடம் கலியுகத்தின் 5112 ஆம் வருடம் ஆகின்றது என்கிறார்கள்.
அதாவது கலியுகம் முடிய இன்னும் சுமார் 4,26,888 வருடம் இருக்கின்றது என்கிறார்கள். கலியுகம் முடிந்ததும் மீண்டும் கிருதயுகம் ஆரம்பிக்கும், அடுத்து திரேதாயுகம், துவாபரயுகம், மீண்டும் கலியுகம் இவ்வாறு மீண்டும் மீண்டும் வந்துகொண்டேயிருக்கும்.
ஆம், காலம் சக்கரம் அல்லவா!
இவற்றில் கலியுகத்தில் தர்மங்கள் சார்ந்த வாழ்க்கை சீர்குலையுமென்றும் கலியுகத்தின் முடிவில் அதர்மவாதிகளே உச்சமாக ஆட்சி செய்யும் தருணத்தில் கல்கி அவதாரம் நிகழும் என்றும் கூறப்படுகிறது. கலியுகத்தில் அப்படி என்னென்ன நடக்குமாம். பார்ப்போம்..
கலியுகத்தில் தர்மம், ஸத்யம், பொறுமை, தயை, ஆயுள் தேஹ பலம், ஞாபகம் ஆகிய இவைகள் நாளுக்கு நாள் குறையும்.
கலியில் பணமுள்ளவனே மேலான குலத்தில் பிறந்தவன் ஆவான்.
பணமுள்ளவன் எவனோ அவனே ஆசாரம் உள்ளவனாக கருதப்படுவான்.
பலமுள்ளவன் எவனோ அவன் மட்டுமே தர்மம், ஞாயம் போன்றவற்றை தீர்மானிப்பான்.
மணம் செய்து கொள்பவர்கள் அவரவர் சொந்த விருப்பத்தின் படியே இயங்குவார்கள். குலம் மறைந்து போகும்.
மனிதர்கள் அவர்களின் குணங்களைக் கொண்டு சிறந்தவர்களாக போற்றப்பட மாட்டார்கள்.
பிராமணர்களுக்கு பூனூல் அடையாளமாக மட்டுமே இருக்கும்.
அதிகமாகப் பேசுபவனே பண்டிதன் என்ற புகழை அடைவான்.
(மேடைக்கு மேடை பேசியே மயக்கும் அரசியல் வாதிகளைப் பார்த்தாலே தெரிகிறதே!)
ஏழையாக இருப்பவர்களே பழிபாவங்களுக்கு ஆளாவார்கள். பணமுள்ளவனே நல்லவன் என்று பெயரெடுப்பான்.
மனிதர்கள் அதிகம் சாப்பிடுபவர்களாகவும், காமவெறி கொண்டவர்களாகவும், தரித்திரர்களாகவும் இருப்பார்கள்.
ஆணும் பெண்ணும் சம்மதித்து புணர்ந்தாலே விவாஹம் செய்து கொண்டதாகக் கருதப்பட்டு விடும். விவாஹம் தேவையற்றதாகும். (விவாகரத்தை வரவேற்கும் பெரிய கூட்டமும் திருமணம் தாலி போன்றவற்றை அவமதித்து வெளியேறத்துடிக்கும் கூட்டமுமே இதற்கு அறிகுறியாகிறார்கள் என்று தோன்றுகிறது)
ஸ்த்ரீகள் பதிவிரதைகளாக இருக்க மாட்டார்கள். வேசிகளைப் போலவே நடந்துகொள்பவராக இருப்பார்கள். ஸ்த்ரீகள் வெட்கம் இல்லாதவர்களாகவும், கடுஞ்சொல் பேசுபவர்களாகவும், திருட்டுத்தனம், மாயை, பிடிவாதம் அதிகம் கொண்டவர்களாக இருப்பர்.
மனிதர்கள் பூமியை தங்களுடையது என்று சொல்லிக்கொள்வார்கள். பூமையை சொந்தம் கொண்டாட தந்தையுடன் சண்டையிடுவார்கள். சகோதரர்கள் அடித்துக் கொள்வார்கள்.
அருகிலிருக்கும் கோவிலை விட தூரதேசத்தில் இருக்கும் க்ஷேத்திரமே புண்ணிய க்ஷேத்திரமாக கருதப்படும்.
புகழுக்காக மட்டுமே தானங்கள் செய்யப்படும்.
மயிர் வளர்ப்பு அழகுக்கான முக்கியப் பொருளாகிவிடும்.
தைரியமாகப் பேசுபவனே சபைக்குரியவனாகக் கருதப்படுவான்.
(இப்போதெல்லாம், உதார் விடுறவன் தானே பெரிய ஆள்! ரௌடிகள் வளர்வதும் இப்படித்தானோ!)
திருடர்கள், கருணையற்றவர்கள் மற்றுக் அயோக்கியர்கள் போன்றவர்களே அரசனாக இருப்பார்கள்!
அரசாள்பவர்கள் இறை நம்பிக்கை மற்றும் வழிபாடுகளை பாதுகாக்க மாட்டார்கள். வேதமார்கம் கெடுக்கப்படும்.
ப்ரஜைகளுடைய பணங்களை அரசர்களே திருடிக்கொள்வார்கள்! அவர்களால் உபத்திரவிக்கப்பட்டு மக்கள் மலைகளிலும் காடுகளிலும் ஒளிந்து வாழ நேரிடும்.
பருவகாலங்கள் மாறிப்போகும். மக்கள் குளிர், காற்று, வெயில், மழை, பசி, தாகம், வியாதி, கவலை இவர்களால் கஷ்டப்படுவார்கள்.
கலியுகத்தில் இருபது, முப்பது வயதே பரம ஆயுளாகும்.
பசுக்கள் பாலிலும் உருவத்திலும் ஆடுகள் போல் ஆகிவிடும். கறக்காத பசுவை பாதுகாக்கவோ வளர்க்கவோ விரும்பமாட்டார்கள்.
(அடிமாடு கொண்டு செல்லும் லாரியைப் பார்த்தாலே தெரிகிறதே)
ஜாதிகளெல்லாம் பெரும்பாலும் சூத்திர ஜாதிகளாகிவிடும்.
சந்நியாசிகள் எல்லாம் குடும்பஸ்தர்கள் போலவே நடந்துகொள்வார்கள். பணத்திலேயே மிக்க ஆசை கொண்டவர்களாக இருப்பார்கள்.
ஆண்களுக்கு பெண்டாட்டி வீட்டு பந்தங்களே முக்கியமானவர்களாகிப் போவார்கள். மச்சினி, மைத்துனர்களிடம் பிரிமயாகப் பழகுவார்கள். சொந்த தந்தை, சகோதர சகோதரிகளிடம் பிரியம் வைக்க மாட்டார்கள்.
மரங்கள் எல்லாம் வன்னி மரங்களாகவே இருக்கும்.
மேகங்களில் மின்னல்கள் அதிகமாக இருக்கும். வீடுகள் மகிழ்ச்சியற்று சூனியமாகவே காட்சியளிக்கும்.

