Wednesday, January 29, 2020

நாவல் மரத்தின் இலை, பழம், விதை... என்னென்ன பயன்கள்? - மருத்துவர் விளக்கம் thanks to vikatan.com

கிராபியென் ப்ளாக்
நாவல் பழத்தின் மீது சிறிதளவு உப்பு, மிளகுத்தூள், ஏலக்காய்த்தூள் போன்றவற்றை தூவிச் சாப்பிடுவது நல்லது. அதுவே ஒரு நாவல் கொட்டையை சூரணமாக்கியோ, வேர், இலைகளைக் கஷாயம் வைத்தோ சாப்பிடுவதாக இருந்தால் மருத்துவர்களின் ஆலோசனையின்றி சாப்பிடக் கூடாது.
Indian Blackberry
Indian Blackberry ( pixabay )
`சர்க்கரை நோயைக் கட்டுக்குள் கொண்டுவர கசப்பு மற்றும் துவர்ப்பு சுவை நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்’ என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். அந்த வகையில் நாவல் பழத்தில் இயற்கையிலேயே துவர்ப்புச் சுவை மிகுந்தும் இனிப்புச் சுவை குறைவாகவும் இருக்கும். குறைந்த விலையில் கிடைக்கும் பழங்களில் இதுவும் ஒன்று என்பதால் நாவல் பழத்தை அனைவருமே உண்ணலாம். ஆனால், அளவோடு உண்பதே நல்லது.
Indian Blackberry
Indian Blackberry

நாவல் பழத்தில் பல வகை உள்ளன. அவற்றின் மருத்துவப் பயன்களை விளக்குகிறார் ஆயுர்வேத மருத்துவர் ஆர்.பாலமுருகன்.

"பழங்காலத்தில் பாரத தேசமானது `ஜம்புத் தீவு’, அதாவது `நாவல் தீவு’ என்றே அழைக்கப்பட்டு வந்திருக்கிறது. நாவல் மரங்கள் அதிகம் நிறைந்த நாடாக இந்தியா இருந்திருக்கிறது.
நாவல் பழத்தை உட்கொண்டால் சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும் என்பது பெரும்பாலானோருக்குத் தெரிந்திருக்கும். விநாயகர் மந்திரத்தில் `கபித்தஜம்புபல சாரு பக்ஷணம்' என்றொரு வரி உண்டு. இதில், 'கபித்த' என்பது விளாம்பழத்தைக் குறிக்கும். 'ஜம்பு' என்பது நாவல் பழம்.
Indian Blackberry
Indian Blackberry
இந்தப் பழங்களை விநாயகர் விரும்பிச் சாப்பிடுவார் என்பது அதன் பொருள். பொதுவாக, உடல் பருமனாக உள்ளவர்கள் சர்க்கரை நோய் வராமல் தற்காத்துக்கொள்ள பருவகால பழமான நாவல் பழத்தை உட்கொள்ளலாம்.
நாவல் மரத்தின் பட்டையும் அதன் வேரும் வயிற்றுப்போக்குக்கு மருந்தாகப் பயன்படுகின்றன. இதன் இலையானது குமட்டல், எச்சில் அதிகமாக ஊறுதல், வயிற்றுப்புண்ணால் ஏற்படும் வாந்தி போன்றவற்றுக்கு மருந்தாகிறது.
ஆயுர்வேத மருத்துவர் ஆர்.பாலமுருகன்

மூன்று வகை நாவல் பழம்!

நாவல் பழத்தில் மூன்று வகை உண்டு. ராஜ ஜம்பு(பெரிய நாவல் பழம்), காக ஜம்பு(மிகவும் கறுப்பாக இருக்கக்கூடிய நாவல் பழம்) மற்றும் நதி ஜம்பு(நதிகள் ஓரமாகக் கிடைக்கக்கூடிய சிறிய வகை நாவல் பழம்). இந்த மூன்று வகையான நாவல் பழம் குறித்தும் ஆயுர்வேத மருத்துவத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Indian Blackberry
Indian Blackberry
ஒவ்வொரு பழத்துக்கும் ஒவ்வொருவிதமான குணாதிசயம் இருக்கிறது. நாவல் பழம் மட்டுமல்ல... நாவல் மரத்தின் இலை, பட்டை, வேர் வரை அனைத்துமே மருத்துவக் குணங்கள் நிறைந்தவை!

மருத்துவப் பயன்கள்!

நாவல் மரத்தின் பட்டையும் அதன் வேரும் வயிற்றுப்போக்குக்கு மருந்தாகப் பயன்படுகிறது. இதன் இலையானது குமட்டல், எச்சில் அதிகமாக ஊறுதல், வயிற்றுப்புண்ணால் ஏற்படும் வாந்தி போன்றவற்றுக்கு மருந்தாகிறது. ஏதாவது ஒரு வேலையில் ஈடுபட்டிருக்கும்போது சிலர் சீக்கிரமாகவே சோர்வடைந்துவிடுவார்கள்.
stomach
stomach
அவர்கள் சிறிய வகை நாவல் பழத்தை உட்கொண்டால் சுறுசுறுப்பாக அதிக ஆற்றலோடு பணியாற்ற முடியும். தோலில் அதிகமாக எரிச்சல் உள்ளவர்கள் கறுப்பு நாவல் பழம் உண்ணலாம். பெரிய நாவல் பழமானது வயிற்றுப்போக்கு, சர்க்கரை நோய், தோல் எரிச்சல் மூன்றுக்குமே மருந்தாகப் பயன்படுகிறது.

எப்படிச் சாப்பிட வேண்டும்?

நாவல் பழத்தின் மீது சிறிதளவு உப்பு, மிளகுத்தூள், ஏலக்காய்த்தூள் போன்றவற்றை தூவிச் சாப்பிடுவது நல்லது. அதுவே ஒரு நாவல் கொட்டையை சூரணமாக்கியோ, வேர், இலைகளைக் கஷாயம் வைத்தோ சாப்பிடுவதாக இருந்தால் மருத்துவர்களின் ஆலோசனையின்றி சாப்பிடக் கூடாது.
ஆயுர்வேத மருத்துவர் ஆர்.பாலமுருகன்
நாவல் விதை சூரணம் மற்றும் கஷாயத்தை எவ்வளவு காலத்துக்கு, எந்த அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை ஆயுர்வேத, சித்த மருத்துவர்களின் அறிவுரையின்படியே உட்கொள்வது அவசியம்.
நாவல் பழத்தில் இனிப்பும் துவர்ப்பும் கலந்திருக்கும். நாவல் விதையில் அதிக துவர்ப்புச் சுவை இருக்கும். இந்தச் சுவையானது உடலில் வாயுவை அதிகப்படுத்தக்கூடியது.

நல்மருந்து 2.0 - சிறுநீரகப் பிரச்னைகள் தீர்க்கும் நெருஞ்சில் thanks to vikatan.com


நல்மருந்து 2.0 - சிறுநீரகப் பிரச்னைகள் தீர்க்கும் நெருஞ்சில்!

மருத்துவம் 14 - தெரிந்த செடிகள்… தெரியாத பயன்கள்!
சிறு நெருஞ்சி
சிறு நெருஞ்சி
நெருஞ்சில் வகைகளில் சிறு நெருஞ்சி அல்லது நல்ல நெருஞ்சில், பெருநெருஞ்சில் அல்லது யானை நெருஞ்சில், செப்பு நெருஞ்சில் அல்லது செம்பொன் நெருஞ்சில் என மூன்று வகைகள் உள்ளன.
நல்மருந்து 2.0 - சிறுநீரகப் பிரச்னைகள் தீர்க்கும் நெருஞ்சில்!
சிறு நெருஞ்சில்
மழைக்காலங்களில் சாலையோரங்களிலும், தரிசு நிலங்களிலும் மிகவும் வேகமாக முளைத்து, தரையோடு தரையாகக் கொடியாகப் படர்ந்து காணப்படும். இதில் பூக்கும் மஞ்சள் நிறப் பூக்கள், சூரியனை நோக்கித் திரும்பும் தன்மையுடையவை. பூக்கள் முட்கள் நிறைந்த காயாக மாறும். மிகவும் பலம் வாய்ந்த யானைகூட இதன் முட்களை மிதித்துவிட்டால் உடலை வளைத்து வணங்கும். அதனால் இதை ‘ஆனை வணங்கி’ என்றும் அழைப்பார்கள். இதன் கொடி, காய், விதை அனைத்துமே மருத்துவப் பயனுடையவை. மழைக்காலம் முடிந்து கோடை வெயில் ஏறத் தொடங்கியதும், முதலில் காயத் தொடங்குவது நெருஞ்சில்தான். எனவே, முள்ளுடன்கூடிய காய், கொடியோடு மொத்தமாகச் சேகரித்து, சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்வது நல்லது. பொதுவாக நெருஞ்சில் சமூலம் (சமூலம் என்பது முழுத் தாவரம்) சிறுநீரைப் பெருக்கும் மருந்துகளிலும், நெருஞ்சில் வித்து ஆண்மை பெருக்கும் மருந்துகளிலும் அதிகமாகச் சேர்க்கப்படுகின்றன.
நெருஞ்சில் கஞ்சி
வேர், காயுடன்கூடிய நெருஞ்சிக் கொடியை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அத்துடன் அரிசி, தண்ணீர் சேர்த்து சோறு பொங்கி, கஞ்சியை மட்டும் வடித்து வைத்துக்கொள்ள வேண்டும். அதனுடன் சிறிது நாட்டுவெல்லம் கலந்து குடித்துவர, சிறுநீர் நன்கு தாராளமாகப் பிரியும். இந்தப் பக்குவத்தைச் சிறுநீர்க்கட்டு உடையவர்கள் பயன்படுத்திப் பார்க்கலாம்.
கல்லடைப்பு குடிநீர்
நெருஞ்சி சமூலம், சிறுகண்பீளை வேர், பேராமுட்டி வேர், வெள்ளரி விதை, மாவிலங்கப்பட்டை ஆகியவற்றைச் சம எடையாக எடுத்து, ஒன்றிரண்டாகப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.
30 கிராம் பொடியுடன், ஒரு லிட்டர் தண்ணீர் சேர்த்து அடுப்பிலேற்றி, கால் லிட்டராக வற்றவைக்க வேண்டும். அதை 50 மி.லி எடுத்து, நாள் ஒன்றுக்கு ஐந்து வேளை குடித்துவர, எப்படிப்பட்ட கல்லடைப்பும் குணமாகும். இது தேரையர் நூல்களில் எழுதப்பட்டிருக்கும் அரிய மருத்துவ முறை.
சர்க்கரைநோயால் ஏற்படும் முதல் பாதிப்பு ஆண்மைக்குறைவு. இதற்கு நெருஞ்சில் சமூலம் சேர்த்த குடிநீர்தான் சிறந்த மருந்து. இந்தத் தாவரத்தை ‘இயற்கையின் அற்புதம்’ என்று சொல்லலாம்.
நெருஞ்சில் பருப்புக்கறி
நெருஞ்சில் இளம் கொழுந்து இலைகளை ஒரு கைப்பிடியளவு சேகரித்து, தண்ணீரில் நன்றாகக் கழுவ வேண்டும். அதை வேகவைத்த துவரம்பருப்புடன் கூட்டி, துவட்டலாக வதக்க வேண்டும். அதை உணவுடன் சேர்த்து உண்டுவந்தால் நீர்க்கடுப்பு, வீக்கம் ஆகியவை நீங்கி நீர் நன்றாகப் பிரியும். பச்சை நெருஞ்சில் சாறு 30 மி.லி எடுத்து அதனுடன் மோர் கலந்து குடித்துவர, சிறுநீரில் ரத்தம் போவது குணமாகும். பிறகு ரத்தம் போவதற்கான காரணங்களை அறிந்துகொண்டு அதற்கான மருத்துவத்தை எடுக்க வேண்டும்.
சிறு நெருஞ்சி
சிறு நெருஞ்சி
நெருஞ்சில் சமூலம், கீழாநெல்லி சமூலம் இரண்டையும் பச்சையாக அரைத்து, 3 முதல் 5 கிராம் அளவு எடுத்து எருமைத் தயிருடன் கலந்து காலை, மாலை உண்டுவர வெள்ளைப்படுதல், சிறுநீர்ப்பாதை எரிச்சல், நீரடைப்பு ஆகியவை குணமாகும். இப்படி ஒரு வாரம் தொடர்ந்து உட்கொண்டுவர வேண்டும். பாதாம், பிஸ்தா முதலிய வெளிநாட்டுப் பருப்பினங்களை மட்டும் உண்டு வந்தால் ஆண்மை பெருகும் என்ற ஒரு தவறான கருத்து நிலவிவருகிறது.
நமது நாட்டு நெருஞ்சில் வித்து ஆண்மையைப் பெருக்கும் தன்மையில் மிகவும் சிறந்தது. வெளிநாட்டுப் பருப்புகளில் புரதத்துடன் சேர்த்து சிறிது கொழுப்பு எண்ணெய்களும் இருப்பதால், அவை உடலில் கொழுப்பைக் கூட்டும். ஆனால், நெருஞ்சில் வித்தில் கொழுப்பு என்பதே கிடையாது. இந்த வித்தைப் பாலில் வேகவைத்து, உலர்த்தி, இடித்துப் பொடியாக்கி வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு டம்ளர் பசும்பாலில் 2 டீஸ்பூன் அளவு கலந்து சாப்பிட்டுவர விந்து பெருகும்; ஆண்மை நீடிக்கும். இதே விதைப் பொடியுடன் முருங்கைப்பூ சேர்த்து உண்டுவர மேலும் நல்ல பலன் கிடைக்கும். நெருஞ்சில் விதைப் பொடியை இளநீரில் போட்டுக் குடித்துவர நீர்க்கட்டு குணமாகும்.
யானை நெருஞ்சில்
யானை நெருஞ்சில்
இன்றைக்கு `புரஸ்தகோள வீக்கம்’ (Prostapis) என்ற நோயால் முதியவர்களில் அதிகம் பேர் துன்பப்படுகிறார்கள். இதைச் ‘சொட்டு மூத்திரம்’ எனச் சித்த மருத்துவம் பதிவுசெய்து வைத்திருக்கிறது. இந்தச் சொட்டு மூத்திரத்துக்கு நெருஞ்சில் முள் அதிகமாகச் சேர்க்கிற ’சந்திரகாந்தி சூரணம்’ என்ற மருந்து மிகவும் நல்ல பலனைத் தரும். சர்க்கரைநோயால் மனித உடலில் ஏற்படும் முதல் பாதிப்பு ஆண்மைக்குறைவு. இதற்கு நெருஞ்சில் சமூலம் சேர்த்த குடிநீர் சிறந்த மருந்தாகக் கூறப்படுகிறது. பொதுவாக, ஆண்மைக்குறைவுக்குச் சித்த மருத்துவத்தில் நிறைய லேகியங்கள் கூறப்பட்டுள்ளன. ஆனால், அவற்றில் வெல்லம், தேன், நெய் ஆகியவை அதிகமாகச் சேர்க்கப்படுவதால் அவற்றைச் சர்க்கரை நோயாளிகளுக்கு வழங்க முடியாது.
ஆண்மைக்குறைவுக்குச் சித்த மருத்துவத்தில் நிறைய லேகியங்கள் கூறப்பட்டுள்ளன. அவற்றில் வெல்லம், தேன், நெய் அதிகமாகச் சேர்க்கப்படுவதால், சர்க்கரை நோயாளிகளுக்கு வழங்க முடியாது.
யானை நெருஞ்சில்
இதுவும் மழைக் காலங்களில் எல்லா இடங்களிலும் முளைக்கும் தாவரம். நன்கு நீர்வளமான இடங்களில் ஓரடி வரைகூட வளரும். கொத்துக் கொத்தாக வளரும் இந்தத் தாவரத்தில் மஞ்சள் நிறப் பூக்கள் பூத்துக் குலுங்கி எள்ளுக்காய்களைப்போலக் காய்கள் உருவாகி, அவையே முதிரும்போது நிறைய விதைகள் வைக்கும்.
செப்பு நெருஞ்சில்
செப்பு நெருஞ்சில்
தண்ணீர் எண்ணெயாக மாறும் இயற்கை விந்தை!
இந்தத் தாவரத்தை ‘இயற்கையின் அற்புதம்’ என்று சொல்லலாம். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் அல்லது நீராகாரம் எடுத்துக்கொண்டு அதனுள் ஒரு யானை நெருஞ்சில் முழுச்செடியை சிறிது நேரம் மூழ்கவைத்து, நன்கு குலுக்கி எடுத்துப் பார்த்தால் முழுத் தண்ணீரும் எண்ணெய்போலக் கொழகொழப்பாக மாறிவிடும். இந்தத் தண்ணீர் அல்லது நீராகாரத்தைக் காலையில் குடித்துவர நீரெரிச்சல், வெள்ளைப்படுதல் ஆகியவை குணமாகும். முழுச் செடியையும் அப்படியே அரைத்து, ஒரு சிறு எலுமிச்சை அளவு எடுத்து, தயிர் அல்லது மோரில் கலந்து உண்டுவர நீர்க்கடுப்பு, உடம்பெரிச்சல் முதலியவை குணமாகும். சிறுநெருஞ்சில் விதைகளைப் பாலில் அவித்து சூரணமாக்கி உண்பதுபோல இதன் விதைகளையும் உண்டுவர விந்தணுக்கள் பெருகி மலடு நீங்கும்.
செப்பு நெருஞ்சில்
சிறுநெருஞ்சில்போலவே தரையோடு படர்ந்து வளரும் ஒரு கொடியினம். இது இளஞ்சிவப்பு மலர்களை உடையது. புல்வெளிகளில் அதிகமாகக் காணப்படும். இதை ‘செம்பொன் நெருஞ்சில்’ என்றும் சில நூல்கள் கூறுகின்றன. பெண் மலட்டைக் குணமாக்கும் ‘கர்ப்ப சஞ்சீவி எண்ணெய்’ தயாரிப்பில் இதன் சாறு சேர்க்கப்படுகிறது. இதைப் பச்சையாகச் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி 50 கிராம் எடுத்து, ஒரு லிட்டர் தண்ணீர் சேர்த்து அடுப்பிலேற்றி, 250 மி.லியாக வற்ற வைத்து வடிகட்ட வேண்டும். இதைக் குடித்து வர சிறுநீர் நன்கு பிரியும். மேகச்சூடு நீங்கி உடல் பலம் பெறும்.
அடுத்த இதழில்... கோவை, கொல்லன்கோவை, அப்பக்கோவை குறித்துப் பார்ப்போம்.
மூலிகை பெயர் தாவரவியல் பெயர்
சிறு நெருஞ்சில் - Tribulus terrestris
பெரு நெருஞ்சில் - Pedalium murex
செப்பு நெருஞ்சில் - Indigofera enneaphylla

