Wednesday, April 29, 2020

பசி வர இதை செய்யுங்க! thanks to dinamalar.com


பசி வர இதை செய்யுங்க!

 பதிவு செய்த நாள் : ஏப் 30, 2020 
tisement
 பசி வர  இதை செய்யுங்க!
கோடை காலத்தில் சரியாக வயிறு பசிக்காது. தண்ணீர் தேவை அதிகமாக இருக்கும். பசித்து சாப்பிட்டால் தான் உடலுக்கு நல்லது. அதற்கு என்ன செய்யலாம் என, டாக்டர் எஸ்.டி.வெங்கடேஸ்வரன்: இப்போது நாமெல்லாம், பசிக்கிறதோ இல்லையோ, மணிக்கணக்கு வைத்து சாப்பிடுகிறோம். கோடை காலத்தில் சரியாக பசிக்காது. எனினும், எதையாவது சாப்பிட்டு விடுகிறோம்.
இதனால், வயிற்றில் உள்ள உணவு கெட்டு, கெட்ட வாயுவை உற்பத்தி செய்யும்.பசி இன்றி சாப்பிடக் கூடாது. பசியை வரவழைக்க, கீழ்கண்டவற்றை பின்பற்றலாம்:l சிறிதளவு இஞ்சியை அரைத்து, சாறு எடுத்து கொள்ள வேண்டும். அதனுடன் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு, இந்துப்பூ கலந்து, பானமாக, காலை அல்லது இரவு நேரங்களில் குடிக்கலாம்; சில நாட்களிலேயே நன்கு பசி எடுக்கும்l வெந்நீர் குடித்து வந்தால், பசியின்மை என்ற பிரச்னையே இருக்காது. அதை பழக்கமாக கொண்டிருந்தால், பசியில்லை என்ற பேச்சுக்கே இடமில்லை. அரை ஸ்பூன் சுக்கு பொடியுடன், அரை ஸ்பூன் தேன் கலந்து சாப்பிடலாம்.
மேலும், சுக்கு, மிளகு, திப்பிலியை பொடி செய்து, தண்ணீர், வெந்நீர், தேன் கலந்து சாப்பிட, பசி பறந்து வரும்l இஞ்சி, ஏலக்காயை தண்ணீரில் தட்டி போட்டு, நன்றாக கொதிக்க வைத்து, தேநீர் போல பருகலாம். வெறும் ஏலக்காயை வாயில் போட்டு மென்று வர, பசி ஏற்படும். l மிளகுப் பொடியுடன், நாட்டு சர்க்கரையை கலந்து சாப்பிட, பசி ஓடி வரும்l பட்டை, ஏலக்காய், தனியா, சோம்பு ஆகியவற்றை சம அளவு எடுத்து, முதல் நாள் இரவே, தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். காலையில் எழுந்து, அந்த தண்ணீரை வடிகட்டி குடித்தால், பசி எடுக்கும். இப்படி, ஒரு டம்ளர் குடிக்கலாம்இல்லையேல், இந்த பொருட்களை பொடி செய்து, அந்த பொடியை தண்ணீரில் முதல் நாளில் ஊற வைத்து, மறுநாள் காலையில் எழுந்து குடிக்கலாம்; இதனாலும், பசி நன்றாக வரும்l மாதுளம் பழச்சாறுடன், சிறிதளவு இந்துப்பூ, தேன் கலந்து குடிக்கலாம். இல்லையேல், கால் ஸ்பூன் பெருங்காயத் துாளுடன், தலா, கால் ஸ்பூன் சீரகம், இந்துப்பூ, கடுகை பொடி செய்து கலந்து, சிறிதளவு இஞ்சி சேர்த்து, தண்ணீரில் கலந்து குடிக்க, பசி அதிகம் ஏற்படும்.சாப்பிட்ட சாப்பாடு, சரியாக செரிமானம் ஆகாமல் இருந்தால், அதை சரி செய்ய, ஒரு டம்ளர் தண்ணீரில், சிறிதளவு ஓமத்தை போட்டு, கொதிக்க வைத்து குடிக்கலாம். சோம்பு எனப்படும் பெருஞ்சீரகத்தில், செரிமானத்திற்கான ரசாயனங்கள் உள்ளன. அதனால், வெறும் சோம்புவை வாயில் போட்டு மென்று, உமிழ்நீரை விழுங்கி, சிறிதளவு தண்ணீர் குடித்தால், வயிற்றுப் பிரச்னைகள் சரியாகி விடும்!

Tuesday, April 28, 2020

தமிழக ரசத்தின் நோய் எதிர்ப்பு: விஞ்ஞானி கணிப்பு thanks to dinamalar.com

தமிழக ரசத்தின் நோய் எதிர்ப்பு: விஞ்ஞானி கணிப்பு

 Updated : ஏப் 27, 2020  Added : ஏப் 27, 2020  கருத்துகள் (59)
Share
224Shares
facebook sharing button
twitter sharing button
whatsapp sharing button
மதுரை: தமிழக உணவுகளில் சேர்க்கப்படும் ரசம், நோய் எதிர்ப்பு சக்தியை வளர்க்க உதவுவதாக விஞ்ஞானி டாக்டர் டி.மாரியப்பன் கணித்துள்ளார்.

