Tuesday, June 16, 2020

மூலிகைகளால் கொரோனாவை வெல்லலாம்! thanks to dinamalar.com

மூலிகைகளால் கொரோனாவை வெல்லலாம்!

Advertisement
 மூலிகைகளால் கொரோனாவை வெல்லலாம்!
31Shares
facebook sharing button
messenger sharing button
twitter sharing button
இன்று, எல்லாரையும் மிரட்டிக் கொண்டிருக்கும் கொரோனா வைரசை அழிக்கும் சித்த மருத்துவ மூலிகைகளைப் பற்றி, மக்களுக்கு அறிமுகப்படுத்துவதன் மூலம், பெருகி வரும் கொரோனா மரணங்களை தடுக்கலாம் என்ற சிந்தனையே, என்னை இக்கட்டுரையை எழுதத் துாண்டியது.

தமிழகத்தின் முதல் மருத்துவம், மூலிகை மருத்துவம். 2,500 ஆண்டுகளுக்கு மேலாக, நம்மை நோய்களிலிருந்து இன்றும் பாதுகாத்து வருவது, 'வேம்பு!' கொடிய வைரசான, எச்.ஐ.வி., வைரசைக் கட்டுப்படுத்துவதில் வேப்பம் பட்டை நன்கு செயல்படுவதாக, இன்றைய விஞ்ஞானிகள் அறிவித்து, அந்த ஆய்வு தொடர்கிறது.

வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தும் மூலிகைகள்!


வேப்பம் பட்டை, அரை பிடியை இடித்து, 50 கிராம் தனியா, 30 கிராம் சுக்கு, 10 கிராம் இலவங்க பட்டை, 10 கிராம் அதிமதுரம் என, இந்த ஐந்து மருந்துகளையும் நன்கு அரைத்து சூரணம் செய்து காலை, மாலை ஒரு ஸ்பூன் எடுத்து, ஒரு குவளை கொதிநீரில் போட்டுக் காய்ச்சி வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.அதில், தேன் அல்லது சர்க்கரை ஒரு ஸ்பூன் சேர்த்து பெரியவர்கள், 100 மி.லி., சிறுவர்கள், 50 மி.லி., பருகி வர, கொரோனா தொற்றைத் தடுக்கும். இதை, 15 நாட்களாவது தொடர வேண்டும்.

தொல்காப்பியர் துவங்கி, இன்றைய விஞ்ஞானிகள் வரை போற்றும் வேம்பு இருக்க, கொரோனாவுக்கு பயப்படுவானேன்! தினமும் மேற்கண்ட முறையை பின்பற்றுங்கள்; நிச்சயம் கொரோனா நெருங்காது.


நுரையீரல் பாதுகாப்புக்கு


1. கண்டங்கத்திரி வேர், கருந்துளசி, ஆடாதோடை வேர், தாளிசபத்திரி, நிலவேம்பு, சீந்தில், அதிமதுரம், திப்பிலி, சுக்கு, சிற்றரத்தை, ஓமம் இவற்றை வகைக்கு, 10 கிராம் எடுத்து, இடித்து, இரண்டு குவளை கொதிநீரில் போட்டுக் காய்ச்சி, ஒரு குவளையாகக் சுருக்கி, வடிகட்டி, ஆற விடுங்கள்.அதனுடன் தேன் கலந்து பெரியவர்கள், 150 மி.லி.,யும், சிறியவர்கள், 75 மி.லி.,யும் பருகி வர, நுரையீரல் எந்த வைரசாலும் பாதிப்பு அடையாமல் காக்கப் பெறும். இதை, 15 நாட்கள் தொடர வேண்டும்.

2. இம்பூறல் எனப்படும் மூலிகை முக்கியமானது. கால்படும் இடங்களில் சர்வ சாதாரணமாக வளரக் கூடியது. இதை வேருடன் பிடுங்கி, ஒரு கைப்பிடி எடுத்து, நீரில் அலசி, நிழலில் உலர்த்தி, இடித்து அதை, ஒரு குவளை கொதிநீரில் போட்டுக் காய்ச்சுங்கள். கொதி நிலையில் கருந்துளசி, 20 இலை, இஞ்சி ஒரு துண்டு, அதிமதுரம் ஒரு துண்டு, இலவங்கப்பட்டை சிறிது சேர்த்து கலந்து, 5 நிமிடம் கழித்து இறக்கி ஆறியபின் தேன், 2 ஸ்பூன் கலந்து பருக வேண்டும். காலை, மாலை பெரியவர்கள், 100 மி.லி., சிறியவர்கள் 50 மி.லி., பருக வேண்டும். 10 முதல், 15 நாட்கள் தொடர வேண்டும்.

3. எல்லா இடங்களிலும் கொடியாகப் பரவக் கூடியது, வேலிப்பருத்தி எனும் உத்தாமணி. இதை இடித்து அரைத்து அதில், 100 கிராம் மிளகு சேர்த்து, மூன்று நாட்கள் வெயிலில் காய வைத்து, அதை அரைத்துப் பொடி செய்து,பாட்டிலில் பத்திரப்படுத்தி, தினம் காலை, இரவு இந்த பொடியை, கால் ஸ்பூன் எடுத்து பால் அல்லது தேனில் குழைத்து சாப்பிட்டு வர, ஐந்திலிருந்து, 10 நாளில் குணம் பெறலாம்.

