Saturday, September 10, 2016

thirukural 195 609

குறள் அதிகாரம் : பயனில சொல்லாமை

valluvarசீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில
நீர்மை யுடையார் சொலின்.
( குறள் எண் : 195 )
குறள் விளக்கம் :
மு.வ : பயனில்லாத சொற்களை நல்ல பண்பு உடையவர் சொல்லுவாரானால், அவனுடைய மேம்பாடு அவர்க்குரிய மதிப்போடு நீங்கிவிடும்.
சாலமன் பாப்பையா : இனிய குணத்தவர் பயனற்ற சொற்களைச் சொன்னால், அவர் பெருமையும், புகழும் அப்பொழுதே நீங்கிவிடும்


.குறள் அதிகாரம் : மடி இன்மை
எழுத்தின் அளவு:   அ+  அ-
valluvarகுடியாண்மை யுள்வந்த குற்றம் ஒருவன்
மடியாண்மை மாற்றக் கெடும்.
( குறள் எண் : 609 )
குறள் விளக்கம் :
மு.வ : ஒருவன் சோம்பலை ஆளுந் தன்மையை மாற்றிவிட்டால் அவனுடைய குடியிலும் ஆண்மையிலும் வந்தக் குற்றம் தீர்ந்து விடும்.
சாலமன் பாப்பையா : ஒருவன் சோம்பலுக்கு அடிமையாவதை விட்டுவிட்டால், அவனது குடும்பத்திற்குள் வந்த சிறுமைகள் அழிந்துவிடும்.



.
  





( குறள் எண் : 195 )

No comments:

Post a Comment