Sunday, July 23, 2017

[New post] யமன் (எமன்) போல வந்த 3 பெண்கள்!


Shopping

Message body

Saturday, July 22, 2017

ஸ்டார் ஃபிட்னெஸ் - தியானத்துக்குச் சாப்பாடு, ஃபிட்னெஸுக்குக் சிரிப்பு!

நடிகர் மாதவனின் ஹேண்ட்சம் அண்ட் ஹேப்பி சீக்ரெட்ஸ்!
``உடல் ஆரோக்கியத்தைத் தக்கவெச்சுக்கிறது  என்பது கூடுதல் வேலையெல்லாம் கிடையாது. அது நம்ம கடமை.  நம்மை நம்பி இருக்கிறவங்களுக்காகவாவது நம்ம உடல் ஆரோக்கியம் ரொம்பவே முக்கியம்.”  அழகாகப் பேசுகிறார் மாதவன். `அலைபாயுதே’ மேடி, தற்போது நரைத்த தாடியுடன் இருந்தாலும் தோற்றத்தில்  ஃபிட்டாகவே இருக்கிறார். முகத்தில் எந்தச் சுருக்கமும் இல்லை. அதே லவ்வர் பாய் மோடில் இருக்கிறார்.

“ஆரோக்கியமா இருக்கிறதுக்கு ஸ்பெஷல் மருந்து ஒண்ணு வெச்சிருக்கேன். இத்தனை வருஷங்களா சினிமாவில் இருக்கேன். நிறைய ஏற்றஇறக்கங்கள் வந்திருக்கு. பலவிதப் பிரச்னைகளையும் சோகங்களையும் சந்திச்சிருக்கேன். கெட்டநேரங்கிறது எப்போ வேணாலும் வரலாம். அதையெல்லாம் பெரிசாவே எடுத்துக்கக் கூடாது. நல்ல விஷயத்தை மட்டும்தான் தேடுவேன். அதை மட்டுமே மனசுல வெச்சுப்பேன். சோகத்தை மறந்துட்டு சந்தோஷத்தை மட்டும் மனசுல வெச்சுக்கிட்டா  வாழ்க்கை ஹேப்பியா இருக்கும்.

காலை 6.30 மணிக்கெல்லாம் எழுந்துடுவேன். 99 சதவிகிதம் டயட் சாப்பாடுதான். ‘இறுதிச்சுற்று’ படத்துக்காக உடற்பயிற்சியில் இருந்தப்போகூட சைவ உணவுகள்தான் எடுத்துக்கிட்டேன். நிறைய பழங்களும் தண்ணீரும் ரொம்ப முக்கியம்னு நினைக்கிறேன். எதைச் சாப்பிட்டாலும் நல்லா மென்று தின்று பழகணும்.  ஒவ்வொரு முறை சாப்பிடும்போதும் குறைந்தது 40 தடவையாவது மென்றுதான் முழுங்குவேன். கடிச்சு மெல்லும்போது மனசுக்குள்ள எண்ணிக் கிட்டே இருப்பேன். அப்போதான் கவனம் சாப்பாட்டின்மேல் இருக்கும். சாப்பாடுங்கிறது எனக்குத் தியானம் மாதிரி.  
காலையில் எழுந்ததும் பல் தேய்க்கிறது ஒவ்வொருத்தருக்கும் கடமை. ஆனா, பலருடைய கவனம் பல் தேய்ப்பதில் இருக்காது. பல் தேய்ச்சுக்கிட்டே வேறு ஏதாவது சிந்தனைகள்ல  இருப்பாங்க. பல் தேய்க்கும்போது `குளிக்கலாமா... வேணாமா?’னு யோசிப்பாங்க. குளிக்கும்போது, `சாப்பிட டைம் இருக்குமா?’னு யோசிப்பாங்க. அப்படியெல்லாம் பண்ணக் கூடாது. எந்த ஒரு விஷயத்தைச் செய்யறோமோ, அதிலேயே முழுக் கவனத்தையும் செலுத்தணும். ஒவ்வொரு விஷயத்தையும் அனுபவிச்சுச் செய்யணும்.

கடந்தகாலத்தையோ எதிர்காலத்தையோ யோசிக்க மாட்டேன். இந்த நிமிஷம், இந்த விநாடினு ஒவ்வொரு மொமென்ட்டையும் எனக்கானதா வாழ்கிறேன். ஒரு வேலை செய்றதுக்கு 30 விநாடிக்கு முன்னாடியே என்ன செய்யப்போறோம்னு யோசிச்சிடுவேன். செய்ய ஆரம்பிச்ச பிறகு வேறு எதையும் யோசிக்க மாட்டேன். நான் நடிக்கிற படத்திலும் சரி, குடும்ப வாழ்க்கையிலும் சரி... இதைத்தான் ஃபாலோ பண்றேன். எவ்வளவுக்கு எவ்வளவு மனசைத் தூய்மையா வெச்சிருக்கோமோ, அந்த அளவுக்கு உடலும் ஆரோக்கியமா இருக்கும். அதுக்கப்புறம்தான் உடற்பயிற்சி, ஃபிட்னெஸ் எல்லாமே. 

நல்ல சாப்பாடுதான் நம்மை இயக்குதுங்கிற விஷயம் எப்பவுமே மனசுல இருக்கணும். சாப்பாட்டுக்காகத்தானே இவ்வளவு கடினமா உழைக்கிறோம்... ஒருகாலத்தில் தயிர்சாதம்னா ரொம்பப் பிடிக்கும். இப்போ ஐ லவ் உருளைக் கிழங்கு. கிழங்கு வகைகளில் செய்யும் சாப்பாடு, ரொம்ப ஆரோக்கியமும்கூட. வயிறுதான் நமக்கான ரெண்டாவது மூளை. தனிப்பட்ட வாழ்க்கை, வேலைனு எதில் பிரச்னைன்னாலும் சாப்பாட்டைத் தான் முதலில் பாதிக்கும். என்னிக்குமே சாப்பாட்டின்மேல் கோபத்தையோ வெறுப்பையோ காட்டக்கூடாது. சாப்பாடுதான் நமக்குப் பிரதானம். அதைப் புரிஞ்சு நடந்தாலே போதும்.

சோகமா இருந்தாகூட வீட்டுக்கு வந்துட்டா எல்லாத்தையும் மறந்துடுவேன். அப்படியே ஏதும் மன அழுத்தம்னாலும் என்னோட ரெண்டு நாய்களையும் கட்டிப்பிடிச்சுட்டு இருப்பேன். 

உடற்பயிற்சிக்காக ஸ்டீராய்டு எதுவும் பயன்படுத்த மாட்டேன். படத்துக்காக உடலமைப்பை மாற்றணும்னா தீவிர உடற்பயிற்சி செய்வேன். அதுக்கேற்ற மாதிரியான சைவ உணவுகள்தான் என் டயட். மற்ற நாளில் ரெகுலர் உடற்பயிற்சிகள்தான். எப்பவுமே சிரிச்சுக்கிட்டே இருங்க. எவ்வளவுக்கு எவ்வளவு சிரிக்கிறோமோ, அவ்வளவுக்கு அவ்வளவு  ஆரோக்கியம். சந்தோஷமும் திருப்தியும்தான் என் ஃபிட்னெஸுக்கான அருமருந்துகள்!”

Thursday, July 20, 2017

இந்துப்பே சிறந்தது!

இந்துப்பின் பயன் குறித்து விளக்கும், இயற்கை மருத்துவர் நாச்சாள்: உப்பு, மருந்தாக இருந்த காலம் போய், தற்போது உப்பே நோய்க்கு காரணமாக அமையும் சோகமாகி விட்டது. சுத்தம் என்ற பெயரில், கடலில் இருந்து இயற்கையாக கிடைக்கும் உப்பிலிருக்கும் மினரல்களை எடுத்து, வெள்ளை நிறமாக மாற்றி, செயற்கை மினரல்களை புகுத்தி விற்கின்றனர். இதனால், இயற்கை மருத்துவர்கள் பலரும், இந்துப்பைபரிந்துரைக்கின்றனர்.
இந்துப்பு என்பது, மலைப்பகுதியில் இருந்து எடுக்கப்படும் உப்பு. இமயமலை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மலையடிவாரங்களில், இது அதிகம் வெட்டி எடுக்கப்படுகிறது. கடல் உப்பில் சோடியம் குளோரைடு அதிகமாக இருக்கும்; இந்துப்பு, பொட்டாசியம் குளோரைடு அதிகம் நிரம்பியது.
கடல் உப்பு, 20 ஆண்டுகளுக்கு முன், நேரடியாக நமக்கு கிடைத்து வந்தது. இப்போது, அனைத்தும், செயற்கையாக அயோடின் சேர்க்கப்பட்டு வருகிறது. கடலோரப் பகுதிகளில் இருப்போருக்கு அயோடின் அதிகம் தேவைப்படாது. மலைப்பகுதிகளில் இருப்பவர்களுக்கு அயோடின் குறைபாடு இருப்பதால், உப்பில் அயோடின் சேர்க்கப்பட்டது.
அயோடின் குறைவாக இருந்தால், தைராய்டு உள்ளிட்ட பிரச்னை வரும். ஆனால், செயற்கையாக சேர்ப்பதால், உடல் அதன் உறிஞ்சும் தன்மையை இழந்துவிடுகிறது. இதற்கு ஒரே மாற்று இந்துப்பு; கலப்படமின்றி கிடைப்பதும் அது மட்டும் தான்.
நாட்டு மருந்துக் கடைகளில் கற்களாகவும், துாளாகவும் இந்துப்பு கிடைக்கும். கற்கள் எந்தப் பகுதியில் இருந்து கிடைக்கிறது என்பதை பொறுத்து வெள்ளை, வெளிர் சிவப்பு, இளஞ்சிவப்பு ஆகிய நிறங்களில் கிடைக்கும். கற்களாக வாங்கி, வீட்டில் துாளாக்கி கொள்வது நல்லது.
சித்த மருத்துவத்தில் இந்துப்பின் பயன்பாடு அதிகம். கர்ப்பிணிகள் மற்றும் நீரிழிவுப் பிரச்னை இருப்போர், உப்பை குறைவாக பயன்படுத்த வேண்டும் என மருத்துவர் கூறுவர். 
காரணம், இப்போதுள்ள உப்பில் இருக்கும் பொருட்களை தவிர்க்க வேண்டும் என்பதற்காகத் தான். ஆனால், இவர்களும் இந்துப்பை தாராளமாகப் பயன்படுத்தலாம். சமையலுக்கு பயன்படுத்தும் போது, சாதாரண உப்பைப் பயன்படுத்தும் அளவை விட, சற்று கூடுதலாக இந்த உப்பை பயன்படுத்த வேண்டும்.
சோடியத்தால் வரக்கூடிய இதய நோய் உள்ளிட்ட பிரச்னை, நீரழிவு நோயாளிகளுக்கு ஏற்படும் சுவையின்மை பிரச்னையை இந்துப்பு போக்குகிறது; ரத்த அழுத்தத்தை சீராக்குகிறது. அயோடினால் வரக்கூடிய தைராய்டு பிரச்னையை தடுக்கிறது.
எலும்பு தேய்மானம் உள்ளிட்ட எலும்புகளில் ஏற்படக் கூடிய பிரச்னைகளை சரி செய்கிறது; பல சிக்கல்களுக்கு காரணமாக அமையும் மலச்சிக்கலில் இருந்து விடுபட வைக்கிறது; உடற்பருமன் ஏற்படாமல் தடுக்கிறது.
மெட்டபாலிசத்தை அதிகப்படுத்துகிறது; மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது; செரிமானத்தை துாண்டுகிறது. மூப்படைவதைத் தள்ளிப் போடுகிறது; சுவாசத்தை சீராக்கிறது; தசைப்பிடிப்பைக் குறைக்கிறது. சிறுநீரகம் மற்றும் பித்தப்பை ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது; சைனஸ் பிரச்னை வராமல் தடுக்கிறது.

Wednesday, July 19, 2017

காய்ச்சிய நீரை மறுநாள் பருக கூடாது! thanks to dinamalar.com

காய்ச்சிய நீரை மறுநாள் பருக கூடாது!

ஆயுர்வேத மருத்துவர் ஹரிஹரன்: சாதாரணமான தண்ணீரில் மெக்னீசியம், கால்சியம், கார்பனேட், தாமிரம் போன்ற தாது பொருட்கள், இயற்கையாகவே கலந்துள்ளன. 'பேக்கேஜ்டு' குடிநீரில், சுத்திகரிப்புக்கு பின், இந்த தாதுப் பொருட்கள் எல்லாம் சேர்க்கப்படுகிறதா என்பது சந்தேகமே. மேலும், சுத்திகரிப்பு இயந்திர கருவியில் தண்ணீரை சுத்தப்படுத்தி கொண்டு 
வர, மூன்று மடங்குதண்ணீர் வீணாகிறது.வீட்டில் கிடைக்கும் ஆழ்துளை கிணறு தண்ணீர் அல்லது குழாய் தண்ணீரை, அப்படியே பருகலாம். ஆழ்துளை கிணறு தண்ணீர் உவர்ப்பாக இருந்தால், செப்பு பாத்திரத்தில் ஒரு நாள் முழுவதும் வைத்திருந்தால், அதுவே நன்றாக சுத்திகரித்து விடும். அந்த நீரை மண்பானையில் ஊற்றி வைத்து குடித்தால், அதைவிட சுவையான, பாதுகாப்பான குடிநீர் எதுவுமில்லை. செப்பு பாத்திரம், மண்பானை இரண்டும் உலகிலேயே மிகச்சிறந்த சுத்திகரிப்பு கருவிகள்.அதேபோல், எப்போதும் தண்ணீரை கொதிக்க வைத்து, குடிக்க வேண்டிய அவசியமும் இல்லை. நோய் பரவும் காலம், மழைக் காலங்களில் மட்டும் நன்றாக கொதிக்க வைத்து, வடிகட்டி பருகினால் போதும். மற்ற நாட்களில் சாதாரண தண்ணீரே போதும். இந்த காய்ச்சிய குடிநீரையும், வடிகட்டி அன்றே குடித்துவிட வேண்டும். முதல் நாள் காய்ச்சிய நீரை மறுநாள் பருகுவதால், எந்த நன்மையும் இல்லை.அதேநேரம், சென்னை போன்ற பெருநகரங்களில் நிலத்தடி நீர் மாசடைந்த நிலையில் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அந்த நீரை அப்படியே குடிக்கலாமா என்பது ஆய்வுக்குரியது. எனவே, அவர்கள், வீட்டிலேயே மூலிகை குடிநீர் தயார் செய்து பருகலாம்.கேரளாவில் பெரும்பாலான இடங்களில், பதிமுகம் குடிநீரை தான், மக்கள் பருகுகின்றனர். நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் பதிமுகம் மரப்பட்டையை வாங்கி, தண்ணீரில் ஊற வைத்து கொதிக்க வைத்து பருகலாம்.காய்ச்சும்போது தண்ணீர் ஊதா நிறத்தில் இருக்கும். இதை எல்லா காலத்திலும் எல்லாரும் பருகலாம். பதிமுகம், குடிநீரை சுத்தப்படுத்தும் தன்மை கொண்டுள்ளதோடு, நோய் எதிர்ப்பு சக்தியாகவும் செயல்படுகிறது. குறிப்பாக, இதய நோயாளிகள், கொழுப்பு பிரச்னை, இதய அடைப்பு உள்ளோருக்கு, பதிமுகம் நீர் மிகவும் நல்லது.கருங்காலி குடிநீரும், உடலுக்கு ஆரோக்கியம் தரும் மூலிகை நீர். கருங்காலி பட்டையுடன் வெட்டிவேர், ரத்த சந்தனம், விளாம் பிசின், கொத்தமல்லி, சீரகம் போன்ற மூலிகைகள் கலந்த கலவை கடைகளில் கிடைக்கிறது. இதை தண்ணீரில் சேர்த்து காய்ச்சி பருகுவதால் சளி, இருமல், தோல் மற்றும் ரத்தம் சம்பந்தமான வியாதிகள் குணமாகின்றன. சர்க்கரை நோயாளிகளுக்கு, கருங்காலி தண்ணீர் நல்லது.
இதுதவிர, சீரகத்தை லேசாக வறுத்து, தண்ணீரில் சிறிது நேரம் கொதிக்கவிட்டு வடிகட்டி, இளஞ்சூட்டில் அந்த நீரை பருகலாம். சீரக குடிநீர், செரிமான சுரப்பிகளை துாண்டி, நல்ல பசியை உண்டாக்கும். இந்த நீரைப் பருகுவதால் எந்தவித அஜீரணக் கோளாறுகளும் வராது. உடலில் உள்ள வாயுக்களைக் கட்டுப்படுத்துகிறது. வயிறு சார்ந்த நோய்களைப் போக்குவதுடன், நோய் தொற்றிலிருந்தும் பாதுகாக்கிறது.

Tuesday, July 11, 2017

இயற்கை முறையில் கொசுவை விரட்ட 8 வழிகள்..! #TipsforEscapefromMosquito thanks to vikatan.com

இயற்கை முறையில் கொசுவை விரட்ட 8 வழிகள்..! #TipsforEscapefromMosquito

கொசுவை
* கற்பூரவல்லி மற்றும் கற்றாழைச் சாற்றை தண்ணீருடன் சேர்த்து ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி வீட்டில் ஸ்ப்ரே செய்யது கொசுவை விரட்டலாம்.

* புதினாவை சிறிது தண்ணீர் விட்டு அரைத்து, வீடு முழுவதும் தெளிக்க வேண்டும். இதன் வாசனை பிடிக்காமல் கொசுக்கள் பறந்துவிடும்.

தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயுடன் சில துளிகள் லாவண்டர் எண்ணெய்விட்டுக் கலந்து சருமத்தில் தேய்த்தால், நல்ல வாசனை வரும்; கொசுவும் நெருங்காது.

* வேப்பிலை, நொச்சி, ஆடாதொடை, குப்பைமேனி இலைகளைக் கைப்பிடி அளவு எடுத்து அரைத்து, அதனுடன் தேங்காய் எண்ணெய் கலந்து காய்ச்சுவதன் மூலம் கிடைக்கும் பச்சிலை தைலத்தை கொசுவிரட்டியாகப் பயன்படுத்தலாம். அதனுடன் கற்பூரம் சிறிதளவு சேர்த்து காலை, மாலை வேளைகளில் வீட்டுக்கு சாம்பிராணிப் புகையாக போடலாம்.

* யூகலிப்டஸ் இலைகளை காயவைத்து வீடு முழுவதும் புகைபோட்டால் கொசுக்கள் வீட்டினுள் நுழையாது. 

* பூண்டு எண்ணெயையும், தண்ணீரையும் ஒன்றுக்கு ஐந்து என்ற விகிதத்தில் கலந்து வீட்டின் ஜன்னல்களில் கட்டி வைத்தால் கொசுக்கள் வராது.

* வேப்ப எண்ணெய் உடன் தேங்காய் எண்ணெயைக் கலந்து உடலில் தேய்த்துக்கொள்ளலாம். வேப்பிலை எண்ணெய், யூக்லிப்டஸ் எண்ணெய், கிராம்பு எண்ணெய் ஆகியவற்றை வீடு முழுவது தெளிக்கலாம். 

* எலுமிச்சைப் பழத்தை பாதியாக வெட்டி, அதில் ஆங்காங்கு கிராம்பை நட்டு வையுங்கள். இதன் வாசனை கொசுவை விரட்டும். ஆஸ்துமா நோயாளிகள் கொசுவை விரட்ட, புகை போடுவதைத் தவிர்ப்பது நல்லது.

நோய் பரப்பும் கொசுக்கள்... விரட்ட உதவும் ஆயுர்வேத வழிமுறைகள்!

"ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது" என்ற 'பிக் பாஸ்' ரியாலிட்டி ஷோ வாசகம் மாதிரிதான், கொசுக்கடியிருந்து தப்புவதும். இண்டு இடுக்கானாலும், மூலை முடுக்கானாலும் சர்வ சுதந்திரமாகப் பறந்து வந்து தாக்கி வதைத்து விடுகிறது. மலேரியா, டெங்கு, சிக்கன் குன்யா, ஜிகா, எல்லோ பீஃவர் என உயிரைப் பறிக்கும் பல நோய்களைச் சாதாரணமாகப் பரப்பிவிட்டுவிட்டுப் போகிறது. அதோடு, புதிது புதிதாக, பெயர் தெரியாத பல மர்மக் காய்ச்சல்கள் உண்டாகவும் கொசுக்களே காரணம் என்கிறார்கள் மருத்துவர்கள்.
 கொசுவை அழிக்கலாம்
மருத்துவத்தில் எத்தனையோ முன்னேற்றங்களை நாம் அடைந்திருந்தாலும், கொசுக்களை அழிப்பதோ, அதனால் உண்டாகும் நோய்களைத் தீர்ப்பது என்பதோ இன்றளவிலும் மாபெரும் சவாலான காரியமாகத்தான் இருக்கிறது. புலி, சிங்கம் போன்ற காட்டு விலங்குகளையும் பாம்பு போன்ற விஷ ஜந்துகளையும் கண்டு அஞ்சிய காலம் போய், தம்மாத்துண்டு கொசுக்களை கண்டு பீதி அடையவேண்டியிருக்கிறது. இன்னும் சில நாள்களில் மழைக்காலமும் தொடங்கப்போகிறது. வெறும் தூறல் மழையாக இருக்கட்டும், கொட்டும் பெருமழையாக இருக்கட்டும். சாதாரணமாக தேங்கி நிற்கும் மழைநீர்கூட கோடிக்கணக்கான கொசுக்களுக்குப் புகலிடமாக மாறிப்போகிறது. கொசுக்கடியிலிருந்து தப்பிக்க, மேட், கொசுவத்திச் சுருள், ஸ்பிரே, கொசுவிரட்டி... என எத்தனையோ வழிமுறைகளைப் பின்பற்றுகிறோம்.... இருந்தும் முற்றிலும் தப்பிக்க முடியவில்லை என்பதுதான் யதார்த்தம்.
``கொசுக்களை விரட்ட கெமிக்கல் கலந்த கொசுவிரட்டிகளைப் பயன்படுத்துகின்றனர். இவை, கண்கள், சருமத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்; நுரையீரலும் பாதிப்புக்கு உள்ளாகும். இப்படிப் பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் கெமிக்கல் கலந்த கொசுவிரட்டிகளைப் பயன்படுத்துவதைவிட, எளிதாகக் கிடைக்கும் இயற்கைப் பொருள்களைப் பயன்படுத்தி கொசுக்களை விரட்டலாம்’’ என்கிறார் ஆயுர்வேத மருத்துவர் ஆர்.பாலமுருகன். கொசுக்களிடம் இருந்து பரவும் நோய்களிலிருந்து எப்படி நம்மைத் தற்காத்துக்கொள்வது என்பது குறித்தும் ஆர்.பால முருகன்அவர் விளக்குகிறார்.
ஆயுர்வேதத்தில் உள்ள 8 சிறப்புப் பிரிவுகளில் ஒன்று, விஷ சிகிச்சை. பாம்பு, தேள், கொசு போன்ற விஷ ஜந்துகளின் கடியிலிருந்து காத்துக்கொள்வது எப்படி என்பது குறித்து விரிவாக இந்தப் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, ஆயுர்வேதத்தில் 'அகத தந்திரம்' என்றால், `விஷ சிகிச்சை’ என்று பெயர். விஷத்தினால் ஏற்படும் உயிரிழப்பைத் தடுத்து நிறுத்துவது என்று பொருள். (அதாவது, வடமொழியில், `கதம்’ என்றால் முடிந்தது. `அகதம்’ என்பது முடிவதை தடுத்து நிறுத்துவது என்று பொருள். `தந்திரம்’ என்றால் சிகிச்சை அல்லது தீர்க்கும் முறை என்று பொருள்.) இதை `அறுவை சிகிச்சையின் தந்தை’ என்று போற்றப்படும் சுஸ்ருதர் எழுதிய 'சுஸ்ருத சம்ஹிருதை' என்னும் ஆயுர்வேத நூலில் கூறியுள்ளார்.
ஆயுர்வேதத்தில்...
'ஸ்தாவரம்', 'ஜங்கமம்' என்று இரண்டு வகை உள்ளன. 'ஜங்கமம்' என்றால், இடம்விட்டு இடம்பெயர்வது (விலங்கு) என்று பொருள். இதில் நான்கு வகைகள் உள்ளன. `இந்த நான்கு வகைகளில் உலகில் உள்ள ஒட்டுமொத்த உயிரினங்களும் அடங்கும்’ என்கிறது ஆயுர்வேதம். அவை, தொப்புள்கொடி பிரிந்து பிறக்கும் (குட்டி போட்டு பால் கொடுக்கும்) உயிரினங்கள், முட்டையிலிருந்து உருவாகும் உயிரினங்கள், அசுத்தமான அல்லது சுத்தமான நீரில் இருந்து உருவாகும் உயிரினங்கள், மக்கிப்போன பொருள்களில் உருவாகும் உயிரினங்கள்.
தடிப்பு  
இதில் மூன்றாவது வகையான நீரில் உருவாகும் உயிரின வகையில்தான் கொசுக்கள் வருகின்றன. அதில், கிருமி, க்ருமி என இரண்டு வகை உள்ளன. கிருமி என்றால், கண்களால் காண முடியாதவை. க்ருமி என்பது கொசுக்களைப் போன்று கண்களால் காணக்கூடிய விஷ ஜந்து. கொசுவுக்கு ஆயுர்வேதத்தில் 'மசஹா' என்று பெயர். சில வகைக் கொசுக்கள் கடித்தால், அரிப்பு, தடிப்பு, சிவந்த கொப்புளம், வலி போன்றவை மட்டுமே ஏற்படும். ஆனால், குறிப்பிட்ட சில வகை கொசுக்கடிகளால் பரவும் நோயால் உயிரிழப்பேகூட உண்டாகும்.
கொசுக்கள் உருவாவதைத் தடுப்பது எப்படி?
இரண்டு நாள்களுக்கும் மேல் ஓர் இடத்தில் தண்ணீர்த் தேங்கினால், அங்கே இவை உருவாகும். கொசுவை விரட்டுவதோ, அழிப்பது என்பதோ மிகச் சிரமமான காரியம். எனவே, அவற்றை உருவாகாமால் தடுப்பதே சிறந்தது. அதற்கு, வீட்டிலோ, வீட்டைச் சுற்றியுள்ள பகுதிகளிலோ, மொட்டை மாடியிலோ தண்ணீர்த் தேங்காமால் பார்த்துக்கொள்ள வேண்டும். சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும்.
அசுத்தமான இடம் 
புகை கொசுவுக்குப் பகை!
புகை போடுதல் என்பது கொசுவை விரட்ட மிகச் சிறந்த வழிமுறை.
வேப்பிலை, நொச்சி இலை, யூகலிப்டஸ் இலை போன்றவற்றில் ஏதாவது ஒன்றைக் காயவைத்து வீடு முழுவதும் புகைபோட்டால், கொசுக்கள் வீட்டுக்குள் வராது.
காய்ந்த தேங்காய் நார்களை எரித்தால், அதில் இருந்து வரும் புகை அவற்றை எளிதில் விரட்டிவிடும்.
காலை, மாலை வேளைகளில் வீட்டுக்குச் சாம்பிராணிப் புகை போடலாம். இதுகூட கொசுக்களை விரட்ட உதவும்.
தப்பிக்க...
வேப்பிலை, நொச்சி, குப்பைமேனி போன்ற ஏதாவது ஒன்றின் இலைகளை ஒரு கைப்பிடி அளவு எடுத்து அரைத்து, அதனுடன் தேங்காய் எண்ணெய் கலந்து, உடலில் தேய்த்துக்கொள்வதன் மூலம் கொசுக்கடியிலிருந்து தப்பிக்கலாம்.
வேப்ப எண்ணெயுடன் தேங்காய் எண்ணெயைக் கலந்து, உடலில் தேய்த்துக்கொள்ளலாம்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீர்விட்டு, அதில் கற்பூரத்தைப் போட்டுவைத்தால், அதில் இருந்து வரும் வாசனைக்கு, கொசுக்கள் வீட்டுக்குள் வராது.
ஸ்பிரே 
வேப்பிலை எண்ணெய், யூகலிப்டஸ் எண்ணெய், கிராம்பு எண்ணெய் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை வீடு முழுவதும் தெளிக்கலாம்.
லெமன் கிராஸ் ஆயிலைத் தண்ணீரில் கலந்து, அதைக்கொண்டு தரையைத் துடைத்தால் அந்த வாசனைக்குக் கொசுக்கள் வீட்டுக்குள் வராது.
நில வேம்பு கஷாயம்
ஒரு கைப்பிடி வேப்பிலையை எடுத்து, நான்கு மடங்கு தண்ணீர் ஊற்றி, அதை இரண்டு மடங்காக வற்றவைத்து, அதைக் கஷாயமாக காலை, மாலை இரு வேளை குடிக்கலாம். இந்த நில வேம்பு கஷாயம் அரசு மருத்துவமனைகளில் இலவசமாகவே கிடைக்கும்.நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கும் படோலாதிக் கஷயாம் வாங்கிக் குடிக்கலாம்.

Monday, July 10, 2017

manapada padalkal

பூவினுக் கருங்கலம் பொங்கு தாமரை

ஆவினுக் கருங்கலம் அரனஞ் சாடுதல்

கோவினுக் கருங்கலம் கோட்டமில்லது

நாவினுக் கருங்கலம் நமச்சிவாயவே.


விழிக்கே அருளுண்டு அபிராம வல்லிக்கு வேதம் சொன்ன

வழிக்கே வழிபட நெஞ்சுண்டே எமக்கவ்வழி கிடக்கப்

பழிக்கே சுழன்று வெம்பாவங்களே செய்து பாழ்நரகக்

குழிக்கே அழுந்தும் கயவர் தம்மோடென்ன கூட்டினியே!


கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணெய்

உண்ட வாயன் என்உள்ளம் கவர்ந்தானை

அண்டர் கோன் அணி அரங்கன் என் அமுதினைக்

கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே.


பைரவி, பஞ்சமி, பாசாங்குசை, பஞ்சபாணி, வஞ்சர்

உயிர் அவி உண்ணும் உயர் சண்டி, காளி, ஒளிரும் கலா

வைரவி, மண்டலி, மாலினி, சூலி, வராஹி - என்றே

செயிர் அவி நான் மறை சேர் திருநாமங்கள் செப்புவரே


விழிக்குத் துணை திருமென் மலர்ப் பாதங்கள்! மெய்ம்மை குன்றா

மொழிக்குத் துணை முருகா எனும் நாமங்கள்! முன்பு செய்த

பழிக்குத் துணை அவன் பன்னிரு தோளும்! பயந்த தனி

வழிக்குத் துணை வடி வேலும் செங்கோடன் மயூரமுமே!