Saturday, June 30, 2018

முதலை விழுங்கிய பாலகனை உயிர்ப்பித்து மீட்ட தலம் thanks to tamil and vedas

[New post] முதலை விழுங்கிய பாலகனை உயிர்ப்பித்து மீட்ட தலம்! (post No.5153)
Yahoo/Inbox
  • Tamil and Vedas <comment-reply@wordpress.com>
    To:theproudindian_2000@yahoo.co.in
    Jun. 27 at 1:46 a.m.
    Respond to this post by replying above this line

    New post on Tamil and Vedas

    முதலை விழுங்கிய பாலகனை உயிர்ப்பித்து மீட்ட தலம்! (post No.5153)

    by Tamil and Vedas
    Tiruchengodu temple sculpture
    Written by S NAGARAJAN

    Date: 27 JUNE 2018

    Time uploaded in London –   8-45 AM (British Summer Time)

    Post No. 5153

    Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.


    முதலை விழுங்கிய பாலகனை உயிர்ப்பித்து மீட்ட தலம்!

    ச.நாகராஜன்

    அற்புதமான வரலாறுகளைக் கொண்டது பாரதம். இங்கு தோன்றிய மகான்கள் பல அற்புதங்களை நிகழ்த்தியுள்ளனர். ஆனாலும் அவற்றையெல்லாம் அவர்கள் பெரிது படுத்தி பெருமை கொண்டாடியதில்லை. இறைவனின் திருவிளையாடல்களில் தாங்கள் ஒரு சிறு கருவி என்ற மட்டில் அதற்கு உரிய மதிப்பைத் தந்தனர்.

    ஆனால் அற்புதங்களைப் பார்த்து வியந்தோர் அதைப் பல்வேறு விதமாகப் பதிவு செய்துள்ளனர்.
    கொங்கு மண்டல சதகத்தில் வரும் 16ஆம் பாடல் திரு அவிநாசி தலத்தில் நடந்த ஒரு பெரும் அற்புதத்தை விவரிக்கிறது.

    பூவென்ற சீரடி யாரூர்ப் பரவைதன் போகங்கொளும்
    பாவென்ற செந்தமிழ்ச் சுந்தரன் பாடிப் படர்குளத்தில்
    ஆவென்ற வாயின் முதலைகொள் பிள்ளையை யன்றுகொண்டு
    வாவென் றழைத்த வவிநாசி சூழ்கொங்கு மண்டலமே.

    பாடலின் பொருள் : பிள்ளையைக் கொண்டு வா என்று செந்தமிழ் சுந்தரர் பதிகம் பாட, ஆவென்று பிள்ளையை விழுங்கிய முதலையானது அந்தப் பிள்ளையை கொண்டு வந்த  அவிநாசியை உடையது கொங்கு மண்டலமே.

    வரலாறு: திருநாவலூரர் என்று சிறப்பிக்கப்படும் சுந்தர மூர்த்தி நாயனார் அவிநாசிக்கு எழுந்தருளிய சமயம், ஒரு வீட்டில் மங்கல ஒலியும் அடுத்த வீ ட்டில் அழு குரலும் கேட்டது.

    மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் சில சிறுவர்கள் குளக்கரைக்குச் சென்றனர். அங்கிருந்த முதலை ஒரு சிறுவனை விழுங்கி விட்டது.

    அச்சிறுவனுடன் சென்றவனுக்கு இன்று உபநயனம். ஆகவே அந்த வீட்டில் மங்கல ஒலி எழுந்தது. அடுத்த வீட்டிலோ தனது குழந்தை இன்று இருந்தால் அவனுக்கும் இது போல உபநயனம் நடந்து கொண்டிருக்குமே என்று அவன் தாயார் ஓவென்று அழுத வண்ணம் இருந்தார்.

