Saturday, May 6, 2017


அஸ்லன்-ஷா ஹாக்கி போட்டி: வெண்கலம் வென்றது இந்தியா!
அஸ்லன்-ஷா ஹாக்கி போட்டி: வெண்கலம் வென்றது இந்தியா!
சுத்தமான இடத்தை ஏன் யோகி மீண்டும் சுத்தம் செய்கிறார். இவங்களுக்கு இதே வேலையா போச்சு!!! நெட்டிசன்ஸ் நக்கல்
சுத்தமான இடத்தை ஏன் யோகி மீண்டும் சுத்தம் செய்கிறார். இவங்களுக்கு இதே வேலையா போச்சு!!! நெட்டிசன்ஸ் நக்கல்
#IPL10: தோனி கடைசிக்கட்ட அதிரடி...148 ரன்கள் குவித்தது புனே
#IPL10: தோனி கடைசிக்கட்ட அதிரடி...148 ரன்கள் குவித்தது புனே
தமிழக எல்லைக்குள் சீனக்கப்பல் நுழைய முயன்றது ஏன்? இலங்கை கடற்படை விளக்கம்
தமிழக எல்லைக்குள் சீனக்கப்பல் நுழைய முயன்றது ஏன்? இலங்கை கடற்படை விளக்கம்
மருத்துவ மேற்படிப்பில் 50% இடஒதுக்கீடு கிடையாது!  3-வது நீதிபதி அதிரடி தீர்ப்பு
மருத்துவ மேற்படிப்பில் 50% இடஒதுக்கீடு கிடையாது! 3-வது நீதிபதி அதிரடி தீர்ப்பு
இந்த நாட்டுக்குத்தான் விரைவில் வரவிருக்கிறார் ரொனால்டோ!
இந்த நாட்டுக்குத்தான் விரைவில் வரவிருக்கிறார் ரொனால்டோ!
தெலுங்குப் படம் ரீமேகில் ஜி.வி.பிரகாஷ்!
தெலுங்குப் படம் ரீமேகில் ஜி.வி.பிரகாஷ்!
பாகுபலி -2-ன் பாக்ஸ் ஆபீஸ் வசூல் எவ்வளவு தெரியுமா?
பாகுபலி -2-ன் பாக்ஸ் ஆபீஸ் வசூல் எவ்வளவு தெரியுமா?
கம்யூனிஸ்ட்டும் இல்லை; காங்கிரஸும் இல்லை, என்றுமே பாஜக தான்! அமித்ஷா பெருமிதம்!
கம்யூனிஸ்ட்டும் இல்லை; காங்கிரஸும் இல்லை, என்றுமே பாஜக தான்! அமித்ஷா பெருமிதம்!

குழந்தைகள் முன்பு சண்டையிடுவது தவறு... ஏன் தெரியுமா?