4. விஷ்ணுக்கரந்தையை, ஒரு பிடி எடுத்து அரைத்து, அத்துடன், நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் குருந்துளசி, ஆடாதோடை, சீந்தில், நிலவேம்பு, பற்பாடகம், ஆவாரை, அதிமதுரம், இஞ்சி, தாளிசபத்திரி போன்றவற்றை, தலா, 20 கிராம் வாங்கி, பொடி செய்து, 300 மி.லி., கொதிநீரில் போட்டுக் காய்ச்சி, 150 மி.லி.,யாகச் சுருக்கி வடிகட்டி, ஆறியபின், தேன், மூன்று ஸ்பூன் கலந்து, காலை, மாலை, 100 மி.லி., பெரியவர்களும் - 50 மி.லி., சிறியவர்களும், 10 நாட்கள் பருகி வர, நிச்சயம் வைரஸ் முற்றிலும் அழியும். நிலவேம்புவை விட வீரியம் மிக்கது, விஷ்ணுக்கரந்தை.

5. கண்டங்கத்திரி, ஆடாதோடை, அதிமதுரம், கற்பூரவல்லி, சுக்கு, மிளகு, திப்பிலி ஆகியவற்றை சம அளவு எடுத்து இடித்து, கஷாயம் செய்து தினம், காலை, மாலை, பெரியவர்கள், 100 மி.லி., சிறுவர்கள், 50 மி.லி., சாப்பிட்டு வர, 15 நாட்களில் குணம் காணலாம்.

6. துாதுவளை இலையை எல்லாரும் அறிவர். இதன் இலைகள், 15 எடுத்து, அத்துடன் கொத்துமல்லி, கருவேப்பிலை, உளுந்து, மிளகு, சீரகம், இஞ்சி, பூண்டு சேர்த்து நெய்யில் வதக்கி துவையல் செய்து தினம் காலை, மாலை, இரண்டு ஸ்பூன் சிறிது நெய் சேர்த்து, இரண்டு பிடி சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டு வர, நுரையீரலுக்கு கவசம் போல் பாதுகாப்பு கிடைக்கும்.

7. சீந்தில், பற்பாடகம், சந்தனம், சுக்கு, சித்தாமுட்டி, கோரைக்கிழங்கு, இலவங்கப்பட்டை, அதிமதுரம், தனியா, சோம்பு ஆகியவற்றை சம அளவு எடுத்து இடித்து, 300 மில்லி லிட்டர் தண்ணீரில் போட்டுக் காய்ச்சி, 100 மி.லி.,யாகச் சுருக்கி, காலை, மாலை சாப்பிட்டு வர வேண்டும்.

8. நொச்சி இலைக் கஷாயத்தில் சுக்கு, இலவங்கப்பட்டை மற்றும் கருஞ்சீரகம் பொடி செய்து கலந்து பருகி வரலாம்.9. புற்றுநோயைக் குணப்படுத்தக் கூடிய திறன் வாய்ந்த குங்குமப்பூ, வைரஸ்களை அழிக்கும் குணமும் கொண்டதாகும். துாய்மையான குங்குமப்பூ, 10 முதல், 20 இதழ்கள் எடுத்து கம்மாறு வெற்றிலையில் வைத்து, தேனில் குழைத்து, காலை, இரவு இரு வேளை பருகி வரலாம். இதில் பக்க விளைவு ஏதுமில்லை.

இந்த, முறைகளை முதல் வாரம் சாப்பிட, வைரஸ் கட்டுப்படும். எனினும், அனுபவம் வாய்ந்த சித்த மருத்துவர் வழிகாட்டலில் மேற்கொள்ள வேண்டும்.இரண்டாம் நிலை - இரண்டாவது வாரம்ஒருவேளை நோயாளி இரண்டாவது வாரம் இரண்டாவது நிலையான இருமல், கடும் காய்ச்சல், தலைவலி, நுரையீரலில் சளி அடைப்பு என்று அவதிப்படும் போது, உடனடியாக கீழ்க்கண்ட பஸ்பங்களை தயாரித்து தரலாம்.இது தான் அகத்தியர் கூறும் இரண்டாம் நிலை.

1. நற்பவள பற்பம்2. முத்துச்சிப்பி பற்பம்3. சங்கு பற்பம்4. கஸ்துாரி கருப்புஇந்த நான்கையும் வயது, நோய் நிலைக்கேற்ப அளவுப்படி சேர்த்து, அனுபவம் வாய்ந்த மருத்துவர் ஆலோசனையின் படி சூரணத்துடன் தேனில் குழைத்து, தினம் காலை ஒரு வேளை, இரவு ஒரு வேளை சாப்பிட்டு வர, 15 நாளில் முற்றிலும் குணமாகும். இந்த மருந்துகள், 'இம்ப்காப்ஸ்' கடையில் கிடைக்கக் கூடியவை.

மூன்றாவது வாரம் - மூன்றாம் நிலை

ஒரு வேளை வைரஸ் தாக்கம் அதிகமாகி, மூச்சுத் திணறல் அதிகமாகும் போது, அகத்தியர் கூறும் செந்துாரத்தை கொடுப்பதால், கொரோனா வைரசை கொல்ல முடியும்.