    இதை சுந்தர மூர்த்தி நாயனார்க்கு அங்குள்ளோர் தெரிவித்தனர்.
    மனமிரங்கிய நாயனார் குழந்தையை இழந்த தாயார் படும் துயரத்தைக் கண்டு பொறாதவராக இருந்தார்.
    நேராக குளக்கரைக்குச் சென்று ”காலனைக் குழந்தையைக் கொடுக்கச் சொல்” என்று பதிகம் ஓதி அருளினார். மூன்று ஆண்டுக்குரிய வளர்ச்சியுடன் அந்தச் சிறுவனை முதலை கரையில் கக்கிற்று.
    இதை அவிநாசிப் புராணமும் சுந்தர மூர்த்தி தேவாரமும் தனது பாடல்களால் அழகுற விளக்குவதை கீழ்க்கண்ட பாடல்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம்:

    உரைப்பாருரையென் றுள்குறவல்லா ருச்சியின்மீதே யொளிவிடுசுடரே
    யரைக்காடரவா வாதியு நடுவு மந்தமுமளவு மல்லவுமானாய்
    புரைக்காடவை சூழ்புக்கொளியூரா புகழவிநாசிப் புண்ணியமுதலே
    கரைக்கான் முதலையைப் பிள்ளைதரச்சொல் காலனையென்றே கட்டுரை செய்தார்
    • அவிநாசிப் புராணம்
    உரைப்பாருரையிகந் துள்கவல்வார் தங்களுச்சியா
    யரைக்காடரவா வாதியு மந்தமுமானாய்
    புரைக்காடு சோலைப் புக்கொளியூ ரவிநாசியே
    கரைக்கான் முதலையைப் பிள்ளை தரச்சொல்லு காலனையே
    • சுந்தரமூர்த்தி தேவாரம்

    இந்தத் திருவிளையாடலில் மகத்தான விஞ்ஞானப் பேருண்மைகள் அடங்கியுள்ளன.
    மூன்று வயது வளர்ச்சியுடன் பாலகன் திரும்பி வந்தான் என்பது ஒரு அரிய செய்தி.
    மல்டிவர்ஸ் - Multiverse- என்னும் அரிய நவீன விஞ்ஞானக் கோட்பாட்டின் படி பல்வேறு பிரபஞ்சங்கள் ஒன்றின் மேல் ஒன்று அடுக்கடுக்காக உள்ளன என்பது தெரிகிறது.
    W.Dunne  எழுதிய   “Nothing Dies” என்ற நூல் ‘எதுவும் இறக்காத நிலை’ என்ற கோட்பாட்டை அழகுற விளக்குகிறது.
    பல்லுயிரும் பல்வேறு உலகங்களில் இருப்பதாலேயே, மகத்தான தன் ஆன்மீக சக்தியின் மூலம் மூன்று வயது வளர்ந்த நிலையில் அந்த பாலகனை சுந்தரர் மீட்டார் என்பது வியப்புறும் விஞ்ஞானத்திற்கொத்த ஒரு செய்தியாகும்.
    இந்த அரிய அற்புதத்தை வழங்கிய மண்டலம் கொங்கு மண்டலமே.

thanks to dinamalar.com

கொஞ்சம் கவனம்... கொட்டும் நிம்மதி!: நமக்கு நாமே போட்டுக் கொள்ளும் கவசம்!

பதிவு செய்த நாள்

24ஜூன்
2018 
00:00
நீரிழிவு, உடல் பருமனை தொடர்ந்து, வைட்டமின், 'டி' குறைபாடு, இன்று பொதுவான பிரச்னையாகி விட்டது; 10ல் ஐந்து பேருக்கு இக்குறைபாடு இருக்கிறது.

வைட்டமின், 'டி' என்பது என்ன?
சூரிய ஒளியிலிருந்து, நம் தோல் தன்னிச்சையாக உற்பத்தி செய்து கொள்ளும், மிக அவசியமான நுண்ணுாட்டச் சத்து. உணவில் இருந்து கிடைக்கும் பல்வேறு சத்துக்கள் முழுமையாக உடலில் சேர வேண்டும் என்றால், வைட்டமின், 'டி' அவசியம்.

பொதுவான குறைபாடாக வைட்டமின், 'டி' மாற என்ன காரணம்?
வெப்ப மண்டல நாடுகளில் வசிக்கும் நம்மை போன்றவர்களுக்கு, இக்குறைபாடு வரவே கூடாது; ஆனால், வாழ்க்கை முறை மாற்றத்தால், இது பொதுவாகி விட்டது. வெயில் மேலே படுவதே இல்லை. அலுவலகம், பள்ளி செல்பவர்கள் கை, கால், முகம் என்று சூரிய ஒளி படும் பகுதிகளை, துணியால் மறைத்து விடுகின்றனர்.