மருத்துவ ஆராய்ச்சிக்கான வெக்டர் கட்டுப்பாட்டு ஆராய்ச்சி மையத்தில் (வி.சி.ஆர்.சி) மூத்த இந்திய துணை இயக்குநராக உள்ள விஞ்ஞானி டாக்டர் டி.மாரியப்பன் கூறியதாவது: இந்தியர்கள் உட்பட தென்கிழக்கு ஆசியாவை சேர்ந்தவர்கள் பரம்பரை ரீதியாக நன்கு பாதுகாக்கப்பட்டவர்கள். அவர்கள், வைரஸ் நோய்களுக்கு எதிராக போராட வலுவான, சக்திவாய்ந்த மரபணுக்களை கொண்டுள்ளனர். 2003ல் சார்ஸ் வைரஸ் வெடித்தபோது, மற்ற நாடுகளில் ஏராளமான பாதிப்புகள் இருந்தன. ஆனால் இந்தியா சிறிய அளவிலேயே பாதிக்கப்பட்டிருந்தது. நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் கம்யூனிகபிள் டிசைஸஸ் வெளியிட்ட குறிப்பின்படி, ஏப்ரல் 9, 2003 வரை, இந்தியாவில் சார்ஸால் பாதிக்கப்பட்டதாக எதுவும் பதிவாகவில்லை. மேலும், கோவிட்-19 மற்றும் SARS CoV-2, வைரஸ் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தது.

latest tamil news


சில நோய்களிலிருந்து நாம் பாதுகாக்கப்படுவதில் உணவுப் பழக்கமும் ஒரு பங்கு வகிக்கிறது. தென்னிந்தியாவில், நம் உணவில் ‛ரசம்' சேர்த்து வருகிறோம். அதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் கொண்ட பூண்டு, மிளகு, வெங்காயம் உள்ளிட்ட பொருட்கள் சேர்க்கப்படுவதால் அவை நுரையீரலை பாதுகாக்கின்றன. இது பல வைரஸ் நோய்களுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை வளர்க்க உதவுகிறது. இந்த ரசம், பல ஆண்டுகளாக நம் உணவில் சேர்க்கப்படுகிறது.

மற்ற நாடுகளை ஒப்பிடுகையில், தமிழகம் மற்றும் இந்தியாவில் இறப்பு எண்ணிக்கை மிகக் குறைவு தான். அதேபோல், தொற்று பாதிப்பு அதிகரிக்க புவியியல் இருப்பிடமும் ஒரு பங்கு வகிக்கிறது. அதாவது, மக்கள்தொகை அடர்த்தியான நகர்ப்புறங்களில் தொற்று பரவ அதிக வாய்ப்புள்ளது, மக்கள்தொகை குறைவான நாகப்பட்டினம், ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களில் குறைவான பாதிப்பு இருக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்

'ஆயுஷ் குடிநீர்' : இந்த நான்கு பொருட்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்! thanks to dinamalar.com

செய்தி 

இந்தியா

'ஆயுஷ் குடிநீர்' : இந்த நான்கு பொருட்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்!

 Up
 6
புதுடில்லி: மத்திய ஆயுஷ் அமைச்சகம் கொரோனா வைரசுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க துளசி, இலவங்கப் பட்டை, சுக்கு, மிளகு ஆகியவை சேர்த்த 'ஆயுஷ் குடிநீரை' உருவாக்கியுள்ளது. பவுடர் மற்றும் மாத்திரை வடிவில் கிடைக்கும் இதற்கு பிரதமர் மோடியும் ஒப்புதல் தந்துள்ளார்.

துளசி நான்கு பங்கு, சுக்கு இரண்டு பங்கு, இலவங்கப்பட்டை இரண்டு பங்கு, மிளகு ஒரு பங்கு என்ற வீதத்தில் சேர்த்து இந்த மூலிகைப் பொடியை ஆயுஷ் அமைச்சகம் தயாரித்துள்ளது. 'கொரோனா வைரஸ் பரவும் சமயத்தில், நோய் எதிர்ப்பு சக்தியின் முக்கியத்துவத்தை உணர்ந்து தயாரித்துள்ள இந்த மூலக்கூறை, பயன்படுத்தி மூலிகை பொடியை தயாரிக்க ஆயுர்வேத, சித்த மற்றும் யுனானி மருந்து நிறுவனங்களுக்கு மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் ஒப்புதல் அளிக்க வேண்டும்.' என ஆயுஷ் அமைச்சகம் கூறியுள்ளது.

latest tamil news


துளசி, சுக்கு, இலவங்கப்பட்டை, மிளகு ஆகிய நான்கு பொருட்களை கொண்டு வீட்டிலேயே ஆயுஷ் குடிநீர் பொடியை தயாரிக்கலாம் என்றும் அரசின் விளம்பரத்தில் கூறப்பட்டுள்ளது. 150 மில்லி கொதிக்க வைத்த நீரில், இப்பொடியை 3 கிராம் அளவு கலந்து தினசரி காலை, மாலை வேளைகளில் குடிக்கலாம். சுவைக்காக வெல்லம் அல்லது எலுமிச்சை சாறு சேர்த்து பருகலாம். நோயெதிர்ப்பு சக்தி பெருகும் என்கின்றனர். ஞாயிறன்று மன் கி பாத் வானொலி உரையில் மோடி, ஆயுஷ் சுகாதார அமைப்பின் பயன்பாட்டினை வலியுறுத்தினார். கொரோனா தொற்றுக்கு மத்தியில் உலக முழுவதும் மக்கள் ஆயுர்வேதம் மற்றும் யோகா மீது கவனம் செலுத்தி வருவதாக கூறினார்.

