Wednesday, January 31, 2018

அதி உணவு ஆபத்து... உண்டி சுருங்குதல் அனைவருக்கும் அவசியம்..! ஏன்? thanks to vikatan.com

அதி உணவு ஆபத்து... உண்டி சுருங்குதல் அனைவருக்கும் அவசியம்..! ஏன்?


ழைத்துக் களைத்துப் போகிறவர்கள் ஒரு ரகம். அண்மைக் காலமாக, `சாப்பிட்டே களைத்துப் போகிறவர்கள்’ என்று ஒரு ரகம் உருவாகியிருக்கிறது. நாம் சாப்பிடுவது நம் உடலுக்கு ஆற்றலையும் உற்சாகத்தையும் கொடுப்பதற்காகத்தான். ஆனால், சோர்வடையும் அளவுக்கு வரைமுறையின்றி அதிகளவில் சாப்பிடுகிறார்கள் சிலர். அளவுக்கு மீறி சாப்பிடுபவர்களுக்கு, ஆரோக்கியமற்ற உடல் பருமனோடு சேர்த்து பல்வேறு நோய்கள் அன்பளிப்பாகக் கிடைக்க நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. அதிகரித்துவரும் ‘பார்ட்டி கலாசாரத்தால்’ ஒரே வேளையில் அதிக உணவுகளையும், கலோரிகள் நிறைந்த உணவுகளையும் பெருநகரங்களில் உள்ள பலர் உட்கொள்வதாக ஓர் ஆராய்ச்சியில் தெரியவந்திருக்கிறது. அதி உணவு என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தும்... பார்க்கலாமா?  
உணவு
நோய் நிலைகளில் அதி உணவு:
சில மரபு சார்ந்த நோய்கள், தலையில் அடிபடுதல், சர்க்கரைநோய், ஹைப்பர்தைராய்டு (Hyperthyroid), மனஅழுத்தம், மனச்சோர்வு, பிங் ஈட்டிங் டிஸ்ஆர்டர் (Binge eating disorder), சில வகையான மருந்துகள் போன்றவற்றின் காரணமாக அதிகப்பசி ஏற்படலாம். சில காரணங்களால் அதிகப்பசி (Polyphagia) எனும் குறைபாடு ஏற்படுவது இயல்பு. சில அடிப்படை சிகிச்சைகளை மேற்கொண்டாலே இவற்றைச் சரிசெய்துவிடலாம். ஆனால், ருசிக்கு அடிமையாகி, உணவின் நுணுக்கங்களைப் பற்றித் தெரியாமல், எந்த நோய் நிலையும் இல்லாமல், அதிகளவில் உணவை உட்கொள்வதுதான் நவீன சமூகத்தின் நோயாக உருப்பெற்றிருக்கிறது. ருசிக்கு கட்டுப்பட்டதால்தான் இப்போது பல இன்னல்களுக்கும் ஆளாகிறோம். 
`மீதூண் விரும்பேல்!’
பல நூற்றாண்டுகளுக்கு முன்னர், உணவியல் நுணுக்கங்களை அறிந்திருந்த நமது முன்னோர்களுக்கே, அதிக உணவின் தீமைகளை எடுத்துரைக்கும்விதமாக `மீதூண் விரும்பேல்’ என்று பிரசாரம் செய்தார் ஒளவைப் பாட்டி. நம் உணவியல் நுணுக்கங்களையெல்லாம் மறந்துவிட்ட நவீன தலைமுறைக்கு என்ன சொல்லி பிரசாரம் செய்வது? ’அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு’ எனும் நெறிமொழி, வாழ்வியலைவிட, உணவியலுக்கு மிகவும் பொருத்தமானது. அளவுக்கு மீறிய உணவுகள்தான் நோய்களின் ரூபத்தில் நஞ்சைக் கக்கிக்கொண்டிருக்கின்றன. 
அதி உணவு
’உண்டி சுருங்குதற் மானிடர்க்கு அழகு!’
’உண்டி சுருங்குதல் பெண்டிற்கு அழகு என்பது தவறு... எல்லோருக்குமே அது அழகு. `உண்டி சுருங்குதல் பண்டிக்கு (வயிற்றுக்கு) அழகு’ என்றொரு கருத்தும் இருக்கிறது. எது எப்படியோ உணவை அளவோடு உட்கொண்டால், இடுப்பைச் சுற்றித் தேவையற்ற சதை வளர்ச்சி இருப்பதற்கு வாய்ப்பே இல்லை. சமீப காலமாக உயரத்துக்கேற்ற எடையைப் பொறுத்தே (Body Mass Index), உடல் பருமனின் தீவிரம் நிர்ணயிக்கப்படுகிறது. உணவின் அளவை முறைப்படுத்திக்கொண்டால் உயரத்துக்கேற்ற எடையோடு நடைபோடலாம். ஆண்களானாலும் சரி, பெண்களானாலும் சரி... அளவான உணவைச் சாப்பிடுவது முறையானது.
அனைத்து உறுப்புகளுக்கும் ஓவர் டைம்!
சாப்பிட்ட அதிக உணவிலிருந்து கிடைக்கும் குளூக்கோஸை ஈடுசெய்ய, கணையத்திலிருந்து (Pancreas) வழக்கத்தைவிட அதிகளவில் இன்சுலின் சுரக்கும். அதிகமாகச் சாப்பிடுவதால், செரிமானத்துக்காக இயங்கும் உறுப்புகளும் தங்கள் சக்திக்கு மீறி உழைக்கவேண்டிய நிர்பந்தத்துக்குத் தள்ளப்படுகின்றன. எப்போதாவது அதிகளவில் சாப்பிட்டால், வயிறு உப்புசம், உணவு எதுக்களித்தல், மந்தம் போன்ற அறிகுறிகள் தோன்றும். தொடர்ந்து பல நாள்கள் அதிஉணவில் திளைத்தால், நோய்களின் ராஜாங்கம் தொடங்கிவிடும். உடல் பருமனைத் தொடர்ந்து உயர் ரத்த அழுத்தம், சர்க்கரைநோய், பித்தப்பைக் கற்கள், இதயநோய்கள், மனச்சோர்வு போன்றவை வருவதற்கான வாய்ப்புகள் அதிகமிருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வயிற்றறை விரிவடையும் தன்மை உடையது (Rugae அமைப்பின் காரணமாக). அதற்காக அதன் விரிவடையும் திறனைச் சோதித்துப் பார்க்கும் அளவுக்கு சாப்பிடுவதென்பது உடல்நலத்துக்கு உகந்ததல்ல. 
சர்க்கரை நோய்
பள்ளித் தொப்பை:
பள்ளி மாணவர்கள் ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளைத் தவிர்த்துவிட்டு, கொஞ்சம்கூட சாரமே இல்லாத துரித உணவுகளை அளவுக்கு மீறி உட்கொள்கிறார்கள். இதன் காரணமாக பள்ளிப் பருவத்திலேயே தொப்பைகளைச் சுமந்துகொண்டு, அதன் தொடர்ச்சியாக தொற்றாத நோய்களான சர்க்கரைநோய், உயர் ரத்த அழுத்தம் போன்றவற்றுக்கு அடிமையாகிறார்கள். ஓடி, ஆடி விளையாடவேண்டிய பள்ளிப்பருவத்தில் விளையாடாமல், தொலைக்காட்சியின் முன்பும், கம்ப்யூட்டரின் முன்பும் அமர்ந்தநிலையிலேயே அதிக நேரத்தைச் செலவிடுவதால், அதிக கலோரிகள் கரைவதற்கும் வாய்ப்பில்லாமல் போய்விடுகிறது. விளம்பரங்களில் வரும் குழந்தைகளைப்போல கொழு கொழுவென்று இருந்தால்தான் ஆரோக்கியம் என்று எண்ணி, தேவையற்ற உணவுப் பொருள்களை அளவுக்கு மீறிக் கொடுப்பதும் இள வயதில் உடல் பருமன் ஏற்படுவதற்கு மிக முக்கியக் காரணம்.
காத்திருந்த நாள்கள்:
வருடத்துக்கு சில நாள்களில் மட்டும் நடைபெற்ற திருவிழாக்களில் பரிமாறப்படும் நெல்லரிசி உணவுக்காகவோ, அசைவ உணவுக்காகவோ, இடுப்பில் கட்டிய வேட்டியை இளக்கிக்கொண்டு ஆசைதீர அதிகமாகச் சாப்பிட்டு, பின்னர் அதற்கேற்ற உழைப்பைக் கொடுத்து, அதி உணவை ஈட்டுகட்டினார்கள் முந்தைய தலைமுறையினர். ஆனால் சுவைக்கு அடிமையாகி, உணவை அதிகளவில் உட்செலுத்துவதற்காக, உணவு உண்ணும் ஒவ்வொரு பொழுதிலும் இடுப்புப் பட்டையை (Belt) இளக்கிவிட்டு, பின் அசையாமல் கம்ப்யூட்டரின் முன்னே அடைக்கலம் அடையும் இன்றைய தலைமுறையில்தான் அதி உணவின் பாதிப்புகள் தெரியத் தொடங்கியிருக்கின்றன. 
விழாக்கால உணவு
ஆசையைத் தூண்டும் உணவகங்கள்:
உணவகங்களுக்குச் சென்று அளவுச் சாப்பாட்டை தவிர்த்துவிட்டு (லிமிட்டெட் மீல்ஸ்), அன்லிமிடெட் மீல்ஸ்சை முழுக்கட்டு கட்டிவிட்டு, மூச்சுவிடுவதற்கு சிரமப்படும் மனிதர்களை நாம் அன்றாடம் பார்க்கலாம். லிமிடெட் மீல்ஸ் ஆர்டர் செய்து சாப்பிட்டால், ஏதோ கெளரவக் குறைச்சலாகப் பார்க்கும் நிலை இன்று. அதிலும் சில உணவகங்கள் தங்கள் வியாபாரத்தைப் பெருக்க, `அனைத்து வகையான அசைவ உணவுகளையும் சாப்பிடலாம், விலையோ மிகக் குறைவு’ என்ற ரீதியில் நம்மை சுவைக்கு அடிமையாக்க விளம்பரங்களின் மூலம் சுண்டி இழுக்கின்றன. சுவைக்கு அடிமையாகி, அடிக்கடி ஒரே வேளையில் அதிகளவில் சாப்பிடும்போது, உணவகங்களில் வியாபாரமும் அதிகரிக்கும், சாப்பிட்ட நமக்கு தொந்தரவுகளும் பெருகும். இந்தியப் பெருநகரங்களில், உணவுக்கு இடையில் சாப்பிடப்படும் நொறுக்குத்தீனிகள், ஒரு வேளை முழு உணவு கொடுக்கும் கலோரிகளைவிட, அதிக அளவில் கலோரிகள் கொடுக்கின்றனவாம்! அப்புறம் என்ன... பூதாகரமாகக் காட்சியளிக்கும் உடலைக் குறைக்க முடியாமல் அவதிப்படும் சூழல்தான். 
குறள் சொல்லும் உண்மை:
`தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின்
நோயள வின்றிப் படும்…’ என்று அதிகமாகச் சாப்பிடுவதால் பல்வேறு நோய்கள் உண்டாகுமென்று குறள் உணர்த்தியது பல்வேறு நூற்றாண்டுகளுக்கு முன்னர். `இரைப்பையில் உருவாகும் பசித்தீயை உணர்ந்து, உணவின் அளவை அமைத்துக்கொள்ள வேண்டும்’ என்று திருவள்ளுவர் வலியுறுத்துகிறார். ’பசித்தீ’ என்று அவர் குறிப்பிடுவது, செரிமானச் சுரப்பிகளின் அளவீடு மற்றும் மூளையில் உண்டாகும் பசியுணர்வின் செயல்பாடு! 
மன அழுத்தம்
செரிவூக்கி மருந்துகள்:
தொலைக்காட்சியில் வரும் ஒரு விளம்பரம்… ’அதிக உணவுகளை ஒரே நேரத்தில் நீங்கள் சாப்பிடும்போது, எங்களது ’செரிவூக்கி சுரப்பு’ (Synthetic Digestive enzymes) மாத்திரையைப் பயன்படுத்துங்கள்… அதி உணவின் காரணமாக செரிமானத் தொந்தரவுகள் ஏற்படாது.’ என்ற வகையில் ஒளிபரப்பாகிறது. தவற்றைத் திருத்திக்கொள்ளச் சொல்லாமல், `தவறு செய்யுங்கள், அதற்கான வழிவகைகளையும் நாங்களே சொல்கிறோம்’ என்ற வகையில் இருப்பது எவ்வளவு கேவலம். செரிமானப் பகுதியில் இயற்கையாகச் சுரந்துகொண்டிருக்கும் செரிவூக்கிச் சுரப்புகளுக்குப் பதிலாக எதற்காகச் செயற்கை செரிவூக்கிகள்? சிந்திப்போம்!
சோமாலியா
உணவு முரண்:
ஒரு மூலையில் உணவில்லாமல் அவதிப்படும் வறுமைநிலையில் இருப்பவர்களுக்கு, சத்துகளும் ஊட்டமும் கிடைக்காமல், உடல் நலிந்து ஆரோக்கியம் பெருமளவில் பாதிக்கப்படுகிறது. மறு மூலையில் அளவுக்கு மீறி அதிக உணவை உட்கொள்பவர்களுக்கு, ஆரோக்கியம் சீர்கெட்டு பல்வேறு நவீன நோய்கள் உண்டாகின்றன. எவ்வளவு உணவு முரண்? 
சுவையாக இருக்கிறது என்பதற்காக அதிகமாகச் சாப்பிடுவது தவறு. பேசிக்கொண்டும் தொலைக்காட்சியில் தீவிரமாக மூழ்கியபடியும் சாப்பிடுபவர்களுக்கு, உணவின் அளவைப் பற்றித் தெரிய வாய்ப்பில்லை. பசித்தீ மந்தப்பட்டு, செரியாமை தலை தூக்கும். தொடர் சங்கிலியாக நோய்களின் தாக்கத்தால் உடல் பலவீனமாகும். உடல் இயற்கையாக வெளிப்படுத்தும் பசியுணர்வின் தூண்டுதலுக்கு ஏற்ப உணவின் அளவை அமைத்துக்கொள்வதுதான் சிறப்பு. இன்றைய காலகட்டத்துக்குப் பொருத்தமானது ஒளவையின் அசரீரி… மீதூண் விரும்பேல்!

