Tuesday, June 16, 2020

மூலிகைகளால் கொரோனாவை வெல்லலாம்! thanks to dinamalar.com

மூலிகைகளால் கொரோனாவை வெல்லலாம்!

Advertisement
 மூலிகைகளால் கொரோனாவை வெல்லலாம்!
31Shares
facebook sharing button
messenger sharing button
twitter sharing button
இன்று, எல்லாரையும் மிரட்டிக் கொண்டிருக்கும் கொரோனா வைரசை அழிக்கும் சித்த மருத்துவ மூலிகைகளைப் பற்றி, மக்களுக்கு அறிமுகப்படுத்துவதன் மூலம், பெருகி வரும் கொரோனா மரணங்களை தடுக்கலாம் என்ற சிந்தனையே, என்னை இக்கட்டுரையை எழுதத் துாண்டியது.

தமிழகத்தின் முதல் மருத்துவம், மூலிகை மருத்துவம். 2,500 ஆண்டுகளுக்கு மேலாக, நம்மை நோய்களிலிருந்து இன்றும் பாதுகாத்து வருவது, 'வேம்பு!' கொடிய வைரசான, எச்.ஐ.வி., வைரசைக் கட்டுப்படுத்துவதில் வேப்பம் பட்டை நன்கு செயல்படுவதாக, இன்றைய விஞ்ஞானிகள் அறிவித்து, அந்த ஆய்வு தொடர்கிறது.

வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தும் மூலிகைகள்!


வேப்பம் பட்டை, அரை பிடியை இடித்து, 50 கிராம் தனியா, 30 கிராம் சுக்கு, 10 கிராம் இலவங்க பட்டை, 10 கிராம் அதிமதுரம் என, இந்த ஐந்து மருந்துகளையும் நன்கு அரைத்து சூரணம் செய்து காலை, மாலை ஒரு ஸ்பூன் எடுத்து, ஒரு குவளை கொதிநீரில் போட்டுக் காய்ச்சி வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.அதில், தேன் அல்லது சர்க்கரை ஒரு ஸ்பூன் சேர்த்து பெரியவர்கள், 100 மி.லி., சிறுவர்கள், 50 மி.லி., பருகி வர, கொரோனா தொற்றைத் தடுக்கும். இதை, 15 நாட்களாவது தொடர வேண்டும்.

தொல்காப்பியர் துவங்கி, இன்றைய விஞ்ஞானிகள் வரை போற்றும் வேம்பு இருக்க, கொரோனாவுக்கு பயப்படுவானேன்! தினமும் மேற்கண்ட முறையை பின்பற்றுங்கள்; நிச்சயம் கொரோனா நெருங்காது.


நுரையீரல் பாதுகாப்புக்கு


1. கண்டங்கத்திரி வேர், கருந்துளசி, ஆடாதோடை வேர், தாளிசபத்திரி, நிலவேம்பு, சீந்தில், அதிமதுரம், திப்பிலி, சுக்கு, சிற்றரத்தை, ஓமம் இவற்றை வகைக்கு, 10 கிராம் எடுத்து, இடித்து, இரண்டு குவளை கொதிநீரில் போட்டுக் காய்ச்சி, ஒரு குவளையாகக் சுருக்கி, வடிகட்டி, ஆற விடுங்கள்.அதனுடன் தேன் கலந்து பெரியவர்கள், 150 மி.லி.,யும், சிறியவர்கள், 75 மி.லி.,யும் பருகி வர, நுரையீரல் எந்த வைரசாலும் பாதிப்பு அடையாமல் காக்கப் பெறும். இதை, 15 நாட்கள் தொடர வேண்டும்.

2. இம்பூறல் எனப்படும் மூலிகை முக்கியமானது. கால்படும் இடங்களில் சர்வ சாதாரணமாக வளரக் கூடியது. இதை வேருடன் பிடுங்கி, ஒரு கைப்பிடி எடுத்து, நீரில் அலசி, நிழலில் உலர்த்தி, இடித்து அதை, ஒரு குவளை கொதிநீரில் போட்டுக் காய்ச்சுங்கள். கொதி நிலையில் கருந்துளசி, 20 இலை, இஞ்சி ஒரு துண்டு, அதிமதுரம் ஒரு துண்டு, இலவங்கப்பட்டை சிறிது சேர்த்து கலந்து, 5 நிமிடம் கழித்து இறக்கி ஆறியபின் தேன், 2 ஸ்பூன் கலந்து பருக வேண்டும். காலை, மாலை பெரியவர்கள், 100 மி.லி., சிறியவர்கள் 50 மி.லி., பருக வேண்டும். 10 முதல், 15 நாட்கள் தொடர வேண்டும்.

3. எல்லா இடங்களிலும் கொடியாகப் பரவக் கூடியது, வேலிப்பருத்தி எனும் உத்தாமணி. இதை இடித்து அரைத்து அதில், 100 கிராம் மிளகு சேர்த்து, மூன்று நாட்கள் வெயிலில் காய வைத்து, அதை அரைத்துப் பொடி செய்து,பாட்டிலில் பத்திரப்படுத்தி, தினம் காலை, இரவு இந்த பொடியை, கால் ஸ்பூன் எடுத்து பால் அல்லது தேனில் குழைத்து சாப்பிட்டு வர, ஐந்திலிருந்து, 10 நாளில் குணம் பெறலாம்.

4. விஷ்ணுக்கரந்தையை, ஒரு பிடி எடுத்து அரைத்து, அத்துடன், நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் குருந்துளசி, ஆடாதோடை, சீந்தில், நிலவேம்பு, பற்பாடகம், ஆவாரை, அதிமதுரம், இஞ்சி, தாளிசபத்திரி போன்றவற்றை, தலா, 20 கிராம் வாங்கி, பொடி செய்து, 300 மி.லி., கொதிநீரில் போட்டுக் காய்ச்சி, 150 மி.லி.,யாகச் சுருக்கி வடிகட்டி, ஆறியபின், தேன், மூன்று ஸ்பூன் கலந்து, காலை, மாலை, 100 மி.லி., பெரியவர்களும் - 50 மி.லி., சிறியவர்களும், 10 நாட்கள் பருகி வர, நிச்சயம் வைரஸ் முற்றிலும் அழியும். நிலவேம்புவை விட வீரியம் மிக்கது, விஷ்ணுக்கரந்தை.

5. கண்டங்கத்திரி, ஆடாதோடை, அதிமதுரம், கற்பூரவல்லி, சுக்கு, மிளகு, திப்பிலி ஆகியவற்றை சம அளவு எடுத்து இடித்து, கஷாயம் செய்து தினம், காலை, மாலை, பெரியவர்கள், 100 மி.லி., சிறுவர்கள், 50 மி.லி., சாப்பிட்டு வர, 15 நாட்களில் குணம் காணலாம்.

6. துாதுவளை இலையை எல்லாரும் அறிவர். இதன் இலைகள், 15 எடுத்து, அத்துடன் கொத்துமல்லி, கருவேப்பிலை, உளுந்து, மிளகு, சீரகம், இஞ்சி, பூண்டு சேர்த்து நெய்யில் வதக்கி துவையல் செய்து தினம் காலை, மாலை, இரண்டு ஸ்பூன் சிறிது நெய் சேர்த்து, இரண்டு பிடி சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டு வர, நுரையீரலுக்கு கவசம் போல் பாதுகாப்பு கிடைக்கும்.

7. சீந்தில், பற்பாடகம், சந்தனம், சுக்கு, சித்தாமுட்டி, கோரைக்கிழங்கு, இலவங்கப்பட்டை, அதிமதுரம், தனியா, சோம்பு ஆகியவற்றை சம அளவு எடுத்து இடித்து, 300 மில்லி லிட்டர் தண்ணீரில் போட்டுக் காய்ச்சி, 100 மி.லி.,யாகச் சுருக்கி, காலை, மாலை சாப்பிட்டு வர வேண்டும்.

8. நொச்சி இலைக் கஷாயத்தில் சுக்கு, இலவங்கப்பட்டை மற்றும் கருஞ்சீரகம் பொடி செய்து கலந்து பருகி வரலாம்.9. புற்றுநோயைக் குணப்படுத்தக் கூடிய திறன் வாய்ந்த குங்குமப்பூ, வைரஸ்களை அழிக்கும் குணமும் கொண்டதாகும். துாய்மையான குங்குமப்பூ, 10 முதல், 20 இதழ்கள் எடுத்து கம்மாறு வெற்றிலையில் வைத்து, தேனில் குழைத்து, காலை, இரவு இரு வேளை பருகி வரலாம். இதில் பக்க விளைவு ஏதுமில்லை.

இந்த, முறைகளை முதல் வாரம் சாப்பிட, வைரஸ் கட்டுப்படும். எனினும், அனுபவம் வாய்ந்த சித்த மருத்துவர் வழிகாட்டலில் மேற்கொள்ள வேண்டும்.இரண்டாம் நிலை - இரண்டாவது வாரம்ஒருவேளை நோயாளி இரண்டாவது வாரம் இரண்டாவது நிலையான இருமல், கடும் காய்ச்சல், தலைவலி, நுரையீரலில் சளி அடைப்பு என்று அவதிப்படும் போது, உடனடியாக கீழ்க்கண்ட பஸ்பங்களை தயாரித்து தரலாம்.இது தான் அகத்தியர் கூறும் இரண்டாம் நிலை.

1. நற்பவள பற்பம்2. முத்துச்சிப்பி பற்பம்3. சங்கு பற்பம்4. கஸ்துாரி கருப்புஇந்த நான்கையும் வயது, நோய் நிலைக்கேற்ப அளவுப்படி சேர்த்து, அனுபவம் வாய்ந்த மருத்துவர் ஆலோசனையின் படி சூரணத்துடன் தேனில் குழைத்து, தினம் காலை ஒரு வேளை, இரவு ஒரு வேளை சாப்பிட்டு வர, 15 நாளில் முற்றிலும் குணமாகும். இந்த மருந்துகள், 'இம்ப்காப்ஸ்' கடையில் கிடைக்கக் கூடியவை.

மூன்றாவது வாரம் - மூன்றாம் நிலை

ஒரு வேளை வைரஸ் தாக்கம் அதிகமாகி, மூச்சுத் திணறல் அதிகமாகும் போது, அகத்தியர் கூறும் செந்துாரத்தை கொடுப்பதால், கொரோனா வைரசை கொல்ல முடியும்.

1. லிங்கசெந்துாரம், 30 மி.கி., தாளிசாதி சூரணத்துடன் தேனில் குழைத்து தர வேண்டும் அல்லது
2. சண்டமாருத செந்துாரம், 30 மி.லி., கிராம் அளவு தாளிசாதி சூரணத்துடன் தேனில் குழைத்து தரலாம்.கட்டாயம் இவற்றை, தேர்ந்த சித்த மருத்துவர் மேற்பார்வையில் தான் தரவேண்டும்., அதிகபட்சம், 10 நாட்கள் மட்டுமே இதை தர வேண்டும். அதற்குள் கொரோனா வைரஸ் கட்டாயம் உடம்பிலிருந்து ஒழியும்.இவ்வளவு தான், கொரோனாவை கொல்லும் சித்த மருத்துவ சிகிச்சை!

இதில், மூன்று முக்கிய விஷயங்களை கவனிக்க வேண்டும்.1. மூலிகைக் கஷாயங்கள், சூரணங்கள் அனைத்தும் நச்சுத்தன்மை இல்லாதவை. இவை அனைத்தையும், கடந்த, 25 ஆண்டுகளில் நவீன ஆய்வுக்குட்படுத்தி அவற்றின் பலன்களை, விஞ்ஞானிகள் பதிவு செய்துள்ளனர். எனவே, இவற்றை பரிசோதனை செய்ய வேண்டியதில்லை.

2. பவள பற்பம், சங்கு பற்பம், முத்துச் சிப்பி பற்பம், கஸ்துாரி கருப்பு போன்றவை நுரையீரல் நோய்களை வேரறுக்கும் வல்லமை கொண்டவை என்பது, பல்லாண்டுகளாக அனுபவ ரீதியாக நிறுவப்பட்டும், இன்றும் நம்பகமான மருந்துகளாக மக்களால் ஏற்கப்பட்டும் வருகிறது.

3. மூன்றாவது நிலையான உலோக மருந்துகளான சண்டமாருத செந்துாரம் மற்றும் லிங்க செந்துாரம் ஆகியன, நீண்ட நெடுங்காலமாக சித்த மருத்துவர்களால் பயன்படுத்தப்பட்டு வருபவை.இங்கே குறிப்பிடப்பட்டுள்ள முதல் சிகிச்சையையும், இரண்டாம் நிலை சிகிச்சையையும் அச்சமோ அல்லது ஆராய்ச்சியோ இன்றி, இன்றே துவங்கலாம். ஏனெனில், இந்த மூலிகை முறைகளும், பஸ்ப வகைகளும் கடந்த, 50 ஆண்டுகளாக தமிழகத்தில் ஆயிரக்கணக்கான நோயாளிகளுக்கு அளித்து வருவதில், நல்ல பலனை அடைந்து வருகின்றனர்.

இன்றும் தமிழகத்தில் நுாற்றுக்கணக்கான சித்த மருத்துவமனைகளில் பயன்பாட்டில் உள்ளவை. கொரோனாவை, மூலிகைகள் மூலம் வெல்லலாம். இதை, உலகளாவிய ஆய்வாக நிகழ்ந்தால், கொரோனாவுக்கு தீர்வு நிச்சயம் கிடைக்கும். எனவே, தமிழகத்தில், தமிழக அரசின், இந்திய மருத்துவத் துறை இயக்குனர் நினைத்தால், இதை மேற்கொள்ள முடியும்.

நம் நாட்டின் ஆங்கில மருத்துவ வல்லுனர்கள் பலர், மூலிகை மருத்துவத்தை உலகளவுக்கு உயர்த்த விரும்பினர். கொரொனாவை கண்டுபிடிக்க செலவிடப்படும் தொகையில், நுாறில் ஒரு பங்கு செலவு செய்தாலே போதும், கொரோனாவை முற்றிலும் ஒழிக்கலாம். இந்த ஆராய்ச்சியை மேற்கொள்ள, தமிழக முதல்வர், உத்தரவிட வேண்டிய காலகட்டம் இது தான்!

மூலிகைமணி வெங்கடேசன்

தொடர்புக்கு:90030 31796

No comments:

Post a Comment