Sunday, November 6, 2016

ஒழுக்கம் - நூல்

ப்பாவும், பிள்ளையும் சேர்ந்து பட்டம் விட்டுக் கொண்டிருந்தார்கள். அப்பா கேட்டார்: “கண்ணா! நூலோட வேலை என்னன்னு சொல்லு பார்க்கலாம்?” 

பையன் கொஞ்சமும் தாமதிக்காமல் சொன்னான்: “நூல்தாம்ப்பாபட்டத்தை இழுத்துப் பிடிச்சிருக்கு”.

அப்பா ஒப்புக்கொள்ளவில்லை. அவர், “இல்லை மகனே நூல்தான் அதைப் பறக்க வெச்சிக்கிட்டிருக்கு” என்றார். பையன் சிரித்தான். உடனே, ஒரு கத்திரியால் நூலை வெட்டினார் அப்பா.முதலில் பட்டம் விடுபட்டு தாறுமாறாகப் பறந்தது. கொஞ்ச நேரத்தில், சற்று தூரம் தள்ளி கீழே போய் விழுந்தது.

இப்போது அப்பா சொன்னார்: “ஒழுக்கமும் இப்படியானதுதான் மகனே! அது உன்னை இழுத்துப் பிடித்திருப்பதாக நீ நினைத்துக் கொண்டிருக்கிறாய். அதிலிருந்து அறுத்துக் கொண்டால் சுதந்திரம் என்று நினைத்திருக்கிறாய். ஆனால், அந்த சுதந்திரம் ரொம்ப தற்காலிகமானது. சீக்கிரமே கீழே விழுந்துவிடுவாய். ஒழுக்கம்தான் உன்னைக் கொடி கட்டிப் பறக்கவைத்துக் கொண்டிருப்பது. உன்னை அதிலிருந்து அறுத்துக் கொள்ளாதே” என்றார்.

- என்.கணேசன்

No comments:

Post a Comment