Monday, July 30, 2018

ராமனின் அதிசயப் பயணம்- 5 (நிறைவு)- Post No.5271 thanks to tamil and vedas.com


 ராமனின் அதிசயப் பயணம்- 5 (நிறைவு)- Post No.5271
Yahoo/Inbox

  • Tamil and Vedas <comment-reply@wordpress.com>
    To:theproudindian_2000@yahoo.co.in
    30 Jul at 2:13 AM

    Respond to this post by replying above this line

    New post on Tamil and Vedas

    ராமனின் அதிசயப் பயணம்- 5 (நிறைவு)- Post No.5271

    by Tamil and Vedas
    Written by London swaminathan
    Date: 30 JULY 2018

    Time uploaded in London – 9-12 am  (British Summer Time)

    Post No. 5271

    Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.


    அயோத்தியில் புறப்பட்டு, இலங்கைத் தீவுக்கு வந்து விட்டு, மீண்டும் அயோத்திக்குப் போன ராம பிரான் 5113 நாட்களுக்கு நடந்து உலக சாதனை படைத்தான். அவன் சென்ற இடமெல்லாம் புனிதமானது; அவன் தொட்டதெல்லாம் பொன் ஆனது; அவன் கண் பட்ட இடமெல்லாம் அருள் சுரந்தது. இந்தியாவில் எங்கு சென்றாலும், இது ராமர் வந்த இடம், இது பஞ்ச பாண்டவர் வந்த இடம் என்று சொல்லுவதில் வியப்பொன்றும் இல்லை.

    நாநிலம் வியக்கும் வீரர் பெரு மக்கள், மாபெரும் சாம்ராஜ்யத்தின் மன்னர்கள் நடந்து வந்தால், உலகமே வரவேற்காதா! வியக்காதா!

    இதோ ராமனின் 128 மண்டகப்படிகளில் கடைசி கட்டம்; இந்த ஐந்தாவது பகுதியுடன் ராமன் பயணம் நிறைவு பெறுகிறது. அலெக்ஸாண்டர் நடக்க வில்லை; குதிரையில் வந்தான்! ராமன் நடந்தான். ஆதி சங்கரரும், ராமனைப் பின்பற்றி நடந்தார். இமயத்திலிருந்து தமிழ் இலக்கணம் எழுத தென்னகம் வந்த அகஸ்தியர், ஒரு வேளை பல்லக்குகளைப் பயன்படுத்தி இருக்கலாம். ராமனோ என்றும் பாத சாரி! உலக இலக்கியங்களில் இது போல யாரும் இல்லை; ஹோமரின் கிரேக்க கதா பாத்திரங்கள் குதிரையிலும் கப்பலிலும் சென்றனர். இந்து மத வீரகளோ உலகின் மிகப்பெரிய நாட்டை (அக்காலத்தில்) நடந்தே கடந்தனர். அவர்களால் இந்த மண் புனிதம் பெற்றதா? புனித மண் என்பதால் அவர்கள் நடந்தார்களா? சிந்திக்க வேண்டிய விஷயம்!

    106.கபிஸ்தலம் (தஞ்சை வட்டம்)
    ஹனுமார் தாவிச் சென்ற இடம்

    107.பாபநாசம் சிவன் கோவில்
    கர, தூஷண, திரிசிரஸ் என்ற பிராஹ்மண அசுரர்கள்ளைக் கொன்ற பாபம் நீங்க சிவனை ராமன் வழிபட்ட இடம்
    108.கோடிக்கரை (வேதாரண்யம்)

    முதலில் ராமனிடம் எஞ்சினீயர் நீலன் கொடுத்த ப்ளூப்ரிண்ட் படி இங்கிருந்து அணை கட்ட திட்டமிட்டனர். பின்னர் ராமன் அந்த திட்டத்தைக் கைவிட்டு தனுஷ்கோடி சென்றான். அவன் ஒரு ஆலமரத்தடியில் இருந்து ஆலோசானை செய்கையில் பறவைகள் காச்சு மூச்சென்று கத்தின ராமன் உஷ் என்று சொன்னவுடன் அவை அதிசயமாக அடங்கிவிட்டன; 2000 ஆண்டுகளுக்கு முன்னர் சங்கத் தமிழ் இலக்கியத்தில் உள்ள பாடலில் இது பற்றியுள்ளது. அகநானூறு 70ம் பாடலில் மேல் விவரம் காண்க)


