Tuesday, August 25, 2020

மண் வீடுகள் thanks dinamalar

 


Shares
facebook sharing button
twitter sharing button
whatsapp sharing button

இன்று நாம் நாகரிகம் என்ற பெயரில் இயற்கையை அழித்து பழமையை மறந்து வருகிறோம். இதனால் மண் வீடுகள் போன்ற மரபு சார்ந்த பாரம்பரிய வீடுகளை இழந்து விட்டோம். பாரம்பரியத்தை விரும்புவோருக்கு அதை மீட்கும் வகையில் பழங்கால மண் வீடுகளை கட்டிக்கொடுக்கிறார் இளம் கட்டடக்கலை நிபுணர் ஸ்ரீபு.

சொந்த ஊர் கோவை. கட்டடக்கலை படித்த இவர், நவீன பெண்ணாக இருந்தாலும் பழமையை பாதுகாப்பதில் ஆர்வமுள்ளவர். இயற்கைக்கு கெடுதி நினைக்காமல், இரும்பு, சிமென்ட் இன்றி மண், சேறு, சுட்ட கல், சுண்ணாம்பு கொண்டு பழமை மாறாது, நவீனமாக கட்டித்தருகிறார். அழகுக்கு மஞ்சள், வேப்பிலை, கடுக்காய், வெல்லம் கலந்த 'இயற்கை பூச்சு' செய்வதால் வீடு நோய் எதிர்ப்பு சக்தியுடன், கோடையில் குளிராகவும், குளிர் நேரம் வெதுவெதுப்பாக உள்ளது. சிமென்ட் வீடுகளை காட்டிலும் மண் வீடு கட்ட செலவு குறைவுதானாம்.

மும்பை, கோவை, திண்டுக்கல், கொடைக்கானலில் மண் வீடு, மூங்கில் வீடுகளை கட்டிக் கொடுத்திருக்கிறார்.தையல், துணிக்கடைகளில் வீணாகும் துணிகளை சேகரித்து கம்மல், வளையல், அலங்கார பொருட்களாக மாற்றி, இன்ஸ்டாகிராமில் 'அந்தாதி' என்ற பக்கத்தின் மூலம் பிசினஸ் செய்கிறார். வீசியெறியும் கந்தல் துணிகளையும் தானமாக பெற்று, கண்கவர் ஆபரணங்களாக்கி அசத்துகிறார். இந்த ஆபரணங்களுக்கு நல்ல வரவேற்பு இருப்பதால் பிசியான 'பிசினஸ் உமன்' ஆக வலம் வருகிறார்.

ஸ்ரீபு கூறியது: நாம் வசிப்பதற்காக இயற்கையை அழிக்க கூடாது. இயற்கை வாரி வழங்கிய மண்ணால் வீடு கட்டித்தான் நம்முன்னோர் வாழ்ந்தனர். இன்றும் அந்த வீடுகள் கம்பீரமாக நிலைத்து நின்று, கான்கிரீட் வீடுகளுக்கு சவால் விடுகின்றன. நாகரிகத்தை தேடும் நேரத்தில் நம் பாரம்பரியத்தை மறந்து விடுகிறோம்.

மரபு வீடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துகிறேன். வீடு கட்டும் முறை குறித்து மாணவருக்கு பயிற்சியும் அளிக்கிறேன்.பகுதிநேரமாக வீணாகும் துணிகளில் ஆபரணங்கள் செய்து ஆன்லைனில் விற்கிறேன். கொரோனா காலம் என்பதால் பிசினஸை கொஞ்சம் மாற்றி மூலிகை மாஸ்க், கிளவுஸூம் தயாரிக்கிறேன், என்றார்.

இவரை வாழ்த்த shrisha7.ss@gmail.com

Monday, August 17, 2020

சரியான வயதில் திருமணம் செய்வது thanks to dinamalar.com

 ''சரியான வயதில் திருமணம் செய்வது, வாழ்க்கை முறை, உணவு முறைகளை சரியாக பின்பற்றுவதன் வாயிலாக, குழந்தையின்மை பிரச்னைக்கு தீர்வு காணலாம்,'' என்கிறார் மகப்பேறு மற்றும் செயற்கை கருவூட்டல் சிறப்பு மருத்துவர் லட்சுமி கிருபா.