Friday, January 26, 2018


Advertisement
 சொல்கிறார்கள்
பூச்சி தாக்குதலே இருக்காது!
பாரம்பரிய நெல் குறித்து கூறும், புதுக்கோட்டை இயற்கை விவசாய உற்பத்தியாளர் கம்பெனி இயக்குனர்களில் ஒருவரான ஆதப்பன்: நம்மாழ்வார் தான், எனக்கு பாரம்பரிய நெல் வகைகளை அறிமுகப்படுத்தினார்.திருத்துறைப்பூண்டி ஆதிரெங்கத்தில் நடக்கும் நெல் திருவிழாவில், நெல் ஜெயராமனிடம் விதைகள் வாங்கி, முதலில் இங்கு விவசாயம் செய்தோம். அதன்பின் இங்கேயே பல விவசாயிகளிடம் பாரம்பரிய நெல் விதைகள் இருந்தன. அதை தேடிக் கண்டுபிடித்து, மற்ற விவசாயிகளுக்கும் கொடுத்து பயிரிடச்
சொல்லி, பரப்பி வருகிறோம்.இந்த ஆண்டு, 35 வகையான பாரம்பரிய நெல் ரகங்களை, 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் பயிரிட்டிருந்தனர். இந்த ஆண்டும் எங்கள் பகுதிகளில் போதுமான அளவு மழை இல்லை. அதனால், சாதாரண ரகங்களை பயிரிட்டிருந்த விவசாயிகளின் வயல்கள் அனைத்தும் கருகி கிடந்தன.
ஆனால், அந்த கடுமையான சூழலையும், பாரம்பரிய நெல் வகைகள் தாக்குப்பிடித்து நிமிர்ந்து நின்றன. காரணம், அனைத்துமே குறைவான தண்ணீரில், நிறைவான லாபம் தரக்கூடிய நெல் ரகங்கள்.சிலருடன் ஆரம்பித்த எங்கள் பயணம், இன்று பல நுாறு விவசாயிகளிடம் சென்றிருக்கிறது. புதுக்கோட்டையில் மட்டும் எங்கள் விவசாயிகள், 300 ஏக்கருக்கும் மேல் பயிர் செய்து, நல்ல லாபத்துடன் அறுவடைசெய்திருக்கின்றனர்.பாரம்பரிய நெல் வகைகள் பொதுவாக வறட்சியையும், வெள்ளத்தையும் தாங்கக் கூடியன. அதனால், இவ்வகைகளை தொடர்ந்து பயிரிடும் போது, மண்ணின் உயிர்த்தன்மை அதிகரிக்கிறது.இதற்கு உரங்கள் இட வேண்டிய செலவும் இல்லை. இந்த ரகங்கள் அனைத்துமே, 3 முதல், 6 அடி வரை வளரக்கூடியது. அதனால், வைக்கோலும் அதிகம் கிடைக்கும். இந்த ரகங்களில், பூச்சித் தாக்குதலே இருக்காது.மேலும், ஒவ்வொரு ரகத்துக்கும், ஒரு சிறப்பான மருத்துவ குணம் உள்ளது. மாப்பிள்ளை சம்பா, நரம்புகள் சம்பந்தமான பிரச்னைக்கு நல்லது; பூங்கார், கருவுற்ற பெண்களுக்கு நல்லது; சண்டிகார் அரிசி, அதீத சுறுசுறுப்பை கொடுக்கும். பால்குடவாலை, பாலுாட்டும் தாய்மார்களுக்கு உதவும்.கருங்குறுவை அரிசியை, இந்தியன் வயாகரா என்கின்றனர். காலாநமக் அரிசி, அறிவுக்கூர்மைக்கு உதவும். குடவாழை அரிசி, குடல் நோய்களை தீர்க்கும். இதுபோல் ஒவ்வொரு அரிசியும், ஒரு மருந்தாக உள்ளது.நம் பாரம்பரிய நெல் ரகங்கள் எப்படி நீரை சேமிக்கின்றன; மண் வளத்தை கூட்டுகின்றன; மருத்துவ குணத்தை கொண்டுள்ளன என்பதை எல்லாம், நபார்டு உதவியுடன் ஆராய்ச்சி செய்து, ஆதாரபூர்வமாக கண்டறிந்துள்ளோம். அனைவரும் இதுபோன்ற பாரம்பரிய ரகங்களை பயிரிட்டு, பயனடைய வேண்டும்.

Sunday, January 21, 2018

காலை உணவு - டாக்டர் எஸ்.டி.வெங்கடேஷ்வரன்

நன்றி: தினமலர்


Advertisement
அடை சாப்பிட்டால் தொப்பைக்கு 'குட்பை'

காலை உணவு குறித்து கூறும், டாக்டர் எஸ்.டி.வெங்கடேஷ்வரன்: காலையில் எழுந்ததும், டீ மற்றும் காபிக்கு பதிலாக, சுக்கு மல்லி காபி குடிக்கலாம். காலை உணவே நம் உடலை காக்கும். நாள் முழுக்க இயங்க வேண்டுமெனில், காலை உணவை தவிர்க்கக் கூடாது.
டிபனோ அல்லது சாப்பாடோ, காலை உணவில் கண்டிப்பாக, தற்போது விற்கப்படும் பட்டை தீட்டப்பட்ட அரிசி, மைதா, பிரெட், ஓட்ஸ், கார்ன்பிளேக்ஸ், கஞ்சி உள்ளிட்டவற்றை தவிர்த்து, தினமும் சிறுதானியத்தை சமைத்து சாப்பிட வேண்டும்.நம்மில் பலரும், அடை என்ற உணவை மறந்தே விட்டோம். உயர் தரமான புரோட்டீனும், உடலுக்கு தேவையான, 'அமினோ ஆசிட்'டும் இதில் உள்ளது. அடையில், அதிகப்படியான பருப்பு வகைகளுடன், முருங்கை கீரை, வெங்காயம் மற்றும் காய்கறிகளும் சேர்க்கப்படுகின்றன.என்றும் இளமையாக இருக்க, சர்க்கரையை கட்டுக்குள் வைக்க, தொப்பை போடக் கூடாது என்பவர்களுக்கு, மிகச்சிறந்த உணவு அடை.சாதாரண அரிசியில் செய்யப்பட்ட இட்லி, இடியாப்பம், கஞ்சி போன்ற உணவுகள், சர்க்கரையை உடனே அதிகரித்து விடும்; எளிதாக செரிப்பதால், பசித்து, எதையாவது சாப்பிட்டபடியே இருப்போம். இதன் விளைவால் தான் தொப்பை ஏற்படுகிறது. ஆனால், சிறுதானியங்களில் நார்ச்சத்து இருப்பதால், சர்க்கரை உடனே அதிகரிக்காது.காலை டிபனுக்கு, கொத்துமல்லி, கேரட், கறிவேப்பிலை துவையல் மற்றும் வெங்காயம், வேர்க்கடலை, புதினா சட்னி என, தினமும் ஒன்றை செய்து சாப்பிடலாம்.காலை உணவில், புரதச்சத்து மிக முக்கியம். அதுவும், கார்போ ஹைட்ரேட்டுடன், புரதம் சேர்த்து சாப்பிடுவது மிக மிக நல்லது. அதனால் தான், இட்லி, தோசை, சாதம் இவற்றுடன், சாம்பார் செய்து சாப்பிடுகிறோம்.காலை உணவு முடித்து, இரண்டரை மணி நேரத்திற்கு பின், பழங்கள் சாப்பிடலாம். அந்தந்த சீசனில் கிடைக்கும் நம்மூர் பழங்களை சாப்பிடலாம்; அதே சமயம், ஜூஸ் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.பச்சை காய்கறிகளையும் துண்டுகளாக்கி சாப்பிடலாம். காய்கறியோ, பழங்களோ சாப்பிடும் போது, தண்ணீர் குடிக்கக் கூடாது; 20 நிமிட இடைவெளி விடுவதே நல்லது.இவ்வாறு, காலை உணவை சாப்பிடும் போது, நம் உடலில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்; மூப்பை தவிர்க்கலாம். 'ஆன்டி ஆக்சிடன்ட்ஸ்' கிடைக்கும்.முக்கிய விஷயம், காலை உணவை, வயிறு முட்ட சாப்பிடாமல், முக்கால் பாகம் மட்டும் சாப்பிட வேண்டும்.இந்த அளவை விட, மதிய சாப்பாட்டின் அளவு இன்னும் குறைவாகவும், அதை விட, இரவு குறைவாகவும் சாப்பிடலாம்.

Friday, January 19, 2018

குழந்தைகளை எப்போதெல்லாம் கட்டியணைத்திருக்கிறீர்கள்?! thanks to vikatan.com

குழந்தைகளை எப்போதெல்லாம் கட்டியணைத்திருக்கிறீர்கள்?!

