Wednesday, August 23, 2017

கமலாவுடன் பேசணும்போல இருக்கு...” - நெகிழவைக்கும் இயக்குநர் எஸ்பி.முத்துராமன் thanks vikatan.com

கமலாவுடன் பேசணும்போல இருக்கு...” - நெகிழவைக்கும் இயக்குநர் எஸ்பி.முத்துராமன்

ஆணி வேரானவள்!த.கதிரவன், படம்: தி.குமரகுருபரன்
‘ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா... வரமாட்டாரா?’ என்ற கேள்விக்கு விடைதேடி நாம் எல்லோரும் நகம் கடித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், அதே ரஜினிகாந்த், ‘தன் வாழ்வின் முக்கியத் தருணங்களில் எல்லாம் ‘அவர்’ தன்னோடு இருக்க வேண்டும்’ என்று `குறிப்பிட்ட’ ஒருவரின் வருகைக்காகக் காத்திருக்கிறார் என்றால் ஆச்சர்யம்தானே...?

பொங்கல், தீபாவளி மற்றும் வீட்டு விசேஷங்களில் ஆரம்பித்து சமீபத்திய ரசிகர்கள் சந்திப்பு நிகழ்வுவரை, `என் வாழ்க்கையின் வழிகாட்டி, உடன்பிறவாச் சகோதரர்’ என்றெல்லாம் ரஜினி நெகிழ்ந்து உருகும் அன்புக்குச் சொந்தக்காரரான ‘அவர்’, இயக்குநர் எஸ்பி.முத்துராமன். 

ரஜினியை வைத்து 25 வெற்றிப் படங்கள், கமல்ஹாசனோடு 10 படங்கள் எனத் தமிழ்த் திரையுலகின் உச்ச நடிகர்கள் இருவரையும் ஒருசேர இயக்கிய பெருமைக்குச் சொந்தக்காரர். பரபரப்பான அந்த நாள்களில் தன்னுடைய ஓட்டத்துக்கு உறுதுணையாக விளங்கிய தன் மனைவி கமலா மற்றும் குடும்ப உறுப்பினர்களின் பங்களிப்புகள் குறித்த நினைவுகளை நம்மோடு பகிர்ந்துகொண்டார்.
``1973-ல் ஆரம்பித்து 1993 வரையிலான 20 வருட காலமும் திரைத்துறையில் ஓய்வே இல்லாமல் உற்சாகமாக உழைத்துக்கொண்டிருந்தேன். காரணம், சிறுவயதிலிருந்தே சினிமா மீது எனக்கிருந்த வெறிபிடித்த ஆசை. ‘பத்து நாள்கள் கமல் பட ஷூட்டிங், பத்து நாள்கள் ரஜினி பட ஷூட்டிங்’ என்று இரவு பகலாக உழைத்தும் எனக்கு எதுவுமே போரடிக்கவில்லை.

சினிமாவில் மட்டுமே நான் கவனம் செலுத்திக்கொண்டிருந்த அந்தக் காலகட்டத்தில், என் குடும்பத்தைத் திறம்பட வழிநடத்திச் சென்றவள் என் மனைவி கமலா. என்னுடைய சுமைகளை அவள் தலையில் தூக்கிவைத்திருந்தேன். 

நான் வீட்டுக்கு வரும்போதெல்லாம், ‘கால்ல சக்கரம் கட்டின மாதிரி ஓடிக்கிட்டே இருக்கீங்களே… குடும்பம் பிள்ளைங்கன்னு இருக்கிறது ஞாபகத்துல இருக்கா, இல்லையா? ஒரு பத்து நிமிஷம் உக்காந்து பேசக்கூட நேரமில்லாம அப்படி என்ன வேலை… கொஞ்சநேரம் என்கிட்டே உக்காந்து பேசிட்டுத்தான் போங்களேன்...’ என்று அழாத குறையாகக் கெஞ்சுவாள். ஆனாலும், அவள் பேசுவது எதுவுமே என் கவனத்துக்குள் வராது. ‘நேற்று எடுத்த சீன் சரியாக வந்ததா? இன்றைய சீனை எப்படி எடுக்கலாம்…’ என்பது மாதிரியான சினிமா சிந்தனைகளே எனக்குள் ஓடிக்கொண்டிருக்கும்.

ஷூட்டிங் முடிந்து வீடுவந்த பிறகும்கூட திடீரென்று நள்ளிரவில் போன் வரும். ‘சார் இன்னிக்கு நான் நடிச்ச சீன் நல்லா வந்திருக்கா சார்… நாளைக்கு எனக்கு என்ன சீன் சார்…’’ என்று ரஜினி கேட்பார். அவரிடம் காட்சி பற்றி பேசி முடித்துவிட்டு தூங்கினால், மறுபடியும் அதிகாலையிலேயே எழுந்து ஷூட்டிங் ஸ்பாட்டுக்குக் கிளம்பிவிடுவேன். இப்படி சினிமாவையே மூச்சாக நினைத்த காரணத்தினால், என் குடும்பத்தை முழுமை யாகக் கவனிக்க முடியவில்லை. பிள்ளைகள் என்ன படிக்கிறார்கள், வீட்டில் என்ன செலவு, என்ன பிரச்னை என்று எதுவும் தெரியாது எனக்கு.
ரஜினி நடித்த ‘பாண்டியன்’ திரைப்பட ஷூட்டிங் சென்னை துறைமுகத்தில் நடைபெற்றுக்கொண்டிருந்தது. திடீரென்று ஒரு போன்கால், அவசரமாக வீட்டுக்கு வரச்சொல்லி வந்தது. என்னமோ ஏதோ என்ற பயமும் பதற்றமுமாக வீடுவந்து சேர்ந்தேன். தெரு முழுக்க கனத்துக்கிடந்த அமைதி என் பயத்தை இன்னும் அதிகமாக்கியது. தெரு முனையிலேயே எங்கள் வீட்டைச் சுற்றி நின்றிருந்த கூட்டம் ஏதோ அசம்பாவிதம் நடந்திருப்பதை உறுதி செய்தது. கார் நிற்கும் முன்னரே அவசரமாக இறங்கி வீட்டுக்குள் ஓடினேன்.  

அங்கே... என் மனைவி கமலாவின் உடல் மாலைகளுக்கு மத்தியில் கிடத்தப்பட்டிருந்தது. மாரடைப்பு ஏற்பட்டு இறந்துபோயிருந்தாள். உடலைப் பார்த்துக் கத்தினேன்... கதறினேன். போன உயிர் திரும்ப வருமா? 
‘கமலா இறக்கவில்லை... அளவுக்கு அதிகமான வேலைபளுவைக் கொடுத்து நானே அவளைக் கொன்றுவிட்டேன்' என்ற குற்ற உணர்வு இன்னமும் என்னுள் முள்ளாகக் குத்திக்கொண்டிருக்கிறது. இப்பவும் அவளிடம் மனம் விட்டுப் பேசணும் போல இருக்கு.
எல்லோருக்கும் நான் சொல்லிக்கொள்வது ஒன்றே ஒன்றுதான்... குடும்பம் என்ற அச்சாணியில்தான் நீங்கள் வெளியுலகைச் சுற்றிவருகிறீர்கள் என்பதை எப்போதும் மனதில் இருத்திக்கொள்ளுங்கள். உங்கள் லட்சியம், வெற்றி, பணம், புகழுக்காக வெறி கொண்டு செயல்படுங்கள்… தவறில்லை. ஆனால், உங்களின் ஆதாரமாகவும் ஆணி வேராகவும் இருக்கிற குடும்பத்துக்காகவும் கொஞ்சம் நேரம் ஒதுக்குங்கள். மனைவியிடம் அன்போடு பேசுங்கள். மாதம் ஒரு தடவையாவது குடும்பத்தோடு வெளியூர் பயணம் மேற்கொள்ளுங்கள். குழந்தைகளோடு குழந்தையாகக் குதூகலியுங்கள். தினமும் ஒருவேளையாவது குடும்ப உறுப்பினர்கள் அனைவரோடும் சேர்ந்து உட்கார்ந்து சாப்பிடுங்கள். மனைவிக்குக் கணவன் தேவைப்பட்டபோதெல்லாம் அவளுக்குத் துணையாக நான் இல்லை; இப்போது எனக்கு ஆறுதலும் அன்புமாக இருக்க என் மனைவி கமலா இல்லை.’’ 

அன்பின் ஏக்கம் தேங்கி நின்றது அவர் விழிகளில்!