1. லிங்கசெந்துாரம், 30 மி.கி., தாளிசாதி சூரணத்துடன் தேனில் குழைத்து தர வேண்டும் அல்லது
2. சண்டமாருத செந்துாரம், 30 மி.லி., கிராம் அளவு தாளிசாதி சூரணத்துடன் தேனில் குழைத்து தரலாம்.கட்டாயம் இவற்றை, தேர்ந்த சித்த மருத்துவர் மேற்பார்வையில் தான் தரவேண்டும்., அதிகபட்சம், 10 நாட்கள் மட்டுமே இதை தர வேண்டும். அதற்குள் கொரோனா வைரஸ் கட்டாயம் உடம்பிலிருந்து ஒழியும்.இவ்வளவு தான், கொரோனாவை கொல்லும் சித்த மருத்துவ சிகிச்சை!

இதில், மூன்று முக்கிய விஷயங்களை கவனிக்க வேண்டும்.1. மூலிகைக் கஷாயங்கள், சூரணங்கள் அனைத்தும் நச்சுத்தன்மை இல்லாதவை. இவை அனைத்தையும், கடந்த, 25 ஆண்டுகளில் நவீன ஆய்வுக்குட்படுத்தி அவற்றின் பலன்களை, விஞ்ஞானிகள் பதிவு செய்துள்ளனர். எனவே, இவற்றை பரிசோதனை செய்ய வேண்டியதில்லை.

2. பவள பற்பம், சங்கு பற்பம், முத்துச் சிப்பி பற்பம், கஸ்துாரி கருப்பு போன்றவை நுரையீரல் நோய்களை வேரறுக்கும் வல்லமை கொண்டவை என்பது, பல்லாண்டுகளாக அனுபவ ரீதியாக நிறுவப்பட்டும், இன்றும் நம்பகமான மருந்துகளாக மக்களால் ஏற்கப்பட்டும் வருகிறது.

3. மூன்றாவது நிலையான உலோக மருந்துகளான சண்டமாருத செந்துாரம் மற்றும் லிங்க செந்துாரம் ஆகியன, நீண்ட நெடுங்காலமாக சித்த மருத்துவர்களால் பயன்படுத்தப்பட்டு வருபவை.இங்கே குறிப்பிடப்பட்டுள்ள முதல் சிகிச்சையையும், இரண்டாம் நிலை சிகிச்சையையும் அச்சமோ அல்லது ஆராய்ச்சியோ இன்றி, இன்றே துவங்கலாம். ஏனெனில், இந்த மூலிகை முறைகளும், பஸ்ப வகைகளும் கடந்த, 50 ஆண்டுகளாக தமிழகத்தில் ஆயிரக்கணக்கான நோயாளிகளுக்கு அளித்து வருவதில், நல்ல பலனை அடைந்து வருகின்றனர்.

இன்றும் தமிழகத்தில் நுாற்றுக்கணக்கான சித்த மருத்துவமனைகளில் பயன்பாட்டில் உள்ளவை. கொரோனாவை, மூலிகைகள் மூலம் வெல்லலாம். இதை, உலகளாவிய ஆய்வாக நிகழ்ந்தால், கொரோனாவுக்கு தீர்வு நிச்சயம் கிடைக்கும். எனவே, தமிழகத்தில், தமிழக அரசின், இந்திய மருத்துவத் துறை இயக்குனர் நினைத்தால், இதை மேற்கொள்ள முடியும்.

நம் நாட்டின் ஆங்கில மருத்துவ வல்லுனர்கள் பலர், மூலிகை மருத்துவத்தை உலகளவுக்கு உயர்த்த விரும்பினர். கொரொனாவை கண்டுபிடிக்க செலவிடப்படும் தொகையில், நுாறில் ஒரு பங்கு செலவு செய்தாலே போதும், கொரோனாவை முற்றிலும் ஒழிக்கலாம். இந்த ஆராய்ச்சியை மேற்கொள்ள, தமிழக முதல்வர், உத்தரவிட வேண்டிய காலகட்டம் இது தான்!

மூலிகைமணி வெங்கடேசன்

தொடர்புக்கு:90030 31796

Wednesday, June 10, 2020

இல்லறம் இனிக்க இனிய வழிகள் thanks to dinamalar.com

இல்லறம் இனிக்க இனிய வழிகள்

 Added : ஜூன் 08, 2020  கருத்துகள் (2)
Share
26Shares
facebook sharing button
messenger sharing button
twitter sharing button

இந்த உலகம் பரந்துபட்டது. அன்பும், உறவுகளும் பின்னிப்பிணைந்த கூட்டுக் கலவை தான் இவ்வுலக வாழ்வியல். இவை இல்லாமல் வாழ்க்கை முற்றுப்பெறாது. இந்த உறவுகளில் கணவன், மனைவி என்ற உறவு வலிமையானது என்று முன்னோர் சொன்னார்கள்.

வலி நிறைந்தது என்று இன்றைய தலைமுறை சொல்லிக் கொள்கின்றனர்.அம்மி மிதித்து அருந்ததி பார்த்து, நாளும் கோளும் தேர்வு செய்து மங்கல அணி கட்டப்பட்ட திருமண வாழ்க்கை கடந்த காலத்தில் வரமாக பார்க்கப்பட்டது. சொர்க்கமாக நினைக்கப்பட்டது. உறவில் உரிமையும், அன்பில் உண்மையும் இருந்தது. காலங்கள் கடந்தோடின; எல்லாம் மாறிப்போனது. உண்மையான அன்பிலும் உறவிலும் விரிசல்தான் எட்டிப்பார்க்கிறதே தவிர உயிர்த்துடிப்பு இல்லையென்றே சொல்லலாம். அதனால் தான் காவல் நிலையத்திலும், நீதிமன்றங்களிலும் படியேறி விவகாரத்துக்கேட்டு காத்துக் கொண்டிருக்கின்றனர் இன்றைய இளைய தலைமுறை.


விட்டுக்கொடுத்தல்


'விட்டுக்கொடுத்தவன் கெட்டுப் போனதில்லை' என்பது பழமொழி. இது இல்லற வாழ்க்கையின் இலக்கணம் என்பதனை மறந்துவிடாதீர்கள். கடந்த காலத்தில் ஆண் சம்பாதித்தான்; பெண் வீட்டிலிருந்தாள். ஆனால் இன்றைய நிலை அதுவல்ல. ஆணிற்கு இணையாக பெண் வேலைக்குச் செல்கிறாள். பணம் சம்பாதிக்கிறாள். இதனால் இணையர்கள் இருவருக்கும் இடையே ஈகோ எனும் கொடிய நோய் தொற்றிக் கொள்கிறது. இந்நோய்க்கு மருந்துமில்லை; மாத்திரையுமில்லை. விளைவு விவகாரத்து.இதற்காகவா இந்த இல்லறப் பாதையில் பயணித்தோம். யோசித்துப்பாருங்கள், வாழ்வது கொஞ்ச காலம் அதனை ஏன் வாழ்ந்து அனுபவிக்கத் தெரியவில்லை. திருமணம் ஆன சில மாதங்கள், சில வருடங்களிலேயே மண வாழ்க்கை கசந்துபோகிறது. நிச்சயித்த திருமணங் களிலும் இந்தநிலை என்றால், காதல் திருமணங்களில் எண்ணிக்கை ஒருபடி மேலேயே இருக்கிறது.
ஒரு கை தட்டினால் ஓசை வராது. இரண்டு கையும் சேர்த்து தட்டினால் அந்த ஓசை பத்து பேருக்குக் கேட்கும். அதே போல் தான் வாழ்க்கையும். ஆம் ஒருவர் பேசும் பொழுது ஒருவர் விட்டுக் கொடுத்துச் சென்றால் வீட்டில் அமைதி நிலவும். இரண்டு பேரும் நீயா நானா என்றால் கடைசியில் காலம்தான் ஜெயிக்கும். காலத்தை நாம் ஜெயிக்க முடியாது. எனவே இல்லற வாழ்க்கையில் ஈகோவை துாக்கி எறிந்து இன்பமாக வாழப் பழகிக் கொள்வது அவசியம்.
கடந்த காலத்தில் கூட்டுக் குடும்பமாக இருந்த போது, பிரச்னைகளை பெரியவர்கள் பேசித்தீர்த்தனர். அன்றைக்கு இணையம் இல்லை; அலைபேசி இல்லை. ஒருவருக் கொருவர் உண்மையாக, அன்பாக மனம்விட்டு பேசிக் கொள்ளும் மந்திரச்சாவி மட்டும் இருந்தது. அதனால் குடும்பங்களில் குழப்பம் இல்லை.


சமூகத்தில் ஆபத்து


ஆனால் இன்றைய நிலை... அவசர உலகம், இருபத்து நான்கு மணி நேரமும் இணையத்தில் இணைப்பு; சமூக வலைத்தளங்களில் இருத்தல் என்பதை தாண்டி எங்கே எப்பொழுது தங்கள் பிரச்னைகளை மனம் விட்டு பேசப் போகிறார்கள்? அதற்கான நேரமும் இல்லை; சூழலும் இல்லை. அதனால் தான் வாழ்க்கை திசைமாறுகிறது. வாழ்வின் வசந்தம் வறண்டு போகிறது. உண்மை காணாமல் போகிறது. உறவுகள் முறிந்து போகிறது. கல்யாணம் என்பது ஆயிரங்காலத்துப் பயிர் என்பார்கள். அந்தப் பயிரை தண்ணீர் ஊற்றி வளர்க்கத் தெரியாமல் தரிசு நிலமாக்கிக் கொண்டிருக்கிறது இன்றைய தலைமுறை. வீட்டிலேயே பேசுவதை மறந்து முகம் தெரியாத மனிதர்களிடம் முகம் காட்டி தன் வாழ்க்கையை தொலைத்துக் கொண்டிருக்கும் சந்ததியினர் அதிகரித்து வருவது இச்சமூகத்தின் ஆபத்தினை எடுத்துரைக்கிறது. எனவே தம்பதியினர் மனம் விட்டுப் பேசுங்கள்; வீட்டுப் பிரச்னைகளை வீட்டுக்கு வெளியே எடுத்துச் செல்லாதீர்கள். மனம் போல் மாங்கல்ய வாழ்க்கை மகிழ்ச்சி தரும்.

மதுவும் மணமுறிவும்


சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கும் குடும்பத்தில் மது எனும் அரக்கனால் மணமுறிவு பெற்ற தம்பதியர் பலர். கணவன், மனைவிக்கிடையே எப்போதும் சண்டை நடப்பதால், ஒரு பாவமும் செய்யாத குழந்தைகள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். பெற்றோர்களின் சண்டையால் பிள்ளைகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களும் நடக்கின்றன. போதை பழக்கமுள்ளவர்கள் அதனை மறந்து மனைவியை நேசித்து பிள்ளைகளிடம் அன்பு செலுத்துங்கள். இல்லறம் இனிக்கும்.கணவனும், மனைவியும் ஒருவரை ஒருவர் சந்தேகப்படுவது இல்வாழ்க்கையின் சந்தோஷத்தை சவக்குழிக்குள் கொண்டு போய்விடும்.

நம்பிக்கை தானே வாழ்க்கை


கணவன், மனைவி மீதும் மனைவி, கணவன் மீதும் நம்பிக்கை வைக்க வேண்டும். இல்லாத பொழுது கொலையும், தற்கொலையும் தலைதுாக்கி நிற்கும். இருவரிடமும் உண்மையும், அன்பும் இல்லாதபொழுதுதான் இதுபோன்ற வன்மங்கள் ஏற்படுகின்றன.இல்லற வாழ்க்கைக்கு தனிமனித ஒழுக்கம் அவசியம். ஒருவனுக்கு ஒருத்தி என்ற தமிழ்ப்பண்பாடு மீறும் பொழுது அங்கே அமைதியான வாழ்க்கை கேள்விக்குறியாகிறது. இன்றைய சமூகத்தில் கள்ளக்காதலால் நடக்கும் கொலையும், குடும்ப வன்முறையும் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் தம்பதியர் வாழ்க்கையில் அச்சமும் அவமானமும் குடிகொள்கிறதே தவிர ஆனந்தம் அசைபோடுவதில்லை. ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் ஒழுக்கம் தவறி நடந்தால் அங்கே துன்பம் வருமே தவிர இன்பத்திற்கு ஒரு நாளும் வழியில்லை.

இல்லறம் நல்லறமாக


இல்லறம் எனும் பந்தம் நல்லறமாக சில தியாகங்களை இணையர்கள் இருவரும் செய்ய வேண்டும். நான் ஆண்... நான் என்ன வேண்டுமென்றாலும் செய்வேன் என்று கணவன் கூறக்கூடாது. மனைவியும் தான் பேசுவதே சரி என பிடிவாதம் செய்யக்கூடாது. தம்பதியர் தங்களுக்குள் இருக்கும் பிடிவாதத்தை துரத்திவிட்டு இருவரும் ஒருவராகப் பயணியுங்கள். பணத்திற்கான முக்கியத்துவத்தை விட அன்பிற்கு முக்கியத்துவம் தாருங்கள். ஒருவருக்கொருவர் உண்மையாக இருங்கள்; அன்பு செலுத்துங்கள். இணைந்து நின்று ஒருவொருக்கு ஒருவர் தோள் கொடுங்கள். இல்லறம் எனும் நல்லறத்தில்'அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கைபண்பும் பயனும் அது' எனும் வள்ளுவத்தின் வழிநின்று வாழப்பழகிக் கொண்டால் அந்த வாழ்க்கையை வரலாறு பேசும். இல்லத்தில் வசந்தம் குடிகொள்ளும்.-மு.ஜெயமணி

Tuesday, June 9, 2020

பழமொழிக்குள் ஒளிந்திருக்கும் மொழி thanks to dinamalar.com


பழமொழிக்குள் ஒளிந்திருக்கும் மொழி

 Added : ஜூன் 10, 2020 
Share

Advertisement
 பழமொழிக்குள் ஒளிந்திருக்கும் மொழி
பழமொழிகள் முன்னோர்களின் அனுபவ மொழி என்பார்கள். ஒரு சிந்தனையை, செதுக்கி எடுத்த சொற்களால் வெளிப்படுத்துவதுதான் அந்த உத்தி. ஆனால் எந்தக் கருத்து வலியுறுத்தத் தோன்றியதோஅதனுடைய உண்மையான அர்த்தத்தை இழந்து திரிந்துவிட்ட பழமொழிகள் உண்டு. அப்படிப்பட்ட சில பழமொழிகளை
பார்ப்போம்.

யானையும், பூனையும்


'ஆனைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும்'என்பது பழமொழி. வலிமையானவர்கள் ஆணவத்தால் மற்றவர்களைப் பாதிக்கும் காரியங்களைச் செய்தால் பாதிக்கப்பட்டவர்கள், உங்கள் திமிரை அடக்க எங்களுக்கும்ஒரு காலம் வரும் என்று சொல்வார்கள் என்ற அர்த்தத்தில் வழங்கப்படுகிறது. ஆனால் உண்மையான அர்த்தம் வேறு.ஆனை என்பதை ஆ - நெய் என்று பிரிக்க வேண்டும். ஆ என்பது பசுவைக் குறிக்கும். பழைய போர்முறையில் ஆநிரை கவர்தல் என்று ஒரு முறை உண்டு. எதிரி நாட்டோடு போர் தொடங்க அந்நாட்டுப் பசுக்களைக் கவர்ந்து வருவார்கள். ஆ என்றால் பசு; அதன் பாலிலிருந்து கிடைப்பது நெய். சத்தான உணவுக்கு நெய் சேர்த்துச் சாப்பிடுவது நல்லது. அளவோடு சாப்பிட்டால் சத்து.
அதிகமாகச் சாப்பிட்டால் கொழுப்பு கூடிவிடும், நோய் வரும். அப்போதுவைத்தியர் கொடுக்கும் மருந்துப்பொடியைத் தேனில் குழைத்துச் சாப்பிட வேண்டும். பூனை என்பதை பூ - நெய் என்று பிரிக்க வேண்டும். பூவிலிருந்து கிடைப்பது தேன். அது பூ நெய்.ஆனைக்கு ஒரு காலம் வந்தால்பூனைக்கு ஒரு காலம் வரும் என்பதற்கு வேடிக்கையாக வேறு அர்த்தமும் சொல்லப்படுகிறது. அந்த காலத்தில் அரசர்கள் உலா வந்தால் அவர்களின் பாதுகாப்புக்கு யானைப்படை வரும். இந்தக் காலத்தில் உயர் பதவியில் இருப்பவர்கள் பயணம் வந்தால் பூனைப்படை பாதுகாப்புக்கு வருகிறது. ஆக யானைக்கு ஒரு காலம் வந்தது. இப்போது பூனைக்கு ஒரு காலம்
வந்துவிட்டது.'ஊரான் வீட்டுப் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்'மற்றவர்களின் பிள்ளைகளுக்கு உணவு கொடுத்து வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும் என்ற பொருளில் வழங்கப்படுகிறது. இது பொருத்தமாக இல்லை. இது கணவன் மனைவி உறவு சம்பந்தப்பட்டது. ஊரான் வீட்டுப் பிள்ளையான ஒரு பெண்ணைத்தான் அவன் மனைவியாக ஏற்றுக் கொண்டான். அவள் கர்ப்பமாகும்போது அவளுக்குநல்ல ஊட்டச் சத்துள்ள உணவைக் கொடுத்துப் பாதுகாத்தால் கர்ப்பத்தில் வளரும் அவனது பிள்ளை நன்றாக உருவாகும். பிறந்த பிறகு தாய்ப்பால் கொடுத்தால் பிள்ளை நன்றாக வளரும். அதற்கும் அவளுக்கு ஊட்டச் சத்துக்களைக் கொடுக்க வேண்டும். இதுதான் ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன்பிள்ளை தானே வளரும் என்ற பழமொழியின் அர்த்தம்.

ஆயிரம் பொய்


'ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு கல்யாணத்தைப் பண்ணலாம்'என்பது பழமொழி. பொய் சொல்லி ஒரு கல்யாணத்தை நடத்தினால் என்றைக்காவது அது தெரியவரும்போது பிரச்னை வரும். அப்படியானால் வேறு பொருள் இருக்க வேண்டும். கல்யாணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர். அதற்கு வலிமையான அடித்தளம் அமைய வேண்டும். சொந்தபந்தங்கள்
பலரிடம் தெரியப்படுத்தி, பலர் முன்னிலையில் நிச்சயதார்த்தம் செய்து, பலரையும் அழைத்து நடத்துவதுதான் ஆழமான திருமணம். ஆயிரம் பேரிடம் போய்ச் சொல்லி ஒரு கல்யாணத்தை நடத்த வேண்டும் என்பதுதான் உண்மையான பொருள்.

கழுதையும் கற்பூர வாசனையும்


'கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை' என்பதில் கழுதைக்கும் கற்பூரத்துக்கும் என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை. சிலருக்குச் சில செயல்களின் மகத்துவம் தெரியவில்லை என்பதை வலியுறுத்துவதற்காக இது பயன்படுத்தப்படுகிறது. அப்படியானால் அதற்கு வேறு பொருட்களான சந்தனம், ஜவ்வாதுபோன்றவற்றைச் சாதாரணமாகச் சொல்லியிருக்கலாம். கற்பூரம்என்று சொல்லியிருப்பதால் இங்கே கவனிக்க வேண்டிய அர்த்தம் இருக்கிறது.கழு என்பது கோரைப் புல்வகைகளில் ஒருவகை. கழு என்ற கோரைப் புல்லில் தயாராகும் பாய் கற்பூர வாசனையைக் கொடுக்கும். சில நோய்கள் குணமாகுமாம். கழு தைக்க வருமாம் கற்பூர வாசனை என்பதே உண்மையான பழமொழி. கழு என்ற கோரைப்புல்வகை நாளாவட்டத்தில் அருகிவிட்டது.

கல்லைக்கண்டால்


'கல்லைக் கண்டால் நாயைக் காணோம்நாயைக் கண்டால் கல்லைக் காணோம்'என்ற பழமொழி, நாய் வரும்போது அதைத் துரத்தக் கல் கிடைப்பதில்லை; கல் கிடைக்கும்போது நாய் வருவதில்லை என்ற அர்த்தத்தில் பயன்படுகிறது. ஆனால் அது பொருள் அல்ல.இங்கு கல் என்று சொல்லப்படுவதுதான் சிந்திக்க வேண்டிய சொல். கடவுளுக்கு உரிய சிற்பத்தைபொருத்தமான கல்லைக் கொண்டுதான் செதுக்குவார்கள். பிறகு அதற்குப் பூஜை செய்து உருவேற்றி கோவிலில் பிரதிஷ்டை செய்வார்கள்.இந்தப் பழமொழியில் நாய் என்பது நாயகன் என்று இருக்க வேண்டும். நாயகன் என்றால் கடவுள். பக்தி சிரத்தையோடு வழிபடும்போது அங்கு கல் தெரியாது. கடவுள் சொரூபம் மட்டும்தான் தெரியும். ஈடுபாடு இல்லாமல் வழிபட்டால் சிலைதான் அதாவது கல்தான் தெரியும். பக்தி ஈடுபாட்டின் எல்லை இது. அதுதான் கல்லைக் கண்டால் நாயகனைக் காணோம்; நாயகனைக் கண்டால் கல்லைக் காணோம்.
இது குறித்துத் திருமூலர் குறிப்பிடும் ஒரு கருத்தைப் பார்ப்போம். ஒரு யானையின் உருவத்தை மரத்தால் செதுக்கலாம். அதை யானையாகப் பார்த்தால் மரம் தெரியாது. வெறும் மரமாகப் பார்த்தால் யானை தெரியாது.'மரத்தை மறைத்தது மாமத யானைமரத்தில் மறைந்தது மாமத யானை'இந்தக் கருத்தை அந்தப் பழமொழியோடு பொருத்திப் பார்க்கலாம்.

அரை வைத்தியர்


'ஆயிரம் பேரைக் கொன்றவன்அரை வைத்தியன்'என்ற பழமொழியின் பொருள் வேறு. முன்பெல்லாம் சித்த வைத்தியம்தான். மூலிகைகளை ஆராய்ந்து அவைகளைப் பிடுங்கி மருந்து தயாரிப்பார்கள். எவ்வளவு மூலிகைகள் ஒரு வைத்தியர்அதிகமாக ஆராய்ந்திருக்கிறாரோ அவரே சிறந்த வைத்தியர். 'ஆயிரம் வேரை' என்று கொண்டால் வைத்தியரின் பெருமை புரியும்.

'சிவ பூஜையில் கரடி'


என்ற பழமொழி, ஒரு நல்ல காரியம் நடக்கும்போது, கெட்ட எண்ணம் கொண்ட ஒருவர் ஊடே புகுந்து காரியத்தைக் கெடுத்துவிடுவதைக் குறிப்பதைப் போல் உள்ளது. இதன் உண்மையான அர்த்தத்தைத் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள். இதற்குள் ஓர் ஆன்மிகச் செய்தி அடங்கியுள்ளது. முன்பெல்லாம் சிவாலயங்களில்பல்வேறு இசைக்கருவிகள் இசைக்கப்படும். அபிஷேகம் நடக்கும்போதும், அலங்காரம் நடக்கும்போதும், உற்ஸவர் உலாவரும்போதும் இவை இசைக்கப்படும். இப்போதும் தவில், நாதஸ்வரம் இசைக்கப்படுவதைப் பார்க்கிறோம். அப்படிப்பட்ட இசைக்கருவிகளில் ஒன்றுதான் 'கரடிகை' என்பது.
சுவாமிக்கு அலங்காரம் முடிந்து தீபாராதனை காட்டப்படும்போது இந்தக் கருவி இசைக்கப்படும். மற்ற நேரங்களில் வேறு வேறு கவனத்தில்இருந்த பக்தர்கள், இந்த இசையைக் கேட்டவுடன் தீபாராதனையை அனுபவிக்க ஆயத்தமாகிவிடுவார்கள். கரடிகை என்ற வாத்தியம்தான் பழமொழியில் கரடி என்று மாறிவிட்டது. சிவபூஜையில் கரடிகை என்றே சொல்வோம்.இன்னும் இப்படி நிறைய உண்டு.-முனைவர் இளசை சுந்தரம்முன்னாள் வானொலி நிலைய இயக்குனர், மதுரை98430 62817

Monday, June 8, 2020

அதீத எதிர்மறை எண்ணங்கள் கொண்டவர்களைத் தாக்குமாம் அல்சைமர் thanks to dinamalar.com


அதீத எதிர்மறை எண்ணங்கள் கொண்டவர்களைத் தாக்குமாம் அல்சைமர்!

Advertisement
எதிர்மறை எண்ணங்கள், அல்சைமர்,  Alzheimers, dementia, Negative thinking, Study, researchers, london, new study, Dr. Natalie Marchant,  psychiatrist, PET  brain scan, positron emission tomography, Alzheimer's disease, anxiety, depression
9Shares
facebook sharing button
messenger sharing button
twitter sharing button
லண்டன்: வயதான காலங்களில் ஏற்படும் அல்சைமர், டிமாண்டியா உள்ளிட்ட நோய்களுக்கு சிறுவயதில் ஏற்படும் எதிர்மறையான எண்ண சுழற்சியே காரணம் என விஞ்ஞானிகள் கண்டுபித்துள்ளனர்.

லண்டன் யூனிவர்ஸிடி காலேஜ் மனோதத்துவ ஆராய்ச்சியாளர் டாக்டர் நடாலீ மர்சண்ட் இதனைத் தனது ஆய்வு மூலம் தெரிவித்துள்ளார். 55 வயதுக்கு மேற்பட்ட 350 பேருக்கு போசிட்ரான் எமிஷன் டோமோகிராபி மூளை ஸ்கேன் எடுக்கப்பட்டது. அல்சைமர் நோய்க்கு வழிவகுக்கும் டோ மற்றும் பெடா செல்கள் அதிகரிக்க கடந்த கால வாழ்கையில் செய்த தவறுகள் மற்றும் எதிர்காலம் குறித்த பயம் மற்றும் கவலை ஆகியவையே முக்கிய காரணிகளாக விளங்குக்கிறது என இந்த ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.

latest tamil news




மகிழ்ச்சியான மனநிலையில் உள்ளவர்களது மூளையில் இந்த செல்களின் படலம் குறைந்து காணப்படுகிறது. மூளையில் மகிழ்ச்சி ஏற்படுத்தும் ஹார்மோனான செராட்டினான் சுரப்பு மூளையை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. மேலும் பதற்றம் மற்றும் மன அழுத்தும் அதிகமாக உள்ளவர்களது மூளையும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளது. இவர்களிடம் இந்த டாவ் மற்றும் அமிலாய்டு படலம் அதிகமாக காணப்படவில்லை.

