Tuesday, March 27, 2018

Posted Date : 17:12 (27/03/2018)Last updated : 17:12 (27/03/2018) Ten Healthy Habits to follow if you cross 20s thanks to vikatan.com

Ten Healthy Habits to follow if you cross 20s

‘Habit dies hard’, goes the adage! So also, good act that becomes a habit will stay for ever. Particularly, good habits that are imbibed by the youth in twenties will not vanish so easily. This is applicable not only for one’s mind but also for one’s health. The habits that form in early twenties will shape the future of an individual in many respects. Medical researches reveal that healthy habits will automatically increase the life span by 20 more years for an individual. The anti-ageing expert Kousalya Nathan lists ten healthy habits to be followed by people in their twenties as under:-
Water
Learn to measure BMI:- Body obesity is the threshold for diseases like blood pressure, heart ailment and diabetics to enter. Our total weight should be based on the BMI (Body Mass Index) and hence it is imperative that we maintain our weight in sync with our height.kausalya nathan
* Realize the importance of water:- Water is essential for getting rid of all toxic elements from our body. It will help us maintain proper and standard temperature in our body. It will further increase our metabolism and improve our immunity level. However, the habit of drinking adequate water has substantially reduced. Instead of water, people tend to drink tea, coffee and other cold drinks which sometimes create dehydration. In place of tea and coffee, one can take green tea, vegetable soup and juice etc. for overall wellness.
*Follow digital detox:- One of the recent diseases that has been attacking the youth is digital revolution. Today’s youngsters are literally immersed in computer, laptop, mobile, face book, whatsapp and such other social media mode as a result of which they are forced to skip proper food and rest almost every day. It is wise to give total rest to these gadgets at least once or twice a month as a means of digital detox.
*Do not avoid physical exercise:- One should do either walking or jogging or swimming or cycling or gym exercise on a daily basis without break according to one’s age and physical fitness. This will help in proper blood circulation which will keep the heart healthy. Obesity can be kept at bay. In addition to this, ‘pranayamam’ and ‘yoga’ can also be undertaken.
Excercise
Care in food intake:- Youth should necessarily give up fast food and junk food from open environment. Instead, they should take nutritious vegetables rich in vitamin A and C for good health.
*Healthy snacks :- One should avoid oil-fried (that too, in oil used again and again) items like chips and resort to eating nuts, protein rich sundal (chick pea) , Kozhukattai (sweet dumpling) and such other steamed edible items.
Snacks Food habit
Skin care is equally important:- One can wear sun glass while going in hot sun.  Sun screencream can be used. The face must be cleaned in pure water as often as possible so that the eyes can be protected better. Foods that are rich in vitamin C and E can be taken more in order to protect and promote proper skin care.
*Watch out Blood Pressure:- Fluctuation in blood pressure is responsible for heart ailments, kidney problems, stroke etc. Hence it is necessary that one should always take care of blood pressure.
BP
* Give work to the mind:- The brain should not be allowed to shrink at any cost. We must constantly give work to the brain by means of even entertainment task like playing Sudoku etc. Reading habit will do a lot of good. New language or new skill can be learnt so that the brain will ever be fresh and active.
*Do not neglect sex life:- Proper, periodical and healthy sex life is equally important. This will help one maintain proper hormone secretion and reduce mental depression and tension. In these days of rat race, one should never neglect to devote quality time for his life partner.
The above-mentioned ten healthy habits for the youngsters in their twenties are like TEN COMMANDMENTS. They do have invaluable benefits.

(This article written in Tamil by G Lakshmanan has been reproduced in English by P.S.Ramamurthy)

Wonder Fruit – Wood Apple!! thanks to vikatan.comThis article written by Maria Belsin has been reproduced in English by P.S.Ramamurthy)

Wonder Fruit – Wood Apple!!

From time immemorial, this wood apple has been in use in our country. There is a reference of this fruit in our traditional Sangam literature, ‘Natrinai’ wherein it is mentioned that this can be mixed with curd in the pot for more deliciousness. This has many medicinal values. It has ritual significance too – during Vinayaka Chadhurthi, it is also one of the favourite fruits offered to Lord Ganesha. Similarly, Lord Siva prefers five most important elements including the leaves of this wood apple.
Wood Apple

This is the designated tree of Visakam star. It is believed that because of the adverse rays of this star, some married couples are not fortunate enough to beget children and they are advised to relax under the shade of this wood apple tree to get them relieved of the ill-effects.
Besides the above, people who suffer from gastric problems, infection, cough, asthma, allergy, diabetes, anxiety-syndrome and uterus-related issues can benefit if they relax under the shade of wood apple tree.
The botanical name of this wood apple tree is Feronia Elephantum. In ayurvedic science, it is mentioned that those who plant this tree will be spared from hell after their departure. However, not many people come forward to plant this tree like others for no specific reason and hence it has become little rare in the flora world. This tree can be seen more in the forest regions apart from house gardens and temples. This will grow under any condition of soil and water and will grow up to 30 ft. easily. Leaves will be found in clusters with good odour. The fruits will be perfect round in shape and the inner skin will have the colour of the tree and the seeds will be white in colour.
The trees other names are kadipagai,kabitham, pitham,kavitham, vilavu, thandhasadam and velli. The various parts of this wood apple tree like tender leaves, leaves, fruit, tree barks, shell of the fruit and the gum have tremendous medicinal values. Some will spread horizontally and they are called nila vila. Some will grow as small trees and they are called siddhi vila and some will grow into big trees which are called peru vila in the field.
The taste of the wood apple before it ripes will be astringent. Once it ripes, the taste will be a combination of sour and astringent. The fruit can be mixed with palm jaggery or sugar and consumed. It will improve appetite, blood secretion, arrests vomiting and controls diarrhea. It will strengthen intestine and increase sperm counts. It will control acidity and the headache on account of that. It will shrink nerves and also removes  sputum
Wood apple -Vilampalam
Medicinal values:-
We can heat the wood apple, take out pulp and then mix it with chilli, onion, coriander, toor dhal and salt.  The resultant paste can be taken with rice which will be delicious for the taste buds.
The pulp can be mixed with honey and Indian long pepper powder and eaten in order to control hiccups and breathlessness. 
The fruit generally cures mouth ulcer, excess secretion of saliva and gum-related diseases.
It will improve appetite.
Post-delivery women can take it as porridge to strengthen inner organs.
Wood apple, even before ripening, can be used. We can boil the fruits in a pot and take out the pulp, mix it with curd and if taken continuously for three days in the morning, it will cure purging and diarrhoea. 
Similarly, in the same above process, the pulp can be mixed with tamarind, salt and coriander to make it like a paste. This can be taken along with rice for a week to cure acidity. The porridge form will cure piles related problems also
The outer shell can be ground and powdered and a lime size of it can be taken with hot water daily in the morning for 21 days by men who want to do away with their sex urge. If done continuously for 21 days, it will dilute the semen and make them hate not only sex urge but also women on the ground of sex. 
The offspring of wood apple can be taken like equivalent to a lime size and crushed with milk and sugar cubes for oral consumption so that it would take care of lack of appetite, cough with phlegm, loss of weight, acidity and body heat.
The powder of the leaves (10 gm) with butter milk can cure purging, if taken thrice daily. 
If the same is taken for two days, the stomach ache will be cured completely. 
The tender leaves of wood apple and citrus medica, curry leaves and lime leaves can equally dried and powdered in mixie. 100 gms of this powder can be mixed with 10 gm.each of pepper, nutmeg and again mixed with dried and powdered 100 gm. kadalai paruppu and 20 gm.salt. This resultant powder can be taken with rice daily so that acidity will be cured; will improve appetite and prevent vomiting sensation, unnecessary secretion of water in the mouth etc. It will add strength to the body, in general.
The wood apple tree gum can be dried and powdered. Women can eat this a bit with butter both in the morning and evening in order to cure their problems like white discharge, excess bleeding during menstruation, ulcers in their inner organs etc. There is a caution to be observed that while taking this as a medicine, salt should be avoided in the food.
Thus the wonders of wood apple are countless!

Sunday, March 25, 2018

சுவை தருவது மட்டுமே சிறந்த உணவல்ல! - நன்றி தினமலர்.


சுவை தருவது மட்டுமே சிறந்த உணவல்ல!

சமையலில் பயன்படுத்தப்படும் நறுமணமூட்டிகளின் மருத்துவ குணங்கள் குறித்து கூறும், டாக்டர் வி.விக்ரம்குமார்:வரலாற்றுப் பாதையில் மிளகு, சீரகம், பூண்டு, இஞ்சி, பெருங்காயம், ஏலக்காய் போன்றவற்றில் இருந்து வரும் வாசனையின் காரணமாக, முதலில் அவற்றை நறுமணமூட்டிகளாக மட்டும் பார்த்தது, மனித சமுதாயம்.

காலப்போக்கில், அவற்றில் உள்ள மருத்துவ குணங்களை கருத்தில் கொண்டு, நோய் தீர்க்கும் மருந்துகளாகவும் பார்க்க ஆரம்பித்தது.'இயற்கை மசாலா பொருட்களை அதிகமாக பயன்படுத்தும் நாடுகளை, பல நோய்கள் அண்டுவதில்லை' என, ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதிகமாக மசாலா பொருட்களை பயன்படுத்தும் இந்தியர்களை விட, அமெரிக்கர்களுக்கு மூன்று மடங்கு பெருங்குடல் புற்றுநோய் வருவதற்கான அபாயம் உண்டு.
மஞ்சள், கிராம்பு, லவங்கப்பட்டை போன்றவை, பெருங்குடல் புற்றுநோயிலிருந்து பாதுகாப்பு தருகின்றன. 'அல்சைமர்' எனப்படும் மறதி நோயும், மற்ற நாடுகளை விட, நம் நாட்டில் மிக குறைவு. அதேசமயம், மசாலா பொருட்களின் பயன்பாடு அதிகம் உள்ள ஸ்பெயின், கிரேக்கம் போன்ற நாடுகளில், இதய நோயாளிகளின் எண்ணிக்கை அவ்வளவாக இல்லை.
அசைவ உணவு உட்பட, கடினமான உணவுகள், எளிதாக செரிமானமாக, சீரகம் அல்லது ஓமம் சேர்ந்த தண்ணீரை குடித்தவர்கள், தற்போது, அவற்றை மறந்து, வாயு நிரப்பிய பன்னாட்டு குளிர்பானங்களை குடிக்கிறோம்; இயல்பாக நடக்க வேண்டிய செரிமானத்துக்கு, மாத்திரைகளின் துணை தேடுகிறோம்.முன்பு, சமையலறையில் நீங்கா இடம் பிடித்த அஞ்சறை பெட்டியில் அங்கம் வகித்த மருந்து பொருட்களை, இன்றைய சமையலறைகளில் அவ்வளவாக பார்க்க முடிவதில்லை. ரசப் பொடி, சாம்பார் பொடி, இஞ்சி - பூண்டு விழுது என, அனைத்துமே, 'இன்ஸ்டன்ட்' ஆகி விட்டன.அதிவேக உலகில், நேரமின்மையை முக்கிய காரணமாக கூறி, 'ரெடிமேட்' மசாலாக்களை வாங்கி பயன்படுத்துகிறோம். அவற்றின் தரம் மற்றும் கலப்படத்தை உறுதியாக சொல்ல முடியவில்லை.சாப்பிடும் போது, நாவுக்கு சுவை அள்ளி தருவது மட்டுமே, சிறப்பான உணவல்ல; சுவையுடன் சேர்த்து உடலுக்கு ஊட்டம் கொடுத்து, நோய் உண்டாகாமல் பாதுகாக்கும் அரணாகவும் பயன்படுவதே,
முழுமையான உணவு.அப்படிப்பட்ட முழுமையான, திருப்திகரமான உணவை உருவாக்க, மசாலா பொருட்கள் பயன்படுகின்றன. அவற்றின் பயன்களை தெரிந்து, பல்வேறு நாடுகள் பயன்படுத்த துடித்து கொண்டிருக்கின்றன. ஆகவே, நம்முடன் பின்னிப் பிணைந்த இயற்கையான, மசாலா பொருட்களை முறையாக பயன்படுத்தி, நோய்களிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்.


நடைப்பயிற்சியே நல்ல மருந்து – 2 (Post No.4835 thanks) by Tamil and Vedas Date: MARCH 21, 2018 Time uploaded in London- 6-30 am WRITTEN by S NAGARAJAN Post No. 4835 PICTURES ARE TAKEN from various sources. PICTURES MAY NOT BE RELATED TO THE ARTICLE; THEY ARE ONLY REPRESENTATIONAL. The may be subject to copyright. WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU. திருநெல்வேலியிலிருந்து வெளிவரும் மாத இதழான ஹெல்த்கேர் மார்ச் 2018 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை. முதல் கட்டுரை வெளியான தேதி 10-2-18 கட்டுரை எண் 4723 நடைப்பயிற்சியே நல்ல மருந்து - 2 ச.நாகராஜன் 7 சில ஆண்டுகளுக்கு முன்னர் எவ்வளவு தூரம் ஒருவர் ஒரு நாளைக்கு நடக்க வேண்டும் என்று கேட்டிருப்போமேயானால் அறிவியல் பூர்வமான பதில் வந்திருக்காது. ஆனால் இன்றோ அப்படியில்லை. ஏராளமான ஆய்வுகள் 10000 காலடி நடைப்பயிற்சியின் பயன்களை அறிவியல் பூர்வமாக நிரூபித்துள்ளன. அடிப்படை உண்மை இது தான்:- நடைப்பயிற்சி ஆரோக்கிய மேம்பாட்டைத் தருகிறது என்பதே. ஒவ்வொரு 20 காலடி நடைக்கும் ஒரு கலோரி எரிக்கப்படுகிறது. ஆக 10000 அடிகள் ஒரு நாளைக்கு எடுத்து வைத்தால் 500 கலோரி குறைகிறது! ஒரு வார முடிவில் இது ஒரு பவுண்ட் எடைக் குறைப்பிற்குச் சமம்! 8 எவ்வளவு தூரம் நடந்தோம் எத்தனை ஸ்டெப்ஸ் வைத்தோம் என்பதைக் கணக்கிடுவது இப்போது சுலபம். அதற்கென Pedometer உள்ளது. வாட்ச் போல கையில் கட்டிக் கொள்ளும் மீட்டர் எளிதானது; விலை குறைவானது; எவ்வளவு நேரம் நடந்தோம். எத்தனை ஸ்டெப்ஸ் எடுத்து வைத்தோம் என்பதை இது துல்லியமாகக் காட்டும். அர்பானா சாம்பெய்னில் உள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் மக்கின்லி ஆரோக்கிய மையம் என்ற மையம் உள்ளது. இது தரும் ஒரு தகவல் சுவையானது. ஒரு நாளைக்கு 2500 ஸ்டெப்ஸ் எடுத்து வைத்தால் - நீங்கள் மிக மோசமான அளவு செயல்பாடற்றவர்! ஒரு நாளைக்கு 5000 ஸ்டெப்ஸ் எடுத்து வைத்தால் நீங்கள் செயல்பாடற்றவர்! 5000 முதல் 7500 வரை ஸ்டெப்ஸ் எடுத்து வைத்தால், பரவாயில்லை, ஓரளவு நீங்கள் செயல்பாடுள்ளவர் ! 7501 முதல் 10000 வரை ஸ்டெப்ஸ் எடுத்து வைத்தால் நீங்கள் செயல்பாடுள்ளவர். 10001க்கு மேல் என்றாலோ நீங்கள் அதிகம் செயல்பாடுடையவர். கலோரி எரிப்பை மேம்படுத்த 2000 ஸ்டெப்ஸ் என்ற அளவு ஒரு இலக்காகும். இது ஒரு மைல் தூரம் நடப்பதைக் குறிக்கிறது. அதாவது 100 கலோரி எடைக் குறைப்பிற்கு இது சமம். ஆக 10000 ஸ்டெப்ஸ் என்பது ஒரு மாஜிகல் நம்பர் - எடைக் குறைப்பிற்கான, ஆரோக்கித்தை உறுதி செய்வதற்கான ஒரு மாய எண் என்றே கருதப்படுகிறது! 9 10000 அடிகள் என்ன மாஜிக்கை உடலில் செய்யும்? நீங்கள் உணவால் பெறும் கலோரிகளை கணிசமான அளவு எரித்தால் தான் உடலின் எடை கூடுவது நிற்கும். பொதுவான ஒரு விதி என்னவெனில் ஒரு பவுண்ட் கொழுப்புச் சத்து 3500 கலோரிகளுக்குச் சமமாக ஆகிறது. ஆக இதை அடைவதை ஒரு வார இலட்சியமாகக் கொள்ளலாம். ஆனால் பருமனாக ஒருவருக்கு இந்த விதி பொருந்தாது. ஏனெனில் அவர் நடப்பதற்குச் சற்று கூடுதல் சக்தி தேவையாக இருக்கிறது. 180 பவுண்டுள்ள ஒருவர் ஒரு மைல் தூரம் நடந்தால் அவர் 100 கலோரிகளையே எரிக்க முடியும் என்பது பொது விதி! ஆனால் ஒல்லியான ஒரு நபர் இதே தூரம் நடந்தால் இன்னும் அதிக கலோரிகளை எரிக்க முடியும்! அது மட்டுமல்லை, வேகத்தைப் பொறுத்தும் கலோரி எரிப்பு அமைகிறது! சராசரி நடைப் பயிற்சியின் வேகம் மணிக்கு 3 மைல் ஆகும். இதை இன்னும் விளக்கமாகச் சொல்வது என்றால் 160 பவுண்ட் எடையுள்ள ஒருவர் மெதுவாக மணிக்கு இரண்டு மைல் வேகத்தில் 30 நிமிடம் நடந்தார் எனில் அவர் எரிப்பது 102 கலோரிகளாகும். ஆனால் அவரே மணிக்கு மூன்றரை மைல் வேகத்தில் நடந்தால் அவர் எரிப்பது 157 கலோரிகளாகும். அதாவது 54 சதவிகிதம் கூடுதலாக! இது ஏன் என்பதைப் புரிந்து கொள்வது மிகவும் சுலபம்! வேகமாக நடந்தால் இன்னும் அதிக தூரத்தைக் குறிப்பிட்ட நேரத்தில் கடக்க முடியும், இல்லையா! 10 இன்னும் ஒரு சின்ன உண்மையும் இருக்கிறது! உங்களின் தற்போதைய எடைக்காக உங்களுக்கு 1800 கலோரி தினமும் தேவைப்படுகிறது எனக் கொள்வோம். ஆனால் நீங்களோ ஒரு நாளக்கு எடுக்கும் உணவில் 2300 கலோரிகள் உள்ளது என்றால், 10000 ஸ்டெப்ஸ் நீங்கள் தினமும் எடுத்து வைத்தாலும் அதிகப் படி உள்ள 500 கலோரியைத் தான் உங்கள் நடைப் பயிற்சி கழித்து பாலன்ஸ் செய்கிறது. ஆக மொத்தக் கணக்கில் ஜீரோ பாலன்ஸ் தான் இருக்கும்! எடை குறையாது. 10000 ஸ்டெப்ஸை Pedometerஐ வைத்துத் தான் போட்டேன், எடை குறையவில்லையே என்று அங்கலாய்க்கக் கூடாது! உணவில் எடுத்தது 2300 கலோரிகள் அன்றாடச் செயல்பாட்டில் எரித்தது 1800 கலோரிகள் + நடைப் பயிற்சியில் எரித்தது 500 கலோரிகள் = 2300 கலோரிகள் பாலன்ஸ் 0. ஆக எடைக் குறைப்பு இருக்காது! 11 ஒவ்வொரு நீண்ட பயணமும் முதல் ஸ்டெப்பை எடுத்து வைப்பதில் தான் ஆரம்பிக்கிறது. முயற்சியுடன் முதல் காலடியை எடுத்து வைத்தால் மற்றதெல்லாம் சுலபம்; நோக்கத்தை மனதில் இறுத்திக் கொண்டால் அனைத்தும் தானே நடக்கும்! எல்லாம் உங்கள் கையில் தான் சார் இருக்கிறது என்று சொல்வது வழக்கம்! ஒரு தடவையாவது, சற்று மாற்றிச் சொல்வோம் - எல்லாம் உங்கள் காலில் தான் சார் இருக்கிறது! வாழ்த்துக்கள்! *** குறிப்பு : 1 பவுண்டு எடை = 0.45359 கிலோகிராம் 1 கிலோகிராம் எடை = 2.2046 பவுண்டு கீழே தரப்பட்டுள்ள அட்டவணை உடல்பயிற்சி , கலோரி எரிப்பு, உடல் எடை ஆகியவற்றை உங்கள் எடைக்கும் பயிற்சிக்கும் தகப் பார்த்து பயனடையலாம்!


நடைப்பயிற்சியே நல்ல மருந்து – 2 (Post No.4835)

by Tamil and Vedas
Date: MARCH 21, 2018


Time uploaded in London- 6-30 am


WRITTEN by S NAGARAJAN


Post No. 4835

PICTURES ARE TAKEN from various sources. PICTURES MAY NOT BE RELATED TO THE ARTICLE; THEY ARE ONLY REPRESENTATIONAL. The may be subject to copyright.



WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.



திருநெல்வேலியிலிருந்து வெளிவரும் மாத இதழான ஹெல்த்கேர் மார்ச் 2018 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை. முதல் கட்டுரை வெளியான தேதி 10-2-18 கட்டுரை எண் 4723

நடைப்பயிற்சியே நல்ல மருந்து - 2

ச.நாகராஜன்

7
சில ஆண்டுகளுக்கு  முன்னர் எவ்வளவு தூரம் ஒருவர் ஒரு நாளைக்கு நடக்க வேண்டும் என்று கேட்டிருப்போமேயானால் அறிவியல் பூர்வமான பதில் வந்திருக்காது.
ஆனால் இன்றோ அப்படியில்லை.
ஏராளமான ஆய்வுகள் 10000 காலடி நடைப்பயிற்சியின் பயன்களை அறிவியல் பூர்வமாக நிரூபித்துள்ளன.
அடிப்படை உண்மை இது தான்:- நடைப்பயிற்சி ஆரோக்கிய மேம்பாட்டைத் தருகிறது என்பதே.
ஒவ்வொரு 20 காலடி நடைக்கும்  ஒரு கலோரி எரிக்கப்படுகிறது. ஆக 10000 அடிகள் ஒரு நாளைக்கு எடுத்து வைத்தால் 500 கலோரி குறைகிறது! ஒரு வார முடிவில் இது ஒரு பவுண்ட் எடைக் குறைப்பிற்குச் சமம்!

8

எவ்வளவு தூரம் நடந்தோம் எத்தனை ஸ்டெப்ஸ் வைத்தோம் என்பதைக் கணக்கிடுவது இப்போது சுலபம். அதற்கென Pedometer உள்ளது. வாட்ச் போல கையில் கட்டிக் கொள்ளும் மீட்டர் எளிதானது; விலை குறைவானது; எவ்வளவு நேரம் நடந்தோம். எத்தனை ஸ்டெப்ஸ் எடுத்து வைத்தோம் என்பதை இது துல்லியமாகக் காட்டும்.
அர்பானா சாம்பெய்னில் உள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் மக்கின்லி ஆரோக்கிய மையம் என்ற மையம் உள்ளது. இது தரும் ஒரு தகவல் சுவையானது.
ஒரு நாளைக்கு 2500 ஸ்டெப்ஸ் எடுத்து வைத்தால் - நீங்கள் மிக மோசமான அளவு செயல்பாடற்றவர்!
ஒரு நாளைக்கு 5000 ஸ்டெப்ஸ் எடுத்து வைத்தால் நீங்கள் செயல்பாடற்றவர்!
5000 முதல் 7500 வரை ஸ்டெப்ஸ் எடுத்து வைத்தால், பரவாயில்லை, ஓரளவு நீங்கள் செயல்பாடுள்ளவர் !
7501 முதல் 10000 வரை ஸ்டெப்ஸ் எடுத்து வைத்தால் நீங்கள் செயல்பாடுள்ளவர்.
10001க்கு மேல் என்றாலோ நீங்கள் அதிகம் செயல்பாடுடையவர்.
கலோரி எரிப்பை மேம்படுத்த 2000 ஸ்டெப்ஸ் என்ற அளவு ஒரு இலக்காகும். இது ஒரு மைல் தூரம் நடப்பதைக் குறிக்கிறது. அதாவது 100 கலோரி எடைக் குறைப்பிற்கு இது சமம்.
ஆக 10000 ஸ்டெப்ஸ் என்பது ஒரு மாஜிகல் நம்பர் - எடைக் குறைப்பிற்கான, ஆரோக்கித்தை உறுதி செய்வதற்கான ஒரு மாய எண் என்றே கருதப்படுகிறது!

9
10000 அடிகள் என்ன மாஜிக்கை உடலில் செய்யும்? நீங்கள் உணவால் பெறும் கலோரிகளை கணிசமான அளவு எரித்தால் தான் உடலின் எடை கூடுவது நிற்கும்.
பொதுவான ஒரு விதி என்னவெனில் ஒரு பவுண்ட் கொழுப்புச் சத்து 3500 கலோரிகளுக்குச் சமமாக ஆகிறது.
ஆக இதை அடைவதை ஒரு வார இலட்சியமாகக் கொள்ளலாம்.
ஆனால் பருமனாக ஒருவருக்கு இந்த விதி பொருந்தாது. ஏனெனில் அவர் நடப்பதற்குச் சற்று கூடுதல் சக்தி தேவையாக இருக்கிறது. 180 பவுண்டுள்ள ஒருவர் ஒரு மைல் தூரம் நடந்தால் அவர் 100 கலோரிகளையே எரிக்க முடியும் என்பது பொது விதி!
ஆனால் ஒல்லியான ஒரு நபர் இதே தூரம் நடந்தால் இன்னும் அதிக கலோரிகளை எரிக்க முடியும்!
அது மட்டுமல்லை, வேகத்தைப் பொறுத்தும் கலோரி எரிப்பு அமைகிறது!
சராசரி நடைப் பயிற்சியின் வேகம் மணிக்கு  3 மைல் ஆகும்.
இதை இன்னும் விளக்கமாகச் சொல்வது என்றால் 160 பவுண்ட் எடையுள்ள ஒருவர் மெதுவாக மணிக்கு இரண்டு மைல் வேகத்தில் 30 நிமிடம் நடந்தார் எனில் அவர் எரிப்பது 102 கலோரிகளாகும். ஆனால் அவரே மணிக்கு மூன்றரை மைல் வேகத்தில் நடந்தால் அவர் எரிப்பது 157 கலோரிகளாகும். அதாவது 54 சதவிகிதம் கூடுதலாக!
இது ஏன் என்பதைப் புரிந்து கொள்வது மிகவும்  சுலபம்!
வேகமாக நடந்தால் இன்னும் அதிக தூரத்தைக் குறிப்பிட்ட நேரத்தில் கடக்க முடியும், இல்லையா!


10
இன்னும் ஒரு சின்ன உண்மையும் இருக்கிறது! உங்களின் தற்போதைய எடைக்காக உங்களுக்கு 1800 கலோரி தினமும் தேவைப்படுகிறது எனக் கொள்வோம். ஆனால் நீங்களோ ஒரு நாளக்கு எடுக்கும் உணவில் 2300 கலோரிகள் உள்ளது என்றால், 10000 ஸ்டெப்ஸ் நீங்கள் தினமும் எடுத்து வைத்தாலும் அதிகப் படி உள்ள 500 கலோரியைத் தான் உங்கள் நடைப் பயிற்சி கழித்து பாலன்ஸ் செய்கிறது. ஆக மொத்தக் கணக்கில் ஜீரோ பாலன்ஸ் தான் இருக்கும்! எடை குறையாது.
10000 ஸ்டெப்ஸை Pedometerஐ வைத்துத் தான் போட்டேன், எடை குறையவில்லையே என்று அங்கலாய்க்கக் கூடாது!
உணவில் எடுத்தது 2300 கலோரிகள்
அன்றாடச் செயல்பாட்டில் எரித்தது 1800 கலோரிகள் + நடைப் பயிற்சியில் எரித்தது 500 கலோரிகள் = 2300 கலோரிகள்
பாலன்ஸ் 0. ஆக எடைக் குறைப்பு இருக்காது!
11
ஒவ்வொரு நீண்ட பயணமும் முதல் ஸ்டெப்பை எடுத்து வைப்பதில் தான் ஆரம்பிக்கிறது.
முயற்சியுடன் முதல் காலடியை எடுத்து வைத்தால் மற்றதெல்லாம் சுலபம்; நோக்கத்தை மனதில் இறுத்திக் கொண்டால்  அனைத்தும் தானே நடக்கும்! எல்லாம் உங்கள் கையில் தான் சார் இருக்கிறது என்று சொல்வது வழக்கம்!
ஒரு தடவையாவது, சற்று மாற்றிச் சொல்வோம்  - எல்லாம் உங்கள் காலில் தான் சார் இருக்கிறது!
வாழ்த்துக்கள்!
***
குறிப்பு : 1 பவுண்டு எடை = 0.45359 கிலோகிராம்
1 கிலோகிராம் எடை = 2.2046 பவுண்டு
கீழே தரப்பட்டுள்ள அட்டவணை உடல்பயிற்சி , கலோரி எரிப்பு, உடல் எடை ஆகியவற்றை உங்கள் எடைக்கும் பயிற்சிக்கும் தகப் பார்த்து  பயனடையலாம்!

Friday, March 16, 2018

குழந்தைகள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் குடிக்கக் கூடாது’ - குளிர்பானத் தயாரிப்பு நிறுவனமே குறிப்பிடும் எச்சரிக்கை! - #SoftDrinksSideEffefcts thanks to vikatan.com

குழந்தைகள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் குடிக்கக் கூடாது’ - குளிர்பானத் தயாரிப்பு நிறுவனமே குறிப்பிடும் எச்சரிக்கை! - #SoftDrinksSideEffefcts


டந்த வாரம் ரயில்வே ஸ்டேஷனில் நடந்த ஒரு நிகழ்வு… கருமையான  குளிர்பானத்துக்குள்ளிருக்கும் உட்பொருள்களைப் பற்றித் தெரிந்துகொள்வதற்காக குளிர்பானம் ஒன்றை வாங்கினேன். 250 மி.லி கொள்ளளவு கொண்ட அதன் விலை இருபத்தைந்து ரூபாய். அதே கடையில் ஐந்து வயது மதிக்கத்தக்க சிறுவன், அதே குளிர்பானத்தின் பெயரை உரிமையுடன் சொல்லி, தனது தந்தையிடம் கேட்டான். தந்தையும் எந்தவித மறுப்புமின்றி வாங்கிக் கொடுத்தார். சிறுவன், தான் விரும்பிய பொருள் கிடைத்த மகிழ்ச்சியுடன் சில்லென்ற குளிர்பானத்தைப் பருகினான். சிறுவன் நடந்துகொண்டே குளிர்பானத்தைப் பருகப் பருக, நான் அந்தப் பாட்டிலில் அச்சிடப்பட்டிருந்த வாசகங்களைப் படித்தேன்.
குளிர்பானம்
சிறியதாக அச்சிடப்பட்டிருக்கும் உட்பொருள்கள்...
`குளிர்பானத்தின் பெயர் (கூடுதல் சக்தியுடன் என்ற அடைமொழியுடன்)… அதிகளவு கஃபைன் (Caffeine) கொண்டது… குழந்தைகள், பாலூட்டும் தாய்மார்கள், கர்ப்பிணிகள் குடிக்கக் கூடாது… கஃபைன் அலர்ஜி உள்ளவர்கள் குடிக்கக் கூடாது… ஒரு நாளைக்கு 500 மிலி-க்கு அதிகமாகப் பருகக் கூடாது’ என்றெல்லாம் லென்ஸ் வைத்துப் பார்க்கும் அளவுக்கு, மிகச் சிறிய எழுத்துகள் பாட்டிலில் அச்சிடப்பட்டிருந்தன. ஒரு நுகர்வுப் பொருளில் இருக்கும் உட்பொருள்களைப் படித்துப் பார்த்து வாங்கும் விழிப்புஉணர்வு, மக்களிடம் இல்லை. அப்படியிருக்கும்போது, இவ்வளவு எச்சரிக்கைக் குறிப்புகள் கொண்ட ஒரு குளிர்பானத்தை, விதவிதமான மனிதர்கள் வந்துபோகும் ரயில் நிலையத்தில் விற்கும் நியாயமற்ற சமுதாயத்தில்தான் நாம் வாழ்கிறோம். அதே குளிர்பானம் பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள், மளிகைக்கடைகள்... என அனைத்து இடங்களிலும் சர்வ சாதாரணமாகக் கிடைத்துக்கொண்டிருக்கிறது என்பதுதான் வேதனை!
கஃபைன் மட்டுமா?
கர்ப்பிணிகள்… பாலூட்டும் தாய்மார்கள்… குழந்தைகள் குடிக்கக் கூடாத அளவுக்கு அதிலுள்ள பொருள் கஃபைன் மட்டும்தானா... அல்லது வேறு ஏதாவது இருக்கிறதா? நமக்குத் தெரிய வாய்ப்பில்லை. செயற்கைக் குளிர்பான நிறுவனத்துக்கே வெளிச்சம். வயது வித்தியாசமின்றி, அந்த நிறுவனமே அறிவுறுத்தும் எச்சரிக்கையை மீறி, அவர்களின் குளிர்பானம் அனைவராலும் குடிக்கப்படுவதுதான் நிதர்சனம். நான் பார்த்தது ஒரு சிறுவன். இன்னும் எத்தனையோ சிறுவர்களின் பிஞ்சு உறுப்புகள், அந்தக் குளிர்பானத்தை, அதிலுள்ள சாப்பிடக் கூடாத உட்பொருள்களை கிரகித்துக்கொண்டுதான் இருக்கின்றன.
கஃபைன்
பாதிக்கப்படுவது யார்?
விஷயம் என்ன தெரியுமா? குளிர்பானங்களை வியாபாரம் செய்யும் கடைக்காரர்களுக்குமேகூட அதிலிருக்கும் பாதகங்களைப் பற்றித் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. காரணம், அவ்வளவு சிறிய எழுத்துகளில் எச்சரிக்கைவிடுத்திருக்கிறார்கள். விஷயம் தெரிந்தால், அறம் சார்ந்த விற்பன்னர்கள் உறுதியாக விற்பனை செய்ய மாட்டார்கள். `குழந்தைகள் குடிப்பதற்கு உகந்ததல்ல’ என்று அச்சிடப்பட்டிருக்கும் குளிர்பானத்தின் தீவிரம் புரியாமல் பருகும் குழந்தைகளுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டு, நுகர்வோர் நீதிமன்றத்துக்குச் சென்றாலும் வழக்கு நிற்காது. தாங்கள் சிறியதாக அச்சிட்ட எழுத்துகளை, பெரியதாக நீதிமன்றத்தில் ஒப்படைப்பார் அந்தப் பன்னாட்டுக் குளிர்பான நிறுவனத்துக்காக வாதாடும் வழக்கறிஞர். கடைசியில் பாதிக்கப்படுவது ஒன்றும் அறியாத அப்பாவி மக்கள்தாம்.
இளைஞர்களின் உற்சாக பானம்!
கஃபைன் கலந்த குளிர்பானம் குறித்த எனது அனுபவங்களை சென்னையிலிருக்கும் பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரியும் நண்பரிடம் பேசிக்கொண்டிருந்தேன். அப்போது அவர் அதிர்ச்சியான தகவல் ஒன்றைப் பகிர்ந்துகொண்டார். குளிர்பானத்தில் நிறைய ’கஃபைன்’ இருப்பதாக விளம்பரப்படுத்தப்படுவதால், இரவுநேரப் பணியில் நீண்ட நேரம் கண்விழித்து வேலை செய்யவேண்டிய இளைஞர்களின் உற்சாக பானமாக அது உருவெடுத்திருக்கிறதாம். `ஒரு நாளைக்கு 500 மி.லி-க்கு மேல் குடிக்கக் கூடாது’ என்று எச்சரிக்கப்பட்டிருக்கும் நிலையில், குறைந்தது ஒரு லிட்டர் வரை ஒரே இரவில் பல இளைஞர்கள் பருகுகிறார்களாம். இப்படியே தினமும் தொடர்ந்தால், கஃபைனின் அளவு அதிகரித்து, மிகப் பெரிய பாதிப்புகளை உண்டாக்கும்.
குழந்தைகள் பாதிப்பு
கஃபைன் ஏற்படுத்தும் பாதிப்புகள்...
உறங்காமல் இருப்பதற்காக அளவுக்கு மீறி காபி குடிப்பதே பாதிப்புகளை ஏற்படுத்தும் என்ற நிலையில், தனியாக கஃபைன் சேர்க்கப்பட்ட பானத்தை அருந்தினால், விரைவில் மிகப் பெரிய பாதிப்புகள் ஏற்படும். அந்தக் குளிர்பானத்தில் இருக்கும் கஃபைனின் அளவு, ஏறக்குறைய 40 மி.கி / 250 மி.லி. அதிக அளவிளான கஃபைன் (High caffeine) என்றும் அதில் அச்சிடப்பட்டிருக்கிறது. நான் குறிப்பிட்டிருப்பது அதிகளவில் கஃபைன் கலக்கப்பட்ட ஒரு பன்னாட்டுக் குளிர்பானத்தைப் பற்றி. அது மட்டுமில்லாமல், கஃபைன் கலக்கப்பட்ட எத்தனையோ பன்னாட்டு குளிர்பானங்கள் பொதுமக்களைக் கவரும் வகையில் வெவ்வேறு ரூபங்களில் வலம்வருகின்றன.
அளவுக்கு அதிகமாக கஃபைன் நமது ரத்தத்தில் கலக்கும்போது, ஒழுங்கற்ற இதயத்துடிப்பு, மூச்சுவிடுவதில் சிரமம், மயக்கம், தலைவலி, தூக்கமின்மை, மனஅழுத்தம்... எனப் பல்வேறு பாதிப்புகளை உண்டாக்கும். `கஃபைனால் தூண்டப்பட்ட மனப்பதற்றம்’ (Caffeine induced anxiety disorder) என்ற நோய்ப் பிரிவு, மனநோய்கள் சார்ந்த வகைப்பட்டியலில் இடம்பெற்றிருக்கிறது. அதிகளவு கஃபைன் கலந்த குளிர்பானத்தை ஒருவர் குடித்து, அதனால் பாதிப்புகள் ஏற்படுமானால் அதற்கென்ன மருத்துவம் தெரியுமா? விஷத்தை குடித்தவர்களுக்குக் கொடுக்கப்படும் மருத்துவம்தான் அவர்களுக்கும்!
குளிர்பானங்களில் சேர்க்கப்படும் கஃபைனால் ஏற்படும் பாதிப்புகள் ஒருபுறமிருக்க, அளவுக்கு மீறிய செயற்கைச் சர்க்கரைகளால் உடல் பருமன், சர்க்கரைநோய் என பாதிப்புகள் மறுபுறம் உருவெடுக்கும். `புகைப்பிடித்தால் புற்றுநோய் உண்டாகும்’ என்று சிகரெட் அட்டையில் எழுதப்பட்டிருப்பதைப்போல, `செயற்கை பானங்களை அருந்தினால் தொற்றா நோய்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்’ என்று அவரவர் மனங்களில் எழுதிவைத்துக்கொண்டு அவற்றை தவிர்த்தால் ஆரோக்கியத்துக்கு நல்லது.
கோலா
ஒரு நாளைக்கு ஒருவர் ¼ லிட்டர் தண்ணீர் குடிக்கிறார் என்றால், அவரது இரைப்பை ¼ லிட்டர் அளவு விரிவடையும். அதுவே வாயு நிரப்பப்பட்ட ¼ லிட்டர் குளிர்பானத்தைப் பருகினால், இரைப்பையானது ½ லிட்டர் வரை விரிவடையும். இதன் காரணமாக உணவுக்குழாயை நோக்கி, இரைப்பையின் அமிலம் கலந்த கூழ்மங்கள் எதுக்களிக்கும். தொடர்ந்து இப்படி நிகழும்போது, உணவுக்குழாயின் திசுக்கள் பாதிப்படைந்து, தாங்க முடியாத நெஞ்செரிச்சல், வலி ஏற்படும். இப்படி உணவுக்குழாயின் திசுக்கள் பாதிப்படைவதை ‘பாரட்ஸ் ஈஸோபேகஸ்’ (Barrett’s oesophagus) என மருத்துவ உலகம் அழைக்கிறது. அடுத்தகட்டமாக உணவுக்குழாயில் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன. வாயு நிரப்பப்பட்ட குளிர்பானங்கள் அதிகமாக விற்பனையாகும் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் உணவுக்குழாய் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகம்.
பதப்படுத்தப்பட்ட பழச்சாறுகள்...
வேனிற்காலத்தை மனதில் வைத்து, செயற்கைக் குளிர்பானங்கள் சார்ந்த விளம்பரங்கள் அதிகளவில் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகத் தொடங்கிவிட்டன... உங்கள் அபிமான நட்சத்திரங்களின் வாய்மொழியுடன்! செயற்கைக் குளிர்பானங்கள் மட்டுமல்லாமல், `பழச்சாறுகள் மட்டுமே’ என்று விளம்பரப்படுத்தப்படும் குளிர்பானங்களும் வேண்டாம். நேரடியாக மாம்பழத்தின் சுவையை அனுபவிப்பதற்கும், அட்டையில் அடைக்கப்பட்ட மாம்பழச் சாற்றைச் சுவைப்பதற்கும் வித்தியாசங்கள் நிறைய இருக்கின்றன. ஒரு முழு மாம்பழத்தின் மூலம் நமக்குக் கிடைக்கும் இயற்கைச் சர்க்கரைக்கும், 200 மி.லி பதப்படுத்தபட்ட பழச்சாறு கொடுக்கும் சர்க்கரையின் அளவிலும் தரத்திலும் மிகுந்த வேறுபாடுகள் உள்ளன. 2014-ம் ஆண்டு, செயற்கைக் குளிர்பானங்களில் குறிப்பிட்ட அளவு பழச்சாறுகளைக் கலந்து சந்தையில்விடலாமா என்ற பேச்சு அடிபட்டது. அப்போது பல்வேறு உணவியல் ஆர்வலர்கள் அதற்கு எதிராகக் குரல் கொடுத்தார்கள். அதற்கு அவர்கள் முன்வைத்த காரணம்… `செயற்கைக் குளிர்பானங்கள் என்றாலும் சரி, பதப்படுத்தப்பட்ட பழச்சாறுகள் என்றாலும் சரி, இரண்டிலுமே சர்க்கரையின் அளவு அதிகம்’ என்பதுதான். அது தவிர்த்து அவை கெடாமல் இருப்பதற்காகச் சேர்க்கப்படும் பதப்படுத்திகள் சார்ந்தும் அவர்கள் தங்கள் எதிர்ப்பைப் பதிவுசெய்திருந்தார்கள்.
இயற்கை பானங்கள்
`பன்னாட்டுக் குளிர்பானங்களில் பூச்சிக்கொல்லி மருந்துகள் சேர்க்கப்படுகின்றன… பயன்படுத்தாதீர்கள்’ என்ற செய்தி அவ்வப்போது வெளிவருவதுண்டு. கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர், ஆந்திராவில் இருக்கும் குண்டூர் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள், தாங்கள் விளைவித்த நெற்பயிர்கள் பூச்சிகளால் பாதிப்படையாமலிருக்க, ஒரு பன்னாட்டுக் குளிர்பானத்தை சமஅளவு பூச்சிமருந்துடன் கலந்து பயன்படுத்தியிருக்கிறார்கள். அதுதொடர்பாக பல வழக்குகளும் ஆய்வுகளும் நடைபெற்றது வேறு கதை.
கஃபைன் சார்ந்தோ, சர்க்கரை சார்ந்தோ அல்லது அதில் சேர்க்கப்படும்வாயுக்கள் காரணமாகவோ பிரச்னைகள் ஏற்படலாம். விபரீதங்களைத் தவிர்க்க சிறந்த வழி, செயற்கைக் குளிர்பானங்களை வெறுத்து ஒதுக்குவது மட்டும்தான். பானங்களுக்கா நம்மிடம் பஞ்சம்? ஒவ்வோரு பருவ காலத்துக்கும் வகை வகையாக இயற்கை பானங்களைப் பயன்படுத்தியவர்கள் நாம். மீண்டும் அவற்றை மீட்டெடுப்பது, நம் கையில்தான் இருக்கிறது.

Thursday, March 15, 2018

ஒழுக்க நெறியே உயர்ந்த நெறி thanks to dinamalar.com


Advertisement
 ஒழுக்க நெறியே உயர்ந்த நெறி
மனிதன் என்ற பெயர் வரக் காரணம் என்ன? மனம்உள்ளதால் அவன் மனிதன்.மனதின் சிறப்பம்சம் என்ன? 
சிந்திக்கும் திறன். இந்த திறன் வேறு எந்த உயிரினத்துக்காவது உண்டா? மனிதனுக்கு மட்டுமே உண்டு. அந்த திறனை வைத்து தான் இந்த அளவுக்கு அவன் வளர்ந்துஇருக்கிறான்.சரி, மனம் என்று ஒன்று இருந்தால் மனசாட்சி என்று ஒன்று இருக்க வேண்டுமே. அதுவும் இருக்கிறது. ஆனால், மனச்சாட்சிக்கு மதிப்பு இருக்கிறதா? இல்லையே. ஆம். மனசாட்சி தினந்தினம் செத்து பிழைக்கிறது என்பதும், மிதித்து நசுக்கப்படுகிறது என்பதும் தான் உண்மை. ஏன்? 
அப்படி என்ன ஆகிவிட்டது? அதை சொல்வதற்கு முன்னால் மனச்சாட்சி, மனிதப் பண்புகள், ஒழுக்க நெறி ஆகியவற்றை மூன்று கால கட்டங்களில் பார்ப்போம்.
நேற்று
இளவரசன் ஓட்டிவந்த தேர் ஏறி, தன் கன்று இறந்தது என்று மன்னனிடம் முறையிட்டது ஒரு பசு. தன் மனசாட்சிக்கு மதிப்பளித்து மன்னன் எப்படி நீதி வழங்கினான் என்று எல்லோருக்கும் தெரியும். அவன் மனுநீதி சோழன். தன்னிடம் தஞ்சம் புகுந்த புறாவை, கழுகிடமிருந்து காப்பாற்ற தன்னுடைய தொடை சதையையே அறுத்து தராசில் வைத்து மனிதப் பண்பை காட்டினான் ஒரு மன்னன். அவன் சிபிச்சக்கரவர்த்தி. மன்னனின் தீர்ப்பு தவறானது என்று மக்களில்ஒருத்தராகிய கண்ணகி, நிரூபித்தாள்.
பிழையை உணர்ந்த பேரரசன் அப்போதே உயிர் விட்டான். அவன் நெடுஞ்செழியன். படர வழியின்றி தவித்த முல்லையை தனது தேரில் படரவிட்டு, பரிவைக் காட்டினான், பாரிவேந்தன். குளிரால் நடுங்கிய மயிலுக்கு தனது சால்வையை போர்த்தி தனது பெருந்தன்மையை காட்டினான், பேகன். மன்னர் காலத்தை விடுங்கள்.
இப்போது வாருங்கள்...இங்கிலாந்தில் இருந்த தனது சொத்துக்களை விற்று இந்த நாட்டுக்காக பெரியாறு அணையை கட்டி தந்தாரே ஆங்கிலேயர் பென்னிகுவிக், அவரது பெருந்தன்மைக்கு ஈடாக எதை சொல்வது? எந்த நாட்டிலோ பிறந்து இந்த நாட்டுக்கு வந்து, இங்குள்ள ஏழை எளிய மக்களுக்கும், நோயாளிகளுக்கும் அன்னையாய் மாறிஆதரவு அளித்த தெரசாவுக்குஇருந்ததை மனிதப் பண்பென்றா சொல்வது? அதையெல்லாம் தாண்டிய புனிதமான தெய்வ பண்பல்லவா அது? அப்துல்கலாம் தமிழகம் தந்த ஜனாதிபதி. எளிமை, துாய்மை, நேர்மை, இத்தனைக்கும் எடுத்துக்காட்டாய் வாழ்ந்து நம் இதயங்களில் இடம் பிடித்த ஏந்தல் அல்லவா அவர்.
இன்று
மனித பண்புகள், மனச்சாட்சி, மனிதநேயம், ஒழுக்க நெறிகள் உள்ளத் துாய்மை, நெஞ்சில் நேர்மை இவற்றை எப்படி தேடினாலும் இன்று எங்குமே காண முடியவில்லையே. ஊழல் உலகளாவியது என்ற உண்மை இன்று ஓங்கி வளர்கிறது. அதனால் ஒன்பதாயிரம் கோடி, பனிரெண்டாயிரம் கோடி என்று வங்கி ஊழல்கள் வளர்ந்து வருகின்றன. பல்கலை கழக ஊழல்கள், குட்கா ஊழல், செம்மரக்கடத்தல் ஊழல். ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவன், கள்ளக் காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி, கள்ளத்துப்பாக்கி விற்ற காவலர், தங்கம் கடத்திய விமானப் பணிப்பெண், ஐ.ஏ.எஸ்., தேர்வில் பிட் அடித்த ஐ.பி.எஸ்., அதிகாரி, கொடுமையிலும்கொடுமையாக, பெற்ற மகளையே பாலியல் வன்கொடுமை செய்த தகப்பன் என எத்தனையோ ஒழுக்க கேடுகள், தினத்துக்கு இரண்டாவது நடந்து கொண்டு தானே இருக்கின்றன.
எப்படி இருந்த நான் இப்படி ஆகிவிட்டேன் என்பது போல், எப்படி இருந்த நாடு இப்படி ஆகிவிட்டது. அதுவும் இந்தியா மிகவும் தொன்மை வாய்ந்த நாடு. ஆதிசங்கரர், புத்தர், ராமகிருஷ்ணர், விவேகானந்தர்,வள்ளலார், பட்டினத்தார்,திருமூலர், அவ்வை போன்ற ஆன்றோர் அவதரித்த நாடு. இப்பேர்பட்ட நாட்டில் தான், இன்று இப்படி ஒரு இழிநிலை. இது வேதனை தரக்கூடியது அல்லவா? நாளைக்கான மாற்றத்தை நாம் இன்றைக்காவது சிந்திக்கஆரம்பிக்க வேண்டாமா?
நாளை
இன்று இப்படி இருக்கிற நாம், நாளை எப்படி ஆக வேண்டும்?அதற்கு எப்படி செயல்படவேண்டும்?இதுதான், நாளை பற்றிய இன்றைய கேள்விகள். நாம் மாற வேண்டும். மாறியே ஆக வேண்டும். இல்லையேல் நாறிப்போவது உறுதி. மெல்லத் தமிழினி சாகும் என்ற சொற்கேட்டு உள்ளம் நொந்தவன் பாரதி. தமிழ் சாகாதுதான். ஆனால் தமிழினம் தன் பெருமையை மெல்ல மெல்லசாகடித்து கொண்டிருக்கிறதே, இது சரியா? போனது போகட்டும்.
இன்று என்பது நம் வசம் இருக்கிறது. நாளையும் நம் வசமே இருக்க வேண்டும். நாளை நம் வளம் பெருக வேண்டும்.என்ன செய்யலாம்? முதலில் இதற்கெல்லாம் என்ன காரணம் என்று கண்டுபிடிக்க வேண்டும். நோயை தீர்க்க வேண்டுமானால், நோய்க்கான காரணத்தை முதலில் கண்டறிய வேண்டும். எவன் எக்கேடு கெட்டால் என்ன? நான் நன்றாக இருக்க வேண்டும்.அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வேன். என்னை சுற்றி இத்தனை அவலங்கள்ஆட்டம் போடும்போது என் ஒருவனால் என்ன செய்ய முடியும் என்ற அசட்டுச்சித்தாந்தம்.
பாடங்களோடு சேர்த்து பண்புகளையும் சொல்லித் தராத பாடத்திட்டம். பால்ய பருவத்திலேயே நல்ல பண்புகளையும், பழக்க வழக்கங்களையும் அறிமுகப்படுத்தாத பெற்றோர்களாக பெரும்பான்மையினர் ஆகிவிட்டனர்.பெற்றோர் சொல்லை விட, ஆசிரியர் சொல்லை விட,நண்பர்களின் சொல்லுக்கே அதிக மதிப்பு தருபவர்களாக மாறிவிட்ட இளையதலைமுறை. சகிக்கமுடியாத அளவுக்கு மக்களிடம் மண்டிக்கிடக்கும் சகிப்பு தன்மை. இதையெல்லாம் தாண்டி சிலர் சிந்திக்கிறார்கள். மக்களை செயல்பட துாண்டுகிறார்கள். ஆனால், ஒன்று சேரவிடாமல் ஒரு தயக்கம் தடுக்கிறது. சரி, தீர்வு? அது தானே முக்கியம்.
தீர்வு என்ன
நாம் எப்பேர்ப்பட்ட பெருமைக்குஉரிய இனத்தை சேர்ந்தவர்கள் என்பதை முதலில் உணர வேண்டும். இனியும் இந்த இழிநிலை இருக்க கூடாது என்ற உறுதி உள்ளத்தில் உதிக்க வேண்டும். வசீகரப் பேச்சு போன்றவற்றில் சிக்கி சீரழியக்கூடாது. அடுத்த வீட்டில் தீப்பிடித்தால் எனக்கென என்ற அலட்சிய மனோ பாவம் மறைய வேண்டும். நாட்டில் ஆயிரம் குறைகள் இருக்கலாம். குறைந்தபட்சம் அவரவர் தெருவில் உள்ள குறைகளையாவது நீக்க, துடிப்பான இளைஞர்களும், அனுபவம்மிக்க முதியவர்களும் இணைந்து செயலாற்ற வேண்டும். 
குறைகள் தீரும் வரை தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டும். அதற்கான அதிகாரிகளை துாங்கவிடக்கூடாது.மக்கள் நலனை பற்றி சிந்திப்பதற்கு நேரமோ மனமோ இல்லை என்றால், மக்கள் நலனுக்கான திட்டங்களை செயல்படுத்துவதற்கு திறமையோ ஆற்றலோ இல்லையென்றால் அவர்களுக்கு அரசன், அதிகாரி என்ற பெயர்களை விடபொம்மைகள் என்ற பெயர்கள் தானே பொருத்தமாக இருக்க முடியும். 
அப்படிப்பட்டவர்களை அப்புறப்படுத்த முயற்சி எடுக்காத மக்களுக்கு அடிமைகள் என்ற பெயர்தானே பொருத்தமாக இருக்க முடியும். ஆகவே தேவைப்பட்டால் போராடவும் தயங்க கூடாது. அத்து மீறும் போராட்டம் அல்ல. உரிமைக்கானபோராட்டம் என்று உணர்ந்து உறுதியுடன் போராட வேண்டும்.
ஒழுக்கம்எல்லாவற்றுக்கும் அடிப்படையாக, தனிமனித ஒழுக்கத்தில் தனிக் கவனம் செலுத்த வேண்டும்.''ஒழுக்கத்தால் எய்துவர் மேன்மை இழுக்கத்தின் எய்துவர் எய்தாப் பழி''ஒழுக்கத்தால் மட்டுமே ஒருவன் மேன்மை அடைய முடியும். ஒழுக்கம் தவறினால் பழிதான் பரிசு. ஒருவனுக்கு ஆயிரம் திறமைகள் இருக்கலாம். ஆனால்,குடியும், கோபமும், ஆணவமும்ஒழுக்க குறைவும் அவனை மேன்மை அடைய விடாமல்,பள்ளத்தில் இழுத்து வந்து படுக்க வைத்து விடும் என்கிறார் சுதங்கமா முனிவர். உயர்வுக்கான வழி,ஒழுக்கம் கலந்த உழைப்பேஎன்பது தான் உண்மை. தமிழர்களிடம் உன்னதமான உழைப்பு உண்டு. ஆனால், தனிமனிதஒழுக்கம், நேர்மை இவற்றை சரி செய்தால் அவனை வெல்ல அவனியில் எவனும் இல்லை.
-தங்கவேலு மாரிமுத்து
எழுத்தாளர்திண்டுக்கல்93603 27848

Friday, March 9, 2018

உடலையும் மனதையும் பாதிக்கும் செல்போன் அடிக்‌ஷன்... கவனம்! #CellPhoneAddiction thanks to vikatan.com

உடலையும் மனதையும் பாதிக்கும் செல்போன் அடிக்‌ஷன்... கவனம்! #CellPhoneAddiction


`கூவும் செல்போனின் நச்சரிப்பை அணைத்து, கொஞ்சம் சில்வண்டின் உச்சரிப்பைக் கேட்போம்…’ பத்து வருடங்களுக்கு முன்னர் வெளியான ’சிவாஜி’ படத்தில், ‘பல்லேலக்கா...’ பாடலில் இடம்பெற்ற வரிகள் இவை. அப்போது பேசுவதற்கு மட்டுமே அதிகளவில் செல்போன்கள் பயன்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. பேசுவதற்காக மட்டும் வரும் அழைப்பு மணிகளையே நச்சரிப்பாகக் கருதி, செல்போனை அணைத்து, வண்டின் ரீங்காரத்தைக் கேட்க வலியுறுத்தினார் கவிஞர். இன்றோ பேசுவதற்கு மட்டுமின்றி, பல வகைகளில் பரிணாம வளர்ச்சி அடைந்து ’ஸ்மார்ட் போன்கள்’ என்ற பெயரில், செல்போன்கள் சமர்த்தாக மாறிவிட்டன. செல்போன்களின் பயன்பாடும் பல மடங்கு அதிகரித்துவிட்டது. இன்றைய நிலையில் செல்போன்களின் நச்சரிப்பைப் பற்றி, பாடல் வரிகள் அல்ல, பல பாடல்கள் எழுதலாம். 
செல்போன் பேசுதல்
செல்போன்களுக்காக ஏங்குகிறோம்!
விரல் நுனியில் உலகம், நினைத்த நேரத்தில் தொடர்பு, கருத்துப் பரிமாற்றம், பாதுகாப்பு, செய்திகள்... என செல்போன்களால் பலவித நன்மைகள் இருக்கின்றன என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை. ’அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு’ செல்போன் பயன்படுத்துவோருக்கும் இது பொருந்தும். பேசுவதற்கும், பல விஷயங்களைத் தெரிந்துகொள்வதற்கும் அவ்வப்போது செல்போன்களைப் பயன்படுத்திக்கொள்வதில் தவறே இல்லை. கால வரைமுறை இல்லாமல் செல்போன்களைப் பயன்படுத்தத் துடிப்பதுதான் தவறு. `வேறு வேலை செய்துகொண்டிருந்தாலும், செல்போன் அழைப்பு மணிக்காகவோ, வாட்ஸ்அப் போன்ற செயலிகளின் ஒலிகளுக்காகவோ பெரும்பாலோரின் மனம் ஏங்கிக்கிடக்கின்றன’ என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அழைப்பு ஒலிகள் குறிப்பிட்ட கால இடைவெளியில் வரவில்லையெனில், உடலுக்குள் பதற்றமான சூழ்நிலை (Anxiety) உருவாவதாகக் கூறப்படுகிறது.
மொபைல் போன் பயன்பாடு
புதிதாக முளைத்த உறுப்பு
மதுவைப்போல செல்போன்களும் போதைப் பொருளாக உருமாறி இருப்பது, இன்றைய காலத்தில் குறிப்பிடப்படவேண்டிய ஒன்று. இருபத்தி நான்கு மணி நேரமும் செல்போன்கள் நமது உடலோடு ஒட்டிக்கொண்டேதான் இருக்கின்றன. காலையில் விழிக்கச் செய்யும் அலாரத்தில் தொடங்கி, மணிக்கணக்கில் பேசுவது, வணிகம், அரட்டை என நீண்டு, இரவில் தாலாட்டுப் பாடி நம்மை உறங்கச் செய்வதுவரை செல்போன்கள்தான். சில நேரத்தில் தூக்கத்தைக் கெடுப்பதும் செல்போன்களே. நாம் உறங்கும்போது, நம் தலைக்கு அருகிலேயே, நம்மை ரசித்துக்கொண்டே கொட்டக் கொட்ட விழித்திருக்கின்றன செல்போன்கள்! நேரம் இல்லாத மா மனிதர்களுக்கு, சாப்பிடும்போதும் செல்போனில் பேசிக்கொண்டே சாப்பிட வேண்டிய சூழல். குளிக்கும்போதுகூட பிளாஸ்டிக் பேப்பரால் செல்போனை மூடி, ’லவுடு ஸ்பீக்கரில்’ பேசவேண்டிய கட்டாயத்தில் இளைய சமுதாயம் இருக்கிறது. நமது உடலில் புதிதாகத் தோன்றிய நவீன உறுப்பு என்றுகூட செல்போனைச் சொல்லலாம். புதிதாக உருவாகியிருக்கும் செல்போன் எனும் உறுப்பை அதிகமாகப் பயன்படுத்தினால் ஆபத்தான உறுப்பாக மாறலாம், கவனம் தேவை!
செல்போன் பயன்பாடு
ஆதாரம் தேவையா?
’செல்போன்களை அதிக நேரம் பயன்படுத்தினால், உடல் நிலை பாதிக்கப்படும்’ என்று குரல் கொடுத்தால், நம்மை விநோதமாகப் பார்க்கும் சமுதாயத்தில்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். ’தேசத்துக்கு எதிரானவன்’ (Anti-Indian) என்பதுபோல, ’அறிவியலுக்கு எதிரானவன்’ (Anti-Science) என்ற புனைப்பெயரும் கிடைக்கலாம். ’தொடர்ந்து நீண்ட நேரம் செல்போன் பயன்படுத்தினால் உடல் பாதிக்கப்படும் என்பதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை’ என்கின்றன பெரு நிறுவனங்கள். ’நான் பத்து வருடத்த்துக்கும் மேலாக செல்போன் பயன்படுத்திவருகிறேன். எனக்கு எந்த பாதிப்பும் வரவில்லையே’ என்று பலர் எதிர்வாதமும் செய்யலாம். ஆனால், அதிகளவில் செல்போன் பயன்படுத்தும்போது, நமது உடலில் உண்டாகும் மாறுதல்களை நாமே கவனித்திருப்போம். பாதிப்புகளுக்கு ஆதாரம் நாம்தான்! செல்போன் பயன்படுத்துவதால் புற்றுநோய் ஏற்பட்டால்தான் பாதிப்பு என்பதில்லை. தலைவலி, எரிச்சல், சோர்வு, பதற்றம் போன்றவை தோன்றினாலும் பாதிப்புதான். ’பூச்சிக்கொல்லிகளால் பூச்சிகளைத் தவிர வேறு யாருக்கும் பாதிப்பில்லை’ என்றுதான் அதை முதலில் அறிமுகப்படுத்தினார்கள். ஆனால், அவற்றால் நமது சூழலே மாறிவிட்டதை அவர்களால் மறுக்க முடியுமா? 
உடலே சாட்சி!
நேரடியாக செல்போன்களைக் காதில் வைத்துப் பேசும்போது, காது மடல்கள் எவ்வளவு சூடாகின்றன? நீண்ட நேரம் பேசிய பிறகு, ’விங்ங்...’ என்ற ஒலி காதுக்குள் கேட்பதை உணர்ந்திருக்கலாம். செயற்கையாக ஓர் ஒலி தன்னிச்சையாக எழுகிறது என்றால் செவிப்பறை பாதிக்கப்பட்டிருக்கிறது என்றுதானே அர்த்தம்? இரவில் இருட்டறைக்குள் செல்போன் வெளிச்சத்தை நேரடியாகக் கண்ணில்பட அனுமதிக்கும்போது, பார்வை சில நிமிடங்கள் மங்குவதை உணரலாம். வாட்ஸ்அப், ஃபேஸ்புக், மேலும் சில செயலிகளைப் பயன்படுத்திய பின்னர், நமது மனநிலையில் உண்டாகும் வித்தியாசமான மாறுதல்களை உணர்ந்திருப்போம். இவையெல்லாம் உடல்நிலையை பாதிக்காமல், மேம்படுத்தவா செய்கின்றன? தொடர்ந்து இப்படிக் காதுகளையும் கண்களையும் அவதிக்குள்ளாக்கினால் இளம் வயதிலேயே அவை சோர்வடைந்துவிடும். ’செல்போனால் உடலும் மனமும் பாதிக்கப்படுகின்றன என்பதற்கு ஆதாரம் வேண்டும்’ என்று காத்துக்கிடந்தால், உங்கள் உடல்நிலையே விரைவில் உங்களுக்கு எதிராக சாட்சி சொல்லும். கவனிக்க… தொடர்ந்து அதிகளவில் பயன்படுத்தும்போதுதான் செல்போன்களால் பாதிப்பே தவிர, குறைந்த அளவில் பயன்படுத்தும்போது இல்லை (அனுமதிக்கப்பட்ட Radiation அளவைப் பொறுத்து). ஆனால் உண்மை என்னவென்றால், அண்மைக்காலமாக நாம் அதிகளவில்தான் பயன்படுத்துகிறோம். 
செல்போன் டவர்
மன நிம்மதி
செல்போன்களைப் பயன்படுத்துவதில் கடந்த தலைமுறைக்கும் இப்போதைய தலைமுறைக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? கடந்த தலைமுறையினர், தேவைக்கேற்ப செல்போன்களைப் பயன்படுத்துகிறார்கள். நாமோ தேவைக்குப் போக, முழு நேரமும் செல்போன்களின் துணையுடனேயே வாழ்கிறோம். சிற்சில பாதிப்புகள் இருப்பது தெரிந்தும், அதற்குப் பழகிவிட்டது நமது வாழ்க்கை முறை. ’செல்போன் இல்லாமல் ஒரு நாள் நம்மால் நிம்மதியாக வாழ முடியுமா?’ என்பது நியாயமான கேள்விதான். ஒரே ஒருநாள், செல்போன் தொடர்பு இல்லாத மலைப்பகுதியில் நேரத்தைச் செலவிட்டு பின்னர் தினசரி அலுவல்களுக்குத் திரும்புங்கள். மன நிம்மதி என்பதற்கான முழு அர்த்தமும் தெளிவாக விளங்கும். 
ஒற்றைத் தொலைப்பேசி, பன்மைத் தொலைப்பேசியாக மாறிய கதை!
கால் நூற்றாண்டுக்கு முன்னர், தெருவில் உள்ள ஏதோ ஒரு வீட்டில்தான் தொலைபேசி வசதி இருந்தது. அவசரச் செய்திகளைப் பரிமாற, அந்தத் தொலைபேசிதான் மிக முக்கியச் சாதனமாக இருந்தது. இன்றோ ஒவ்வொருவர் கையிலும் ஒன்றுக்கும் மேற்பட்ட செல்போன்கள். ‘இது குழந்தையோட போன்’ என்ற தனித்த பெருமை வேறு சிலருக்கு உண்டு. ‘என்னோட மூணு வயசுக் குழந்தை, இப்பவே அவனுக்குப் பிடிச்ச பாட்டை யூடியூப்ல போட்டு மணிக்கணக்குல பார்த்துக்கிட்டே இருக்கான்… செல்போன் இருக்கிறதால நமக்குக் கொஞ்சம் நேரம் மிச்சமாகுது…’ இந்தச் சூழலைப் பெற்றோர்களாகிய நீங்கள் ரசிக்கிறீர்கள் என்றால், உங்கள் பிள்ளைகளுக்கு சூனியம் வைக்கிறீர்கள் என்று அர்த்தம். தயவுசெய்து அடுத்த தலைமுறைக் குழந்தைகளுக்கு, பிறந்தது முதலே செல்போன்களை அறிமுகப்படுத்த வேண்டாம். குழந்தைப் பருவத்திலேயே மூக்குக்கண்ணாடி அணிய வேண்டிய சூழல் நிச்சயமாக உருவாகும். வருங்காலத்தில் செல்போன் சார்ந்த சில பாதிப்புகளை அறிவியல் நிரூபிக்கலாம். 
பொருந்தாக் காதல்!
`காலை எழுந்ததும் வலது உள்ளங்கை, தாமரை மலர், கண்ணாடி போன்றவற்றில் கண்விழித்தால், உடலுக்கும் மனதுக்கும் நல்லது’ என்று சாஸ்திர நூல்கள் கூறுகின்றன. ஆனால், பெரும்பாலோனோர் கண் திறப்பது, வெளிச்சம் நிறைந்த செல்போன் திரையில்தான். காலை எழுந்தவுடன் அலைபேசியைத்தானே நாம் தேடுகிறோம்? அதன் மீது நமக்கு ஒரு விபரீதமான ’பொருந்தாக் காதல்’ என்று வைத்துக்கொள்ளலாம். ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு வகையில் செல்போன்கள் மீது அப்படியொரு அடிக்‌ஷன் (Addiction). 
இரவில் மொபைல் போன் பயன்படுத்துதல்
செய்ய வேண்டியவை, கூடாதவை!
இரவில் மின்விளக்குகளை அணைத்துவிட்டு, செல்போன்களைப் பயன்படுத்தினால் கண்கள் பாதிக்கப்படுவது உறுதி. முடிந்த அளவுக்கு அலைபேசியை நேரடியாகக் காதில்வைத்துப் பேசுவதைத் தவிர்த்துவிட்டு, தரமான ஹெட்போன் அல்லது ஹெட்செட்களைப் பயன்படுத்தலாம். வாகனம் ஓட்டும்போது எந்தக் காரணத்தைக் கொண்டும் செல்போனைப் பயன்படுத்த வேண்டாம். விபத்துகளின் எண்ணிக்கை பெருகுவதற்கு செல்போன் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுவது முக்கியமான காரணம். இரவில் தூங்கும்போது, செல்போனை ‘Flight mode’-க்கு மாற்றிவிடுவது நல்லது. உறங்கும்போதாவது செல்போனிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சின் பாதிப்பைத் தவிர்க்கலாமே! செல்போன்களைப் பயன்படுத்தாமல் இருக்க முடியாது! ஆனால், செல்போன்களை அதிகமாகப் பயன்படுத்துவதை தாராளமாகத் தவிர்க்க முடியும்.