Friday, August 18, 2017

நோய்கள் காணாமல்போக வேண்டுமா? - Courtesy: Dinamalar

Advertisement

பதிவு செய்த நாள்

19ஆக
2017 
00:00

நோய்கள் காணாமல்போக வேண்டுமா?


பி.சி.ஓ.எஸ்., - - 'பாலிசிட்டிக் ஓவரி சிண்ட்ரோம்' எனப்படும் நீர்க்கட்டிக்கான அறிகுறி, தீர்வு குறித்து கூறும், அறிஞர் அண்ணா அரசு சித்தா மருத்துவமனையின் சித்தா டாக்டர், வெண்தாமரை செல்வி: 15 - 44 வயதுள்ள பெண்களை, இன்று பயமுறுத்தும் விஷயம், நீர்க்கட்டி. இது, குழந்தையின்மை பிரச்னையில் முக்கிய பங்கு வகிக்கிறது.முறையற்ற மாதவிடாய், மாதவிடாயின் போது தொடர்ந்து ஏற்படும் ரத்தப்போக்கு, முகத்தில் லேசாக மீசை, தாடி வளர்வது, அடிவயிறு மற்றும் பெண் குறியில் தொடர்ந்து வலி ஏற்படுவது, உடல் பருமன் போன்றவை, நீர்க்கட்டிக்கான அறிகுறி. இளம் வயதிலேயே சிகிச்சை எடுக்காவிடில், திருமணமானதும் குழந்தை பெறுவதில் சிக்கல் உண்டாகும்.கடந்த, 25 ஆண்டுகளுக்கு முன், 1,000த்தில் ஒரு பெண்ணுக்கு தான் நீர்க்கட்டி பிரச்னை இருக்கும். இப்போது, 10ல் ஐந்து பெண்களுக்கு இப்பிரச்னை உள்ளது. அதனால் பயப்பட தேவையில்லை; ஆனால், சிகிச்சை அவசியம். நீர்க் கட்டி வரக் காரணம், நம் வாழ்வியல் முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் தான்.உடல் உழைப்பு இல்லாததும், கொழுப்பு சத்து உணவுகளை அதிகம் சாப்பிடுவதும் தான், நீர்க்கட்டி உருவாக முக்கிய காரணம்.
முன்பு, பெண்கள் வீட்டு வாசலில் கோலம் போடுவர்; குந்தி அமர்ந்து பாத்திரம் துலக்குவர்; வீடு பெருக்குவர், துடைப்பர்; இந்தியன் ஸ்டைல் கழிப்பறைகளை தான் பயன்படுத்தினர். இவை எல்லாம் ஒரு வகை ஆசனங்கள்.எனவே, வயதுக்கு வந்த பெண்களை, அம்மாக்கள், வீட்டு வேலை செய்ய பழக்க வேண்டும். அப்போது தான் அவர்கள் உடல் ஆரோக்கியம் பெறுவர். மேலும், சாப்பிடும் உணவில் சிறிது நெய் சேர்த்துக் கொள்ளுங்கள். உளுந்து வடை, உளுத்தங்களி, உளுந்து சாதம் போன்றவற்றை அன்றாடம் பயன்படுத்துங்கள். மாதவிடாய் பிரச்னைகளுக்கு, எள் சிறந்த தீர்வு தருகிறது. எள் பொடி, எள் துவையலை வாரத்திற்கு ஒருமுறை கட்டாயம்
உணவில் சேர்க்க வேண்டும்.இன்று பயன்படுத்தும் எண்ணெய் பெரும்பாலும், ரீபைண்ட் ஆயிலாக தான் உள்ளது. சத்துக்கள் அனைத்தும் அகற்றப்பட்டு, வெறும் சக்கையை தான் பயன்படுத்துகிறோம். செக்கில் ஆட்டப்பட்ட நல்லெண்ணெய், கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெயை சுழற்சி முறையில் சமையலில் பயன்படுத்தலாம். விதையுள்ள பப்பாளி, அன்னாசி பழம், மாதுளை போன்றவை, நீர்க்கட்டி நோய்க்கு சிறந்த மருந்து.வெண் பூசணியை உணவில் தொடர்ந்து சேர்த்து வர, இந்த நோய் காணாமல் போய் விடும். குறிப்பாக, வெண் பூசணியை மோர்க் குழம்பாக வைத்து
சாப்பிடலாம்.கன்னித்தன்மையை காக்கும், மிகச் சிறந்த கன்னி மூலிகை கற்றாழை. கற்றாழையில் உள்ள சோற்றை, நீர்க்கட்டி மற்றும் மாதவிடாய் பிரச்னை உள்ளோர் தினமும் சாப்பிட்டு வர, நீர்க்கட்டி காணாமல் போய் விடும்.அம்மாக்களே... முதல் வேலையாக உங்கள் பெண் குழந்தைகளுக்கு மாதவிடாய் முறையாக வருகிறதா என்று, இப்போதே கவனிக்க துவங்குங்கள்.