உங்கள் குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமா? அவர்கள் மனதில் எப்போதும் உற்சாகம் ஊஞ்சலாட வேண்டுமா? அவர்கள் மிகுந்த புத்திசாலிகளாக இருக்க வேண்டுமா? 
மேலே சொன்னவற்றை விரும்பாத பெற்றோர்கள் இருக்கிறார்களா? அப்படியென்றால், நம்ம உலக நாயகனின் கட்டிப்பிடி வைத்தியத்தை ஃபாலோ செய்வதுதான் சிறந்த வழி என்கிறார்கள் உளவியல் ஆலோசகர்கள். 
கிட்ஸ்
சமையல் லேட்டாகுது; பஸ்ஸை விட்டுவிடுவோமோ; டிரெயினை மிஸ் பண்ணிடுவோமோ என்கிற காலை நேரத்துக்கான பல பிரச்னைகள் நமக்கு இருக்கும். இந்தச் சமயத்தில் பிள்ளைகள் உறக்கத்திலிருந்து எழ மறுத்து அடம்பிடிக்கும். நம் மொத்த கோபத்தையும் அதன் முதுகில் காட்டிவிடுவோம். காலையில் கண் விழிக்கும்போதே, அந்தக் குழந்தை கண் கலங்கியிருப்பது நல்லதா? இதற்குப் பதில், 'கண்ணம்மா' என்றோ, 'தங்கப்பா' என்றோ கொஞ்சி அணைத்தவாறு எழுப்பிப் பாருங்கள். உங்கள் குழந்தையின் நாள் மட்டுமின்றி, உங்கள் நாளும் இனிமையாகத் தொடங்கும். 
பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்த... 
ஒரு குழந்தை பிறந்ததும் தாயின் நெஞ்சுமீது படுக்கவைப்பது வெளிநாடுகளில் பல காலமாகக் கடைப்பிடிக்கப்படும் விஷயம். இந்த வழக்கம் தற்போது நம் நாட்டிலும் ஆங்காங்கே பின்பற்றப்படுகிறது. அம்மாவின் வயிற்றிலிருந்து பிரிந்து முதல்முதலாக வெளியுலகுக்கு வரும் குழந்தையை இப்படிச் செய்வதால் கிடைக்கும் நெஞ்சு சூடும் கையணைப்பும் அந்தப் பிஞ்சு பாப்பாவுக்கு உலகின் மிகப்பெரிய பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தும். இந்த டெக்னிக்கை குழந்தைகள் வளர்ந்த பிறகும் செயல்படுத்தலாம். உங்கள் வீட்டுப் பொடிசுகளை நேரம் கிடைக்கும்போதெல்லாம் அணைத்துப் பாருங்கள். எது நடந்தாலும் நம் அம்மா, அப்பா இருக்கிறார்கள் என்கிற பாதுகாப்பு உணர்வும் மனதைரியமும் குழந்தைகளுக்கு உண்டாகும்.
குழந்தை
சந்தோஷம் தரும்! 
உங்கள் குட்டீஸை அணைக்கும்போது அவர்களுக்குள் மகிழ்ச்சியைத் தரும் ஹார்மோன்கள் சுரக்க ஆரம்பிக்கும். மகிழ்ச்சியாக இருக்கிற குழந்தைகள், உலகின் எல்லா விஷயங்களையும் பாசிட்டிவாகவே அணுகுவார்கள். இந்த பாசிட்டிவ் அணுகுமுறையே, அவர்களை வெற்றியாளர்களாக மாற்றும் மந்திரம் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ? 
ஸ்டிரெஸ் போகும்! 
ஒன்றாம் வகுப்பு, இரண்டாம் வகுப்பு படிக்கும் குழந்தைகளுக்கும் ஹோம் வொர்க், டியூஷன், டே கேர், வேலை முடிந்து லேட்டாக வரும் அம்மா, கேட்ட டாய்ஸை வாங்கித் தராத அப்பா என்று நிறைய மன அழுத்தங்கள் உண்டு. இவை நமக்குச் சாதாரணமாக தெரியலாம். ஆனால், குழந்தைகளுக்கு ரொம்ம்ம்ம்ப பெருசு. ஸோ, பிள்ளைகள் ஸ்கூல் முடிந்து வீட்டுக்கு வந்தவுடன்... டியூஷன் முடிந்து வந்தவுடன்... நீங்கள் ஆஃபீஸிலிருந்து வீட்டுக்குப் போனவுடன்... டே கேரிலிருந்து பிள்ளையை பிக்அப் பண்ணும்போது... பிள்ளைகள் சோர்வாகவோ, ஸ்டிரெஸ்ஸாகவோ இருந்தால், இறுக அணைத்து கன்னத்துடன் கன்னம்வைத்து அன்பைத் தெரியப்படுத்துங்கள். வார்த்தைகளே இல்லாத இந்த அன்பு, குழந்தைகளின் ஸ்டிரெஸ்ஸை விரட்டிவிடும்
தன்னம்பிக்கை அதிகரிக்கும்! 
சாதாரண கிளாஸ் டெஸ்ட்டில் உங்கள் பிள்ளை ஸ்டார் வாங்கியிருந்தாலும் அணைத்துப் பாராட்டினீர்கள் என்றால், அவர்களின் தன்னம்பிக்கையும் சுயமரியாதையும் அதிகரிக்கும். 
பெற்றோர்
இடைவெளி குறையும்! 
சின்ன வயதிலிருந்தே பிள்ளைகள் பெற்றோரிடம் பர்சனல் விஷயங்களைப் பகிர்ந்துகொண்டால் போதும். டீன்ஏஜ் பிரச்னைகள் முக்கால்வாசி வரவே வராது. இதற்கு, பிள்ளைகள் சிறியவர்களாக இருக்கும்போதே அவர்களின் மகிழ்ச்சியின்போது அணைத்து, முதுகைத் தட்டிக்கொடுக்க வேண்டும். கஷ்டத்தின்போதும் அணைத்து முதுகைத் தடவிக்கொடுக்க வேண்டும். இவை போதும், பிள்ளைகளுக்கும் உங்களுக்குமான இடைவெளியைத் துரத்துவிடும். 
இனிமையான தூக்கத்துக்கு... 
ஐந்து அல்லது ஆறு வயது வரை சில குழந்தைகள், தாங்கள் கண்ட கார்ட்டூன் விலங்குகளைக் கனவில் கண்டு பயப்படுவார்கள். எனவே, அம்மா/ அப்பா அவர்களை அணைத்தபடி தூங்கவைக்கவும். கெட்ட கனவு பயத்திலிருந்து படிப்படியாக விடுபடுவார்கள்.
எந்தச் சமயத்தில் பிள்ளைகளை அணைக்கவே கூடாது?குழந்தைகளின் தப்பை கண்டுபிடித்துத் தண்டிக்கும் அல்லது கண்டிக்கும்போது அவர்கள் அழத்தான் செய்வார்கள். இந்தச் சமயத்தில் அவர்களை அணைத்துச் சமாதானப்படுத்தாதீர்கள். அதை தங்களுக்குச் சாதகமாக மாற்றுவார்கள். அம்மா/அப்பாதான் தப்பு செய்துவிட்டார்கள், அதனால்தான் நம்மை ஹக் செய்கிறார்கள் என நினைத்துக்கொள்வார்கள். ஸோ, இதுபோன்ற சமயத்தில் மட்டும் நோ ஹக்கிங்

Tuesday, January 16, 2018

காலை எழுந்ததும் என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது? thanks to vikatan.com

காலை எழுந்ததும் என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது?