Wednesday, December 25, 2019

சுடு தண்ணீர் தலை முடிக்கு நல்லதல்ல! - ஆயுர்வேத மருத்துவர், ரா.பாலமுருகன் - நன்றி: தினமலர்

சுடு தண்ணீர் முடிக்கு நல்லதல்ல!
தினமலர்-ல் பதிவு செய்த நாள் : டிச 13, 2018  00:00

தலை குளியல் முறை குறித்து கூறும், ஆயுர்வேத மருத்துவர், ரா.பாலமுருகன்:

தலைக்கு, எண்ணெய் மற்றும் சீயக்காய் பொடி தேய்த்த பின், சாதாரண தண்ணீரால் தலையை அலசலாம். அதைவிட, மூலிகைகள் கலந்து கொதிக்க வைத்த தண்ணீரில் அலசினால் நல்லது. தலைக்கு சுடு தண்ணீர் பயன்படுத்தினால், முடிக்கும், கபாலத்திற்கும் கேடு விளைவிக்கும். அதனால், குளிர்ந்த அல்லது வெதுவெதுப்பான தண்ணீரிலேயே, தலை குளிக்க வேண்டும்.

நெல்லிக்காய், தான்றிக்காய், கடுக்காய், அதிமதுரம், நெருஞ்சில், சிறிதளவு தேயிலைப் பொடி ஆகியவற்றை கஷாயம் போல் கொதிக்க வைத்து, தலை அலசினால், முடி மிருதுவாவதுடன், உதிர்வது நிற்கும்; பொடுகுத் தொல்லையும் நீங்கும். மருதப்பட்டை, வாகை மரப்பட்டையை கஷாயம் போல் காய்ச்சி, முடியை அலசினால், தலை அரிப்பு குணமாகும்.

நெல்லிக்காய், தான்றிக்காய், கடுக்காய், வசம்பை தண்ணீரில் கலந்து, கொதிக்க வைத்து அலசினால், புழுவெட்டு குணமாகும்.மருதோன்றி இலையை கஷாயம் வைத்து அலசினால், முடி கறுமை நிறமடையும்; இளநரை நீங்கும்.

படிகாரத்தை தண்ணீரில் கரைத்து அல்லது கருந்துளசி கஷாயத்தால் அலசினால், பேன் தொந்தரவு நீங்கும். கரிசலாங்கண்ணி, நெல்லிக்காய், ரோஜா இலை சேர்த்து காய்ச்சிய கஷாயத்தால் தலையை அலசினால், முடி நன்றாக வளரும். தேக்கு மர இலையில் கஷாயம் வைத்து அலசினால், முடி உதிருவது நிற்கும்; நன்கு செழித்து வளரும்.

