Sunday, January 10, 2016

சங்கடங்களை போக்க சம்மணங்கள்!

Adv


Advertisement


Advertisement

பதிவு செய்த நாள்

10ஜன
2016 
00:00

பொதுவாக நாம், நிறைய நேரம் காலை தொங்க வைத்தே அமர்கிறோம். இதனால், ரத்த ஓட்டம் இடுப்பிற்கு கீழ்ப் பகுதியில் மட்டுமே அதிகமாக செல்கிறது. இதன் காரணமாக, பல உடல் உபாதைகள் எற்பட வாய்ப்பு உண்டாகிறது. மாறாக, காலை மடக்கி, சம்மணமிட்டு அமரும் போது, இடுப்புக்கு மேலே, ரத்த ஓட்டம் அதிகமாகி, நம் உடலின் மிக முக்கிய உறுப்புகளான சிறுநீரகம், கணையம், நுரையீரல், மூளை, கண் மற்றும் காதுகளுக்கு சென்று, சக்தியும், ஆரோக்கியமும் கிடைக்க செய்கிறது.
மேலும், காலை மடக்கி, கீழே அமர்ந்து சாப்பிடுவதன் மூலம், இடுப்புக்கு கீழே ரத்த ஓட்டம் செல்லாமல், முழு சக்தியும் வயிற்றுப் பகுதிக்குச் சென்று, ஜீரணம் நன்றாக நடைபெறும்.
காலைத் தொங்க வைத்து நாற்காலியில் அமர்ந்து உண்பதால், ரத்த ஓட்டம், வயிற்றுப் பகுதிக்குச் செல்லாமல், கால்களுக்கு செல்கிறது.நடக்கும் போது மட்டும் கால்களுக்கு, சென்றால் போதும்.
அதேபோன்று, இந்திய வகை கழிப்பறையை பயன்படுத்தும் போது, காலை மடக்கி அமருவதால், கழிவுகள் எளிதில் வெளியேறும். யுரோப்பியன் ஸ்டைல் கழிப்பறையில், காலை தொங்க விட்டு அமரும் போது, குடலுக்கு அதிக அளவு அழுத்தம் கொடுத்தால் மட்டுமே, கழிவுகள் வெளியேறும். எனவே, முடிந்த வரை, காலை தொங்க வைத்து அமருவதை தவிருங்கள்.
கட்டில் மற்றும் சோபாவில் அமரும் போதும், சம்மணம் இட்டே அமருங்கள்.
தரையில் ஏதாவது விரிப்பை விரித்து, அதன்மேல், சம்மணங்கால் போட்டு அமர்ந்து சாப்பிடுங்கள்; அதற்கு வாய்ப்பில்லை என்றால், டைனிங் டேபிளில் காலை மடக்கி, அமர்ந்து சாப்பிடுங்கள்.
* நின்றபடி சாப்பிடும் பழக்கத்தை மாற்றி, குடும்பத்துடன் அமர்ந்து, ஒன்றாய் சாப்பிடுங்கள்.
* எந்த வகை சாப்பாடாக இருந்தாலும், நன்றாக மென்று, கூழாக்கி சாப்பிடுங்கள்; அவசரமாக சாப்பிடாதீர்கள்.
* பேசியபடியோ, 'டிவி' பார்த்தவாறோ, புத்தகம் படித்துக் கொண்டோ சாப்பிடக் கூடாது.
* சாப்பிடும் போது, இடையில் தேவையில்லாமல் தண்ணீர் குடிக்காதீர்கள்; அதேபோன்று, கடைசியில் தண்ணீர் குடிக்க மறக்காதீர்கள். போதிய அளவில், தண்ணீர் பருகுவது அவசியம்.
* பிடிக்காத உணவுகளை கஷ்டப்பட்டோ, பிடித்த உணவுகளை அளவுக்கு அதிகமாகவோ சாப்பிட வேண்டாம்.
* ஆரோக்கிய உணவுகளை எடுத்துக் கொள்வதுடன், இரவில், முள்ளங்கி, தயிர் மற்றும் கீரை உணவுகளை தவிர்க்க வேண்டும்.
* சாப்பாட்டுக்கு அரை மணி நேரம் முன், பழங்கள் சாப்பிடலாம்; சாப்பாட்டுக்கு பின், பழங்கள் சாப்பிட வேண்டாம்.
* சாப்பிடும் முன், சிறிது நடந்து, பின் சாப்பிடவும்; இரவு சாப்பிட்ட பின், நடப்பது மிகவும் நலம்.

சாப்பிட வேண்டிய நேரம்:
காலை - 7:00 முதல் 9:00
மதியம் - 1:00 முதல் 3:00
இரவு - 7:00 முதல் 9:00
* சாப்பிட்ட பின், இரண்டு மணி நேரம் கழித்து, தூங்க வேண்டும்.
* சாப்பிடும் முன்பும், பின்பும் கடவுளுக்கு நன்றி கூற மறக்காதீர்கள்.
* நம் முன்னோர்கள் காட்டிய வழிமுறைகளை பின்பற்றி ஆரோக்கியமாக வாழுங்கள்!

சண்முக சீனிவாசன்

No comments:

Post a Comment