காலையில் வெகுநேரம் உறங்கி விட்டு அவசர அவசரமாக எழும்புவதும், உடனடியாக வேலைக்கு கிளம்புவதும் எல்லோரும் செய்யக்கூடிய தவறு. ஒரு நாளின் துவக்கமே அமைதியாக தொடங்க வேண்டாமா? எனவே மெதுவாக துயில் எழுங்கள். சென்ற நாளில் நடந்த எல்லா கவலைகளையும் குழப்பங்களையும் மறந்து விடுங்கள். புதிதாக துவங்க இருக்கும் நாள் குறித்து திட்டமிடுங்கள். நீங்கள் கண் விழித்ததும் நேர்மறை எண்ணங்களைத் தோற்றுவிக்கும் இனிய சூழலைப் பாருங்கள். அது உங்களை பிரதிபலிக்கும் கண்ணாடியாகக் கூட இருக்கலாம்.
காலை
எழுந்ததும் சோம்பல் முறிப்பது நல்லது தான். ஆனால் அதை மெதுவாகச் செய்வது நல்லது. ஐந்து நிமிடங்கள் படுக்கையில் அமர்ந்தபடியே ஆழ்ந்து மூச்சு விட்டபடி கண் மூடி தியானத்தில் இருப்பது நல்லது. இது உங்களின் சுவாசத்துக்கு இதயத்துக்கும் நல்லது. பின்னர் கைகால்களை சுழற்றி எளிய உடற்பயிற்சிகளை செய்யலாம். அதற்கு முன்னர் 2 குவளை குளிர்ந்த நீர் அருந்த வேண்டும். இதனால் உங்களின் வயிற்றில் இருக்கும் நச்சுகள் நீங்கும்.
அதிகாலை காற்றை சுவாசியுங்கள். சூரிய ஒளியினை பெற்றுக்கொள்ளுங்கள். இது உங்களுக்கு பல வியாதிகளை வரமால் தடுக்கும். பட்சிகளின் குரலினை கவனியுங்கள். இவை உங்களின் மனதுக்கு புத்துணர்ச்சி ஊட்டும். காலையிலேயே சமுக வலைத்தளங்களில் நேரம் போக்குவது வீணானது. அதற்கு பதில் நல்ல புத்தகங்கள், நாளிதழ்கள் போன்றவற்றை படித்து பயன்பெறலாம். வேண்டுமானால் உங்களின் நண்பர்களுக்கு காலை வாழ்த்தினை சிறிது நேரம் அனுப்பலாம். இது உறவுகள் மேம்பட உதவும்.
அதிகாலை
2 அல்லது 3 நிமிடத்துக்கு மேல் பல்லை விலக்காதீர்கள். குளிர்ந்த நீரிலேயே குளியுங்கள். ஆழ்ந்த மூச்சுப் பயிற்சி, சிறிது நேர உடற்பயிற்சி, கொஞ்ச நேரம் படிப்பு என்று உங்கள் காலை தொடர்ந்தால் அன்றைய நாள் முழுவதும் உற்சாகமாக உணரலாம். அதுமட்டுமில்லை வெறும் வயிற்றில் நீங்கள் எடுத்துக்கொள்ளும் முதல் உணவு தான் உங்களின் அன்றைய தினத்தினை வழிநடத்துகிறது. எனவே காலை உணவை தவிர்க்கவே தவிர்க்காதீர்கள். 

குடும்ப ஒற்றுமை, சகோதரர்கள் நலம் பெருக அருளும் கணு பூஜை #Pongal thanks to vikatan.com

குடும்ப ஒற்றுமை, சகோதரர்கள் நலம் பெருக அருளும் கணு பூஜை #Pongal



கணு பூஜை

பொங்கல் பண்டிகைக்கு அடுத்தநாள் கொண்டாடப்படுவது `கணு பூஜை’ அல்லது `கணுப்பிடி பொங்கல்.  இதே தினத்தில்தான் மாட்டுப்பொங்கலும் கொண்டாடப்படுகிறது. 
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், போட்டதைத் தின்றுவிட்டு, காலமெல்லாம் நமக்காக உழைக்கும் மாடுகளுக்கு நன்றி செலுத்தும் திருநாள்தான் மாட்டுப் பொங்கல். 
அன்று மாடுகளை நன்றாகக் குளிப்பாட்டி, அவற்றின் கொம்புகளுக்கு வர்ணம் பூசியும், கால்களுக்கு சலங்கை கட்டியும் அலங்கரிப்பார்கள். பிறகு வஸ்திரம் அணிவித்து, மாலை போட்டு பூஜை செய்வார்கள். பூஜை முடிந்த பிறகு மாட்டின் கழுத்தில் அணிவிக்கப்பட்டிருக்கும் மாலையை எடுத்து, வீட்டின் தலைவாசலில் கட்டுவார்கள். அப்படிச் செய்வதால், வீட்டில் இருக்கும் தோஷங்கள் எல்லாம் நீங்குவதுடன், சுபநிகழ்ச்சிகள் தடையில்லாமல் நடக்கும் என்பது தொன்றுதொட்டு வரும் நம்பிக்கை. 
மாட்டுப் பொங்கல் அன்று கன்னிப் பெண்கள், சுமங்கலிப் பெண்களிடம் இருந்து, பொங்கல் பானையில் கட்டியிருந்த மஞ்சளை வாங்கி, தினமும் அரைத்துப் பூசி வந்தால் விரைவில் திருமணம் கூடி வரும் என்பதும் ஐதீகம். கூட்டுக் குடும்பமாக இருந்த அந்தக் காலத்தில், பெரியவர்களின் அறிவுரைப்படி கீழ்க்கண்ட பாடலைப் பாடியபடி மஞ்சள் பூசுவார்களாம். 
அந்தப் பாடல்...
               ‎'மக்களைப் பெற்று, மனையைக் கட்டி
               ‎ மக்கள் வயிற்றிலே பேரன்பிறந்து,
               ‎ பேரன் வயிற்றிலே பிள்ளையைப் பார்த்து, 
               ‎கொட்டில் நிறையப் பசுமாடும், பெட்டி நிறைப் பூஷணமுமாக,
               ‎ தழையத்தழைய தாலிகட்டி புருஷனோடு
               ‎ பூவும், பொட்டுமாக நூறாண்டு நோய் நொடி இல்லாமல் வாழணும்'
பாடல் முழுவதும் இருக்கும் நேர்மறையான எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப நல்ல வாழ்க்கை அமையும்.
தஞ்சை மற்றும் இதர பகுதிகளில் மாட்டுப்பொங்கல் நாளில் முந்தின தினம் படைக்கப்பட்ட மஞ்சளை, வீட்டுப் பெரியவர்களின் கையால் வாங்கிக்கொள்வார்கள். பிறகு அந்த மஞ்சளை குறுக்காக வளையம்போல நறுக்கி, நடுவில் துளையிட்டு, மஞ்சள் சரடில் கட்டி நோன்பு கயிறுபோல கழுத்தில் கட்டிக்கொள்வார்கள். இது கன்னிப் பெண்களின் சிறந்த மண வாழ்க்கைக்கும், சுமங்கலிப் பெண்களின் மாங்கல்ய பலத்தையும்அளிக்கும் என்கிற நம்பிக்கை உண்டு.
மாட்டுப் பொங்கலன்றுதான் குடும்ப ஒற்றுமைக்காகவும், சகோதரர்களின் நன்மைக்காகவும் பெண்கள் கணு பூஜை செய்வார்கள்.
பொங்கல் திருநாளில் சமைத்த வெள்ளை சாதம் மற்றும் சர்க்கரைப் பொங்கலை முழுவதுமாகச் சுரண்டி எடுக்காமல், மீதம் வைத்துவிடுவார்கள். 
மாட்டுப் பொங்கல்
கணு பூஜை செய்யும் நாளில் வீட்டுத் தோட்டத்திலோ அல்லது மாடியிலோ, திறந்தவெளியில் முதல்நாள் பொங்கல் படையலிட்ட இடத்தைச் சுத்தம் செய்து, கோலம் போடுவார்கள். அந்த இடத்தில் பொங்கல் திருநாளன்று மீதம் வைத்திருந்த சர்க்கரைப் பொங்கலை பானையுடன் வைப்பார்கள். அருகில் இலையைப் போட்டு, பொங்கலன்று எடுத்துவைத்திருந்த வெள்ளை சாதத்தை மூன்று பங்காகப் பிரித்து, முதல் பங்கில் தயிர்சாதமும், இரண்டாவது பங்கில் எலுமிச்சை சாதம் அல்லது மஞ்சள் பொடி தூவிய சாதமும், மூன்றாவது பங்கில் குங்குமம் மற்றும் மூன்றாவது என்று சூசகமாகச் சொல்லப்படும் சுண்ணாம்பு மிகச் சிறிதளவு சேர்த்த சிவப்பு சாதமும் தயார் செய்துகொள்வார்கள்.
பிறகு அந்த சாதத்தை மொத்தமாக சேர்த்து எடுத்துக்கொண்டு, 5, 7, 9 அல்லது 11 என்ற எண்ணிக்கையில் நெல்லிக்கனி அளவில் உருண்டைகளாகப் பிடிப்பார்கள். அந்த உருண்டைகளை 'காக்காய்ப்பிடி வைத்தேன், கணுப்பிடி வைத்தேன், காக்கைக் கூட்டம்போல் எங்கள் குடும்பமும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்’ என்று கூறிக்கொண்டே வைத்து, அத்துடன் கரும்புத்துண்டு, மஞ்சள்கொத்து, வெற்றிலை பாக்கு, பூ வைத்து சூரிய பகவானையும் குலதெய்வத்தையும், இஷ்டதெய்வத்தையும் வணங்கி, 'சகோதரர்கள் தங்களுக்குள் ஒர்றுமையுடனும், குடும்பத்தில் மகிழ்ச்சியுடனும் இருக்க வேண்டும்' என்றும், 'தங்களிடம் எப்போதும் பாசமாக இருக்க வேண்டும்' என்றும் இறைவனிடம் வேண்டிக்கொண்டு, மாட்டுப்பொங்கல் தினத்தில் கணுப் பிடி வைத்து கணு பூஜை செய்வார்கள். இந்த கணு பூஜை செய்யும் வழக்கம் உள்ளவர்கள் மட்டும்தான் செய்ய வேண்டும். அப்படி வழக்கம் இல்லாதவர்கள் குடும்பத்தில் உள்ள பெரியவர்களிடம் கணு பூஜை செய்யலாமா என்று கேட்டு செய்யலாம். 
பொங்கலை முன்னிட்டு சகோதரர்கள் தங்கள் சகோதரிகளுக்குப் பரிசுகளைத் தருவார்கள். இன்றைக்கும் கிராமப்புறங்களில் சகோதரர்கள் தங்கள் சகோதரிகளுக்கு சீர்வரிசை என்ற பெயரில் தரும் பரிசு, சகோதரிக்கு அவளுடைய புகுந்த வீட்டில் கௌரவம் தருகிறது.