எப்போதும் எந்த விஷயத்துக்கும் பதற்றம், பயம் அடையாமல் அதீத எதிர்மறை எண்ணங்களை மனதுக்குள் குப்பைபோல சேர்க்காமல் இருப்பதே இந்த வயதான காலத்தில் டிமாண்டியா, அல்சைமர் போன்ற உயிரைப் பறிக்கும் மன நோய்களில் இருந்து விடுபட சிறந்த மருந்து. ஆகவே எப்போது மனதை புது மலர்போல புத்துணர்ச்சியுடன் வைக்கக் கற்றுக்கொள்வது நல்லது.

Monday, June 1, 2020

விசேஷமான மூலிகை வேலி பருத்தி! thanks to dinamalar.com

விசேஷமான மூலிகை வேலி பருத்தி!

 பதிவு செய்த நாள் : ஜூன் 01, 2020 

Advertisement
 விசேஷமான மூலிகை வேலி பருத்தி!
விசேஷமான மூலிகை வேலி பருத்தி!
கொரோனா போன்ற பல வைரஸ் நோய்களுக்கு காரணம், சுவாசக் கோளாறே.இந்தப் பிரச்னையை தீர்க்கும் அற்புத மூலிகையான, வேலி பருத்தி பற்றி, மூலிகை மருத்துவ வல்லுனர், 'அல்மா' வேலாயுதம்: துாதுவளை, துளசி, கண்டங்கத்திரி, ஆடாதொடை, முசுமுசுக்கை, கரிசலாங்கண்ணி, இம்பூரல் என, பல மூலிகைகள், சுவாசப் பிரச்னைகளுக்கு தீர்வு அளிக்கின்றன. எனினும், சித்தர்களால், 'உத்தாமணி' என அழைக்கப்படும், வேலி பருத்திக்கு, சுவாசக் கோளாறை தீர்க்கும் குணம் அதிகமாக உள்ளது. சாதாரணமாக, வேலிகளில் படர்ந்திருக்கும் இந்த தாவரத்தின் இலை, இதய வடிவில் இருக்கும்; இரட்டை காய்களையும் கொண்டிருக்கும். அந்த காய்கள் வெடித்தால், பஞ்சு போல வெளியே வரும். அதனால் தான், இதை, வேலி பருத்தி என்கின்றனர்.சீந்தில் என்ற மூலிகையும், வேலி பருத்தி போலவே இருக்கும். இலையை காம்புடன் கிள்ளினால், பால் போல திரவம் வடிந்தால், வேலி பருத்தி; தண்ணீர் போல திரவம் வந்தால், சீந்தில் என, முடிவு செய்யலாம்.வேலி பருத்தியின் இலையும், வேரும் மருத்துவக் குணம் கொண்டவை. சுவாசக் கோளாறுடன், வயிற்றுப் பிரச்னை, வயிற்று வலி, குளிர் காய்ச்சல், சளித் தொல்லை போன்ற பிரச்னைகளையும், இது போக்கும். இதன் இலையை பறித்து, இடித்து, சாறு பிழிந்து, தினமும், காலையில் ஒரு ஸ்பூன் குடித்து வந்தால், சுவாசப் பிரச்னை தீரும்; ஆஸ்துமா கட்டுப்படும். இந்த செடியின் இலையை அரைத்து, லேசாக சுட வைத்து, ஆறியதும், அதில் தேன் கலந்து சாப்பிட, காசநோய் கூட காணாமல் போகும்.இதன் இலை மூன்றை பறித்து, ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, ஆறியதும், வடிகட்டி, வாரம் ஒரு முறை குடித்து வந்தால், குழந்தைகளுக்கு சளித் தொல்லை தீரும்.மேலும், உடல் வலி, இடுப்பு வலி, மூட்டு வலி இருந்தால், வேலி பருத்தி இலையை, ஆமணக்கு எண்ணெய்யில் வதக்கி, மெல்லிய துணியில் கட்டி, ஒத்தடம் கொடுத்தால், வலி குறையும்.வேலி பருத்தியை, குழம்பாக வைத்தும் சாப்பிடலாம். ஒரு கைப்பிடி வேலி பருத்தியுடன், மிளகு, பூண்டு, சீரகம், மல்லி ஆகியவற்றை சேர்த்து வதக்கி, அரைத்து, புளி சேர்த்து, குழம்பாக வைத்து, சாதத்திற்கு ஊற்றி சாப்பிடலாம். சற்று கசப்பு சுவையுடன் இருக்கும்.அதுபோல, துவையலாகவும் இதை சாப்பிடலாம். மிளகாய் வற்றல், புளி, உப்பு வைத்து அரைத்து, அதை சாதத்தில் போட்டும், தொட்டும் சாப்பிடலாம்.வேலி பருத்தி சாறுடன், மிளகு சேர்த்து, நாள் முழுதும் ஊறவைத்து, அந்த மிளகை காய வைத்து, தினமும், ஒரு மிளகு சாப்பிட, மூச்சிறைப்பு நோய் குணமாகும். எனினும், தகுந்த மருத்துவர் ஆலோசனைப்படி, இவற்றை தயார் செய்வதே நல்லது!