Sunday, January 20, 2019

பொது செய்தி தமிழ்நாடு தினமும், 'நடந்தால்' மகிழ்ச்சிக்கு பஞ்சமில்லை! thanks to dinamalar

 Added : ஜன 20, 2019  கருத்துகள் (1)

Advertisement
 தினமும், 'நடந்தால்' மகிழ்ச்சிக்கு பஞ்சமில்லை!
214Shares
'இந்தியன் அசோசியஷன் பார் செக்சாலஜி'யின் சேர்மனும், 'வேர்ல்டு அசோசியேஷன் பார் செக்சாலஜி'யின் உறுப்பினரும், 'ஆசியா - ஓசியானியா பெடரேஷன் ஆப் செக்சாலஜி'யின் பொது உறுப்பினர் செயலாளருமான, சென்னையின் பிரபல செக்சாலஜிஸ்ட், டாக்டர் டி.காமராஜ், 'தினமலர்' கேள்விகளுக்கு அளித்த பதில் வருமாறு:

பாலியல் மருத்துவம், இந்த நுாற்றாண்டில் கண்டுள்ள மாற்றம் என்ன?

பாலியல் மருத்துவம், இந்த நுாற்றாண்டில் தான் வளர்ந்துள்ளது. உலகுக்கே பாலியல் பற்றிய வழிகாட்டுதலை, இந்தியா கொடுத்துள்ளதே, நாம் பெருமைப்படும் விஷயம். அதாவது, காமசூத்ரா பிறந்த நாடு, இந்தியா.ஆனால், ஆங்கிலேயர்கள் வந்த பிறகு, காமம் பற்றி, பாலியல் பற்றி பொது வெளியில் பேசுவது, ஆபாசமாக கருதப்பட்டது. அறம், பொருள், இன்பம், வீடு பேறு என்று, நான்கு படிகளாக நாம் கற்றுத் தந்துள்ளோம்.

பாலியல் மருத்துவரை அணுகுவதற்கு, இன்னமும் நமது சமூகத்தில் தயக்கம் நிலவுகிறதா?

குழந்தைப்பேறு இன்றி, சிகிச்சைக்கு வருகின்றனர்; தாம்பத்ய உறவில் பிரச்னை என்றால், சிகிச்சை எடுத்துக் கொள்ள, பெரும்பாலும் வருவதில்லை.'ஏமாத்தி கல்யாணம் பண்ணிக்கிட்ட' என்று, சண்டை போட்டு பிரிந்து விடுகின்றனர்.சென்னையில், தாம்பத்ய பிரச்னை பின்னணியில் தான், 70 சதவீதம் விவாகரத்து வழக்குகள் நடக்கின்றன. விவாகரத்து பெறுவதற்குப் பதில், இதையெல்லாம் சரி செய்ய முடியும் என்பது தான் உண்மை.

இன்றைய நவீன வாழ்க்கை முறையால், மனிதர்களுக்கு ஏற்பட்டிருக்கும் பாலியல் நோய்கள், அறிகுறிகள் என்னென்ன?

ஆண்களுக்கு ஆண்மைக் குறைவு, இதய நோய், மனஅழுத்தம், ரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய் இருக்கிறது.2020ல், உலகின் முதல் நோயாக, மன அழுத்தம் இருக்கப் போகிறது. மேற்சொன்ன நோய்கள், பாலியல் பிரச்னைகளை அதிகமாக்குகின்றன. உலகிலேயே ஆண்மைக் குறைவுள்ள நாடாக, இந்தியா மாறப் போகிறது; ஆனால், இதைத் தடுக்க முடியும்.
நாற்காலியில் உட்கார்ந்து, பத்து மணிநேரம் வேலை செய்யும்போது, அதில் மனஉழைப்பு தான் இருக்கிறது; உடல் உழைப்பு இல்லை. 'ஜங்க் புட்ஸ், கூல் டிரிங்க்ஸ், ஸ்வீட்ஸ்' நிறைய 
எடுத்துக் கொள்கின்றனர். தேவைக்கு அதிகமாக, கார்போ ஹைட்ரேட் சேர்த்துக் கொள்கின்றனர்.
இவற்றுடன், மனஅழுத்தம் சேரும்போது, ஆண்மைக் குறைவு வருகிறது. ஆண்மைக் குறைவு ஏற்படும் ஆண்களுக்கு, நான்கு ஆண்டுகளில், 'ஹார்ட் அட்டாக்' வர வாய்ப்பு இருக்கிறது.

பாலியல் குறைபாடு வராமல் இருக்க, உணவு பழக்கங்களில், என்னென்ன மாறுதல் செய்ய வேண்டும்?

காய்கறி, பழங்கள் சாப்பிட வேண்டும். புரதச்சத்து, நார்ச்சத்து உணவுகளை சாப்பிடலாம். கார்போஹைட்ரேட் உணவு, அதாவது மாவுச் சத்துள்ள உணவை, சாப்பிடக் கூடாது.
கொழுப்பு வகைகளை தவிர்க்கலாம். இதன்மூலம் பாலியல் பிரச்னை வராமல் தடுக்கலாம். போதுமான உடற்பயிற்சி இருக்க வேண்டும்; மனஅழுத்தம் இல்லாமல் வாழப் பழக வேண்டும்.

தனியே கடைகளில் விற்கப்படும், பாலியல் துாண்டலுக்கான ஊக்க மருந்துகள் வாங்கி பயன்படுத்தலாமா?
இது ஆபத்தை தரும். பல மருந்துகள், ஆபத்தானவை. பொதுவாக, ஆங்கில மருத்துவத்தில் ஆபத்து இல்லை. ஏராளமான உள்ளூர் மருத்துவங்கள், விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்
படாதவை.

உடலுக்கு ஆரோக்கியம் தரும், தாம்பத்யத்தின் அளவு என்ன?
ஆரோக்கியம் தரும் தாம்பத்யம், இரண்டு பேருக்கும் சந்தோஷம் தரக் கூடியது. ஒருத்தரை ஒருத்தர், மதிக்கக் கூடியது.தினமும் உறவு வைத்துக் கொள்ளலாம் அல்லது ஒருநாள் விட்டு ஒருநாள் வைத்துக் கொள்ளலாம். நிறைய வைத்துக் கொண்டால், நீண்டநாள் வாழலாம்.
மூளையில், நல்ல ஹார்மோன் இருக்கிறது. அந்த ஹார்மோன் மூலம், நீண்ட ஆயுள் கிடைக்கும்.

'டோப்பமைன்' என்பது, சந்தோஷத்தைக் கொடுக்கக்கூடிய ஒரு ஹார்மோன். 'ஆக்சிடோசின்' என்பது, உறவு கொள்பவர்களின் நெருக்கத்தை அதிகப்படுத்தும். எல்லா ஹார்மோனும் சுரப்பதால், தாம்பத்யம் மிகுந்த மகிழ்ச்சி கொடுக்கிறது.இந்த மகிழ்ச்சியை, இரண்டு பேரும் பெறுவதற்காக, ரெகுலராக வைத்துக் கொள்ளலாம்; எந்தத் தீங்கும் கிடையாது.
இப்படிச் செய்வதில், ஏராளமான நன்மைகள் உள்ளன; தற்கொலை எண்ணங்கள் குறையும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

Sunday, January 13, 2019

வாரம் ஒரு முறைபொங்கல் சாப்பிடுவதுநல்லது!வெண்பொங்கல், thanks to dinamalar.com


Advertisement
 சொல்கிறார்கள்
வாரம் ஒரு முறைபொங்கல் சாப்பிடுவதுநல்லது!வெண்பொங்கல், இந்தியா முழுவதும் சாப்பிடப்படும், ஓர் சமச்சீரான ஆரோக்கியமான உணவு; சிறந்த காலை சிற்றுண்டியும்கூட. அரிசி - 'கார்போ ஹைட்ரேட்' பாசிப்பருப்பு - 'புரோட்டின்' மிளகு, சீரகம், பெருங்காயம் - 'மைக்ரோ நியூட்ரியன்ஸ்' முந்திரி, இஞ்சி, கறிவேப்பிலை - இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் சத்து, தாவர எண்ணெய், பசுநெய் - நல்ல கொழுப்பு என, ஒரே உணவின் மூலமே, அனைத்து சத்துக்களும் நமக்கு கிடைக்கின்றன. நன்கு வேக வைத்த பொங்கல், மிகவும் எளிதில் செரிமானமாகும் தன்மை கொண்டது. 'வெண் பொங்கலானது, நம் உடலைக் குளிர்விக்கும் ஓர் உணவு' என, யோகக் குறிப்புகள் கூறுகின்றன. வயிற்றுப் புண்ணை ஆற்றும், குடலை சுத்தப்படுத்தும், நெஞ்செரிச்சலை சரி செய்யும், பாலுாட்டும் தாய்மார்களுக்கு, பால் சுரக்க வைக்கும், வயிற்றில் உள்ள வாயுவை வெளியேற்றும். வயிற்று உப்புசம், வயிற்று வலியைச் சரிசெய்யும், மூட்டு வலி, ஒற்றைத் தலை வலி உள்ளிட்டவை வராமல் தடுக்கும்.புற்று நோயை உண்டாக்கும் வேதிப்பொருட்கள், உடலில் தங்காமல் நீக்கும். குறிப்பாக, பெண்களுக்கு சினைப்பை புற்று நோயை உண்டாக்கும், 'செல்'களை அழிக்கும். காலையில் வெண்பொங்கல் சாப்பிடுவதால், உடலுக்கு சக்தி கிடைக்கும், தசைகள் வலுப்பெறும், குடல் பகுதியை அரிக்காமல் காக்கும்.உணவில் உள்ள விஷத்தை முறிக்கும், ரத்த சோகை வராமல் தடுக்கும், முடி நன்கு வளர உதவும், நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும், ஞாபக மறதியை சரிசெய்யும். மூளையில் உள்ள செல்கள் மற்றும் நரம்புகள் சுறுசுறுப்பாக இயங்க உதவும். குளிர்காலத்தில் பொங்கல் சாப்பிட்டால், பனி, குளிரால் ஏற்படும் சரும வறட்சியை தடுத்து, சருமத்தை மிருதுவாக்கும்; இருமலையும் சரிசெய்யும்.சர்க்கரை நோயாளிகளும், வெண்பொங்கலை சாப்பிடலாம். அரிசியுடன் பருப்பும் சேர்க்கப்படுவதால், அது ரத்தத்தில் சேரும் சர்க்கரையின் அளவைக் குறைக்கும். தவிர, சீக்கிரம் பசிக்கும் தன்மையை தடுத்து, பசியின்மையை உண்டாக்கும். அதேபோல், சர்க்கரைப்பொங்கல், நாம் அனைவரும் சாப்பிட வேண்டிய ஒரு முக்கிய உணவு. இதில் சேர்க்கப்படும் ஏலக்காய் மற்றும் முந்திரியே, இந்த தனிச் சிறப்புக்குக் காரணம். உணவுக்கு வாசனை மட்டுமல்ல, உடலுக்கு ஆரோக்கியத்தையும் கொடுக்கிறது ஏலக்காய். வயது முதிர்ச்சியை தாமதப்படுத்தும், மூட்டுத் தேய்மானம் வராமல் தடுக்கும், ஊளைச்சதை, நீர் அதிகம் உள்ள உடல்வாகு உடையவர்களுக்கு கழிவின் மூலம், உடலில் உள்ள கெட்ட கொழுப்பு மற்றும் நச்சுக்களை வெளியேற்றும் தன்மை, ஏலக்காய்க்கு உண்டு. எனவே ஆண்டுக்கு ஒருமுறை அல்ல; வாரம் ஒரு முறை பொங்கல் உண்பது அவசியம்!மருத்துவர், எஸ்.டி. வெங்கடேஸ்வரன்:

Saturday, January 12, 2019

எச்சில் கலந்து சாப்பிடுங்க... thanks to dinamalar.com


Advertisement

பதிவு செய்த நாள்

11ஜன
2019 
00:00

சாப்பிடும் போது, உணவில் உமிழ்நீர் கலக்க வேண்டும். எச்சில் கலந்த உணவு மட்டுமே, ரத்தத்தில் கலக்கிறது. எச்சில் கலக்காத உணவு, கெட்ட பொருளாகி விடும். எச்சிலில் நொதிகள் உள்ளன. உணவில் உள்ள மூலக்கூறுகளைப் பிரிக்க இவை உதவுகின்றன.
உதட்டைப் பிரித்து உணவை மெல்பவரின் எச்சில் உணவுடன் கலப்பது இல்லை. உதட்டை மூடி, மெல்ல வேண்டும்.
உதட்டைப் பிரித்து சாப்பிட்டால், காற்று வாய்க்குள் சென்று, உணவுக்கும், எச்சிலுக்கும் தடையாகி, ஜீரணத்தை கெடுக்கும். வாயில் நடக்கும் ஜீரணத்திற்கு, காற்று எதிரி.
அமெரிக்கா, ஐரோப்பாவில் உள்ள இங்கிலாந்து, இத்தாலி போன்ற நாடுகளில், சர்க்கரை நோயாளிகள் மிகவும் குறைவு. ஏனென்றால், இங்குள்ளவர்கள், உதட்டை மூடி சாப்பிடுவர்.
உதட்டை மூடி சாப்பிட துவங்கும் போது, ஒரு வாரத்திற்கு, தாடை வலிக்கும். புதுப் பழக்கம் என்பதால் இது நடக்கும்!
வலியை தாங்கி, பொறுமை காத்தால், வாழ்க்கை ஆரோக்கியமாக இருக்கும்.

முன்னோர் சொல்லி வைத்த உண்மைகள் thanks to dinamalar.com

முன்னோர் சொல்லி வைத்த உண்மைகள்

எழுத்தின் அளவு:

Advertisement

பதிவு செய்த நாள்

13ஜன
2019 
00:00

சித்திரை 1, ஆடி 1, ஐப்பசி 1 மற்றும் தை 1... இவற்றை எல்லாம் விழாவாக கொண்டாடுவது, ஏதோ ஒரு சடங்கு, பழக்கம் என, நினைத்து கொண்டுள்ளோம். ஆனால், இதற்குள் மிகப்பெரிய அறிவியலை வைத்துள்ளனர், நம் முன்னோர்.
'சூரியன் உதிக்கும் திசை கிழக்கு...'ன்னு, சிறு பிள்ளைகளுக்கு சொல்லித் தர்றோம். என்றாவது ஒரு அளவை வைத்து சூரியன் உதிக்கிறபோது, சோதித்து இருக்கிறோமா என்றால், கண்டிப்பாக இல்லை.
நம் அறிவியலை அழித்து, முட்டாள்தனமான கல்வியை, வெள்ளையர்கள் புகுத்தி விட்டனர் என்பதற்கு, இதுவும் ஒரு சான்று. ஆம்... சூரியன், ஒரு குறிப்பிட்ட நாளில் மட்டுமே, சரியாக கிழக்கே உதிக்கும். பின், கொஞ்சம் கொஞ்சமாக வடகிழக்கு நோக்கி நகர்ந்து, ஒரு குறிப்பிட்ட புள்ளியில் நின்று, மறுபடியும் தெற்கு நோக்கி திரும்பும். அதன்பின், மறுபடியும் ஒருநாள், கிழக்கே உதிக்கும். அப்புறம் தென் கிழக்கு நோக்கி நகரும்.
கிழக்கில் ஆரம்பித்து, வடகிழக்கு, தென் கிழக்குன்னு போய், மறுபடியும் கிழக்குக்கு வர ஆகிற நேரம், சரியாக ஒரு ஆண்டு.
சரி... இதுக்கும், தமிழ் மாதத்திற்கும் என்ன சம்பந்தம்?
சூரியன் தன் பயணத்தை, கிழக்கில் ஆரம்பிக்கும் நாள் தான், சித்திரை 1 - தமிழ் புத்தாண்டு. அப்புறம் சரியாக வடகிழக்கு புள்ளி தான், ஆடி 1 - ஆடி பிறப்பு. மறுபடியும் கிழக்கு நோக்கி வரும்போது, ஐப்பசி 1 - தீபாவளி. மீண்டும் சரியாக தென் கிழக்கு, தை 1 - பொங்கல்.
வானியல் மாற்றங்களையும், அதை சார்ந்த பருவ கால மாற்றங்களையும் நன்கு உணர்ந்திருந்த நம் முன்னோர், இவற்றை அனைவரும் அறியும் வகையில் தான், திருவிழாவாக கொண்டாடினர்.
அடுத்த தலைமுறைக்கு, நம் பாரம்பரியத்தை வெறும் சடங்காக மட்டும் அல்லாமல், அதில் மறைந்துள்ள அறிவியலையும் எடுத்து சேர்ப்போம்.
ஏ.எஸ்.கோவிந்தராஜன்

