Friday, August 31, 2018

thanks to tamil and vedas.com


30 வெற்றிவேற்கை மேற்கோள்கள் (Post No.5378)

COMPILED BY LONDON SWAMINATHAN
Date: 30 August 2018

Time uploaded in London – 13-02 (British Summer Time)

Post No. 5378

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

செப்டம்பர் 2018 காலண்டர்; விளம்பி வருஷம் ஆவணி-புரட்டாசி

30 வெற்றி வேற்கை மேற்கோள்களும் ஆங்கிலத்தில் இம்மாத ஆங்கிலக் காலண்டரில் கொடுக்கப்பட்டுள்ளன. அதிவீர ராம பாண்டியனால் இயற்றப்பட்டவை.

பண்டிகை நாட்கள்: செப்.2 கிருஷ்ண ஜயந்தி/ ஜன்மாஷ்டமி;
5 ஆசிரியர் தினம்; 11 பாரதி நினைவு தினம்; 13 விநாயக சதுர்த்தி/ பிள்ளையார் சதுர்த்தி; 25- மாளயபக்ஷம் ஆரம்பம்

அமாவாசை -9; பௌர்ணமி- 24; ஏகாதஸி- 6, 20
முகூர்த்த நாட்கள்- 6, 12

செப்டம்பர் 1 சனிக்கிழமை

எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும்

செப்டம்பர் 2 ஞாயிற்றுக்கிழமை

கல்விக்கழகு கசடற மொழிதல்

செப்டம்பர் 3 திங்கட்கிழமை
செல்வர்க்கழகு செழுங்கிளை தாங்குதல்

செப்டம்பர் 4 செவ்வாய்க்கிழமை
வேதியர்க்கழகு வேதமும் ஒழுக்கமும்

செப்டம்பர் 5 புதன்கிழமை
மன்னவர்க்கழகு செங்கோல் முறைமை

செப்டம்பர் 6 வியாழக்கிழமை
வணிகர்க்கழகு வளர் பொருளீட்டல்

செப்டம்பர் 7 வெள்ளிக்கிழமை
உழவர்க்கழகு ஏர் உழுதூண் விரும்பல்


செப்டம்பர் 8 சனிக்கிழமை
மந்திரிக்கழகு வரும்பொருளுரைத்தல்

செப்டம்பர் 9 ஞாயிற்றுக்கிழமை
தந்திரிக்கழகு தறுகண் ஆண்மை


செப்டம்பர் 10 திங்கட்கிழமை
உண்டிக்கழகு விருந்தோடுண்டல்

செப்டம்பர் 11 செவ்வாய்க்கிழமை
பெண்டிர்க்கழகு எதிர்பேசாதிருத்தல்

செப்டம்பர் 12 புதன்கிழமை
குலமகட்கழகு தன் கொழுநனைப் பேணுதல்

செப்டம்பர் 13 வியாழக்கிழமை
அறிஞர்க்கழகு கற்றுணர்ந்தடங்கல்

செப்டம்பர் 14 வெள்ளிக்கிழமை
வறிஞர்க்கழகு வறுமையில் செம்மை

செப்டம்பர் 15 சனிக்கிழமை
தேம்படு பனையின் திரள் பழத்தொரு விதை
வானுற ஓங்கி வளம்பெற வளரினும்
ஒருவர்க்கிருக்க நிழலாகாதே (வெற்றி வேர்க்கை)

தெள்ளிய வாலின் சிறு பழத்தொரு விதை
தெண்ணீர்க் கயத்துச் சிறுமீன் சினையினும்
நுண்ணிதே யாயயினும் அண்ணல் யானை
அணிதேர்ப் புரவி ஆள் பெரும்படையொடு
மன்னர்க்கிருக்க நிழலாகும்மே
நறுந்தொகை (வெற்றி வேற்கை)

