Wednesday, May 27, 2020

அமெரிக்கா செல்லும் தேங்காய் சிரட்டை thanks to dinamalar.com


அமெரிக்கா செல்லும் தேங்காய் சிரட்டை

 அமெரிக்கா செல்லும் தேங்காய் சிரட்டை
20Shares
facebook sharing button
messenger sharing button
twitter sharing button
விருதுநகர் : தேங்காய் சிரட்டை, அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது.

விருதுநகர் மாவட்ட விவசாயிகள், விவசாய கழிவுகளை பதப்படுத்தி, லாபம் பார்க்கின்றனர். அந்த வகையில் ஓட்டல்கள், கொப்பரை தேங்காய் உற்பத்தியாளர்களிடம் இருந்து, தேங்காய் சிரட்டைகளை சேகரித்து, நெருப்பில் வாட்டி, பவுடராக்கி, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர்.விருதுநகர், மூலிப்பட்டி விவசாயி, திருமுருகன் கூறியதாவது:தேங்காய் சிரட்டைகளை, கிலோ, 8 ரூபாய்க்கு வாங்கி, 4 டன், தொட்டியில், நெருப்பில் வேக விடப்படும்.

1 டன்னுக்கு, நன்கு சுட்ட சிரட்டைகள், 350 கிலோ கிடைக்கும்.அவற்றை துாத்துக்குடி தொழிற்சாலைகளுக்கு, கிலோ, 25 ரூபாய்க்கு அனுப்புகிறோம். அங்கு சிரட்டையை பவுடராக்கி, வெளிநாடுகளுக்கு அனுப்புகின்றனர்.அழுக்கு நீக்கும் தன்மை சிரட்டையில் இருப்பதால், அவற்றை மூலப்பொருளாக கொண்டு பியூட்டி கிரீம், குளியல் சோப்பு, ஹேர் டை, தண்ணீர் சுத்திகரிப்பான் உள்ளிட்டவை தயாரிக்க, அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு பெருமளவு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment