Sunday, April 23, 2017

மகிழ்ச்சி இருந்தால்... மனம் மலரும்!


Posted Date : 07:35 (28/02/2017)

Last updated : 10:26 (28/02/2017)

மகிழ்ச்சி இருந்தால்... மனம் மலரும்! #MorningMotivation



மகிழ்ச்சியாக இருப்பதைவிட, சிறந்த உந்துசக்தி இல்லைஎன்கிறார்கள் தன்னம்பிக்கைப் பேச்சாளர்கள்.  நாம் மகிழ்ச்சியாக  இருந்தாலே, நம்மைச் சுற்றியுள்ளவர்களும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். ஆகையால், மகிழ்ச்சி தராத பழக்கவழக்கத்தையும் எண்ணங்களையும் மாற்றிக் கொண்டால், அதுவே ஒரு மகிழ்ச்சிதானே. அப்ப, எந்தெந்த குணங்களை எப்படி மாற்றிக்கொண்டால் மகிழ்ச்சி உண்டாகும் எனத் தெரிந்துகொள்வோம்.

எப்பவுமே  பர்ஃபெக்ஷ்னோடு இருக்க சிலர் விரும்புவார்கள். அதற்கு, சந்தோஷம் முக்கியமல்ல என்று நினைப்பார்கள். சந்தோஷமில்லாத வாழ்க்கை எப்படிங்க பர்ஃபெக்ஷ்னா இருக்கும்? உள்ளுக்குள் மகிழ்ச்சி இல்லையென்றால்எவ்வளவு செயல்கள் நடந்தாலும் உங்களுக்குத் திருப்தியாகவே இருக்காது. ஒன்று நடந்து முடிவதற்கு முன்னமேயே உங்களைப் பின்வாங்கச் சொல்லும் அந்த நிலையைச் சமாளிக்க, எப்பொழுதுமே திருப்தியாக இருக்கப் பழகிக் கொள்ளுங்கள். ஒரு செயல் இவ்வளவு நேரத்தில் முடிக்கப்பட வேண்டுமென்று கால வரையறையை உருவாக்கிக்கொள்ளுங்கள். வேலை முடியும்போது, தானாக ஒரு திருப்தி உங்கள் மனதில் குடிகொள்ளும்.
சிலர், சந்தேகக் கடலிலேயே மூழ்கிக்கிடப்பார்கள். இதெல்லாம் வாழ்க்கையை அழகுசெய்யாதுங்க. அதனால நல்ல எண்ணங்களின் ஆதிக்கத்தால் அவற்றைத் தகர்த்தெறியுங்கள். அப்போது, ஒரு புது உலகம் உங்களுக்குக் காட்சியளிக்கும்
இதற்கு நீங்கள் நல்லெண்ணம் உடையவர்களோடு பழகுதல், பிடித்த பாடல்களைக் கேட்டல்,  புத்தகம் படித்தல் போன்றவற்றைச் செய்யலாம்.
பழையன கழிதலும் புதியன புகுதலும்' என்று நம் முன்னோர் சொன்னதை நாம் நன்கு அறிவோம். பழைய நிகழ்வுகள் சில, நமக்கு மிகுந்த வலியை ஏற்படுத்தி இருக்கும். எப்போதுமே அதை நினைத்துக் கொண்டிருந்தால், புதிய பாதைகள் உருவாகாது ஃப்ரெண்ட்ஸ். இன்னொன்று, எதிர்காலம் பற்றி இப்படி நடக்குமோ அப்படி நடக்குமோ என்ற பயமும் சிலருக்கு உண்டு. இவற்றைத் தவிர்க்க, நாளை எப்படி இருக்க வேண்டும் என்பதை நேற்று நடந்ததில் இருந்து கற்றுக்கொள்ளும்படி நமது நடப்பு நிகழ்வுகளை அமைத்துக்கொள்ள வேண்டும். நம்முடைய வாழ்வை நாம்தான் அனுபவிக்கிறோம்.அதற்குப் பிறரோடு ஏன் நம்மை ஒப்புமைப்படுத்திப் பார்க்க வேண்டும்அப்படி நமது வாழ்வை பிறரோடு ஒப்பிடுவது, நமக்குள் ஒரு சின்ன பொறாமையை, தாழ்வு மனப்பான்மையை அல்லது சில சமயம் உயர்வு மனப்பான்மையைக்கூட உருவாக்கும்அதெல்லாம் எதற்கு? அதற்குப் பதிலாக, உங்களை உங்களோடு ஒப்பிடுங்களேன். அப்புறம் பாருங்கநீங்கள் பட்டாம்பூச்சியாய்ப் பறப்பீர்கள். ‘நேற்றைக்கு 3 கி.மீ வாக்கிங் போனேன். இன்னைக்கு 4 கி.மீ போயிருக்கேன். சபாஷ்டாஎன்று நீங்களே உங்களை ஒப்பிட்டு, பாராட்டி - அல்லது - சீர்தூக்கிப் பார்த்துக் கொள்ளுங்கள்.எப்பவும் தீய செயல்கள் மீது கவனம் செலுத்திக்கொண்டிருக்கக் கூடாதுஎல்லா இடங்களிலும் குறை கண்டுபிடித்துக்கொண்டே இருந்தால், அது சரியாக இருக்காது. அதனால், அதையெல்லாம் கொஞ்சம் ஒதுக்கி வைத்துக் கொள்வோம். பிறர் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்பதில் எல்லாம் கவனம் செலுத்த வேண்டாம். அது, நமது வளர்ச்சியைத் தடுக்கும். ஆகையால், அதையெல்லாம் விட்டுவிடுங்கள். வாழ்க்கையைக் கடினமான முறையில் சிலர் எதிர்கொள்வார்கள். இது, மன அழுத்தத்தை உருவாக்கும். இதற்கெல்லாம் காரணம் அவரவர்தான். எதுவாக இருப்பினும் எதிர்கொள்வோம் எனும் மனநிலையில் தன்னம்பிக்கையோடு அணுகுவோம்

மகிழ்ச்சியா இருந்தாலே வெற்றி நம்ம பக்கம்தான் பாஸ்!   


No comments:

Post a Comment