இன்றைக்கு தம்பதியர் மத்தியில், குழந்தை பேறு இல்லாமை அதிகரிக்க காரணம் என்ன?
கடந்த, 10,15 ஆண்டுகளாகதான், இந்த எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. அதற்கு காரணம் முன்பு, 20 அல்லது 25 வயதில் பலருக்கு திருமணம் ஆகிவிடும். இந்த வயது தம்பதிகளுக்கு குழந்தை உண்டாவதில் பிரச்னை வராது. இப்போது, 30 அல்லது 35 வயதில் திருமணம் செய்கின்றனர். பெண்களை பொறுத்தவரை, 30 வயதுக்கு மேல், கர்ப்பம் தரிப்பது சிரமம்.
குறிப்பிட்ட வயதுக்கு மேல், கருமுட்டை உற்பத்தியும், எண்ணிக்கையும் குறைந்து விடும். உதாரணமாக, 25 வயதுள்ள ஒரு பெண்களுக்கு, கருமுட்டைகளின் எண்ணிக்கை, 25 இருந்தால், 35 வயதுள்ள பெண்ணுக்கு, 10 முட்டைகள்தான் இருக்கும். 40 வயது என்றால் ஒன்றிரண்டுதான் இருக்கும். திருமணத்தை சரியான வயதில் செய்து கொள்வது நல்லது.

குழந்தைப்பேறில் சிக்கல் இருப்பதை, எப்படி தெரிந்து கொள்வது?
சாதாரணமாக திருமணம் ஆகி, ஆறு மாதங்களில் குழந்தை உண்டாகி விடும். சிலருக்கு ஓராண்டு கூட ஆகலாம். அதற்கு மேல் தள்ளிப்போனால், டாக்டரை பார்த்து ஒரு, 'ஜெனரல் செக்கப்' செய்து கொள்வது நல்லது.

35 வயது மேல் இயற்கையாக கர்ப்பமாக வாய்ப்பு இல்லையா?
35 வயதுக்கு மேல் என்றால், ஸ்கேன் செய்து உற்பத்தியாகும் கருமுட்டைகளில் எண்ணிக்கை, மாதவிடாய் சரியாக இருக்கிறதா என பார்க்க வேண்டும். அதிர்ஷ்டவசமாக ஒரு சிலருக்கு, முட்டைகள் போதிய அளவு இருக்கும். 35 வயதுக்குள் குழந்தை பெற்றுக்கொள்வது நல்லது.

குழந்தையின்மைக்கு ஆண், பெண் இருவரில் யார் காரணம்?
இந்த குறைபாடு, 40 சதவீதம் பெண்களிடம் உள்ளது என்றால், அதே, 40 சதவீத குறைபாடு ஆண்களிடமும் உள்ளது. 20 சதவீதம் பேருக்கு, விவரிக்க முடியாத காரணங்களால் கருத்தரித்தல் இருக்காது. ஆண்களுக்கு, புகைப்பிடித்தல், அதிக மது பழக்கம் இருந்தாலோ, சிறுவயதில் அம்மை நோயால் தாக்கப்பட்டு இருந்தாலோ, அந்தரங்க இடத்தில் 'வெரிக்கோ பீல்' இருந்தாலோ குறையும். இருவருக்கும் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இல்லாவிட்டாலும் பிரச்னைதான்.

குழந்தை இன்மை சிக்கல் தீர, வாழ்க்கை முறை மற்றும் உணவு முறையில் என்ன மாற்றங்கள் தேவை?
வாழ்க்கை முறையும், உணவு முறையும் சரியாக இருந்தால், குழந்தை பிறப்பதில் சிக்கல் வராது. கெட்ட பழக்க வழக்கங்கள் இருப்பதால் தான், ஆண்களுக்கு உயிரணு எண்ணிக்கை குறைகிறது. தாம்பத்திய வாழ்க்கைக்கு ஆரோக்கியமான உடல், சத்தான உணவு முக்கியம். புரோட்டீன், விட்டமின் சத்து அதிகம் தேவை. உணவு தட்டில் கிரீன், ரெட், எல்லோ என, கலர்புல்லான உணவு ஐட்டங்கள் இருக்க வேண்டும். பாதம் பருப்பு, வால்நட்ஸ் நல்லது. தினசரி ஏதோ ஒரு உடற்பயிற்சி அவசியம்.

இளம் தம்பதிகள் குழந்தை பெற்றுக்கொள்வதை தள்ளிப்போடலாமா?
புதிதாக கல்யாணம் ஆனவர்கள், தள்ளிப்போடுவதால் பிரச்னை வராது. லேட் மேரேஜ் செய்தவர்கள் தள்ளிப்போட்டால் பிரச்னை வரும்.

செயற்கை கருத்தரிப்பு முறையில், ஏற்பட்டுள்ள நவீன மாற்றங்கள் என்ன?
போதுமான விந்தணு இல்லாதவர்களிடம், இன்ஜெக்ஷன் மூலம் எடுத்து, பெண்ணுக்கு செலுத்தும் வசதி உள்ளது. மரபணு பிரச்னை இருந்தால், சோதனையில் கண்டுபிடித்து விடலாம். விந்தையும், கருமுட்டையையும் எடுத்து, ஒன்றாக இணைத்து வளர வைத்து, தாயின் கர்ப்பப்பைக்குள் வைக்கலாம். இப்படி இன்னும் பல நவீன முன்னேற்றங்கள் வந்துள்ளன.

Sunday, August 16, 2020

தினமும் தலைக்குக் குளிப்பது அவசியம்! - நன்றி: தினமலர் - ஆகஸ்ட் 17, 2020

 


தினமும் தலைக்குக் குளிப்பது அவசியம்!

Advertisement
 
 
Advertisement
 
 தினமும் குளிப்பது அவசியம்!
33.6kShares
facebook sharing button
twitter sharing button
whatsapp sharing button

பெண்களின் தலையாய பிரச்னையான, முடி பராமரிப்பு குறித்து, சென்னை, பிரபல யுனானி மருத்துவர் தலத் சலிம்: முடி உதிர்வுக்கு மரபணு, மன அழுத்தம், ஊட்டச்சத்து குறைபாடு, ஹார்மோன் பிரச்னைகள் என, பல காரணங்கள் இருக்கலாம். ஆரோக்கியமான முடி வேண்டும் என்றால், தினமும் தலைக்கு குளிக்க வேண்டும். எனினும், குளிக்கும் தண்ணீரில் அதிக ரசாயனம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஆறு முதல், எட்டு வாரங்களுக்கு ஒரு முறை, முடியை நுனியில் டிரிம் செய்ய வேண்டும். முடி, புரதத்தால் ஆனது. முடி ஆரோக்கியமாக இருக்க, அதிக புரதச் சத்துகளை உணவில் எடுத்துக் கொள்ள வேண்டும். அதுபோல, பச்சை கீரைகளையும் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.கீரையில், பீட்டா கரோட்டின், போலிக் ஆசிட், வைட்டமின் பி, சி, இ, இரும்புச்சத்து, ஒமேகா - 3, பேட்டி ஆசிட், கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம் நிறைந்துள்ளன. அதுபோல, பாதாம், வால்நட் ஆகியவற்றுடன், வைட்டமின் - டி சத்துகளும் கொடுக்க வேண்டும். வைட்டமின் பி - 12 குறைபாட்டால், இளநரை ஏற்படுகிறது. இதை தவிர்க்க, இளநரை உள்ளவர்கள், பி - 12 மாத்திரை, டானிக் எடுத்துக் கொள்ளலாம்.அசைவம் சாப்பிடுவோர், ஆட்டு கல்லீரல் சமைத்து சாப்பிடலாம். கறிவேப்பிலை, நெல்லிக்காய், சீயக்காய், செம்பருத்தி இலை, சின்ன வெங்காய சாறு எடுத்து, எண்ணெயுடன் சேர்த்து காய்ச்சி பயன்படுத்தினால், இளநரை பிரச்னை தீரும். அதுபோல, காபி, டீ போன்றவற்றை நிறைய குடிக்காமல், ஒரு நாளைக்கு, ஒன்றிரண்டு கப் குடித்து வந்தால், முடி ஆரோக்கியமாக இருக்கும். எனினும், காபி, டீக்கும், முடிக்கும் நேரடியாக எந்த தொடர்பும் இல்லை.முடி ஆரோக்கியமாக செழித்து வளர, தேங்காய் பாலை தலையில் தேய்த்து, அரிசி களைந்த தண்ணீரால் முடியை அலசி வர வேண்டும். மேலும், வெங்காயம், பூண்டு, நெல்லிக்காய், ஊற வைத்த வெந்தயத்தை அரைத்து, பேஸ்ட் ஆக்கி, தலையில், முடியில் நன்கு தடவி, 30 நிமிடங்கள் கழித்து அலசி விட வேண்டும்.வெங்காயத்தில் சல்பர் நிறைந்திருப்பதால், பொடுகுத் தொல்லை தீரும்; முடி வளர்ச்சிக்கு பாதிப்பான நுண்ணுயிரிகளை கொல்லும்.மேலும், வாரத்திற்கு இருமுறை தலையில் தயிர் தேய்த்து, ஆப்பிள் சிடார் வினிகர் தடவி, ஆன்டி டான்ட்ரப் ஷாம்பு பயன்படுத்தி, தலையை அலசி குளிக்க வேண்டும்.சிலருக்கு தலையில் பேன் தொல்லை அதிகம் இருக்கும். அத்தகையோர், ரசாயன திரவங்களை வாங்கி பயன்படுத்துவதை தவிர்த்து, வேப்பெண்ணெய், தேங்காய் எண்ணெய் கலந்து, தலைக்கு தேய்த்து, ஒரு மணி நேரம் கழித்து, நன்கு அலசி விட, படிப்படியாக பேன் தொல்லை தீரும்!