Monday, July 31, 2017

வருத்தங்களில் திருத்தங்கள்!
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

30ஜூலை
2017 
00:00
நாம், யாரால் நன்றாக வளர்ந்தோமோ, யாரெல்லாம் நமக்கு உதவியாக இருந்தனரோ, யாரெல்லாம், நம் வாழ்க்கையில், நல்ல திருப்பங்களை ஏற்படுத்தினரோ, யாருக்கெல்லாம் நாம் நன்றிக்கடன் பட்டிருக்கிறோமோ, அவர்கள் மீதும் கூட, எப்படியோ சில மனக்குறைகள், ஏற்பட்டு விட வாய்ப்பு உண்டு.
இரண்டாம் கருத்தே எழக் கூடாத, தாய் மீது கூட, ஒரு சிலருக்கு வருத்தம் இருக்கிறது. 'என்னைப் பார்த்து, அப்படி ஒரு வார்த்தை சொல்லிட்டார்; என்னை விட, என் உடன்பிறப்புகளுக்கே, சாதகமாக நடந்து கொண்டார்; என்னை நன்கு நடத்திய அளவு, என் பிள்ளைகளிடமோ, என் மனைவியிடமோ நடந்து கொள்ளவில்லை; சொத்து பிரிப்பில், நகை பிரிப்பில், அவர் நடந்து கொண்டது நியாயமில்லை...' என்கிற பாணியிலும், உள்ளூர சில வருத்தங்கள், மனதில் படிந்து விடுகின்றன.
உலகின் உன்னதமான பிறவியாம், தாய் பற்றியே இவ்வளவு எனில், தந்தை மற்றும் மற்ற உறவுகள் பற்றி கேட்கவே வேண்டாம்.
'என் அண்ணன் என்னை படாத பாடுபடுத்தினார்; என் தம்பி எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டான்; என் வயதையும் பாராமல், என் தங்கை பேசிய வார்த்தைகளை, என் கட்டை வேகும் வரை மறக்க முடியாது...' என்றெல்லாம், நினைவுப் பேரேட்டை, புரட்டி பார்த்து, நினைவுபடுத்திக் கொண்டு இருப்பவர்களும் உண்டு.
முதலாளி, ஊழியர், பங்குதாரர்கள் மற்றும் வீட்டைச் சுற்றி இருப்பவர்கள் மீது வருத்தம்; தொண்டு நிறுவனத்தில், பொதுக்காரியத்தில் ஈடுபடும் போது, அந்த அமைப்பின் பொறுப்பாளர்கள்; உறுப்பினர்களின் செயல்களில்; சொற்களில் வருத்தம் என்று, இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். 
இதை கூட குறை கூற மாட்டேன்; ஆனால், பழையனவற்றையெல்லாம் கிளறி, அவற்றை வெளிக்காட்டி, சண்டையாக ஆக்கி, உறவை உடைத்து கொள்வோருக்குத்தான், சில திருத்தங்களை சொல்ல விரும்புகிறேன்.
