Monday, June 19, 2017

வாழ்வென்றால் போராடும் போர்க்களமே....

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement
மன்மணம் எங்கு உண்டு வாயுவும் அங்கு உண்டு;மன்மனம் எங்கு இல்லை வாயுவும் அங்கு இல்லை;மன்மனத்துள்ளே மகிழ்ந்திருப்பார்க்குமன்மனத்துள்ளே மனோலயம் ஆமேஎன மனதை பற்றி திருமந்திரம் தெளிவாக கூறுகிறது.மனமிருந்தால் மட்டுமே உடலில் உயிருண்டு. அம்மனதால் மகிழ்ந்திருப்போர்க்கு வாழ்வில் மனோலயம் உண்டு.
மனம் எனும் மாயசக்தி 
மனம் என்றால் உள்ளம். மனம் என்பது மாபெரும் சக்தி. அது ஒரு மாயசக்தி. எதையும் அதனால் சாதிக்க முடியும். நேர்மறை எண்ணம், எதிர்மறை எண்ணம் என இரண்டையும் மனதால் 
உருவாக்க முடியும். இறைவனின் உருவத்தை நேரில் காண இயலாது. அதைப் போன்று மனதின்உருவத்தையும், எண்ணத்தையும் நேரடியாக யாராலும் அறிய முடியாது. உளவியல், அறிவியல் ஆராய்ச்சிகளின்படி மனிதனின் எண்ணம், மரபு, சுற்றுப்புறச்சூழல், மூளை சார்ந்த உயிர் வேதியியல், குடும்பச்சூழல் இவற்றால் மாறுபடுகிறது.'கெடுவல்யான் என்பது அறிக தன்நெஞ்சம்நடுவொரீஇ அல்ல செயின்'உள்ளமானது தீயசெயல்களை எண்ணத் தொடங்கினால் அன்றே மனம் கெட்டு விடும் என 
திருக்குறள் கூறுகிறது.
மன அழுத்தம் என்ற பாரம் 
அழுத்தம் என்றால் பாரம் அல்லது கனம் எனப்படும். பாரம் என்பது சுமை. திணித்தலையும் அழுத்தம் என கூறலாம்.பீலிபெய் சாகாடும் அச்(சு)இறும், அப்பண்டம்சால மிகுத்து பெயின்மெல்லிய மயிலிறகையே அளவுக்கு அதிகமாக ஏற்றினால் வண்டியின் அச்சு முறியும். மனதில் துயரம் அதிகமானால் மனமுறிவு ஏற்பட்டு மன அழுத்தம் தோன்றும். தீர்வு காணப்படாத இன்னல்களாலும், வேலைப்பளுவாலும் மனதில் பாரம் ஏற்றப்
படுகிறது. கட்டுப்பாடற்ற மனதாலும், மன அழுத்தம்தோன்றுகிறது. உலகில் அனை வருமே ஏதோ ஒரு காரணத்தால் மன அழுத்தத்தோடு இருக்கின்றனர். மன அழுத்தத்தின் அளவை பொறுத்து மாற்றுவதற்கு பல திறவுகோல்கள் உள்ளன.
மன அழுத்தத்திற்கான காரணங்கள் 

காட்டாற்று வெள்ளம் தறிகெட்டுப் போவது போல் நிலையான சிந்தனை இல்லாதவனின் மனம் கலக்கமுற்று குழம்பி நிற்கும். உறவுகளில் காட்டும் அதிகமான அக்கறை, அக்கறையின்மை இரண்டுமே மன அழுத்தத்திற்கு வழி வகுக்கும். முன்னர் பள்ளி இறுதித் தேர்வு, நாள் ஒன்றுக்கு இரண்டாக, நான்கு நாட்களுக்குள் முடிந்து விடும். இன்று போதுமான இடைவெளி விட்டு தேர்வுகள் நடந்தாலும், தேவையற்ற மன அழுத்தம் 
உருவாகிறது. ஒவ்வொருவருக்கும் இறைவனால் நிர்ணயிக்கப்பட்டது நடந்தே தீரும். மன அழுத்தத்தை ஏற்படுத்தும் முக்கிய மூன்று காரணிகள் அச்சம்; கோபம்; பொறாமை.
சூழ்நிலைக்கு ஏற்ப மனதை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று டாக்டர் மரியா மாண்டிசோரி கூறுகிறார். சூழ்நிலையை தயாரித்தல் என்ற முறையை குழந்தை முதலே செயல்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார். மூன்றாண்டிற்குள் குழந்தை சாதித்த அளவை, நாம் சாதிக்க வேண்டுமென்றால் 60 ஆண்டுகள் தேவைப்படும் என்று உளவியல் கூறுகிறது. குழந்தைப் பருவத்திலேயே வளமான மனதை உருவாக்க பயன்தரும் சூழலை ஏற்படுத்த வேண்டும்.

