Friday, August 17, 2018

2 கதைகள்- பனை விதையும் ஆலம் விதையும் thanks to tamil and vedas.com



 2 கதைகள்- பனை விதையும் ஆலம் விதையும் (Post No.5331)
Yahoo/Inbox


  • Tamil and Vedas <comment-reply@wordpress.com>
    To:theproudindian_2000@yahoo.co.in
    17 Aug at 12:35 AM

    Respond to this post by replying above this line

    New post on Tamil and Vedas

    2 கதைகள்- பனை விதையும் ஆலம் விதையும் (Post No.5331)

    by Tamil and Vedas
    Akbar worshiping Sun
    Written by London swaminathan

    Date: 17 August 2018

    Time uploaded in London – 7-34 AM  (British Summer Time)

    Post No. 5331

    Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.


    தேம்படு பனையின் திரள்பழத் தொருவிதை
    வானுற வோங்கி வளம்பெற வளரினும்
    ஒருவர்க்கிருக்க நிழலாகாதே –
    நறுந்தொகை (வெற்றி வேற்கை)
    -அதிவீரராம பாண்டியன்

    இனிமை மிக்க பனையின் ஒரு பழத்தை விதையாக ஊன்றி அது வானோங்கி செழித்து வளர்ந்தாலும் ஒருவர்கூட நிற்கக் கூடிய நிழலை அது தராது.
    மொகலாய மன்னனான ஷாஜஹானின் புதல்வனான அவுரங்கசீப் , கல்வி கேள்விகளில் சிறந்தவன்; ஆனால் மஹா மூர்கன். மதவெறியன்; பேராசை பிடித்த கொலைகாரன். தனது மூன்று சஹோதர்களை அவர்களின் புதல்வர்களோடு கூண்டோடு கொலை செய்து சிங்காதனம் ஏறினான். ஷாஜஹானை நீ கட்டிய தாஜ்மஹலை பார்த்துக்கொண்டே செத்துப்போ என்று சாகும் வரை சிறையில் அடைத்தான். ராஜ்யத்தை சரியாக ஆளத் தெரியாமல் குடிமக்களையும் சிற்றரசர்களையும் பகைத்துக் கொண்டான். அனைவராலும் வெறுக்கப்பட்டு, முடிவில் உதவி செய்ய யாரும் இல்லாமல் கஷ்டப்பட்டு செத்தான். அவனோடு மொகலாய சாம்ராஜ்யம் முடிவுக்கு வந்தது. பின்னர் பெயரளவுக்கு அரசர் என்று ஓரிருவர் இருந்தனர். அரச சம்பத்து கோடிக்கணக்கில் இருந்தும் அவனோ அவனது குடிமக்களோ மகிழ்ச்சியாக வாழ முடியவில்லை. அவன் பனை விதபோல ஓங்கி வளர்ந்தான். ஆனால் ஒருவருக்கும் நிழல் தர முடியவில்லை.
    xxx

    தெள்ளிய வாலின் சிறு பழத்தொரு விதை
    தெண்ணீர்க் கயத்துச் சிறுமீன் சினையினும்
    நுண்ணிதே யாயயினும் அண்ணல் யானை
    அணிதேர்ப் புரவி ஆள் பெரும்படையொடு
    மன்னர்க்கிருக்க நிழலாகும்மே
    நறுந்தொகை (வெற்றி வேற்கை)
    -அதிவீரராம பாண்டியன்

    தெள்ளி எடுக்கத்தக்க ஆல மரத்தின் சிறு விதையானது, தெளிந்த நீர்க்குளத்தில் உள்ள சிறிய மீனின் முட்டையை விடச் சிறிதானாலும், பெருமை பொருந்திய யானையோடு அழகிய தேரும், குதிரையும் காலாட் படைகளும் கொண்ட மன்னரோடு தங்குவதற்கு நிழல் தரும்.

    பெரிய விதையுடைய பனை மரம் நிழல் தராது. சிறிய விதையுடைய ஆல மரம் மன்னரின் நாற்படைக்கும் நிழல் தரும். ஆகவே மக்கள் இரு தரப்பட்டவர்கள்; சிலர் பனை மரம்; சிலர் ஆலமரம்.

    ஹுமாயூன் புத்திரனான அக்பர் நிராதரவற்ற நிலையில், தாயாரான ஹாமிடாவுக்கும் சாப்பாடு போட முடியாத நிலையில் ஸிந்து தேச காட்டுப் பகுதியில் பிறந்தார். அவர் பட்ட கஷ்டம் சொல்லத் தரமன்று; தனது 18ஆவது வயதில் வளர்ப்புத் தந்தையான பைராம்கானை அடக்கிவிட்டு தானே சிங்காதனம் ஏறினார். பின்னர் படிப்படியாக உயர்ந்து வட இந்தியா முழுதையும் வசப்படுத்தி ஆட்சி புரிந்தார். அவர் ஆட்சிக் காலத்தில் போர்கள் நடந்தன; ஆனால் மக்கள் கலகம் என்பது கிடையாது. அவரும் ஜாதி மத வேறுபாடின்றி கல்வி, கேள்விகளில் சிறந்தோருக்கு பெரிய பதவிகளைக் கொடுத்தார்.
    மக்களின் சௌகரியங்களுக்கு வேண்டிய அனைத்தையும் செய்தார். எப்போதும் தத்துவ விசாரத்தில் ஈடுபட்ட அறிஞர் குழுவால் சூழப்பட்டு கீர்த்தி பெற்றார். அவர் கூட்டிய தர்பாரில் பொதுமக்கள் யார் சிபாரிசு இன்றியும் மனுக்களைத் தரமுடிந்தது. உடனே அதற்கு நடவடிக்கையும் எடுத்து புகழ் பெற்றார். மக்கள் அவரை பழமரத்தை நாடும் பறவைகள் போல நாடினர்.

No comments:

Post a Comment