Monday, April 27, 2020

மனிதனின் முப்பது கடமைகள்! thanks to tamil and vedas


மனிதனின் முப்பது கடமைகள்! (Post No.7887)

by Tamil and Vedas
WRITTEN BY S NAGARAJAN                     
Post No.7887
Date uploaded in London – – 27 April 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures
ச.நாகராஜன்
நாரதர் கூறிய 30 கடமைகள்
தர்மபுத்திரருக்கு ஒரு முறை தர்ம சம்பந்தமான சில சந்தேகங்கள் எழுந்தன. தனது சந்தேகங்களைத் தீர்க்க வல்லவரான நாரதைரை அவர் தரிசித்தார்.
நாரதரிடம் தனது சந்தேகங்களைக் கேட்க அவர் ஒவ்வொன்றாக விளக்குகிறார்.
பாகவதத்தில் ஏழாவது ஸ்கந்தத்தில் பதினொன்றாம் அத்தியாயத்தில் பல்வேறு தர்மங்கள் நாரதரால் விளக்கப்படுகின்றன.
தர்ம ரகசியத்தை எனக்கு விளக்கி அருள்வீராக என்று யுதிஷ்டிரர் கேட்க நாரதர் விளக்கும் ஒரு பகுதியாக மனித வாழ்வில் ஒவ்வொரு மனிதனும் சாதாரணமாய் அனுஷ்டிக்க வேண்டிய முப்பது கடமைகள் விளக்கப்படுகிறது.
அந்த முப்பது கடமைகளாவன:-
1) அனைத்துப் பிராணிகளுக்கும் இதம் செய்வதாகிய ஸத்யம்
2) பிறர் துக்கம் கொண்டு பொறுக்காமல் இருக்கும் தயை
3) உபவாசம் முதலிய தவம்
4) பொறுமை
5) விவேகம்
6) உள்ளே இருக்கும் இந்திரியமான மனத்தை அடக்குதல்
7) வெளி இந்திரியங்களை, அதாவது புலன்களை, அடக்குதல்
8) மனோ வாக்கு காயங்களால் மற்றவர்களுக்குத் துன்பம் இழைக்காமை
9) தகாத காலங்கள் பெண்களுடன் உடலுறவு கொள்ளாமை
10) லோபம் இல்லாமை
11) முறைப்படி மந்திர ஜபம் செய்தல்
12) மனோ வாக்கு காயங்கள் ஒன்றாக இருத்தல்
13) தெய்வாதீனமாய் ஏற்பட்டிருக்கும் அன்னம் முதலியவற்றால் மகிழ்ச்சியுற்றிருத்தல்
14) எல்லாவற்றையும் பரப்ரஹ்ம ஸ்வரூபம் என்று சமமாய்ப் பார்க்கும் பெரியோர்களைப் பணிதல்
15) ப்ரவிருத்தி கர்மங்களிலிருந்து மீளுதல்
16) பயனற்ற காரியங்களைச் செய்யலாகாது என்று நிரூபித்து நிர்ணயித்தல்
17) வீண்பேச்சுப் பேசாமல் மிதமாகப் பேசுதல்
18) தேகத்தைக் காட்டிலும் விலக்ஷணனான ஆத்மாவின் சொருபத்தை ஆராய்தல்
19) பிராணிகளுக்கு உரியபடி அன்னம் முதலியவற்றைக் கொடுத்தல்
20) அனைத்து பூதங்களிலும் ஆத்மாவும் பரமாத்மாவும்
அமைந்திருக்கின்றார்கள் என்ற நினைவு கொண்டிருத்தல்
21) அனைத்து பூதங்களும் தன்னைப் போன்றவை என்றும், பரப்ரம்ம சொரூபங்கள் என்றும் பாவித்தல்
22) மனிதரிடத்தில் அந்த நினைவு எப்போதும் மாறாது நிறைந்திருத்தல்
23) பெரியோர்கள், “நமக்கு இவனே கதி” என்று பாவித்து வணங்கும் பகவானுடைய குணங்களைக் கேட்டல்
24) பகவானுடைய நாமங்களைக் கீர்த்தனை செய்தல்
25) அவனது சொரூப ரூப குண விபூதிகளை நினைத்தல்
26) அவன் பாதங்களைப் பணிதல்
27) அர்க்யம் , பாத்யம் முதலியன கொடுத்து அவனை ஆராதித்தல்
28) அவனை வணங்குதல்
29) அவனுக்கு எல்லாவிதத்திலும் அநுகூலனாய் இருத்தல்
30) அவனிடத்தில் ஆத்ம சமர்ப்பணம் செய்தல்
இந்த முப்பதும் மனிதர்கள் அனைவரும் சாதாரணமாக அனுஷ்டிக்க வேண்டிய மேலான தர்மம் என்று நாரதர் யுதிஷ்டிரருக்கு விளக்கி அருளுகிறார்.
*
Truthfulness, compassion, austerity and cleanliness [with the vidhi]; tolerance, discrimination, composure and continence, nonviolence, celibacy, generosity and study of the scriptures, sincerity, contentment and to serve the holy souls [in yama and niyama]; gradually cutting with that what is unnecessary and to be of gravity in avoidance of empty talk, self-search, to share food and drink with all beings and to consider everyone first of all a part of God, oh Pândava; to listen and to sing as also to remember Him who is the shelter of all the great souls, to attend, to worship and to propitiate, to be a servant, to be a friend and to be of surrender [in bhâgavata dharma]; to possess all the thirty characteristics as described constitutes the supreme of dharma that pleases Him, the Soul of All, oh King [compare B.G. 12: 13-20].
