Saturday, July 30, 2016

Health Tips

 From Dinamalar  Varamalar

பதிவு செய்த நாள்

31ஜூலை
2016 
00:00
* சீரகத்தை, வாழைப்பழத்துடன் பிசைந்து, காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால், ரத்த மூலம் தீரும்.
* சீரகத்துடன், உப்பைச் சேர்த்து மென்று தண்ணீர் குடித்தாலோ அல்லது வெறும் சீரகத்தை மென்று தின்றாலோ வயிற்று வலி நீங்கி, செரிமானம் ஏற்படும்.
* சீரகத்துடன், கற்கண்டை கலந்து மென்று தின்றால், இருமல் போகும்.
* சீரகப் பொடியோடு, தேன் கலந்து சாப்பிட்டால், விக்கல் அகலும்.
* சீரகத்தை அரைத்து உடம்பில் பூச, அரிப்பு நிற்கும்.
* சீரகப் பொடியோடு, எலுமிச்சை சாறு குழைத்து சாப்பிட்டால், பித்தம் அகலும்.
* நல்லெண்ணெயில், சீரகத்தை போட்டு காய்ச்சி, தலைக்கு தேய்த்து குளித்தாலும், பித்தம் நீங்கும்.
* சீரகப் பொடியோடு தேன், உப்பு மற்றும் நெய் சேர்த்து தேள் கொட்டிய இடத்தில் பூசினால், விஷம் முறியும்.
* சீரகத்தை வறுத்து, சுடுநீரில் போட்டு பால் கலந்து சாப்பிட, பசி கூடும். சீரகத்தை மிளகு பொடியோடு கலந்து, காய்ச்சி வடிகட்டி குடித்தால், அஜீரணம், மந்தம் நீங்கும்.
Advertisemen

No comments:

Post a Comment