Saturday, January 5, 2019

வாழ்க்கை வசமாக.. thanks to dinamalar.com

எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

06ஜன
2019 
00:00
இனிக்கும் உறவுகள் என்றும் தொடர...
புத்தாண்டு பிறந்து விட்டது. நம்முடைய குறைகளை களைந்து, சந்தோஷமாக வாழ விரும்புகிறீர்களா...
இதோ சில டிப்ஸ்:* ஒருவரின் வீட்டுக்குள் நுழைந்தவுடன், 'இது சொந்த வீடா... வாடகை வீடா... வாடகை எவ்வளவு...' என கேட்காதீர்... அவர்களின் பொருளாதார நிலையை அறிய, வீட்டை, கண்களால் ஆராயாதீர்* நீங்க முதலியாரா, கவுண்டரா, கிறிஸ்தவரா என்று கேட்டு சங்கடப்படுத்தாதீர்* காபியோ, டீயோ கொடுத்து உபசரித்தால், 'கொடுங்கள்...' என, அன்போடு கேட்டு, அருந்துங்கள் அல்லது மோரோ, குளிர் பானமோ கொடுப்பதை மனம் குளிர்ந்து அருந்துங்கள். 'இப்பதானே காபி சாப்பிட்டு வந்தேன்...' என்று அலட்சியப்படுத்தாதீர்* அழைப்பிதழ் கொடுக்க வரும்போது, அவர்களிடமே பெயர் கேட்டு எழுதாதீர்* வீட்டிற்கு வந்தவர், 'வருகிறேன்...' என்று சொல்லி, வெளியே சென்று தெருவில் நடக்கும் வரை அல்லது வாகனம் எடுக்கும் வரை, அவர்களுடன் இருங்கள். மாறாக, கேட்டையோ, கதவையோ உடனே மூடாதீர்* 'உங்க மனைவி, ஏன் வேலைக்கு போறாங்க - போகலை...' என்று ஆராய்ச்சி கேள்வி கேட்காதீர்* ஒருவரது வீட்டுக்கு சாப்பாட்டு நேரத்தில் செல்லும் போது, 'சாப்பிடுறீங்களா...' என்று கேட்கும் வீட்டில், தண்ணீர் கூட குடிக்காதீர். மாறாக, 'சாப்பிடுங்க...' என்று சொல்கிற வீட்டில் நிச்சயம் சாப்பிடுங்க* 'பையன் அல்லது பொண்ணு என்ன பண்றா...' என்று கேட்காதீர். உங்கள் பையன் அல்லது பொண்ணு என்ன படிக்கின்றனர், எங்கு வேலை செய்கின்றனர் என்று சொல்லுங்கள். கேட்பவருக்கு பிடித்திருந்தால் சொல்லட்டும்; வற்புறுத்தாதீர்* 'ப்ரெண்டா பேசறேன், உரிமையில் பேசறேன்...' என, பொதுவில் அவர்களுக்கோ, அவர்களின் பிள்ளைகளுக்கோ, 'அட்வைஸ்' செய்யாதீர்* 'உங்களுக்கு என்ன குறைச்சல்... இரண்டு பேரு சம்பளம்... பையன், கை நிறைய சம்பாதிக்கிறான்...' -இப்படி சொல்பவர், நினைக்கிறவர்களிடம் கொஞ்சம் தள்ளியே நில்லுங்கள் அல்லது உறவுகளை விட்டு விலகி விடுங்கள்* வந்த இடத்தில், உங்கள் புத்திசாலிதனத்தை காட்டாமல், அன்பை காட்டுங்கள். நீங்கள், எங்கெல்லாம் வீடு அல்லது மனை வாங்கி வைத்துள்ளீரோ, அதை பட்டியலிடாதீர். அது, அவர் மனைவிக்கு, மிகுந்த தர்மசங்கடத்தை உருவாக்கும்* வீட்டிற்கு வருவோரிடம் பிள்ளைகளை அறிமுகப்படுத்தி, அவர் எந்த வகையில் உறவினர் அல்லது நண்பர் என்று, பிள்ளைகள் மூலம் உங்கள் உறவுகளுக்கு பாலம் அமையுங்கள்* வீட்டுக்கு வந்தவர்களிடம், கணவனை அல்லது மனைவியை விட்டுக் கொடுக்காமல் பேசுகிறேன் என்று தற்பெருமை, தம்பட்டம் அடிக்காதீர். அதேபோல், கணவன் அல்லது மனைவி பற்றியோ, விளையாட்டுக்கு சொல்கிறேன் என, கிண்டலடிக்காதீர்* உங்களின் சொந்த மற்றும் குடும்ப விஷயங்களை, ஒன்றிரண்டு நண்பர்களுடன் மட்டுமே பகிர்ந்து, மற்ற நண்பர்களிடம் நாசூக்காகவும், இயல்பாகவும் பழக கற்றுக்கொள்ளுங்கள்* உங்களுக்கு எதெல்லாம் தர்ம சங்கடத்தை உருவாக்குமோ, அதை பிறரிடம், பலர் முன் கேட்காதீர்; பேசாதீர்* தேவையான செய்தி, உங்களுக்கு வந்து சேரும் அல்லது நீங்கள் தகுதியான நபர் என்றால், உங்கள் காதுகளில் அந்த செய்தி, 'பர்சனலாக' கொடுக்கப்படும். உறவுகளை புதுப்பித்துக் கொள்ள முடிவு செய்து விட்டீர்களா! - ஜோ.ஜெயக்குமார்