குழந்தைகள்

திகபட்ச அன்பும் உரிமையும்கொண்டது தம்பதியரின் உறவு. ஆனால், இருவரில் ஒருவர் சிறு தவறு செய்யும்போது, 'அது எனக்குத் தெரிந்துவிட்டது. அதை உனக்குப் புரியவைக்கிறேன் பார்' என்று உடனடியாக வரிந்துகட்டி இறங்கும்போதுதான் சண்டை ஆரம்பிக்கிறது. அடுத்தடுத்து வார்த்தைகள் தடித்து விழுகிறபோது, பெருங்கோபமாக உருவெடுக்கிறது. பெற்றோரின் சண்டையால், அதில் தொடர்பற்ற குழந்தைகள் மனவேதனை அடைகிறார்கள். 'அப்பா, அம்மா பிரிஞ்சுபோய் நம்மளையும் கைவிட்ருவாங்களோ' என்ற பய உணர்வுக்கு ஆளாகிறார்கள். ''எந்தச் சூழ்நிலையிலும் குழந்தைகளின் முன்னிலையில் பெற்றோர், தங்களுக்குள் மிதமிஞ்சிய கோபத்தை வெளிப்படுத்திக்கொள்ளக் கூடாது'' என்கிறார் குழந்தைகள் நல ஆலோசகர் சுகன்யா. இதுபோன்ற சூழலில் குழந்தைகள் முன்பு தம்பதியர் நடந்துகொள்ள வேண்டிய வழிமுறைகளையும் சொல்கிறார். 
* முழுமையாகப் பேசத் தெரியாத காலத்திலேயே குழந்தைகள், பெற்றோரின் முகங்களைப் பார்த்து உணர்வுகளைப் புரிந்துகொள்ள முயற்சிப்பார்கள். பெற்றோர் கோபத்தை வெளிப்படுத்தும் விதத்தில் இருந்துதான் அவர்களும் கற்றுக்கொள்கின்றனர். பெரிதாக கத்துவது, பேசாமல் புறக்கணிப்பது போன்ற செயல்களை பெற்றோரிடமிருந்தே கற்றுக்கொள்கிறார்கள். எனவே, காமம், கோபம் இரண்டையும் குழந்தைகள் முன்னிலையில் வெளிப்படுத்திக்கொள்ளாதீர்கள். 
குழந்தைகள்
* தம்பதியருக்குள் முரண்பாடுகள் ஏற்பட்டாலும், அதை அறிவுப்பூர்வமாகப் புரியவைக்க முயற்சியுங்கள். முரண்பாடுகளை எப்போதும் எதார்த்தமாக அணுகுங்கள். இணையிடம் எதையும் மறைக்க வேண்டாம். ஒரு விஷயம் ஏன் இணைக்கு அவசியமில்லை என்பதை தெளிவாகப் புரியும்படி சொல்லும் பொறுப்பு உள்ளது. இணையோடு ஆரோக்கியமாக விவாதித்து, உண்மை நிலையைப் புரியவைக்கலாம். வார்த்தைகளால் அடக்க முயற்சிப்பதும், கோபத்தைக் காட்டுவதும் தவறான அணுகுமுறை. 
* யாரும் தனக்கான தேவையைப் போராடித்தான் பெறவேண்டியுள்ளது. தனது கருத்தை எதிராளிக்குப் புரியவைக்க உரையாடலும், விவாதமும் அவசியம். எது நடந்தாலும் எந்தக் கேள்வியும் கேட்காமல் ஏற்றுக்கொள்ள வேண்டும் என இணையை அடக்குவது இயல்புக்கு எதிரானது. உங்களுக்குள் சிறிய விஷயங்களில் பிரச்னை ஏற்படும்போது, குழந்தையை நீதிபதியாகப் பாவித்து, அவர்களிடம் சொல்லி கருத்தைக் கேளுங்கள். பிரச்னைகளால் என்னென்ன விளைவுகள் ஏற்படும், அதைத் தவிர்க்க என்ன செய்யலாம் என்றும் விளையாட்டாக குழந்தைகளோடு விவாதியுங்கள். இதனால், பிரச்னையின் டென்ஷன் குறையும். குழந்தைக்கும் ஒரு விஷயத்தைக் கற்றுக்கொடுத்ததாக இருக்கும். 
* தனிமனித சுதந்திர எல்லைகளை மதிக்காமல் ஊடுருவும்போதுதான் இருவருக்கும் இடையில் முரண்பாடு, கசப்பு எல்லாம் உருவாகின்றன. அன்பு, காதல், பாசம் எதுவாக இருப்பினும் இணையின் சுதந்திரத்தை பறிக்கும் அளவுக்கு ஆதிக்கம் செலுத்தும்போது வெறுப்பு உண்டாகிறது. இருவருக்குமான பிரைவசியை மதித்து சுதந்திரத்தை அனுமதிக்கலாம். பெற்றோர் விவாதிக்கும்போது, சம்பந்தமின்றி குழந்தைகள் தலையிடத் தேவையில்லை என்பதைப் புரியவையுங்கள். பரஸ்பரம் எவர் மனதையும் காயப்படுத்திவிடக் கூடாது என்பதில் கவனமாக இருங்கள். 
* சிறிய பிரச்னைகளும் ஈகோவால் பெரிதாக உருவெடுக்கிறது. குழந்தைகள் முன்பு கத்துவது, கடுமையான வார்த்தைகள் பேசுவதைத் தவிர்க்கவும். ‘நீ தேவையில்லை’’ என்று இணையைப் புறக்கணிப்பதும், குழந்தைகளிடம் ‘‘நீ யார் பக்கம்’’ என்று கேட்பதும் மிகப்பெரிய தவறு. இதுபோன்ற தம்பதியரை குழந்தைகள் மதிப்பதில்லை. தம்பதியருக்குள் ஒற்றுமை இல்லாதபோது, குழந்தைகள் வழி தவறுவது எளிதாகிறது. தம்பதியருக்குள் நடக்கும் இணக்கமற்ற சூழல், குழந்தைகளின் நம்பிக்கையையும் லட்சியத்தையும் சிதைக்கும். 
* பெற்றோர் சண்டையிடும் வீடுகளில், குழந்தைகள் அதைத் தங்களுக்குச் சாதமாகப் பயன்படுத்திக்கொள்வதும் உண்டு. குழந்தைகள் அதிகம் செலவழிக்கவும், பொறுப்பின்றி நடந்துகொள்ளவும் வாய்ப்புள்ளது. குழந்தைகள் தவறு செய்யும்போது அதைக் கண்டறியவும் பெற்றோருக்கு நேரம் இருக்காது. அவர்கள் மனம் முழுக்க இருவருக்குள்ளான பிரச்னை பற்றியே யோசித்துக்கொண்டிருக்கும். இதுபோன்ற சூழலில் பொய் சொல்வது, மனம்போன போக்கில் செல்வது போன்ற நடத்தை மாற்றங்களுக்கும் குழந்தைகள் ஆளாகின்றனர். 
எனவே, தம்பதியர்களுக்குள் நடக்கும் சண்டையால் பாதிக்கப்படுவது அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை மட்டுமல்ல, அவர்களையே நம்பியிருக்கும் குழந்தைகளின் எதிர்காலமும்தான் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். 
* மனிதர்கள் நிறையும் குறையும் நிறைந்தவர்கள். அவரவருக்கென்று சில பிரத்தியேக குணங்கள் இருக்கும். தம்பதியர் பாசிட்டிவான விஷயங்களைக் கண்டுபிடித்து பாராட்டிக்கொள்வதன் வழியாக, நெகட்டிவ் விஷயங்கள் காணாமல்போகும். நல்ல விஷயங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பது, சின்னச் சின்ன சந்தோஷங்களைக் கொண்டாடுவது என்று குடும்பத்தின் மகிழ்வைத் தக்கவைத்துக்கொள்வது அவசியம். இதன் மூலமே குழந்தைகள் வளர ஆரோக்கியமான சூழலை உருவாக்கித்தர முடியும். 

No comments:

Post a Comment