Wednesday, April 24, 2019

யாயும் ஞாயும் யார் ஆகியரோ - குறுந்தொகை

குறுந்தொகை : 

40 – குறுஞ்சி – தலைவன் கூற்று
யாயும் ஞாயும் யார் ஆகியரோ
எந்தையும் நுந்தையும் எம் முறைக் கேளிர்
யானும் நீயும் எவ் வழி ,
செம் புலப் பெயல் நீர் போல,
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.
-செம்புலப்பெயனீரார்
செம்மண்ணில் கலந்த நீர்
என் தாயும் உன் தாயும் யார் யாரோ
என் தந்தையும் உன் தந்தையும்
எப்படி உறவினர் ?
நானும் நீயும் எப்படி அறிந்தோம் ?
செம்மண்ணில் மழைநீர் போல்
அன்பு நெஞ்சங்கள் கலந்துவிட்டனவே.

No comments:

Post a Comment