Monday, August 6, 2018

தமிழில் ஒட்டக மர்மம் thanks to tamil and vedas.com

[New post] தமிழில் ஒட்டக மர்மம்!- PART 1 (Post No.5290)
Yahoo/Inbox
  • Tamil and Vedas <comment-reply@wordpress.com>
    To:theproudindian_2000@yahoo.co.in
    Aug. 5 at 7:04 a.m.
    Respond to this post by replying above this line

    New post on Tamil and Vedas

    தமிழில் ஒட்டக மர்மம்!- PART 1 (Post No.5290)

    by Tamil and Vedas
    RESEARCH ARTICLE Written by London swaminathan
    Date: 5 August 2018

    Time uploaded in London – 14-03  (British Summer Time)

    Post No. 5290

    Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.


    ஒட்டக ஆராய்ச்சியில் வரும் விஷயங்கள்

    ரிக்வேதத்தில் ஒட்டகம்
    பாணினியின் இலக்கண நூலில் ஒட்டகம்
    பைபிளில் ஒட்டகம்
    சங்க இலக்கியத்தில் ஒட்டகம்
    தொல்காப்பியத்தில் ஒட்டகம்
    சிலப்பதிகாரத்தில் ஒட்டகம்??
    காளிதாசனில் ஒட்டகம்
    ஸம்ஸ்க்ருதக் கதை  நூல்களில் ஒட்டகம்
    அமர கோஷத்தில் ஒட்டகம்
    மஹாபாரதத்தில் ஒட்டகம்
    மனு ஸ்ம்ருதியில் ஒட்டகம்
    சிந்து சமவெளியில் ஒட்டகம்
    அகராதிநிகண்டுக்களில் ஒட்டகம்
    ஒட்டக வாஹனம்
    எனது முடிபு

    கட்டுரை இரண்டு பகுதிகளாக வருகின்றது; இதோ முதல் பகுதி:-
    சங்க இலக்கியத்தில் சிறுபாணாற்றுப் படையிலும் அக நானூற்றிலும், ஒட்டகம் பற்றிய குறிப்புகள் வருகின்றன. ஒட்டகம் என்பது பாலைவன மிருகம். மேலும் உஷ் ட் ர என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லே இப்படி ஒட்டை, ஒட்டகம் என்று மருவியது.

    சிறுபாணாற்றுப்படை சங்க காலத்தின் முடிவில் தோன்றிய நூல். ஆகவே பொது ஆண்டு 300 முதல் 400-க்குள் இருக்கலாம். பிற்கால இலக்கியத்திலும் கூட ஒட்டகம் பற்றிய குறிப்புகள் சிலவே.

    பனி நீர்ப்படுவின் பட்டினம் படரின்
    ஓங்கு நிலை ஒட்டகம் துயில் மடிந்தன்ன
    வீங்கு திரை கொணர்ந்த விரைமர விறகின்
    1153-155 சிறு பாணாற்றுப்படை

    பொருள்
    கடல் நீர் அலைகள் எயிற்பாட்டினக் கரையில் அகில் கட்டைகளைக் கொண்டுவந்து ஒதுக்கின. அக்கட்டைகள் ஒட்டகம் உறங்குவது போலக் காட்சி தந்தன.


    தொல்காப்பியத்தில் ஒட்டகம் வருகிறது

    சூத்திரம் 1517
    ‘ஒட்டகம் அவற்றொடு ஒருவழி நிலையும்………………….’
    ஒட்டகத்தின் குட்டியையும் கன்று எனலாம்

    சூத்திரம் 1552
    ‘ஒட்டகம், குதிரை, கழுதை, மரை இவை
    பெட்டை என்னும் பெயர்க் கொடைக்கு உரிய’
    ஒட்டகம், குதிரை, கழுதை, மரைமான் ஆகியவற்றின் பெண்பால்- பெட்டை என்ற பெயர் பெறும். அதாவது ஒட்டகப் பெட்டை என்றால் அது பெண் ஒட்டகம்.

    ஆக தொல்காப்பியர் காலத்திலேயே ‘உஷ்ட்ற’ என்பது தமிழில் ஒட்டகம் ஆகிவிட்டது.
    XXX

    அகநானூற்றில் ஒட்டகம்
    முள் தின்றதா? எலும்பு தின்றதா?