*
இன்னொரு ஆங்கில மொழிபெயர்ப்பு : செய்தவர் :
 An Unknown Servant
Thirty Items of Man’s Duty
Truth,
Compassion,
Austerities,
Purity,
Endurance,
Discrimination between right and wrong,
Control over the mind and senses,
Non-violence,
Practice of Brahamacharya,
Renunciation of prohibitory acts and of part of one’s earning for charity,
Study of the Vedas and practices of Japa and Kirtana of the Divine Name,
Contentment,
Service of saints who regard all as equal,
Gradual withdrawal from worldly enjoyments,
Reflection on the failure of man’s egoistic efforts,
Introspection,
Meditation on the Self,
Equitable distribution among creatures of food-grains and other necessary things,
Looking upon all beings and especially men as the Self or as the Deity,
Hearing,
Loud chanting and constant remembrance of the Name and virtues of Bhagavan Sri Krishna,
The Supreme refuge of saints,
Offering of Service,
Adoration and salutations to Him,
Cultivation of the servant or friendly sentiment towards Him,
And surrender of the Self to Him,
All these are the highest Dharma of men.
Observance if these thirty items of Dharma propitiates God, the soul of the Universe.
*
நாத்திகம் பற்றி பாகவதம்!
கடவுளை நினைக்காமல் அவனிடமிருந்து தள்ளி இருக்கும் மனிதனுக்கு என்ன நடக்கும் ?
இப்படி விதேஹ மன்னனான ஜனகன் கேட்க அவன் முன்னே கூடி இருந்த ஸாதுக்களில் ஒருவர் இப்படி பதில் அளிக்கிறார் :- (அதாவது ஒரு நாத்திகனுக்கு என்ன நடக்கும் என்பதே ஜனக மன்னனின் கேள்வி!)
தர்ம சூட்சுமத்தை அறியாத மூடர்கள் வணக்கமின்றித் தங்களைத் தாங்களே புத்திசாலிகளாக நினைத்துக் கொண்டு ‘நமக்கு என்ன நேருமோ’ என்ற சந்தேகமே இல்லாமல், ‘நமக்கு ஒரு கெடுதியும் இல்லை’ என்ற பெரிய நம்பிக்கை உடையவர்களாகி பிராணிகளுக்குத் தீங்கை இழைக்கின்றனர்.
அந்தப் பிராணிகள் மேலுலகம் சென்ற பின்னர் தங்களுக்குத் தீங்கை இழைத்த துரோகிகள் அங்கு வரும் போது அவர்களுக்குத் தீங்கைச் செய்கின்றன. மேலும் அந்த மூடர்கள் பிறருடைய தேகங்களில் வெறுப்பு கொண்டு அபிசாரம் முதலிய கொடிய செயல்களைச் செய்கின்றனர். அந்த வெறுப்பானது தங்களுக்கும் பிறர்க்கும் அந்தராத்மாவாய் இருக்கும் துக்கங்களைப் போக்கும் பரம புருஷனிடத்திலேயே போய்ச் சேரும் என்பதால் அவர்கள் அவனையே வெறுத்தவர்கள் ஆகிறார்கள்.
மேலும் அவர்கள் பிள்ளை பெண்டிர் போன்ற  இணைப்பைக் கொண்டதும்  பிணம் போன்றதுமாகிய தேகத்தில் சிநேகம் கொண்டு அதில் வேரூன்றப் பெற்று நரகத்தில் விழுகிறார்கள்.
வாசுதேவனை நினைப்பவர்கள் நல்ல கதியை அடைய அப்படி இறைவன் நினைப்பு இல்லாதவர்கள் தீய கதியையே அடைகின்றனர்.
இந்த விடையால் ஜனகன் தெளிவு பெறுகிறான்.
****
இப்படி ஏராளமான கேள்விகளை ஒன்றன் பின் ஒன்றாக ஜனகன் பெரும் மகான்களின் முன் வைக்க அவனுக்கு உரிய விடைகள் கிடைக்கின்றன.
பாகவதம் தரும் ஏராளமான அற்புத விளக்கங்களை பதினொன்றாம் ஸ்கந்தம் நான்காம் அத்தியாயத்தில் காணலாம்.
****