Sunday, January 14, 2018

காற்றாழை, துளசி வீட்டில் அவசியம்! thanks to dinamalar.com

Advertisement
சொல்கிறார்கள்

 பதிவு செய்த நாள் : ஜன 15, 2018 
Advertisement
சொல்கிறார்கள்

காற்றாழை, துளசி வீட்டில் அவசியம்!
இயற்கை வாழ்வியல் நிபுணர், நாச்சாள்: அன்றைய வீடுகளை, தங்களுக்கு தேவையான இடத்தில் கட்டடத்துடன், மரம், செடி, மூலிகை என அனைத்துக்கும் சேர்த்தே திட்டமிட்டு அமைத்தனர்.இன்று வீட்டை எவ்வளவு பெரிதாக கட்ட முடியுமோ கட்டி, சதுர அடி கூட வீணாகாமங், வீட்டை சுற்று சிமெண்ட் பூசி விடுகின்றனர்; மழை நீரும் இதனால் நிலத்தில் இறங்குவதில்லை.இன்று நமக்கு நோய் வர முக்கிய காரணமே, நம்மை சுற்றி மரங்களும் செடிகளும், மண்றும் இல்லாததால் தான். வீட்டை சுற்றி இவை இருந்தால், அதனால் ஏற்படும் உயிர் சுழற்சியோடு, பல நன்மைகளும் நமக்கு கிடைக்கின்றன.அன்றாடம், நேரமின்றி உழைக்கும் பெண்களுக்கு, தேவையான சில மூலிகைகளை கண்டிப்பாக வீட்டில் வளர்க்க வேண்டும்.தொட்டதுக்கெல்லாம் மருந்து, மாத்திரை என்றால், உடல் சோர்வடைவது மட்டுமல்ல, உறுப்பு கோளாறு, உறுப்பை அகற்றுவது என, நம்மையே நாம் துன்புறுத்தும் நிலை ஏற்படும்.இன்ணு 40-45 வயதை கடந்த பெண்கள் பலர் பித்தப்பை, கருப்பை இல்லாமல் இருக்கும் நிலை ஏற்படுகிறது.பெரிய பராமரிப்பு என ஏதும் இல்லாத கற்றாழையும், துளசியும் வேலைக்கு போகும் பெண்களின் வீடுகளில், கட்டாயம் இருக்க வேண்டும்.கற்றாழையை மாதம் இருமுறை உட்கொள்வதுடன், தினமும் முகம், கண் வளையம், கழுத்து, கை, கால்கள் உள்ளிட்ட இடங்களில் பேசுவதன் மூலம் உடல் பொழிவும் அழகும் அதிகரிக்கும். தினமும், அலைச்சல், டென்ஷன், உழைப்பு, மனச்சோர்வு ஆகியவற்றால் உடலில் ஏற்படும் உஷ்ணத்தையும், கற்றாழை குறைத்து என்றும் பொலிவுடன் நம்மை காக்கும்.மழைக்காலங்களில் தினமும், துளசி இலைகளை ஒன்று அல்லது இரண்டு என்ற விகிதத்தில் சாப்பிட்டு வந்தால், தலைவலி, நெஞ்செரிச்சல், தொண்டைப்புண், சரும நோய் அண்டாது.கற்றாழை, துளசி செடி வைக்க, பெரிதாக இடம் தேவையில்லை. கற்றாழையை தேவைக்கேற்றவாறு சிறிது சிறிதாக உடைத்து, அதன் ஜெல்லை, முகம், தலை, உடலில் தடவி ஊற வைத்து குளித்தால், சருமம் பொலிவு பெறும். அந்த ஜெல்லை எடுத்து நீரில் நன்றாக அலசி, மோருடன் சேர்த்து குடித்து வந்தால், உடல் உஷ்ணம் குறையும்; குடல் புண் ஆறும்.அவ்வப்போது நீர் ஊற்றுவதை தவிர, கற்றாழைக்கென தனியாக எந்த பராமரிப்பும் தேவையில்லை. இது தவிர துளசி, திருநீற்றுப் பச்சிலை, தூதுவளை, கற்பூரவல்லி, வெற்றிலை உள்ளிட்ட மூலிகைகளை வீட்டுத் தோட்டத்தின் மூலமே, வேலைக்கு செல்லும் பெண்கள் வளர்க்கலாம்.இதனால் நேரம் செலவாகாமல், வீட்டுத் தோட்டமும் சாத்தியமாகும்; உடல் ஆரோக்கியமும் மேம்படும்.
காற்றாழை, துளசி வீட்டில் அவசியம்!
இயற்கை வாழ்வியல் நிபுணர், நாச்சாள்: அன்றைய வீடுகளை, தங்களுக்கு தேவையான இடத்தில் கட்டடத்துடன், மரம், செடி, மூலிகை என அனைத்துக்கும் சேர்த்தே திட்டமிட்டு அமைத்தனர்.இன்று வீட்டை எவ்வளவு பெரிதாக கட்ட முடியுமோ கட்டி, சதுர அடி கூட வீணாகாமங், வீட்டை சுற்று சிமெண்ட் பூசி விடுகின்றனர்; மழை நீரும் இதனால் நிலத்தில் இறங்குவதில்லை.இன்று நமக்கு நோய் வர முக்கிய காரணமே, நம்மை சுற்றி மரங்களும் செடிகளும், மண்றும் இல்லாததால் தான். வீட்டை சுற்றி இவை இருந்தால், அதனால் ஏற்படும் உயிர் சுழற்சியோடு, பல நன்மைகளும் நமக்கு கிடைக்கின்றன.அன்றாடம், நேரமின்றி உழைக்கும் பெண்களுக்கு, தேவையான சில மூலிகைகளை கண்டிப்பாக வீட்டில் வளர்க்க வேண்டும்.தொட்டதுக்கெல்லாம் மருந்து, மாத்திரை என்றால், உடல் சோர்வடைவது மட்டுமல்ல, உறுப்பு கோளாறு, உறுப்பை அகற்றுவது என, நம்மையே நாம் துன்புறுத்தும் நிலை ஏற்படும்.இன்ணு 40-45 வயதை கடந்த பெண்கள் பலர் பித்தப்பை, கருப்பை இல்லாமல் இருக்கும் நிலை ஏற்படுகிறது.பெரிய பராமரிப்பு என ஏதும் இல்லாத கற்றாழையும், துளசியும் வேலைக்கு போகும் பெண்களின் வீடுகளில், கட்டாயம் இருக்க வேண்டும்.கற்றாழையை மாதம் இருமுறை உட்கொள்வதுடன், தினமும் முகம், கண் வளையம், கழுத்து, கை, கால்கள் உள்ளிட்ட இடங்களில் பேசுவதன் மூலம் உடல் பொழிவும் அழகும் அதிகரிக்கும். தினமும், அலைச்சல், டென்ஷன், உழைப்பு, மனச்சோர்வு ஆகியவற்றால் உடலில் ஏற்படும் உஷ்ணத்தையும், கற்றாழை குறைத்து என்றும் பொலிவுடன் நம்மை காக்கும்.மழைக்காலங்களில் தினமும், துளசி இலைகளை ஒன்று அல்லது இரண்டு என்ற விகிதத்தில் சாப்பிட்டு வந்தால், தலைவலி, நெஞ்செரிச்சல், தொண்டைப்புண், சரும நோய் அண்டாது.கற்றாழை, துளசி செடி வைக்க, பெரிதாக இடம் தேவையில்லை. கற்றாழையை தேவைக்கேற்றவாறு சிறிது சிறிதாக உடைத்து, அதன் ஜெல்லை, முகம், தலை, உடலில் தடவி ஊற வைத்து குளித்தால், சருமம் பொலிவு பெறும். அந்த ஜெல்லை எடுத்து நீரில் நன்றாக அலசி, மோருடன் சேர்த்து குடித்து வந்தால், உடல் உஷ்ணம் குறையும்; குடல் புண் ஆறும்.அவ்வப்போது நீர் ஊற்றுவதை தவிர, கற்றாழைக்கென தனியாக எந்த பராமரிப்பும் தேவையில்லை. இது தவிர துளசி, திருநீற்றுப் பச்சிலை, தூதுவளை, கற்பூரவல்லி, வெற்றிலை உள்ளிட்ட மூலிகைகளை வீட்டுத் தோட்டத்தின் மூலமே, வேலைக்கு செல்லும் பெண்கள் வளர்க்கலாம்.இதனால் நேரம் செலவாகாமல், வீட்டுத் தோட்டமும் சாத்தியமாகும்; உடல் ஆரோக்கியமும் மேம்படும்.