Saturday, November 18, 2017

செப்பு பாத்திரத்தில் உள்ள மருத்துவ குணங்களை கூறும், இயற்கை ஆர்வலர் நாச்சாள் thanks to dinamalar.com

Advertisement
சொல்கிறார்கள்
தொற்றுநோய்களும்பரவாது!

செப்பு பாத்திரத்தில் உள்ள மருத்துவ குணங்களை கூறும், இயற்கை ஆர்வலர் நாச்சாள்: உடல் சீராக இயங்க தேவையான நொதிகளையும், அமினோ அமிலங்களையும் உருவாக்க, உடலுக்கு செப்புத் தாது அவசியம். 
இதை, உடல் தானாகவே உற்பத்தி செய்ய முடியாது; அதனால் தான், அந்த காலத்திலேயே செப்பு பாத்திரங்களை, நம் முன்னோர் பயன்படுத்தினர்.
தண்ணீரை, செப்பு குவளை அல்லது பாத்திரத்தில் ஊற்றி வைத்தால், நீரிலிருக்கும் தீமை செய்யும் நுண்ணுயிர்கள், நான்கு மணி நேரத்தில் அழிந்துவிடும். 
செப்பு பாத்திரத்தில் சேமித்து வைத்த நீரை பருகினால், உடலில் இருக்கும் கழிவு, நச்சுக்கள், உடலுக்கு தீமை செய்யும் நுண்ணுயிரிகள், உடலை விட்டு வெளியேறும்.
செப்பு கலந்த நீரால், தண்ணீரில் பரவும் தொற்று நோய்களும் பரவாது. தொடர்ந்து செப்பு பாத்திரத்தில் தண்ணீரை சேமித்து வைத்திருந்து அருந்தி வர, டைபாய்டு, மலேரியா, 'டெங்கு' போன்ற நோய்களில் இருந்தும், நம்மை காக்க முடியும்.
இரும்பு சத்தை உடல் உட்கிரகிக்க, உடலில் உள்ள ரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்ய, செப்பு அவசியமாகிறது. 
மேலும், ரத்தத்தில் உள்ள நச்சுக்களை அகற்றி, ரத்தத்தை துாய்மையாக்குகிறது. உடலில் உள்ள பல வகையான ஹார்மோன் சுரப்பிகள் சீராகச் சுரக்கவும் உதவுகிறது.
மாதவிடாய் காலங்களில், பெண்களுக்கு ஏற்படும் சோர்வுகளுக்கும், தைராய்டு குறைபாடுகளுக்கும் மாமருந்தாகிறது. உடல் பருமன், தேவையற்ற கொழுப்புக்கு, செப்பு சிறந்த நிவாரணியாக அமைகிறது.
மூட்டு வலி, எலும்பு வீக்கத்தை சீராக்கும் செப்பு தாது, புற்று நோய் போன்ற உயிரை கொல்லும் நோய்களை அழிக்கும், வெள்ளை அணுக்களை உற்பத்தி செய்யவும் அவசியமாகிறது. தொடர்ந்து செப்பு நீரை அருந்த, புற்றுநோயை உருவாக்கும் செல்கள் அழிக்கப்படுகின்றன.
குழந்தைகளின் கவனக்குறைவு, வயதிற்கு மிஞ்சிய அதிவேகம், இவற்றுக்கு செப்பு குறைபாடே காரணமாகிறது. தொடர்ந்து, குழந்தைகளுக்கு செப்பு பாத்திரத்தில் சேமித்த நீரை கொடுக்க, அவர்களின் மூளை வளர்ச்சியும், அதிவேகமும் சீராகும். 
உடலில் ஏற்படும் சிறு சிறு காயங்களை குணப்படுத்துவதிலும், தோலின் ஆரோக்கியத்தைக் காப்பதிலும், இதன் பங்கு மகத்தானது.
குழந்தைப்பேறு காலத்தில், பெண்களுக்கு ஏற்படும் ரத்த சோகைக்கும், அதிக இரும்பு சத்துக்கும் செப்பு நீரே போதுமானது. குழந்தை ஆரோக்கியமாக வளர, இது ஓர் இயற்கை வழி. 
உடலில் ஏற்படும் மரபணு குறைபாட்டிற்கும், சிறந்த நிவாரணம் தருகிறது. செப்பு கலந்த நீர் சிறந்த, 'ஆன்டி ஆக்சிடென்ட்' ஆக இருக்கிறது. கண், தோல் ஆகியவற்றை காக்கிறது.
முக்கியமாக, புளி, எலுமிச்சை, சாம்பலால் செப்பு பாத்திரத்தை ஒவ்வொரு நாளும் சுத்தப்படுத்தி, நன்கு காய வைத்து பயன்படுத்த வேண்டும்.