வெளி மாசுகளில் இருந்து தற்காத்துக் கொள்ள வேறு என்ன வழி?
தோலில் உள்ள வியர்வை துவாரங்கள் மூடாமல் இருந்தால், சூரிய ஒளியிலிருந்து வரும் புற ஊதாக் கதிர்கள், அகச் சிவப்புக் கதிர்கள் உதவியுடன், மாசுகளில் இருந்து தற்காத்துக் கொள்ள, தேவையான எதிர்ப்பு சக்தியை, உடம்பு தானே உருவாக்கிக் கொள்ளும். பாதுகாப்புக் கவசம் என்ற பெயரில், சன் ஸ்கிரீன் லோஷன் உட்பட, நாம் பின்பற்றும் வழிகள் அனைத்தும், இதை தடுத்து விடுகிறது.

வைட்டமின், 'டி' ஏன் அவசியம்?
கால்ஷியம், பாஸ்பரஸ் போன்ற தாதுக்களை, தேவையான அளவு, நம் உடம்பு கிரகித்துக் கொள்ள, வைட்டமின், 'டி' போதுமான அளவு இருக்க வேண்டும். 1900களில், ரிக்கெட்ஸ் நோய் பெருமளவு பாதித்தது.
இந்த நோய் பாதிப்பில், எலும்புகள் வலுவிழந்து, மெலிந்து, அடர்த்தி குறைந்து, எளிதில் உடைந்து விடும் அபாயமும், முட்டிகள் இரண்டும் வெளிப்பக்கம் வளைந்து, 'டைமண்ட்' வடிவிலும் காணப்படும். 
குழந்தைகளை பெருமளவு பாதித்த இந்த நோய்க்கு காரணம், கால்ஷியம் பற்றாக்குறை எனக் கண்டறிந்து, கால்ஷியம் மாத்திரைகள் உட்பட, சில சிகிச்சை முறைகளை அப்போது கொடுத்தனர். ஆனால், நாம் சாப்பிடும் உணவில் இருந்து, போதுமான அளவு, கால்ஷியம் எலும்புகளில் சேர்ந்து, எலும்புகள், பற்கள் வலிமையாக இருக்க, இது மிகவும் அவசியம். ஆனால், வைட்டமின், 'டி' குறைபாடு இருந்ததால் தான், ரிக்கெட்ஸ் பிரச்னை என்பது அப்போது தெரியவில்லை.

குழந்தைகள்...
குழந்தைகளுக்கு, 8 வயதில் பால் பற்கள் விழுந்து, அடுத்த, 10 நாட்களுக்குள் வளர ஆரம்பித்து விடும். தற்போது, 6 வயதிலேயே பற்கள் விழுந்து விடுகின்றன; புதிய பற்கள் முளைப்பதற்கு பல மாதங்கள் ஆகிறது. இதற்கும் காரணம் வைட்டமின், 'டி' குறைபாடே!

நிறத்திற்கு தகுந்த உற்பத்தி...
'மெலனின்' என்ற நிறமி அதிகம் இருந்தால், தோலின் நிறம், அடர்த்தியாக (கறுப்பு, பிரவுன் போன்ற) இருக்கும். மெலனின் குறைவாக இருப்பவர்களுக்கு (மஞ்சள், பிங்க்) தோலின் நிறம் வெளிறி இருக்கும். மெலனின் அதிகம் இருந்தால், வைட்டமின், 'டி' உற்பத்தி மெதுவாக நடக்கும். 

இந்த குறைபாடு இருந்தால், வேறு என்ன பிரச்னைகள் வரும்?
நீரிழிவு, மன அழுத்தம், துாக்கமின்மை போன்ற பிரச்னைகள் இருப்பவர்களில், 10ல், ஐந்து பேருக்கு இக்குறைபாடு உள்ளது. 
இதனால், 30 வயதிலேயே எலும்புகள் பலவீனமடைவது அதிகரித்து வருகிறது. குடல், மார்பக, பிராஸ்டேட் கேன்சர் இருப்பவர்களுக்கு, இந்தக் குறைபாடு இருப்பது, உறுதி செய்யப்பட்டு உள்ளது.
தொடர்ந்து இந்த குறைபாடு இருந்தால், 'டைப் 1, 2' நீரிழிவு வருவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம். சூரிய ஒளியில் இருந்தால், ரத்த அழுத்தம் அதிகரிக்கும் என்ற தவறான எண்ணம் உள்ளது; ஆனால், கட்டுக்குள் இருக்கும் என்பது தான் உண்மை. தோலின் மேல் பகுதியில் உள்ள ரத்தக் குழாய்கள் விரிவடைந்து, சீரான ரத்த ஓட்டத்திற்கு வழி செய்யும்.
மூளை வளர்ச்சிக்கும், நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியமான செயல்பாட்டிற்கும், வைட்டமின், 'டி' மிகவும் அவசியம்; முக்கியம். இக்குறைபாட்டால், பார்கின்சன்ஸ், அல்சைமர், மன அழுத்தம், மனப் பதற்றம் உட்பட, பல பிரச்னைகள் வரும்.
வைட்டமின், 'டி' இருந்தால், செரடோனின் ஹார்மோன் நன்றாக சுரக்கும்; நேர்மறையான எண்ணங்கள் வரும்; இரவில் ஆழ்ந்த துாக்கம் இருக்கும்; துாக்கத்தில் மட்டுமே சுரக்கும், மெலடோனின் ஹார்மோன், உடலின் உள் செயல்பாடுகளின் புதுப்பித்தலுக்கு அவசியம்.
அடிக்கடி சளி, இருமல் போன்ற மேல் சுவாச பாதையில் ஏற்படும் கோளாறுகளால் பாதிக்கப்படுபவர்கள், கண்டிப்பாக, வைட்டமின், 'டி' பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
காசநோய், ருமடாய்டு ஆர்த்தரட்டீஸ் இருப்பவர்களுக்கு இக்குறைபாடு இருந்தால், ஆன்டிபயாடிக் மருந்துகளின் வீரியம், முழுமையாக உடம்பிற்குள் செல்லாது. இக்குறைபாட்டை சரி செய்யும் போது, விரைவாக குணம் பெறுவதைப் பார்க்கிறோம்.

இக்குறைபாட்டால் வரும் பொதுவான அறிகுறிகள் எவை?
அலுப்பு, உடல், தலைவலி, வறட்சி, எலும்பு, மூட்டுகளில் வலி, படிக்கட்டு ஏறும் போது, உட்கார்ந்து எழும் போது, நீண்ட துாரம் நடந்தால் அலுப்பு.

இந்த சத்து அதிகம் உள்ள உணவுகள் எது?
மீன் வகைகள், மீன் எண்ணெய், பசும் பால், முட்டை, காளான், ஆரஞ்சு பழம், பூசணி விதை, ஆளி விதை, சிறு தானியங்கள், சூரிய காந்தி விதை போன்றவற்றில், வைட்டமின், 'டி' உள்ளது. 

எவ்வளவு நேரம் சூரிய ஒளி தேவை?
காலையில், 10:00 மணி வரை அல்லது மாலையில், 3:00 மணிக்கு மேல் சூரிய ஒளியில் இருப்பது அவசியம். கறுப்பு, பிரவுன் போன்ற அடர் நிற தோல் உடையவர்கள், குறைந்தது, 30 நிமிடங்களும், வெளிர் நிற தோல் இருப்பவர்கள், 15 நிமிடங்களும் இருக்க வேண்டும்.
சூரிய ஒளி உடலில் போதுமான அளவு படுவது ஒன்று தான், பல பிரச்னைகளில் இருந்து தப்பிக்க, நமக்கு நாமே போட்டுக் கொள்ளும் கவசம்.
'குறிப்பிட்ட நேரம் தினமும் வெயிலில் இருக்கிறேன்; ஆனாலும், இந்தக் குறைபாடு உள்ளது' என்று சொல்பவர்களுக்கு துாக்கமின்மை, மன அழுத்தம் இருக்கும். இதனால், வைட்டமின், 'டி' போதுமான உற்பத்தி இல்லாமல் போகலாம்.
டில்லியில் நடந்த சர்வதேச கருத்தரங்கில், 'இயற்கையான முறையில், இந்த சத்து நம் உடலுக்கு கிடைப்பது தான் ஆரோக்கியமானது; அதுதான் நிரந்தர தீர்வு' என்று நான் பேசிய போது, நவீன மருத்துவர்கள் பலரிடம் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியது. சிலர், நேரடியாகவே, 'சப்ளிமென்ட் பற்றி வலியுறுத்துங்கள்' என்று கூறினர்; இது எனக்கு மிகுந்த வருத்தமும், அதிர்ச்சியும் தந்தது.

டாக்டர் ஒய்.தீபா
'நேச்சுரோபதி' அரசு சித்த மருத்துவக் கல்லுாரி, சென்னை.
sakshaayaan@gmail.com

tஎழுத்தறிவித்தவன் இறைவன் thanks to tamil and vedas.com

] ஒரு குட்டிக் கதை– ‘எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும்’ (Post No.5161)
Yahoo/Inbox
  • Tamil and Vedas <comment-reply@wordpress.com>
    To:theproudindian_2000@yahoo.co.in
    Jun. 30 at 12:36 a.m.
    Resp

    ஒரு குட்டிக் கதை– ‘எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும்’ (Post No.5161)

    by Tamil and Vedas
    Written by LONDON SWAMINATHAN



    Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.


    'எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும்'-
    --- நறுந்தொகை/ வெற்றி வேற்கை

    பாகவத புராணத்தில் உள்ள கதை.
    கார்த்த வீர்யார்ஜுனன் என்ற மன்னன் மஹா வீரம் பொருந்தியவன்; புஜ பல பராக்ரமம் உடையவன். மாவீரன் ராவணனையே புரட்டி எடுத்தவன். ராவணனையும் பயமுறுத்திய ஒரே ஆள். நர்மதை நதிக்கரையில் உள்ள மஹிஸ்மதி நகரை தலைநகராகக் கொண்டு ஹைஹய நாட்டை ஆண்டு வந்தவன். அவன் நர்மதை நதியில் மனைவிமார்களுடன் குளித்துக் கொண்டிருந்த போது ராவணன் வந்து வாலாட்டினான். அவனைப் பிடித்து நகரின் ஒரு மூலையில் மிருகங்களைக் கட்டிவைப்பது போல கட்டி காட்சிப் பொருளாக வைத்தான். பின்னர் அவனது தாத்தா புலஸ்த்யர் வந்து வேண்டவே ராவணனை விடுதலை செய்தான்.

    கார்த்த வீர்ய அர்ஜுனனுக்கு ‘ஆயிரம் கையுடையோன்’ என்று ஒரு பெயர் உண்டு. இந்த ‘ஸஹஸ்ர பாஹு’ என்ற பெயர் வந்த காரணம் பாகவத புராணத்தில் உளது. ராமாயணத்திலும் இவன் பெருமை பேசப்படுகிறது.

    கார்த்த வீர்யனின் குரு தத்தாத்ரேயர். அவரிடம் அவன் பணிவுடன் வேத சாஸ்திரங்களைக் கற்று வந்தான். அவருக்குப் பணிவிடை செய்யும் முகத்தான், அவர் உறங்கும்போது கால்களை அமுக்கி விடுவான். ஒரு முறை இப்படிச் செய்கையில் குரு தத்தாரேயரின் காலில் இருந்த தீ , கார்த்த வீர்யனின் கைகளை எரிக்கத் துவங்கியது. ஆயினும் குருவின் நித்திரைக்குப் பங்கம் விளையக்கூடாதே என்ற எண்ணத்துடன் பொறுத்துக் கொண்டான். அவர் தூங்கி எழுவதற்குள் அந்தத் தீ முழங்கை வரை வந்து விட்டது.

    குரு தத்தாத்ரேயர் அதைப் பார்த்து என்ன ஆயிற்று? என்று வினவினார். கார்த்த வீர்யன், அவரது நித்திரை கலையாமல் இருக்க மிகவும் பிரயத்தனப் பட்டதைப் பகர்ந்தான்; குருவுக்கு மெத்த மகிழ்ச்சி. அவனது கைகளைத் தடவிக் கொடுத்தார். உனக்கு இன்று முதல் ஆயிரம் கைகள் இருந்தால் என்ன பலம் கிட்டுமோ அவ்வளவு பலம் கிடைக்கும்; உன்னை வெல்லுவது எவனுக்கும் இயலாது என்று வரம் அளித்தார்.

    கார்த்த வீர்ய அர்ஜுனன் ‘ஆயிரம் கையுடையோன்’ ‘ஸஹஸ்ரபாஹு’ என்ற பெயருடன் கொடிகட்டிப் பறந்தான். அவன் இருக்கும் மேற்கு , மத்திய இந்தியாவுக்கு ராவணன் வரவே பயந்து நடுங்கினான். நமது புராண இதிஹாசங்களின் படி ராவணன் அஞ்சிய ஒரே மன்னன் கார்த்த வீர்ய அர்ஜுனன்.

    வாழ்க தத்தாத்ரேயர்!

    அதிவீரராமன் என்ற பாண்டிய மன்னன் இயற்றியது நறுந்தொகை. அதில் கூறப்படும் 'எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும்'
    கருத்து இந்து தர்மத்தின் உயரிய கருத்து “குருவே பிரம்மா, குருவே விஷ்ணு,  குருவே மஹேஸ்வரன்; அவரே பரப் ப்ரஹ்மம்” என்ற ஸ்லோகத்தைச் சொல்லி எல்லோரும் வணங்குவர். இது வேத கால வழக்கம். உலகில் எங்கும் காண முடியாதது. குமரி முதல் இமயம் வரை மட்டுமே உள்ள கருத்து. வேத கால இந்துக்கள் வெளி நாட்டில் இருந்து வந்ததாகக் கூறும் அரை வேக்காடுகளுக்கு வேட்டு வைக்கும் கருத்து இது. பாரத மண்ணில் பிறந்து வளர்ந்த கருத்து!
    உலகில் வேறு எங்கும் குரு குலமோ, ஆசார்ய வழிபாடோ இல்லாததால், ஆரிய-திராவிடம் பேசும் கூத்தாடிகளைப் புரட்டிப் புரட்டி அடிக்கும் வாக்கியம் இது

வேதியர்க்கழகு வேதமும் ஒழுக்கமும்’- ஒரு குட்டிக்கதை thanks to tamil and vedas.com

வேதியர்க்கழகு வேதமும் ஒழுக்கமும்’- ஒரு குட்டிக்கதை (Post No.5165)
Yahoo/Inbox
  • Tamil and Vedas <comment-reply@wordpress.com>
    To:theproudindian_2000@yahoo.co.in
    Jun. 30 at 5:02 a.m.
    Respond to this post by replying above this line

    New post on Tamil and Vedas

    வேதியர்க்கழகு வேதமும் ஒழுக்கமும்’- ஒரு குட்டிக்கதை (Post No.5165)

    by Tamil and Vedas
    Written by LONDON SWAMINATHAN

    Date: 30 JUNE 2018
      
    வேதியர்க்கழகு வேதமும் ஒழுக்கமும்-
    வெற்றி வேற்கை/நறுந்தொகை, அதிவீரராமன் யாத்த நூல்


    மஹாபாரத நூலில் இல்லாதது உலகில் இல்லை என்று ஒரு பாரத ஸ்லோகம் சொல்லும். அது உண்மையே.

    வேதியர்கள் என்போர் தினமும் ஐம்பெரும் வேள்வி நடத்திவிட்டே உண்ண வேண்டும் என்று மநு ஸ்ம்ருதி தெளிவாகக் கூறுகிறது. அது மட்டுமல்ல விருந்தோம்பல் என்பது சொர்க்கத்துக்கு அழைத்துச் செல்லும் என்றும் சொல்லும். அதற்கும் மேலாக விருந்தினர் சாப்பிட்ட பின்னரே ஒரு இல்லறத்தான் சாப்பிடலாம் என்றும் செப்புகிறார்.

    ஐம்பெரும் வேள்வியை எல்லா வருண த்தார்க்கும் பொதுவாகப் பாடி வைத்திருக்கிறார் தெய்வப் புலவர் திருவள்ளுவரும் (குறள் 43; தென்புலத்தார்....)

    மஹாபாரதத்தில் ஒரு குட்டிக்கதை
    சக்துப் பிரஸ்தர் என்று ஒரு அந்தணர் இருந்தார். அவர் மநு நீதி சொன்னபடி விருந்தோம்பும் பண்புடையவர். மேலும்  யாசகம் செய்யாவிடில் தானியங்களைப் பொறுக்கி எடுத்தும் வாழலாம் என்று மநு சொல்லியபடி வாழ்க்கை நடத்தியவர். எங்கும் யாசகம் செய்யாமல் வயல்களிலும் வனங்களிலும் விழும் தானியத்தைச் சேகரித்து வாழ்க்கை நடத்தினார். தினமும் விருந்தினர்களையும் உபசரித்தார். ஒரு நாள் சாப்பிடப் போகும் முன் ஒரு விருந்தினர் வந்தார்.

    அவருக்கு வழக்கமான உணவைப் போட்டும் பசியாறவில்லை. உடனே தனது உணவையும், பின்னர் மகனின் உணவையும் அளித்தார். அப்பொழுதும் விருந்தாளி மேலும் உணவை எதிர்பார்த்து உட்கார்ந்து  இருந்தார். உடனே மனைவி, மருமகள் உணவையும் அளித்தார். அப்பொழுதுதான் அந்த புண்யாத்மா வயிற்றைத் தடவிக்கொண்டு ஒரு ஏப்பம் விட்டு எழுந்தார். ‘அன்னதாதா சுகீ பவ’ என்று வாழ்த்தினார்.

    இதை எல்லாம் பார்த்த இந்திரன் அவருக்கு எல்லா செல்வத்தையும் அளித்து அனுக்கிரஹித்தார்.
     
    வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி
    மிச்சில் மிசைவான் புலம்- குறள் 85
    பொருள்:
    வந்த விருந்தினரை முதலில் சாப்பிட வைத்துப் பின்னர் மீதி உவை சாப்பிடுவோனுடைய விளை நிலத்தில் விதையே விதைக்க வேண்டாம்; தானாக பயிர்கள் வளரும்

    செல்விருந்தோம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
    நல்விருந்து வானத்தவர்க்கு -குறள் 86
    பொருள்:-
    வந்த விருந்தாளிக்குச் சாப்பாடு போட்டுவிட்டு, அடுத்த விருந்தாளி எப்போது வருவான் என்று காத்திருப்பவனுக்கு தேவ லோகத்தில் உள்ளவர்கள் அருமையான விருந்து அளிப்பர்.

    மநு சொன்னது எல்லாவற்றையும் வள்ளுவன் சொல்லுவது சிறப்புடைத்து!
    அது மட்டுமல்ல; விருந்தோம்பும் பண்பு உலகின் எந்த நூலிலும் ஒரு புண்ணிய காரியமாகவோ, கட்டாயம் செய்யவேண்டிய கடமையாகவோ சொல்லப்படவில்லை. இது இமயம் முதல் குமரி வரை மட்டுமே காணக்கூடியது. ஆரிய- திராவிட வாதம் பேசுவோருக்கு வள்ளுவரும் மநுவும் கொடுக்கும் செமை அடி இது!
    --சுபம்--