பைபிளில் ஒரு அருமையான வாசகம் வரும்... 'வருத்தப்பட்டுப் பாரம் சுமக்கிறவர்கள்...' என்று!
ஆம்... வருத்தம் என்பது ஒரு வகையில் பெரிய பாரமே!
இது, இனியும் தொடராதிருக்க, என்ன செய்வது என்று பார்ப்போம்...
ஒருவர், நமக்கு செய்த நன்மைகளை மறந்து, அவர்கள் நமக்கு இழைத்த கொடுமைகள், தீமைகள் மற்றும் பாதகங்களை மட்டுமே, கணக்கில் கொள்வதற்கு காரணம், நம் பக்குவமற்ற பார்வையே!
கூட்டி, கழித்துப் பார்க்கையில், அவர்கள் நமக்கு செய்த ஏதோ ஒரு நன்மையே பிரதானம் என்றால், இந்த நன்மைக்காக, மற்ற அனைத்தையும் மறந்து விடலாம்.
இல்லையில்லை, கெடுதலே அதிகம் என்றாலும், நமக்கு, வாழ்வின் மறுபக்கத்தை கற்று தந்தவர்கள் இவர்களே!
தடுக்கி விழுகிற குழந்தையும், சறுக்கி விழுகிற வாகன ஓட்டிகளும், அந்த நிகழ்ச்சிக்கு பின், சிறு அடிகளோடு தப்பி விடக் காரணம், இந்த அனுபவங்களால், கற்றுக் கொண்ட எச்சரிக்கை உணர்வே! இச்சம்பவம் தந்த விழிப்புணர்வால், இனி, இப்படி நிகழக் கூடாது என்று முன்னிலும் கவனமாக நடந்து கொள்ள ஆரம்பிக்கிறோம். 
அதுமட்டுமல்ல, 'இந்த அடிக்கு நான் பழக்கப்பட்டு விட்டதால், இனி, இப்படிப்பட்ட அடிகள், என்னை ஒன்றும் செய்யாது...' என்கிற மனத் தயாரிப்பும், நமக்குள் வந்து விடுகிறது.
இதையே, நமக்கு வலி தந்தவர்களுக்கும் பொருத்தி பார்க்க வேண்டும்.
ஒருவர் மீது வருத்தம் எழுகிற போது, கூடவே, சில சமாதானங்களும் எழ வேண்டும். 'போகின்றனர் விடு... அது, அவர்களது சுபாவம்...' என்றும், 'இப்படியே விட்டு விடுவோம்... வருத்தம் ஒரு தரப்பாக இருந்து விட்டு போகட்டும்; இதை கிளறப் போனால், புது வருத்தங்களே புறப்படும்...' என்றும் மனச் சமாதானம் செய்து கொள்ளுங்கள்.
மனித பராமரிப்பில் இல்லாத சில உயிரினங்கள், தங்கள் உடலில் காயம் ஏற்பட்டால், அதற்கு மருந்து தேடுவது இல்லை; தன் உமிழ்நீரையே மருந்தாக்கி, நாக்கால் தடவிக் கொள்கிறது.
இந்த முறை உயிரினங்களுக்கு மட்டுமல்ல, மனிதர்களுக்கும் பொருந்தும்!
எதற்கும் மலைக்காதீர்கள்! 
 எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