    109.உப்பூர் வெயில் உகந்த விநாயகர் கோவில்
    ஸீதா தேவியை மீட்கும் விஷயத்தில் வெற்றி கிடைக்கப் பிரார்த்தித்த இடம்

    110.தேவிப்பட்டணம்/ நவபாஷாணம்
    இங்கு ராமர் நவக்ரஹங்களை வழிபட்டார்.
    111.திருப்புள்ளானி / தர்ப சயனம்

    கடல் பயணத்தில் வெற்றி பெற ராமன் வருண பகவானை பிரார்த்தித்த இடம்

    112.புள்ளபூதங்குடி வல்வில் ராமர் கோவில்
    ஜடாயுவுக்குத் தர்ப்பணம் செய்த இடம்; வடக்கிலும் இப்படி ஒரு ஸ்தலம் உள்ளது. ஆண்டு தோறும் திதி செய்யப்படுவதால் இரண்டும் சரியாக இருக்கலாம்.


    113.சேதுக்கரை

    இங்கு இலங்கைக்கான பாலத்துக்கு அடிக்கல் நாட்டினார் ராமபிரான்

    114.தங்கச்சிமடம் வில்லூன்றி தீர்த்தம்

    இங்கே வானரப் படைகளுக்காக ராமர் வில் மூலம் ஒரு ஊற்றை உண்டாக்கினார்.


    115.கந்தமாதன் பர்வத, ராமேஸ்வரம்
    இங்கிருந்து ராமர் கடலின் விஸ்தீரணததைக் கண்டார்.
    116.அக்னி தீர்த்தம்
    ராமர் குளித்த புனித நீர்நிலை

    117.ராமேஸ்வரம் கோவில்
    ராமர் பூஜித்த சிவலிங்கம்
    118.தனுஷ்கோடி
    ராவணனை வென்ற பின்னர்,  விபீஷணன் வேண்டுகோளின் பேரில், பாலத்தைப் பிரித்த இடம்

    119.திரு அப்பனுர்- ராமர் பாலம் மண்
    பாலம் கட்ட ராமர் 14 புனித இடங்களிலிருந்து மண் எடுக்க வேண்டும் என்றும் அதில் அப்பனூர் ஒரு இடம் என்றும் தல புராணம் சொல்லும். ராமர் கொண்டுவந்த 2 யானைகள் இறக்க்வே அவைகளை இங்கு புதைத்ததாகவும் அங்கே இப்பொழுது கண்மாய்கள் இருப்பதகவும் மக்கள் நம்புகின்றனர். இது ராமநாதபுரம் மாவட்டத்தில் உளது
    மீண்டும் அயோத்தி சென்றபோது
    120.தில்லை விளாகம் கோதண்டராமர் கோவில்

    ராவண சம்ஹாரத்துக்குப் பின்னர் ராமர் வந்த இடம்.திருவாரூரிலிருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது (சிதம்பரத்தையும் இப்பெயரால் அழைப்பர்; இது வேறு தலம்).
    இங்கு ராம சரம் என்று பொறிக்கப்பட்ட அம்புடன் கூடிய அழகாக்ன ராம விக்ரஹம் உள்ளது. பங்குனி மாத ராம நவமி உற்சவத்தில் 11ஆவது நாளன்று மான் வஹனத்தில் ராமர் பவனி வருவது ஒரு அரிய காட்சி; வேறெங்கும் இல்லாத புதுமை!
    121.நம்புநாயகி அம்மன் கோவில், ராமேஸ்வரம் தீவு
    முன்னர் தனுஷ்கோடியில் இருந்த கோவில்  கடல் உள்ளே வர வர, இடம் மாற்றப்பட்டு இப்போதுள்ள இடத்துக்கு வந்தது; இங்கு ராமர் விபீஷணனுக்கு பட்டாபிஷேகம் செய்ததாக தல புராணம் சொல்லும்.