தந்தையின் ஸ்பரிசம் குழந்தைக்கு முக்கியம்! thanks to dinamalar.com



 
Advertisement
   சொல்கிறார்கள்
தந்தையின் ஸ்பரிசம் குழந்தைக்கு முக்கியம்!'மான்டிசொரி' முறையில் குழந்தைகளை பயிற்றுவிக்கும் விஜயா: டெலிவரிக்காக பிரசவ அறைக்கு செல்லும் பெண்ணுக்கு, அரை நாளில் பிரசவம் ஆகலாம்; அரை மணி நேரத்தில் அல்லது ஒரு நாள் கூட ஆகலாம். கர்ப்பிணிக்கு அது, பயமும், மகிழ்ச்சியும் கலந்த வித்தியாசமான அனுபவமாக இருக்கும்.அதனால், கர்ப்பிணியை பிரசவ அறைக்கு அனுப்பி வைத்து, அறைக்கு வெளியே காத்திருக்கும் உறவுகள், ஆத்மார்த்தமாக பிரார்த்தனையில் ஈடுபட வேண்டும். அது மட்டுமல்ல; தங்கள் வீட்டுப் பெண்ணுக்கு, நல்லபடியாக பிரசவம் நடக்கும் என்ற ரீதியில், 'பாசிடிவ்'வாக பேசிக் கொண்டிருக்க வேண்டும்.இதையெல்லாம் விட்டு விட்டு, கையில் இருக்கும் மொபைலில், 'வாட்ஸ் ஆப்' பார்ப்பது, கேம்ஸ் விளையாடுவது, பிறரைப் பற்றி வம்பு பேசுவது, அலுவலக வேலைகளை கவனிப்பது உள்ளிட்ட செயல்களை செய்யக் கூடாது.அப்பா என்ற ஸ்தானத்தை கணவரும்; தாத்தா - பாட்டி என்ற ஸ்தானத்தை, மாமியார், மாமனாரும் அடையும் தருணம் என்பதால், அதை அழகாக உள்வாங்கி, அனுபவிக்க வேண்டும்.குறிப்பாக, பிரசவ நேரத்தின்போது, பெண்ணின் கணவர் கட்டாயம், அந்தப் பெண்ணுடன் இருக்க வேண்டும். தன் அன்பால், அப்பெண்ணுக்கு நம்பிக்கை அளிக்க வேண்டும். குழந்தை பிறந்த உடன், குழந்தையை பேருக்கு கொஞ்சி விட்டு, இனிப்புகளை கொடுக்கவும், நண்பர்களுக்கு தகவல் சொல்லவும், தான் அப்பா ஆனது குறித்து, 'பேஸ்புக்'கில், 'ஸ்டேட்டஸ்' போடவும், ஓடிவிடக் கூடாது.பிரசவம் முடிந்தவுடன், குழந்தைக்கு தாயின் சீம்பால் கட்டாயம் கொடுக்கப்பட வேண்டும். எப்படி தாயின் சீம்பால், குழந்தைக்கு தேவையோ, அதே அளவு, தந்தையின் முதல் ஸ்பரிசமும், பிறந்த குழந்தைக்கு மிக முக்கியமாக தேவை.ஏனெனில், பிரசவம் முடிந்த களைப்பில் தாய், குழந்தையை சரியாகக் கவனிக்க முடியாத சூழ்நிலையில் இருப்பார். இந்த வெற்றிடத்தை, தந்தை தான் நிரப்ப வேண்டும். தந்தையின் முதல் ஸ்பரிசம், குழந்தைக்கு மிக மிக முக்கியமானது.பிறந்த குழந்தையால், அப்பாவின் தொடுதலை நன்கு உணர முடியும். இது, அப்பா - குழந்தை இடையிலான பிணைப்பை, இன்னும் வலுப்படுத்தும். அதனால், தந்தையாக மட்டுமல்லாமல், தாயுமானவனாகவும் அவர், அந்த நேரத்தில் செயல்பட வேண்டும்.குழந்தையை இந்த நேரத்தில் நன்கு கவனித்துக் கொள்ள வேண்டியது எவ்வளவு முக்கியமோ, அதேபோல பிரசவித்த மனைவியையும், கணவர் அன்புடன் நடத்துவது மிக முக்கியம்.மனைவியிடம் சதா எரிச்சலுடன் நடத்துவது, கோபம் காட்டுவது, முகத்தை துாக்கி வைத்துக் கொள்வது உள்ளிட்டவற்றை தவிர்க்க வேண்டும். கணவரின் அன்பும், ஆறுதலும் தான், பிரசவித்த பெண், தன் பழைய நிலைக்குத் திரும்ப உதவும்.