Thursday, May 19, 2016

சூட்டை தணிக்கும் சூப்பர் பானம்!

சூட்டை தணிக்கும் சூப்பர் பானம்!
Advertisement
 
 
Advertisement
 
கடந்த வாரம்
 
 
Advertisement

பதிவு செய்த நாள்

08மே
2016 
00:00
சென்ற வாரம் எங்கள் வீட்டிற்கு வந்திருந்த உறவினர் ஒருவர், எங்கள் வீட்டு காலை உணவைப் பார்த்து, அதிர்ச்சியுடன் கேலியாகவும் பேசியதால், நாயகியருக்கு இந்த வாரக் கட்டுரைக்கான செய்தி கிடைத்தது என்பதில் எனக்கு மகிழ்ச்சியே.

காபியும், டீயும் வீட்டுக்குள்ளே வந்த பின்னாடி தான், நம் பாரம்பரிய நீராகாரம் குடிக்கும் பழக்கம் நீர்த்து விட்டது. காலையில் நாங்கள் நீராகாரமும், பழைய சோறும் சாப்பிடுவதைப் பார்த்த உறவினர், சென்னை வெயிலை விட சூடாகி விட்டார். 
பழைய சாத நீராகாரம் என்பது, முதல் நாள் இரவில் சமைத்த சோற்றில் நீரூற்றி வைத்திருந்து, மறுநாள் காலை அந்த நீருடன் உப்பு, மோர் கலந்துக் குடிப்பது. இது உடல் உழைப்புக்குத் தேவையான வலிமையைக் கொடுக்கும். 
நம் தமிழகம் வெப்ப மண்டல பகுதி. அதனால் ஏற்படும் உடல் வெப்பத்தை, இது குறைக்கும். உடல் நலம் பாதுகாக்கும், இந்த வெயிலுக்கு ஏற்றது என்பதெல்லாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் நாம் எத்தனைப் பேர் இதை பின்பற்றுகிறோம்? அப்படி செய்வோரை ஏதோ தீண்டத்தகாத மாதிரியே பார்ப்பது, கிண்டல் செய்வது என்று இருக்கும், நம் நாயகியருக்கு இந்த மாதிரியான சில விஷயங்களை, திரும்ப திரும்ப சொல்ல வேண்டியிருக்கிறது. நல்ல விஷயத்தை,
நாற்பது முறை சொன்னாலும் தப்பில்லை.
நம் நாயகியரிடம், பழைய சோற்றைப் பற்றிக் கேட்டால், 'இரவில் டிபன் தான் சாப்பிடுறோம். எங்கிருந்து சாதம் வடித்து தண்ணீர் ஊற்றி வைப்பது?' என, நம்மை திருப்பிக் கேட்கின்றனர். இந்த உணவு, நம் தலைமுறையின் ஆரோக்கியத்திற்காக என்பதை உணர்ந்து, நீங்கள் உங்களிடமிருந்து பழக்கத்தைத் துவக்கினால், உங்கள் வாரிசுகளும் பின்பற்றுவார்களே!

காலையில் மீந்த சோற்றை பிரிஜ்ஜில் வைத்து, மறுநாள் அதை சூடு செய்து சாப்பிடும் பழக்கத்தை விடுங்கள். அந்தச் சோற்றுடன், சீரகம், காய்ந்த மிளகாய், உப்பு போட்டு பிசைந்து, வெயிலில் காய வைத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள், எண்ணெயில் வறுத்து சாப்பிட ஒரு பலகாரம் தயார். பழைய சோறு சாப்பிட்டால், உடல் பருமனாகும் என்று சொல்வது தவறு. மூச்சு முட்ட எதைச் சாப்பிட்டாலும் பிரச்னை தான். நெருப்பு போன்ற பித்தத்தின் குணத்தை குளுமையாக்கி, வன்முறை, குரோதம், பகை, ஆக்ரோஷம் போன்ற குணங்களை, நம்மிடமிருந்து அடியோடு நீக்கிவிடும் உணவு, இந்த பழைய சாதமும், நீராகாரமும். இந்த சித்திரை கோடை வெயிலில், உடலை குளிர வைத்து, தெம்பு கொடுக்கும் ஒரு உற்சாகப்பானம், இந்த பழைய சோற்றின் நீராகாரம் என்று, உணவியல் வல்லுனர்கள் கூறுகின்றனர். மண் பானையில் ஊறும் சோற்றின் நீரில் தான் வாசமும், தரமும் கூடுதலாக இருக்கிறது. 'இதில், நொதித்தலின் மூலம் உருவாகும் நுண்ணுயிர்கள் உடலுக்கு நன்மை செய்யும்; செரிமான மண்டலம் ஆரோக்கியமாகவும் இருக்கும்' எனவும் கண்டுபிடித்து கூறியுள்ளனர். நீர் கலந்த சோற்றுப் பருக்கையை கஞ்சி என்றும், அந்த உணவுப் பழக்கம் பற்றியும், அதன் சிறப்பு பற்றியும், புத்த சமய நூல்களிலேயே குறிப்பிடப்பட்டு உள்ளது.

தினமும் காலையில் பழையச் சோற்றைச் சாப்பிட்டு வந்தால், முதுமைத் தோற்றம் விரைவில் ஏற்படுவதைத் தடுக்கலாம்; நீண்ட நாட்கள் இளமையுடன் காட்சியளிக்க விரும்பினால், பழையச் சோற்றை சாப்பிட ஆரம்பியுங்கள் இன்றே!

ஒரு கப் தயிரில்,
ஒரு வெங்காயம்,
தோல் நீக்கிய இஞ்சி,
விதை நீக்கிய பச்சை மிளகாய்,
கொத்துமல்லி,
கறிவேப்பிலை,
கல் உப்பு சேர்த்து
மிக்சியில் அரைத்து
வடிகட்டி, ஒரு சொம்பு
நீராகாரத்தையும்
கலந்துவிட்டால்,
'வெல்கம் ட்ரிங்க்' ரெடி!

ம.வான்மதி

No comments:

Post a Comment