23ஜூலை
2017 
00:00
ஓட்டுனர் உரிமத்தை, உரிய நேரத்தில் புதுப்பிக்க தவறிய, இருவரது வாக்குமூலங்கள் இது...
'என்னை மாதிரியான ஒரு முட்டாளை நீங்க பார்க்கவே முடியாது. 'லைசென்ஸ்' முடிஞ்சு போனதை கவனிக்காம, இத்தனை நாளா, வண்டி ஓட்டியிருக்கேன்; ஏதாச்சும் விபத்து நடந்திருந்தா, என்ன ஆகியிருக்கும்... சே... இனிமே நடையா நடந்து, லஞ்சம் குடுத்து புதுப்பிக்கிறதுக்குள்ளே உயிர் போயிடும்...' 
மற்றொருவரோ, 'லைசென்ஸ் முடிஞ்சதை, எப்படியோ கவனிக்காம இருந்துருக்கேன்; ஒண்ணும் பிரச்னையில்லை... நாளைக்கே லீவை போட்டு, புதுப்பிக்கிற வேலையில இறங்கிட வேண்டியது தான்...'
'பொண்ணு, குதிரா வளர்ந்து நிக்குறா; இவளுக்கு, எப்படி, திருமணம் செய்ய போறேன்னே தெரியல...'
'ரொம்ப கஷ்டமான வேலை... முதலாளி சரியான சிடு மூஞ்சி; சும்மாவே திட்டி தீர்ப்பான்... எப்படா, ஒரு சின்ன தப்பு செய்வேன்னு, கண் கொத்தி பாம்பா, கவனிச்சிக்கிட்டே இருப்பான்; நெனைச்சாலே தலைய சுத்துது...'
'மேடையில், பெரிய பொறுப்பை குடுத்திருக்கீங்க... சரியா நடத்தி, உங்க எல்லார்கிட்டேயும், நல்ல பேர் வாங்குறது, ரொம்ப கடினம்கிற மாதிரி உணர்கிறேன். இப்ப கூட, ஒண்ணும் கெட்டுப் போகல; யாராவது முன் வந்தீங்கன்னா, என் பதவியை, விட்டு கொடுக்க, தயாரா இருக்கேன்; யார் முன் வர்றீங்க...'
- இப்படியெல்லாம், ஒவ்வொன்றிற்கும் மலைக்கிற மனிதர்களை, கடந்து வந்திருப்பீர்கள்.
உளவியலின் அடிப்படையில் சொல்கிறேன்... மலைப்புடன் ஒரு பணியை மேற்கொள்கிற போது, பொறுப்பின் கனத்தை, அதிகமாக்கி விடுகிறோம். அத்துடன், முதல் கட்டமாக, தங்களது சுவாரசியத்தை குறைத்து விடுகின்றனர்; சுவாரசிய குறைவாக ஏற்றுக் கொள்ளப்படும் பணிகள், மேலும் சிரமமானவையாக 
ஆகி விடுகின்றன.
மலைப்பு குணத்தின் இன்னொரு மோசமான அம்சம் என்ன தெரியுமா... சோம்பல் எனும் எதிர்மறை சக்தியை உருவாக்கி விடுவது தான். சுவாரசிய குறைவும், சோம்பலும் மோசமான இரட்டையர்கள்; இந்த இரண்டும் கை கோர்த்தால், வெற்றியையும், பணி நிறைவையும், நிர்மூலமாக்கி விடும்.
நம்மை மலைக்க வைக்கும் எதுவும், நமக்குரிய சவால்கள், நம் திறமைகளை பட்டை தீட்ட வந்த சாணை கற்களே தவிர, நம்மை நசுக்க வந்த சுத்தியல்கள் அல்ல! ஆக, நாம் வாழ்வின் பார்வைகளை, சிறிதளவு மாற்றிக் கொண்டால் போதும்.
எதிர்கொண்டே ஆக வேண்டிய சவால்களை, இது என்னுடைய கடமை என்று விரும்பி ஏற்று செய்தால், சுமையாக இருக்காது. 'கடனே...' என்று செய்தால், மலைப்பு தான்.
மாணவர்கள் மத்தியில் உரையாற்றும் போது, 'நான் கஷ்டப்பட்டு படிக்கிறேன் என்று சொல்லாதீர்கள்; இஷ்டப்பட்டு படிக்கிறேன் என்று சொல்லுங்கள். இப்படி சொன்னால், படிப்பு என்பது சுமையாகவும், மலைப்பாகவும் தெரியாது...' என்பேன். 
இது, மாணவர்களுக்கு மட்டுமல்ல, உங்களுக்கும் தான்!
சொல்கிறார்கள்
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