    அகநானூற்றில் மருதன் இளநாகனார் பாடிய பாடலில்
    "குறும்பொறை உணங்கும் ததர் வெள் என்பு
    கடுங்கால் ஒட்டகத்து அல்குபசி தீர்க்கும்
    கல்நெடுங் கவலைய கானம் நீந்தி,
    அம்மா அரிவை ஒழிய-- அகம்.245

    இந்த வரிகளின் பொருள்

    பாறையில் உதிர்ந்து கிடக்கும் இலவ மலர்கள் காய்ந்து எலும்புகள் போலக் காட்சி தரும். அவைகளை ஒட்டகங்கள் சாப்பிட்டுப் பசியைத் தீர்த்துக்கொள்ளும்.

    இந்தப் பாடல் வரிகளை ஒட்டகம் எலும்பு சாப்பிட்டதாக் கொண்டோரும் உண்டு. ஆனால் ஒட்டகங்கள் சாக பட்சினிகள்; அவை எலும்பு தின்னாது.

    ஆக எலும்பு போலக் காய்ந்த பூக்கள் அல்லது பூக்களைத் தாங்கிய , காய்ந்த சுள்ளிகள் என்றே கொள்ளல் வேண்டும்.
    அகநானூறு, சிறுபாணாற்றுப் படை, தொல்காப்பியம் ஆகியவற்றில் ஒட்டகம் வருவதால் அக்காலத்தில் பாலைவனப் பகுதி மிருகமான ஒட்டகம் தமிழகம் வந்தது என்று கொள்ளவேண்டும். இல்லாவிடில் அதற்குத் தமிழ் இலக்கணத்தில் தொல்காப்பியர் இடம் தந்திருக்க மாட்டார்!
    XXXX

    கோவேறுக் கழுதையில் கோவலன்

    சிலப்பதிகாரத்தில் கோவலன் அத்திரி மீது சவாரி செய்ததாக ஒரு செய்தி உண்டு; அத்திரி என்றால் கழுதை, ஒட்டகம் என்று இரு பொருள் உண்டு. கோவலன் போன்ற பெரிய வணிகன் கழுதை மேல் சவாரி செய்தான் என்பதை விட ஒட்டகத்தின் மீது சென்றான் என்று பொருள் கொள்வது பொருந்தும்

    பூம்புகாரில் பௌர்ணமி நாளன்று நடந்தது என்ன?

    வான வண்கையன் அத்திரி ஏற
    மான் அமர் நோக்கியும் வையம் ஏறிக்
    கோடி பல அடுக்கிய கொழிநிதிக் குப்பை………………………

    --கடலாடு காதை, சிலப்பதிகாரம்

    பொருள்
    வானத்து மழைபோல வழங்கும் கைகளை உடைய கோவலன், கோவேறுக் கழுதையின் மீது ஏறிக்கொண்டான்; மான் போன்ற பார்வையுடைய மாதவி மூடு வண்டியில் ஏறிக்கொண்டாள்; கோடிக் கணக்கான பொருள் உடைய வணிகரின் மாட வீதிகளைக் கடந்து சென்றனர்.

    இதில் அத்திரி என்பதைக் கழுதை என்று உரைகாரர்கள் வியாக்கியானம் செய்த போதும் அத்திரி என்பதற்கு ஒட்டகம் என்றும் பொருள் உண்டு. ஆக கோவலன் ஒட்டகம் மீது ஏறிக் கடலாடச் சென்றான் என்றும் பொருள் சொல்ல முடியும்.

    மதுரையில் ஒட்டக பவனி

    மதுரை மீனாட்சி கோவிலில் சுவாமியும் அம்மனும் பவனி வருகையில் ஒட்டகம் யானை டமாரம் (முரசு) ஏந்திய மாடு முதலில் பவனி வரும் அவைகளுக்குப் பின்னர் சுந்தரேசரும் மீனாட்சி அம்மனும் பவனி வருவர்.

    எருது ஒட்டகம், எருமை ஆகியவற்றுக்கும் திமில் இருந்தாலும் திமில் உள்ள மிருகம் என்றால் அது ஒட்டகத்தையே குறிக்கும். மாடு, ஆடு ஆகியவற்றுக்குக் கொம்புகள் இருந்தாலும் கொம்பு மிருகம் என்றால் அது காண்டா மிருகத்தையே குறிப்பது போல!

    அகராதிநிகண்டுக்களில்
    ஒட்டகத்தின் தமிழ் ஸம்ஸ்க்ருதப் பெயர்கள்
    ஒட்டகம், ஒட்டை, அத்திரி, இரவணம், கனகதம், தாசோகம், நெடுங்கழுத்தன், உஷ் ட் ர,  க்ரமேல (இதிலிருந்து கேமல் CAMEL என்ற ஆங்கிலச் சொல் வந்தது; அராபிய மொழியில் கமல், கமலா என்று இருப்பதால்  அங்கிருந்தும் ஸம்ஸ்க்ருத்ததுக்கு வந்திருக்கும் வாய்ப்பு இருக்கிறது.)

    அமர கோசம் என்னும் புகழ் பெற்ற ஸம்ஸ்க்ருத நிகண்டில்
    பெண் ஒட்டகத்துக்கு உஷ்ட்ரி கா (ம்ருத்தாண்டே) என்ற பெயர் உள்ளது
    க்ரமேல, மய, மஹாங்காஹா, கரபஹ, தீர்க்கக்ரீவ, த்விகுடஹ, சரபஹ என்ற பெயர்கள் உள்ளன.
    தமிழில் தாசேரம், நெடுங்கோணி, அயவனம், கூன்புறம் என்ற பெயர்களும் காணப்படுகின்றன. இவைகளில் பெரும்பாலானவை ஸம்ஸ்க்ருதப் பெயர்களே!
    குட்டியாக இருந்தால்
    கரபாஹா, ஸ்யுஹு, ஸ்ருல்லகா, தாரவைஹி, பாத பந்தனைஹி என்றும் உள்ளது.

நாலு குணங்கள் பற்றி வள்ளுவனும் thanks to tamil and vedas ,com

[New post] நாலு குணங்கள் பற்றி வள்ளுவனும் வால்மீகியும் (Post No.5287)
Yahoo/Inbox
  • Tamil and Vedas <comment-reply@wordpress.com>
    To:theproudindian_2000@yahoo.co.in
    Aug. 4 at 12:32 a.m.
    Respond to this post by replying above this line

    New post on Tamil and Vedas

    நாலு குணங்கள் பற்றி வள்ளுவனும் வால்மீகியும் (Post No.5287)

    by Tamil and Vedas
    Written by London swaminathan
    Date: 4 August 2018

    Time uploaded in London – 7-31 am  (British Summer Time)

    Post No. 5287

    Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.


    நான்கு குணங்கள் அவசியம் என்று வள்ளுவனும் வால்மீகியும் வலியுறுத்துகின்றனர்.

    ஸிம்ஹிகை என்னும் கடல் அரக்கியை ஹனுமார் கொன்றவுடன் ஆகாசத்திலுள்ள பூதங்கள் சொன்னார்கள்: உம்மால் பெரும் பூதம் கொல்லப்பட்டது. நீர் எண்ணிய எண்ணியாங்கு எய்துவீர். மேலும்,

    யஸ்யத் வேதானி சத்வாரி வானரேந்த்ர யதா தவ
    த்ருதிர் த்ருஷ்டி மதிர் தாக்ஷ்யம் ஸ்வகர்மஸு ந  ஸீததி

    சுந்தர காண்டம் 1-216

    பொருள்
    “வானரேந்திரனே!
    தைரியம் (உறுதி),
    தீர்க ஆலோசனை (கண்ணோட்டம்) , புத்தி,
    வலிமை
    என்ற இந்த நான்கும் உமக்கு எப்படியோ அப்படி எவனுக்குண்டோ அவன் தனது கார்யங்களில் இடையூறுகளே இராது”

    இதே கருத்தை வள்ளுவன் இரண்டு இடங்களில் சொல்வான்

    அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்
    எஞ்சாமை வேந்தர்க் கியல்பு - குறள் 382

    பொருள்
    அஞ்சாமை,
    ஈகை,
    அறிவு,
    ஊக்கம்-
    இந்த நான்கு பண்பு நலன்களும் இருப்பதே தலைவனுக்கு (அரசனுக்கு) சிறப்பு

    இதையே இன்னும் ஒருமுறை எதிர்மறையில் கூறி வலியுறுத்துகிறார்:--
    அஞ்சும் அறியான் அமைவிலன் ஈகலான்
    தஞ்சம் எளியன் பகைக்கு--குறள் 863


