Friday, March 31, 2017

எ ப்படி பேச வேண்டும்... எப்படி பேசக் கூடாது? - ஸ்ரீ அன்னையின் அமுத மொழிகள் thanks to vikatan.com

எ ப்படி பேச வேண்டும்... எப்படி பேசக் கூடாது? - ஸ்ரீ அன்னையின் அமுத மொழிகள்

'பேசுவதற்கு முன் யோசி, யோசிப்பதையெல்லாம் பேசிவிடாதே' என்பார்கள். மற்றவர்களுக்கும் நமக்குமான தொடர்பே பேச்சில்தான் இருக்கிறது. கோபத்தில் வார்த்தைகளை இறைத்துவிடாமல் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு பேசுபவனை, சிறந்த வீரன் என்றும் மன வருத்தத்தில் இருப்பவர்களுக்கு, ஆறுதலான வார்த்தைகள்தான் மருந்து என்றும் நபிகள் நாயகம் கூறியுள்ளார். 'சில சமயங்களில் அமைதியாக இருப்பதைக் காட்டிலும், எது உண்மையோ அதை உள்ளபடியே கவனமாகப் பேசுவது நல்லது' என்கிறார் ஸ்ரீஅன்னை.
அன்னை
வாழ்வில் நமக்கு இறைவன் கொடுத்த மிகப்பெரிய பரிசுகளில் ஒன்று பேச்சு. கனிவான வார்த்தைகள் போரையும் நிறுத்தக்கூடிய வல்லமையுடையது. அதேநேரத்தில் மனதைக் காயப்படுத்தும் ஒரு சிறிய வார்த்தையால் ஒருவருக்கொருவர் பல ஆண்டுகளாகப் பேசிக்கொள்ளாமல் இருப்பதையும் நாம் பார்த்திருப்போம். 
பேசுவது என்பது ஒரு வகையான கலை. பேச்சால் வாழ்ந்தவர்களும் இருக்கின்றார்கள், பேச்சால் வீழ்ந்தவர்களும் இருக்கின்றார்கள்.நாம் பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கும் இறைவனிடம் பதில் சொல்லத் தயாராக இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.
கூட்டத்தில் பேசும்போதோ, மற்றவர்களிடம் பேசும்போதோ எப்படிப் பேச வேண்டும் என்பதைப் பற்றி பார்ப்போம். 
* தேவையில்லாமல் பேசி மதிப்பைக் குறைத்துக்கொள்ள வேண்டாம். தேவையிருந்தால், மட்டுமே பேசுங்கள்.
* பிறர் மனம் புண்படாமல், அன்பாகப் பேசுங்கள். 
* நன்மைதரும் பேச்சை மட்டும் பேசுங்கள்.
* மலர்ந்த முகத்துடன் கண்ணியமாகப் பேசுங்கள்.
எப்படி பேச வேண்டும் எப்படி பேசக் கூடாது
* நீதி தவறாமல் பேசுங்கள்.
* தீய பேச்சுக்களால்  உங்கள் நாவைக் கறைப்படுத்திக்கொள்ளாதீர்கள்.
* பிறருடைய குறைகளைப் பற்றிப் பேசாதீர்கள்
* பிறரைக் கேலி செய்யும் வகையில் பேசாதீர்கள்.
* யாரைப் பற்றியும் தவறாகப் பேசாதீர்கள் குறிப்பாக, அவர்கள் இல்லாத நேரத்தில்!
* உரையாடும்போது எதிரே உள்ளவர் மட்டும் கேட்கும்படிப் பேசுதல் வேண்டும். பலருடைய காதிலும் விழுமாறு பேசுவதைத் தவிர்க்கவேண்டும்.
பேசும் முறை
* பேசும்போது கண்களை உருட்டுதலும் அடிக்கடி இமைத்தலும் கைகளையும் தலையையும் மிகையாக அசைப்பதைத் தவிர்க்க வேண்டும்.
பயனற்ற உரையாடலைத் தவிர்த்தல் வேண்டும்.
* பேசும்போது சொற்களை முழுமையாக உச்சரித்தல் வேண்டும். சொல்லின் கடைசி எழுத்து வரையில் தெளிவாக உச்சரித்தல் வேண்டும்.
* ஒருவர் கேட்கும் கேள்விக்குச் சரியாக பதிலளிக்க, முதலில் அவர் கூற வரும் முழுக் கருத்தையும் தெளிவாகப் புரிந்த பின்னரே பதில் அளிக்க வேண்டும்.
* முகஸ்துதி செய்வதை நிறுத்துங்கள். ஏனெனில் அன்பைக் காட்டும் வழி அதுவல்ல!

Tuesday, March 28, 2017


இந்த 8 காரணங்களுக்காக இளஞ்சூடான தண்ணீரை குடிங்க..! #HealthTips

உடலில் 70 சதவிகிதம் அளவுக்கு நீர் இருக்கிறது. செல்கள், செல்களின் வெளிப்புறம், ப்ளாஸ்மா, ரத்தம், உமிழ்நீர் என பெரும்பாலும் நீரால் சூழப்பட்டிருக்கும் நம் உடலுக்கு தண்ணீர் மிகவும் அவசியம். 
தண்ணீர் water

*குழந்தைகள் மற்றும் சிறுவர்களின் உடலில் அதிக அளவில் நீர் இருக்கும்.
*அடுத்ததாக, ஆண்களுக்கு அதிக அளவில் இருக்கும்.
*ஆனால், பெண்களுக்கு குழந்தைகளைவிடவும் ஆண்களைவிடவும் குறைவான அளவிலேயே உடலில் நீர் இருக்கும். இதனால் பெண்கள் அதிக அளவில் நீரை அருந்தவேண்டும்.
தண்ணீர் ஏன் தேவை?
செல்கள் உருவாக, கட்டமைக்க என அடிப்படை தேவைக்கே நீர் அவசியம். உடல் வெப்பத்தை கட்டுப்படுத்த, சுவாசத்தை சீர்ப்படுத்த,  மூளை, முதுகுத்தண்டு போன்றவற்றுக்கு ஷாக்அப்சர்பராக செயல்பட, கழிவுகளை சிறுநீர் வழியாக வெளியேற்ற, மாவுச்சத்து நிறைந்த உணவுகளை செரிப்பதற்காக என பெரும்பாலும் நீரே அனைத்துக்கும் அடிப்படை.
உடலில் நீர் குறைந்தால் என்ன ஆகும்?
* மலச்சிக்கல் 
* உடலின் வெப்ப நிலையில் மாற்றம் 
* செரிமானக் கோளாறு 
* வயிற்றுப்புண் 
* மூட்டுவலி 
* சிறுவயதிலே முதிர்ச்சியடையும் நிலை 
* வறண்ட சருமம் மற்றும் கூந்தல்
தண்ணீர்

இளஞ்சூடான நீரை பருகுவதால் பெறும் நன்மைகள் என்னென்ன?
பொதுவாகவே, இளஞ்சூடான உணவுகளுக்கு மியூகஸ் எனும் திரவத்தை (சளி) குறைக்கும் தன்மை உண்டு. இளஞ்சூடான நீர் (Warm Water), சூப் போன்றவை குடிப்பதால், மூக்கு, தொண்டை, இரைப்பை மற்றும் குடல் ஆகியவற்றில் இருக்கும் மியூகஸ் திரவம் குறைவதோடு, அந்த இடங்களில்  வைரஸ் மற்றும் பாக்டீரியாவின் வளர்ச்சியும் குறைகின்றது.
* அடிக்கடி இளஞ்சூடான நீரை அருந்திவந்தாலும், மியூகஸ் திரவம் உடலிலிருந்து வெளியேறும்.
* சீன மருத்துவத்தின் படி, செரிமான மண்டலம் சிறப்புடன் செயல்பட அதிகாலையில் வெறும் வயிற்றில் இளஞ்சூடான நீரை அருந்துவது நல்லது. குடல் செயல்படுவதற்கான 'கிக் ஸ்டார்ட்டே' இளஞ்சூடான நீர்தான்.
* நீர்ச்சத்து குறைபாடால் ஏற்படும் தசைபிடிப்பு பிரச்னை நீங்கும். சருமம், வறட்சியாவது தடுக்கப்படும்.
* பொதுவாகவே, வயிற்றில் உள்ள வெப்பம் அதிகமாக இருப்பதால், வெதுவெதுப்பான நீரை பருகும்போது, உணவை உடைக்கவும் செரிக்கவும் உதவுகிறது. இதை வாசோடிலேட்டரி எஃபெக்ட் (Vasodilatory Effect) என்பர். இதனால், ரத்த நாளங்களின் வீக்கம் குறைந்து, ரத்த அழுத்தமும் கட்டுக்குள் வருகிறது. சாதாரண தண்ணீரை பருகுபவரை விட இளஞ்சூடான நீர் குடிப்பவருக்கு உணவுக்குழாய் பிரச்னைகள் வராது.
* வளர்சிதை மாற்றம் சீராகும். எடை குறைக்க விரும்புபவர்களுக்கு ஒரு நற்செய்தி, உடல் எடைக் குறைய பெரிதும் உதவுக்கூடியது இந்த இளஞ்சூடான நீர்தான். இதனுடன் சிறுநீரகம், இரைப்பை  மற்றும்  குடல் ஆகியவை சிறப்பாக செயல்பட உதவுகிறது.
இளஞ்சூடான தண்ணீர்

மலச்சிக்கல் பிரச்னை இருப்பவர்கள், வெதுவெதுப்பான நீரில், எலுமிச்சைப் பழச்சாறு மற்றும் தேனை, தலா நான்கு சொட்டு விட்டு வெறும் வயிற்றில் குடித்துவந்தால் மலச்சிக்கல் தீரும். கழிவுகள் சுலபமாக வெளியேறும் என ஹோமியோபதி மருத்துவம் பரிந்துரைக்கிறது. இந்த வெந்நீர் சிகிச்சையை உடல்பருமன் பிரச்னை இருப்பவர்களும் கொலஸ்ட்ரால் பிரச்னை இருப்பவர்களும் அவசியம் பின்பற்றி வந்தால் விரைவில் மாற்றம் தெரியும்.
* கெட்ட  கொழுப்பை குறைக்கும் என்பதால் பாரம்பர்ய சீன மருத்துவமும் வெதுவெதுப்பான நீரை குடிக்கச் சொல்லி பரிந்துரைக்கிறது. ஸ்லிம்மான உடலமைப்பு வேண்டும் என விரும்புபவர்கள், சாதாரண நீரை விட இளஞ்சூடான நீரை தொடர்ந்து அருந்துவது நல்லது. அதாவது, இது ஒரு பழக்கமாகவே மாற வேண்டும்.
குறிப்பு: பயணம் செய்பவர்கள், இளஞ்சூடான நீரை அவ்வப்போது குடிக்க முடியாதவர்கள், ஒரு ஃப்ளாஸ்கில் சூடான நீரை ஊற்றிவைத்து அவ்வப்போது குடித்து வரலாம். உணவுக்கு பிறகு 20 நிமிடங்கள் கழித்து நீரை அருந்துவது நல்லது.

டீடாக்ஸ் எனும் நச்சு நீக்கம்... ஏன்? எப்போது? யாருக்கு?

டீடாக்ஸ் எனும் நச்சு நீக்கம்... ஏன்? எப்போது? யாருக்கு?

பார்த்துப் பார்த்துக் கட்டிய வீட்டை சுத்தமாகப் பராமரிக்கிறோம்; ஆசையாக வாங்கிய வாகனத்தைத் துடைத்து, சர்வீஸுக்குவிட்டு கண்டிஷனில் வைத்திருக்கிறோம்; நம்முடன் ஒட்டிக்கொண்டே இருக்கும் கைப்பேசியை கண்ணாடிபோல் வைத்திருக்கிறோம். ஆனால், நம்மில் பலர் உடலைப் பராமரிப்பதில் மட்டும் போதிய கவனம் செலுத்துவதில்லை. உடல் அற்புதமான ஓர் இயந்திரம். நாம் உண்ணும் உணவைச் செரித்து, சத்துக்களைச் சேமித்து, நமக்கு சக்தியை அளிக்கும் அசகாய சூரன் அது. ஆனால், அந்தச் சத்துக்களோடு சில நச்சுக்களும் நம் உடலில் சேர்ந்துகொண்டே வரும். நாளாக ஆக, அவை நமக்கு நோய்களையும் கொண்டுவந்து தந்துவிடும். எனவே, நம் உடலில் சேரும் அவற்றை அடிக்கடி நச்சு நீக்கம் (Detoxification) செய்யவேண்டியது அவசியம். 
நச்சு நீக்கம் செய்யும் சில வழிமுறைகளை இங்கே விவரிக்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் காயத்ரி...
நச்சு நீக்கம்
நச்சு நீக்கத்தின் அவசியத்தை உணர்ந்திருந்த நம் முன்னோர்கள் விரத நாட்களை வகுத்தார்கள். விரதம் இருப்பது நச்சு நீக்கத்தில் ஒரு வழிமுறை. விரதம் என்றால், எதுவுமே சாப்பிடாமல் இருக்கவேண்டிய அவசியம் இல்லை. வெறும் பழங்கள், பால் மட்டும் சாப்பிடலாம். விரதம் என்கிற பெயரில் இல்லாவிட்டாலும்கூட வாரத்துக்கு ஒரு நாளை நச்சு நீக்கம் செய்யும் நாளாகக் கருதி அதைப் பின்பற்றலாம்.
வேப்பிலைச் சாறு அருந்துவது, அகத்திக்கீரையை உண்பது, விளக்கெண்ணெய் குடிப்பது... ஏன் பேதிக்கு மருந்து சாப்பிடுவதுகூட ஒரு வகையில் நச்சு நீக்கம் செய்யும் வழிமுறைகள்தான். நச்சு நீக்கத்தை மசாஜ், விதவிதமான குளியல்கள் (வாழை இலைக் குளியல், சூரியக் குளியல், மூலிகைக் குளியல் போன்றவை), நல்ல சத்தான ஆகாரங்கள் சாப்பிடுவது என பல வழிகளில் செய்யலாம். ஒரு நாள் முழுக்க வெறும் திரவ உணவுகளைச் சாப்பிடுவதுகூட ஒரு வழிதான். 
நச்சு நீக்கம் செய்யும் சில வழிமுறைகள்...
* காலை - புதினா, வெள்ளரி, இஞ்சித் துண்டு, கமலா ஆரஞ்சு ஆகியவற்றைத் தேவையான அளவு எடுத்து மிக்ஸியில் அரைத்து, வடிகட்டி இரண்டு லிட்டர் நீரில் கலந்து பிறகு பருகலாம்.
* மதியம் - தேவையான அளவுக்கு பீட்ரூட், கேரட், புதினா ஆகியவற்றை எடுத்து, மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று அரைத்துப் பிறகு பருகலாம். இந்தச்  சாறு உடல் எடையைக் குறைப்பதோடு, சோம்பலையும் விரட்டும்.
* கமலா ஆரஞ்சு ஜூஸுடன் கிர்ணிப் பழ ஜூஸ் சேர்த்து அதனுடன் வெல்லம் அல்லது நாட்டுச் சர்க்கரை சேர்த்துக் குடிக்கலாம்.
* இளநீருடன் சீரகத் தூள் சேர்த்துப் பருகலாம். இது, சருமத்தைப் பொலிவாக்கும்; உடலைக் குளுமையாக்கும். இது எனர்ஜி தரும் டிரிங்க்கும்கூட.
இஞ்சி    நச்சு நீக்கம் இளநீர்

* பானகரம்: கொடாம்புளியைத் தண்ணீரில் கொதிக்கவைத்து, அதை வடிகட்டி சிறிது பனைவெல்லம் சேர்த்துக் குடிக்கலாம். இது நீர்க்கடுப்பை விரட்டும். இடுப்புப் பகுதியில் சேர்ந்திருக்கும் அதிகப்படியான சதையை நீக்கிவிடும். 
மேற்கூறப்பட்ட அனைத்தும் பொதுவான உடல்நிலை கொண்டவர்களுக்கானது.
சர்க்கரைநோய் இருப்பவர்களுக்கு...
* நெல்லிக்காய், இஞ்சி, கறிவேப்பிலை ஆகியவற்றைத் தேவையான அளவுக்கு எடுத்து, அத்துடன் நீர் சேர்த்து, மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி அடித்து, பிறகு பருகலாம்.
* முருங்கைக்கீரை, சீரகம் இரண்டையும் சேர்த்து மிதமான அளவுக்குக் கொதிக்கவைத்து வடிகட்டிக் குடிக்கலாம். இது ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் அருமருந்தும்கூட.
* படுக்கைக்குச் செல்வதற்கு முன்னர் கடுக்காய்ப் பொடியை மூன்று கிராம் அளவுக்கு எடுத்து, அதை ஒரு லிட்டர் நீரில் சேர்த்துக் குடிக்கலாம். இதைத் தினசரி பருகிவந்தால், மலச்சிக்கலைப் போக்கும்.
* உடலும் மனமும் ஒன்றும் செயல்களே நமக்கு வெற்றியைத் தரக்கூடியவையாக அமையும். நச்சு நீக்கம் என்பதை உடலளவில் நிறுத்திவிடாமல், மனதுக்கும் கொடுக்க வேண்டும். ஒவ்வொரு நாளைத் தொடங்கும்போதும் சிலவற்றுக்கு `யெஸ்’ சொல்லவும் சிலவற்றுக்கு `நோ’ சொல்லவும் பழக வேண்டும். உதாரணமாக, `இன்று நான் ஸ்வீட் சாப்பிடமாட்டேன். அதற்குப் பதிலாக சத்தான காய்கறிகளைச் சாப்பிடுவேன்’ என்றுகூட முடிவு எடுக்கலாம். 
ஆக, ஒவ்வொரு நாளையுமே நச்சு நீக்கம் செய்யும் நாள் என நினைத்துச் செயல்பட்டால், நல்லனவெல்லாம் தரும்; ஆரோக்கியம் உறுதியாகும். 

Posted Date : 21:16 (28/03/2017)Last updated : 21:15 (28/03/2017) கணவன் மனைவி இடையே பிரியம் பெருக்கும் 10 பழக்கங்கள்!

கணவன் மனைவி இடையே பிரியம் பெருக்கும் 10 பழக்கங்கள்!

கணவன்

'ஒருவனுக்கு ஒருத்தி...' 
சொல்லும்போதே காதுகள் இனிக்கிறதல்லவா? சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட திருமண வாழ்வு மொத்தமும் அங்கேயே தொடர்ந்தால், மகிழ்ச்சிக்குச் சொல்லவா வேண்டும்? தம்பதியரின் கைகளில்தான் அதற்கான மந்திரச் சாவியும் உள்ளது. 'இவன் எனக்குத்தானே', 'இவள் எங்கே போய்விடப்போகிறாள்?' என்கிற எண்ணத்தில், தனது இணைக்கு சின்னச் சின்ன சந்தோஷங்களுக்கான வாய்ப்பை அளிக்கத் தவறும்போது, அந்த உறவே சிக்கலாகிறது. தனது விருப்பம், ஆர்வம் எல்லாவற்றையும் ஒத்த அலைவரிசையில் தன்னைப் புரிந்துகொள்கிற இன்னொருவரிடம் கொட்டத் தொடங்கி, அதுவே ஆழமான நட்பாக வேரூன்றுகிறது. கணவன் மனைவிக்கு இடையில் உள்ள முடிச்சு அவிழ்ந்து, ஒரே வீட்டில் பெயருக்கு வாழ்வதில் என்ன இருக்கிறது? கணவன், மனைவி உறவு கசந்துவிடாமல் எப்பொழுதும் ஃபிரஷ்ஷாக உணர, சில விஷயங்களில் கவனம் செலுத்துவது முக்கியம். இதோ அவை... 
* இருவரும் தினமும் ஏதாவது ஒரு விஷயத்துக்காக ஒருவரை ஒருவர் பாராட்டிக்கொள்ளுங்கள். அது, ரசம் நன்றாக இருந்தது என்றோ, காய்கறிகளைச் சரியாக நறுக்கினீர்கள் என்றோ இருக்கலாம். 
* எதிர்பாராத அணைப்பு, முத்தம் இருவரையும் அன்புத் தூண்டிலில் சிக்கவைக்கும். இதை இருவரும் பின்பற்றுங்கள். 
ஒருவரது குறையை எந்தச் சூழலிலும் மற்றவர் குறிப்பிட்டுப் பேசக் கூடாது. இது, மனதில் கசப்புக்கான விதைகள் பரவாமல் தடுக்கும். 
* ஒருவர் ஏதாவது ஒரு விஷயத்தை சொல்லத் தொடங்கும்போது, மற்றவர் காதுகொடுத்து கேட்க வேண்டும். தன் பேச்சுக்கு மதிப்புள்ள இடத்தில் நம்பிக்கை பலப்படும். 
கணவன்

* தாம்பத்தியத்தில் ஒருவருக்கு விருப்பம் இல்லாதபோது, மற்றவர் தொந்தரவு செய்ய வேண்டாம். இருவருக்கும் தேவையான ஒன்று என்பதால், மற்ற பிரச்னைகளை மறந்து இதற்கும் நேரம் ஒதுக்குங்கள். 
* ஒரே மாதிரியான வாழ்க்கை முறை போரடிக்க செய்யும். பிடித்த இடங்களுக்குச் செல்ல திட்டமிடுங்கள். உங்கள் வாழ்வின் ஸ்டைலையும் அவ்வப்போது மாற்றிக்கொள்ளுங்கள்..உணவு, உடை உட்பட. வாழ்வதன் சுவாரஸ்யம் கூடும். 
* சோஷியல் மீடியாக்கள் இரண்டாவது துணை அல்லது இணை என்பது போல ஆகிவிட்டது. குடும்பத்தைப் பொறுத்தவரை தனி ஒருவரின் விருப்பத்தின் அடிப்படையில் முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்கலாம். இருக்கும் உறவுகளுக்குள் நட்பின் தன்மை மாறாமல் பார்த்துக்கொள்ளும்போது புதிய துணையோ, இணையோ தேவையிருக்காது. 
* ஒவ்வொருவரும் வீட்டில் இருப்பதைவிட வேலையிடத்தில் அதிக நேரம் இருக்கிறோம். அந்தச் சூழலில் நட்புடன் பழகுபவர்களுக்கு இடையில் ஆழமான புரிதல் இருக்க வாய்ப்புள்ளது. அதுபோன்ற உறவுகளை நட்பின் எல்லைக்குள் நிறுத்தவும். எல்லை தாண்டியே பழகினாலும் அது உரிமையற்ற உறவு. எப்போதும் மனதுக்குள் ஒரு பயத்தையும், குற்ற உணர்வையும் ஏற்படுத்திக்கொண்டே இருக்கும். இதுபோன்ற உறவுகள் கணவன் மனைவிக்குள் விரிசலை ஏற்படுத்தும். எல்லைக் கோட்டை தாண்டாமல் இருப்பதே வாழ்வு முழுமைக்குமான பாதுகாப்பு. 
* காதலெல்லாம் திருமணத்துக்கு பிறகு கிடையாது என்று நினைக்க வேண்டாம். நம் மனசு எப்போதும் குழந்தைதான். கணவன், மனைவிக்குள் காதல் பகிர்ந்தல்கள் இருக்கும் வரை அந்த அன்புக் கோட்டைக்குள் அந்நியர் நுழைய முடியாது. வாழ்வின் கடைசி மூச்சு வரை காதலியுங்கள். 
* கணவன், மனைவி இருவரும் அவரவர் வேலையில் இலக்குகளை நிர்ணயித்து தீவிரம் காட்டுங்கள். ஒருவர் இலக்கை எட்ட மற்றவர் தோள் கொடுங்கள். உயர உயர அன்பின் நெருக்கம் அதிகரிக்கும். 
* பிறந்த நாள், திருமண நாள் என முக்கிய நாட்களை மறந்துவிடாமல் அன்பு செய்யுங்கள். 'நீ என் வாழ்வில் அவ்வளவு முக்கியம்' என்பதைப் புரியவையுங்கள். காதல் என்றென்றும் தித்திக்கும். ஒருவர் மற்றவரது உறவினர்களுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். அவர்கள் குறைகளைப் பற்றி அதிகம் பேசாதீர்கள். கணவன், மனைவிக்குள்ளான பல்வேறு சண்டைகளுக்கு இதுவே காரணம். உங்களைப் பற்றிய பாசிட்டிவான விஷயங்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள். இனிக்க இனிக்க வாழுங்கள். வாழ்த்துக்கள்!

சர்க்கரைநோய்க்கு மருந்து... சிறுநீரகக் கற்களைத் தடுக்கும்... வாழவைக்கும் வாழைத்தண்டு சாறு! thanks to vikatan.com


!
யாடத் தடை!

சர்க்கரைநோய்க்கு மருந்து... சிறுநீரகக் கற்களைத் தடுக்கும்... வாழவைக்கும் வாழைத்தண்டு சாறு!

வாழை மரத்தின் எந்தப் பாகத்தையும் வீண் என்று நம்மால் ஒதுக்கிவிட முடியாது. பழத்திலிருந்து நார் வரை வாழை தரக்கூடிய பயன்கள் ஏராளம். வாழை மரத்தின் தண்டு பொரியல், கூட்டு செய்து சாப்பிடப் பயன்படுவது. ஆனால், வாழைத்தண்டை ஜூஸாக்கிக் குடித்தால், பலன்கள் அதிகமாகக் கிடைக்கும். சிறுநீரகக்கோளாறுகளுக்கு பரவலாகப் பரிந்துரைக்கப்படும் முக்கியமான உணவு. அது மட்டும் அல்ல... இன்னும் எண்ணற்றப் பலன்களை வாரிக் கொடுக்கக்கூடியது வாழைத்தண்டு சாறு. அவை என்னென்ன? பார்க்கலாமா? 
வாழைத்தண்டு சாறு
ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும்!
உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாழைத்தண்டு சாறு நல்ல மருந்து. இது ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும் குறைக்கவும் உதவும்.
ரத்தசோகையை குணப்படுத்தும்!
வாழைத்தண்டு சாறில் இரும்பு மற்றும் வைட்டமின் பி6 போன்றவை அதிக அளவில் உள்ளன. இது ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவும். எனவே, வாழைத்தண்டு சாற்றைத் தொடர்ந்து குடித்துவர ரத்தசோகை குணமாகும்.
சிறுநீரகப் பாதையை தூய்மைப்படுத்தும்!
சிறுநீரகப்பாதையில் உள்ள தொற்றுகளை நீக்கி, சிறுநீரகப் பாதையை சுத்தமாக்கும். வாரத்துக்கு மூன்று முறை இதன் சாற்றைக் குடித்துவந்தால், சிறுநீரகப்பாதையில் உள்ள தொற்று (Urinary Tract Infections) நீங்கும்.
சர்க்கரைநோய்க்கு மருந்து!
இது இன்சுலினை மேம்படுத்த உதவுவதால், சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது. இதன் சாற்றை வடிகட்டாமல் குடித்தால், நார்சத்து அதிகமாகக் கிடைக்கும். இது ரத்தத்தில் சர்க்கரை அளவு உயர்வதைத் தடுக்கும். 
வாழைத்தண்டு
நெஞ்செரிச்சலைப் போக்கும்!
அமிலத்தன்மையால் (Acidity) அடிக்கடி பாதிக்கப்படுபவர்களுக்கு இது நல்ல தீர்வு தரும். நெஞ்செரிச்சல், நெஞ்சு உறுத்துவது போல் இருப்பது போன்ற பிரச்னைகளுக்கு இது சிறந்த மருந்து. 
வயிற்றுக் கொழுப்பைக் குறைக்கும்!
சிறிது இஞ்சியை வாழைத்தண்டு சாற்றுடன் சேர்த்து குடித்துவர, வயிற்றில் உள்ள கொழுப்பு குறையும். இது செரிமானத்தை எளிதாக்கும். வளர்சிதை மாற்றத்துக்கும் உதவும். இதில் நார்ச்சத்து அதிகமுள்ளதால் ஒன்று அல்லது இரண்டு கப் சாற்றைக் குடித்தால் வயிறு நிரம்பிவிடும். சீக்கிரத்தில் பசி எடுக்காது.
மலச்சிக்கலைப் போக்கும்!
இதில் நார்ச்சத்து அதிகமுள்ளதால் மலச்சிக்கலுக்கு தீர்வாக அமையும். மலச்சிக்கலால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு இதைக் கொடுக்கலாம். 
சிறுநீரகக்கற்களைத் தடுக்கும்!
வாழைத்தண்டு சாற்றுடன், எலுமிச்சைச் சாற்றைக் கலந்து குடிக்கலாம். வாழைத்தண்டில் பொட்டாசியம் உள்ளது. எலுமிச்சையில் சிட்ரிக் அமிலம் உள்ளது. இவை இரண்டும் இணைந்து சிறுநீரகத்தில் கால்சியம் கற்கள் உருவாவதைத் தடுக்கும். 
வாழைத்தண்டுகள்
எடையைக் குறைக்கும்!
தொடர்ந்து இதன் சாற்றைக் குடித்துவந்தால், உடல் எடை குறையும். சர்க்கரை மற்றும் கொழுப்பு உடனடியாக ரத்தத்தில் கலப்பதை இதன் சாறு தடுக்கும். கொழுப்பை உடலில் இருந்து நீக்கவும் உதவும். வயிறு சம்பந்தமான எல்லா பிரச்னைகளுக்கும் தீர்வாக அமையும்.
நச்சுப்பொருட்களை வெளியேற்றும்!
இது சிறுநீர் உற்பத்தியை அதிகரிக்கும். நச்சுப்பொருட்களை உடலில் இருந்து வெளியேற்ற உதவும். வாழைத்தண்டு சாற்றில் ஏலக்காய் தூளைப் போட்டு குடிப்பதும் சிறுநீரகக்கல் வராமல் தடுக்கும். 
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்!
இதில் பொட்டாசியம் அதிக அளவில் உள்ளது.  வாரத்துக்கு மூன்று முறை இதை அருந்திவர, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். 
வாழைத்தண்டு சாற்றை அப்படியே குடிப்பது கொஞ்சம் கடினமான காரியம்தான். அப்படிக் குடிக்க முடியாதவர்கள் அதனுடன் மோர், ஆப்பிள் ஜூஸ் அல்லது எலுமிச்சைச் சாறு சேர்த்துக் குடிக்கலாம். ஆனால், இவ்வளவு பயன்களைகொண்டிருக்கும் வாழைத்தண்டு எல்லோருமே கண்டிப்பாகத் தவிர்க்கக் கூடாத ஒன்று. மருந்து, மாத்திரைகளோடு வாழ்வதை தவிர்க்க வாழைத்தண்டு  சாறு உதவும்.

மறதி... ஜாக்கிரதை! நலம் நல்லது-


மறதி... ஜாக்கிரதை! நலம் நல்லது-#DailyHealthDose

மறதி

புத்திசாலியாக இருப்பதற்கும் ஞாபக சக்திக்கும் தொடர்பு இல்லை. இதற்கு வால்ட் டிஸ்னி, வின்ஸ்டன் சர்ச்சில், அலெக்ஸாண்டர் கிரஹாம்பெல்... எனப் பலரை உதாரணமாகச் சொல்லலாம். ஆனாலும்,`நேத்துப் படிச்சது இன்னைக்கு மறந்து போச்சே...’ என்கிற கவலை நம்மில் பலருக்கும் உண்டு. மறதி பிரச்னை தீவிரமாகும்போது அதை `அல்சைமர்’ என்கிறது மருத்துவ மொழி. 
`கார் சாவியை எங்கே வெச்சேன்னு தெரியலியே?’, `காதலிகிட்ட புரொபோஸ் பண்ணின தேதியை மறந்துட்டேனே..’, என்பவை எல்லாம் ஆரம்பகட்ட மறதிக் குறைபாடு என்கிறது நவீன மருத்துவம். இப்படி கொஞ்சமாக மறக்கத் தொடங்கி, கடைசியாக எங்கு இருக்கிறோம், என்ன செய்ய வந்தோம்... என்பதை எல்லாம் மறக்க ஆரம்பிப்பதுதான் அல்சைமர் நோயின் உச்சகட்ட அபாயம்.
வயதானவர்களுக்குத்தான் அதிகம் வருகிறது அல்சைமர் என்கிற இந்த நோய். `2020-ம் ஆண்டு, உலக மக்கள்தொகையில் 14.2 சதவிகித வயோதிகர்கள் இந்தியாவில்தான் இருப்பார்கள்’ என்கிறது ஒரு புள்ளிவிவரம். அதேபோல், ஓய்வுக்காலம் வந்த பிறகுதான் இது வரும் என்பது கிடையாது. செல்லத் தொப்பையோடு, தலைக்கு டை அடித்துக்கொள்ளும் வயதிலும் மறதி நோய் வர வாய்ப்பு இருக்கிறது. 
`அவ்வளவா பிரச்னை இல்லை’ என்று நம்மை எப்போதோ யோசிக்கவைத்த மறதி... 
`அடடா... மறந்துட்டேனே’ என நாம் சுதாரிக்கும் மறதி... 
மற்றவர், `அதுக்குள்ள மறந்துட்டீங்களா?’ என அங்கலாய்த்துக்கொள்ளூம் மறதி... 
`சார்... அவர் மறதி கேஸ். எழுதிக் கொடுத்துடுங்க’ என அடுத்தவர் எச்சரிக்கும் மறதி...
`எதுக்குக் கிளம்பி வந்தோம்?’ என யோசித்து நடுவழியில் திணறும் மறதி... 
`நான் யார், என்ன செய்ய வேண்டும்?’ என்பதே தெரியாமல் போகும் மறதி... 
ஒட்டுமொத்தமாகச் செயல் இழந்து முடங்கும் மறதி... 
என அல்சைமர் மறதி நோயை ஏழு படிநிலைகளாகப் பார்க்கிறது நவீன மருத்துவம். இவற்றில் இரண்டு, மூன்றை நம்மில் பலர் அனுபவித்திருப்போம். 
சாதாரண வயோதிக்கத்துக்கும், இந்த மறதி நோய்க்கும் நிறையவே வேறுபாடுகள் உள்ளன. மூளையில் புதிதாக முளைக்கும் அமைலாய்டு பீட்டாவை இதற்கு முக்கியமான தடயமாகப் பார்க்கிறார்கள். சர்க்கரை, உயர் ரத்த அழுத்தம் போன்ற தொற்றா வாழ்வியல் நோய்கள்தான், இந்த மறதி நோயை அதிகரிப்பவை என எச்சரிக்கிறது, உலக சுகாதார நிறுவனம். ஓர் ஆச்சர்யமான விஷயம், மெடிடேரேனியன் டயட் (Mediterranean diet) சாப்பிட்டால் மறதி நோய் வருவது குறையும் என்பது. மத்தியத் தரைக்கடலைச் சுற்றியுள்ள நாடுகளின் பாரம்பர்ய உணவுகளை `மெடிடேரேனியன் டயட்’ என்கிறார்கள். இந்த வகை உணவுகள், அதிக ஆன்டிஆக்ஸிடென்ட்டுகளையும், அழற்சியைக் குறைக்கும் (Anti-Inflammatory) தன்மையையும் கொண்டவை என, அமெரிக்கா, இக்கிலாந்து விஞ்ஞானிகளால் ஆராயப்பட்டு, நிரூபிக்கப்பட்டுள்ளது.
இந்த மத்தியத் தரைக்கடல் உணவுகளுக்கு, நம் ஊர் மிளகு, சீரகம், வெந்தயம், பூண்டு, பெரிய நெல்லிக்காய், முருங்கை, மணத்தக்காளிக் கீரை, கம்பு, கேழ்வரகு முதலான சிறுதானியங்களும், பாரம்பர்ய இந்திய உணவுகளும் கொஞ்சமும் சளைத்தவை அல்ல. கூடுதலாக, மருத்துவக்குணம்கொண்ட பல தாவர நுண்சத்துக்களையும் கொண்டவை. 
ஞாபகசக்தி அதிகரிக்க சில வழிமுறைகள்... 
* வல்லாரைக் கீரையை சட்னியாக அரைத்துச் சாப்பிடலாம். வல்லாரையில் உள்ள ஆசியாடிகோசைட்ஸ் (Asiaticosides), மூளைக்குச் சோர்வு தராமல், அறிவைத் துலங்க வைக்கும். வல்லாரை தோசை, வல்லாரை சூப் இன்றைக்கு பாரம்பர்ய உணவகங்களில் பிரபலமான உணவுகள். 
* 'பிரம்மி’, பாரம்பர்ய மருத்துவத்தின் பிரபலமான ஞாபகசக்தி மருந்து. மறதியை நீக்கவும், ஞாபகசக்தியை அதிகரிக்கவும் இதில் உள்ள `பேக்கோசைட்ஸ்’ (Baccosides) பயன் அளிப்பதை பல ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. மருத்துவரின் ஆலோசனையின் பேரில் பிரம்மி வாங்கி சாப்பிடலாம். 
* தினசரி 20 முதல் 40 நிமிடங்களுக்கு யோகாசனப் பயிற்சிகள் மற்றும் பிராணாயாமப் பயிற்சிகள் செய்யலாம். இவை மறதியைப் போக்கும்; ஞாபகசக்தியைப் பெருக்கும். 
எதிர்கால மறதி சிக்கலில் இருந்து தப்பிக்க, நிகழ்காலத் தேவை, அந்தக் காலத்தில் இருந்த அக்கறை மட்டுமே. நடைப்பயிற்சி, மூச்சுப் பயிற்சி, அன்றாடம் ஆரோக்கியமான உணவு என வாழ்க்கையைத் திட்டமிடத் தவறினால், மறதி நோய் கொண்ட வயோதிகம் வரும் சாத்தியம் மிக அதிகம் என்பதை ஞாபகத்தில் கொள்வோம்.

தூக்கம் தொலைத்தவர்கள் கவனத்துக்கு! நலம் நல்லது - 40 #DailyHealthDose

தூக்கம் தொலைத்தவர்கள் கவனத்துக்கு! நலம் நல்லது - 40 #DailyHealthDose

தூக்கம்

லகின் மிக உன்னதமான இயந்திரம் மூளை! அதன் தங்கு தடையில்லா செயல்பாட்டுக்கு ஆழ்ந்த தூக்கம் அவசியத் தேவை. உற்சாகமாகச் சிந்திக்க, நினைவாற்றல் மிளிர, நோய் இல்லாமல் வாழ, உடல் இயக்கத்துக்கு அவசியமான சுரப்புகளையெல்லாம் தேவையான அளவில் சுரப்பதற்குத் தூண்ட... மேலும் பல செயல்பாடுகளுக்கு தினசரி 6 முதல் 7 மணி நேரத் தூக்கம் அவசியம், கட்டாயம். அதிலும் கும்மிருட்டில் தூங்க வேண்டும். 
அது என்ன கும்மிருட்டு உறக்கம்? நள்ளிரவு வரை படுக்கையறை டி.வி-யில் கிரிக்கெட் மேட்சோ,  படமோ பார்த்துக்கொண்டே அசந்து தூங்குவதற்குப் பெயர் தூக்கம் அல்ல. `விடி விளக்கு வெளிச்சம்கூட இல்லாத இருட்டில் நடைபெறும் தூக்கத்தில்தான் உடல் இயக்கங்களுக்கு நல்லது செய்யும் மெலடோனின் சுரக்கும். சின்ன வெளிச்சத்திலும் அந்தச் சுரப்பு குறைந்துவிடும்’ என்கிறது நவீன விஞ்ஞானம். இந்த மெலடோனின் சுரப்புதான் நம் உடல் இயந்திரத்தை இரவில் சர்வீஸ் செய்து, மறுநாள் ஓட்டத்துக்குத் தயார்நிலையில் வைக்கிறது; புற்றுநோய் போன்ற பல நோய்கள் வராமல் தடுக்கிறது. பகல் வெளிச்சத்தில் 10 மணி நேரம் தூங்கினால்கூட மெலடோனின் சுரக்காது. அதனால்தான் அந்தக் காலத்திலேயே சித்தர் தேரையர், `பகலுறக்கஞ் செய்யோம்’ எனப் பாடியிருக்கிறார். 
ஏன் தூங்க வேண்டும்? 
ஒருவர், தினமும் நைட் ஷிஃப்ட் வேலை பார்ப்பவராக இருப்பார்; இன்னொருவர், நள்ளிரவில்தான் வீட்டுக்கு வருபவராக இருப்பார்; மற்றவர், சரியான நேரத்தில் வீட்டுக்கு வருபவராக இருந்தாலும், தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுப்பவராக இருப்பார். இந்த மூவருக்குமே மெலடோனின் சுரப்பில் பிரச்னை இருக்கும் வாய்ப்புகள் அதிகம். 
தூக்கமின்மை, முதலில் வாய்வுத் தொல்லையை ஏற்படுத்தும். பிறகு, உயர் ரத்த அழுத்தத்தை உண்டாக்கும். அதனைத் தொடர்ந்து நரம்புத் தளர்ச்சி வரும். இறுதியாக, மன உளைச்சலை ஏற்படுத்தி, மன நோயில் கொண்டுபோய் தள்ளிவிடும். சட்டையைக் கிழித்துக்கொண்டு, கல்லெடுத்து அடிப்பவர்கள், மனநல காப்பகங்களில் இருப்பவர்கள் மட்டும் அல்ல... நம்மில் ஐந்தில் ஒருவர் மனநோயாளியாகத்தான் இருக்கிறோம். உறக்கம் இல்லாமல், மன மகிழ்ச்சி இல்லாமல், எது மகிழ்ச்சி என அறியாமல், எதற்கும் சிரிக்காமல், எதிலும் நிறைவுகொள்ளாமல் பலரும் மன நோயாளியாகத்தான் இருக்கிறோம். இதற்கு, சரியான உறக்கம் இன்மையே முக்கியக் காரணம். 
வரும்போது தூங்கிக்கொள்ளலாம் என்பதும் உடலுக்கு நல்லதல்ல. தூக்கம் இல்லாத மூளையின் ரத்த நாளங்கள் வலுவிழக்கும். உறக்கத்துக்கென மெனக்கெட வேண்டும். இரவு உணவை பரோட்டாவில் ஆரம்பித்து, ஃபலூடாவில் முடிக்கும் பழக்கம் உறக்கத்துக்கு எதிரி. நன்றாக வீசிப்புரட்ட, ஜவ்வாக இழுத்த இழுப்புக்கெல்லாம் வர, அதிக அளவில் மாவில் குளூட்டன் சேர்க்கப்படுகிறது. இந்த குளூட்டன் சிலருக்கு அஜீரணத்தையும், சிலருக்கு குடல் புற்றுநோயையும் ஏற்படுத்திவிடும். குளூட்டன் ஜீரணத்தைத் தாமதப்படுத்துவதால், கண்டிப்பாக உறக்கம் கெடும். எனவே, இரவில் எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவுகளையே சாப்பிட வேண்டும். 
நல்ல தூக்கம் வேண்டுமா? 
* இரவுகளில் கொஞ்சம் பழத்துண்டுகள், கம்பங்குருணை அரிசியில் வெங்காயம், மோர் சேர்த்துப் பிசைந்த சாதம் சாப்பிடலாம். கடைசி உருண்டையைச் சாப்பிடும்போதே, உறக்கம் கண்ணைச் சுழற்றிக்கொண்டு வரும். 
* பணி இடங்களில் இருந்து தாமதமாக வீடு திரும்புவோர், இரவு உணவை வேலை பார்க்கும் இடத்திலேயே 8 மணிக்குள் சாப்பிட்டுவிடுவது நல்லது. தூங்குவதற்கு முன் பழம் மட்டும் சாப்பிட்டுவிட்டுப் படுக்கலாம். தூக்கத்துக்கும் உடல்நலத்துக்கும் இது மிகவும் நல்லது. 
* ஆழ்ந்த தூக்கம் கிடைப்பதற்கு, தினமும் நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டியது அவசியம். `மொட்டை மாடியில் நடக்கிறேன்... வீட்டு வேலை செய்கிறேன்’ என்றெல்லாம் காரணங்கள் சொல்லாமல், தினமும் 45 நிமிடங்களுக்கு மித வேக நடை நடப்பது, தூக்கத்தைச் சீர்ப்படுத்தும்; மனதை ஒருநிலைப்படுத்தி தூங்கவைக்கும்.  
* கசகசா பால், சாதிக்காய்த் தூள் போட்ட பால், அமுக்கராக்கிழங்குப் பொடி, மாதுளம்பழம் இவையெல்லாம் தூக்கம் வரவழைக்கும் இயற்கை உணவுகள் அல்ல... மருந்துகள்! 
வீட்டில், வாழ்க்கைத்துணை, குழந்தைகளிடம் நீடித்து நிலைத்திருக்கும் அன்பு, செல்ல அரவணைப்பு எல்லாமே மன அமைதியைத் தரும்; நல்ல தூக்கத்தையும் தரும். இதை மனதில் கொள்வோம். நல்ல தூக்கத்தால் மட்டுமே உண்மையிலேயே இரவை `குட்நைட்’ ஆக்க முடியும்!

தூக்கம்

லகின் மிக உன்னதமான இயந்திரம் மூளை! அதன் தங்கு தடையில்லா செயல்பாட்டுக்கு ஆழ்ந்த தூக்கம் அவசியத் தேவை. உற்சாகமாகச் சிந்திக்க, நினைவாற்றல் மிளிர, நோய் இல்லாமல் வாழ, உடல் இயக்கத்துக்கு அவசியமான சுரப்புகளையெல்லாம் தேவையான அளவில் சுரப்பதற்குத் தூண்ட... மேலும் பல செயல்பாடுகளுக்கு தினசரி 6 முதல் 7 மணி நேரத் தூக்கம் அவசியம், கட்டாயம். அதிலும் கும்மிருட்டில் தூங்க வேண்டும். 
அது என்ன கும்மிருட்டு உறக்கம்? நள்ளிரவு வரை படுக்கையறை டி.வி-யில் கிரிக்கெட் மேட்சோ,  படமோ பார்த்துக்கொண்டே அசந்து தூங்குவதற்குப் பெயர் தூக்கம் அல்ல. `விடி விளக்கு வெளிச்சம்கூட இல்லாத இருட்டில் நடைபெறும் தூக்கத்தில்தான் உடல் இயக்கங்களுக்கு நல்லது செய்யும் மெலடோனின் சுரக்கும். சின்ன வெளிச்சத்திலும் அந்தச் சுரப்பு குறைந்துவிடும்’ என்கிறது நவீன விஞ்ஞானம். இந்த மெலடோனின் சுரப்புதான் நம் உடல் இயந்திரத்தை இரவில் சர்வீஸ் செய்து, மறுநாள் ஓட்டத்துக்குத் தயார்நிலையில் வைக்கிறது; புற்றுநோய் போன்ற பல நோய்கள் வராமல் தடுக்கிறது. பகல் வெளிச்சத்தில் 10 மணி நேரம் தூங்கினால்கூட மெலடோனின் சுரக்காது. அதனால்தான் அந்தக் காலத்திலேயே சித்தர் தேரையர், `பகலுறக்கஞ் செய்யோம்’ எனப் பாடியிருக்கிறார். 
ஏன் தூங்க வேண்டும்? 
ஒருவர், தினமும் நைட் ஷிஃப்ட் வேலை பார்ப்பவராக இருப்பார்; இன்னொருவர், நள்ளிரவில்தான் வீட்டுக்கு வருபவராக இருப்பார்; மற்றவர், சரியான நேரத்தில் வீட்டுக்கு வருபவராக இருந்தாலும், தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுப்பவராக இருப்பார். இந்த மூவருக்குமே மெலடோனின் சுரப்பில் பிரச்னை இருக்கும் வாய்ப்புகள் அதிகம். 
தூக்கமின்மை, முதலில் வாய்வுத் தொல்லையை ஏற்படுத்தும். பிறகு, உயர் ரத்த அழுத்தத்தை உண்டாக்கும். அதனைத் தொடர்ந்து நரம்புத் தளர்ச்சி வரும். இறுதியாக, மன உளைச்சலை ஏற்படுத்தி, மன நோயில் கொண்டுபோய் தள்ளிவிடும். சட்டையைக் கிழித்துக்கொண்டு, கல்லெடுத்து அடிப்பவர்கள், மனநல காப்பகங்களில் இருப்பவர்கள் மட்டும் அல்ல... நம்மில் ஐந்தில் ஒருவர் மனநோயாளியாகத்தான் இருக்கிறோம். உறக்கம் இல்லாமல், மன மகிழ்ச்சி இல்லாமல், எது மகிழ்ச்சி என அறியாமல், எதற்கும் சிரிக்காமல், எதிலும் நிறைவுகொள்ளாமல் பலரும் மன நோயாளியாகத்தான் இருக்கிறோம். இதற்கு, சரியான உறக்கம் இன்மையே முக்கியக் காரணம். 
வரும்போது தூங்கிக்கொள்ளலாம் என்பதும் உடலுக்கு நல்லதல்ல. தூக்கம் இல்லாத மூளையின் ரத்த நாளங்கள் வலுவிழக்கும். உறக்கத்துக்கென மெனக்கெட வேண்டும். இரவு உணவை பரோட்டாவில் ஆரம்பித்து, ஃபலூடாவில் முடிக்கும் பழக்கம் உறக்கத்துக்கு எதிரி. நன்றாக வீசிப்புரட்ட, ஜவ்வாக இழுத்த இழுப்புக்கெல்லாம் வர, அதிக அளவில் மாவில் குளூட்டன் சேர்க்கப்படுகிறது. இந்த குளூட்டன் சிலருக்கு அஜீரணத்தையும், சிலருக்கு குடல் புற்றுநோயையும் ஏற்படுத்திவிடும். குளூட்டன் ஜீரணத்தைத் தாமதப்படுத்துவதால், கண்டிப்பாக உறக்கம் கெடும். எனவே, இரவில் எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவுகளையே சாப்பிட வேண்டும். 
நல்ல தூக்கம் வேண்டுமா? 
* இரவுகளில் கொஞ்சம் பழத்துண்டுகள், கம்பங்குருணை அரிசியில் வெங்காயம், மோர் சேர்த்துப் பிசைந்த சாதம் சாப்பிடலாம். கடைசி உருண்டையைச் சாப்பிடும்போதே, உறக்கம் கண்ணைச் சுழற்றிக்கொண்டு வரும். 
* பணி இடங்களில் இருந்து தாமதமாக வீடு திரும்புவோர், இரவு உணவை வேலை பார்க்கும் இடத்திலேயே 8 மணிக்குள் சாப்பிட்டுவிடுவது நல்லது. தூங்குவதற்கு முன் பழம் மட்டும் சாப்பிட்டுவிட்டுப் படுக்கலாம். தூக்கத்துக்கும் உடல்நலத்துக்கும் இது மிகவும் நல்லது. 
* ஆழ்ந்த தூக்கம் கிடைப்பதற்கு, தினமும் நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டியது அவசியம். `மொட்டை மாடியில் நடக்கிறேன்... வீட்டு வேலை செய்கிறேன்’ என்றெல்லாம் காரணங்கள் சொல்லாமல், தினமும் 45 நிமிடங்களுக்கு மித வேக நடை நடப்பது, தூக்கத்தைச் சீர்ப்படுத்தும்; மனதை ஒருநிலைப்படுத்தி தூங்கவைக்கும்.  
* கசகசா பால், சாதிக்காய்த் தூள் போட்ட பால், அமுக்கராக்கிழங்குப் பொடி, மாதுளம்பழம் இவையெல்லாம் தூக்கம் வரவழைக்கும் இயற்கை உணவுகள் அல்ல... மருந்துகள்! 
வீட்டில், வாழ்க்கைத்துணை, குழந்தைகளிடம் நீடித்து நிலைத்திருக்கும் அன்பு, செல்ல அரவணைப்பு எல்லாமே மன அமைதியைத் தரும்; நல்ல தூக்கத்தையும் தரும். இதை மனதில் கொள்வோம். நல்ல தூக்கத்தால் மட்டுமே உண்மையிலேயே இரவை `குட்நைட்’ ஆக்க முடியும்!

Last updated : 10:40 (23/03/2017) நாம் பாடம் கற்றுக்கொள்ளவேண்டியது யாரிடம்? #MorningMotivation

நாம் பாடம் கற்றுக்கொள்ளவேண்டியது யாரிடம்? #MorningMotivation

பக்தி
பசுமை போர்த்திய ஒரு கிராமத்தில், ராமசாமி என்கிற ஒரு விவசாயி இருந்தார். ஊரில் மற்றவர்களைக் காட்டிலும், அவருக்கு கடவுள் பக்தி அதிகம். அடிக்கடி கோயிலுக்குச் செல்வதையும், அங்கே அதிக நேரம் தங்கி கடவுளைப் பிரார்த்தனை செய்வதையும் அவர் வழக்கமாகக் கொண்டிருந்தார். மற்ற நேரங்களில் தோட்டத்துக்குச் சென்று அங்கு விவசாயம் செய்தும், காட்டில் மரங்களை வெட்டியும் நிம்மதியான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து வந்தார். கடவுள் மீது அதீத பக்தி. ஒரு கட்டத்தில் நாம் எப்படி இருந்தாலும் நம்மைக் கடவுள் காப்பாற்றுவார் என்று  நினைத்துக்கொண்டார். தினமும் காட்டுக்குச் சென்றவர், இப்போது வாரத்தில் ஒருநாள் மட்டுமே செல்ல ஆரம்பித்தார். இதனால், விவசாயம் செய்வதும், விறகு வெட்டுவதும் கொஞ்சம் கொஞ்சமாகக் குறையத் தொடங்கியது.
ஒருநாள், அவர் காட்டுக்குச் செல்லும்போது, அங்கே ஒரு நரியைப் பார்த்தார். அந்த நரிக்கு முன்னங்கால் இரண்டுமே இல்லை.  அந்த நரி, தன்பாட்டுக்கு ஒரு மரத்தடியில் அமர்ந்திருந்தது.
இதை, கவனித்த விவசாயிக்கு ஒரு சந்தேகம், "இந்த நரிக்கு இரண்டு காலும் இல்லை.. அப்படி இருக்கிறப்போ, இது எப்படி வேட்டையாடி தன்னுடைய பசியைப் போக்கி கொள்ள முடியும்?" என்று யோசிக்க ஆரம்பித்தார். இப்படி யோசித்துக்கொண்டு இருக்கும்போதே, அந்தப் பக்கமா ஒரு புலி வந்தது. அதைப் பார்த்த உடனே, ஓடிப் போய் ஒரு மரத்துக்குப் பின்னாடி ஒளிந்துகொண்டார். என்ன நடக்கிறது என்பதை மட்டும் கவனிக்க ஆரம்பித்தார் ராமசாமி.
அந்தப் புலி, ஒரு பெரிய மானை வேட்டையாடி இழுத்துக்கொண்டு வந்து, அதைச் சாப்பிட ஆரம்பித்தது. சாப்பிட்டது போக, மீதியை அங்கேயே விட்டுவிட்டுச் சென்றுவிட்டது. புலி போன பிறகு, இரண்டு காலும் இல்லாத அந்த நரி, மெதுவாக நகர்ந்து வந்து, மிச்சம் இருந்த மாமிசத்தைச் சாப்பிட்டு, திருப்தியாகப் போய்விட்டது.
இவ்வளவு நிகழ்வையும் மரத்துக்குப் பின்னால் நின்று பார்த்துக்கொண்டு இருந்த அந்த விவசாயி, யோசிக்க ஆரம்பித்தார்.
"இரண்டு காலும் இல்லாத ஒரு வயசான நரிக்கே ஆண்டவன் சாப்பாடு போடுறான். அப்படி இருக்கிறப்போ, தினமும் கோயிலுக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ள நமக்குச் சாப்பாடு போடாமல் விட்ருவானா? நமக்கு கடவுள் பக்தி வேற அதிகம், நாம எதுக்கு அனாவசியமா வெயில்லயும் மழையிலயும் கஷ்டப்படனும்? எதுக்காக வியர்வை சிந்தி விறகு வெட்டணும்?" என்றெல்லாம் யோசிக்க ஆரம்பித்தார்.
அதன்பிறகு தோட்டத்துக்குச் செல்வதையும், காட்டுக்கு செல்வதையும் முற்றிலுமாக தவிர்த்தார். விவசாயம் மற்றும் மரம் வெட்டப் பயன்படுத்தும் பொருட்களை மூட்டை கட்டி ஓரமாக வைத்துவிட்டு, வீட்டில் ஒரு மூலையிலே அமர்ந்துகொண்டார். இடையில், அவ்வப்போது கோயிலுக்கு மட்டும் சென்று வந்தார். "கடவுள் நம்மை காப்பாற்றுவார், அவர் நமக்கு வேண்டிய சாப்பாட்டை கொடுப்பார்" என்று மட்டும் நம்பினார்.  
இப்படியாக ஒவ்வொரு நாளும் சென்றுகொண்டே இருந்தது. சாப்பாடு வந்த பாடில்லை. ராமசாமி, பசியால் வாடிப் போனார். உடம்பு இளைக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் எலும்பும் தோலுமாக ஆகிபோனார்.
ஒரு நாள் ராத்திரி நேரம், கோயில் நடை சாத்தப்பட்டிருந்தது. அங்கும் சுற்றம் முற்றம் யாருமே இல்லை. பசியால் வாடிப்போன ராமசாமி, மெதுவாகக் கோயில் வாசலில் வந்து நின்றுகொண்டு பசி மயக்கத்தில் கோயிலின் கோபுரத்தைப் பார்க்கிறார்.
"ஆண்டவா... என்னுடைய பக்தியில் உனக்கு நம்பிக்கை இல்லையா? நான் இப்படியே பட்டினி கிடந்து சாக வேண்டியது தானா? காட்டில் அந்த நரிக்குப் புலி மூலமா சாப்பாடு போட்டியே, அதை பார்த்துவிட்டுத்தானே இங்கே வந்தேன். என்னை இப்படித் தவிக்க விட்டுட்டியே... இது நியாயமா?" என்றார்.
அப்போது, அந்த வழியாகச் சென்ற மகான் ஒருவர், ராமசாமியைத் தொட்டு.. "முட்டாள், நீ பாடம் கற்று கொள்ள வேண்டியது நரி கிட்ட இருந்து இல்லே.. புலி கிட்ட இருந்து. புலியோட உழைப்புகிட்ட இருந்து. அது நல்லா இருந்ததால, தான் உண்டது போக மீதி இரையை விட்டுட்டுப் போனதுனால, கால் இல்லாத நரி சாப்பிட முடிஞ்சது. நீ நல்லா இருக்க, உன்னால முடியற வரைக்கும் உழைக்கணும். உனக்கு இருக்கறது போக மீதத்தை,  மத்தவங்களுக்கு கொடுத்து உதவணும்னு, புலிகிட்ட இருந்து கத்துக்கணும். இது  உனக்கு ஏன் புரியல?" என்றார்.
பக்தி என்ற பெயரில், அதீத மயக்கத்தில் இருந்து ராமசாமி விடுபட்டார். மறுபடியும் பழைய மாதிரி உழைக்கத் தொடங்கினார். கூடவே பிறருக்கு உதவவேண்டும் என்ற  எண்ணமும் வந்தது.
அதீத பக்தியில் எந்தவித முயற்சியும் இல்லாமல், கடவுள் பெயரை சொல்லிக்கொண்டே இருந்து பயனில்லை.  தேர்வு எழுதச் செல்லும் மாணவர்கள்கூட, தேர்வுக்குப் படிக்காமல்.. அப்போதுதான் திடீரென பக்தி மயமாக மாறுவார்கள். எல்லா முயற்சிகளுக்குப் பின்னாலும் பக்தியும், தன்னம்பிக்கையும் இருப்பது அவசியம்தான். ஆனால், எந்த முயற்சியும் இல்லாமல் வெறும் பக்தியையும், நம்பிக்கையையும் மட்டும் வைத்துக்கொண்டு, போட்டி நிறைந்த இவ்வுலகில் சாதிப்பது என்பது அவ்வளவு சாத்தியமில்லை என்ற புரிதல் நம் ஒவ்வொருவருக்கும் வேண்டும். 

பெண் குழந்தைகளிடம் பெற்றோர் சொல்லவேண்டிய, சொல்லக்கூடாத விஷயங்கள்! #GoodParenting

பெண் குழந்தையிடம் தாயின் பாசம்
பெண் குழந்தைகளுக்கு இன்றைய காலகட்டத்தில் தவறாது சொல்லிக்கொடுக்க வேண்டிய, சொல்லிக்கொடுக்கக் கூடாத விஷயங்களைப் பட்டியலிடுகிறார்,உளவியல் நிபுணர் நப்பின்னை உளவியல் நிபுணர் நப்பின்னை.
செல்லிக் கொடுக்க வேண்டிய விஷயங்கள்!
* ''தன்னை எல்லா சூழல்களிலும் தானே பார்த்துக்கொள்ள, தற்காத்துக்கொள்ளத் தேவையான அடிப்படை விஷயங்களை நிச்சயம் சொல்லிக்கொடுக்க வேண்டும்.
* எடுத்த எடுப்பிலேயே ஒருவர் மீது அளவுகடந்த நம்பிக்கை காட்டுவதோ அல்லது வெறுப்பைக் காட்டுவதோ கூடாது, மற்றவர்களிடம் இருக்கும் குறைகளைவிடவும், நல்ல விஷயங்களை முதன்மையாக எடுத்துக்கொண்டு, யார் மனதும் புண்படும்படி நடந்துக்கொள்ளக் கூடாது என்பதைப் புரியவைக்க வேண்டும்.
* நியாயமான முறையில் தன் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கான ஆற்றலும், மனநிலையும் உருவாகும் படி அவர்களை பக்குவப்படுத்த வேண்டும். பெண் குழந்தையின் ஒவ்வொரு நல்ல முயற்சியையும் மனதார பாராட்டி ஊக்கப்படுத்த வேண்டும்.  
* பலதரப்பட்ட சூழல்களையும் சந்திக்க வேண்டிய இந்த உலகில், புதிய மனிதர்களிடம் எளிதாகப் பழகுவது, அதே சமயம் தன் பாதுகாப்பையும் உறுதிசெய்யும் வழிமுறைகளை ஏற்படுத்திக்கொள்வது பற்றிச் சொல்லிக் கொடுக்க வேண்டும். அப்போதுதான் பள்ளி, கல்லூரி, வேலை, திருமணம் என பல புதிய சூழல்களை அடுத்தடுத்து சந்திக்கும் பெண்கள், அவற்றை தயக்கமின்றி எதிர்கொள்வதுடன், தங்கள் திறமைகளை பலரும் பாராட்டும் வகையில் வெளிப்படுத்துவார்கள். 
* பெற்றோர், சகோதர-சகோதரிகள், நண்பர்கள், நலம் விரும்பிகள் என அனைத்து உறவுகளிடமும், நட்பிடமும் அன்பாக, எதிர்பார்ப்பு இல்லாத சிநேகத்தை ஏற்படுத்திக் கொள்ள ஆலோசனைகளைச் சொல்ல வேண்டும். மேலும் பெற்றோரிடம், குறிப்பாக தன் தாயிடம் எந்த விஷயத்தையும் வெளிப்படையாகப் பகிர்ந்துகொள்ள அறிவுறுத்த வேண்டும். அதற்கான இணக்கமான, புரிதலுடன் கூடிய சூழலையும் உருவாக்க வேண்டும்.
தோழிகளின் சந்திப்பும் புன்னகையும்
சொல்லக்கூடாத விஷயங்கள்!
* பெண் குழந்தைகளுக்கு அச்சம் தரும், அவர்களுக்கு தாழ்வு மனப்பான்மையை உண்டாக்கும் வகையிலான செயல்களை சொல்வதோ, செய்வதோ கூடாது. 
* ஆண் குழந்தைக்கு, பெண் குழந்தையைவிட அதிக முக்கியத்துவம் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். ஆண் குழந்தை பிறந்த உடன், மூத்த பெண் குழந்தை மீது கவனம் குறைந்துபோகும் சூழலுக்கு இடம் தரக் கூடாது. ஆணும் பெண்ணும் சரிசமம் என்பதை வாய் வார்த்தையாகச் சொல்லாமல், அதனை அவர்களே உணரும் வகையில் பெற்றோர்களின் வளர்ப்பு இருக்க வேண்டும். மேலும், மூத்த பெண் குழந்தை அதிக பொறுப்புடன், விட்டுக்கொடுத்து போகவேண்டும், வீட்டில் வேலைகள் செய்ய வேண்டும் என்றெல்லாம் கூறி, அந்தச் சிறுமிக்கு அழுத்தம் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.
* 'எதிர்த்துப் பேசாம நான் சொல்றதை மட்டும் கேளு' என்று பெண் குழந்தைகளிடம் அதிகாரம் செலுத்தாமல், ஒரு செயலால் விளையும் நன்மை, தீமைகளை அவர்களுக்கு அன்புடன் புரியும்படியாக சொல்லிக் கொடுக்க வேண்டும். மேலும், எப்போதும் பெண் குழந்தைகளை கண்காணித்தபடியே இருந்தால், அவர்கள் புதிய முயற்சிகளை மேற்கொள்ள மாட்டார்கள். இதனால் அவர்களின் தனித்திறமைகள் வெளியே தெரியாமலும், சுய சிந்தனை வளராமலும் போகலாம். எனவே, அவர்களை சுதந்திரமாகச் சிந்திக்க, செயல்படவிடவேண்டும்.
* கிரிக்கெட், ரோபாட்டிக்ஸ், கராத்தே என்று தனக்கு ஆர்வமுள்ள ஒரு விஷயத்தை பெண் குழந்தை கற்றுக்கொள்ள விரும்பும்போது, 'அதெல்லாம் பொண்ணுங்களுக்கு சரிப்பட்டு வராது' என்று கூறி மறுப்பது நியாயம் அன்று. இன்றைய உலகில் ஆண்களுக்கானது என்று எந்தத் துறையும் இல்லை. அவர்கள் விரும்பும் துறை எதுவாக இருந்தாலும், அதில் அவர்கள் முன்னேற உறுதுணையாக இருக்க வேண்டியது பெற்றோர் பொறுப்பு. 'ஆண், பெண் பாகுபாடற்ற சமுதாயத்தில் உன் திறமையை முழுமையாக வெளிப்படுத்தினால் நிச்சயம் வெற்றி பெறலாம்' என ஊக்கம் கொடுக்க வேண்டும்.
* ஆண் குழந்தை அழுதால் தவறு எனச் சொல்பவர்கள், பெண் குழந்தைக்கு அதையே அடையாளமாக, அவர்களின் ஆயுதமாக கைகொள்ளும்படி அவர்களை வளர்ப்பது தவறு. 'அழுகையால் எந்தக் காரியமும் முடியாது. திறமையும், தைரியமும், முயற்சியும் மட்டுமே நீ வேண்டுவதை பெற்றுத் தரும்' என்று சொல்லி வளர்க்க வேண்டும்.