Sunday, February 25, 2018

திருக்குறளில் அந்தணரும் வேதமும் thanks to tamil and vedas.com

திருக்குறளில் அந்தணரும் வேதமும் ! (Post No.3296)

img_8188
Written by S. NAGARAJAN

Date: 28 October 2016

Time uploaded in London: 5-38 AM

Post No.3296

Pictures are taken from various sources; thanks. Pictures are representational; may not have direct connection to the article below.

Contact :– swami_48@yahoo.com


சங்க இலக்கிய ஆய்வு – கட்டுரை எண் 1

திருக்குறளில் அந்தணரும் வேதமும் !

                      ச.நாகராஜன்  
இந்த ஆய்வில் சங்க இலக்கியம் மட்டுமே இடம் பெறுகிறது. சங்க இலக்கியம் என்பது : –                               எட்டுத் தொகை நூல்கள்,
பத்துப்பாட்டு  நூல்கள்,
பதினெண்கணக்கு நூல்கள் ஆகியவையே.

அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்    
செந்தண்மை பூண்டொழுகலான்   (குறள் 30)

எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டு ஒழுகலான் அந்தணர் என்போர் அறவோர்.
இனிய நீர்மையும் கருணையும் கொண்டவர் ஆதலின் அந்தணர் அறவோர் ஆவர்.
ஈர நெஞ்சத்து அந்தணர் (பரிபாடல் 14) என்பதால் கருணை உள்ளம் கொண்டவர் அந்தணர் என்பது பெறப்படுகிறது
அறவாழி அந்தணன் (குறள் 8)
இமயவில் வாங்கிய ஈர்ஞ்சடை அந்தணன் (கலி 88) என்ற இடங்களில் இறைவனை அந்தணன் என்ற சொல் குறிக்கிறது.

மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்   (குறள் 134)
ஓத்துக் கொளல் என்பது வேதம் ஓதுதல்.
ஒருவேளை வேத்ம ஓதுவதை மறந்தாலும் கூடத் திருப்பி ஓதிக் கொள்ளலாம். ஆனால் ஒழுக்கத்தை இழந்தால் பார்ப்பான் உயர்வு ஒழிந்து இழிவான்.
மறப்பினும் என்று உம் போட்டுச் சொல்லப்படுவதால் வேதம் ஓதுவதை அந்தணன் ஒருபோதும் மறக்க மாட்டான் என்பதை அவர் குறிப்பிடுகிறார்..
மிகக் கடினமான பயிற்சியை மேற்கொண்டிருக்க வேண்டியிருப்பதாலும் தொடர்ந்து தினசரி அதை ஓத வேண்டியிருப்பதாலும் வேதத்தை மாற்றவும் முடியாது. மறக்கவும் முடியாது.
ஜட பாடம், கன பாடம் என்பது எல்லாம் சிக்கல் நிறைந்த ஓதல் பயிற்சிகள். கனபாடத்தில் தேர்ந்தவர்களே கனபாடிகள் ஆவர். ஆனால் இந்த வேதம் ஓதுதல் மறந்தாலும் கூட ஒருவேளை திரும்பப் பெறக்கூடும். ஆனால் ஒழுக்கம் இழந்தாலோ, பிறப்பே கெடும் என அறிவுறுத்துகிறார் வள்ளுவர்.
வேதியர்க்கு அழகு வேதமும் ஒழுக்கமும் என்று இந்த இரண்டையும் இணைத்துப் பின்னாலே வந்த நறுந்தொகை கூறுகிறது.
பார்ப்பான் என்பது மெய்ப்பொருள் அல்லது பிரம்மத்தைப் பார்ப்பான் என்பதைக் குறிக்கும்.

நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்    (குறள் 28)

நிறைமொழி மாந்தர் ஆணையில் கிளந்த
மறைமொழி தானே மந்திரம் என்ப என்ற தொல்காப்பிய வரிகளை இங்கு நோக்கினால் அர்த்தம் எளிதாகப் புரியும்.

தவமும் தெய்வத்திருவருளும் அறிவும் உடையோரின் சொல்லே மந்திரம் ஆகிறது. அதையே மறைமொழி என்று இங்குக் காண்கிறோம்.

அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்                    
நின்றது மன்னவன் கோல்         (குறள் 543)
அந்தணர் நூல் வேதமாகும். அதற்கும் அறத்திற்கும் ஆதியாய் நிற்பது மன்னவனால் செலுத்தப்படும் செங்கோல்.
ஆகவே அறத்தை அடிப்படையாகக் கொண்டு வேத நூலைப் போற்ற மன்னவன் கோல் செங்கோலாக அமைதல் வேண்டும்.

அருமறை சோரும் அறிவிலான் செய்யும்                          
பெருமிறை தானே தனக்கு        (குறள் 847)

அரிய மறைப்பொருளை உணர்ந்து அதன் வழி நடக்காமல் இருக்கும் அறிவிலாதவர் தனக்குத் தானே பெரும் தீங்கினை இழைத்துக் கொள்வர்.
இங்கு உபதேசம் குறிப்பிடப்படுகிறது. கேட்ட மறைப் பொருளை – உபதேசப் பொருளை உட்கொள்ளாதவன் அறியாமையால் தனக்குத் தானே தீங்கு இழைத்துக் கொள்வதை இந்தக் குறள் நன்கு உணர்த்துகிறது.

செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின்               
ஆன்றாரோ டொப்பர் நிலத்து   (குறள் 413)
செவியுணவு என்பது கேள்வி.
வேள்வியில் ஆகுதியாக்கப்படும் அவி உணவு தேவருக்கான உணவு.  செவி உணவாகிய கேள்வியில் மிக்கார் இங்கு நிலவுலகில் இருப்பினும் கூட அவி உணவைக் கொள்ளும் தேவரோடு ஒப்பாவார்.
கேள்வியையும் வேள்வியையும் வள்ளுவர் கையாளும் பாங்கு நம்மை பிரமிக்க வைக்கிறது.

அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர் செகுத்து உண்ணாமை நன்று  (குறள் 259)
இந்தக் குறளில் மாபெரும் அறப் பண்பை வள்ளுவர் வலியுறுத்துகிறார்.
ஹவிஸ் என்பது தமிழில் அவி ஆயிற்று. நெய்யை ஆகுதியாக ஹவிஸாகக் கொடுத்து ஆயிரம் வேள்விகளைச் செய்வதைக் காட்டிலும் ஒரு விலங்கின் உயிரைப் போக்கி அதன் ஊனை உண்ணாமை நன்று என்கிறார் வள்ளுவர்.
ஆக, –
அந்தணர் அறவோர் எனப்படுவதும் அவர்கள் வேதம் ஓதுதலைச் செய்யும் ஒழுக்கம் உடையவர் என்பதும், இந்த அந்தணர், வேதம், அறம் இவை செழித்திருக்க மன்னவன் செங்கோல் சரியாக இருக்க வேண்டும் என்பதும் வள்ளுவரின் கூற்று.
மறைப்பொருளை உணராமல் இருப்பவன் தனக்குத் தானே கெடுதி செய்து கொள்கிறான் என்பதை வலியுறுத்திய வள்ளுவர் அவி உணவை உட்கொள்ளும் தேவரோடு கேள்விச் செல்வத்தில் மேம்பட்டவர் ஒப்பாவார் என்றும் அவி சொரிந்து ஆயிரம் யாகங்களைச் செய்வதை விட ஒரு உயிரைக் கொன்று அதன் மாமிசத்தை உண்ணாமல் இருப்பது நன்று என்றும் கூறுகிறார்.
வேதம், பார்ப்பான், ஹவிஸ், தேவர், மன்னவன் கோல், அறம் ஆகிய அனைத்தும் சரியான விகிதத்தில் இணைக்கப்பட்ட அறச் சாறை சில குறள்களிலேயே அள்ளித் தருகிறார் வள்ளுவர்.
மிக உயரிய நூலாக வேதம் கருதப்படுவதையும், அதை ஓதுபவர் அறவோர் என்பதையும், அதைக் காப்பதே மன்னவன் கடமை என்பதையும் வள்ளுவர் குறள்களில் நிலை நிறுத்திக் காண்பிக்கிறார்.
இதுவே வேதம் மற்றும் அந்தணர் பற்றிய வள்ளுவர் கொள்கை!

பின்னாலே எழுந்த ஏராளமான தமிழ் இலக்கிய நூல்களில் இந்தக் குறள்களை அடியொட்டிய ஏராளமான பாக்களைப் பார்க்கலாம். அதன் அடியொட்டிய அற்புத வரலாறுகளையும் படிக்கலாம்.
******
சங்க இலக்கியம் குறிக்கும் தெய்வங்களைப் பற்றிய எனது முந்தைய கட்டுரையைப் படித்த தமிழ் ஆர்வலரின் மடலே இந்தக் கட்டுரைத் தொடரை ஆரம்பிக்கக் காரணம். (அவரது மடலைக் கட்டுரையின் விமரிசனப் பகுதியில் காண்க)
பல ஆண்டுகளாக எழுத வேண்டும் என்று நினைத்திருந்த இந்தத் தொடருக்குப் பிள்ளையார் சுழி போட வைத்த அன்பருக்கு நன்றி. சங்க இலக்கியங்களைத் தாமே பயின்றால் இன்று நமக்கு போலியாக ஊட்டப்படும் பல பொய்க்கருத்துக்கள் போகும்; தமிழ்ச் சமுதாயம் மேம்படும்.

புஜங்காசனம், சலபாசனம், பிராணாயாமம்... மன ஆரோக்கியத்துக்கு உதவுமே யோகா! #Yoga thanks to vikatan.com

புஜங்காசனம், சலபாசனம், பிராணாயாமம்... மன ஆரோக்கியத்துக்கு உதவுமே யோகா! #Yoga

னஅழுத்தம்... ஒருவித பயத்தை ஏற்படுத்தும் வார்த்தை. இன்றைக்கு அதிகமாக உச்சரிக்கப்படும் வார்த்தைகளில் ஒன்றும்கூட. படிக்கும் குழந்தையில் தொடங்கி வயது முதிர்ந்தவர்கள் வரை வயது வித்தியாசமின்றி எல்லோருக்குமே ஏதோ ஒரு காரணத்தால் மனஅழுத்தம் ஏற்பட்டுவிடுகிறது. இது இல்லாமல் ஒரு நாளும் நகர்வதில்லை என்ற சூழல்! உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள மெனக்கெடுவதுபோல் நாம் ஒவ்வொருவருமே மனதையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளவேண்டியது இன்றைய அவசியத் தேவை. 
நாடிசுத்தி