    122.காஞ்சி விஜயராகவப் பெருமாள் கோவில் (திருப்புட்குழி)
    இங்குள்ள ஜடாயு புஷ்கரணியில் ராமர் குளித்ததாக அதீகம்

    123.வடுவூர் கோதண்டராமர் கோவில்

    ராமன் இலங்கைக்குச் செல்லும் போதும் அயோத்திக்குத் திரும்பும் போதும் இங்கு வந்ததாகச் சொல்லுவர். இரண்டும் சாத்தியமே

    124.பதர்ஷா (நந்தி க்ராமம)
    ராமனின் புஷ்பக விமானத்தைக் கண்டு மக்கள் ஆரவாரம், கூதுகலம் அடைந்த இடம்

    125.பரத குண்டம்
    ராமரும் பரதனும் கட்டித் தழுவி ஆனனதம் அடைந்த இடம்

    126.ஜடா குண்டம்

    ராமர் முதலில் தனது தம்பிகளின் முடிகளைச் சுத்தம் செய்து பின்னர் தனது தலை முடியையும் அலம்பிய குளம்.


    வால்மீகி ராமாயணம்ஆங்காங்குள்ள தல புராணங்கள் முதலியவற்றின் அடிப்படையில் டாக்டர் ராமாவ்தார் ஷர்மா தொகுத்த பட்டியல் இதுதமிழ் நாட்டைப் பொறுத்த மட்டில் நான் சில இடங்களை மாற்றியுள்ளேன். இதை ஒரு தொடக்கமாகக் கொண்டு பட்டியலை மேலும் நீட்டலாம். 5113 நாட்களில் ராம லக்ஷ்மணர்கள் இன்னும் பல இடங்களுக்குச் சென்றிருப்பது சாத்தியமே.

    ராமன் நாமம் வாழ்கராமன் புகழ் வெல்க!

Saturday, July 28, 2018

காற்றை சுவாசி ஆயுளை நேசி thanks to dinamalar.com

சொல்கிறார்கள்

Advertisement
  சொல்கிறார்கள்
காற்றை சுவாசி ஆயுளை நேசி!நீண்ட ஆயுளுக்கு வழி கூறும், டாக்டர் ஜோஸ்: மனிதர்களின் முழு ஆயுள், 126 ஆண்டு. ஆனால் அவர்களால், தன் ஆயுளில், 60 சதவீதம் கூட வாழ முடிவதில்லை. அதேசமயம், நாய்களின் ஆயுள், 14 ஆண்டுகளான நிலையில், அவை, முழு ஆயுளும் வாழ்கின்றன. இதற்கு, நாம் காற்றை சுவாசிக்காததே காரணம். தனக்கு தேவையான, 'ஆக்சிஜன்' அளவு காற்றில் குறைவாக இருந்தாலும், வாயை திறந்து நாய் சுவாசித்து, தனக்கு தேவையான ஆக்சிஜனை உள்வாங்கி கொள்கிறது.ஒரு மனிதன் உயிருடன் வாழ, முதலில் தேவையானது, காற்று; இரண்டாவது நீர்; மூன்றாவது வெளிச்சம்; நான்காவது உணவு. வெளிச்சம் இல்லாமல், ஆறு மாதங்களும், உணவில்லாமல், மூன்று வாரங்களும், தண்ணீர் இல்லாமல் சில தினங்களும் வாழலாம். ஆனால், காற்றில்லாமல், எந்த ஜீவராசியாலும் நிமிடக் கணக்கில் கூட வாழ முடியாது.காற்றை அதிகமாக சுவாசித்தால், நீண்ட நாட்கள் நம்மால் வாழ முடியும். குறைந்தபட்சம் உடல் உழைப்பு இல்லாத மனிதருக்கு, ஒரு நாளைக்கு, 15 ஆயிரம் லிட்டர் காற்று தேவைப்படுகிறது. உடல் உழைப்பு அதிகரிக்கும் போது, இதன் அளவும் அதிகரிக்கும். ஒரு நிமிடத்துக்கு நாம், 18 - 20 முறை சுவாசிக்கிறோம். இதுவே சீரான சுவாசமும் கூட. ஒரு சுவாசத்தின் போது, குறைந்தபட்சம், 500 மி.லி., கிடைக்கும். ஒரு நிமிடத்துக்கு, 10 லிட்டர் காற்று தேவைப்படுகிறது.இன்று இவ்வளவு நோய் வர முக்கிய காரணமே, நாம் வசிக்கும் வீட்டை, இருக்கும் அறைகளை அடைத்து வைத்திருப்பதே. 'ஏசி' பயன்படுத்தும் போது, அந்த அறையில் உள்ள காற்றை உள்வாங்கி, அதை, 'ரீ சைக்கிள்' செய்து, மீண்டும் அறைக்குள் விடுகிறது. இப்படி தொடர்ந்து நடக்கும் போது, அறையில் இருக்கும் ஆக்சிஜன் அளவு குறைகிறது.காற்றில் நாம் சுவாசிக்க கூடிய ஆக்சிஜன் மட்டுமே இருப்பதில்லை. 100 மி.லி., காற்றில், 18 - 20 சதவீதம் ஆக்சிஜன், மீதமிருப்பது, நைட்ரஜனும், மற்றவையும் தான். முக்கியமாக, காற்றில் நான்கில் மூன்று பங்கு, நைட்ரஜன் நிறைந்துள்ளது. இந்த நைட்ரஜன் தான், உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் உயிர் வாழ தேவையான, அடிப்படையான புரதத்தை கொடுக்கிறது.ஒரு அடைத்த அறையிலேயே, 18 சதவீதம் தான் சுவாசிக்க கூடிய ஆக்சிஜன் இருக்கிறது என்றால், ஒரு மரத்தின் அடியில் மற்றும் வாகன நெரிசலில் நிற்கும் போது, இதன் அளவு இன்னும் குறைவாக இருக்கும்.எந்தவொரு நோயும் வராமல் இருக்க வேண்டுமெனில், நிறைய சுவாசிக்க வேண்டும். மூக்கால் சுவாசிக்கும் காற்று போதவில்லை எனில், வாயை திறந்து சுவாசிக்க வேண்டும். மூடிய அறையில் மேற்புறத்தில், வென்டிலேஷனுக்காக சிறிய அளவில் செவ்வக வடிவ ஓட்டை விட்டு கட்டினால், வெளிக்காற்று உள்புகுந்து, உள்ளேயுள்ள காற்றை வெளியனுப்பும். 'ஏசி' அறையில் உள்ளவர்கள், அவ்வப்போது அறையை திறந்து மூடி, நமக்கு தேவையான ஆக்சிஜனை காற்றில் கொண்டு வரலாம். பிராணாயாமம் மாதிரியான, மூச்சு பயிற்சி செய்யலாம்

Friday, July 27, 2018

உணவு கட்டுப்பாடு இருந்தால் நோயிலிருந்து விடுதலை பெறலாம் கே.எம்.சி.எச்., மருத்துவமனை உறுதி thanks to dinamalar.com

பொது செய்தி 

தமிழ்நாடு

உணவு கட்டுப்பாடு இருந்தால் நோயிலிருந்து விடுதலை பெறலாம் கே.எம்.சி.எச்., மருத்துவமனை உறுதி165

உணவு, கட்டுப்பாடு, இருந்தால், நோயிலிருந்து,விடுதலை பெறலாம்,கே.எம்.சி.எச்., மருத்துவமனை உறுதி
''உணவு விஷயத்தில் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும்; மூளையை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும்,'' என்கிறார் கே.எம்.சி.எச்., மருத்துவர் அருள்செல்வன்.

அவர் கூறியதாவது:
உணவு விஷயத்தில் பலர் தாராளமாக நடந்து கொள்கின்றனர். நாவை கொஞ்சம் கட்டுப்படுத்த வேண்டும்; மூளையை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். பப்ஸ், டீ, வடை, போண்டா, பன், கேக், என தினமும் உட்கொண்டால், ரத்தத்தில் அவை அனைத்தும் ஊறிப்போய் விடும். ரத்தம் கெட்டியாகி, கட்டியாகி ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட துவங்கிவிடும்.
ஒருவர், அதிக கொழுப்புள்ள பொருட்களை தொடர்ந்து உட்கொண்டு வந்தால், அது சிறுசிறு கட்டிகளாக ரத்தத்தில் மிதக்க துவங்கி, ரத்த குழாய்களில் படிகிறது. நாளடைவில் படிந்த கட்டிகள், அடைப்பை ஏற்படுத்தி விடுகிறது. அல்லது, ரத்தத்தில் சேரும் கொழுப்பானது, ஏதாவது ஒரு நுண்ணிய ரத்தக் குழாயில் சென்று அடைப்பை ஏற்படுத்துகிறது. மூளையில் இப்படி அடைப்பு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.
குறிப்பாக, 60 வயதுக்கு மேற்பட்டோர், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், தொடர்ந்து புகையிலை, புகை பழக்கம், ஒரே இடத்தில் அமர்ந்து, ஓய்வு இல்லாமல் வேலை செய்வோர், அதிக கொழுப்பு உள்ளவர்கள், தினமும் உடற்பயிற்சி செய்யாமல் இருப்பவர்கள் என பலரையும் பாதிக்க கூடியது ரத்தக்குழாய் அடைப்பு.
மூளைக்கு செல்லும் ரத்தக்குழாய் அடைப்பு, மிகுந்த பாதிப்பை ஏற்படுத்துகிறது. சில மணி நேரத்துக்குள் சிகிச்சை செய்யாவிட்டால், சொந்தமாக எதையும் செய்ய முடியாத நிலை ஏற்படும். சுயமாக இயங்கவில்லை என்றால், சிரமம் தனக்கு மட்டுமின்றி, குடும்பத்தினருக்கும் ஏற்படும். எனவே மூன்று மணிநேரத்துக்குள் எவ்வளவு விரைவாக சிகிச்சை அளிக்க முடியுமோ, அதற்கேற்ப குணமடையவும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. மூன்று மணிநேரத்துக்குள் அளிக்கப்படும் சிகிச்சையில், 80 சதவீதம் வரை பாதிப்பை குறைக்கலாம்.
பக்கவாதம், பலருக்கு தொழில் ரீதியான நோயாக கூட உருவாகலாம்; சிலர், தொடர்ந்து மாத்திரை எடுத்து வந்து, திடீரென நிறுத்துவதாலும் ஏற்படலாம். மூளையில் ரத்த ஓட்டம் தடைபடும்போது, பிரச்னைகள் அதிகமாகின்றன. பக்கவாதம் வரும் முன் தடுக்க, தினமும் நடைப்பயிற்சி செய்யுங்கள்.
வாரத்தில் மூன்று நாட்களாவது, 45 நிமிடம் நடைப்பயிற்சி மிகவும் அவசியம். 40 வயதுக்கு மேற்பட்டோருக்கு, உணவு விஷயத்தில் மிகுந்த கவனம் தேவை. கொழுப்புள்ள உணவு பொருட்களை தவிர்த்தல் வேண்டும்.பக்கவாதம் வந்த பின், சிகிச்சைக்குப்பின் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். உணவுக்கட்டுப்பாடு மட்டுமின்றி, முடநீக்கியல் பயிற்சியும் மேற்கொள்ள வேண்டும். குடும்பத்தினரின் அரவணைப்பால்மட்டுமே, பக்கவாதத்தின் பாதிப்பிலிருந்து ஓரளவு மீள முடியும்.இவ்வாறு, அவர் கூறினார்.

மேலும் விபரங்களுக்கு, கே.எம்.சி.எச்., அவிநாசி ரோடு, கோவை.மொபைல் : 7339333485.

வெந்நீரில் குளித்தால் உடல் சோர்வடையும் thanks to dinamalar.com

வெந்நீரில் குளித்தால் உடல் சோர்வடையும்!நீர் சிகிச்சை குறித்து கூறும், இயற்கை மருத்துவ துணைப் பேராசிரியர், யோ.தீபா: நீர் சிகிச்சையில் குளிர்ந்த நீர், சுடுநீர், வெதுவெதுப்பான நீர் போன்றவை பயன்படுத்தப்படும். குளிர்ந்த மற்றும் சூடான நீரால் சிகிச்சை அளிக்கும் போது, நரம்புகள் துாண்டப்பட்டு, நோய் எதிர்ப்பு சக்திக்கு தேவையான, 'ஹார்மோன்கள்' துாண்டப்படும். இதனால், மன அழுத்தம் விலகுவதுடன், செரிமான சக்தி அதிகரிக்கும்.நீர் சிகிச்சையை சரியான நேரத்தில், சரியான விதத்தில் பயன்படுத்தினால் மட்டுமே முழுமையான பலன் கிடைக்கும். உதாரணமாக, உணவு உண்பதற்கு அரை மணி நேரம் முன், சாதாரண நீரை அருந்துவதால், வயிற்றில் அமிலம் சுரந்து, நன்றாக பசியெடுக்கும்; எளிதில் உணவு செரிமானமாகும். இதேபோல், சாப்பிட்டு அரை மணி நேரம் கழித்து, வெந்நீர் குடிப்பதால், மிக எளிதாக உணவு செரிமானமாகும்.உடல் பருமனாக உள்ளவர்கள், உணவு உண்பதற்கு அரைமணி நேரத்துக்கு முன் வெந்நீர் குடித்தால், அமிலம் சுரப்பது குறைந்துவிடும். அதனால், அதிகமாக உணவு உண்ண முடியாமல் போவதால், சிறப்பாகப் பலனளிக்கும். தினந்தோறும் சராசரியாக 2 - 3 லி., நீர் அருந்த வேண்டும்.காலையில் கண் விழித்ததும், இரண்டு டம்ளர் நீர் அருந்துவது, மூளை சிறப்பாக செயல்படவும், சிந்தனை வளமாக அமையவும் உதவும். மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள், சூடான நீரைக் குடிப்பதால், பிரச்னையிலிருந்து நிவாரணம் பெறலாம்.நீர் சிகிச்சையில் எனிமா, பெருங்குடல் நீர் சிகிச்சை போன்ற உள் சிகிச்சைகளும்; குளியல், ஷவர்பாத், பட்டி போடுதல், ஒத்தடம், ஆவி பிடித்தல் போன்ற வெளி சிகிச்சைகளும் அளிக்கப்படுகின்றன. தசை நார் வீக்கம், தசை இறுகுதல், தசைப்பிடிப்பு, படபடப்பு போன்ற பிரச்னைகளுக்கு வெந்நீரில், 'ஷவர் பாத்' எடுத்தால் நிவாரணம் கிடைக்கும்; குறிப்பாக, வலிகள் நீங்கும்.தலை தவிர, முழு உடலையும் நீரில் மூழ்க வைத்து, 'அண்டர் வாட்டர் மசாஜ்' செய்வதால், ரத்த ஓட்டம் சீராகும்; மூட்டு, முடக்கு வாதம், தசை இறுக்கம் நீங்கி இலகுவாகும். இடுப்பு மூழ்கும் அளவு நீரை ஊற்றி, 'இடுப்புக் குளியல்' செய்வதால், இனப்பெருக்க உறுப்புகள் துாண்டப்பட்டு, பெண்களுக்கு மாதவிடாய் கோளாறு, 'மெனோபாஸ் சிண்ட் ரோம்' சரியாகும். சிறுநீர்த் தொற்று, 'புரோஸ்டேட்' வீக்கம் மற்றும் ஆண்மைக்குறை போன்றவற்றை சரிசெய்யவும் உதவும்.முதுகுத்தண்டு வளைந்தவர்களுக்கு, 'தண்டுவடக் குளியல்' பலன் தரும். வேறுபட்ட வெப்பநிலையில் கை மற்றும் பாதக் குளியல் செய்வதால், ஒற்றை தலைவலி, பதற்றத்தால் வரும் தலைவலி, குதிகால் வலி, ஆஸ்துமா பிரச்னைகளுக்கு தீர்வு காணலாம்.தொடர்ந்து வெந்நீரில் குளிப்பதால் உடல் சோர்வடையும். குளிர் காலத்தில், வெது வெதுப்பான நீரில் குளிப்பது நல்லது. ஆனால், தொடர்ந்து செய்யக் கூடாது; சாதாரண நீரில் குளிப்பதே, உடல் நலனுக்கு ஏற்றது.

Tuesday, July 17, 2018

வள்ளல் அருளிய மனு முறை கண்ட வாசகம்

வள்ளல் அருளிய
மனு முறை கண்ட வாசகம்

மூலம்
நாமும்
தற்சோதனை
செய்வோம்...


நல்லோர் மனத்தை நடுங்கச் செய்தேனோ!

வலிய வழக்கிட்டு மானங் கெடுத்தேனோ!

தானங் கொடுப்போரைத் தடுத்து நின்றேனோ!

கலந்த சினேகரைக் கலகஞ் செய்தேனோ!