    பொருள்
    எதற்கும் அஞ்சுபவனாய் ,
    எதனையும் தெரிந்து கொள்ளும் ஆற்றல் அற்றவனாய் ,
    பிறரோடு அனுசரித்து வாழும் குணமில்லாதவனாய்,
    உலோபக் குணமும்
    உடையவனாக  ஒருவன் இருந்து விட்டால் அவன் பகைவர்க்கெல்லாம்  மிக எளியவன் ஆவான்


    ஈகை,(லோபத்துக்கு எதிர்ப்பதம்) ஒன்று மட்டும்தான் வால்மீகிக்கும் வள்ளுவனுக்கும் வேறுபாடு ;மற்ற குணங்கள் அப்படியே இருக்கின்றன!
    சான்றோர்  சிந்தனை ஒன்றே!

    xxx

    Picture of Tiruvalluvar  from old Tamil Book
    தூது பற்றியும் இரண்டு பாடல்கள் உள்ளன
    பூதாஸ்சார்த்தா விபத்யந்தே தேஸகால விரோதிதாஹா
    விக்லபம் தூதமாஸாத்ய தமஹ ஸூர்யோதயே யதா
    -ஸுந்தர காண்டம்
    காரியங்கள் முடியக்கூடியனவாக  இருந்த போதிலும் ஸ்திரபுத்தியில்லாத தூதனை அடைந்து தேச காலங்களுக்கு மாறுபட்டு, ஸூர்யோத கால இருள் போல அழிந்து விடுகின்றன.

    அதாவது நிலையான புத்தியில்லாத தூதனால் செயல்கள் கெட்டுவிடும்.

    அர்த்தானர்த்தாந்தரே புத்திர்நிஸ்சிதாபி ந சோபதே
    தாதயந்தி ஹி கார்யாணி தூதாஹா பண்டிதமனினஹ

    இது செய்யக்கூடியது, செய்யத் தகதது என்பது நன்றாய் முடிவு செய்தபோதிலும், காரியங்கள் கெட்டுப்போகின்றன.ஏனென்றால் எல்லாம் தெரிந்தவன் என்று எண்ணாத்தால் தூதர்கள் காரியங்களைக் கெடுத்து விடுகிறார்கள்.


    தூது என்னும் அதிகாரத்தில் வள்ளுவனும்,

    கடனறிந்து காலம் கருதி இடனறிந்து
    எண்ணி உரைப்பான் தலை -குறள் 687

    தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின்
    வாய்மை வழியுரைப்பான் பண்பு- குறள் 688


    பொருள்:
    தான் ஆற்ற வேண்டிய செயலை உணர்ந்து, ஏற்ற காலத்தையும் நினைத்து, தக்க இடத்தையும் தேர்ந்து, தான் சொல்ல நினைத்தவற்றை எல்லாம் தக்கவாறு எண்ணித் தெளிவுபட உரைப்பவனே சிறந்த தூதன் ஆவான்.

    மனம், மொழி, மெய் தூய்மை, சுற்றத்தால் அமைந்த துணை, துணிவு ஆகிய மூன்றிலும் உறுதியாக இருப்பவனே சி றந்த தூதன்.

    இந்த இரண்டிலும் ஸ்திரமான புத்தி வந்துவிடுகிறது. மனம் மொழி மெய் தூய்மையில் அஹங்காரமின்மை வந்து விடுகிறது.

