Saturday, June 15, 2019

கருவேப்பிலை பொடி thanks to dinamalar.com


பதிவு செய்த நாள்

14ஜூன்
2019 
00:00
தேவையான பொருட்கள்:
கருவேப்பிலை - 100 கிராம்
வெள்ளை உளுந்து - 100 கிராம்
சமையல் எண்ணெய் - 50 மி.லி.,
காய்ந்த மிளகாய் - 7
பெருங்காயத் துாள் - சிறிதளவு 
உப்பு - தேவையான அளவு

செய்முறை:
காம்பு நீக்கிய கருவேப்பிலையை, நன்கு கழுவி, வெயிலில் உலர்த்தவும். வெள்ளை உளுந்து, மிளகாய் வற்றல் ஆகியவற்றை எண்ணெயில் நன்கு வறுக்கவும். 
இவற்றுடன், உலர்த்திய கறிவேப்பிலை, பெருங்காயத்துாள், உப்பு சேர்த்து துாளாக அரைக்கவும். மணமும் சுவையும் நிறைந்த கறிவேப்பிலை இட்லி பொடி தயார். 
இந்த பொடியில், நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி, இட்லி, தோசையைத் தொட்டு சாப்பிடலாம். மிகவும் சுவையாக இருக்கும். சிறுவர், சிறுமியர் விரும்புவர்.
- தா.பிரேமா தாமஸ், விருதுநகர்.

No comments:

Post a Comment