Sunday, November 3, 2019

குழந்தைகளுக்கு மலச்சிக்கல் ஏற்படுவது ஏன்? thanks dinamalar.com

குழந்தைகளுக்கு மலச்சிக்கல் ஏற்படுவது ஏன்?
Advertisement
 
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01நவ
2019
00:00
உணவு பழக்க மாற்றம், குழந்தைகளின் உடல் நலத்தை பாதித்துஉள்ளதா?
பள்ளி செல்லும் வயதில் உள்ள, 7 - 12 வயது குழந்தைகளில், 25 சதவீதம் பேருக்கு மேல், மலச்சிக்கல் பிரச்னை உள்ளது. இதற்கு, உடல்ரீதியில் பல காரணங்கள் இருந்தாலும், மாவுச்சத்தும், சர்க்கரையும் அதிகமாக உள்ள துரித உணவுகளை சாப்பிடுவதே, பொதுவான காரணம். ஏழு வயதிற்கு குறைந்த குழந்தைகளுக்கும், இப்பிரச்னை அதிகரித்து உள்ளது.

பிரச்னைக்கு உடல் ரீதியான காரணங்கள் என்ன?
குடல் அடைப்பு, நரம்பு மண்டலத்தில் ஏற்படும் பாதிப்பு, ஆசனவாய் அமைப்பில் ஏற்படும் மாற்றங்கள், பெருங்குடலில் உள்ள நரம்பு மண்டல பாதிப்புகள் போன்ற, பிறவியிலேயே ஏற்படும் குறைபாடு களால், இந்தப் பிரச்னை வரலாம். 'மெட்டபாலிசம்' என்று சொல்லப்படும், உடல் உள் செயல்பாடுகளில் ஏற்படும் மாற்றங்களாலும், மலச்சிக்கல் பிரச்னை வரலாம்.மிகவும் கெட்டியான மலம், ஆசனவாய் வழியே வரும் போது, அந்த இடத்தில் புண் ஏற்படும். அடிக்கடி இது போல ஏற்பட்டால், வலிக்கு பயந்து, குழந்தைகள் மலம் கழிப்பதைத் தவிர்க்க முற்படுவர். எனவே, மலம் பெருங்குடலிலேயே தங்கி விடும். தைராய்டு ஹார்மோன் அளவு குறைவாக சுரப்பதாலும், ரத்தத்தில் கால்சியம் அளவு அதிகமாக இருந்தாலும், இப்பிரச்னை வரும்.பிறவியிலேயே ஏற்பட்டுள்ள குறைபாடுகளை, அறுவை சிகிச்சை மூலமும், மற்ற பிரச்னைகளை, சரியான மருந்துகள் தருவதாலும் சரிசெய்ய முடியும்.

இதனால் மனநல பாதிப்புகள் ஏற்படுமா?
தினமும் மலம் கழிக்காவிட்டால், பெருங்குடலில் வாயு உற்பத்தி ஆகும். இது மிகவும் ஆபத்தானது. இந்த வாயு, அப்படியே தங்கி, ரத்தத்தில் கலந்து, எந்த விஷயத்திலும் முழு ஈடுபாடு இல்லா மனநிலையை ஏற்படுத்தும். இப்பிரச்னை உள்ள குழந்தைகள், வகுப்பில், கொட்டாவி விட்டபடி, சோம்பலாக இருப்பர். இவர்களால், பாடங்களில் கவனம் செலுத்த முடியாது. பிரச்னை வந்த பின், மனதளவில் ஏற்படும் மாற்றம் இது.மற்றொரு புறம், மனநிலையில் ஏற்படும் மாற்றங்களாலும், பழக்கத்தினாலும், 95 சதவீதம் குழந்தைகளுக்கு, இப்பிரச்னை ஏற்படுகிறது. மன பதற்றம், மன அழுத்தம் போன்றவையும் அரிதாக ஏற்படலாம்.பெற்றோரிடையே ஏற்படும் சண்டை, விவாதங்கள், கருத்து மாறுபாடுகளால் சத்தம் போடுவது, குழந்தைகளின் மனதில், அச்சத்தையும், பாதுகாப்பின்மையையும் ஏற்படுத்தும். இதனாலும், மலச்சிக்கல் ஏற்படலாம்.

உணவு பழக்கம் எப்படி இருக்க வேண்டும்?
அதிக நார்ச்சத்து உள்ள, கீரை, காய்கறி, பழங்கள், தினமும் சாப்பிட வேண்டியது அவசியம். அதிகமாக, மைதா மாவு சேர்ப்பது, நீர்ச்சத்து உறிஞ்சப்பட்டு, மலம் கெட்டியாகி விடுகிறது.பால் வகை பொருட்கள், வறுத்த, பொரித்த உணவுகளை, குழந்தைகளுக்கு தருவதை தவிர்க்க வேண்டும்.பிஸ்கெட், சாக்லெட் போன்ற அதிக சர்க்கரை, மைதா உள்ள உணவுகளுக்கு பதிலாக, நம் வழக்கத்தில் உள்ள பாரம்பரிய உணவுகளை, சாப்பிட பழக்குவது நல்லது. திரவ உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வதற்கும், குழந்தையை பழக்க வேண்டும்.

பழக்கத்தினால் பிரச்னையை எப்படி தவிர்க்கலாம்?
பெற்றோரின் பங்கு மிகவும் முக்கியமானது. இரவில், அதிகபட்சம், 9:00 மணிக்குள் துாங்க வைத்து, அதிகாலையில் எழுந்திருக்கும் பழக்கத்தை, குழந்தைகளிடம் ஏற்படுத்த வேண்டும். காலையில் எழுந்ததும், கழிப்பறைக்கு செல்லும் பழக்கத்தை கற்றுத்தர வேண்டியது அவசியம். குறிப்பாக, இந்திய அமைப்பில் உள்ள, 'டாய்லெட்'டை பயன்படுத்த, பழக்க வேண்டும். இதனால், குழந்தைக்கு, அடிவயிற்றில் நன்கு அழுத்தம் ஏற்பட்டு, மலம் எளிதாக கழிக்க வாய்ப்பு ஏற்படும்.

டாக்டர் கே. சரவணபவன்
குழந்தைகள் நல மருத்துவர்,
சென்னை
98412 89896

No comments:

Post a Comment