'ஸ்நானம்' என்பது, உச்சி முதல் உள்ளங்கால் வரை, உடலைக் குளிர்வித்தல். இதுவே, 'குளித்தல்' என்று மாறிவிட்டது. தவிர, தினமும் தாராளமாக, தலைக்குக் குளிக்கலாம். ஆனால், அதற்கென சில வழிமுறைகள் உள்ளன. பெண்களுக்கு அதிக முடி இருப்பதால், சளி தொந்தரவு ஏற்படும் என்பதாலேயே, தினமும் தலைக்குக் குளிக்கக் கூடாது என்கின்றனர். ஆயுர்வேதத்தின்படி, தினமும் குளிப்பது தான் சிறந்தது. தலைக்கு குளிக்கும்போது, உடலுக்கு வெதுவெதுப்பான நீரும், தலைக்கு குளிர்ச்சியான நீரும் ஊற்றிக் குளிக்கக்கூடாது.

தற்போதைய இளைய தலைமுறையினர், சரியாக தலையைத் துவட்டுவதில்லை. இப்படிபட்டவர்கள், 'ஹெல்மெட்'டால் வியர்வை ஏற்படும் நிலையில் உள்ளவர்கள், தலை அதிகமாக வியர்ப்பவர்கள், தலையில் நீர்கோர்த்து இருப்பவர்கள், சாம்பிராணி புகை போடலாம். இது, தலையில் நீர் கோர்த்துக் கொள்வதைத் தடுக்கும்.தவிர, நம் முன்னோர், கோவில் குளம், நீர்நிலைகளில் குளித்த பின், நெற்றி நிறைய திருநீற்றால் பட்டை அடிப்பர். அந்த திருநீறானது, தலையில் உள்ள நீரை முற்றிலுமாக இறக்கிவிடும். இப்போதைய தலைமுறையினர், இந்த வழிமுறையைப் பின்பற்றுவதை தவிர்க்கின்றனர். அதனால், இதற்கு மாற்றாக, தலையை துவட்டிய பின், 'ராஸ்னாதிக்' என்ற பொடியை, உச்சியில் சிறிதளவு வைத்துக் கொண்டால், தலையில் நீர் கோர்த்துக் கொள்ளாது!

மனம் எண்ணிடுமோ தெரியாது தெரியாது தெரியாது ....

ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா
ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா நொந்துடலும் கிழமாகி தளர்ந்து பின் நோயில் நடுங்கிடும் போது ஜீவ நாடிகள் நைந்திடும்போது மனம் எண்ணிடுமோ தெரியாது தெரியாது தெரியாது இன்று சிந்தை கசிந்துனைக் கூவுகிறேன் அருள் செய்திடுவாய் ஹரி நாராயணா ஓம் ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா
ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா நீடு கபம் கோழை ஈழை நெருக்கி என் நெஞ்சை அடைத்திடும் போது விக்கி நாவும் குழறிடும் போது மனம் எண்ணிடுமோ தெரியாது தெரியாது தெரியாது அன்றுனைக் கூவிட இன்றழைத்தேன் எனை ஆண்டருள்வாய் ஹரி நாராயணா ஓம் ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா
ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா

ஐம்பொறியும் கரணங்களும் வாயுவும் ஆடியடங்கிடும் போது எந்தன் ஆவி பிரிந்திடும் போது மனம் எண்ணிடுமோ தெரியாது தெரியாது தெரியாது நம்பியுனைத் தொழுதேன் அழைத்தேன் ஜகன் நாயகனே ஹரி நாராயணா ஓம் ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா
ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா உற்றவர் பெற்றவர் மற்றவர் சுற்றமும் ஓவென்று நின்றழும் போது உயிரோசைகள் ஓய்ந்திடும் போது மனம் எண்ணிடுமோ தெரியாது தெரியாது தெரியாது பற்றி உனைப் பணிந்தேன் அழைத்தேன் ஆபத்பாந்தவனே ஹரி நாராயணா ஓம் ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா
ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா என் பொருள் என் மனை என்பதெல்லாம் இனி இல்லை என்றாகிடும் போது மனம் எண்ணிடுமோ தெரியாது தெரியாது தெரியாது அன்றுனைக் கூவிட இன்றழைத்தேன் அருள் அச்சுதனே ஹரி நாராயணா ஓம் ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா
ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா வந்தெமதூதர் வளைத்துப் பிடித்து வாவென்று இழுத்திடும் போது மனம் எண்ணிடுமோ தெரியாது தெரியாது தெரியாது அந்தத அந்தியம் நீ வர இன்றழைத்தேன் ஸச்சிதானந்தனே ஹரி நாராயணா ஓம் ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா
ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா