Tuesday, March 31, 2020

கறிவேப்பிலை கண்ணுக்கு நல்லது! thanks to dinamalar

கறிவேப்பிலை கண்ணுக்கு நல்லது!

 பதிவு செய்த நாள் : ஏப் 01, 2020 
Advertisement
 
 
 கறிவேப்பிலை கண்ணுக்கு நல்லது!
கறிவேப்பிலையின் மருத்துவ குணங்கள் பற்றி, 'அல்மா' சித்த மருத்துவ நிறுவன நிறுவனர் வேலாயுதம்:
கறிவேப்பிலையை தினமும் உணவில் சேர்த்து வர, முடி கொட்டுவது, இளநரை, வழுக்கை போன்ற பிரச்னைகளை தவிர்க்கலாம். மேலும், ரத்தத்தில் நல்ல கொழுப்பை அதிகரித்து, புற்றுநோய் ஆபத்தை குறைக்கும் ஆற்றல், கறிவேப்பிலைக்கு உள்ளது.ரத்தத்தில், 'ஹீமோகுளோபின்' அளவை அதிகரித்து, சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கும், பித்தத்தை தணிக்கும் திறன், இதற்கு உள்ளது.
மேலும், உணவில் நாட்டமின்மை, வயிற்று பொருமல், காய்ச்சல், ரத்த சோகை, பித்த மயக்கம் ஆகியவற்றையும் இது போக்கும்.சங்க காலத்தில், கறிவேப்பிலைக்கு, கஞ்சகம் என்று பெயர். அந்த காலத்திலேயே, நம் முன்னோர், உணவில் அதை பயன்படுத்தி வந்துள்ளனர். இதை, பெரும்பாணாற்றுப் படை என்ற நுாலில் அறிய முடிகிறது. பசு வெண்ணெயை உருக்கி, அதில் மாதுளம் பிஞ்சு, மிளகுத்துாள், கறிவேப்பிலை சேர்த்து சமைத்துள்ளனர்.கறி எனப்படும், உணவு பதார்த்தங்களில் சேர்த்ததாலும், வேப்பிலை போன்று விளங்குவதாலும், கறிவேப்பிலை என, பிற்காலத்தில் அழைக்கப்படும் இந்த இலைக்கு, ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன.
பல விதமாக இதை பயன்படுத்தலாம். சாதத்தில் இதை சேர்த்து, கறிவேப்பிலை சாதம், கறிவேப்பிலை இட்லிப்பொடி, கறிவேப்பிலை கீர் என பயன்படுத்துகின்றனர்.அதுபோல, இதை அரைத்து, அடை போல தட்டி, வெயிலில் காய வைத்து, தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய்யுடன் சேர்த்து சூட வைத்து, ஆறிய பின், தலைக்கு தேய்த்து வர, கண்களுக்கு குளிர்ச்சி உண்டாகும்; முடி கருமையாக வளரும். மேலும், இதனுடன், நெல்லிக்காய், பிஞ்சு கடுக்காய் சம அளவு எடுத்து, அவற்றை மொத்தமாக இடித்து, நல்லெண்ணெய் ஊற்றி, தொட்டால் விரல் சுடும் பதத்தில் இறக்கி வைத்து, அந்த எண்ணெய்யை, தலைக்கு தொடர்ந்து தேய்த்து வர, இளநரை மாறும்; முடி கறுப்பாகும்.இந்த எண்ணெய்யை, 15 நாட்களுக்கு ஒரு முறை சூடுபடுத்திக் கொள்ள வேண்டும்.காலையில், வெறும் வயிற்றில், 15 கறிவேப்பிலை இலைகளை உட்கொண்டு வந்தால், பெண்களுக்கு வயிற்றை சுற்றி ஏற்படும் கொழுப்பு கரையும் என, நம்பப்படுகிறது. ஒரு கைப்பிடி கறிவேப்பிலையுடன் ஒரு தேக்கரண்டி மிளகு சேர்த்து அரைத்து, அரை லிட்டர் தேங்காய் எண்ணெய் கலந்து, காய்ச்சி, தலைக்கு தேய்த்து வர, பொடுகு நீங்கும்; தலை முடி வளரும். கறிவேப்பிலையை உலர்த்தி, பொடி செய்து, தினமும், காலை, மாலை தேனில் கலந்து சாப்பிட, இதயம் வலுப்படும்

சிவாஜி சாருக்கே அந்த அங்கீகாரம் கிடைக்கலை, நாமெல்லாம் எம்மாத்திரம்?'' - ஒய்.ஜி.மகேந்திரன் #Motivation

``சிவாஜி சாருக்கே அந்த அங்கீகாரம் கிடைக்கலை, நாமெல்லாம் எம்மாத்திரம்?'' - ஒய்.ஜி.மகேந்திரன் #Motivation

ஒய்.ஜி.மகேந்திரன்
ஒய்.ஜி.மகேந்திரன்
`` `வாழ்வை மாற்றிய வாக்கியம்'னு கேட்டா நிறைய சொல்லலாம். இருந்தாலும், என் பால்ய காலத்திலிருந்து என் மனசுல தங்கிப்போய் என்னை வழிநடத்துற வாசகத்தைச் சொல்றேன்.
நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் நாடகத்துறையில் 100-க்கும் அதிகமான நாடகங்களை அரங்கேற்றி 8,000-க்கும் அதிகமான மேடைகளைக் கண்டவர். திரைப்படத் துறையிலும் நகைச்சுவை நடிகராக, குணச்சித்திர நடிகராக அங்கீகாரம் பெற்றவர். `வாழ்வை மாற்றிய வாக்கியம்' பகுதிக்காக அவரைச் சந்தித்தோம்.
ஒய்.ஜி.மகேந்திரன்
ஒய்.ஜி.மகேந்திரன்
`` `வாழ்வை மாற்றிய வாக்கியம்'னு கேட்டா நிறைய சொல்லலாம். இருந்தாலும், என் பால்ய காலத்திலிருந்து என் மனசுல தங்கிப்போய் என்னை வழிநடத்துற வாசகத்தைச் சொல்றேன்.
நான் வாழ்க்கையில எதையும் ரொம்ப ரொம்ப ஈஸியா எடுத்துக்கிட்டுப் போயிடுவேன். எதுக்கும் பெருசா அலட்டிக்க மாட்டேன். எப்பவுமே ரொம்ப ஜாலியா இருந்து பழக்கப்பட்டவன். எந்த ஒரு கஷ்டமான சூழ்நிலையிலும் முடிந்த அளவு சமாளிப்பேன். முடியாத நிலைமை, மூழ்கி அடிக்கிற மாதிரி இருந்தா, தலையைத் தூக்கிக்கொண்டு வெளியில் வந்துடுவேன்
10, 12 வயசுல விவரம் தெரிய ஆரம்பிச்ச பிறகு, எனக்கு ரொம்பவும் பிடிச்சுப்போன வரிகள்னா, கண்ணதாசன் பாடல்களின் நிறைய வரிகளைச் சொல்லலாம். அவரின் பாடல்கள் சொன்ன அளவு வாழ்க்கை சித்தாந்தம், இன்பம், துன்பம், கவலை, கண்ணீர், துயரம், நம்பிக்கை, களிப்பு, வெற்றி, தோல்வி, விரக்தி, தத்துவத்தை எல்லாம் வேற எதுவும் சொல்லலைன்னு அடிச்சு சொல்வேன்.
வாழ்க்கையின் எல்லா பரிமாணங்களையும் பாடியிருக்கார் கவிஞர். பிறப்பு முதல் இறப்புவரை எல்லா விஷயங்கள் பற்றியும் அவர் எழுதியிருக்கார். அவர் எழுதாத விஷயங்கள், தொடாத அத்தியாயங்களே கிடையாது. தன் அனுபவத்திலிருந்து மனித சமூகத்துக்குத் தேவையான கருத்துகளைச் சொல்லியிருப்பார். அதனால, கண்ணதாசனின் பாடல் வரிகள் பலவும் எல்லோருக்குமே ஒரு மிகப்பெரிய பாடசாலையாக மாறி பாடம் நடத்தக்கூடியவை...
கண்ணதாசன்
கண்ணதாசன்
நான் எனக்கான பாடமாக எடுத்துக்கிட்டது, ஸ்ரீதர் இயக்கிய `சுமைதாங்கி' படத்தில் இடம்பெற்ற `மயக்கமா கலக்கமா' பாடல்! எனக்கு மிகவும் பிடிக்கும். அந்தப் பாடலில் வரும் வரிகள்...
`உனக்கும் கீழே உள்ளவர் கோடி,
நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு'
அந்தப் பாட்டை நான் என் சின்ன வயசிலிருந்தே கேட்டிருக்கிறேன். இந்தப் பாடலின் வார்த்தைகள் அப்படியே என் மனசுல ஒட்டிக்கொண்டன. என்னைப் பொறுத்தவரை நம்பர் ஒன் டைரக்டர்னா ஸ்ரீதர் சாரைத்தான் சொல்லுவேன். அதே மாதிரி, இசைன்னா எனக்கு எம்.எஸ்.விஸ்வநாதன் இசைதான். பாடல்னா கண்ணதாசன்தான்.
மேலே சொன்ன வரிகளைத்தான் வாழ்க்கையின் தடைகள், போராட்டங்கள், போராட்டங்களுக்கு அடுத்து கிடைக்கும் தோல்விகள் இவற்றின் போதெல்லாம் நான் நினைச்சுக்குவேன். என் நெஞ்சுக்கு நெருக்கமான இந்த வரிகள் என்கூடவே பயணிப்பவை.
என்றைக்கும் இந்தப் பாடல் வரிகள் ஏற்புடையதாக இருக்கும்.
ஒய்.ஜி.மகேந்திரன்
ஒய்.ஜி.மகேந்திரன்
சினிமாவில், நாடகத்தில் எனக்குக் கிடைக்க வேண்டிய இடம் கிடைக்காமல் போயிடுச்சு அல்லது நமக்குக் கிடைக்க வேண்டிய பொருள், பணம், புகழ் இதெல்லாம் நாம் நினைச்ச அளவு கிடைக்காமல் போயிடுச்சேனு மனசு தளர்ந்து போகும்போதெல்லாம் இந்தப் பாடல்தான் நினைவுக்கு வரும். `உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு' என்ற இந்த வரிகள், என் திருப்தியின்மைக்கு மருந்தா அமையும்.
ஒரு நடிகனாக ரொம்ப கஷ்டப்பட்டு நடிச்ச படம் ஓடாது. பக்கத்து தியேட்டர்ல குப்பையாக ஒரு படம் பிரமாதமா ஓடிக்கிட்டிருக்கும். அப்படியெல்லாம் இருக்கும்போது `என்னா வாழ்க்கை இது'ங்கிற மாதிரி ஒரு சலிப்பு உணர்வு வரும். நல்ல படம், நல்லாத்தான் நடிச்சிருப்போம். `ஆனா ஏன் இந்தப் படம் ஓடலை?'ன்னு ஆதங்கம் வரும்போது, நம்ம மனசுல பொறாமை, காழ்ப்புணர்ச்சி இதெல்லாம் தோணுவது இயற்கை. அப்படித் தோணும்போதெல்லாம், `மடையா நீ நினைக்கிற மாதிரி கிடையாது. அங்க ரோட்டுல பாருடா... உன்னைவிட 100 மடங்கு திறமையுள்ளவன் பாண்டி பஜார்ல நடந்து போயிக்கிட்டிருக்கான்'னு பொட்டுல அடிச்ச மாதிரி சொல்லும் இந்தப் பாடல் வரிகள்.
சிவாஜி
சிவாஜி
நாடகங்கள் போடும்போது ஒரு சில நாடகங்கள் சக்ஸஸ் ஆகும். ஒரு சில நாடகங்களுக்கு நாம் எதிர்பார்த்த பாராட்டும் ஆதரவும் கிடைக்காது. சில சமயம் எங்க நாடகத்தைவிட சிறப்பாக இருந்த இன்னொரு சபாவின் நாடகம் எந்த விதத்திலும் கண்டுகொள்ளப்படாமல் போயிருக்கும். சிலரின் நாடகங்களுக்கு மேடையே கிடைச்சிருக்காது. நோட்டு புக்கிலேயே அதன் வாழ்க்கை முடிந்துபோயிருக்கும்.
நாம இங்கே இருந்துகிட்டு அங்க இருக்கிறவங்களைப் பார்த்து பொறாமைப்பட்டு வருத்தமும் வேதனையும் படுவோம். ஆனா, தூரத்துல இருந்து நம்மைப் பார்த்து ஒருவன் பொறாமைப் பட்டுக்கிட்டிருப்பான். இதை முழுசா உணரும்போது வாழ்க்கையில எந்தப் பிரச்னையுமே பெருசில்லைனு புரிய ஆரம்பிக்கும்.
அவ்வளவு ஏன்... சிவாஜி சாருக்கு இணையான நடிகர் இந்த உலகத்துல உண்டா. இனி பிறக்கத்தான் முடியுமா? அவதாரப் புருஷன். அவருக்கே அவருக்குரிய அங்கீகாரம் கிடைக்கலை. `இந்திய சிறந்த நடிகருக்கான விருது, இந்தியாவின் சிறந்த நடிகருக்குக் கிடைக்கவே இல்லை'னு மறைந்த வியட்நாம் வீடு சுந்தரம்கூட ஒரு பேட்டியில சொல்லியிருந்தார். இதுதான் வாழ்க்கை. இருக்கிறதை வெச்சு திருப்தி அடைந்து கொள்ளணும்ங்கிறதுதான் இங்கு முக்கியம். இந்த விஷயத்தை ரொம்ப அழகாக கண்ணதாசன் சொல்லுவார்."

pattinadhar padalgal

மாதா உடல் சலித்தாள்; வல்வினையேன் கால் சலித்தேன்
வேதாவும் கை சலித்து விட்டானே -நாதா
இருப்பையூர் வாழ் சிவனே, இன்னுமோர் அன்னை
கருப்பையூர் வாராமற் கான்.



பிறக்கும் போது கொண்டு வந்ததில்லை; பிறந்து மண்மேல்
இறக்கும் போது கொண்டு போவதில்லை; இடை நடுவில்
குறிக்கும் இச்செல்வம் சிவன் தந்ததென்று கொடுக்கறியாது
இறக்கும் குலாமருக்கு என் சொல்லுவேன் கச்சி ஏகம்பனே



வாளால் மகவரிந்து ஊட்டவல்லேன் அல்லேன்; மாதுசொன்ன
சூளாலிளமை துறக்கவல்லேன் அல்லன்; தொண்டுசெய்து
நாளாறில் கண்ணிடத்து அப்பவல்லேன் அல்லன்நான் இனிச்சென்று
ஆளாவது எப்படியோ திருக்காளத்தி அப்பருக்கே? 3




இருவினைமு மலமுமற இறவியொடு பிறவியற
     ஏக போகமாய் நீயு நானுமாய்
இறுகும்வகை பரமசுக மதனையரு ளிடைமருதில்
     ஏக நாயகா லோக நாயகா இமையவர் பெருமாளே.
 




Sunday, March 29, 2020

ராமர் ஏன் கிரேட்?














ராவணனை கொன்ற பின், ஒரு பாறையின் மீது அமர்ந்திருந்தார், ராமர். அப்போது, அவருக்கு முன் நிழல் விழுந்தது. காலை நீட்டி அமர்ந்திருந்த ராமர், அது, பெண் நிழல் என தெரிந்து, உடனே, கால்களை மடக்கி, சம்மணமிட்டு அமர்ந்தார். வந்தவரை ஏறெடுத்தும் பார்க்கவில்லை.
வந்த பெண் திரும்பி செல்லும்போது, 'யார்...' என்றார், ராமர்.
'மண்டோதரி... ராவணனின் மனைவி...'
'என்னை எதற்கு பார்க்க வந்தீர்கள்?'
'என் கணவரை, யாரும் இதுவரை வென்றதில்லை. சர்வ வல்லமை படைத்த அவரை, வென்றுள்ள உங்களுக்கு அப்படி என்ன சிறப்பு உள்ளது என, பார்க்க வந்தேன்...'
'பார்த்தீர்களா?'
'பார்த்தேன். என் நிழல கூட உங்கள் மீது படக் கூடாது என, நீட்டியிருந்த காலை மடக்கிய போதே புரிந்து கொண்டேன்...'
'எப்படி?'
'நீங்களோ... மனைவி சீதா நிழலை தவிர்த்து, மற்ற பெண் நிழலைக் கூட, உங்களை நெருங்க விடாதவர் என, புரிந்து கொண்டேன்...'
'அதனால்?'
'என் கணவரோ... தோற்கடித்த ஆணின் மனைவியை உடனே தன் நிழலில் கொண்டு வருபவர். அதுதான், உங்கள் இருவருக்கும் உள்ள வித்தியாசம்...' எனக் கூறி, ராமனின் பதிலுக்கு காத்திராமல் திரும்பி சென்றாள், மண்டோதரி.
ஒரு உபன்யாசத்தில் சொற்பொழிவாளர், வேளுக்குடி கிருஷ்ணன், கூறியது இது.

கோவிலில் கூட்டுக் குடும்பம்! thanks to dinamalar

கோவிலில் கூட்டுக் குடும்பம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29மார்
2020
00:00
ஒரு காலத்தில், இந்தியாவில், வீட்டுக்கு வீடு இருந்த கூட்டுக் குடும்ப முறை, இன்று, மிக அரிதாகி விட்டது. தம்பிகளுக்காக, அண்ணன் விட்டுக் கொடுப்பது, பெற்றவர்களை பராமரிப்பது, அண்ணியை, தாயாக மதிப்பது போன்ற உயர்ந்த எண்ணங்கள், அன்றைய குடும்ப முறையில் இருந்தது.
அயோத்தியை ஆண்ட, தசரதரின் குடும்பம், மிகப்பெரிய கூட்டுக் குடும்பமாக இருந்தது. குடும்பத் தலைவர், தசரதர்; அவரது மனைவியர், கோசலை, கைகேயி மற்றும் சுமித்திரை.
பிள்ளைகளான, ராமன், லட்சுமணன், பரதன் மற்றும் சத்ருக்கனன்; இவர்களது மனைவியரான சீதா, ஊர்மிளா, மாண்டவி மற்றும் சுருதகீர்த்தி என, அனைவரும், ஒரே கூட்டுக் குடும்பமாக வசித்தனர். ராம சகோதரர்களுக்கு, சுக்ரீவன், அனுமன் மற்றும் ஜாம்பவான் என்ற நண்பர்களும் உண்டு.
அயோத்தியில், ராமர், தன் குடும்பத்துடன் காட்சி தருகிறார். தமிழகத்தில், இவரது குடும்பத்தைக் கண்குளிரக் காண வேண்டுமானால், கும்பகோணம், ராமசுவாமி கோவிலுக்கு செல்ல வேண்டும். ஏப்ரல், 2, ராம நவமியன்று, இவர்களைத் தரிசித்து வரலாம்.
விஷ்ணுவை நினைத்து, புத்திரகாமேஷ்டி யாகம் செய்தார், தசரதர். அதன் பயனாக, விஷ்ணுவையே மகனாக பெற்றார். அவரே, ராமன். இதையடுத்து, விஷ்ணுவின் கையிலுள்ள சக்கரம், பரதன் என்ற பெயரில், ராமன் பிறந்த மறுநாள், தசரதரின் இரண்டாம் மனைவி, கைகேயி வயிற்றில் அவதரித்தது.
விஷ்ணுவின் படுக்கையான, ஆதிசேஷன் என்ற பாம்பு, தசரதரின் மூன்றாம் மனைவி, சுமித்திரையின் வயிற்றில், லட்சுமணராகவும், அவரது சங்கு, சத்ருக்கனன் என்ற பெயரிலும் பிறந்தது. சுமித்திரைக்கு மட்டும் இரண்டு பிள்ளைகள்.
ராமனுக்கும், லட்சுமணனுக்கும், மிதிலை மன்னர், ஜனகரின் புதல்விகளான, சீதையும், ஊர்மிளாவும் மனைவி ஆயினர். பரத, சத்ருக்கனருக்கு, ஜனகரின் தம்பி, குசத்வஜனின் மகள்களான, மாண்டவியும், சுருதகீர்த்தியும் மனைவியாயினர்.
ராவண வதம் முடிந்ததும், குடும்பம் புடைசூழ பட்டம் சூடிக்கொண்டார், ராமர். அதன் அடிப்படையில் கோவில் எழுந்தது. கும்பகோணத்தில், இதே அமைப்பில், ராம குடும்பத்துக்கு, ரகுநாத நாயக்கர் என்பவர் கோவில் கட்டினார்.
வீணையுடன் காட்சி அளிக்கிறார், அனுமன். கையில், ராமாயண சுவடி உள்ளது. ராம சரிதத்தை அனுமன், வீணை இசைத்துப் பாடுவதாக ஐதீகம். ராமனின் இடதுபுறம், சத்ருக்கனன், சாமரம் வீசியபடியும், வலதுபுறம், பரதன், குடை பிடித்தும் நிற்கின்றனர். லட்சுமணன், வில்லுடன் பாதுகாவல் செய்கிறார்.
கும்பகோணம் பெரிய கடை வீதியில் கோவில் உள்ளது. ராம குடும்பத்தை தரிசித்து, மீண்டும் கூட்டுக் குடும்ப முறை நம் தேசத்தில் தழைக்க வேண்டி, தரிசித்து வரலாம்.

தி. செல்லப்பா

காலை உணவுகளின், 'சாம்பியன்!'

காலை உணவுகளின், 'சாம்பியன்!'

Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29மார்
2020
00:00
மார்ச் 30 உலக இட்லி தினம்

இந்தியாவில் உள்ள நான்கு பெரு நகரங்களில் நடத்தப்பட்ட ஆய்வில், ஆரோக்கியமான காலை உணவு பட்டியலில், முதலிடம் பிடித்தது, இட்லி தான். எல்லா காலத்திலும், அனைத்து வயதினரும் சாப்பிட உகந்த உணவு இட்லி என்பதை, அனைத்து மருத்துவர்களும், ஊட்டச்சத்து நிபுணர்களும் ஏற்று, அதை சாப்பிடவும் பரிந்துரைக்கின்றனர்.
சராசரி இட்லி ஒன்றின் கலோரி அளவு, வெறும், 39 தான். 2 கிராம் புரதம், 8 கிராம், கார்போஹைட்ரேட், 2 கிராம் நார்ச்சத்து, 1 மில்லி கிராம் இரும்பு சத்து, கால்சியம், பொட்டாசியம், வைட்டமின் சிலவும் உள்ளன. தீமை செய்யும் கொழுப்பு எதுவும் இல்லை.
புரோட்டின் நிறைந்த உணவு, இட்லி. காரணம், இதில் உள்ள அரிசி மற்றும் உளுந்து கலவை. 12 மணி நேரம் ஊற வைப்பதால், மாவாகி புளித்த பின், 'புரோ பையோடிக்ஸ்' எனும் நுண்ணுயிர் கலந்த உணவாக மாறி விடுகிறது. உடலுக்கு நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் மற்றும் ஈஸ்ட் கலந்த உணவாக இட்லி மாறி விடுவதால், எளிதில் செரிமானமாகி விடுகிறது. செரிமான சக்தி குறைந்தவர்களுக்கு, மிகச்சிறந்த உணவு, இது.
குடலில் தோன்றும் கெட்ட பாக்டீரியாக்களை அழித்து, செரிமான உறுப்புகள் சீராக இயங்க உதவுகிறது. பாலின் மூலம் தோன்றும், 'லாக்டோஸ்' பாதிப்பை குறைக்கிறது.
இட்லி மாவு புளித்தவுடன், அதில், வைட்டமின், 'பி12' சத்து உருவாகிறது. இது, நமக்கு தேவையான வைட்டமின் சத்துகளில் ஒன்று.
'இட்லி ஒரு, 'புரோ பையோடிக்ஸ்' உணவு என்பதால், அது, மூளையுடன் தொடர்பு கொண்டு பதற்றத்தை தவிர்க்க உதவுகிறது. மேலும், நாம் எடுத்துக் கொள்ளும் மருந்துகளின் நோய் எதிர்ப்பாற்றலை உடல் எளிதில் கிரகிக்க உதவுகிறது...' என்கின்றனர், மருத்துவ ஆராய்ச்சியாளர்கள். அதனால் தான் குழந்தைகளுக்கும், வயதானவர்களுக்கும், இட்லி, சிறந்த உணவு.
இட்லியுடன், சட்னி, சாம்பார் சேர்த்து சாப்பிடுவது தான் சிறந்தது. சட்னியில் இருக்கும் தேங்காய்; சாம்பாரில் பருப்பும், அதனுடன் சேரும் புளி, காய்கறிகள் மூலம், உடலுக்கு, புரதம், துத்தநாகம், மங்கனீசு, போலிக் ஆசிட், இரும்புச்சத்து மற்றும் நார்ச்சத்து அடங்கிய, நோய் எதிர்ப்பாற்றல் கொண்ட உணவாகிறது.
'வீட்டில் அரைத்த இட்லி மாவு தான் சிறந்தது. அதிகம் புளித்த மாவை உபயோகப்படுத்தக் கூடாது...' என்கின்றனர், ஆய்வாளர்கள்.
இந்தோனேஷியாவில் இருந்து, கி.பி.800க்கு பின், இந்தியாவில் அறிமுகமான இட்லி, தற்போது, தென் மாநிலத்தின், 'நம்பர் ஒன்' காலை உணவு பட்டியலில் உள்ளது.
சென்னையில், 2013ல் மட்டும், ஓட்டல்களில், 7.8 கோடி இட்லிகள் விற்பனையானது, சாதனையாக கருதப்படுகிறது.
இப்போது, ஓட்டல்களில், நாள் ஒன்றுக்கு, சராசரியாக, 2 - 3 லட்சம் இட்லிகள் விற்பனையாவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கோவீ.ராஜேந்திரன்

Saturday, March 28, 2020

ஸ்வாமி தேசிகன் அருளியது.

கொரானாவினால் அனுட்டானங்கள் மீண்டு வந்ததே.
------------------------------------------------------------------
#ஆகாரநியமம்.
ஸ்வாமி தேசிகன் அருளியது.
குளி முதலானவை செய்யாது உண்ணும் ஊணும்
கூட்டல்லாப் பந்தியில் ஊண் பிறர் கை யூணும்
நளி மதி தீ விளக்காக யுண்ணும் ஊணும்
நள்ளிரவில் விளக்கின்றி யுண்ணும் யூணும்
கிளி மொழியாள் ஊணா நிற்கக் கணவன் ஊணும்
கீழோரை நோக்கு ஊணும் இடக்கை யூணும்
ஒளி மறையோர் மற்றும் உகவாத ஊணும்
ஒளி யரங்கர் அடி பணிவார் உகவார் தாமே –10-
Aanandh Padmanaban











ஸ்நானம் செய்யாமல் உன்ன கூடாது............எல்லாருடனும் சம்மாக கலியாணம் போன்ற காரியங்களில் சாப்பிடுவது மறவர்கள் சம்பந்தம் இல்லாதவங்க தொட்டு சாப்பிடுவது சந்திர வெளிச்சத்தில் சாப்பிடுவது........ இருட்டில் விளக்கு இல்லாமல் சாப்பிடுவது..........மனைவி சாப்பிடாமல் இருக்கும்போது கணவன் சாப்பிடுவது..........இடது கையால் சாப்பிடுவது வேத வித்துக்கள் சாப்ப்பிடாதது சாப்ப்பிடக்கூடாது என்று ஒதுக்கி வைத்தவைகளை அடியவர்கள் உன்னைக் கூடாது

கொரானா கற்றுத் தரும் பாடங்கள் thanks to tamil and vedas

கொரானா கற்றுத் தரும் பாடங்கள்! (Post No.7747)

by Tamil and Vedas
WRITTEN BY S NAGARAJAN                     
Post No.7747
Date uploaded in London – – 27 March 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
ச.நாகராஜன்
கொள்ளை நோயான - கொடிய நோயான - நாம் இதுவரை அறிந்திராத விசித்திர நோயான – கொரானா (Corona  Virus) கற்றுத் தரும் பாடங்கள் பல.
ஒவ்வொரு மனிதனும் பல பாடங்களை கொரானாவிடமிருந்து கற்றுக் கொள்கிறான்.
சில பாடங்கள் இதோ:
நமக்கும் மேலே ஒருவன் இருக்கின்றான்; அவன் நடத்தும் நாடகத்தில் நமக்குக் கொடுக்கப்படும் பாத்திரங்களை நாம் ஏற்கும் போது பல சமயம் மகிழ்கிறோம்; பல சமயம் சொல்லவொண்ணா துக்கத்தையும் பயத்தையும் அடைகிறோம்.
மனிதகுலம் ஒன்றே. ஜாதி, மதம், இனம், மொழி, நாடு , ஆண் பெண் என்ற பால் வேறுபாடு, பணக்காரன், ஏழை என்ற அந்தஸ்து வேறுபாடு போன்றவை அர்த்தமில்லாதவை; அவை பெரிய இடருக்கு முன்னால் குன்றிக் குறுகிப் போகின்றன.
விஞ்ஞானம் வளர வளர வியப்பூட்டும் வளர்ச்சியைப் பெற்றாலும் கூட, விளக்கமுடியாத விஷயங்கள் ஏராளம் உள்ளன? ஏன், - இப்போது ஏன் - என்ற கேள்விக்கு விடையே இல்லை.
அரசு மட்டும் ஒரு தேசத்தில் உள்ளவர்க்கு நல்லதைச் செய்ய முடியாது; தனி மனிதனும் அரசுக்கு நூறு சதவிகிதம் ஒத்துழைக்க வேண்டும். இல்லையேல் இடரை வெல்ல முடியாது.
படித்தவர்கள் பாமரரை விட ஒழுக்கமின்றி நடப்பதைப் பார்த்து ஆச்சரியப்பட முடிகிறது. ஏன் இப்படி என்ற கேள்விக்கு விடையே இல்லை.
தனிமனித ஒழுக்கம் அனைத்து அறிவையும் விடச் சிறந்தது. அதைக் கொண்டவர்களே நல்ல மனிதர்கள்.
இந்தப் பேரிடரிலும் கூட ஆதாயம் பார்க்க நினைப்பவர்களை என்ன சொல்வது? இதிஹாஸ புராணம் கூறும் ‘இரக்கமில் அரக்கர்கள்’ இவர்கள் தானோ?!
ஊடகங்கள் பெரும்பாலும் நல்லனவற்றையே செய்வதைப் பாராட்டும் போது பரபரப்பூட்டியே பழக்கப்பட்ட ஊடகங்கள் பொய்ச் செய்திகளைப் பரப்புவதைப் பார்க்கும் போது பெரும் வியப்பை அடைய வேண்டியதிருக்கிறது.
வதந்திகளைப் பரப்புவதில் வாழ்க்கையை ஓட்டுபவர்கள், தன்னையும் தன்னைச் சார்ந்தவர்களையும் பேரிடர் பாதிக்கும் என்று எண்ணுவதில்லை என்பதை நினைத்தாலே ஆச்சரியமாக இருக்கிறது.
ஒரு கணத்தில் பீதியைக் கிளப்பி மரண பயத்தை ஏற்படுத்தி உலக நாட்டு மக்கள் அனைவரையும் கலக்கமுறச் செய்ய முடியும்; பல்வேறு துறைகளை முடக்க முடியும்; வீட்டுக்குள்ளேயே அனைவரையும் முடங்கிக் கிடக்கச் செய்ய முடியும்; நாளை யாருக்கு என்ன நடக்குமோ என்ற நிலையற்ற தன்மையை ஏற்படுத்த முடியும்; நாடுகளின் அடிப்படை பொருளாதாரத்தையே ஆட்டி விட முடியும் - முடிவற்ற ஒரு பட்டியலை ஒரு கணத்தில் கொரானா தர முடியும் என்பது என்ன ஒரு விசித்திரம்?!
தத்துவம் கூறுபவர்களை விட, சாஸ்திர வியாக்யானங்களைச் செய்பவர்களை விட, களத்தில் முன்னணியில் நின்று தன் உயிரையும் பொருட்படுத்தாமல் சேவை செய்யும் சேவாதளத்தினரை மனிதர்  என்ற சொல்லால் மட்டும் விளக்க முடியுமா? இவர்களின் அருங்குணத்தை எப்படி விவரிப்பது? எப்படி இவர்களுக்கு ஈடு கட்டுவது?
மாட்டு வண்டி, குதிரை வண்டியிலிருந்து, சைக்கிள், மோட்டார் சைக்கிள், கார், ரயில், விமானம் என பல்வேறு பயண சாதனங்களைக் கண்டாலும் கூட அவற்றைப் பயன்படுத்த முடியாமல் செய்ய ஒரு சின்ன ‘மரணம் வந்து விடுமோ’ என்ற பீதி போதும் என்பது என்ன ஒரு விசித்திரம்?!
அமைதி தரும் ஆலயங்களும் மூடப்படும் என்பது அதிசயமாக இல்லை?
சேர்ந்து வாழும் சமூகத்தை, தூர தள்ளி இருக்க வேண்டிய சமூகமாக, - சோஷியல் டிஸ்டன்ஸிங் என்ற புதிய நடத்தை கொண்ட சமூகமாக, ஒரு சின்ன வைரஸ் மாற்ற முடியும் என்பதை இதுவரை நம்பி இருப்போமா?
என்றாலும் கூட மனிதகுலத்திற்கு - நல்லோருக்கு - ஒரே ஒரு நல்ல , பெரிய நம்பிக்கை உள்ளது:-
அது இது தான்!
வேயுறு தோளி பங்கன் - திருஞானசம்பந்தர் அருளிய பதிகம்)
சர்வே ஜனா சுகினோ பவந்து: |
எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே!
மனித குலம் வாழ்க! மனித குலம் வெல்க!!
tags -- கொரானா , பாடங்கள்