மூன்று நிலைகள் 
முதல் நிலை: சிறு நிகழ்வுகளால் ஏற்படும் பாதிப்பே முதல் நிலையாகும். குழந்தை விழுந்தவுடன் ஏற்படும் படபடப்பு; பாம்பை கண்டவுடன் ஏற்படும் பயம்; இவை அனைத்தும் சில மணித்துளிகள் மனதில் பாதிப்பை ஏற்படுத்தி பின்பு மறைந்து விடும். இந்நிகழ்வுகளால் அழுத்தம் தோன்றும் பொழுது பாதுகாத்து கொள்வோம். சண்டையிடுவோம் அல்லது விலகி விடுவோம். இதையே ஆங்கிலத்தில் FIGHT OR FLIGHT என கூறுவர். முதல் வகை மன அழுத்தம் தன்னைத் தானே சரி செய்து கொள்ளும்.
இரண்டாம் நிலை: குறிப்பிட்ட இடத்தில் அல்லது குறிப்பிட்ட நேரத்தில் தொடர்ந்து மனதில் பாதிப்பு ஏற்பட்டால் அதுவே இரண்டாம் நிலையாகும். நாமே நமக்குள் ஏற்படுத்தி கொள்ளும் மன அழுத்தம் ஆகும். குழந்தைகளை பள்ளிக்கு ஆயத்தம் செய்யும் நேரம்; பஸ்சை பிடிக்கும் நேரம்; நிர்வாகத்தில் வேலை செய்யும் நேரம்; இல்லத்தில் தொடர்ச்சியாக வேலை செய்யும் நேரம்; தொலைக்காட்சியில் தொடர் நாடகம் பார்க்கும் போது மின்சாரம் தடைபடும் நேரம்; டாக்டர்களிடம் பரிசோதிக்க செல்லும் நேரம் என பல சம்பவங்களால் குறிப்பிட்ட இடத்தில், குறிப்பிட்ட நேரத்தில் இந்த மன அழுத்தம் ஏற்படும். அனைத்து நிகழ்வுகளுக்கும் மனதை தயார் நிலையில் வைத்திருந்தால் மனமே மருந் தாகும்.
இரண்டாம் நிலை மன அழுத்தத்தால் தேவையில்லாத படபடப்பு, நாவறட்சி, வேகமாக மூச்சு விடுதல், அதிகமாக வியர்வை வெளியாதல், தலைவலி, அதிக ரத்த அழுத்தம் போன்ற
இன்னல்கள் ஏற்படும். நாம் உருவாக்கி கொள்ளும் மன அழுத்தம் என்பதால் நாமே சரி செய்து கொள்ளலாம்.மூன்றாம் நிலை: மூன்றாம் நிலை மன அழுத்தமே சிக்கலானது. இது நாம் உருவாக்கி கொள்ளும் மன அழுத்தமல்ல. பல வகை காரணிகளால் ஏற்படுவது. நம்பிக்கையின்மை, உடற்குறைபாடு, போட்டி மனப்பான்மை, பொருளாதார குறைபாடு, அன்பற்ற சூழல், வாழ்க்கை மாற்றம், தொடர்ந்து வரும் நோய், பாதுகாப்பின்மை கடந்த கால துயரமான சம்பவங்கள் என தொடர் நிகழ்வுகள் பல ஆண்டுகளாக நிலைத்திருந்தால் மனதில் பாரம் சிறிது சிறிதாக ஏறி பின்பு சரி செய்ய முடியாத மிகப்பெரிய மன அழுத்தத்தை ஏற்
படுத்தும். இந்நிலை மன அழுத்தத்தில் உள்ள பெற்றோர்களின் குழந்தைகளும் மரபுநிலை காரணமாக பின்னால் அவர்களையும் 
அறியாமல் பாதிக்கப்படுவர்.
கூடிவாழ்ந்தால் கோடி நன்மை 
பாசத்தையும், நேசத்தையும் அள்ளிக் கொடுத்த பெற்றோர் உடல் தளர்வுற்று உள்ளம் தடுமாறி தனிமைப்படுத்தப்பட்டு மன நோயாளியாக மாறி விடுவார்கள். பெற்றோரின் அரவணைப்பு 