Sunday, August 5, 2018

நம்மிடமே இருக்கு மருந்து! - கற்றாழை thanks to dinamalar.com

இயற்கை பொருட்களிலேயே கலப்படம் செய்யும் இக்காலத்தில், இயற்கை தன்மை மாறாமல் சில பொருட்கள் கிடைக்கின்றன; அவற்றில் ஒன்று தான், கற்றாழை. 'அலோவேரா' என்று அழைக்கப்படும் கற்றாழையை, குமரி, கன்னி என்று கூறுகின்றனர், சித்தர்கள். காரணம், என்றும் இளமையோடு இருக்க உதவுவதால் தான், இதற்கு இப்பெயர். 
கற்றாழையில் சோற்றுக் கற்றாழை, சிறு கற்றாழை, பெரும் கற்றாழை, பேய்க் கற்றாழை, கருங் கற்றாழை, செங்கற்றாழை, ரயில் கற்றாழை என, பல வகை உண்டு. இதில், சோற்றுக் கற்றாழை மட்டுமே மருத்துவ குணங்களை உள்ளடக்கியது. 
இதை, 'மருத்துவ உலகின் ராணி' என்று அழைக்கின்றனர், சித்த மருத்துவர்கள். 17ம் நுாற்றாண்டு முதலே அழகு பொருள் உற்பத்தியிலும், மருத்துவத்திலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது, கற்றாழை.
நன்கு வளர்ந்த கற்றாழையின் தண்டுகளை ஒடித்து, தோல் சீவினால் உள்ளே நுங்கு போல காணப்படும். இதை, சோறு என்று கூறுவர். இதில், உள்ள, 'அலாய்ன்' எனும் பொருளில், 'ஆன்டி ஆக்சிடன்டு'கள் அதிகம் இருப்பதால், பல நோய்களுக்கு, மருந்தாக பயன்படுகிறது. 
மேலும், சூரிய ஒளியுடன் கலந்து வரும் கடும் வெப்பத்தை ஏற்படுத்தும் காமா மற்றும் எக்ஸ்ரே கதிர் வீச்சுகளின் தீய விளைவுகளிலிருந்து சருமத்தை பாதுகாக்கிறது.
கற்றாழை சாறு, உடலுக்கு குளிர்ச்சி தரும்; தீக்காயம், சவரம் செய்யும்போது ஏற்படும் கீறல்கள் மற்றும் வெட்டுக் காயங்களுக்கும் கற்றாழை கூழை பூசலாம். கற்றாழை சோற்றை முகத்தில் பூசி கழுவி வர, ஈரப்பதம் மாறாமல் இளமையுடன் இருக்கும், முகம். 
கற்றாழையின் கூழை வெய்யிலில் உலர்த்தி, தேங்காய் எண்ணெயுடன் காய்ச்சி தலைக்கு தேய்த்தோ அல்லது அதன் ஜெல்லை தலையில் தேய்த்து குளித்தாலோ, கூந்தல் நன்றாக வளரும். 
கற்றாழை சோற்றை சில நிமிடங்கள் கண்கள் மீது வைத்து வர, கண் எரிச்சல் குணமாகும்; மூல நோய், வாய்வு தொல்லைக்கும் இது சிறந்த மருந்து. 
சருமத்தில் உள்ள, 'கொலாஜன்' எனப்படும் கொழுப்பு திசுவை குறைக்கக் கூடிய புரோட்டீன், கற்றாழையில் அதிகம் காணப்படுவதால், முகத்தில் உள்ள சுருக்கம் மற்றும் வயோதிக தோற்றத்தை மாற்றுகிறது.
முகத்தில் தோன்றும் கரும்புள்ளிகள், தழும்புகள் மற்றும் வெய்யில் பாதிப்பால் உலர்ந்த சருமம் போன்றவற்றுக்கு சிறிது கற்றாழைச் சாறை தினமும் பூசி வர, நல்ல குணம் கிடைக்கும்.
உஷ்ணத்தை உள்ளிழுத்து, குளிர்ச்சியை வெளிக்காட்டும் பண்பு கற்றாழைக்கு உள்ளது. இதனால் தான், கற்றாழையை வீட்டு வாசலில் கட்டி வைத்தால், கண் திருஷ்டி நீங்கும்!
- எம்.விக்னேஷ்

Wednesday, August 1, 2018

அழகு சிரிக் கின்றது! ஆசை துடிக்கின்றது thanks to tamil and vedas.com

அழகு சிரிக்கின்றது! ஆசை துடிக்கின்றது
  • Tamil and Vedas <comment-reply@wordpress.com>
    To:theproudindian_2000@yahoo.co.in
    Jul. 31 at 12:38 a.m.
    Respond to this post by replying above this line

    New post on Tamil and Vedas

    அழகு சிரிக்கின்றது! ஆசை துடிக்கின்றது!! (Post No.5274)

    by Tamil and Vedas
    Written by LONDON SWAMINATHAN
    Date: 31 JULY 2018

    Time uploaded in London – 7-37 AM   (British Summer Time)

    Post No. 5274

    Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

    அழகு சிரிக்கின்றது
    ஆசை துடிக்கின்றது
    பழக நினைக்கின்றது
    பக்கம் வருகின்றது

    என்று பாடிக்கொண்டே வந்தாள் பேரழகி!
    யாரிடம்?
    புத்தரின் முக்கிய சீடரான உபகுப்தாவிடம்!
    அவரோ ஏகாந்த தியானத்தில் திளைத்துக் கொண்டிருந்தார்.
    உடனே இந்தப் பெண்

    வாழ்க்கை வாழ்வதற்கே என்று பாடத் தொடங்கினாள்அது மட்டுமல்ல;
    சுவாமிஜிஎன் தொழிலே வேறு! என்னிடம் புத்தர் சொன்ன நிர்வாணம் பற்றிப் பேசாதீர்கள்எனக்கு வேறு நிர்வாணம் எல்லாம் நன்கு தெரியும் உமக்கும் கற்பிப்பேன் என்றாள்.

    உப குப்தருக்கோ போதும் போதும் என்று ஆகிவிட்டது. தப்பித்தோம்பிழைத்தோம் என்று ஒரே ஓட்டமாக ஓடினார்.
     
    அவளோ விடவில்லை; “சுவாமிஎப்போது வருவீர்கள் என்னிடம்?”  என்று கேட்டுக்கொண்டே பின்னே வந்தாள்
    நங்காய்! பொறுத்திரு! ஒரு நாள் நான் வந்து உன்னைத் திருப்திப் படுத்துவேன் என்றார்.
    அதைக்கேட்டவுடன் அவள் புளகாங்கிதம் அடைந்தாள்ஏதோ உபகுப்தருடன் படுத்துப் புரண்டதாகக் கனவு கண்டாள்.

    அட! பெரிய சந்யாசியையும் பிடித்துவிட்டேனே!!  என்று தன் உடலையே தான் புகழ்ந்து கொண்டாள்!

    ஆண்டுகள் உருண்டோடின.
    வசந்த கலாலங்கள் போய் குளிர் காலமே மிஞ்சியது அந்தப் பெண்ணுக்கு! காமக் கடலில் உழல்வோருக்கு வரும் அத்தனை வியாதிகளும் அவளைப் பீடித்தன. இப்பொழுது அவள் கையைப் பிடிக்கக்கூட ஆள் இல்லை. நா வறன்டதுதோலும் சுருண்டதுமுடிகள் விழுந்தனபிடிகள் தளர்ந்தன. உடல் முழுதும் துர் நாற்றம்.
    போதாக் குறைக்கு பொன்னியும் வந்தாளாம் என்றபடி அரசுக்கு எதிராகப் பெரும் துரோகம் செய்தாள். அவள் கைகால்களை வெட்டும் படி அரசன் கட்டளையிட்டான். அதுவும் போயிற்று.

    நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு என்று வாடி வதங்கினாள். திடீரென்று முன்னொரு காலத்தில் உபகுபதர் சொன்னது நினைவுக்கு வந்தது சந்யாஸிகள் பொய் சொல்ல மாட்டார்களே என்று நினைத்த தருணத்தில் யாரோ தலையை வருடினார்.
     
    உப குப்தர் அங்கே நின்றார்!!
    கனவா நனவா என்று வியந்தாள்.
    சுவாமி! தொடாதீர்கள்தொடாதீர்கள்.
    உடல் முழுதும் வியாதி. துர் நாற்றம்.
    அன்றோரு நாள் ஆடை அலங்காரங்களுடன். அணிகலன்களோடு உம்மை வருந்தி வருந்தி அழைத்தேனே! அப்போதெல்லாம் வராதபடி இப்போது வந்தீர்களே! என்ன பயன் உங்களுக்குஎன்றாள்.

    உபகுப்தரின் கருணைப் பார்வை அவள் மீது விழுந்தது.
    அவளது காம வெப்பம் அடங்கி கருணை வெள்ளம் பாய்ந்தது.

    உபகுப்தர் சொன்னார்:
    நீ எது கவர்ச்சி என்று இப்போது வரை நினைத்தயோ அது கவர்ச்சி  அல்ல. உன் கண்களில் ஒளிவிடுகிறதே!—அதுதான்--- அந்தக் கருணைதான் கவர்ச்சிவெளிக் கவர்ச்சியெல்லாம் கவர்ச்சி ஆகாது” - என்றார்.

    சுவாமி: இன்று முதல் நான் உங்கள் சிஷ்யை! என்னை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று கெஞ்சினாள்.
    அதற்குத்தானே நான் முன்னர் வாக்குறுதி அளித்தபடி திரும்பி வந்தேன்”-- என்றார்.

    இனி பேசுவதற்கு ஒன்றுமிலையே!
    சும்மா இரு! சொல் அ