செப்டம்பர் 16 ஞாயிற்றுக்கிழமை
பெரியோர் எல்லாம் பெரியரும் அல்லர்

செப்டம்பர் 17 திங்கட்கிழமை
சிறியோர் எல்லாம் சிறியரும் அல்லர்

செப்டம்பர் 18 செவ்வாய்க்கிழமை
பெற்றோர் எல்லாம் பிள்ளைகள் அல்லர்

செப்டம்பர் 19 புதன்கிழமை
உற்றோர் எல்லாம் உறவினர் அல்லர்


செப்டம்பர் 20 வியாழக்கிழமை
கொண்டோர் எல்லாம் பெண்டிரும் அல்லர்

செப்டம்பர் 21 வெள்ளிக்கிழமை
அடினும் ஆவின் பால் சுவை குன்றாது

செப்டம்பர் 22 சனிக்கிழமை

சுடினும் செம்பொன் தன் ஒளி கெடாது

செப்டம்பர் 23 ஞாயிற்றுக்கிழமை

அரைக்கினும் சந்தனம் தன் மணம் அறாது

செப்டம்பர் 24 திங்கட்கிழமை

புகைக்கினும் காரகில் பொல்லாங்கு கமழாது

செப்டம்பர் 25 செவ்வாய்க்கிழமை

கலக்கினும் தன் கடல் சேறு ஆகாது – வெற்றி வேற்கை

செப்டம்பர் 26 புதன்கிழமை
அடினும் பால்பெய்துகைப் பறாது பேய்ச்சுரைக்காய்

செப்டம்பர் 27 வியாழக்கிழமை

ஒருநாள் பழகினும் பெரியோர் கேண்மை
இரு நிலம் பிளக்க வேர் வீழ்க்கும்மே


செப்டம்பர் 28 வெள்ளிக்கிழமை

நூறாண்டு பழகினும் மூர்க்கர் கேண்மை
நீர்மேல் பாசிபோல் வேர் கொள்ளாதே


செப்டம்பர் 29 சனிக்கிழமை

பெருமையும் சிறுமையும் தான் தர வருமே


செப்டம்பர் 30 ஞாயிற்றுக்கிழமை

சிறியோர் செய்த சிறுபிழை எல்லாம்
பெரியோராயின் பொறுப்பது கடனே

Tuesday, August 28, 2018

மைதானத்துக்கு விரட்டுங்கள் பிள்ளைகளை! thanks to vikatan.com

மைதானத்துக்கு விரட்டுங்கள் பிள்ளைகளை!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ஆண் குழந்தைகளை வளர்ப்பது எப்படி?யாழ் ஸ்ரீதேவி
``எறும்புகளுக்கும் உணவளிக்கக் கோலமிடும் வழக்கம் கொண்டவர்கள் நாம். இன்றோ, பக்கத்து வீட்டுக்காரரின் பெயர் தெரியாது; உடன் வேலைபார்ப்பவர்களின் பிரச்னை தெரியாது. அருகருகில் இருப்பவர்களின் மனம் தொடர்பு எல்லைக்கு வெளியில் உள்ளது. மென்மையான உணர்வுகளும் மின்மயமாகிவிட்டன. ‘யாருக்கு என்ன நடந்தா எனக்கென்ன?’ என்ற சமூக மனநிலை குற்றங்களை அதிகரிக்கிறது; குற்றவாளிகளை அதிகரிக்கிறது; குற்ற உணர்ச்சியைக் குறைக்கிறது. நாளைய உலகம் ஆரோக்கியமானதாக இருக்க, இன்றைய குழந்தைகளைச் சமூகப் பொறுப்புள்ளவர்களாக வளர்க்க வேண்டியது அவசியமாகிறது. குறிப்பாக, ஆண் பிள்ளைகளிடம் தன் சமூகத்தில் நடக்கும் நல்லவைக்குத் தானும் பங்களிக்க வேண்டியதையும், அல்லவைக்கு எதிராகச் செயல்பட வேண்டியதையும் சொல்லி வளர்க்க வேண்டும்’’ என்கிறார் கோவையைச் சேர்ந்த மனநல ஆலோசகர் அருள்செல்வி. 
‘`பெண் குழந்தைக்கு உடுத்தும் உடையிலிருந்தே பெற்றோரின் அக்கறை தொடங்கிவிடுகிறது. ஆனால், ஆண் குழந்தையின் நிர்வாணம் எந்தப் பதற்றத்தையும் ஏற்படுத்துவதில்லை. ‘நாம் ஆம்பள... எப்படி வேணும்னாலும் இருக்கலாம்’ என்ற எண்ணம் எழத்தொடங்குவது இதிலிருந்துதான். ‘நீ ஓர் ஆண். உனக்கான கண்ணியத்தைக் கட்டமைத்துக்கொள்’ என்று அவர்களிடம் சொல்லி வளர்க்க வேண்டும். ‘அவமானம், வெட்கம், குற்ற உணர்ச்சி போன்ற எந்த உணர்விலிருந்தும் ஆண் என்பதற்காக உனக்கு விலக்கு இல்லை. அவமானப்பட வேண்டியவற்றுக்கு அவமானப்படு; வெட்கப்பட வேண்டியவற்றுக்கு வெட்கப்படு. அவற்றை மீண்டும் செய்யாதே. சக பெண்ணின் மனதைக் காயப்படுத்தினால் குற்ற உணர்ச்சிகொள்’ என்று பெற்றோர் அறிவுறுத்த வேண்டும்.

‘அவன் அப்படித்தான்’ என்று தங்கள் ஆண்பிள்ளைகளை ரஃப் அண்டு டஃபாக வளர்த்தெடுப்பதே இங்கு பல அம்மாக்களுக்கும் விருப்பமாக இருக்கிறது. ஆனால், தவற்றுக்கு மன்னிப்பு கேட்பது, பெற்ற உதவிக்கு நன்றி சொல்வது, முகம் பார்த்தவுடன் புன்னகைப்பது, நல்ல வார்த்தைகள் பேசுவது என எல்லோராலும் விரும்பப்படுபவனாக அவன் வளர்ந்து நிற்குமாறு வார்த்தெடுக்க வேண்டும். ‘யார் சொன்னாலும் கேட்க மாட்டான்’ என்று பிள்ளையை வளர்ப்பது அல்ல குட் பேரன்ட்டிங். ‘யார் நல்லது சொன்னாலும் கேட்டுக்குவான்’ என்று அவனை ஃப்ளெக்ஸிபிளாக வளர்ப்பதே சரியான வளர்ப்பு முறை.

குழந்தைகளின் சமூக நடத்தை மேம் பாட்டில் குடும்பம், பள்ளி மற்றும் சமூகம் என இந்த மூன்று தரப்பும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. வீடுகளில் செல்போனை விளையாடக் கொடுக்காமல், நல்ல விஷயங்களைக் கற்றுக்கொடுக்க வேண்டும். பள்ளிகளில் மாரல் வகுப்புகள் நிச்சயம் வேண்டும். குறிப்பிட்ட வேலையை முடித்தல், ரூல்ஸ் அண்டு ரெஸ்பான்ஸிபிலிட்டி போன்ற பழக்கங்களைப் பள்ளி நடைமுறை குழந்தைகளுக்குப் பழக்கப்படுத்த வேண்டும். சமூகத்தில் உள்ள ஆக்கபூர்வமான விஷயங் களை ஆண் குழந்தைகளுக்கு வீடு, பள்ளி இரண்டு தரப்பும் அறிமுகப்படுத்த வேண்டும். உலகத்துடன் அவர்கள் தயக்கமின்றிப் பழக அனுமதிக்க வேண்டும், ஊக்குவிக்க வேண்டும். ‘இவரை மாதிரி இருக்கணும்’ அல்லது ‘இவங்க செய்யற மாதிரி செய்துடக் கூடாது’ என சக மனிதர்களிடமிருந்தே சமூகத்தில் தன் மதிப்பை உயர்த்திக்கொள்ள குழந்தை கற்றுக்கொள்கிறது. 

ஆண் குழந்தைகள் இன்றைய சூழலில் படிப்பை மையமாக வைத்தே வளர்க்கப்படுகின்றனர். பெரும்பாலும் ஆன்லைன் குழந்தைகளாக வளரும் இவர் களுக்கு சக மனிதர்களை எதிர்கொள்வதும், மனித மதிப்பைப் புரிந்துகொள்வதும் பெரும் சிக்கலாக உள்ளது. ஆண் குழந்தைகள் சக வயதினருடன் கலந்து பழகும் வாய்ப்பை விளையாட்டு ஏற்படுத்திக் கொடுக்கிறது. உடலைப் பேண வேண்டும், உடல் தோற்றத்தில் கவனம் வேண்டும் என்ற விழிப்பு உணர்வையும் விளையாட்டின் வழியாக ஓர் ஆண் குழந்தை பெறுகிறது. குழு விளையாட்டுகளில் தோல்வி பழகுதல், விட்டுக்கொடுத்தல், குழுவாகக் கொண்டாடுதல், இணக்கமான நட்புறவை வளர்த்தல் ஆகிய பண்புகளைக் கற்றுக்கொள்கிறது. எனவே, வீட்டில் அடைத்து வைக்காமல் ‘ஓடு’ என்று அவர்களை மைதானத்துக்கு விரட்டிவிடுங்கள்.

படிப்பையும் தாண்டி ஆண் குழந்தைக்குள் இருக்கும் தனித்திறனைக் கண்டுபிடித்து ஊக்கப்படுத்த வேண்டும். இது அந்தக் குழந்தைக்குள் தன்னம்பிக்கையை அதிகரிக்கும். குழந்தையின் தனித்திறமையால் சமூகத்தில் அதற்குப் புதிய அடையாளம் கிடைக்கும்; அது மற்றவர்கள் முன் குழந்தையின் மதிப்பை உயர்த்தும். ஆண் குழந்தை சமூகப் பொறுப்புடன் நடந்து கொள்வதற்கான பாசிட்டிவ் சூழலை இது உருவாக்கும். தாழ்வுமனப்பான்மை அல்லது சுயவெறுப்புகொள்ளும் குழந்தைகள், உலகத்தையும் ஒருவித நெகட்டிவிட்டியுடனேதான் பார்ப்பார்கள். அதுவே, தன் திறமையில் நம்பிக்கையும் சந்தோஷமும்கொள்ளும் குழந்தைகள், உலகத்தை மகிழ்வுடன் அணுகுவார்கள். எனவே, ‘மேத்ஸ்ல என்ன மார்க் வாங்கியிருக்க நீ?’ என்ற வார்த்தைகளைவிட, ‘டாய் காரை எவ்ளோ சூப்பரா அசெம்பிள் செய்ற நீ!’ என்பதுபோன்ற தட்டிக்கொடுக்கும் வார்த்தைகளே அவசியம்.

சமூக அமைப்புகளில் கலந்துகொள்ளவும் அதன்வழியாக மற்றவர்களுக்கு உதவும் பழக்கத்தையும் ஆண் குழந்தைகளுக்கு ஏற்படுத்த வேண்டும். பள்ளியில் சுற்றுச்சூழல் குழு, என்சிசி, என்எஸ்எஸ், ஸ்கவுட் போன்ற அமைப்புகளில் அவர்கள் இணைந்து செயல்படட்டும். பெரும்பாலான பெற்றோர்கள் தங்களுக்குப் பிடித்த தனித்திறன் வகுப்புகளில் குழந்தைகளைப் பிடித்துத் தள்ளுவதையே வழக்கமாகக் கொண்டுள்ளனர் அல்லது அவர்கள் பழகும் தனித்திறன்களும் மதிப்பெண் வாங்க எந்த அளவுக்கு உதவும் என்றே யோசிக்கின்றனர். சேவை தொடர்பான குழுக்களில் சேர்வது வாழ்க்கைக்குப் பயன்படாது என்ற எண்ணத்தில் அதைத் தவிர்க்கின்றனர். இது தவறான அணுகுமுறை. சமூகம் மற்றும் சக மனிதர் மீதான அக்கறையை இதுபோன்ற அமைப்புகளே ஏற்படுத்துகின்றன. ஆண் குழந்தை வகுப்பறை தாண்டி சிந்திக்கவும் செயல்படவும் இதுபோன்றதோர் ஈடுபாடு தேவை.

ஆண் குழந்தைகள் வளரும் சூழலும், அவர்களுக்குக் கொடுக்கப்படும் வாய்ப்புகளும், முடிக்க அறிவுறுத்தப்படும் கடமைகளும் அவர்களைச் சமூகப் பொறுப்புமிக்க மனிதர்களாக வளர்க்கும். அன்புக் கூடுவிட்டுப் பறக்க அனுமதிப்பதும் அவர்கள் வலிமையானவர்களாக வளர அவசியமானது.’’

Monday, August 27, 2018

கவலைப்பட்டால் உடல் வெப்பநிலை அதிகரிக்கும் - நன்றி: தினமலர்

சொல்கிறார்கள்


கவலைப்பட்டால் உடல் வெப்பநிலை அதிகரிக்கும்!உடல் வெப்பநிலை சொல்லும் தகவல் குறித்து கூறும், குழந்தைகள் நல மருத்துவர், சி.திருப்பதி: அனைத்து ஜீவராசிகளுக்கும் மிகவும் அவசியமானது, உடல் வெப்பநிலை மற்றும் நாடித்துடிப்பும் தான். மனித உடலில் நடக்கும் அனைத்து வேதியியல் மாற்றங்களும், வெப்பநிலை சரியாக இருந்தால் தான் நடைபெறும்.குழந்தைகள் முதல், வயதானவர்கள் வரை, ஆரோக்கியமாக இருக்கின்றனரா என்பதை, உடல் வெப்பநிலையை வைத்து அறிந்து கொள்ள முடியும். மனித உடலின் சராசரி வெப்பநிலை, '98.6 டிகிரி பாரன்ஹீட்' அளவில் இருந்தால், அது இயல்பானது; அதை விட அதிகரித்தால் அல்லது குறைந்தால் இயல்பானதல்ல.உடல் வெப்பநிலை, 102 டிகிரி பாரன்ஹீட்டுக்கு அதிகமாகவோ, 96 டிகிரி பாரன்ஹீட்டுக்கு குறைவாகவோ செல்லக் கூடாது; அது மிக ஆபத்தான நிலை.வெப்பநிலை இயல்பை விட அதிகரிப்பது, 'ஹைப்பர் தெர்மியா' எனப்படும். இதை தான் காய்ச்சல் என்கிறோம். உடல் வெப்பநிலை சரியாக இருந்தால் தான், செல்களுக்கு தேவையான வெப்பம் கிடைத்து, வளர்சிதை மாற்றம் சரியாக நடைபெறும்.உடலின் வளர்சிதை மாற்றத்தை பொறுத்தே, ஒவ்வொருவரின் உடல் வெப்பநிலை மாறுபடும். வளர்சிதை மாற்றம் அதிகமாக நடைபெறுபவர்களின் உடலில், அதிக வெப்பம் காணப்படும்.எப்போதும் யோசித்துக் கொண்டே இருப்பவர்கள், எதையாவது நினைத்து கவலைப்படுபவர்கள், எதிர்காலத்தை நினைத்து கவலைப்படுபவர்களின் உடல் வெப்பநிலை, அதிகமாக இருக்கும். வைரஸ், பாக்டீரியா போன்ற நோய் தொற்றுகள் காரணமாக, உடலின் வெப்பநிலை அதிகரிக்கும்.மனதை அமைதியாக வைத்துக் கொள்பவர்கள், நேர்மறையான சிந்தனை உடையவர்களின் உடல் வெப்பநிலை, சரியாக இருக்கும். சுற்றுப்புறச்சூழலில், குறைந்த வெப்பநிலையின் போது, உடல் வெப்பநிலை சராசரி அளவை விட குறைவாகவே இருக்கும்.வெப்பநிலையை சரியான அளவில் பராமரிப்பதற்காக, மூளையில் வெப்ப சீர்நிலை தரும் கருவி இருக்கிறது. அது சுற்றுச்சூழலுக்கேற்ப, நம் உடல் வெப்பநிலையை பராமரிக்கும் வேலையை செய்கிறது.பச்சிளம் குழந்தைகளை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். குழந்தைகளை ஒருவர் மாற்றி ஒருவர் கையாளக் கூடாது. ஒவ்வொருவரின் உடல் வெப்பநிலையும் மாறுபடும். அதனால், குழந்தைகளுக்கு உடல்நல கோளாறுகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.வயதானவர்களுக்கு, சுற்றுப்புற வெப்பநிலைக்கு ஏற்ப, அவர்களின் உடல் வெப்பநிலையை பராமரிக்க முடியாது. அதனால் தான், குளிர்காலத்தில் அதிக மரணங்கள் நிகழ்கின்றன. வயதானவர்கள் எப்போதும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

Tuesday, August 21, 2018

எண்ணெய்க்குளியல் எடுக்கும் குழந்தைகளின் அம்மாக்கள் கவனிக்க வேண்டியவை! thanks to vikatan.com

எண்ணெய்க்குளியல் எடுக்கும் குழந்தைகளின் அம்மாக்கள் கவனிக்க வேண்டியவை!

தலைக்குக் குளித்த அன்று நெய், பருப்பு மற்றும் அசைவ உணவுகள் வேண்டவே வேண்டாம்.  உடலை மந்தமாக்கி விடும்.

'சனி நீராடு' என்பார்கள். நீங்கள் நீராடுவதோடு, உங்கள் பிள்ளைகளையும் நீராடச் செய்யுங்கள். உச்சந்தலையில் உள்ளங்கை அளவு நல்லெண்ணெயை 10 நிமிடங்கள் ஊறவிட்டு, அரப்பு, சீயக்காய் அல்லது ஹெர்பல் ஷாம்புவால் தலைக்கு ஊற்றிவிடுங்கள். உச்சி வெயிலில் கிரிக்கெட், சைக்கிள் சுற்றல் என 6 நாள்களாகப் பிள்ளையின் உடம்பில் சேர்ந்திருந்த அத்தனை சூடும் தணிந்து, ஆரோக்கியமாக இருப்பார்கள். இப்படி எண்ணெய்க்குளியல் எடுத்த நாளில், பிள்ளைகளுக்கு சில உணவுகளை நிச்சயம் தர வேண்டும். சில உணவுகளைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும். அவை என்ன? அம்மாக்களுக்கு டிப்ஸ் தருகிறார், சித்த மருத்துவர் வேலாயுதம்.
எண்ணெய்க்குளியல்
''எண்ணெய்க் குளியலை வெதுவெதுப்பான நீரில்தான் எடுக்க வேண்டும். குளிர்ந்த நீர் கூடவே கூடாது. வெதுவெதுப்பான நீர்தான், தோலில் இருக்கும் துளைகளைத் திறந்து அழுக்கை உடைத்து வெளியேற்றும். எண்ணெய்க்குளியல் செய்த நாளில், பிள்ளைகளின் உடலில் இருக்கும் கழிவுகள் வெளியேறிக்கொண்டிருப்பதால், உடம்பு அசதியாக இருக்கும். எனவே, எளிதில் செரிக்கக்கூடிய லேசான உணவுகளை மட்டுமே தர வேண்டும். மசாலாக்கள் நிறைந்த மற்றும் உடலை மந்தமாக்கும் உணவுகள் கூடவே கூடாது. 
மருத்துவர் வேலாயுதம்     எண்ணெய்க் குளியல் செய்த நாளில் நல்ல ஓய்வு அவசியம். விடுமுறைதானே எனப் பிள்ளைகளை வெயிலில் அழைத்துச் செல்லாதீர்கள். உடம்பு அசதியாக இருப்பதால், சோர்ந்து போய்விடுவார்கள். அதேநேரம், அந்த நாளில் ஓய்வாக இருக்கட்டும் எனப் பகல் தூக்கமும் கூடாது. எண்ணெய்க் குளியலுக்குப் பிறகு உடம்பில் இருக்கும் சூடு வெளியேறிக்கொண்டிருக்கும். இந்த நேரத்தில் தூங்கினால், மறுபடியும் உடம்பில் சூடு அதிகமாகும்'' என்கிற வேலாயுதம், அன்றைக்குச் சாப்பிட வேண்டிய மற்றும் சாப்பிடக்கூடாத உணவுகளைப் பட்டியலிடுகிறார்.
   'சாப்பிட வேண்டிய உணவுகள்...
* காலையில் ஆவியில் வெந்த இட்லி, இடியாப்பம், நன்கு வேக வைக்கப்பட்ட தினைக்கஞ்சி, கேழ்வரகுப் புட்டு, அரிசிப்புட்டு, ஆப்பம்... இவற்றுக்குத் தொட்டுக்கொள்ள பனங்கற்கண்டு சேர்த்த தேங்காய்ப்பால், பொட்டுக்கடலைச் சட்னி, இஞ்சித் துவையல் ஆகியவற்றைத் தரலாம்.
*  மதியம் வரகரிசி சாதம், சுண்டைக்காய் வற்றல் குழம்பு, மணத்தக்காளி வற்றல் குழம்பு, வெந்தயக்குழம்பு, மிளகு ரசம், பிரண்டைத் துவையல், கறிவேப்பிலைத் துவையல், கொத்தமல்லித் துவையல் ஆகியவற்றைக் கொடுக்கலாம்.
* உடலில் இருக்கும் கழிவுகள் வெளியேறுவதால், அதைச் சரியாக செய்ய நார்ச்சத்து நிறைந்த கீரைகள் மற்றும் காய்கறிகளை சிறிதளவு தேங்காய்த்துருவல் சேர்த்துக் கொடுங்கள்.
* எண்ணெய்க் குளியலுக்குப் பிறகு உடலில் இருக்கும் தேவையில்லாத சூடு மெல்ல மெல்ல வெளியேறுவதால், சூட்டை வேகமாகத் தணிக்க மோர் சாதம் கொடுக்கலாம்.
* இரவில் இட்லி மாதிரியான லேசான உணவு அல்லது, ஒரு நாட்டு வாழைப்பழம் கொடுக்கலாம். பிள்ளைகள் எதுவுமே சாப்பிட மாட்டேன் என்றால், ஒரு கப் பசும்பாலில் ஒரு சிட்டிகை வீட்டில் அரைத்த மஞ்சள்பொடி, தேவையான பனங்கற்கண்டு சேர்த்து குடிக்கக் கொடுக்கலாம். 
உணவு
சாப்பிடக்கூடாத உணவுகள்...
* பிள்ளைகளுக்குக் காலையில் பால் கொடுக்கும் வழக்கம் இருந்தால், எண்ணெய்க் குளியல் நாளில் தவிர்த்துவிடுங்கள். பால், செரிமானமாக அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். உடம்பானது, கழிவுகளை வெளியேற்றும் வேலையை விட்டுவிட்டு பாலை செரிக்கவைக்கும் வேலையைச் செய்ய ஆரம்பித்துவிடும். 
* தயிர் வேண்டாம். சீதளத்தைத் தூண்டிவிட்டு சளிப் பிடிக்க வைத்துவிடும். 
* தலைக்குக் குளித்த நாளில் நெய், பருப்பு மற்றும் அசைவ உணவுகள் வேண்டவே வேண்டாம். உடலை மந்தமாக்கிவிடும். இவையும் செரிமானமாக நிறைய நேரம் எடுத்துக்கொள்ளும். ஏற்கெனவே அசதியாக இருக்கும் உடம்பு இன்னும் சோர்ந்து போய்விடும்.  
* காய்கறிகள் தரலாம் என்றாலும், அதில் மசாலாவும் தேங்காயும் அரைத்துவிட்ட குருமா வேண்டாம். புளித்த ஏப்பம், மந்தம், நெஞ்செரிச்சல் எனப் பிரச்னைகளை ஏற்படுத்திவிடும்.
ஆப்பம்
எண்ணெய்க்குளியல் எடுத்த அன்று மேலே சொன்னவற்றை ஃபாலோ செய்தால், உங்கள் பிள்ளைகள் சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பார்கள்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

SOCIAL FEED
Most read
கேரளாவுக்கு Emirates! நமக்கு யாரு? | The Imperfect Show 21/8/2018
#EPVI Evan Patha Velada Ithu 12:10 Tweets of the Day 12:52 Award of the Day 13:51 கேரளாவுக்கு Emirates! நமக்கு யாரு?,தி.மு.க குடும்ப அரசியல், தினகரன் காங்கிரஸ் கூட்டணி?,செல்பி விபரீதம்!...