Tuesday, April 21, 2020

3000 ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள்! – Part Two (Post No.7850) thanks to tamil and vedas

st] 3000 ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள்! – Part Two (Post No.7850)
Yahoo/Inbox
  • Tamil and Vedas <comment-reply@wordpress.com>
    To:theproudindian_2000@yahoo.co.in
    Mon., Apr. 20 at 4:02 a.m.
    Respond to this post by replying above this line

    New post on Tamil and Vedas

    3000 ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள்! – Part Two (Post No.7850)

    by Tamil and Vedas
    WRITTEN BY LONDON SWAMINATHAN
    Post No.7855
    Date uploaded in London – 20 April 2020   
    Contact – swami_48@yahoo.com
    Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
    ராமாயண , மஹாபாரதம்
    ராமாயணத்தில் கபாடபுரம் என்ற இடை ச்சங்க கால நகரம் குறிப்பிடப்படுகிறது. மேலும் ராமன் இலங்கை வரை வந்துள்ளார். அங்கே ஒரு ஆட்சியும் நடந்து இருக்கிறது. ஆக இலங்கையில் ஆட்சி நடந்த போது தமிழ் நாட்டில் ஒரு அரசு இல்லாமலா போயிருக்கும்? ஆனால் ராவணன்- அகத்தியன் இசைப்போட்டி கதைகள் எல்லாம் பிற்கால எழுத்துக்களில்தான் உள்ளன. ஆகையால் இவைகளை வரலாறு என்று ஏற்பது இல்லை.
    ராமர் வந்தது உண்மையே. கிஷ்கிந்தா என்னும் குகை நிறைந்த  கர்நாடகா ஹம்பி நகர குகைப் பகுதியில்  அரைகுறை (Semi Civilized) நாகரிக நிலையில் இருந்த வாலி, சுக்ரீவன், அனுமனை சந்தித்ததும் உண்மையே . அவர்கள் குரங்கு சின்னங்களை அணிந்ததால் பிற்காலத்தில் அவர்களைக் குரங்கு போல சித்தரித்து எழுதிவிட்டனர்.
    மஹா பாரதத்தில் அர்ஜுனன் தென்னகம் வந்தது, சித்ராங்கதை என்னும் அல்லி ராணியை மணந்தது , பாண்டிய மன்னன் ஆட்சி ஆகிய குறிப்புகள் உள . இருந்தபோதிலும் இராமாயண மஹாபாரத்தக் குறிப்புகள் பிற்காலத்தில் சேர்க்கப்பட்டிருக்கலாம் என்றும் சொல்லலாம். இந்துக்களுக்கு ஒரு குணம் உண்டு. வேத கால இலக்கியாயத்தில் மட்டும் கை வைக்கமாட்டார்கள் மற்ற எல்லா நூல்களையும் அப்டேட் UPDATE செய்துவிட்டனர் . ஆகையால் இவைகளையும் ஒதுக்கிவிடலாம். ஏனெனில் அவை குறிப்பிடும் காலங்கள் கி.மு. 3100 மற்றும் அதற்கு முன் நடந்தவை என்று காட்டுகின்றன . நமக்கு வரலாற்று, தொல்பொருள் ஆதாரம் இல்லை.
    இதற்குப் பின்னர் தர்ம சாஸ்திரங்கள் வந்தன. மனு நீதி நூல் முதலியன தெற்கில் வாழ்ந்த திராவிடர்களைக் குறிப்பிடுகின்றன. வேத நூல் இயம்பும் சடங்குகளைப் பின்பற்றாத  50 பிள்ளைகளை விஷ்வாமித்திரர் தென்னக த்துக்கு நாடு கடத்தியதாகவும் அவர்களே திராவிடர், யவனர், சகரர், ஹுனர், சூத்திரர்கள் என்றும் பிற்கால நூல்கள் உரைக்கின்றன . அதாவது க்ஷத்ரிய நிலையில் இருந்து தாழ்ந்து சூத்திரர் ஆனவர்கள். விஸ்வமித்ரரோ க்ஷத்திரியனாகப் பிறந்து பிராமணன் ஆக மாறி ‘வசிஷ்டர்  வாயால் பிரம்மரிஷி’ பட்டம் பெற்றவர்.
    ஆனால் தர்ம சாத்திரங்கள் அவ்வப்போது அப்டேட் UPDATE செய்யப்பட்டவை. 1950-ல் அம்பேத்கார் தலைமையில் எழுதப்பட்ட அரசியல் சட்டத்தையே நாம் ஆண்டுதோறும் பார்லிமெண்ட் திருத்தங்கள் மூலம் அப்டேட் UPDATE (CONSTITUTIONAL AMENDMENTS) செய்கிறோம்.
    கி.மு.700-ல் தமிழர்கள் தலையில் பூ!
