Thursday, December 5, 2019

மொபைல் போனை காட்டி குழந்தைக்கு சாப்பாடு ஊட்டுவது தவறான பழக்கம் thanks to dinamalar

மொபைல் போனை காட்டி குழந்தைக்கு சாப்பாடு ஊட்டுவது தவறான பழக்கம்


மொபைல் போன் பார்ப்பதால் விழித்திரை பாதிப்பு அதிகரித்து உள்ளதா?

மொபைல் போனில் உள்ள, நீல நிற ஒளியிலிருந்து வெளிப்படும் சில வேதி விளைவுகள், கண்ணில் உள்ள விழித்திரையை பாதித்து, சில சிதைவுகளை ஏற்படுத்துவது, ஆய்வுகளில் உறுதியாகி உள்ளது. எந்த அளவு நீல நிற ஒளி, எத்தனை நாட்கள் தொடர்ந்து கண்களில் பட்டால், இது போன்ற பாதிப்புகள் வரும் என்பதில், இன்னும் சரியான விளக்கம் கிடைக்கவில்லை.

கண்களில் எவ்விதமான பாதிப்புகள் ஏற்படுகின்றன?
துாரத்தில் இருப்பதை பார்ப்பதற்கு வசதியாகவே, கண்களின் அமைப்பு இயற்கையிலேயே அமைந்துள்ளது. துாரத்தில் இருப்பதை பார்த்தால், கண்கள் ரிலாக்சாக இருக்கும். கண்களுக்கு அருகில் பொருட்கள் வர வர, தசைகள் அதிகளவில் வேலை செய்தால் தான், பிம்பங்களை தெளிவாக நம்மால் பார்க்க முடியும்.மொபைல் போனை பன்படுத்தும் போது, கண்களின் தசைகள் தொடர்ந்து வேலை செய்யும். குறிப்பிட்ட நேரத்தற்கு பின், கண்கள் சோர்ந்து, கண் எரிச்சல், நீர் வடிவது, தலைவலி போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன.
தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

கருவிழியில் ரத்த குழாய் இல்லாததால், கண் சுரப்பிகளில் உள்ள திரவத்தின் வழியாகவே, கண்களுக்கு ஊட்டச் சத்து கிடைக்கும்.ஒவ்வொரு முறை கண்களை இமைக்கும் போதும், கண் சுரப்பிகள் சுரக்கும் நீர், கண்களின் மேல் பகுதியில் உள்ள கருவிழியில், அடுக்கு போல் படரும். நிமிடத்திற்கு, 15 முறை இமைக்கும் போது, நீரில் இருந்து ஆக்சிஜனை, கருவிழி எடுத்துக் கொள்ளும்.மொபைல் போன் பார்க்கும் போது, அப்படியே வெறித்து பார்ப்போம். நம்மை அறியாமலேயே இமைப்பது குறைந்து விடும்.திரவ குறைபாட்டின் அறிகுறிகள் என்ன?ஒரு மணி நேரம், அரை மணி நேரம் என்றால் பரவாயில்லை; தொடர்ந்து பல மணி நேரம் மொபைல் பார்ப்பதால், கருவிழிக்கு ஆக்சிஜன் கிடைக்காது. எரிச்சல் ஏற்பட்டு, கண்கள் வறட்சியாகி விடும். இதனால், கண்களில் உறுத்தல், நீர் வருவது, மணல் போட்டு அறுப்பது போன்ற அறிகுறிகள் ஏற்படும்

கிட்டப் பார்வை அதிகரித்து இருப்பது ஏன்?

இருபது ஆண்டுகளுக்கு முன், பள்ளிகளில், ஒரு வகுப்பில் இரண்டு அல்லது மூன்று பேர் கண்ணாடி அணிந்திருப்பர். இப்போது, 20, 30 என, எண்ணிக்கை அதிகரித்து விட்டது. வீட்டிற்குள்ளேயே அமர்ந்து, மின் சாதனப் பொருட்களோடு விளையாடுவதே, இதற்கு முக்கிய காரணம் என, ஆய்வில் தெரிய வந்துள்ளது. வெளியில் போய் விளையாடும் குழந்தைகளுக்கு, இப்பிரச்னை குறைவாக உள்ளது.தினமும், குறைந்தது ஒரு மணி நேரமாவது, குழந்தைகளை வெளியில் சென்று விளையாட, அனுமதிக்க வேண்டும். வீடியோ கேம்ஸ், கம்ப்யூட்டர், மொபைல் போனே கதி என்று இல்லாமல் இருந்தாலே, கண்ணாடி போடுவதற்கான வாய்ப்புகள் குறைவாக இருக்கும்.விழித்திரையில், 'மேக்குலா' என்ற முக்கியமான பகுதி உள்ளது. 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு, இதில் உள்ள செல்கள் அழிந்து, நடுப்பகுதியில் பார்வை குறைந்து விடும். இரவில் எல்லா விளக்கையும் அணைத்து விட்டு, மொபைல் போன் அதிகமாக பயன்படுத்துவோருக்கு, சீக்கிரமாகவே இப்பிரச்னை வருவதற்கான வாய்ப்பு உள்ளது.

பாதிப்பை தவிர்ப்பது எப்படி?

தேவையில்லாமல் மொபைல் போன் பயன்படுத்துவதைத் தவிர்த்தாலே, பிரச்னை வராது. ஆறு மாத குழந்தைக்கு கூட, சாப்பாடு ஊட்டும் நேரங்களில், மொபைல் போனை காட்டியபடியே ஊட்டுகின்றனர். இது, மிகவும் தவறான பழக்கம்.கடந்த, 10 ஆண்டுகளாகதான், அதிகளவில் மொபைல் பயன்படுத்துகிறோம் என்பதால், நமக்கு பாதிப்பு குறைவாக இருக்கலாம். ஆனால், மொபைல் யுகத்தில் பிறந்ததிலிருந்தே, ஊதா ஒளியை பார்த்தே வளரும் குழந்தைகளுக்கு, 30 வயதிற்குள் பாதிப்பு ஏற்படலாம்.கம்ப்யூட்டரில் பணிபுரிவோர் செய்ய வேண்டியது?தொடர்ந்து வேலை செய்யாமல், 20/20 விதியை பின்பற்ற வேண்டும். 20 நிமிடங்களுக்கு ஒரு முறை, 20 அடி துாரத்தில் உள்ள பொருளை, 20 வினாடிகள் பார்க்க வேண்டும். அப்போது, கண்களில் உள்ள தசைகள் ரிலாக்ஸ் ஆகும்.
- டாக்டர் திரிவேணி வெங்கடேஷ் கண் சிறப்பு மருத்துவ ஆலோசகர்,அகர்வால் கண் மருத்துவமனை, சென்னை.)94444 44822

No comments:

Post a Comment