Tuesday, April 30, 2019

இரண்டாவது தேனிலவு... ஏன் அவசியம்? - டாக்டர் ஷாலினி விளக்கம்thanks to vikatan.com

உங்களைப் பெற்றவர் என்ற காரணத்துக்காக உங்கள் அம்மாவை எப்படி மதிக்கிறீர்களோ, நேசிக்கிறீர்களோ அதே மாதிரி உங்கள் குழந்தைகளின் அம்மாவையும் நேசியுங்கள். தன்னை எங்கேயும் விட்டுக்கொடுக்காமல் நேசிக்கிற கணவனைத்தான், மனைவி மனதுக்குள் `ஆண்' என்று கொண்டாடுவாள்."

இரண்டாவது தேனிலவு... ஏன் அவசியம்? - டாக்டர் ஷாலினி விளக்கம்
ரண்டாவது தேனிலவு... தேனிலவுக்கே போகாத தம்பதியர்தான் நம்மிடையே அதிகம் பேர். இருந்தாலும், இரண்டாவது தேனிலவு செல்வது ஏன் அவசியம்; திருமணமான எத்தனை வருடங்கள் கழித்து இரண்டாவது தேனிலவுக்குச் செல்லலாம்? இதனால், ஒரு கணவன் - மனைவிக்குக் கிடைக்கிற நன்மைகள் என்னென்ன? டாக்டர். ஷாலினியிடம் கேட்டேன். அவருடைய விளக்கமான பதில்களை படியுங்கள்.
தேனிலவு
தேனிலவு ஏன் அவசியம்?
டாக்டர். ஷாலினி``திருமணமான புதிதில் கணவன் - மனைவி இருவரும் ஒருவரையொருவர் புரிந்துகொள்ள வேண்டும். `காலையில் எழுந்தோம்; காபி குடித்தோம்; சமைத்தோம் சாப்பிட்டோம்; வீட்டுவேலை பார்த்தோம்' என்று இருந்தால், பரஸ்பரம் ஒருவரையொருவர் புரிந்துகொள்ள முடியாது. தேனிலவு என்று சில நாள்கள் வெளியே செல்லும்போது, வேலை பளு இல்லாதது, அருகருகே அமர்ந்து பயணம் செய்வது, பேசுவது, கூடவே ஒருவரையொருவர் உடலாகவும் மனமாகவும் தெரிந்துகொள்வது என்று தாம்பத்தியத்தை இறுக்கமாக்கும் பல அனுபவங்கள் நிகழும். அந்தக் காலத்தில் எப்போது தாம்பத்தியம் வைத்துக்கொண்டால், குழந்தை பிறக்கும் என்பது தெரியாது. அதனால், நிலவு வளர்கிற காலத்தில் தேனெல்லாம் சாப்பிட்டு ஆரோக்கியமான உடலுடன் தம்பதியர் இணைந்தால், குழந்தை பிறக்கும் என்று சில தினங்களைக் கடைப்பிடித்தார்கள். அதுதான் தேனிலவு. இந்தக் காலத்தில், எந்தெந்த நாள்களில் இணைந்தால் குழந்தை பிறக்கும் என்று தெரிந்திருந்தாலும்கூட, பரஸ்பரம் ஒருவரையொருவர் தெரிந்துகொள்ள தேனிலவுதான் உதவி செய்யும்.''
செவன் இயர் இட்ச்-ல் இருந்து ஒரு தாம்பத்தியத்தை இரண்டாவது தேனிலவு காப்பாற்றுமா?
``முதலில் செவன் இயர் இட்ச் என்றால் என்ன என்று சொல்லி விடுகிறேன். பொதுவாக செவன் இயர் இட்ச் திருமணமான 6 அல்லது 7-வது வருடத்தில் வரும் என்று சொல்லப்பட்டாலும், இந்த உணர்வு எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்பதுதான் உண்மை. இது மன அழுத்தம் மாதிரியான உணர்வு. தம்பதியரில் யாருக்கு வேண்டுமானால் வரலாம். மனைவிக்கு, `தன்னுடைய திறமைகள் எதையுமே கணவன் பாராட்டவில்லை; நான் ஏதோ வேலைக்காரி மாதிரி இந்த வீட்டில் வேலை பார்த்துக்கிட்டிருக்கேன். என் உழைப்பை இவர் அனுபவிக்கிறார்' என்று கோபம் வரும். கணவனுக்கு, `வெளியுலகத்தில் இருக்கிற பெண்கள் தன்னை எப்படியெல்லாம் ரசிக்கிறார்கள். தன்னுடைய திறமையைப் பார்த்து எப்படிப் பயப்படுகிறார்கள். ஆனால், என் மனைவி மட்டும் என்னையும் மதிப்பதில்லை, என் பெற்றோரையும் மதிப்பதில்லை. வீட்டுக்கு வந்தால் ஒரு அழுக்கு நைட்டி போட்டுக்கொண்டிருக்கிறாள்' என்று மனம் நிறைய மனைவி மீது குற்றச்சாட்டுகள் இருக்கும். இதை பரஸ்பரம் பேசிச் சரி செய்துகொள்ள மாட்டார்கள். மனதுக்குள்ளே வைத்து குமுறிக் கொண்டிருப்பார்கள். இதன் விளைவாகச் சிடுசிடுப்பு, சண்டை என்று பிரச்னைகள் நீண்டுகொண்டே போகும். இந்த நேரத்தில் கணவன் மீதோ அல்லது மனைவி மீதோ வெளிநபர் யாராவது அன்பு காட்டினாலோ அல்லது அவர்களுடைய திறமையை சிறிதளவு பாராட்டினாலோ, `நம்முடைய பழைய உறவிலிருந்து வெளிவந்து இந்தப் புது உறவில் ஈடுபடலாமோ' என்கிற தடுமாற்றம் அவர்களுக்கு வரும். அந்தத் தடுமாற்றத்தின் பெயர்தான் செவன் இயர் இட்ச். நாலைந்து நாள்கள், தனிமையில் மனம்விட்டுப் பேசிக் கொள்கிற இரண்டாம் தேனிலவு, செவன் இயர் இட்ச் பாதிப்பை நிச்சயம் மாற்றும். 
தம்பதி