    ஆயினும் கி.மு 700 என்று கணக்கிடப்படும் போதாயன தர்ம சூத்திரம் முதலியவற்றில் ‘தென்னிந்திய தட்சிணபதம்’ (Grand South Road) , ‘தலையில் பூச்சூடும்  வழக்கம்’ முதலியன வருவதால் அப்போது தென் இந்தியாவில் நாகரீகமுள்ள மக்கள் வாழ்ந்தது உறுதியாகிறது.
    பாணினி சூத்திரம்
    சுமார் 2700 ஆண்டுகளுக்கு முன்னர் உலகின் முதல் இலக்கண புஸ்தகத்தை - அஷ்டாத்யாயியை -- எழுதிய பாணினி , மிளகு பற்றிக் குறிப்பிடுகிறார். கிரேக்க ஹெரோடோட்டஸ் போன்றோர் அரிசியைக் குறிப்பிடுகின்றனர். ஆக 2700 ஆண்டுகளுக்கு முன்னர் தென்னகம் மிளகு அனுப்பியதை ஊகித்தறியலாம்  கோதாவரி வரை அஸ்மாக நாடு இருந்த குறிப்புகளும் உள . ஆனால் ராமர் போல கடற்கரை ஓரமாக நடந்து வந்தனரா அல்லது காடுகள் அடர்ந்த தண்டகாரண்யத்தையும் விந்திய மலையையும்கடந்து வந்தனரா ?
    இதற்குப் புராணத்தில் விளக்கம் இருக்கிறது.
    புராணங்கள் அனைத்திலும் மூன்று முக்கிய விஷயங்கள் அகத்தியரைப் பற்றி வருகின்றன.
    1.வடக்கில் ஜனத்தொகை பெருகியது. (Population Explosion in North India) ஆகையால் சிவன் அவரைத் தெற்கே அனுப்பினார். அவர் 18 குடிகளை தன்னுடன் அழைத்து வந்ததாக பிற்காலத்தில் தமிழ் உரை ஆசிரியர்களும் எழுதினார்கள். உலகில் முதல் ஜனத்தொகைப் பிரச்சினை பற்றிய குறிப்பு இதுதான் .
    2. அகத்தியர் விந்திய மலையை ‘கர்வபங்கம்’ செய்தார். நான் திரும்பிவரும் வரை தலை நிமிரக்கூடாதென்றார் . ஆனால் திரும்பி வரவே இல்லை. இதன் பொருள் முதல் முதலில் ஒழுங்கான சாலைப் பாதை அமைத்த என்ஜினீயர் (Engineer)  அகஸ்தியர். கர்வ பங்கம் என்பது மலையை மட்டம் தட்டுவது. பிற்காலத்தில் கி.மு மூன்றாம் நூற்றாண்  டில் இந்த வழியாக மௌரியப் படைகள் சாலை அமைத்து தென்னகத்துக்கு வந்ததை மாமூலனாரும் சங்க இலக்கியப் பாடல்களில் பாடி இருக்கிறார்.
    3.அகஸ்தியர் கடல் நீரைக் குடித்தார் என்று புராணங்கள் செப்பும். அதாவது முதல் முதலில் தமிழர்களைக் கடல் கடந்து அழைத்துச் சென்று தென் கிழக்காசிய நாடுகளில் இந்து நாகரீகத்தை நிலை நாட்டினார் என்பதை கடலைக் குடித்தார் என்று புராணங்கள் மொழியும்.
    வடக்கில் இமய மலையைத் தகர்த்து கங் கை நதி நீரை உத்தரப் பிரதேசத்துக்குள் திருப்பிவிட்ட உலக மஹா என்ஜினீயர் பகிரதன் போனறவர் அகஸ்தியர் . அதே பாணியில் கேரளக் கடலில் விழுந்து வீணாகி வந்த காவிரி நதியை தமிழ் நாட்டுக்குள் திருப்பிவிட்டார். அடர்ந்த தண்டகாரண்ய காடுகளை சீர்படுத்தி விந்திய மலையை மட்டம்தட்டி சாலை அமைத்தது அகஸ்தியரை மஹா பெரிய (Great Civil Engineer) சிவில் என்ஜினியர் என்றும் ஸ்ரீ மாறன் என்ற பாண்டியனை வியட்நாமுக்கு அழைத்துச் சென்று முதல் இந்து ஆட்ச்சியை நிறுவியதால் சிறந்த ‘மரைன் எஞ்சினியர்’ (Great Marine Engineer)  என்றும் காட்டுகிறது.
    அதுமட்டுமல்ல. அவர் பெரிய மொழியியல் (Great Linguist)  வித்தகர். ஆகையால் அவரை அழைத்து ‘தமிழ் மொழிக்கு புதிய இலக்கணம் செய்’ என்று சிவபெருமான் கட்டளையிட்டு தன் மகன் முருகனை அழைத்து ‘இவருக்குத் தமிழ் கற்பி’ என்றும் கட்டளையிட்டார். இதை பாரதியார் பாடல்வரை பல நுல்களிலும் காண்கிறோம் .
    அகஸ்தியரின் காலம் என்ன?
    அகஸ்தியர், குட முனி, கும்ப முனி, தமிழ் முனிவன் போன்றவற்றை கம்பராமாயணம் ஆகியவற்றில் காண்கிறோம். ஆயினும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சங்க இலக்கியத்தில் அவர் வாழ்ந்த பொதிய மலையையும் இமய மலையையும் ஒரே இடத்தில் ஒப்பிட்டுப் புற நானுற்றுப் புலவர் பாடுவதால் அது அகஸ்தியர் பற்றியதே என்று கருதலாம். பிற்காலத்தில் நச்சினார்க்கினியர் முதலிய உரைகாரர்கள் அகத்தியன்-- பாண்டியன் -- இராவணன் ஆகியோரை தொடர்புபடுத்தி கதைகள் புனை ந்துள்ளனர் . இவைகளுக்கு வரலாற்று, தொல்பொருட் துறை சான்றுகள் கிடைக்கும் வரை நம்புதற்கில்லை.
    ஆனால் பாண்டியர் செப்பேடுகளும் கல்வெட்டுகளும் அகஸ்தியரைக் குறிப்பிடுகின்றனர். 2200 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த காளிதாசன்தான் (Second Century BCE) முதல் முதலில் பாண்டிய மன்னரையும் அகஸ்தியனையும் தொடர்புபடுத்தி சம்ஸ்கிருதத்தில் கவிபாடியுள்ளார்.
    இப்பொழுது நாம் சங்கராச்சார்யார்கள், போப்பாண்டவர்கள் , தலாய் லாமாக்கள் என்று பரம்பரை பரம்பரையாக (Titles) அழைப்பது போல, அகஸ்திய கோத்திரத்தில் வந்த அத்தனை பெயரையும் அகஸ்தியர் என்றே எழுதினர் .
    அப்படியானால் முதல் அகஸ்தியர் யார்? புறநானுற்றுப் பாடலில் கபிலர் இருங்கோவேள் என்னும் மன்னரைப் பாடுகையில் “உன்னைத் தெரியாதா, என்ன? நீ உன் வம்சத்தில் வந்த 49 ஆவது மன்னர் என்பதும் எனக்குத் தெரியும்” என்று பாடுகிறார். கபிலர் பாடியது 2000 ஆண்டுகளுக்கு முன்னர். ஒரு தலைமுறைக்கு 20 முதல் 25 ஆண்டு கொடுப்பது உலக வழக்கு. அதன்படி அவருக்கு 1000 ஆண்டுகளுக்கு முன்னர் அவருடைய முன்னோர் தமிழ் நாட்டுக்கு வந்திருக்க வேண்டும். அப்படியானால் கி.மு. ஆயிரத்தில் (1000 BCE) அகஸ்தியர் வந்தார். ஏனெனில் இப்பாட்டுக்கு உரை எழுதியோர் அகஸ்தியர் தலைமையில் 18 இன மக்கள், அதாவது 18 குடிகள் தமிழ் நாட்டுக்குள் (3000 ஆண்டுகளுக்கு முன்னர்) வந்தனர் என்கின்றனர்  . அதற்கு முன்னரும் மனிதர்கள் வாழ்ந்தது பழங்கற்கால, புதிய கற்கால கருவிகள் மூலம் (Palaeolithic, Neolithic Tools)  தெரிகிறது. நாம் பேசுவதெல்லாம் தமிழர் நாகரீகம் (Civilized Tamils) பற்றிப்பேசுவதாகும்.
    மஹாவம்சமும் சங்க இலக்கியமும்
    இலங்கை வரலாற்றை மஹாவம்சம் என்னும் பாலி மொழி நூல் பகரும். பிராமணர்களும் க்ஷத்ரியர்களும் பெரிய தவறு செய்தாலும் மரண தண்டனை கிடையாது. ஆனால் நாடு கடத்தி விடுவார்கள். வங்காளத்தில் துஷ்டத்தனம் செய்த விஜயனைக் கப்பலில் ஏற்றி நாடு கடத்தியபோது அவன் 2600 ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையில் கரை இறங்கினான். அங்கு குவேனி என்ற நாக கன்னிகை அரசாண்டாள் . அவளை மணந்தால் அது க்ஷத்திரிய வம்சத்துக்கு ஒவ்வாது என்றும் அருகிலுள்ள பாண்டிய நாட்டில் பெண் எடுப்பதே நலம் என்றும் பிராமணர்கள் ஆலோசனை வழங்கினர் . உடனே மதுரை மாநகரில் தண்டோரா போட்டு “மன்னரை மணக்க பெண்கள் தேவை” என்று அறிவித்தனர். பாண்டிய மன்னன் தன் மகளையும் மந்திரிகள் தங்கள் பெண்களையும் அனுப்பி விஜயன் கோஷ்டியை மணந்து பெங்காலி- தமிழ் கலப்பு இனத்தை உருவாக்கியது இவர்களே சிங்களவர்கள். இது மஹா  வம்சம் சொல்லும் செய்தி. அதில் குறிப்பிடப்படும் ‘பாண்டியர் மதுரை’ கடலில் மூழ்கிய தென் மதுரையாக இருக்கவேண்டும் . ஆக 2600 ஆண்டுகளுக்கு முன்னர் பாண்டிய ஆட்சி தென்னாட்டில் புகழுடன் விளங்கியது தெரிகின்றது
