Saturday, November 12, 2016

தாழ்வு மனப்பான்மையை தகர்த்தெறியுங்கள்!

நன்றி: தினமலர் - கல்வி மலர் - நவம்பர் 12, 2016

தன்னைத் தானே குறைத்து மதிப்பிடுகிற தன்மை, திருப்தியின்மை, பிறரை தம்மோடு ஒப்பிட்டு பார்த்தல்’ ஆகிய காரணங்களினால் தாழ்வு மனப்பான்மை எழுகிறது.

தாழ்வு மனப்பான்மையை தகர்த்தெறிய சில முக்கிய வழிகள்:

*நேர்மறை ஊக்குவிப்பு வார்த்தைகளை மட்டுமே பயன்படுத்துங்கள். உயரிய எண்ணங்களையும், செயல்களையும் அதன் போக்கில் செல்ல விடுங்கள்.

*எந்த இடத்திற்கு சென்றாலும் உங்களது நடையின் வேகத்தை கூட்டுங்கள். நிமிர்ந்து நில்லுங்கள். எந்த சூழ்நிலையிலும் அச்சம் கொள்ளாதீர்கள்.

*எந்த இடத்திற்கு சென்றாலும் உங்களுக்கு தேவையான விவரங்களை தயங்காமல் கேளுங்கள். பிறரிடம் பேசும்போது, கண்களை பார்த்து பேசுங்கள்.

*நீங்கள் அழகு என்பதை முதலில் நீங்கள் நம்புங்கள். நிறத்திற்கும், அழகிற்கும் சம்பந்தமில்லை என்பதை உணருங்கள்.

*எப்போதும் ஆக்கப்பூர்வமாக சிந்தியுங்கள். நல்ல விசயங்களை பேசுங்கள். மற்றவர்களின் திறமைகளை நற்பண்புகளை பாராட்டுங்கள்.

*வெளிப்படையாக எல்லோரிடமும் பேசிப் பழகுங்கள். எந்த காரியம் செய்தாலும் முழு முனைப்போடும், அர்ப்பணிப்போடும் செய்யுங்கள்.

*‘தோல்வி பெறாதவர்களே இல்லை’ என்பதையும், தோல்வி என்பது பொதுவான ஒன்று என்பதையும் நம்புங்கள். தோல்வி அடுத்து வரவிருக்கும் வெற்றிக்கு வழி வகுக்கிறது என்ற உண்மையையும் உணருங்கள்.

*அடுத்தவர்களின், குறிப்பாக, எதிராளிகளின் வார்த்தைகள் நமது செயல்பாட்டை, எதிர்வினையாக பாதிக்காத வகையில் சாமர்த்தியமாக தவிர்க்க பழகுங்கள்.

*‘வாழ்க்கையில், எல்லாம் நிறைவாய் இருக்கும் வாழ்க்கை இங்கு யாருக்கும் அமையவில்லை’ என்ற நிதர்சனத்தை புரிந்து கொள்ளுங்கள்.

*முடிவாக, மாற்றங்களை வெளியில் தேடாமல் உங்களுக்குள் தேடுங்கள்.

’உங்கள் கடந்த காலம் உங்களுடைய எதிர்காலத்தைத் தீர்மானிப்பதற்கு ஒருபோதும் அனுமதிக்காதீர்கள்’ என்ற ஜானி விம்ப்ரேவின் பொன்மொழியை நினைவில் நிறுத்துங்கள், தகர்த்தெறிங்கள் தாழ்வு மனப்பான்மையை...

மு.தென்னவன், மதுரை.

No comments:

Post a Comment