Saturday, November 30, 2019

டெங்கு' காய்ச்சலுக்கு மூலிகைகள் thanks dinamalar.com


பீஹார் மாநிலத்தில் ஒரு கிராமத்தில், 50 ஆண்டுகளுக்கு முன் நடந்த உண்மை சம்பவம் இது. முதியவர் ஒருவர், காட்டில் தினமும் ஆடு, மாடுகளை மேய்த்துக் கொண்டிருப்பார். ஒரு நாள், காலில், 'நறுக்'கென ஏதோ குத்தியது போல உணர்ந்தார்; குனிந்து பார்த்த போது, ரத்தம் வடிந்து கொண்டிருந்தது.ஏதோ பூச்சி கடித்து விட்டது என நினைத்து, சுற்றும் முற்றும் பார்த்த போது, சில அடி துாரத்தில், கருநாகப் பாம்பு சுருண்டு, நெளிந்து கொண்டிருந்தது.உடனடியாக, பக்கத்திலிருந்த வேப்ப மர இலைகளை பறித்து, அப்படியே வாயிலிட்டு மென்று விழுங்கினார்.
கடிபட்ட இடத்தின் மீது, வாயில் இருந்த சாற்றை பூசினார்.கருநாகப்பாம்புசில நிமிடங்கள் கழித்து பார்த்த போது, அந்த கருநாகப் பாம்பு செத்துக் கிடந்தது. அதை ஒரு கம்பில் துாக்கியபடி, ஊருக்குள் சென்றார். மக்கள், இவர் கையில் உள்ள கருநாகப் பாம்பை பார்த்து, என்ன, ஏது என விசாரிக்க, நடந்ததை விவரித்தார்.சில நாட்கள் கழிந்தன. அதன் பிறகும் அந்த முதியவருக்கு ஒன்றும் நேரவில்லை. பாம்பு கடித்தும் ஒன்றும் ஆகாத அந்த முதியவர் பற்றி அறிந்த நிருபர்கள், அவரை தேடி, பேட்டி எடுத்தனர்.'பாம்பு கடித்த பிறகும், எப்படி நீங்கள் பாதிப்பின்றி இருக்கிறீர்கள்; உங்களை கடித்த பாம்பு, இறந்தது எப்படி?' என, அடுக்கடுக்காக கேள்வி கேட்டனர்.
படிப்பறிவு சிறிதும் இல்லாத அந்த பெரியவர் கூறியதாவது:இந்த காட்டில் தான், 40 - 50 ஆண்டுகளாக ஆடு, மாடு மேய்த்து வருகிறேன். என் அம்மா, 'காட்டில் விஷப்பூச்சிகள் நடமாட்டம் அதிகம் இருக்கும். அவை கடித்து விட்டால், பாதிப்பு ஏற்படாமலிருக்க, சர்ப்பகந்தா, நிலவேம்பு, மலைவேம்பு செடிகளின் இலைகளை பறித்து சாப்பிடு' என்பார்.
அதன்படி, அவற்றில் ஏதாவது ஒரு மூலிகையை தினமும் பறித்து சாப்பிடுவேன். என் ரத்தத்தில் கலந்திருந்த, மூலிகைகளின், விஷ முறிப்பு சக்தி தான், பாம்பு கடித்த பிறகும் நான் சாகாததற்கு காரணம். என் உடலில் சேர்ந்திருந்த அந்த சக்தி தான், என்னைக் கடித்த பாம்பையும் கொன்றது.இவ்வாறு அவர் கூறினார்.இதிலிருந்து நாம் பெற வேண்டிய தகவல், உடம்பில், நோய் மற்றும் விஷம் எதிர்ப்பு சக்தி இருக்குமானால், கொடிய நாகப் பாம்பின் விஷம் கூட முறிந்து விடும்; கடித்த பாம்பும் இறந்து விடும் என்பதாகும்.இந்த முதியவர் உண்ட மூலிகைகளான, மலை வேம்பு, சர்ப்பகந்தா, நிலவேம்பு போன்றவை, தமிழக சித்தர்களின், மூலிகை மருத்துவத்தில் மிகச் சிறந்த நஞ்சு முறிப்பு மூலிகைகளாக பயன்படுத்தப் படுகின்றன.பல நுாறு ஆண்டுகளாக, மக்களை விஷக்கடிகளிலிருந்து மீட்ட, இந்த மூலிகைககள் தான், மனித குலத்தின் உண்மையான மெய்க்காப்பாளர்கள்.ஆனால், இவை பற்றிய வரலாற்று பதிவுகள், கிராமத்து கதைகளாகவும், பாடல்களாகவும், பழமொழிகளாகவும் இருப்பதால் அழிந்து வருகின்றன. இவற்றை ஆராய்ந்தாலே, 'டெங்கு' காய்ச்சல் மட்டுமல்ல, புற்றுநோய்க்கும் கூட மருந்து கண்டுபிடிக்க முடியும் என்பது, என் எண்ணம்.

அந்த வகையில், 2006 - 2007ல் நான் அறிமுகப்படுத்திய, நிலவேம்பு கஷாயம், இன்று, டெங்கு காய்ச்சலுக்கு நல்ல தீர்வை அளிக்கிறது என்பது, அனுபவ உண்மையாகி உள்ளது. எனினும், அதற்கான, இன்றைய நவீன ஆய்வு விளக்கம், இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்பது நம் அலட்சியமாகும்.நோய் எதிர்ப்புச் சக்தி நிலவேம்பு கஷாயத்தை, கொசு உற்பத்தியாகும் இடத்தின் மீது, 'ஸ்பிரே' செய்தாலே போதும்; டெங்கு காய்ச்சலை உண்டாக்கும் கொசு உற்பத்தி குறையும். இனியாவது நிலவேம்பு, மலைவேம்பு, மாவிலை, நொச்சியிலையை கஷாயம் செய்து குடிப்பது போல, கொசு உற்பத்தியாகும் இடங்களில், ஸ்பிரே செய்யவும் வேண்டும்.அதுபோல, வேப்பெண்ணெயில், 'லெமன் கிராஸ் தைலம்' கலந்து, ஸ்பிரே செய்தாலும் கொசுக்கள் பரவாது.

மூலிகைகளை அருந்தி கிடைத்த நோய் எதிர்ப்பு சக்தியால், ரத்தத்தை வலுப்படுத்திக் கொண்டால், நம்மை கொசு கடித்தாலும் இறந்து விடும்.நிலவேம்பு, மலைவேம்பு, வில்வம், அருகம் புல், சீந்தில், நெல்லி, மஞ்சள், கண்டங்கத்திரி, சுக்கு, மிளகு, பற்பாடகம், விஷ்ணு கரந்தை, கோரைக்கிழங்கு, சந்தனம், சித்தாமுட்டி, சித்திரமூலம், தாமரை போன்ற மூலிகைகளை அவ்வப்போது சாப்பிட்டு வந்தாலே போதும்; நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும். இவை, பக்க விளைவு தராத நல்ல மூலிகைகள். மேற்கண்ட மூலிகைகளை, ஒரு ஆய்வுத் திட்டமாக உருவாக்கி, 'அலோபதி' எனப்படும் ஆங்கில மருத்துவர்களும், சித்த மருத்துவ நிபுணர்களும் இணைந்து, 'காய்ச்சலை ஒழிக்கும் மூலிகைகள்' என்ற தலைப்பில், ஆய்வு திட்டத்தை மேற்கொண்டால், டெங்கு காய்ச்சலை முற்றிலும் தடுக்கலாம்.இந்த ஆய்வுகளை, தனி மனிதனாக நான் மட்டுமே செய்ய முடியாது. சென்னையில் உள்ள, எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலைக் கழகத்தின், மருந்து ஆய்வுதுறை, தாம்பரத்தில் உள்ள, தேசிய சித்தா மருத்துவ கல்வி நிறுவனம் ஆகிய நிறுவனங்கள், இதை ஆய்வு திட்டமாக ஏற்று, ஆய்வு மேற்கொண்டால், மூலிகைகளின் தெய்வீக குணங்கள், பல நோய்களுக்கு மருந்தாகும்.நில வேம்புக் குடிநீர்அதுவரை பொதுமக்கள் அறிய வேண்டிய சில தகவல்கள்:நான் அறிமுகம் செய்த நில வேம்பு கஷாயம், இன்று நன்கு பயனாகி வருகிறது என்றாலும், இது மட்டுமே போதாது. பின் வரும், மூலிகை மருந்துகளையும் மக்கள் பயன்படுத்தலாம். விஷ்ணு கரந்தை - இதை தினசரி கஷாயம் போட்டு சாப்பிடலாம் சீந்தில் - இதையும் கஷாயமாக அருந்தலாம் பற்பாடகம் - இதையும் உலர்த்திப் பொடி செய்து, கஷாயம் செய்து அருந்தலாம் மலை வேம்பு - தினமும், ௧௦ - ௨௦ இலைகளைப் பறித்து, ௧௦ மிளகு சேர்த்து அரைத்து, ஒரு வேளை சுடு தண்ணீருடன் அருந்தலாம் கருந்துளசி - அரை பிடி எடுத்து, ஒன்றரை குவளை கொதி நீரில் போட்டு கஷாயமாக்கி கொதிக்கும் போது, கிராம்பு - ௫, மிளகு - ௧௦ சேர்த்து காய்ச்சி வடிகட்டி, தேன் ௨ ஸ்பூன் கலந்து, காலை - மாலை பருகலாம் வில்வம், வன்னி ஆகிய இரு மூலிகை இலைகளைப் பறித்து, உலர்த்திப் பொடி செய்து, அரை ஸ்பூன் எடுத்து, ஒரு குவளை கொதி நீரில் போட்டு, கஷாயம் செய்து பருகலாம்.சென்னை, அடையாறில் உள்ள, இந்திய மருத்துவ உற்பத்தி சங்கம் எனப்படும், 'இம்ப்காப்ஸ்' கடந்த, ௭௫ ஆண்டுகளாக, நம் பாரம்பரிய மருந்துகளை தயாரித்து வருகிறது. அங்கிருந்து, சுதர்சன சூரணத்தை வாங்கி, தினமும் காலை, மாலை, அரை ஸ்பூன் எடுத்து, வெதுவெதுப்பான நீரில் பருக வேண்டும்.மேலும், தாளிசாதி சூரணம் என்ற மூலிகை மருந்தை, காலை, மாலை, அரை ஸ்பூன் தேனுடன் குழைத்து சாப்பிடலாம்.வசந்த குசுமாகரம் என்ற சித்த மருந்தை, காலை ஒன்று, இரவு ஒன்று என எடுத்து, வெற்றிலையுடன் சேர்த்து, தேன் ஒரு ஸ்பூன் கலந்து சாப்பிட, டெங்கு காய்ச்சல் ஓடியே போய் விடும்.எனினும், இந்த மருந்துகளை, சித்த மருத்துவர் ஆலோசனைபடி எடுத்துக் கொள்வது நல்லது!தொடர்புக்கு: ௯௦௦௩௦ ௩௧௭௯௬

Sunday, November 3, 2019

குழந்தைகளுக்கு மலச்சிக்கல் ஏற்படுவது ஏன்? thanks dinamalar.com

குழந்தைகளுக்கு மலச்சிக்கல் ஏற்படுவது ஏன்?
Advertisement
 
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01நவ
2019
00:00
உணவு பழக்க மாற்றம், குழந்தைகளின் உடல் நலத்தை பாதித்துஉள்ளதா?
பள்ளி செல்லும் வயதில் உள்ள, 7 - 12 வயது குழந்தைகளில், 25 சதவீதம் பேருக்கு மேல், மலச்சிக்கல் பிரச்னை உள்ளது. இதற்கு, உடல்ரீதியில் பல காரணங்கள் இருந்தாலும், மாவுச்சத்தும், சர்க்கரையும் அதிகமாக உள்ள துரித உணவுகளை சாப்பிடுவதே, பொதுவான காரணம். ஏழு வயதிற்கு குறைந்த குழந்தைகளுக்கும், இப்பிரச்னை அதிகரித்து உள்ளது.

பிரச்னைக்கு உடல் ரீதியான காரணங்கள் என்ன?
குடல் அடைப்பு, நரம்பு மண்டலத்தில் ஏற்படும் பாதிப்பு, ஆசனவாய் அமைப்பில் ஏற்படும் மாற்றங்கள், பெருங்குடலில் உள்ள நரம்பு மண்டல பாதிப்புகள் போன்ற, பிறவியிலேயே ஏற்படும் குறைபாடு களால், இந்தப் பிரச்னை வரலாம். 'மெட்டபாலிசம்' என்று சொல்லப்படும், உடல் உள் செயல்பாடுகளில் ஏற்படும் மாற்றங்களாலும், மலச்சிக்கல் பிரச்னை வரலாம்.மிகவும் கெட்டியான மலம், ஆசனவாய் வழியே வரும் போது, அந்த இடத்தில் புண் ஏற்படும். அடிக்கடி இது போல ஏற்பட்டால், வலிக்கு பயந்து, குழந்தைகள் மலம் கழிப்பதைத் தவிர்க்க முற்படுவர். எனவே, மலம் பெருங்குடலிலேயே தங்கி விடும். தைராய்டு ஹார்மோன் அளவு குறைவாக சுரப்பதாலும், ரத்தத்தில் கால்சியம் அளவு அதிகமாக இருந்தாலும், இப்பிரச்னை வரும்.பிறவியிலேயே ஏற்பட்டுள்ள குறைபாடுகளை, அறுவை சிகிச்சை மூலமும், மற்ற பிரச்னைகளை, சரியான மருந்துகள் தருவதாலும் சரிசெய்ய முடியும்.

இதனால் மனநல பாதிப்புகள் ஏற்படுமா?
தினமும் மலம் கழிக்காவிட்டால், பெருங்குடலில் வாயு உற்பத்தி ஆகும். இது மிகவும் ஆபத்தானது. இந்த வாயு, அப்படியே தங்கி, ரத்தத்தில் கலந்து, எந்த விஷயத்திலும் முழு ஈடுபாடு இல்லா மனநிலையை ஏற்படுத்தும். இப்பிரச்னை உள்ள குழந்தைகள், வகுப்பில், கொட்டாவி விட்டபடி, சோம்பலாக இருப்பர். இவர்களால், பாடங்களில் கவனம் செலுத்த முடியாது. பிரச்னை வந்த பின், மனதளவில் ஏற்படும் மாற்றம் இது.மற்றொரு புறம், மனநிலையில் ஏற்படும் மாற்றங்களாலும், பழக்கத்தினாலும், 95 சதவீதம் குழந்தைகளுக்கு, இப்பிரச்னை ஏற்படுகிறது. மன பதற்றம், மன அழுத்தம் போன்றவையும் அரிதாக ஏற்படலாம்.பெற்றோரிடையே ஏற்படும் சண்டை, விவாதங்கள், கருத்து மாறுபாடுகளால் சத்தம் போடுவது, குழந்தைகளின் மனதில், அச்சத்தையும், பாதுகாப்பின்மையையும் ஏற்படுத்தும். இதனாலும், மலச்சிக்கல் ஏற்படலாம்.

உணவு பழக்கம் எப்படி இருக்க வேண்டும்?
அதிக நார்ச்சத்து உள்ள, கீரை, காய்கறி, பழங்கள், தினமும் சாப்பிட வேண்டியது அவசியம். அதிகமாக, மைதா மாவு சேர்ப்பது, நீர்ச்சத்து உறிஞ்சப்பட்டு, மலம் கெட்டியாகி விடுகிறது.பால் வகை பொருட்கள், வறுத்த, பொரித்த உணவுகளை, குழந்தைகளுக்கு தருவதை தவிர்க்க வேண்டும்.பிஸ்கெட், சாக்லெட் போன்ற அதிக சர்க்கரை, மைதா உள்ள உணவுகளுக்கு பதிலாக, நம் வழக்கத்தில் உள்ள பாரம்பரிய உணவுகளை, சாப்பிட பழக்குவது நல்லது. திரவ உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வதற்கும், குழந்தையை பழக்க வேண்டும்.

பழக்கத்தினால் பிரச்னையை எப்படி தவிர்க்கலாம்?
பெற்றோரின் பங்கு மிகவும் முக்கியமானது. இரவில், அதிகபட்சம், 9:00 மணிக்குள் துாங்க வைத்து, அதிகாலையில் எழுந்திருக்கும் பழக்கத்தை, குழந்தைகளிடம் ஏற்படுத்த வேண்டும். காலையில் எழுந்ததும், கழிப்பறைக்கு செல்லும் பழக்கத்தை கற்றுத்தர வேண்டியது அவசியம். குறிப்பாக, இந்திய அமைப்பில் உள்ள, 'டாய்லெட்'டை பயன்படுத்த, பழக்க வேண்டும். இதனால், குழந்தைக்கு, அடிவயிற்றில் நன்கு அழுத்தம் ஏற்பட்டு, மலம் எளிதாக கழிக்க வாய்ப்பு ஏற்படும்.

டாக்டர் கே. சரவணபவன்
குழந்தைகள் நல மருத்துவர்,
சென்னை
98412 89896