Friday, August 18, 2017

நோய்கள் காணாமல்போக வேண்டுமா? - Courtesy: Dinamalar

Advertisement

பதிவு செய்த நாள்

19ஆக
2017 
00:00

நோய்கள் காணாமல்போக வேண்டுமா?


பி.சி.ஓ.எஸ்., - - 'பாலிசிட்டிக் ஓவரி சிண்ட்ரோம்' எனப்படும் நீர்க்கட்டிக்கான அறிகுறி, தீர்வு குறித்து கூறும், அறிஞர் அண்ணா அரசு சித்தா மருத்துவமனையின் சித்தா டாக்டர், வெண்தாமரை செல்வி: 15 - 44 வயதுள்ள பெண்களை, இன்று பயமுறுத்தும் விஷயம், நீர்க்கட்டி. இது, குழந்தையின்மை பிரச்னையில் முக்கிய பங்கு வகிக்கிறது.முறையற்ற மாதவிடாய், மாதவிடாயின் போது தொடர்ந்து ஏற்படும் ரத்தப்போக்கு, முகத்தில் லேசாக மீசை, தாடி வளர்வது, அடிவயிறு மற்றும் பெண் குறியில் தொடர்ந்து வலி ஏற்படுவது, உடல் பருமன் போன்றவை, நீர்க்கட்டிக்கான அறிகுறி. இளம் வயதிலேயே சிகிச்சை எடுக்காவிடில், திருமணமானதும் குழந்தை பெறுவதில் சிக்கல் உண்டாகும்.கடந்த, 25 ஆண்டுகளுக்கு முன், 1,000த்தில் ஒரு பெண்ணுக்கு தான் நீர்க்கட்டி பிரச்னை இருக்கும். இப்போது, 10ல் ஐந்து பெண்களுக்கு இப்பிரச்னை உள்ளது. அதனால் பயப்பட தேவையில்லை; ஆனால், சிகிச்சை அவசியம். நீர்க் கட்டி வரக் காரணம், நம் வாழ்வியல் முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் தான்.உடல் உழைப்பு இல்லாததும், கொழுப்பு சத்து உணவுகளை அதிகம் சாப்பிடுவதும் தான், நீர்க்கட்டி உருவாக முக்கிய காரணம்.
முன்பு, பெண்கள் வீட்டு வாசலில் கோலம் போடுவர்; குந்தி அமர்ந்து பாத்திரம் துலக்குவர்; வீடு பெருக்குவர், துடைப்பர்; இந்தியன் ஸ்டைல் கழிப்பறைகளை தான் பயன்படுத்தினர். இவை எல்லாம் ஒரு வகை ஆசனங்கள்.எனவே, வயதுக்கு வந்த பெண்களை, அம்மாக்கள், வீட்டு வேலை செய்ய பழக்க வேண்டும். அப்போது தான் அவர்கள் உடல் ஆரோக்கியம் பெறுவர். மேலும், சாப்பிடும் உணவில் சிறிது நெய் சேர்த்துக் கொள்ளுங்கள். உளுந்து வடை, உளுத்தங்களி, உளுந்து சாதம் போன்றவற்றை அன்றாடம் பயன்படுத்துங்கள். மாதவிடாய் பிரச்னைகளுக்கு, எள் சிறந்த தீர்வு தருகிறது. எள் பொடி, எள் துவையலை வாரத்திற்கு ஒருமுறை கட்டாயம்
உணவில் சேர்க்க வேண்டும்.இன்று பயன்படுத்தும் எண்ணெய் பெரும்பாலும், ரீபைண்ட் ஆயிலாக தான் உள்ளது. சத்துக்கள் அனைத்தும் அகற்றப்பட்டு, வெறும் சக்கையை தான் பயன்படுத்துகிறோம். செக்கில் ஆட்டப்பட்ட நல்லெண்ணெய், கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெயை சுழற்சி முறையில் சமையலில் பயன்படுத்தலாம். விதையுள்ள பப்பாளி, அன்னாசி பழம், மாதுளை போன்றவை, நீர்க்கட்டி நோய்க்கு சிறந்த மருந்து.வெண் பூசணியை உணவில் தொடர்ந்து சேர்த்து வர, இந்த நோய் காணாமல் போய் விடும். குறிப்பாக, வெண் பூசணியை மோர்க் குழம்பாக வைத்து
சாப்பிடலாம்.கன்னித்தன்மையை காக்கும், மிகச் சிறந்த கன்னி மூலிகை கற்றாழை. கற்றாழையில் உள்ள சோற்றை, நீர்க்கட்டி மற்றும் மாதவிடாய் பிரச்னை உள்ளோர் தினமும் சாப்பிட்டு வர, நீர்க்கட்டி காணாமல் போய் விடும்.அம்மாக்களே... முதல் வேலையாக உங்கள் பெண் குழந்தைகளுக்கு மாதவிடாய் முறையாக வருகிறதா என்று, இப்போதே கவனிக்க துவங்குங்கள்.

No comments:

Post a Comment