மனமொத்த நட்புக்கு வஞ்சகஞ் செய்தேனோ!

குடிவரி யுயர்த்திக் கொள்ளை கொண்டேனோ!

ஏழைகள் வயிறு எரியச் செய்தேனோ!

தருமம் பாராது தண்டஞ் செய்தேனோ!

மண்ணோரம் பேசி வாழ் வழித்தேனோ!

உயிர்க்கொலை செய்வோர்க்க உபகாரஞ் செய்தேனோ!

களவு செய்வோர்க்கு உளவு சொன்னேனோ!

பொருளை இச்சித்துப் பொய் சொன்னேனோ!

ஆசைகாட்டி மோசஞ் செய்தேனோ!

வரவுபோக்கொழிய வழியடைத்தேனோ!

வேலையிட்டுக் கூலி குறைத்தேனோ!

பசித்தோர் முகத்தைப் பாராதிருந்தேனோ!

இரப்போர்க்குப் பிச்சை இல்லை யென்றேனோ!

கோள்சொல்லிக் குடும்பங் குலைத்தேனோ!

நட்டாற்றிற் கையை நழுவ விட்டேனோ!

கலங்கியொளித்தோரைக் காட்டிக் கொடுத்தேனோ!

கற்பழிந்தவளைக் கலந்திருந்தேனோ!

காவல்கொண்டிருந்த கன்னியை அழித்தேனோ!

கணவன்வழி நிற்போரைக் கற்பழித்தேனோ!

கருப்பமழித்துக் களித்திருந்தேனோ!

குருவை வணங்கக் கூசி நின்றேனோ!

குருவின் காணிக்கை கொடுக்க மறந்தேனோ!

கற்றவர் தம்மைக் கடுகடுத்தேனோ!

பெரியோர் பாட்டிற் பிழை சொன்னேனோ!

பக்ஷயைக் கூண்டில் பதைக்க அடைத்தேனோ!

கன்றுக்குப்பாலுட்டாது கட்டி வைத்தேனோ!

ஊன்சுவையுண்டு உடல் வளர்த்தேனோ!

கல்லும் நெல்லும் கலந்து விற்றேனோ!

அன்புடையவர்க்குத் துன்பஞ் செய்தேனோ!

குடிக்கின்ற நீருள்ள குளந்துர்த்தேனோ!

வெய்யிலுக் கொதுங்கும் விருக்ஷ மழித்தேனோ!

பகைகொண்டு அயலோர் பயிரழித்தேனோ!

பொதுமண்டபத்தைப் போயிடித்தேனோ!

ஆலயக் கதவை அடைத்து வைத்தேனோ!

சிவனடியாரைச் சீறிவைதேனோ!

தவஞ் செய்வோரைத் தாழ்வு சொன்னேனோ!

சுத்த ஞானிகளைத் து஡ஷணஞ் செய்தேனோ!

தந்தை தாய் மொழியைத் தள்ளி நடந்தேனோ!

தெய்வமிகழ்ந்து செருக்கடைந்தேனோ!

என்ன பாவம் செய்தேனோ! இன்ன தென்றறியேனே!

என்ன பாவம் செய்தேனோ! என்ன பாவம் செய்தேனோ!

என்ன பாவம் செய்தேனோ!என்ன பாவம் செய்தேனோ!

Friday, July 13, 2018

‘ஞானிக்கில்லை இன்பமும் துன்பமும்’ (Post No.5194) thanks to tamiland vedas.com

[New post] ‘ஞானிக்கில்லை இன்பமும் துன்பமும்’ (Post No.5194)
Yahoo/Inbox
  • Tamil and Vedas <comment-reply@wordpress.com>
    To:theproudindian_2000@yahoo.co.in
    Jul. 7 at 11:42 p.m.
    Respond to this post by replying above this line

    New post on Tamil and Vedas

    ‘ஞானிக்கில்லை இன்பமும் துன்பமும்’ (Post No.5194)

    by Tamil and Vedas
    Written  by London swaminathan

    Date: 8 JULY 2018

    Time uploaded in London –  6-41 am (British Summer Time)

    Post No. 5194

    Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.


    ‘ஞானிக்கில்லை இன்பமும் துன்பமும்’
    -நறுந்தொகை, வெற்றி வேற்கை (அதிவீர ராம பாண்டியன்)

    ‘மிதிலைக்கு அரசனான ஜனகனுக்கு ஒன்றுமே தெரியாது; அவருக்கு மண்ணாசைதான் அதிகம்’ என்று சில முனிவர்கள் குறை கூறினார்கள். அவரது குருவான யாக்ஞவல்கியரின் காதிலும் இது விழுந்தது. ஜனகனின் பெருமையை உலகிற்கு உணர்த்த ஒரு தந்திரம் செய்தார். ஒரு நாள் எல்லா ரிஷி முனிவர்களும் இருந்த சமயத்தில், ஜனகனுடைய அவையில் யக்ஞவல்கியர் தத்துவச் சொற்பொழிவு செய்துகொண்டிருந்தார்.

    அச்சமயத்தில் ஒரு சேவகன் ஓடி வந்து அரசே! குதிரை லாயம் தீப்பிடித்து எரிகிறது; அணைக்க முடியவில்லை' என்றான். அரசன், ‘சரி, போ’ என்றார். கொஞ்ச நேரம் ஆயிற்று; மற்றொரு காவலன் வந்து மன்னர், மன்னவா! அரண்மனையின் ஒரு புறத்திலும் தீ பரவிவிட்டது; எங்களால் ஒன்றும் செய்ய இயலவில்லை என்றான்; மன்னனோ ‘‘சரி, நீ போகலாம்’ என்றார்.

    முதல் காவலன் வந்து சொன்னபோது சில  முனிவர்கள் பயந்து தண்ணீர் குடிக்கப் போவது போல பாவனை செய்து வெளியேறினர். இரண்டாவது காவலன் வந்து சொன்னபோது அசெம்பிளியில் பாதி காலி; ஒவ்வொரு முனிவரும் ஏதோ அவசர வேலை இருப்பது போல வெளியே போயினர்.
    சிறிது நேரத்தில் மூன்றாவது காவலன் வந்து அரசே; இந்த அறை வரை தீ வந்துவ்ட்டது; எங்களால் தீ ஜ்வாலையைத் தாங்க முடியவில்லை; நாங்கள் வெளியேறுகிறோம்; நீங்களும் வெளியேறுங்கள் என்று கெஞ்சினான். மீதியிருந்த முனிவர்கள் கைத்தடி காலணி, கமண்டலம் சகிதம் குதிங்கால் பிடறியிற் அடிக்க ஓடினர்.
    ஜனகன் சொன்னான்,
    “மிதிலாயாம் ப்ரதீப்தாயாம் நமே தஹ்யதி கிஞ்சன”-

    “ எரிவதில் என்னுடையது என்றும் எதுவும் இல்லை!” --


    தீயின் உக்கிரம் மெதுவாகத் தணிந்தது; ஜனகனும் யாக்ஞவல்கியரும் தொடர்ந்து தத்துவ விவாதம் நடாத்திக் கொண்டு இருந்தனர். ஓடிப்போன முனிவர்கள் ஒவ்வொருவராகத் திரும்பி வந்தனர். அவர்கள் வந்த காரணம், மன்னன் இறந்தானா? தலைமைக் குரு இறந்தாரா என்று பார்க்கத்தான்!

    எல்லோரும் மீண்டும் வந்து அமர்ந்த பின்னர் குரு சொன்னார்:
    “உண்மை ஞானி ஜனக மாமன்னன் ஒருவன்தான் ; நீங்கள் எல்லோரும் உயிர் பிழைக்க ஓடியதோடு கமண்டலமும் கைத்தடியும் எரிந்து விடும் என்று அஞ்சி அவைகளையும் எடுத்து ஓடினீர்; ஜனகனோ இந்த அரண்மனையே தன்னுடையது அல்ல” என்ற ஆன்ம ஞானம் பெற்றவன் என்றார்.

    முனிவர்கள் வெட்கித் தலை குனிந்தனர்; ‘ஞானிக்கில்லை இன்பமும் துன்பமும்’.
    “மிதிலை எரிந்திட வேதப் பொருளை

    வினவும் சனகன் மதி—தன்

    மதியினிற் கொண்டதை நின்று முடிப்பது

    வல்ல நம் அன்னை மதி”--       (சுப்ரமண்ய பாரதி)
    --சுபம்-