Monday, December 16, 2019

சித்த மருத்துவத்தால் சுவாச நோயை விரட்டலாம் thanks to dinamalar.com

திண்டுக்கல்: 'மூச்சு பயிற்சி, சுடுநீர் குளியல் மூலம் சுவாச நோயை விரட்டலாம்' என, திண்டுக்கல் சித்த மருத்துவர் பேச்சி ஆலோசனை வழங்கினார்.
பனிக்காலத்தில் ஏற்படுகிற நோய்களில் சுவாச பிரச்னையும் உண்டு. வயது வித்யாசமின்றி எல்லோரையும் பாதிக்கிற நோய் இது. பரம்பரையாக, ஒவ்வாமை, பருவநிலை மாற்றம், கிருமி தொற்று, புகைப்பழக்கம், மனக்கவலை, நோய் எதிர்ப்பு சக்தி குறைவு போன்ற காரணங்களால் சுவாச நோய்கள் ஏற்படுகிறது.
இந்நோயை குணப்படுத்த எண்ணெய் குளியல், நசியம், மூச்சுப் பயிற்சி, யோகா, வர்மம், நீராவி குளியல், வேது பிடித்தல், பற்றிடுதல் போன்ற சிகிச்சைகள் சித்த மருத்துவத்தில் உள்ளன.
மேலும் ஆடாதொடை, நஞ்சறுப்பான், கண்டங்கத்திரி, துளசி, திப்பிலி, அதிமதுரம், பவளம், கபசுர குடிநீர், கற்பூராதி தைலம் போன்றவை சுவாச பிரச்னையை குணப்படுத்த உதவும். சுடுநீர் குளியல், இருப்பிடத்தை துாய்மையாக வைத்து கொள்ளுதல், படுக்கை விரிப்புகள் மற்றும் தலையணை உறைகளை அடிக்கடி மாற்ற வேண்டும். இரவில் எளிதில் செரிக்கும் உணவுகளை சாப்பிடுதல், உடல் எடையை குறைப்பது, தினமும் பிராணயாமம், மார்பு விரிவாக்க மற்றும் மூச்சு பயிற்சி செய்யலாம். குளிர் காற்று நேரடியாக அறைக்குள் வருவதை தடுக்க வேண்டும். இவற்றின் மூலம் சுவாச பிரச்னை ஏற்படுவதை தடுக்கலாம் என, அவர் கூறினார்.

No comments:

Post a Comment