பல குடும்பங்களில் குழந்தைகள் பிறந்து வளர்ந்த பிறகு, கணவன் - மனைவி பிரிந்து தூங்க ஆரம்பித்து விடுகிறார்கள். இதையெல்லாம் மாற்றி, தம்பதியரிடையே மீண்டும் ஒரு நெருக்கத்தை ஏற்படுத்த வேண்டுமானால், கணவன் - மனைவி மட்டும் சேர்ந்து செல்கிற தனிமைப் பயணங்கள் அதற்கு உதவும். இதற்கு இரண்டாவது தேனிலவு மிக நல்ல சாய்ஸ். இரண்டாம் தேனிலவு என்றால், நிறைய பேர் `அது செக்ஸ் ஆக்ட்டிவிட்டீஸ்க்கானது' என்று நினைத்துக்கொள்கிறார்கள். ஆனால், அது உண்மை கிடையாது. அதில் செக்ஸும் இருக்கும் என்றாலும், மனதின் ஆழத்துக்குள் போய்விட்ட தாம்பத்தியத்தைப் புதுப்பித்துக் கொள்கிற ஒரு வழிதான் இந்த இரண்டாம் தேனிலவு. ஆனால், அங்கே போய் சொந்தக் கதை, சோகக்கதை பேசுவது, பழைய பிரச்னைகளை மனதில் வைத்துக்கொண்டு செல்வதெல்லாம், இரண்டாவது ஹனிமூனுக்கான அடிப்படையையே அசைத்துவிடும்.''
இரண்டாவது தேனிலவு... பிள்ளைகளை உடன் அழைத்துச் செல்லலாமா? 
``அழைத்துச் செல்லாமல் இருப்பதுதான் நல்லது. சின்னக் குழந்தைகள் என்றால், உடன் அழைத்துச் சென்று விடுங்கள். வளர்ந்த பிள்ளைகள் என்றால், நம்பிக்கையான யாரிடமாவது அவர்களை விட்டு விட்டுச் செல்லுங்கள். உங்கள் டிரிப்பை 2 அல்லது 3 நாள்கள் மட்டுமாக வைத்துக்கொள்ளுங்கள். டீன் ஏஜ் பிள்ளைகள் என்றால், `அப்பா - அம்மாவுக்கு மனம் விட்டுப் பேச வேண்டும்' என்று நாகரிகமாகச் சொல்லிவிட்டுக் கிளம்புங்கள்.''
ஒரு ஃப்ரெண்ட்லியான தாம்பத்தியத்துக்குக் கணவனும் மனைவியும் என்ன மாதிரி முன்னெடுப்புகள் செய்ய வேண்டும்?
``ஒரு கணவன், தன் மனைவியை ஒரு டீச்சர் மாதிரி, ஒரு போலீஸ்காரி மாதிரி, ஒரு வக்கீல் மாதிரி நினைத்துவிட்டான் என்றால், மனைவி உலக அழகியாகவே இருந்தாலும் அவள் மீது ஈர்ப்பு வராது. ஆணுடைய செக்ஸுவல் இயல்பு இதுதான். அதனால், மனைவிகள் கணவரை அவ்வப்போது அப்பர் ஹேண்ட் எடுக்க விடுங்கள்; அவரைக் கொஞ்சம் ஸ்பெஷலாக நடத்துங்கள். ரொமான்ஸ்க்கான, ஃப்ரெண்ட்லியான தாம்பத்தியத்துக்கான நல்ல யுக்தி இதுதான். 
அடுத்து, மனைவிகளின் உடையலங்காரம். `என் புருஷந்தானே. அவர் முன்னாடி நான் எப்படி டிரெஸ் பண்ணிக்கிட்டிருந்தா என்ன' என்று மனைவிகள் நினைப்பது சரியாக வராது. பெண்களின் தோற்றத்தைப் பார்த்துத்தான் ஆண்களுக்கு ரொமான்ஸ் உணர்வே வரும். ஆண்களுடைய மூளையின் வடிவமைப்பே இப்படித்தான் எனும்போது, இதற்கு ஏற்றபடி மனைவிகள் நடந்துகொள்வதுதான் புத்திசாலித்தனம். இதில் கணவர்களுக்கும் சொல்ல வேண்டிய ஒரு விஷயம் இருக்கிறது. வீட்டு வேலைகள், வெளி வேலைகள், குழந்தைகளுக்கான வேலைகள், வீட்டில் இருக்கிற பெரியவர்களுக்கான வேலைகள் எல்லாம் செய்து களைத்துப் போயிருக்கிற மனைவி, தினமும் உங்கள் கண்களுக்கு ஃப்ரெஷ்ஷாக இருக்க வேண்டுமென்று எதிர்பார்க்காதீர்கள். 
காதல்
அடுத்தது மிக மிக முக்கியமான இரண்டு பாயின்ட்ஸ். மனைவிகளுக்குக் கணவர்களிடம் முக்கியமான எதிர்பார்ப்பொன்று இருக்கிறது. தன் கணவன் தன்னை எங்கேயும் விட்டுக் கொடுக்கக் கூடாது என்பதுதான் அதில் முதல் பாயின்ட். இரண்டாவது, தன்னை மற்ற  பெண்களுடன் கம்பேர் செய்து, `எங்கம்மாவைப் பாரு எவ்வளவு நல்லா சமைக்கிறா, நீயும் சமைக்கிறியே', `குடும்பம் நடத்துறதுன்னா என் ஃப்ரெண்டோட வொய்ஃபைப் பார்த்துக் கத்துக்கோ' என்று சொல்கிற கணவர்களைப் பார்த்தாலே மனைவிகளுக்குக் கோபம்தான் வரும். இது நிகழாமல் இருக்க வேண்டுமென்றால், கணவர்கள் தங்கள் மனைவிகளை எந்த இடத்திலும் விட்டுக் கொடுக்காதீர்கள். உங்களைப் பெற்றவர் என்ற காரணத்துக்காக உங்கள் அம்மாவை எப்படி மதிக்கிறீர்களோ, நேசிக்கிறீர்களோ அதே மாதிரி உங்கள் குழந்தைகளின் அம்மாவையும் நேசியுங்கள். தன்னை எங்கேயும் விட்டுக்கொடுக்காமல் நேசிக்கிற கணவனைத்தான், மனைவி மனதுக்குள் `ஆண்' என்று கொண்டாடுவாள். 
மொத்தத்தில் செக்ஸ் தவிர மற்ற விஷயங்களில் எல்லாம், கணவனும் மனைவியும் ஒருவரையொருவர் காயப்படுத்திவிட்டு, தாம்பத்தியம் மட்டும் நன்றாக இருக்க வேண்டுமென்று நினைத்தால் அது நடக்காது. ஸோ, வெளி விஷயங்களில் ஒருவரையொருவர் மரியாதையாக நடத்துங்கள். தாம்பத்தியம் தானாகவே ஃப்ரெண்ட்லியாக மாறும். 
இரண்டாவது தேனிலவை, உங்கள் அன் கண்டிஷ்னல் லவ்வை உங்கள் துணைக்குப் புரிய வைப்பதற்கான ஒரு சந்தர்ப்பமாக எடுத்துக்கொண்டால், உங்கள் உறவு இரண்டாம் தேனிலவில் நிச்சயம் புதுப்பிக்கப்படும்.''
இந்தக் கோடை விடுமுறையில் ஒரு வாரத்தை உங்கள் இரண்டாம் தேனிலவுக்கு ஒதுக்குங்களேன். 

Monday, April 29, 2019

பசியின்மையைவென்று விடலாம்! thanks to dinamalar.com

Advertisement
பசியின்மையைவென்று விடலாம்!
கோடையில் பசியின்மை ஏற்படுவதற்கான காரணம், தீர்வு குறித்து கூறும், டயட்டீஷியன் வாணி: வேளா வேளைக்கு விதவிதமான உணவு கேட்பவர்கள் கூட, வெயில் வந்துவிட்டால் மாறிவிடுவர்; ஜூசாக குடித்து வயிற்றை நிரப்பி கொள்வர்.
கோடையில், இயல்பாகவே உடல் உஷ்ணம் அதிகமாக இருக்கும். நாம் உண்ணும் உணவுகளும் உஷ்ணம் நிறைந்ததாக இருந்தால், செரிமானம் தாமதமாகி, உடல் உஷ்ணம் இன்னும் அதிகரிக்கும். நோய் எதிர்ப்பு சக்தியின் உதவியுடன், உடல் சற்று குளிர்ச்சியான சூழலுக்கு வந்த பிறகே, பசி உணர்வு ஏற்பட துவங்கும்.
செரிமானத்தை தாமதப்படுத்தும் எண்ணெய் அதிகமுள்ள அல்லது வறுத்த உணவு கள், டீ, காபி போன்ற சூடான பானங்களை தவிர்க்க வேண்டும். 
உடல் உழைப்பு இல்லாதவர்களுக்கு, பசியின்மை ஏற்படுவது இயல்பு. எனவே, முடிந்தவரை எளிதில் செரிமானமாகும் உணவு களை சாப்பிடலாம்.
வெயிலில் அதிக நேரம் இருக்க நேர்ந்தால், உடல் உஷ்ணம் அதிகரிக்கும். எனவே, பகல் நேரத்தில் வெளியே செல்வதை தவிர்க்கலாம். 
உடல் உஷ்ணம் வியர்வையாக வெளியேறும் போது, 'சோடியம், பொட்டாசியம்' போன்றவையும் சேர்ந்து வெளியேறும்; இது, உடலில் வறட்சியை ஏற்படுத்தும்.
எனவே, உடலுக்கு குளிர்ச்சியூட்டும் இளநீர், நுங்கு, பானகம், பழச்சாறு போன்ற ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள வேண்டும். இல்லையெனில், உடலிலுள்ள சத்துகள் குறையும்; ரத்த அழுத்தம் குறைந்து, மயக்கம் கூட ஏற்படலாம்.
வெயில் காலத்தில் கிடைக்கும் பூசணிக்காய், மாம்பழம், தர்ப்பூசணியை அன்றாட உணவு பட்டியலில் சேர்த்து கொள்ளலாம். பகலில் அதிக நேரம் வெளியே இருப்பவர்கள், சீரகத் தண்ணீர், இஞ்சி மற்றும் எலுமிச்சை கலந்த தண்ணீரை குடித்து வந்தால், உடல் உஷ்ணம் குறையும்.
பசி உணர்வு, எல்லா நேரங்களிலும் வயிறு தொடர்பான பிரச்னையாக மட்டுமே இருக்காது. சில நேரங்களில் எண்ணம், மனம் தொடர்பானதாகவும் இருக்கலாம். 'மோர் குடி, ஜூஸ் அருந்து' என, மூளை அறிவுறுத்தும் உணவுகளை உட்கொண்டாலே போதும்; கோடையில் ஏற்படும் பசியின்மையை வென்று விடலாம்.
இந்த பசியின்மையை, பசியே எடுக்காத நிலை என்றோ, அது ஒரு பிரச்னை என்றோ வகைப்படுத்த முடியாது. காரணம், பசி, எல்லா நேரங்களிலும் உணவின் மீதான தேடலாக மட்டுமே இருக்காது. 
நீர்ச்சத்து, சூடான பானங்கள், குளிர்ச்சியான உணவுகளுக்கான தேடல்களாக கூட இருக்கலாம். அதன் அறிகுறிகளாக, நா வறட்சி, தொண்டை வறட்சி, அதிகம் வியர்ப்பது போன்றவை.
இப்படி உடல், தன் தேவையை ஏதாவதொரு விதத்தில் வெளிப்படுத்துவதே பசி உணர்வு. ஆகவே, இந்த வெயில் காலத்தில், பெரும்பாலும் ஏற்படும் பசியின்மையால், பிரச்னை இல்லை.

Sunday, April 28, 2019

குழந்தைகளை வாங்க, போங்க என்று பேசுவதுதா thanks to vikatan.com ன் மரியாதையா? மருத்துவர் விளக்கம் ஆ.சாந்தி கணேஷ் ஆ.சாந்தி கணேஷ்

'வீட்டில் மரியாதையாக நடத்தப்படும் குழந்தைகள், தனக்குக் கிடைத்த மரியாதையை அப்படியே வெளியில் மற்றவர்களுக்குத் தர ஆரம்பிக்கும்.''

'உங்கள் குழந்தைகளுக்கு மரியாதைக் கொடுங்கள்' என்று யாராவது உங்களிடம் சொன்னால், உங்கள் ரியாக்‌ஷன் என்னவாக இருக்கும்?  'யெஸ், நான் எங்க பிள்ளைகளை வாங்க, போங்கன்னு மரியாதைக் கொடுத்துத்தான் பேசுவோம்' என்பீர்களா? அல்லது 'பிள்ளைகளுக்கு மரியாதைக் கொடுக்கிறதுன்னா அவங்க முன்னாடி எழுந்து நின்னு பேசணுமா' என்று கேலி செய்வீர்களா? நீங்கள் எந்த வகையைச் சேர்ந்த பெற்றோர் என்றாலும், இந்தக் கட்டுரை உங்களுக்கானதுதான். குழந்தைகளுக்கு  எந்த வகைகளில் எல்லாம் மரியாதை கொடுக்கலாம்; நீங்கள் கொடுக்கும் மரியாதை அவர்களிடம் என்ன மாற்றங்களையெல்லாம் ஏற்படுத்தும் என்பதைப் பற்றி விளக்குகிறார் குழந்தைகள் மனநல மருத்துவர் ஜெயந்தினி. 
குழந்தை
''மரியாதைக் கொடுப்பது என்றால், அவர்களை வார்த்தைக்கு வார்த்தை வாங்கப் போங்க என்று மரியாதையாகப் பேசுவது என்று அவசியமில்லை. அவர்களை அழைக்கிற வார்த்தைகளில் மரியாதைப் பண்பு நிறைந்திருந்தாலே போதும். உதாரணத்துக்கு, ஆண் குழந்தை என்றால் 'தம்பி' என்றோ, பெண் குழந்தை என்றால் 'பாப்பா' என்றோ அழைக்கலாம். இவற்றைத் தவிர, குழந்தைகளை மரியாதையாக நடத்துவதில் 3 பாயிண்ட்ஸை ஃபாலோ செய்தாலே போதும்.
சைக்காட்ரிஸ்ட் ஜெயந்தினிகுழந்தைகளின் சிறு சிறு பிழைகளுக்கும்கூட கன்னாபின்னாவென்று கத்தாமல், நிதானமாக அவர்களின் தவற்றை எடுத்துச் சொல்லுங்கள். பிள்ளைகளைக் கெட்ட வார்த்தை சொல்லித் திட்டாதீர்கள். அதிலும் குறிப்பாக, மற்றவர்களின் முன்னால் அவர்களை அடிப்பதோ, கடுமையான வார்த்தைகளால் திட்டவோ செய்யாதீர்கள். இது முதல் வகை மரியாதை.
இரண்டாவது வகையில், மற்ற உறவுகளைப் பேணும் மூன்று மந்திர வார்த்தைகளான ப்ளீஸ், தேங்க்ஸ், ஸாரியை உங்கள் சொந்த பிள்ளைகளிடமும் பயன்படுத்துங்கள். உங்களுக்கு அவர்களால், ஒரு உதவி ஆக வேண்டுமென்றால், 'கண்ணா, இந்த வேலையைக் கொஞ்சம் செஞ்சு தா ப்ளீஸ்' எனலாம். மகனோ, மகளோ அந்த வேலையைச் செய்து முடித்தால்  மறக்காமல் ' தேங்க்ஸ்டா தங்கம்' என்று சொல்லுங்கள். முதலிரண்டு மந்திர வார்த்தைகளைப் பயன்படுத்துபவர்கள்கூட மூன்றாவது மந்திர வார்த்தையான 'மன்னிப்பை' சொல்லுவதில்லை. குழந்தைகளின் சிறு சிறு தவறுகளுக்குக்கூட கடுமையாக தண்டித்துவிட்டீர்களென்றால், சில மணி நேரம் கழித்தாவது, 'நீங்கள் ஏன் அப்படி நடந்துகொண்டீர்கள்' என்பதற்கான காரணத்தை எடுத்துச் சொல்லி குழந்தைகளிடம் மன்னிப்பு கேட்டு விடுங்கள். 
மூன்றாவது வகையில், அவர்களின் நல்ல செயல்களை பாராட்டுங்கள். நன்றாகக் கவனியுங்கள். நான் இங்கே, குழந்தைகள் நன்றாகப் படித்தால் பாராட்டுங்கள் என்று சொல்லவில்லை. அவர்களின் நல்ல செயல்களைத்தான் பாராட்டுங்கள் என்று சொல்கிறேன். உதாரணத்துக்கு, மற்றக் குழந்தைகளை அடிக்காமல் இருந்தால், இன்னொரு குழந்தைக்காக தன்னுடைய பொம்மையை விட்டுக் கொடுத்தால், தன் தவற்றை ஒத்துக்கொண்டால்... உடனே அவர்களை சின்னதாகப் பாராட்டி விடுங்கள். ஆஹா, ஓஹோவென்று பாராட்டினால் அது செயற்கையாகி விடும், கவனம்.  
பேரன்டிங்
மொத்தத்தில் வெறும் வார்த்தைகளால் இல்லாமல், குழந்தைகளின் உணர்வுகளுக்கு மரியாதைக் கொடுங்கள். அதுதான் மரியாதைக் கொடுப்பதில் சரியான முறை'' என்றவர், இதனால் குழந்தைகளுக்குக் கிடைக்கும் நன்மைகள் பற்றி சொல்ல ஆரம்பித்தார். 
பேரன்டிங்
''வீட்டில் மரியாதையாக நடத்தப்படும் குழந்தைகள், தனக்குக் கிடைத்த மரியாதையை அப்படியே வெளியில் மற்றவர்களுக்குத் தர ஆரம்பிக்கும். இதைப் பார்க்கும் மற்றவர்கள், 'இந்தக் குழந்தை ரொம்ப மரியாதை தெரிஞ்சவன்' என்று சொல்லும்போதும், பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்கள், 'இந்தப் பொண்ணை மாதிரி எல்லோரும் மரியாதையா நடந்துக்கணும்' என்று சொல்லும்போதும், அவர்களுடைய சுய மதிப்பீடு அவர்கள் அறியாமலேயே அதிகரிக்கும். சுய மதிப்பீடு நல்ல முறையில் இருக்கிற குழந்தைகளி  தன்னம்பிக்கை அதிகமாக இருக்கும். அவர்களின் வருங்கால வெற்றிகளுக்கு அந்த தன்னம்பிக்கைதானே அடிப்படை. குறைந்தது 3 வயதில் இருந்து, நான் மேலே சொன்னபடி பிள்ளைகளைமரியாதையாக நடத்தினீர்களென்றால், அது அவர்களின் வாழ்நாள் முழுக்க உதவியாக இருக்கும்'' என்று முடித்தார் சைக்காட்ரிஸ்ட் ஜெயந்தினி.
பெற்றோர்களே, இனிமேல் பிள்ளைகளை மரியாதையாக நடத்துவீர்கள்தானே... 

உறவுகளைத் தக்கவைத்துக்கொள்ள உதவும் 5 டிப்ஸ் #thanks to vikatan.com


வெளியிடப்பட்ட நேரம்:19:27 (27/04/2019)
 
கடைசி தொடர்பு:19:27 (27/04/2019)

உறவுகளைத் தக்கவைத்துக்கொள்ள உதவும் 5 டிப்ஸ் #Relationships

உறவுகளைத் தக்கவைத்துக்கொள்ள உதவும் 5 டிப்ஸ் #Relationships
ந்தோஷமான வாழ்க்கைக்கு மிக முக்கியமான ஒரேயொரு மூலப்பொருள், மற்றவர்களோடு சேர்ந்து ஒற்றுமையாகப் பயணிப்பதுதான். நேர்மறை மற்றும் ஆதரவுத் தரும் உறவுகள் சுற்றி இருந்தால் முழுமையான வாழ்க்கையை அடைந்துவிட முடியும். ஆனால், சிக்கலற்ற வாழ்க்கை அமைவதென்பது அவ்வளவு எளிதல்ல. நேர்மறை உறவுகளைப் பராமரிக்க உதவும் இந்த ஐந்து விஷயங்களைப் பின்பற்றினாலே ஆரோக்கியமான வாழ்வு நிச்சயம்.
உறவுகள்
வேறுபாடுகளை ஏற்றுக்கொண்டு கொண்டாடுங்கள்:
எந்த ஓர் உறவையும் தக்கவைத்துக்கொள்வதில் இருக்கும் மிகப் பெரிய சவாலே, ஒவ்வொருவரின் எண்ண ஓட்டங்களைப் புரிந்து கடப்பதுதான். தனிப்பட்ட மனிதனின் பார்வையில் இவ்வுலகம் முற்றிலும் வித்தியாசமானது. அனைவரின் எண்ண அலைகளும் ஒரே போன்று இருப்பதில்லை. ஓர் உறவினை கட்டமைக்கும்போதும், விருப்பு வெறுப்புகளால் பல்வேறு விதமானப் பிரச்னைகள் ஏற்படும். அளவுக்கு மீறிய எதிர்மறை எண்ணங்கள் சில உறவுகளை முறித்தும்விடுகின்றன. ஒரே எண்ண அலையில் பயணம் செய்பவர்கள் எளிதில் ஆறுதல் காண்கின்றனர். ஆனால், இவர்களுக்குத் தொடக்கத்தில் ஆறுதல் கிடைத்திருந்தாலும், நூறு சதவிகிதம் நேர்மறை ஆதரவு கிடைப்பதென்பது மிகவும் கடினம். மற்றவர்களிடம் இருக்கும் வேறுபாடுகளை ஏற்றுக்கொண்டு கொண்டாடினால் நிச்சயம் அந்த உறவுக்குள் சிக்கல் ஏற்படாது.
திறம்பட கேளுங்கள்:
ஒருவரின் உரையாடலை முழுமையாகக் காதுகொடுத்து கேட்பதென்பது உண்மையில் மிகவும் கடினமான விஷயம். இந்த நேரங்களில், பலரின் அலட்சியம் மிகப் பெரிய பிரச்னைகளை உருவாக்கும். ஆரோக்கியமான உறவை உருவாக்க, ஒருவரின் உரையாடலைக் கேட்பதிலும் அதனைத் தெளிவாகப் புரிந்துகொள்வதிலும் இருக்கும் பங்களிப்பு அதிகம். ஒருவரின் உரையாடலை முழுமையாகக் கவனிக்கும்போதுதான், அவர்களின் தேவை, உணர்வு, சிந்தனை, ஏக்கம் முதலியவற்றை புரிந்துகொண்டு, அவர்களின் உலகத்தில் பயணிக்க முடியும். இது பலவீனமான உறவுகளையும் வலிமை வாய்ந்ததாக மாற்றும்.
Relationship
நேரத்தைச் செலவிடுங்கள்:
மனதுக்கு நெருக்கமானவர்களோடு நேரத்தைச் செலவிடுவது அவர்களுக்காக நீங்கள் கொடுக்கும் மிகப் பெரிய பரிசு. அமர்ந்து உண்ணும் அளவிற்குக்கூட நேரமில்லாத இந்த அவசர உலகில், சிறிது நேரம் மனம் விட்டுப் பேசுவதென்பது கடினம் ஆனால், அத்தியாவசியம். தொழில்நுட்ப வளர்ச்சியால், தூரம் என்பது சுருங்கிப்போனாலும், எந்த ஒரு உறவையும் வலுவாக்குவது அவர்களோடு இணைந்து பயணிக்கும் உண்மையான தருணங்கள்தான். என்றைக்குமே மனிதனின் மாற்று, தொழில்நுட்ப உபகரணங்களாகாது என்பதைப் புரிந்து நடந்து கொண்டால், வலுவான உறவை நிச்சயம் கட்டமைக்க முடியும்.
தொடர்பு திறன்களை வளர்த்துக்கொள்ளுங்கள்:
மனதில் நினைப்பதை தெளிவாகச் சொல்ல கற்றுக்கொள்வது மிகவும் முக்கியம். உறவுகளில் சிக்கல் வருவதற்குப் பல நேரங்களில் தெளிவான தகவல் பரிமாற்றம் இல்லாமல் போவதும் ஒரு காரணம். உதாரணமாக, அலுவலகங்களில் சரியான தகவல் பரிமாற்றம் இல்லையென்றால், பலர் உங்களைப் பயன்படுத்திக்கொள்வதற்கு வாய்ப்புகள் உண்டு. அதேபோலத்தான் உறவு முறைகளில் பிரச்னைகள் அதிகமாக வருவதற்குத் தவறான தகவல் பரிமாற்றமும் காரணம். நாம் என்ன நினைக்கிறோம்? எதைச் சொல்கிறோம்? சரியாகத்தான் சொல்கிறோமா? என்பதை அறிந்து பேசினாலே, பாதி பிரச்னைகள் நீங்கும்.
கருத்துகளைப் பதிவு செய்யுங்கள்:
விமர்சனம் என்பது பலருக்கும் பிடிக்காத ஒன்று. ஆனால், உறவுகளைத் தக்க வைத்துக்கொள்ள மற்றவர்களின் விமர்சனங்களை ஏற்றுக்கொள்வதும், விமர்சனங்கள் கொடுப்பதும் நல்ல விஷயமே. எந்த சூழ்நிலையிலும் ஒருவரின் கருத்துகளை பதிவு செய்வது என்பது மிகவும் முக்கியம். மற்றவர்களுக்கு அது ஒரு நல்ல வழிகாட்டியாக மாறுவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. எந்த ஒரு கருத்தும், இலவச தகவலே. அதனை எடுத்துக்கொள்வதும், விடுவதும் அவரவர்களின் விருப்பம். ஆனால், கருத்துகளைப் பதிவு செய்வது அவசியம்.

கொப்பளங்களை தவிர்க்க என்ன செய்யலாம்? thanks to dinamalar.com


 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29ஏப்
2019 
04:29
தாம்பரம் : ''கோடை கொப்பளங் களில் இருந்து தப்பிக்க, சந்தன ஊறல் குடிநீரை, அதிகளவு குடிக்க வேண்டும்,'' என, சித்த மருத்துவமனையின், குணப்பாடத் துறை, இணை பேராசிரியர், டாக்டர் எஸ்.சிவகுமார் கூறினார்.


இது குறித்து, அவர் கூறியதாவது:கோடை அதிகரித்து உள்ள நிலையில், உடலில் இருந்து, அதிகளவு வெளியேறும் வியர்வையால், நமச்சல் அதிகரிக்கும். உடலில் ஆங்காங்கே, வெயில் கொப்பளங்கள் மற்றும் வேர்க்குரு உருவாகும்.இதை தவிர்க்க, இளநீர், நன்னாரி சாறு, வெட்டி வேர், விளாமிச்ச வேர் ஆகியவற்றை, நான்கு டம்ளர் தண்ணீரில் கலந்து, அரை டம்ளர் அளவு வரும் வரை, கொதிக்க வைத்து, சூடாறிய பின், குடிக்க வேண்டும்.அதேபோல், தரமான சந்தனத்தை, தேவைக்கேற்ப சமமான அளவு, தண்ணீரில் கலந்து, குடிநீராக பருகலாம்; இதை, 'சந்தன ஊறல் குடிநீர்' என, சித்த மருத்துவத்தில் கூறுவர். தமிழ்நாடு காதி வஸ்திராலய கடைகளில், தரமான சந்தனம் கிடைக்கும்.ஒரு வேளை கொப்பளங்கள் மற்றும் வேர்க்குருக்கள் வந்தாலும், அவற்றால் ஏற்படும் எரிச்சல் மற்றும் நமச்சலில் இருந்து தப்பிக்க, சந்தனம், பச்சை கற்பூரத்தை சம அளவு, தண்ணீரில் கலந்து அரைத்து, உடலில் பூசலாம்.இதை, செய்ய முடியாதவர்கள், நுங்கு நீரை மட்டும், உடலில் பூசலாம். இது தவிர, தேங்காய் பாலில், சீரகத்தை அரைத்தோ அல்லது ஏலக்காய், கார்போகி அரிசி, ஆல மரம் அல்லது அரச மரம் பட்டையை அரைத்தோ, உடலில் பூசலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.