Tuesday, January 28, 2020

பல நிலைகளைக் கடக்கும் சரீரம் குண்டலகேசி

பல நிலைகளைக் கடக்கும் சரீரம்


பாளையாம் தன்மை செத்தும் பாலனாம் தன்மை செத்தும்
காளையாம் தன்மை செத்தும் காமுறும் இளமை செத்தும்
மீளும் இவ் இயல்பும் இன்னே மேல்வரு மூப்பும் ஆகி
நாளும் நாள் சாகின் றாமால் நமக்கு நாம் அழாதது என்னோ!    9

Sunday, January 26, 2020

En Palli Kondeerayya - Ragamalika - Adi

ஏன் பள்ளீ கொண்டீரய்யா?
ஏன் பள்ளீ கொண்டீரய்யா? ஸ்ரீ ரங்கனாதா!
ஆம்பல் பூத்த சய பருவத மடுவிலே

ஆம்பல் பூத்த சய பருவத மடுவிலே
ஆம்பல் பூத்த சய பருவத மடுவிலே
ஆம்பல் பூத்த சய பருவத மடுவிலே-அவதரித்த இரண்டாற்று நடுவிலே

அவதரித்த இரண்டாற்று நடுவிலே
ஏன் பள்ளீ கொண்டீரய்யா?
கௌசிகன் சொல் குறித்ததர்க்கோ
கௌசிகன் சொல் குறித்ததர்க்கோ?
அரக்கி குலையில் அம்பு எறிந்த்ததர்க்கோ?
கௌசிகன் சொல் குறித்ததர்க்கோ?
அரக்கி குலையில் அம்பு எறிந்த்ததர்க்கோ?
ஈசன் வில்லை முறித்ததர்க்கோ?
ஈசன் வில்லை முறித்ததர்க்கோ?
பரசுராமனுரம் பரித்ததர்க்கோ?
ஈசன் வில்லை முறித்ததர்க்கோ?

பரசுராமனுரம் பரித்ததர்க்கோ?
ஏன் பள்ளீ கொண்டீரய்யா? ஸ்ரீ ரங்கனாதா!
மாசில்லாத மிதிலேசன் பெண்ணுடனே வழி நடந்த இளைப்போ?
மாசில்லாத மிதிலேசன் பெண்ணுடனே வழி நடந்த இளைப்போ?
தூசில்லாத குஹனோடத்திலே கங்கை துறை கடந்த இளைப்போ?
தூசில்லாத குஹனோடத்திலே கங்கை துறை கடந்த இளைப்போ?
மீசுரமாம் சித்ரகூட சிகரத்தின் மிசை கிடந்த இளைப்போ?
மீசுரமாம் சித்ரகூட சிகரத்தின் மிசை கிடந்த இளைப்போ?

காசினிமேல் மாரீசனோடிய கதி தொடர்ந்த இளைப்போ?
காசினிமேல் மாரீசனோடிய கதி தொடர்ந்த இளைப்போ?
ஓடிக்களைத்தோ தேவியை தேடி இளைத்தோ? மரங்கள் ஏழும் துளைத்தோ?

கடலை கட்டி வளைத்தோ? இலங்கை என்னும் காவல் மாநகரை இடித்த வருத்தமோ?

ராவணாதிகளை முடித்த வருத்தமோ?
ஏன் பள்ளீ கொண்டீரய்யா?

மதுரையிலே வரும் களையோ? முதலை வாய் மகனைத்தரும் களையோ?
மதுரையிலே வரும் களையோ? முதலை வாய் மகனைத்தரும் களையோ?
எதிர் எருதை பெருங்களையோ? கன்றை எடுத்தெரிந்த பெரும் களையோ?

எதிர் எருதை பெருங்களையோ? கன்றை எடுத்தெரிந்த பெரும் களையோ?
புதுமை ஆன முலையுண்டு பேயின் உயிர் போக்கி அலுத்தீரோ?
புதுமை ஆன முலையுண்டு பேயின் உயிர் போக்கி அலுத்தீரோ?
அதிர ஓடிவரும் குருவி வாயை இரண்டாக்கி அலுத்தீரோ?
அதிர ஓடிவரும் குருவி வாயை இரண்டாக்கி அலுத்தீரோ?
துதி செய் ஆயர்களை காக்க வேண்டி மலை தூக்கி அலுத்தீரோ?
ஜதி செய் காலினால் காளிங்கன் மணிமுடி தாக்கி அலுத்தீரோ?
மருதம் சாய்த்தோ? ஆடு மாடுகள் மேய்த்தோ?
சகடுருளை தேய்தோ? Kamsan உயிரை மாய்த்தோ?
அர்ஜுனனுக்காய் சாரதியாய் தேர் விடுத்த வருத்தமோ?
போரிலே சக்ரம் எடுத்த வருத்தமோ?
ஏன் பள்ளீ கொண்டீரய்யா? ஸ்ரீ ரங்கனாதா!
By bhas96