    காளிதாசன் எழுத்துக்குப் பின்னர் வந்த மகாவம்ச எழுத்தைக் கண்டோம் (Mahavamsam ‘written’ later). இதற்கிடையில்  சந்திர குப்த மௌரியன் ஆட்சி காலத்தில்  இருந்த மெகஸ்தனீஸ் என்ற கிரேக்க தூதனும் மதுரையில் ‘பாண்டேயா’ என்ற மஹாராணி இருந்ததாக, ‘இண்டிகா’ என்னும் நூலில்  எழுதிவைத்துள்ளார். அது பாண்டிய ராணி மீனாட்சி அம்மனின் கதை என்பது அறிஞர் பெருமக்களின் துணிபு.
    சங்க இலக்கியத்தில் ‘பெருஞ்சோறு’
    இதற்குப்பின் எழுந்த சங்க இலக்கியத்தில் இமயமலை, கங்கை பற்றி சுமார் 20 குறிப்புகள் இருப்பதால் அவர்களுக்கு இமயம் முதல் குமரி வரை தெரிந்து இருந்ததை நாம் அறிந்து கொள்கிறோம். அங்கே சில கதைகள் பேசப்படுகின்றன . ஒரு சேர மன்னன் பாண்டவர் படைக்கும் , கவுரவர் படைக்கும் சோறு கொடுத்ததாக உரை கார்கள் எழுதியுள்ளனர். செய்யுளில் வரும் சொல் பெருஞ்சோறு’ என்பதாகும். தமிழர்கள் மகாபாரதம் நிகழ்ந்த கி.மு.3138 ஆம் ஆண்டு ஆட்சி செய்தற்கான சான்றுகள் இல்லை. மாபாரதப் போரே கி.மு.1500 என்று சொல்லும் அளவுக்குத்தான் தொல்பொருட்துறை சான்றுகள் கிடைக்கின்றன. ஆகவே பெருஞ்சோறு என்பது அவர் நினைவாக படைக்கப்படும் படையலாக இருக்க வேண்டும். இப்போதும்கூட சைவ நாயன்மார்கள் சிவபதம் எழுதிய குருபூஜை நாட்களில் தமிழர் கோவில்களும் மடங்களும் அன்னதானம் செய்வதைப் பார்க்கிறோம்
    மூன்று தமிழ்ச் சங்கங்கள் 10, 000 ஆண்டு வீச்சில் இருந்தது என்பது  எகிப்திய சுமேரிய நாகரிகங்களை எல்லாம் சாப்பிட்டு ஏப்பம் விடுவதை போன்றதாகும் . அதற்குச் சான்று என்பது உலகில் எங்கும் கிடைக்காது. பாபிலோனிய சுமேரிய நாகரிகங்களில் கிடைத்த சொற்களும்  சம்ஸ்கிருத சொற்களே (கபி = குரங்கு , மரிச = மிளகு, துகி =சிகி =மயில் ; அகில்).
    சங்க இலக்கியம் காட்டும் தெளிவான தொடர்பு இத்தாலியின் ரோம் (Roman Contacts) நகருடையதே
    அசோகன் காரவேலன்
    மௌரிய மன்னர் அசோகனின் 2300 ஆண்டுப் பழமையான பிராமி லிபி கல்வெட்டுக்களும் 2130 ஆண்டுப் பழமையான ஒரிஸ்ஸா மன்னன் -- சமண மத ராஜா - காரவேலன் கல்வெட்டுகளும் மூவேந்தர் பற்றிக் குறிப்பிடுவதால் இவற்றையே முதல் தொல்பொருட்துறை (Earliest Historical, Archaeological) சான்று  என்று கற்றறிந்தோர் கொண்டாடுவர்.
    இதற்கு சற்று முந்தைய சாணக்கியனின் -- கௌடில்யரின் -- அர்த்த சாஸ்திர பொருளாதார நூலும் ‘பாண்டிய  கவாடம்’  என்று முத்துக்களைக் குறிப்பிடுவதால் தென்பாண்டி முத்து மகத சாம்ராஜ்யம் வரை புகழ் பரப்பியதை அறிகிறோம்.
    முடிவுரை
    வேத கால இலக்கியம் கரை படாதது- பிறர் கைபடாதது - இடைச் செருகல் இல்லாதது - என்று அறிஞர் உலகம் போற்றுவதாலும்அகஸ்திய முனிவர் இருங்கோவேளுக்கு 49 தலை முறைக்கு முன்னர் தமிழ் நாட்டுக்கு வந்ததை உரைகார்கள் செப்புவதையும் கொண்டு  3000 ஆண்டுக்கு முன் தமிழர்கள் என்று புஸ்தகம் எழுத முடியும். பாணினி சொல்லும் மிளகும்ஹெரொடோரோட்டஸ் சொல்லும் அரிசியும். போதாயனர் சொல்லும் தமிழர்களின் தலைகளில் சூடும் பூவும், கௌடில்யர் சொல்லும் கபாட முத்தும் இதற்குத் துணையாக நிற்கும்.
    ஒரு காலத்தில் சிந்து-சரஸ்வதி முத்திரைகளை எவரேனும் படித்தாலும் அது சம்ஸ்கிருத - தமிழின் மூல மொழியாக இருக்குமேயன்றி நாம் அறிந்த தமிழ்சம்ஸ்கிருதமாக இராது என்பதே நான் கண்ட உண்மை.
    வாழ்க  தமிழ்.
     tags - 3000 ஆண்டு, தமிழர்கள், part 2
    --சுபம்---