உடல்நலத்துக்கு எத்தனையோ உடற்பயிற்சிகள் இருக்கின்றன. ஆனால், மன ஆரோக்கியத்துக்கு யோகா போனற சில பயிற்சிகள் மட்டுமே உள்ளன. எதிர்மறையான எண்ணங்களால் ஏற்படும் கோபம், வெறுப்பு, கவலை, பயம், தோல்வி மனப்பான்மை போன்றவற்றிலிருந்து தப்பிக்க யோகா பயிற்சி அவசியம். தினமும் ஒரு மணி நேரம் யோகா செய்வது மனதை ஆரோக்கியமாக வைத்திருக்கச் செய்யும். 
மனஅழுத்தத்தை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று, `யூஸ்ட்ரெஸ்’ (Eustress). மற்றொன்று, `டிஸ்ட்ரெஸ்' (Distress). இவை இரண்டும் பொதுவாகப் பிரிக்கப்படுகிறது. மனதை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளக்கூடிய Eustress, நேர்மறையான ஓர் அழுத்தம். அதாவது ஒரு வேலையைக் குறிப்பிட்ட நேரத்துக்குள் முடிக்க வேண்டுமென்றால், ஒருவிதமான அழுத்தம் மனதில் உண்டாகும். இந்த அழுத்தம் ஆரோக்கியமானது. இது வாழ்க்கையை நேர்வழியில் கொண்டு செல்லும். மனதை மகிழ்ச்சியாக வைத்திருக்க உதவும். தொழில் வளர்ச்சி, வாழ்க்கையில் வெற்றி பெற இந்த அழுத்தம் அவசியம். இது உடலில் எந்தவிதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தாது.
அடுத்தது, டிஸ்ட்ரெஸ். இது, உடலை ஆரோக்கியமற்ற நிலைக்குக் கொண்டு செல்லும். இது, தேவையற்ற பயம், கோபம், வெறுப்பு போன்றவற்றால் ஏற்படும் அழுத்தம். ஆரம்பத்தில் இதைக் கண்டுபிடிக்க முடியாது. இருந்தாலும், நாள்கள் ஆக ஆக உடலைப் பாதிக்க ஆரம்பிக்கும். மனதின் அமைதியைக் குலைத்து, நிலையற்றதாக மாற்றி, மன ஆரோக்கியத்தைக் கெடுக்கும்; உடலையும் பாதிக்கும். இதனால் நாம் செய்யும் வேலைகளில் கவனமின்மை, தலைவலி, உடல்வலி, தூக்கமின்மை போன்ற ஆரோக்கியமற்றச் சூழல் உருவாகும். 
மனஅழுத்தம்
இன்றைக்கு ஏற்படும் அனைத்து நோய்களும் உடல் மற்றும் மனம் தொடர்பானவையே. இதை `சைக்கோசோமேட்டிக் டிஸ்ஆர்டர்’ (Psychosomatic disorder) என்கிறார்கள். மனம் ஆரோக்கியமாக இல்லையென்றால், உடலில் இயல்பாக நடக்கும் அனைத்து இயக்கங்களும் மாறுபடும். இதுவே மிக நீண்ட நாள்களுக்குத் தொடர்ந்து நிகழும்போது அது நோயாக மாறுகிறது. மனதை கவனித்து, தேவையான பயிற்சிகளை அளித்தால் பல நோய்கள் குணமாகிவிடும். 
மனதை மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்வதே ஒரு கலைதான். நோய் வந்த பிறகு கஷ்டப்படுவதைவிட நோய் வரும்முன் பாதுகாத்துக்கொள்வதே நல்லது. இது நேர விரயம், பண விரயம் போன்றவை ஏற்படாமல் பாதுகாக்கும். மனதை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள யோகா பயிற்சிகள், பிராணாயாமம் (மூச்சுப்பயிற்சி) மற்றும் தியானப் பயிற்சிகள் உதவும்.
யோகாவைப் பொறுத்தவரை நோய் வந்த பிறகு குணப்படுத்துவதற்கும், வராமல் பாதுகாப்பதற்கும் ஒரே பயிற்சிகள்தாம். இதுதான் யோகாவின் மகிமை, தனித்தன்மை. தினமும் ஒரு மணி நேரம் உடல் பயிற்சிகள் செய்வது, உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். அதேபோல மனதுக்கு ஏற்ற யோகா பயிற்சிகளை எப்படிச் செய்வது... பார்க்கலாமா?
 
ஒவ்வோர் ஆசனப் பயிற்சியையும் கண்களை மூடி, மூச்சுப்பயிற்சியுடன் சேர்த்துப் பொறுமையாகச் செய்ய வேண்டும். சூரிய நமஸ்காரம், தடாசனம், விருக்ஷாசனம், பத்மாசனம், வஜ்ராசனம், பவன்முக்தாசனம், சேதுபந்தாசனம், புஜங்காசனம், சலபாசனம், சவாசனம் போன்ற ஆசனங்களைச் செய்யலாம்.  
யோகா பயிற்சிகள்

மன ஆரோக்கியத்துக்கு உதவும் சில ஆசனங்கள்.. 
சூரிய நமஸ்காரம் 
சூரிய நமஸ்காரம் மொத்தம் 12 நிலைகளைக் கொண்டது. சூரிய நமஸ்காரத்தின் அனைத்து ஆசனங்களும் சூரியனுக்கு நன்றி செலுத்துவதுபோல் அமைந்தவை.
முதலில் இரு கைகளையும் கூப்பி வணக்கம் சொல்வதுபோன்ற நிலை. நேராக நிமிர்ந்து நின்று கைகளைக் கூப்பி மூச்சை உள்ளிழுத்து வெளியேவிட வேண்டும். இரண்டாம்நிலை - இரண்டு கைகளையும் தலைக்கு மேலே உயர்த்தி பின்னோக்கி வளைய வேண்டும். மூன்றாம் நிலை - முன்னோக்கி வளைய வேண்டும்; வளைந்து, இரு கைகளாலும் குதிகாலின் பின்புறம் பிடித்து, முகத்தை கால்களோடு ஒட்டியநிலையில் வைக்க வேண்டும். நான்காம் நிலை - இரண்டு கைகளையும் தரையில் ஊன்றி ஒரு காலை மட்டும் பின்னோக்கி வைக்க வேண்டும் (படத்தில் காட்டியுள்ளதுபோல்). ஐந்தாம் நிலை - இரண்டு கைகளையும் ஊன்றி, இரண்டு கால்களையும் உயர்த்திவைக்க வேண்டும்; இப்போது கைகளை லேசாக வளைத்து, உடலைக் கீழே இறக்க வேண்டும். ஆறாம் நிலை  - முழங்கால் தரையிலிருக்க, நெஞ்சுப்பகுதியை உயர்த்த வேண்டும். ஏழாம் நிலை - முந்தைய நிலையில் இருந்தபடி மேல்நோக்கிப் பார்க்க வேண்டும். எட்டாம் நிலை - இரண்டு கால்களையும் உயர்த்தி படத்தில் காட்டியுள்ளதுபோல் நிற்க வேண்டும். கடைசி நான்கு நிலைகளையும் முதல் நான்கு நிலைகளைப்போல் செய்ய வேண்டும்.
ஒரு நிலையிலிருந்து கடைசிநிலை வரை செல்லும்போது முழுத் தண்டுவடத்துக்கும் அனைத்து மூட்டுகளுக்குமான ஒரு பயிற்சியாக இருக்கும். சூரிய நமஸ்காரம் எலும்புகளைப் பலப்படுத்தும்; தேவையற்ற கொழுப்புகளைக் குறைக்கும். 
யோகாசனம்
பவனமுக்தாசனம்
படுத்த நிலையில் செய்யக்கூடியது பவனமுக்தாசனம். படத்தில் காட்டியுள்ளதுபோல் இரண்டு கால்களையும் கோர்த்துப் பிடித்து இயல்பான சுவாசத்தில் 30 விநாடிகள் செய்ய வேண்டும். இதேபோல் மூன்று முறை செய்ய வேண்டும்.
மூச்சுப்பயிற்சிகளை அதிக நேரம் செய்வது மனஅழுத்தத்தைக் குறைக்கும். நாடி சுத்தி பிராணாயாமம், `ஓம்’ மந்திரத்தை உச்சரித்தல் போன்றவை மனதை ஒரு நிலைப்படுத்தி அழுத்தத்தைக் குறைக்கும். 
நாடி சுத்தி பிராணாயாமம் செய்யும் முறை: வலது கையின் ஆள்காட்டி விரல், நடுவிரல் இரண்டையும் மடித்துவைத்து, வலது நாசியில் கட்டை விரலும், இடது நாசியில் மோதிர விரலையும் வைத்து மூடிக்கொள்ள வேண்டும். இடப்பக்க நாசியின் வழியாக மூச்சை உள்ளிழுத்து, வலப்பக்க நாசியின் வழியே வெளிவிட வேண்டும். பிறகு வலப்பக்க நாசியின் வழியே மூச்சை உள்ளே இழுத்து, இடப்பக்கம் வெளியேவிட வேண்டும். இதேபோல் 20 முறை செய்ய வேண்டும். 
இந்தப் பயிற்சி உடலில் உள்ள நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். நுரையீரல் செயல்திறனை அதிகரிக்கும். மனதை ஒருநிலைப்படுத்த உதவும். இந்தப் பயிற்சியை அனைத்து வயதினரும் செய்யலாம். கோபமாக இருக்கும்போது அமர்ந்துகொண்டு இந்தப் பயிற்சிகளைச் செய்யலாம். ஒரு தெளிவான முடிவு எடுக்கத் தயங்கும்போது இந்தப் பயிற்சியை செய்து ஆசுவாசப்படுத்திக்கொண்டு, பிறகு அடுத்த முடிவுகளை எடுக்கலாம். 
மூச்சை நன்றாக உள்ளே இழுத்து வெளிவிடும்போது `ஓம்' என்ற வார்த்தையை உச்சரிக்கலாம். மூச்சை உள்ளிழுக்கும்போதும், வெளிவிடும்போதும், உச்சரிக்கும் `ஓம்' வார்த்தை ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். `ஓம்' உச்சரித்தால் ஒரு நாளைக்கு 10-ல் இருந்து 100 முறை வரை செய்யலாம். இந்தப் பயிற்சி செய்தால், நாள் முழுக்க சுறுசுறுப்புடன் இயங்கலாம். இது, நேர்மறையான எண்ணங்களை அதிகமாக்கும். எதிர்மறையான எண்ணங்களைக் குறைக்கச் செய்யும். அதாவது பயம், கவலை, கோபத்தைக் குறைத்து ஆழ்ந்த தூக்கத்தைத் தரும். மூளையின் செயல்திறனை அதிகமாக்கி, அதன் ஆழ்மன பகுதியைச் (Subconscious) செயல்படவைக்கும். 
`ஓம்' உச்சரித்தலுக்கான ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன. இப்போது ஆராய்ச்சியில் கண்டுபிடிப்பதை 2,௦௦௦ ஆண்டுகளுக்கு முன்னரே சித்தர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். 
தூக்கமின்மை பிரச்னையால் பாதிக்கப்படும் நோயாளிகள் படுத்தநிலையில் `ஓம்' என்று உச்சரித்தால் ஆழ்ந்த தூக்கம் வரும். மனஅழுத்தம் உள்ளவர்கள் இந்தப் பயிற்சியை செய்தால், பிரச்னை குறைந்து மகிழ்ச்சியாக வாழலாம். இவற்றை தினமும் செய்யவேண்டியது அவசியம். இதனால் மனஅழுத்தம் மீண்டும் வராமலிருக்கும்; இது நாம் செய்யும் வேலைகளைச் சுலபமாக்கும். மேலும், யோகா பயிற்சிகளை முறையான யோகா மருத்துவரிடம் கற்றுக்கொண்டு செய்தால் நல்ல பலனளிக்கும். மனஅழுத்தத்துக்கும் மனம் சார்ந்த (Psychosomatic) நோய்களுக்கும் யோகாவைத் தவிர வேறு மருந்து இல்லை.

Friday, February 23, 2018

ஸ்ரீ ராமரின் ஜோதிட அறிவு tamil and vedas.com

 ஸ்ரீ ராமரின் ஜோதிட அறிவு (Post No.4754)
Yahoo/Inbox
  • Tamil and Vedas <comment-reply@wordpress.com>
    To:theproudindian_2000@yahoo.co.in
    16 Feb at 11:24 PM
    Respond to this post by replying above this line

    New post on Tamil and Vedas

    ஸ்ரீ ராமரின் ஜோதிட அறிவு (Post No.4754)

    by Tamil and Vedas
    Date: 17 FEBRUARY 2018

    Time uploaded in London- 6-23 am

    WRITTEN by S NAGARAJAN

    Post No. 4754

    PICTURES ARE TAKEN from various sources. PICTURES  MAY NOT BE RELATED TO THE ARTICLE; THEY ARE ONLY REPRESENTATIONAL.


    WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.


    ஸ்ரீ ஜோஸியம் பிப்ரவரி 2018 இதழில்  வெளியாகியுள்ள கட்டுரை

     ஸ்ரீ ராமரின் ஜோதிட அறிவு

    .நாகராஜன்


    ஹிந்து வாழ்க்கை முறையில் ஜோதிடம் எவ்வளவு பழமையானது என்பதைச் சுட்டிக் காட்ட வால்மீகி ராமாயணம் ஒரு சரியான சான்று. ஆதி காவியம் என்று அறிஞர்களால் புகழப்படும்  உலகின் முதல் காவியமும் பெரும் காவியமுமான ராமாயணத்தில் வால்மீகி முனிவர் ஜோதிடக் குறிப்புகளைத் தவறாமல் முக்கியமான இடங்களில் சொல்லிக் கொண்டே போகிறார்.
    சில முக்கியக் குறிப்புகளை மட்டும் இங்கு பார்ப்போம்.
    ராமரின் ஜோதிடஹோரா அறிவு
    முதலில் ராமர் ஒரு காரியத்தைத் தொடங்கும் முன்னர் நல்ல நேரத்தைத் தானே பார்த்துத் தொடங்குபவர் என்பதற்கு அவர் சீதையை நோக்கி இலங்கை செல்லப் புறப்பட நிர்ணயித்த தினமே ஒரு சான்று.
    ஹனுமார் இலங்கையை நோக்கிச் செல்ல ராமரே ஒரு நல்ல வேளையைக் குறிப்பிட வேண்டும் என்று வேண்டிக் கொள்ள ராமர் கூறுவது:
    “இப்போதே நல்ல வேளையாக இருக்கிறது. சூரியன் வானத்தின் நடுவில் வந்து விட்டார். இந்த விஜய முகூர்த்தமே சிலாக்கியமானது. இன்று உத்தர பல்குனி (உத்தரம்) நட்சத்திரம். நாளை ஹஸ்தம். (அது எனது நட்சத்திரமான புனர்வசுவிற்கு ஏழாம் நட்சத்திரமாக ஆவதால் சுபமில்லை. அதாவது ஜன்ம நட்சத்திரத்திற்கு வத தாரை; உத்தர நட்சத்திரம் சாதக தாராபலம்) என்று இவ்வாறு ராமர் சுக்ரீவனிடம் கூறுகிறார்.
    பகலில் உள்ள 30 நாழிகைகளில் 20 நாழிகைக்கு மேல் 22 நாழிகை முடிய உள்ள நேரம் விஜய முகூர்த்தம் எனப்படும். வெற்றி பெறுவதற்கான சரியான வேளை அது என்று ராமர் நிர்ணயிக்கிறார்.

    ஆக இப்படி ஜோதிடத்தின் துணை கொண்டு நல்ல வேளை நிர்ணயித்த ராமர் வெற்றி பெற்றதில் வியப்பேதும் இல்லை.
    ராமரின் ஜாதகம்
    அடுத்து ராமரின் ஜனனம் முதல் பட்டாபிஷேகம் வரை வால்மீகி முனிவர் தரும் ஜோதிடத் தகவல்கள் பிரமிக்க வைப்பவை.
    ராமர் சித்திரை மாதம் நவமி திதி, புனர்வசு நட்சத்திரத்தில் அவதரிக்கிறார். சந்திரன், சூரியன்,குரு, சுக்ரன்,செவ்வாய், சனி ஆகிய ஐந்து கிரகங்கள் உச்சத்தில் இருக்க சந்திரனுடன் குரு சேர்ந்திருக்கும் போது கடக லக்னத்தில்  அவர் அவதரிப்பைதை பால காண்டம் சித்தரிக்கிறது.

    பட்டாபிஷேக நாள்
    ராவணனை வதம் செய்து அயோத்தி திரும்பிய ராமர் சுக்ல ஸப்தமி, புஷ்ய (பூசம்) நட்சத்திரத்தில் வசிஷ்டரால் சீதையுடன் ரத்ன சிம்மாசனத்தில் அமர வைக்கப்பட்டு பட்டாபிஷேகம் நடக்கிறது.
    ராமர் காட்டிற்கு கிளம்பியது புஷ்ய  நட்சத்திரத்திலேயே. ஆக பதினான்கு வருடங்கள் முடிந்து அவர் மீண்டும் அயோத்திக்கு வருகிறார். அவர் சைத்ர (சித்திரை மாதம்) சுக்ல பக்ஷத்தில் கிளம்பியவர். பால்குன (பங்குனி மாதம்) கிருஷ்ண பட்சம் முடிந்த போதே வருடக் கணக்கில் 14 வருடங்கள் பூர்த்தியாகி விட்டன.
    ஆகவே புஷ்பக விமானத்தில் ஏறிச் சென்றவர் பாரத்வாஜ ரிஷியின் உத்தரவின் பேரில் அவர் ஆசிரமத்தில் ஒரு இரவு கழிக்கிறார்.,முன்னதாக ஹனுமாரை அனுப்பித் தான் வரும் செய்தியை பரதனுக்குத் தெரிவிக்க உத்தரவிடுகிறார்.
    பிறகென்ன! அயோத்தி மாநகரமே குதூகலத்துடன் தயாராகிறது.

    சகுன சாஸ்திரம்
    இங்கு நாம் பார்த்தவை ஒரு சில குறிப்புகளை மட்டும் தான்!
    ராமாயணத்தை முழுவதுமாக ஜோதிட ரீதியில் படிக்க ஆரம்பித்தால் ஜோதிட சாஸ்திரம், சகுன சாஸ்திரம், ஹோரா சாஸ்திரம் ஆகியவை பற்றிய பல முக்கிய குறிப்புகளைப் பெறலாம். (சீதை பெற்ற சுப சகுனங்களை வால்மீகி ராமாயணம், சுந்தர காண்டம் 29ஆம் அத்தியாயம் விவரிக்கிறது.)
    வேதாங்கங்களின், ஆறு அங்கங்களில் ஒன்றான ஜோதிடத்தின் பெருமை ஆதி காலத்திலிருந்தே ஹிந்துத்வ வாழ்க்கை முறையில் இருந்து வந்திருக்கிறது என்பதை அறிந்து மகிழலாம்!
    ***

    குறிப்பு: வால்மீகி ராமாயணத்தில் வரும் விரிவான ஜோதிடக் குறிப்புகள் பலவற்றை  ஸ்ரீ ஞானானந்த பாரதி ஸ்வாமிகள் எழுதிய 432 பக்கங்கள் உள்ள  ஸ்ரீ வால்மீகி ஹ்ருதயம் என்ற நூலில் காணலாம்.

மகனை எந்த வயது வரை கொஞ்சலாம்? சாணக்கியன் அறிவுரை (Post No.4760) thanks to tamil and vedas.com

[New post] மகனை எந்த வயது வரை கொஞ்சலாம்? சாணக்கியன் அறிவுரை (Post No.4760)
Yahoo/Inbox
  • Tamil and Vedas <comment-reply@wordpress.com>
    To:theproudindian_2000@yahoo.co.in
    18 Feb at 1:44 PM
    Respond to this post by replying above this line

    New post on Tamil and Vedas

    மகனை எந்த வயது வரை கொஞ்சலாம்? சாணக்கியன் அறிவுரை (Post No.4760)

    by Tamil and Vedas
    Date: 18 FEBRUARY 2018

    Time uploaded in London- 20-43

    Written by London swaminathan

    Post No. 4760

    PICTURES ARE TAKEN from various sources. They may not be directly related to the article. They are only representational.


    WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.


    மகனை எந்த வயது வரை கொஞ்சலாம்? சாணக்கியன் அறிவுரை (Post No.4760)
    ஒரு தந்தை தனது மகனை எந்த வயது வரை கொஞ்சலாம்? எப்போது அவனை நண்பனாக நடத்த வேண்டும் என்று சாணக்கியன் சொல்கிறான்.

    மிகவும் ஆச்சர்யம் என்னவென்றால் 2300 ஆண்டுகளுக்கு முன்னர் சாணக்கியன் பேசாத விஷயமே இல்லை. மாபெரும் மகத சாம்ராஜ்யத்தைத் ஸ்தாபித்த, மிகப் பெரிய பொருளாதார நிபுணன் , ராஜ தந்திரி மற்ற விஷயங்கள் பற்றிச் சொல்லுவது அற்புதமானது. அவருக்குப் பின்னர் தமிழகத்தில் தோன்றிய வள்ளுவன், திருக்குறளில் செப்பும் கருத்துகள் பல, சாணக்கியனின் கருத்துகளை எதி, ரொலிப்பதாக உள்ளது. இமயம் முதல் குமரி வரை பாரதீய சிந்தனை ஒன்றே என்பதற்கு இது மேலும் ஒரு சான்று.

    ஒரு மகனை தந்தையானவர் ஐந்து வயது  வரை கொஞ்சலாம்; பத்து வயது வரை கட்டு திட்டங்களுடன் பராமரிக்கலாம். 16 வயதை அடைந்துவிட்டாலோ மகனை நண்பரைப் போல நடத்த வேண்டும்
    லாலயேத் பஞ்ச வர்ஷாணி தச வர்ஷாணி தாடயேத்
    ப்ராப்தே து ஷோடசே வர்ஷே புத்ரம் மித்ரவதாசரேத்
    சாணக்கிய நீதி 3-18
    xxxx

    வரமேகோ குணீ புத்ரோ நிர்குணைஸ்ச சதைரபி
    ஏகஸ்சந்த்ரஸ்தமோ ஹந்தி ந ச தாராகணைரபி
    சாணக்கிய நீதி 4-6
    குணமற்ற நூறு புதல்வர்களைவிட குணவானாகிய ஒரு பிள்ளை இருப்பது மேல்; இரவு நேரத்தில் ஒரு நிலவு இருளை எல்லாம் போக்கிவிடும்; நிறைய நட்சத்திரங்கள் போக்காது.

    மூர்க்கஸ்சிராயுர்  ஜாதோபி தஸ்மாத்  ஜாதம்ருதோ வரஹ
    ம்ருதஹ ச்ஸ சால்பதுக்காய யாவஜ்ஜீவம் ஜடோ தஹேத்
    சாணக்கிய நீதி 4-7
    xxx
    ஒரு முட்டாள் குழந்தையைப் பெறுவதற்குப் பதிலாகக் குறைப் பிரசவம் ஆனாலும் சரியே. குறைப் பிரசவம் என்பது அந்த நேரத்தில் துக்கத்தைக் கொடுத்துவிட்டு மறைந்து விடும்; முட்டாள் பிள்ளையோ பெற்றோரின் வாழ்நாள் முழுதையும் வீணாக்கி விடும்.


    ஏகோநாபி ஸுபுத்ரேண வித்யாயுக்தேன ஸாதுனா
    ஆஹாலாதிதம் குலம் ஸர்வம் யதா சந்த்ரேண சர்வரீ
    சாணக்கிய நீதி 3-16

    ஒரு நல்ல மகன் இருந்தால் அவன் குடும்பம் முழுவதையும் புகழ் அடையச் செய்வான்; ஒரு சந்திரனால் இரவும் முழுதும் ஒளி பெறுவதைப் போல!
    xxx
    கிம் ஜாதைர்பஹுபிஹி புத்ரைஹி சோக  ஸந்தாபகாரகைஹி
    வரமேகஹ குலாலம்பீ யத்ர விஸ்ராம்யதே குலம்
    சாணக்கிய நீதி 3-17

    துக்கத்தையும் கெட்ட பெயரையும் உண்டாக்கும் பல புதல்வர்கள் இருந்து என்ன பயன்? குடும்பம் முழுதும் பயன அடையக்கூடிய ஒரு மகன் போதும்.
    xxx

    இதை மக்கட்பேறு என்ற அதிகாரத்தில் வள்ளுவன் எழுதிய பத்து குறட்களுடன் ஒப்பிட்டால் இரு அறிஞர்களும் ஒரே விஷயத்தைச் சொல்லுவதைக் காணலாம்; இதோ சில குறட் பாக்கள்:
    எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
    பண்புடை மக்கட் பெறின்-- 62

    மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை
    என்னோற்றான் கொல்லெனுஞ் சொல் -70

    ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன் மகனைச்
    சான்றோன் எனக் கேட்ட தாய் -69

    தம்மின் தம் அறிவுடைமை மாநிலத்து
    மன்னுயிர்க்கு எல்லாம் இனிது- 68
    தந்தை மகற்கு ஆற்றும் நன்றி அவையத்து
    முந்தியிருப்பச் செயல் -67
    பொருள் எழுதத் தேவை இல்லாத, எளிமையான,எல்லோருக்கும் தெரிந்த குறள்கள்!

    இந்து மத புராணங்களில் உலகில் வேறு எங்கும் இல்லாத அளவுக்குப் புகழ் பெற்ற சிறுவர்கள் உள்ளனர்:

    நட்சத்திர நிலைக்கு உயர்ந்த துருவன்,
    ஒரு அணையை கை விரலால் இரவு முழுதும் அடைத்த ஸ்வேதகேது,
    யமனையே விரட்டிச் சென்று கேள்வி கேட்ட நஸிகேதஸ்,
    புத்திசாலியான என்றும் 16 வயது வாழும் வரம் பெற்ற மார்கண்டேயன்,
    இறைவன் பெயரைச் சொல்லி தந்தையின் ஆட்சியையே எதிர்த்த பிரகலாதன்,
    16 வயத்துக்குள் பல்லாயிரம் பாடல் பாடிய ஞான சம்பந்தன்,
    16 வயதுக்குள் பாவை பாடிய ஆண்டாள்,
    இளம் வயதிலேயே நாட்டை வலம் வந்த ஆதிசங்கரர்!

    போன்ற பல இளைஞர்கள் முன் உதாரணமாக விளங்கினர். உலகில் வேறு எந்த சமயத்திலும், கலாசாரத்திலும் இப்படி இல்லை என்பதால் பாரதீய கலாசாரமே பழமையான, முதன்மையான நாகரீகம் என்பது சொல்லாமலேயே விளங்கும்.

thanks to tamil and vedas .com சொர்கத்துக்குப் போவோரின் அடையாளங்கள் – சாணக்கியன் செப்பியது

சொர்கத்துக்குப் போவோரின் அடையாளங்கள் - சாணக்கியன் செப்பியது (Post No.4774)

சாணக்கியன் என்னும் பிராஹ்மணன் 2300 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தான். அவன் பல வியப்பான செய்திகளைச் சொல்லுகிறான். அவன் பெரிய சாம்ராஜ்யத்தை ஸ்தாபித்த போதும் ஒரு குடிசையில் வாழ்ந்தான் அவன் பிராமணர்கள் பற்றி விளம்பும் பாடல்கள் சிந்தனையைத் தூண்டும் பாடல்கள்--

இதோ சில பாடல்கள்:


மயில்களும் பிராஹ்மணர்களும்
துஷ்யந்தி போஜனே விப்ரா மயூரா கணகர்ஜிதே
சாதவஹ பரசம்பத்தௌ கலஹ பரவிபத்திஷு

சாணக்கிய நீதி 7-9

பிராமணர்கள், சாப்பாட்டில் மகிழ்ச்சி அடைகிறார்கள்;
மயில்கள், இடி முழக்கத்தில் மகிழ்ச்சியுடன் ஆடுகின்றன;
நல்லவர்கள், மற்றவர்களின் முன்னேற்றம் கண்டு மகிழ்ச்சி அடைவர்;
கெட்டவர்களோ, ஏனையோரின் கஷ்டத்தில் கூத்தாடுவர்.
xxxx


பிராஹ்மணன் ஒரு மரம்!
பிராஹ்மணன் ஒரு மரம்; அந்த மரத்தின் வேர்கள்- காலை, மதியம், மாலையில் செய்யும் த்ரி கால சந்தியா வந்தனம் (காயத்ரீ மந்திரம்);
வேதங்கள், அந்த மரத்தின் கிளைகள்;
ஆன்மீகச் செயல்பாடுகள் (யாக யக்ஞக்கள்) அதன் இலைகள்;
ஆகையால் மரத்தின் வேர்களைப் பாது, காருங்கள்;
வேர்கள் (சந்தியா வந்தனம்) அழிந்தால் கிளையும் இல்லை; இலையும் இல்லை!

விப்ரோ வ்ருக்ஷஹ தஸ்ய மூலம் ச சந்த்யா
வேதாஹா சாகா தர்ம கர்மாணி பத்ரம்
தஸ்மாத் மூலம் யத்னதோ ரக்ஷணீயம்
ச்சின்னே மூலே நைவ சாகா ந பத்ரம்

சாணக்கிய நீதி 10-13

xxxxx

பிராமணர்களின் பலம் அறிவு
 
Picture of Brain from Wellcome Centre, London

பாஹுவீர்யம் பலம் ராக்ஞோ ப்ராஹ்மணௌ ப்ரஹ்மவித் பலீ
ரூப  யௌவன மாதுர்யம் ஸ்த்ரீணாம் பலம் அனுத்தமம்

சாணக்கிய நீதி  7-11

புஜ பலம் (தோள் வலி) அரசனுக்கு பலம்;
வேதத்தில் வல்ல பிராஹ்மணனுக்கு அறிவு பலம்;
அழகு, இனிமை, இளமை ஆகியன பெண்களுக்கு ஈடு இணையற்ற பலம்

xxxx

Picture from Ratnagiri, by S Sivam
சொர்கத்துக்கு வழி

சொர்கத்துக்குப் போவோரின் நான்கு அடையாளங்கள் பூமியிலேயே
அவர்களின் செயல்பாட்டில் தெரிந்துவிடும் அவை யாவன:
அறப் பண்பு (தர்ம சிந்தனை), இனிய பேச்சு, கடவுள் வழிபாடு, பிராமணர்களுக்கு அன்னமிடுதல்

ஸ்வர்க  ஸ்திதானாம் இஹ ஜீவலோகே
சத்காரி சின்னானி வசந்தி தேஹே
தானப்ரஸங்கோ மதுரா ச வாணீ
தேவார்ச்சனம் ப்ராஹ்மணதர்பணம் ச

சாணக்கிய நீதி   7-16
xxx
திருப்தி வேண்டும்

திருப்தி அடையாத பிராஹ்மணர்கள்,
மன நிறைவு அடையாத மன்னர்கள்,
வெட்கப்படும் விபசாரிகள்,
வெட்கமே இல்லாத குடும்பப் பெண்கள்
ஆகிய நால்வரும் விளங்கமாட்டார்கள்.

அசந்துஷ்டா த்விஜா நஷ்டா சந்துஷ்டாஸ்ச மஹீபுஜஹ
ஸலஜ்ஜா கணிகா நஷ்டா நிர்லஜ்ஜாஸ்ச குலாங்கணாஹா

சாணக்கிய நீதி 8-18

xxx
 Picture by Lalgudi Veda
பிராஹ்மணன் அறிஞனாஇல்லையா?

பிராஹ்மணர்களின் அறிவுக்கு சான்றும் வேண்டுமோ!
வானத்தில் தூதர் யாரும் இல்லை;
எவரும் இதைப் பற்றிப் பேசவும் இல்லை;
முன்னரும் யாரும் சொல்லவில்லை;
எவரையும் தொடர்பு கொள்ளவுமில்லை;
வானத்தில் நிகழப்போகும் சூர்ய, சந்திர கிரஹணங்களை
முன்கூட்டியே சொல்கிற பெரிய பிராஹ்மணனை
அறிஞர் என்று சொல்லவும் வேண்டுமா?

தூதோ ந சஞ்சரதி கே ந சலேச்ச வார்தா
பூர்வ ந ஜல்பிதம் இதம் ந ச ஸங்கமோஸ்தி

வ்யோம்னி ஸ்திதம் ரவி சசி க்ரஹணம் ப்ரசஸ்தம்
ஜானாதி யோ த்விஜவரஹ ஸ கதம் ந வித்வான்

சாணக்கிய நீதி 9-5

xxx


பிராஹ்மணரைத் திட்டுவோர் குடும்பத்தோடு......

தன்னைத்தானே வெறுப்பவன் சாவான் (தற்கொலை);
மற்றவனை வெறுப்பவன் செல்வத்தை இழப்பான்;
மன்னனை (ஆட்சியாளரைப்) பகைப்பவன் அழிவான்;
பிராஹ்மணனை வெறுப்பவன் குடும்பத்தோடு அழிவான்.

சாணக்கிய நீதி 10-11
ஆத்மத்வேஷாத் பவேன் ம்ருத்யுஹு பரத்வேஷாத் தன க்ஷயஹ
ராஜத்வேஷாத் பவேன் நாசோ ப்ரஹ்மத்வேஷாத் குல க்ஷயஹ

(இது சாணக்கியனின் சுய அனுபவத்தில் கண்ட உண்மை; சாணக்கியன் ஒரு அவலட்சணமான முகம் உடைய ப்ராஹ்மணன்; அப்போது பிராஹ்மணர்களைக் கிண்டல் செய்யும் நந்தர்கள் ஆண்டு வந்தனர். ஒரு முறை அரண்மனை விசேஷத்தில் முதல் பந்தியில் கறுத்த நிறமுள்ள, அசிங்கமாமன முகம் உடைய பிராஹ்மணனைப் பார்த்த, நந்த வம்சத்தரசன், அவரை பாதி சாப்பிடும் போது தர தர வென்று வெளியே இழுத்துக் கொண்டு போய் தள்ளிவிட்டான். அப்போது குடுமியை அவி ழ்த்துப் போட்டு, உனது ஆட்சியை வேர் அறுக்கும் வரை இந்த குடுமியை முடிக்க மாட்டேன் என்று சாணக்கியன் வீர சபதம் செய்தான்; மயில் வளர்க்கும் மூரா என்ற பெண்மணியின் மகனான சந்திர குப் தனை அழைத்து, பயிற்சி கொடுத்து, மாபெரும் படையை உருவாக்கி நந்த வம்சத்தின் 9 மன்னர்களையும் அடியோடு அழித்தான். அலெக்ஸாண்டர் படைகள் நடுங்கக்கூடிய அளவுக்கு மகத சாம்ராஜ்யத்தின் படைபலம் இருந்ததை பிற்கால கிரேக்க எழுத்தாளர்கள் எழுதிச் சென்றனர். ஒழுக்கத்திலும் அறிவிலும் சிறந்து இருந்ததால் இதைச் சாதிக்க முடிந்தது; பின்னர் பிராமணர்கள் செல்வம் சேர்க்கக்கூடாது என்ற விதியின்படி குடிசையில் வாழ்ந்தான். சுயநலம் அற்றவரைக் கண்டு உலகமே நடுங்கும் அல்லவா? சாணக்கியன் என்றால் எல்லோருக்கும் சிம்ம சொப்பனம்; எவருக்கும் கட்டளை இடும் தகுதி அவனுக்கு இருந்தது.

Brahmins at Pillayarpatti Temple