01ஆக
2017 
00:00
'கம கம' பற்பசையில் இருக்கு ஆபத்து!

இயற்கை மருத்துவர், நா.நாச்சாள்: இன்று நிறைய பேருக்கு மாங்காய், நெல்லிக்காய், புளியங்காய் உள்ளிட்ட புளிப்பு காய்களை சாப்பிட்டால் பல் கூசுகிறது. ஆரோக்கியமான பற்களின்றி, தேங்காயையே கடித்து சாப்பிட முடியாதவர்கள், கரும்பை எப்படி கடித்து சாப்பிட முடியும்! தவிர, பல் சொத்தை, பல் வலி, ஈறு வலி, ஈறு வீக்கம், பல் ஆட்டம், வாய் நாற்றம், சீழ் வடிதல் என, தொந்தரவுகளுக்கு குறைவே இல்லை.விளம்பரங்களுக்கும், தனிப்பட்ட நிறுவன சூழ்ச்சிக்கும், வியாபார தந்திரத்துக்கும் குழந்தைகளை நாம், காவு கொடுத்து கொண்டிருக்கிறோம். இதற்கு சிறந்த உதாரணம், 25 ஆண்டுகளுக்கு முன் வந்த ஒரு பற்பசை விளம்பரம், 'உடலுக்கு பாலும், பாதமும்... பற்களுக்கு உப்பும், கரித்துாளுமா... என்ன கேவலம்' என்றது. இன்றோ, 'உங்க டூத் பேஸ்ட்டில் உப்பு இருக்கா...' என்கிறது.பற்களை வெண்மையாக்கவும், நன்கு நுரை வரவும், நல்ல மணம், சுவையுடன் இருக்க அதிக ரசாயனங்களால் தயாரிக்கப்படுகின்றன இன்றைய பற்பசைகள். அது மட்டுமின்றி, பயன்படுத்துவோருக்கு ஒருவகை ஈர்ப்பை அளித்து, தொடர்ந்து அதையே உபயோகிக்கும் எண்ணத்தையும் துாண்டுகின்றன.தவிர, பற்பசையில், 'நிக்கோடின்' உள்ளிட்ட பொருட்களும் இருப்பதால், அதை பயன்படுத்துவதால், நுரையீரல் பாதிப்பு, புற்றுநோய் உருவாக காரணமாகிறது. ஒரு சிகரெட்டில் இருக்கும் நிக்கோடினின் அளவை விட, அன்றாடம் ஒருமுறை பயன்படுத்தும் பற்பசையில் அதிக நிக்கோடின் உள்ளது. பற்பசையில் சேர்க்கப்படும் சுவையூட்டிகளால் ஈர்க்கப்பட்ட குழந்தைகள், அதை முழுங்க, நினைத்து பார்க்கவே பயமாக இருக்கிறது.பற்பசைகளை அதிக அளவு எடுத்து கொள்வதாலும், அதிக நேரம் பற்களை துலக்குவதாலும் பற்களின், 'எனாமல்' பாதிக்கப்படுவதுடன், நாக்கின் சுவை மொட்டுக்கள் உணர்விழந்து, நரம்பு மண்டலம் வரை பாதிப்பை உருவாக்குகிறது.வாய் துர்நாற்றத்திற்கு முக்கிய காரணம், சீரான உணவு பழக்கமின்மை தான். இதை மாற்றிக் கொள்ளாமல், 'கம கம' பற்பசையை கொண்டு சரி செய்து விடலாம் என்று நினைக்காதீர்கள்.மேலும், வெந்நீரில் உப்பு கலந்து வாய் கொப்பளித்தல், நல்லெண்ணெயை வாயில் ஊற்றி கொப்பளித்தல், ஒவ்வொரு வேளை உணவிற்கு பின் வாய் மொத்தத்தையும் நடுவிரலால் தேய்த்து சுத்தப்படுத்துவது என, பற்களை சுத்தப்படுத்த சிறந்த வழிகள் உள்ளன. இது தவிர, வீட்டிலேயே இயற்கை பொருட்களால் செய்யப்பட்ட பற்பொடிகளை பயன்படுத்தியும், சுத்தம் செய்யலாம்.புதினாவை காய வைத்து பொடித்து, சரி சமமாக இந்துப்பு சேர்த்தும்; சுக்கு, கடுக்காய், இந்துப்பு சம அளவில் சேர்த்தும்; ஆலமர விழுதுப்பொடி, கருவேலம் பட்டை துாள், லவங்கப்பட்டை துாள், மிளகுத் துாள், சீரகத்துாள், இந்துப்பு ஆகியவற்றை சரி சமமாக சேர்த்து பற்பொடி தயாரித்து பயன்படுத்தலாம்.
மஞ்சள் கரிசலாங்கண்ணி, புதினா, நாவல், கொய்யா, மாந்துளிர்களை காயவைத்து, அவற்றுடன் இந்துப்பு சேர்த்து, மூலிகை பற்பொடி தயாரித்து பயன்படுத்த, பற்கள் உறுதியாகும்; பற்களில் ஏற்படும் தொந்தரவுகளும் சரியாகும்.மாற்றத்தை நோக்கி நாம் மாறாதிருந்தால், விரைவில் வேப்பங்குச்சிகளையும், ஆலங்குச்சிகளையும் அயல்நாட்டு, உள்நாட்டு நிறுவனங்கள், 'ஏசி' போட்ட சூப்பர் மார்க்கெட்டுகளில் சந்தைப்படுத்திவிடும்.