அளவோடு சமைத்துஅன்றேசாப்பிடலாம்!

பிரிஜ்ஜில் உணவு பொருட்களை வைப்பது குறித்து கூறும், டாக்டர் அபிராமி: பரபரப்பான வாழ்க்கையில் பலரும் பிரிஜ்ஜை, பீரோ மாதிரி பயன்படுத்துகின்றனர். காய்கறி, பழம், குழம்பு, சட்னி, தின்பண்டங்கள் என, அனைத்தையும் வைத்து, குப்பைத் தொட்டியாய் மாற்றி விடுகின்றனர்; இது, முதல் ஆபத்து.

பொதுவாக, 3 - 7 டிகிரி வெப்பநிலையில் தான், உணவை பதப்படுத்தி வைக்க முடியும். ஆனால், நம் நாட்டு தட்பவெப்பநிலையில், அடிக்கடி பொருட்களை எடுக்க, பிரிஜ்ஜை திறந்து மூடுவதால், சமனற்றவெப்பநிலை ஏற்படும்; இதனால் உணவின் தன்மை கெடும்.ஆனால், பிரிஜ்ஜில் வைத்திருப்பதால் கெடாது என நினைத்து, சாப்பிட்டு, ஆபத்தை தேடிக் கொள்கிறோம். பிரிஜ்ஜில் மூன்று நாட்கள் காய்கறி, பழங்களை வைத்து எடுக்கும்போது, அதில் உள்ள நீர் சத்து குறைந்து சுருங்கி விடும்; அதிலிருக்கும் வைட்டமின் சத்து, கிடைக்காமல் போய் விடும்.

தமிழ் மருத்துவ பாரம்பரியம், 'முதல் நாள் செய்த உணவு, அமிர்தமாக இருந்தாலும் கூட, அடுத்த நாள் சாப்பிடக் கூடாது' என்று கூறுகிறது. அதனால், அளவோடு சமைத்து, அன்றே சாப்பிட்டுவிட வேண்டும்.பழங்களை பிரிஜ்ஜில் வைக்கக் கூடாது. அதற்கு பதிலாக, மண்பானையில் வைத்தால், மூன்று நாளுக்கு அப்படியே இருக்கும். காய்கறி, இட்லி மாவு வேண்டுமானால், இரண்டு நாள் வைக்கலாம்.

மேலும், சூடாக சமைத்து அப்படியே வைக்கக் கூடாது; ஜில்லென வெளியே எடுத்து, உடனே சூடுபடுத்தக் கூடாது. இதனால், உணவுப் பொருளின் உயிர் சத்து போய்விடும்.பிளாஸ்டிக் பாத்திரத்தில், ஈரமாக உள்ள உணவுப் பொருட்களை வைக்கக் கூடாது. பிளாஸ்டிக், அதிக வெப்பம் என்றால் உருகுவது போல், அதிக குளிர்ச்சி யிலும் உருகி, உணவுப் பொருளில் சேர்ந்து ஆபத்தை உண்டாக்கும். எப்போது சமைத்தாலும், காய்கறிகளை வதக்கி சமைப்பது தான் நல்லது. 

பிரிஜ்ஜில், பூச்சி உருவாகும் பொருட்களான கோதுமை மாவு, கடலை மாவு, அரிசி மாவு, ரவை, மிளகாய் துாளை, கண்ணாடி பாட்டிலில் போட்டு, மூன்று மாதம் வரை வைக்கலாம். மேலும், பிரிஜ்ஜில் கிருமிகள் தங்கியிருக்கும் என்பதால், வினிகர், எலுமிச்சம் பழம் போட்டு சுத்தம் செய்ய வேண்டும்.
குறிப்பாக, 10, 20 நாட்கள், ஓராண்டு என பதப்படுத்தப்பட்ட ரெடிமேட் உணவுகளை சாப்பிடுபவர்களை, பார்த்ததுமே கண்டுபிடித்து விடலாம். டென்ஷனாகி, சிடு சிடு என்று எரிந்து விழுவர்; குழந்தைகள் அதிக துரு துரு என இருப்பர்.
இவர்களுக்கு நாளடைவில் வயிற்று கோளாறு, ஜீரண உறுப்பு பாதிப்பு, குடல் நோய், மிக முக்கியமாக உயிருக்கே ஆபத்தாக முடியும் புற்றுநோய் என, பல ஆபத்துகள் வரும்.

No comments:

Post a Comment