Wednesday, April 24, 2019

முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள் - ஆறாம் திருமுறை

'முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்

மூர்த்தி அவன் இருக்கும் வண்ணம் கேட்டாள்

பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள்

பெம்மான்  அவனுக்கே பிச்சியானாள்

அன்னையும் அத்தனையும் அன்றே நீத்தாள்

அகன்றாள் அகலிடத்தார் ஆசாரத்தை

தன்னை மறந்தாள் தன் நாமம் கெட்டாள்

தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே!'

தலைவனின் பெயரைக் கேட்டாள் தலைவி . பெயரைக்கேட்டதுமே காதல் கொண்டாள்!  பெயருக்கே இத்தனை பெருமையா என்று வியந்துதான் போனாள்! பின் அவனது தோற்றம், இருப்பிடம் இவற்றைப் பற்றி அறிந்தாள் ! அதன்பின்பு காணுமிடமெங்கும் அவனேயானான் ! அவனையல்லால் அவளுக்கு ஒரு புகல் இல்லை ! அந்தக் கணத்திலேயே அவள் தனதெல்லாம் துறந்தாள்! தன்னைப் பெற்றவரை மறந்தாள்! தன் பெயரும் மறந்தாள் ! தன்னையே தான் மறந்தாள் ! தலைவன் தாள் ஒன்றே தன் தலையில் கொண்டாள் ! தலைவனுக்கே அடிமையானாள் ! ஒருமையுடன் அவன் திருமலரடி நினைக்கின்ற உத்தமருள் ஒருத்தியானாள் ! உலகையே மறந்தாள் ! -

இதுதான் திருநாவுக்கரசர் அவர்களின் , மேல்கண்ட திருவரிகளின் பொருள் !

யாயும் ஞாயும் யார் ஆகியரோ - குறுந்தொகை

குறுந்தொகை : 

40 – குறுஞ்சி – தலைவன் கூற்று
யாயும் ஞாயும் யார் ஆகியரோ
எந்தையும் நுந்தையும் எம் முறைக் கேளிர்
யானும் நீயும் எவ் வழி ,
செம் புலப் பெயல் நீர் போல,
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.
-செம்புலப்பெயனீரார்
செம்மண்ணில் கலந்த நீர்
என் தாயும் உன் தாயும் யார் யாரோ
என் தந்தையும் உன் தந்தையும்
எப்படி உறவினர் ?
நானும் நீயும் எப்படி அறிந்தோம் ?
செம்மண்ணில் மழைநீர் போல்
அன்பு நெஞ்சங்கள் கலந்துவிட்டனவே.

Saturday, April 6, 2019

வெயில்... நம்மை என்ன செய்யும்! thanks to dinamalar.com


வெயில்... நம்மை என்ன செய்யும்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07ஏப்
2019 
00:00
வெயில் தாக்கத்திலிருந்து தப்ப, சில எளிய வழிமுறைகளை பின்பற்றினாலே போதும், கோடையும் நமக்கு தோழன் தான்.
இக்காலத்தில், சாப்பிட வேண்டிய உணவு வகைகள் சிலவற்றை இங்கே கொடுத்துள்ளோம். இவை அனைத்திலுமே, நம் உடலுக்கு தேவையான வைட்டமின் சத்துக்களும், கால்சியம், புரதம், பொட்டாசியம் மற்றும் இரும்பு சத்துக்களும் நிரம்பியுள்ளன.

தண்ணீர்: வெயிலில், வியர்வை அதிகம் வெளியேறும். உடலில் நீர் சத்தை சமமாக வைத்திருக்க, 10 முதல் 12 டம்ளர் தண்ணீர் பருகுவது நல்லது.

கீரை: தினமும் ஏதாவது ஒரு வகை கீரையை, உணவில் சேர்த்துக் கொள்ளலாம். வேனல் கட்டிகள் வருவது தடுக்கப்படும்; எளிதில் ஜீரணமாகும்.

கூழ்: தமிழர்களின் பாரம்பரிய உணவு வகைகளில் ஒன்று, கூழ். கம்பு மற்றும் கேழ்வரகு மாவில், கூழ் தயாரிக்கலாம். கூழ் குடிப்பதால், உடல் எடை குறையும்; கெட்ட கொழுப்பு சேராது. 

பழைய சோறு: ஏழைகளின் உணவு, பழஞ்சோறு, 'ஐஸ் பிரியாணி' என்றெல்லாம் பல பெயர்களில் அழைக்கப்படும் பழைய சோறு, வெயிலுக்கு ஏற்றது.
முதல் நாள் வடித்த சாதத்தில் தண்ணீர் ஊற்றி, மறுநாள் கரைத்து குடித்தால், உடல் உஷ்ணம் இருந்த இடம் தெரியாமல் போய்விடும். மண் சட்டியில் இருக்கும் பழைய சோற்றுக்கு, தனி சுவையே உண்டு.
காலையில் இதை சாப்பிடுவதால், வயிறு தொடர்பான நோய் குணமாகும்.
இந்த உணவு, நார்ச்சத்து தன்மையையும் கொண்டிருப்பதால், மலச்சிக்கலை நீக்கும்; உடல் சோர்வை விரட்டும். ரத்த அழுத்தம் சீராகும். ஒவ்வாமை பிரச்னைகளுக்கும், தோல் தொடர்பான வியாதிகளுக்கும் நல்ல தீர்வு.
அனைத்துவிதமான வயிற்று புண்களுக்கும், பழைய சோறு வரப்பிரசாதம். நோய் தொற்று ஏற்படாமல் தடுக்கும். வனப்பை தரும்; இளமை தோற்றத்தை தக்க வைக்க உதவும்.