இல்லாத குழந்தைகள் அன்பையும், ஆதரவையும் நாடுகின்றனர். சீர் செய்ய முடியாத இல்லறத்தில் இருப்பவர்கள் நல்ல வழிகாட்டுதலை தேடுகிறார்கள். கூடிவாழ் கோட்பாட்டை பயன்படுத்தினால் அதுவே அருமருந்து என அமெரிக்க கல்வியாளர் வாஷ்பர்ன் கூறுகிறார். முகம் பார்த்து நலம் காணும்
கூட்டுக்குடும்பம் குறைந்துவிட்டது. முகத்தை கூட காணாது இருக்கும் தனிக்குடும்பத்தில் மனதை காண்பது என்பது அரிது.தனிக்குடும்பத்தில் இருப்பவர்கள் விழா காலங்களில் உறவினர்களுடன் ஒன்று கூட வேண்டும். பெரியவர்களும், சிறியவர்களும் அவர்களுடைய வயது ஒத்தவர்
களுடன் ஒன்று கூடி மனம் விட்டு பேசி மகிழ வேண்டும். அப்போது உறுதியாக மன அழுத்தம் குறைந்து மனம் லேசாகி விடும். கூடி வாழ்வது கோடி நன்மையை உருவாக்கும்.
தன்னம்பிக்கை அவசியம் 
பிறருடன் ஒப்பிடாமல் எளிய முறை வாழ்வை குழந்தைகளுக்கு நேர்மறை எண்ணங்களுடன் பழக்கினால் தன்னம்பிக்கை வளரும். தன்னம்பிக்கை என்பது முக்கிய பண்பாகும். அதற்கு உதாரணம் வில்மா ருடால்ப். நான்கு வயதில் இரட்டை நிமோனியாவால் பாதிக்கப்பட்டு இளம்பிள்ளை வாதத்தால் முடக்கப்பட்டார். அவருடைய பாதங்கள் தரையில் பதிய வாய்ப்பில்லை என டாக்டர்கள் கூறினர். வில்மா மனதளவில் தன்னம்பிக்கையோடு, தன்னை ஊக்கப்படுத்தி கொண்டு கால்களை தரையில் சிறிது சிறிதாக பதிய வைத்து எட்டெம்பிள் என்ற சிறந்த பயிற்சியாளர் துணையுடன், 1960 ஒலம்பிக் போட்டி யில் 100 மீ, 200 மீ, 400 மீ என மூன்று ஒட்டப்பந்தயங்களில் 
தங்கப்பதக்கம் வென்றார்.மனம் என்பது அற்புத சக்தி. அந்த சக்தியால் எதையும் சாதிக்கலாம். பறவைகளும், விலங்குகளும் கூட இசைக்கு செவிமடுக்கிறது. மனித மனமும் இசையில் லயித்தால் மனம் காற்றாக மாறி விடும். பாட்டு, பரதம், யோகம் போன்ற கலைகள் மருத்துவ ரீதியாக மனஅழுத்தத்தை குறைக்கிறது.
யோகமும், தியானமும் 
உடலுக்கு யோகமும், மனதுக்கு தியானமும் சிறந்தவை. மனிதனின் வியாதியை அளவிட்டு மருத்துவம் செய்ய முடியும். ஆனால் மன வியாதியை அளவிட முடியாது. கண்காணிப்பின் மூலம் அறிய முடியும். மனத்துாய்மையும், செயல் துாய்மையும் இவ்விரண்டும் சேரும் இனத்தின் துாய்மையை பொறுத்தே வரும். இதமான 
எண்ணத்தை அறிந்து வளமான மனதை பெறுவோம்.எந்த மனித நெஞ்சுக்குள் காயம் இல்லை சொல்லுங்கள்
'வாழ்வென்றால் போராடும் போர்க்களமேஒவ்வொரு விடியலும் சொல்கிறதே, 
இரவானால் பகல் ஒன்று வந்திடுமே
முயற்சி என்ற ஒன்றை மட்டும்
மூச்சை போல சுவாசிப்போம்
நம்பிக்கை என்பது வேண்டும் 
நம் வாழ்வில்
மனமே ஓ மனமே நீ மாறி விடு
மலையோ அது பனியோ நீ 
மோதி விடு'
அழகான இப்பாடல் வரிகளை ஏற்றால் மனம் அடங்கும். மனம் அடங்கினால் வாழ்வு வளம் பெறும்.
-முனைவர் ச.சுடர்கொடிகல்வியாளர், காரைக்குடி94433 63865

No comments:

Post a Comment