Wednesday, April 24, 2019

முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள் - ஆறாம் திருமுறை

'முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்

மூர்த்தி அவன் இருக்கும் வண்ணம் கேட்டாள்

பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள்

பெம்மான்  அவனுக்கே பிச்சியானாள்

அன்னையும் அத்தனையும் அன்றே நீத்தாள்

அகன்றாள் அகலிடத்தார் ஆசாரத்தை

தன்னை மறந்தாள் தன் நாமம் கெட்டாள்

தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே!'

தலைவனின் பெயரைக் கேட்டாள் தலைவி . பெயரைக்கேட்டதுமே காதல் கொண்டாள்!  பெயருக்கே இத்தனை பெருமையா என்று வியந்துதான் போனாள்! பின் அவனது தோற்றம், இருப்பிடம் இவற்றைப் பற்றி அறிந்தாள் ! அதன்பின்பு காணுமிடமெங்கும் அவனேயானான் ! அவனையல்லால் அவளுக்கு ஒரு புகல் இல்லை ! அந்தக் கணத்திலேயே அவள் தனதெல்லாம் துறந்தாள்! தன்னைப் பெற்றவரை மறந்தாள்! தன் பெயரும் மறந்தாள் ! தன்னையே தான் மறந்தாள் ! தலைவன் தாள் ஒன்றே தன் தலையில் கொண்டாள் ! தலைவனுக்கே அடிமையானாள் ! ஒருமையுடன் அவன் திருமலரடி நினைக்கின்ற உத்தமருள் ஒருத்தியானாள் ! உலகையே மறந்தாள் ! -

இதுதான் திருநாவுக்கரசர் அவர்களின் , மேல்கண்ட திருவரிகளின் பொருள் !

No comments:

Post a Comment