நுங்கு: உடலுக்கு வேண்டிய நீர்சத்துக்களை, தன்னுள் உள்ளடக்கியுள்ளது, நுங்கு. மேலும், உடலின் கனிம சத்து மற்றும் சர்க்கரையின் அளவை சீராக வைத்து, சுறுசுறுப்புடன் செயல்பட பெரிதும் உதவுகிறது. 
கோடையில் அதிக வெப்பத்தால், சின்னம்மை வரும் வாய்ப்பு அதிகம். இது வராமல் தடுக்கவும், சின்னம்மை விரைவில் குணமாகவும், நுங்கு உதவுகிறது. 
நுங்கு சாப்பிடுவதால், உடல் எடையை குறைக்கலாம். இதில் உள்ள, 'ஆந்தோசையனின்' என்னும், 'பைட்டோ கெமிக்கல்' மார்பக புற்றுநோய் செல்கள் மற்றும் கட்டிகளின் வளர்ச்சியை தடுக்கும். வயிற்றில் ஏற்படும் பல்வேறு பிரச்னைகளை போக்க, நுங்கு சாப்பிடுங்கள்.

மோர்: செரிமானத்தை அதிகரிக்கவும், 'ஹார்மோன்' சீராக சுரக்கவும் உதவி புரிகிறது. தினமும் ஒரு டம்ளர் மோர் குடித்து வந்தால், வைட்டமின் குறைபாடு ஏற்படுவதை தடுக்கலாம்; ரத்த அழுத்தத்தை கட்டுப்பாடுடன் வைத்துக் கொள்ளலாம்.

சாத்துக்குடி: ரத்த சோகையை விரட்டியடிக்க, சாத்துக்குடி நல்ல மருந்து. 'மெனோபாஸ்' சமயங்களில் பெண்களுக்கு ஏற்படும் சத்து குறைவால், பல இன்னல்கள் உண்டாகும். இக்குறை நீங்க, பெண்கள், தினமும் சாத்துக்குடி சாறு அருந்துவது நல்லது.
வயிற்றுப் பொருமல், வாயு, இருமல், வாந்தி, தண்ணீரற்று போகும் வறட்சி நிலை, ரத்தத்தில் கழிவு பொருள் சேருதல், செரிமானமின்மை போன்ற கோளாறுகளுக்கு நல்ல நிவாரணம் அளிக்கும்.

இளநீர்: ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த, இளநீர் சரியான மருந்து. இளநீரில் உள்ள பொட்டாஷியம், உடலில் நீர் வறட்சி குறைபாட்டை போக்கி, வயிற்றுப்போக்கை சரி செய்ய உதவுகிறது. 
உடல் உஷ்ணத்தை குறைப்பதுடன், குளிர்ச்சியை தருகிறது. ரத்தத்தில் கொழுப்பு அளவை குறைக்கிறது. சருமத்தை பொலிவாக்க உதவுகிறது. ரத்த சோகை, உற்சாகமின்மைக்கு நிவாரணம் அளிக்கிறது. ஜீரண சக்தியை மேம்படுத்துவதுடன், மலமிளக்கியாகவும் செயல்படுகிறது. 
குடல் புழுக்களை அழிக்கிறது. ஊட்டச்சத்து குறைபாடுகளை சரி செய்கிறது. சிறுநீரக கற்களை கரைக்கிறது. சிறுநீரக கிருமி நீக்கியாகவும், ரத்தத்தில் கலந்துள்ள நச்சு பொருட்களையும் அகற்றுகிறது. காலரா நோயாளிகளுக்கு, இளநீர் நல்லதொரு பானம்.

தர்பூசணி: உடலுக்கு தேவையான குளிர்ச்சியை தரக்கூடிய சிறந்த பழமாக, தர்பூசணி கருதப்படுகிறது. குறைந்த ரத்த அழுத்தம் உள்ளோர், தர்பூசணி பழத்தை தொடர்ந்து சாப்பிடுவதால், அதிலிருந்து தப்பலாம்.
தர்பூசணியில் உள்ள, 'பைட்டோ - நியூட்ரின்ட்ஸ்' என்ற சத்து, உடல் ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் வைத்திருக்க உதவுகிறது. 

முலாம் பழம்: உடல் உஷ்ணம் மற்றும் சிறுநீர் குழாயில் ஏற்படும் எரிச்சலை போக்கவல்லது. வயிற்றுப்போக்கை குணப்படுத்தக் கூடியது. நோய் எதிர்ப்பு சக்தியை துாண்டி, உடலுக்கு புத்துணர்வை அளிக்கும். 
இப்பழ சதையுடன் தேன் கலந்து உண்டு வர, வாய்ப்புண், தொண்டை புண் குணமாகும்; கண் பார்வை கூர்மையாகும். 

திராட்சை: திராட்சை பழத்தை, 'பழங்களின் ராணி' என்பர். பச்சை, சிவப்பு, ஊதா மற்றும் கருப்பு நிறங்களில் திராட்சை கிடைக்கிறது. திராட்சையில், 'கார்டெனோய்ட், பாலிபினோல்' போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் உள்ளன. 
இவை, புற்றுநோயை எதிர்த்து போராடவும், தோல் பிரச்னைகளையும் சரி செய்கிறது. 
திராட்சையை தினமும் சாப்பிட்டு வந்தால், கண்களுக்கு தேவையான புரதம் கிடைக்கும். முழங்கால் வலியிலிருந்து நிவாரணம் கிடைக்கும். 'அல்சைமர்' போன்ற மூளை சம்பந்தப்பட்ட வியாதிகளையும் தடுக்கிறது. 
உலகம் சீராக இயங்க, வெயிலையும் கொடுத்து, அதிலிருந்து மக்களை காக்க, பலவித சத்துக்கள் நிறைந்த பழ வகைகளையும் படைத்த இறைவனின் கருணைக்கு நன்றி செலுத்துவோம்!